Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’

Editorial / 2019 ஜூலை 22 திங்கட்கிழமை, மு.ப. 09:58 Comments - 0
‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’

image_e3f1fd443c.jpg

 

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக, கோட்டாபய ராஜபக்‌ஷவை களமிறக்குவதாக, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று(21) கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென, ஒருவர் தெரிவிக்கும் போது, மற்றொருவர் நாட்டில் பாதுகாப்பு இல்லையெனத் தெரிவிப்பதாகத் தெரிவித்த மஹிந்த, சரத் பொன்சேகா மாத்திரமே பயங்கரவாதம் நாட்டிலிருந்து இன்னும் ஒழிக்கப்படவில்லை எனத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/கோட்டாவே-வேட்பாளரென-நான்-கூறவில்லை/175-235682

கோத்தா தான் வேட்பாளர் என்று மகிந்த கூறவில்லை தான். பொதுஜன பெரமுன சார்பில் யார் வேட்பாளர் என்று ஓகஸ்ட் 11 ஆம் திகதி மகிந்த அறிவிப்பார் என்று தான் சொன்னவை.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைக்குமா இல்லையா என்பதிலும் யார் வேட்பாளர் என்பது தங்கியுள்ளது. 

Edited by Lara

அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் கைவிட்டவர்களின் முதல் காலாண்டுப் பட்டியலில் கோத்தபாயவின் பெயரில்லை

bit.ly/2M4yPnq  #SriLanka #UScitizenship #GotabhayaRajapaksa

54 minutes ago, ampanai said:

அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் கைவிட்டவர்களின் முதல் காலாண்டுப் பட்டியலில் கோத்தபாயவின் பெயரில்லை

bit.ly/2M4yPnq  #SriLanka #UScitizenship #GotabhayaRajapaksa

முதல் காலாண்டு பட்டியலில் இல்லை என்பது முன்னரே வந்த செய்தி தான். அடுத்த காலாண்டு பட்டியலில் வருகிறதா இல்லையா என்பதை பார்க்க வேண்டும்.

ஏனென்றால் கோத்தா அமெரிக்க குடியுரிமையை துறக்கும் முயற்சியை மார்ச் மாதம் தான் ஆரம்பித்தவர். ஏப்ரல் 17 ஆம் திகதி அமெரிக்க கடவுச்சீட்டையும் மற்றும் தேவையான ஆவணங்களையும் அமெரிக்க தூதரகத்தில் கையளித்தவர்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

என்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க தவறினால் அருகில் இருக்கும் என் அருமை தம்பி சட்டையை கழற்றி திரிவார் என்பதை அறிய தருகின்றன் ..

maxresdefault.jpg

எது எப்படியோ அண்ணன் தம்பிக்குள் புடுங்குபாடு நடந்தால் சரி..☺️

 

6 hours ago, Lara said:

கோத்தா தான் வேட்பாளர் என்று மகிந்த கூறவில்லை தான். பொதுஜன பெரமுன சார்பில் யார் வேட்பாளர் என்று ஓகஸ்ட் 11 ஆம் திகதி மகிந்த அறிவிப்பார் என்று தான் சொன்னவை.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைக்குமா இல்லையா என்பதிலும் யார் வேட்பாளர் என்பது தங்கியுள்ளது. 


எந்த ஒரு கட்சியும்  50% + பெறுமா என்பது கேள்வியே.

2 hours ago, ampanai said:

எந்த ஒரு கட்சியும்  50% + பெறுமா என்பது கேள்வியே.

இத்தேர்தலில் சிங்களவர்கள் வாக்குகளை மட்டும் வைத்து வெல்ல முயல்கிறார்கள். அது சாத்தியமா என்பதை தேர்தல் முடிவுகள் தான் கூற வேண்டும்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைத்தால் மைத்திரி ஜனாதிபதி வேட்பாளர், மகிந்த பிரதமர் என்று தான் பரிந்துரை செய்தார்கள். கூட்டணி அமைக்குமா இல்லையா என தெரியவில்லை.

ஐ.தே.க வேட்பாளராக சஜித்தை நிறுத்த முயல்கிறார்கள். இங்கு என்ன பிரச்சினை என்றால் சஜித் மகிந்த ஆதரவாளர்.

தேர்தலில் ஒருவரும் 50%+ பெறாவிட்டாலும் தேர்தலின் பின் சேர்ந்து அரசமைக்கக்கூடும்.

Edited by Lara

தேர்தலில் யாரும் 50%+ வாக்குகளை பெறாவிட்டால் அதிக வாக்குகளை பெற்ற முதல் இரு வேட்பாளர்களை தெரிவு செய்து ஏனையோருக்கு வழங்கப்பட்ட வாக்குகளின் இரண்டாவது விருப்பத்தெரிவை கணக்கெடுத்து வெற்றியாளர் யார் என கூறுவார்கள்.

மகிந்த தனது மகனைத்தான் ஜனாதிபதியாக காண விரும்புகிறார்.

இடையில் அண்ணனை இல்லை தம்பியை அமர்த்த பார்கின்றார்.

35 minutes ago, ampanai said:

மகிந்த தனது மகனைத்தான் ஜனாதிபதியாக காண விரும்புகிறார்.

இடையில் அண்ணனை இல்லை தம்பியை அமர்த்த பார்கின்றார்.

இப்பொழுதும் மகனை தான் ஜனாதிபதியாக்க விருப்பம். ஆனால் அரசியலமைப்பில் ஆகக்குறைந்தது 30 வயதை கொண்டிருக்க வேண்டும் என்பதை 35 வயதாக மாற்றி விட்டதால் மகன் இம்முறை போட்டியிட முடியாத நிலை. 😀

அதனால் இடையில் இவர்கள் ஆட்டம். 😊

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

சஜித் தேர்தலுக்கு பின்னாக மகிந்தவுடன் கூட்டணி சேருவார் எண்டு நான் நினைக்கேல்ல.

