Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூரில் 20 பேரிடம் நகைகள் கொள்ளை

Featured Replies

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்கள் 20 பேரிடம் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 45 பவுண் தங்க நகைகள் நேற்றைய தினம் திருடப்பட்டுள்ளன. அவற்றில் தாலிக்கொடி மூன்றும் 17 சங்கிலிகளும் அடங்குகின்றன. ஆண்கள் மூவரும் தமது தங்கச் சங்கிலியைப் பறிகொடுத்ததாக முறையிட்டுள்ளனர்” என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

ஆலயத்துக்கு வருகை தந்த பக்தர்களிடம் வெளிவீதியில் வைத்து இந்தத் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், தங்க நகைகளைப் பறிகொடுத்த சிலர் பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யாது சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

நல்லூர் ஆலய வெளி வீதியில் 60 சி சி ரி வி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் 600 பொலிஸாருக்கு மேல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். எனினும் திருடர்கள் தமது கைவரிசையைக் காண்பித்துள்ளனர்.

இதேவேளை, தொலைப்பேசி உள்ளிட்ட உடமைகளும் திருடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/63675

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ampanai said:

“முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 45 பவுண் தங்க நகைகள் நேற்றைய தினம் திருடப்பட்டுள்ளன. அவற்றில் தாலிக்கொடி மூன்றும் 17 சங்கிலிகளும் அடங்குகின்றன. ஆண்கள் மூவரும் தமது தங்கச் சங்கிலியைப் பறிகொடுத்ததாக முறையிட்டுள்ளனர்” என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

ஆலயத்துக்கு வருகை தந்த பக்தர்களிடம் வெளிவீதியில் வைத்து இந்தத் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், தங்க நகைகளைப் பறிகொடுத்த சிலர் பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யாது சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆண்களும் தங்கச்  சங்கிலியை பறி கொடுத்தது, சிரிப்பாக உள்ளது.
சங்கிலியை காப்பாற்ற தெரியாத ஆண்கள்... இனி சீலை கட்ட வேண்டும். 🤣

பறி போன சங்கிலி திரும்ப வராது என்று தெரிந்தவர்கள்...
வெக்கத்தில்.... முறைப்பாடு  செய்யாமல் போயிருப்பார்கள். :grin:

9 hours ago, தமிழ் சிறி said:

ஆண்களும் தங்கச்  சங்கிலியை பறி கொடுத்தது, சிரிப்பாக உள்ளது.
சங்கிலியை காப்பாற்ற தெரியாத ஆண்கள்... இனி சீலை கட்ட வேண்டும். 🤣

பறி போன சங்கிலி திரும்ப வராது என்று தெரிந்தவர்கள்...
வெக்கத்தில்.... முறைப்பாடு  செய்யாமல் போயிருப்பார்கள். :grin:

வெறும் மேலில் தங்கச் சங்கிலி மினு மினு என்று மினுங்கினால் தாம் மற்றவர்களுக்கு அழகாக தெரிவார்கள் என்று நினைச்சு போயிருப்பினம்.

சாமி கும்பிடப் போனோமா, அரோகரா சொன்னோமா திருநீறை பூசினமா என்று இல்லாமல் ஷோ காட்ட வெளிக்கிடும் போது தான் இப்படியான பிரச்சனைகளே வருகின்றன. இங்கும் தமிழ் மக்களை குறி வைத்து பல திருடர்கள் தம் கைவரிசையை காட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

வெறும் மேலில் தங்கச் சங்கிலி மினு மினு என்று மினுங்கினால் தாம் மற்றவர்களுக்கு அழகாக தெரிவார்கள் என்று நினைச்சு போயிருப்பினம்.

சாமி கும்பிடப் போனோமா, அரோகரா சொன்னோமா திருநீறை பூசினமா என்று இல்லாமல் ஷோ காட்ட வெளிக்கிடும் போது தான் இப்படியான பிரச்சனைகளே வருகின்றன. இங்கும் தமிழ் மக்களை குறி வைத்து பல திருடர்கள் தம் கைவரிசையை காட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

கோவிலுக்கு... போகும் போது...ஆபரணம் எதற்கு அணிகின்றார்கள்? 
என்று  உண்மையில் எனக்கு விளங்கவேயில்லை, நிழலி.  

அதுகும் நல்லூர் கந்தனுக்கு, இன்றும்...  அர்ச்சனை செய்வதென்றால்... ஒரு ரூபாய் மட்டுமே.
அந்த ஒரு ரூபாயை... வேட்டித்  தலைப்பில் கட்டிக்  கொண்டு போனால், என்னவாம்.
சும்மா... பந்தா  காட்ட  வெளிக் கிட்டால், வருடம் முழுக்க உழைத்த உழைப்பை... 
ஒரு நொடியில்... பறி கொடுக்க வேண்டி இருக்கும்.  

இது... இந்த, திருவிழாவுடன் மட்டும்  முடியப் போவதில்லை.
வாற  வருசமும், இதே.. பந்தாவுடன்... வேறு ஆட்கள் சென்று. நகைகளை பறி கொடுப்பார்கள்.
எல்லாம்... பட்டு தெளித்தால் தான், புத்தி வரும்.

நகை அணிந்து... போவதால்,  உயிருக்கும் ஆபத்து வரும், என்று இவர்கள்.. உணரப் போவதேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் டொரோண்டோவில் ஐயப்பன் ஆலயத்தில் வருடம் தோறும் நடக்கும் ஜோதி விழா நடந்தது.
வழமை போல இந்தியாவில் இருந்து 2 பாடாக, பாடகிகளை இறக்குமதி செய்து ஆட்டம் , பாட்டம், கொண்டாட்டம் என்று சுற்றி இருக்கும் வீடுகளில் வசிக்கும் அயல் அட்டைகளை கடுப்பேத்திக்கொண்டு இருந்தார்கள். இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் வினாடிக்கு ஒருதடவை ஒரு விடயத்தை அறிவித்துக்கொண்டே இருந்தாராம்.
"மக்களே கவனமாக இருங்கள்....உங்கள் மத்தியில் நகை, கைப்பை மற்றும் பர்ஸுகளை திருடும் கோஷ்டிகள்  பல உலாவிக்கொண்டு இருக்கிறது. இதுவரையிலும் குறைந்தது 4 சம்பவங்கள் புகார் செய்யப்பட்டுள்ளன.
எனவே மிக மிக அவதானமாக இருங்கள்"

என்ன ஒரு பரிசுகேடான நிலை...  நம்ம ஊர் திருவிழாவுல கூட இப்படி அறிவிப்பு செய்த்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்.
பி.கு.  இந்த களவுகளுக்கு இந்தியாவில் இருந்து இங்கே வருகை தந்து சேவை செய்யும் மலையாள மாந்திரீகள், நம்பூதிரிகள் கோஷ்டியொன்று சிக்கு பட்டதாகவும் கேள்வி...

வாயை கட்டி வயித்தைக் கட்டி, தனது அடிப்படைத் தேவைகளை ஒறுத்து நகை அணிந்து திருட்டு கொடுப்பது  வாடிக்கை ஆகிவிட்டது. நகைகளில் பணத்தை முடக்கும் செயலை நமது மக்கள் தவிர்த்து கொள்ள வேண்டும். வியர்வை சிந்மி உழைத்த பணத்தை பாதுகாக்க எவ்வளோ நவீன வழிகள் உள்ளன. 

  • கருத்துக்கள உறவுகள்

15  தங்கச் சங்கிலிகள்.. நல்லூர் பொலிஸ்  நிலையத்தில், தேடுவாரற்று கிடக்கிறதாம். 😮
உரியவர்கள்... அதற்குரிய, 🌈 அடையாளத்தை காட்டி...  
எடுத்துக் கொண்டு போகலாம்... என்று சொல்கிறார்கள்.

சங்கிலியை... பறி கொடுத்த ஆட்கள்,  இப்ப... 🛩️  விமானம் ஏறி, 
புலம் பெயர்ந்த நாட்டிற்கு, சென்று விட்டதாக... அரசல், புரசலாக.. கதைக்கிறார்கள். 