கரு, நளின் எண்டு யுஎன்பி கூடாரமே காலியாகி பொது பெரமுனவில் இணந்தபோதும் சஜித் போகவில்லை. ரணிலுடன் லடாய் என்றபோதும்.

சஜித்தின் இரெட்டை இலக்கு யுஎன்பியை கைப்பறுவதும் ஆட்சியை பிடிப்பதும். ஆட்சி போகும் வரும் ஆனால் யுஎன்பி தலைமை போனாவராது.

ரணிலின், கருநாநிதி, ஸ்டாலின் அணுகுமுறையும் இதுவே.

3 hours ago, goshan_che said:

சஜித் தேர்தலுக்கு பின்னாக மகிந்தவுடன் கூட்டணி சேருவார் எண்டு நான் நினைக்கேல்ல.

கரு, நளின் எண்டு யுஎன்பி கூடாரமே காலியாகி பொது பெரமுனவில் இணந்தபோதும் சஜித் போகவில்லை. ரணிலுடன் லடாய் என்றபோதும்.

சஜித்தின் இரெட்டை இலக்கு யுஎன்பியை கைப்பறுவதும் ஆட்சியை பிடிப்பதும். ஆட்சி போகும் வரும் ஆனால் யுஎன்பி தலைமை போனாவராது.

ரணிலின், கருநாநிதி, ஸ்டாலின் அணுகுமுறையும் இதுவே.

சஜித் மகிந்த ஆதரவாளர். ஆனால் தேர்தலின் பின் மகிந்தவுடன் தான் கூட்டு சேர வேண்டுமென்றில்லை, மைத்திரியுடனும் சேர முடியும் தானே? (கட்சி கூட்டணி)

இப்போதைக்கு சுதந்திர கட்சி சார்பில் மைத்திரி வேட்பாளர் என்றே கூறப்படுகிறது. சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன கூட்டணி அமைக்காவிட்டால் மும்முனைப்போட்டி.

அதேபோல் தேர்தலின் பின் சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன கூட்டும் உருவாகலாம்.

சிங்களவர்களை பொறுத்தவரை எதையும் உறுதியாக கூற முடியாது. 😀

Edited by Lara

சஜித்தை யூ என் பி யில் இருப்பவர்களில் ஒரு சாரார் எதிர்ப்பதற்கு சஜித் தின் சாதியும் ஒரு காரணம். மேட்டுக்குடி வர்க்கம் அதிகமாக ஆதரிக்கும் கட்சியான யூ என் பி யிற்கு சிங்கள சாதி அமைப்பில் சாதி குறைந்த ஒருவர் தலைமை ஏற்பதை விருப்பத்துடன் அணுகாது.

பிரேமதாசாவையும் அவரின் சாதி காரணமாக சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் வெறுத்தனர். கண்டி சிங்களவர்கள் பலருக்கு பிரேமதாசாவை பிடிக்காமைக்கும் சாதியும் ஒரு காரணம்.

சஜித் இலங்கையில் GCE OL பரீட்சையில் கூட சித்தியடையவில்லை, அதனால் இவருக்கு சனாதிபதி பதவி ஒரு கேடா என்று பலர் கதைப்பதாகத் தெரிகிறது.

உண்மை என்னவென்று உடனடியாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 

கோத்தாவை அறிவிக்குமாறு மகிந்தவுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு

 

mahinda--300x201.jpg

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்சவை அறிவிக்குமாறு, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன என, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் சார்பில் கோத்தாபய ராஜபக்சவை அதிபர்  வேட்பாளராக நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், கட்சிக்குள் பலத்த போட்டி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான- எதிரான அணிகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில், அதிபர் வேட்பாளர் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்தநிலையில், வரும் ஓகஸ்ட் 11ஆம் நாள், நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் மாநாட்டில், அதிபர் வேட்பாளரை தான்  அறிவிக்கப் போவதாக மகிந்த ராஜபக்ச நேற்று உறுதிப்படுத்தினார்.

எனினும் கோத்தாபய ராஜபக்ச தான் வேட்பாளர் என்பதை உறுதிப்படுத்த அவர் மறுத்து விட்டார்.

கோத்தாபய ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப் போவதாக தாம் ஒருபோதும் கூறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, கோத்தாபய ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக அறிவிப்பதற்கு, மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில், மாவட்ட அடிப்படையில் அவரை வேட்பாளராக முன்னிறுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கம்பகா மாவட்ட பொதுஜன பெரமுன குழு கூட்டத்தில், கோத்தாபய ராஜபக்சவை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனக் கோரும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கோத்தாபய ராஜபக்ச எமது அதிபர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நாங்கள் இந்த விடயத்தைப் பற்றி விவாதித்தோம்.

முன்னாள் பாதுகாப்பு செயலர் சிறந்த வேட்பாளர் என்பது எங்கள் ஒருமித்த முடிவு.

ஓகஸ்ட் 11ஆம் நாள் நடைபெறும் கட்சி மாநாட்டில் எமது அதிபர் வேட்பாளர் யார் என்பதை மகிந்த ராஜபக்ச அறிவிக்கவுள்ளார். நாங்கள் சொல்வதை அவர் கேட்பார் என்று நம்புகிறோம்” எனவும் பிரசன்ன ரணதுங்க கூறினார்.

http://www.puthinappalakai.net/2019/07/23/news/39124

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த எருமை வந்தால் எங்களுக்கென்ன? ஈழத்தமிழனுக்கு எல்லாம் ஒண்டுதான்.
#அனுபவம் பேசவைக்குது :cool:

 

Bildergebnis für à®à®°à¯à®®à¯

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.