சரி... போகுது... சிங்கள  போலீஸ்காரன், தன்ரை மனிசி... டிங்கிரி  மெனிக்காவுக்கு...
அந்த தங்கச் சங்கிலியை... போட்டு,  அழகு பார்த்தாலும்... வடிவாக இருக்கும் தானே...😍

டிஸ்கி:  இந்தக் கருத்தில்.. எந்த உண்மையும் இல்லை. 
நாலு சனம் திருந்தினால்... நல்லது, என்பதற்காக மட்டுமே... எழுதப் பட்டது.   :grin:

Edited by தமிழ் சிறி

1 hour ago, Sasi_varnam said:


பி.கு.  இந்த களவுகளுக்கு இந்தியாவில் இருந்து இங்கே வருகை தந்து சேவை செய்யும் மலையாள மாந்திரீகள், நம்பூதிரிகள் கோஷ்டியொன்று சிக்கு பட்டதாகவும் கேள்வி...

இந்த கூட்டத்தினை சேர்ந்த ஒரு பெண் அண்மையில் கோயிலிற்கு வந்தவரின் நகையை களவு எடுக்கும் போது கண்டு பிடிச்சு சனம் பொலிசின் கைகளில் ஒப்படைத்தது. பொலிஸ் அவரை பிடிச்சு கொண்டு போய் அடுத்த சந்தியில் இறக்கி விட்டனர்.

ஏன் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரிக்கவில்லை எனக் கேட்டதுக்கு, களவு எடுத்ததுக்கு ஆதாரமாக நகை ஒன்றும் அவரிடத்தில் இருக்கவில்லை என்பதால் விட்டு விட்டோம் என்று ரொரண்டோ காவல் துறை பதில் கொடுத்து இருக்கு. அத்துடன் 5000 டொலருக்கு குறைவான திருட்டு என்பதால் சிறு குற்றம் என்ற ரீயில் பொலிஸ் பிரச்சனையை அணுகி இருக்கு.,

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

இந்த கூட்டத்தினை சேர்ந்த ஒரு பெண் அண்மையில் கோயிலிற்கு வந்தவரின் நகையை களவு எடுக்கும் போது கண்டு பிடிச்சு சனம் பொலிசின் கைகளில் ஒப்படைத்தது. பொலிஸ் அவரை பிடிச்சு கொண்டு போய் அடுத்த சந்தியில் இறக்கி விட்டனர்.

ஏன் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரிக்கவில்லை எனக் கேட்டதுக்கு, களவு எடுத்ததுக்கு ஆதாரமாக நகை ஒன்றும் அவரிடத்தில் இருக்கவில்லை என்பதால் விட்டு விட்டோம் என்று ரொரண்டோ காவல் துறை பதில் கொடுத்து இருக்கு. அத்துடன் 5000 டொலருக்கு குறைவான திருட்டு என்பதால் சிறு குற்றம் என்ற ரீயில் பொலிஸ் பிரச்சனையை அணுகி இருக்கு.,

கனடா  பொலிஸ்காரன், உலகம் புரியாத.... அப்பாவியாக இருக்கிறான். :grin:
கவட்டுக்குள்.... ஒரு,  "வாஷிங் மெஷினையே" ... கொண்டு போற கில்லாடிகள் இருக்கிறார்கள். 🤣

Edited by தமிழ் சிறி

2 hours ago, Sasi_varnam said:

பி.கு.  இந்த களவுகளுக்கு இந்தியாவில் இருந்து இங்கே வருகை தந்து சேவை செய்யும் மலையாள மாந்திரீகள், நம்பூதிரிகள் கோஷ்டியொன்று சிக்கு பட்டதாகவும் கேள்வி...

மலையாளிகளும் சிங்களவர்களும் மற்றவர்கள் சொத்துக்களைக் கொள்ளையடித்து வாழ்வதில் கைதேர்ந்தவர்கள். 

3 hours ago, தமிழ் சிறி said:

கோவிலுக்கு... போகும் போது...ஆபரணம் எதற்கு அணிகின்றார்கள்? 

அதுகும் நல்லூர் கந்தனுக்கு, இன்றும்...  அர்ச்சனை செய்வதென்றால்... ஒரு ரூபாய் மட்டுமே.
அந்த ஒரு ரூபாயை... வேட்டித்  தலைப்பில் கட்டிக்  கொண்டு போனால், என்னவாம்.

நல்லூர் நிர்வாகம் / மாநகர நிர்வாகம் / இந்து அமைப்புக்கள் எப்படி ஆண்கள் மேலாடை அணியக்கூடாது, செருப்பு அணியக்கூடாது, கலாச்சார உடைகளை அணிய வேண்டும் போன்ற சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார்களோ, அதைப் போலவே ஆண்களும் பெண்களும் நகைகளை அணியவே கூடாது என்றும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

ஆலயம், சேர்ச் போன்ற இடங்கள் ஆன்மிக இடங்களே தவிர அவை ஆடை-அலங்கார கண்காட்சி கூடங்கள் அல்ல. அத்துடன் இவை ஏற்றத் தாழ்வுகளை காட்டும் இடங்களும் இல்லை.  இதை சைவர்கள் / இந்துக்கள் உணர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, போல் said:

-----நல்லூர் நிர்வாகம் / மாநகர நிர்வாகம் / இந்து அமைப்புக்கள் எப்படி ஆண்கள் மேலாடை அணியக்கூடாது, செருப்பு அணியக்கூடாது, கலாச்சார உடைகளை அணிய வேண்டும் போன்ற சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார்களோ, அதைப் போலவே ஆண்களும் பெண்களும் நகைகளை அணியவே கூடாது என்றும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

ஆலயம், சேர்ச் போன்ற இடங்கள் ஆன்மிக இடங்களே தவிர அவை ஆடை-அலங்கார கண்காட்சி கூடங்கள் அல்ல. அத்துடன் இவை ஏற்றத் தாழ்வுகளை காட்டும் இடங்களும் இல்லை.  இதை சைவர்கள் / இந்துக்கள் உணர வேண்டும்.

போல்... இது, வரவேற்கத் தக்க கருத்து.  
இன்னும்... சில வருடங்களில்,  இதுகும்.. நடை முறைக்கு வரலாம்.
வர வேண்டும்... என்பதே எனது விருப்பம். :)

  • கருத்துக்கள உறவுகள்

18c104e2840bb408ac3faed8c4155db7-full.jpg

நகைபோட்டால் இப்படிப் போடவேண்டும்.

திருடினாலும் திருடனால் பிறருக்குத் தெரியாது ஒழித்து மறைத்துக் கொண்டுசெல்ல முடியாது.

 

On 30 août 2019 at 9:53 PM, போல் said:

மலையாளிகளும் சிங்களவர்களும் மற்றவர்கள் சொத்துக்களைக் கொள்ளையடித்து வாழ்வதில் கைதேர்ந்தவர்கள். 

நல்லூர் நிர்வாகம் / மாநகர நிர்வாகம் / இந்து அமைப்புக்கள் எப்படி ஆண்கள் மேலாடை அணியக்கூடாது, செருப்பு அணியக்கூடாது, கலாச்சார உடைகளை அணிய வேண்டும் போன்ற சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார்களோ, அதைப் போலவே ஆண்களும் பெண்களும் நகைகளை அணியவே கூடாது என்றும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

ஆலயம், சேர்ச் போன்ற இடங்கள் ஆன்மிக இடங்களே தவிர அவை ஆடை-அலங்கார கண்காட்சி கூடங்கள் அல்ல. அத்துடன் இவை ஏற்றத் தாழ்வுகளை காட்டும் இடங்களும் இல்லை.  இதை சைவர்கள் / இந்துக்கள் உணர வேண்டும்.

இன்றைக்குத் திருமண விழா ஒன்றுக்குப் போயிருந்தேன். அதில் அய்யர் போட்டிருந்த நகைகளை வர்ணிக்க வார்த்தையில்லை. வெறும் மேலுடன் மணவறையில் பளபளவென்று மின்னினார். 😀

5 minutes ago, இணையவன் said:

இன்றைக்குத் திருமண விழா ஒன்றுக்குப் போயிருந்தேன். அதில் அய்யர் போட்டிருந்த நகைகளை வர்ணிக்க வார்த்தையில்லை. வெறும் மேலுடன் மணவறையில் பளபளவென்று மின்னினார். 😀

நாணயப் புழக்கம் அரிதான / இல்லாத காலத்தில் தங்கத்தை ஒரு சொத்தாக சேர்த்து வைத்திருந்தனர். அந்த பொருளாதார நடவடிக்கையை மறந்து தற்காலத்தில் கல்யாண வீடுகளிலும், விசேட வைபவங்களிலும், கோவில்களிலும் அதனை ஒரு கண்காட்சிப் பொருளாக (ஆண்/பெண்/அய்யர்) பேய்கள் பயன்படுத்துகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.