Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் புனரமைக்கபட்ட வீதியை காணவில்லை.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

9 லட்சத்து 90 ஆயிரம் செலவில் புனரமைக்கப்பட்ட வீதியை காணவில்லை..! சித்தாா்த்தன் எம்.பிக்காவது தொியுமா..?

Gamp-udu1.jpg

தமிழ்தேசிய கூட்டமைப்பினால் வடக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கம்பரெலிய திட்டத்தில் பல்வேறு ஊழல்கள் இடம்பெறுவ தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துவரும் நிலையில் யாழ்.உடுவில் பகுதியில் வீதியே போடாமல் வீதி போடப்பட்டதாக பெயா் பலகை நாட்டப்பட்டமை தொடா்பாக மக்கள் கடும் விசனமடைந்துள்ளனா்.

குறித்த வீதி புனரமைப்பிற்கு ஒன்பது இலட்சத்து 90 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டிருப்பதாகவும் குறித்த பெயர்ப்பலகை காணப்படும் நிலையில் புனரமைக்கப்பட்ட வீதி எங்கே என மக்கள் கேள்வி எழுப்பியுள்ள மக்கள் வீதியைக் காணவில்லை என கேலியும் செய்துவருகின்றனர். கம்பரலிய வீதிகள் அமைக்கப்பட்ட பின் ஜனாதிபதி, பிரதமரின் படத்துடன் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினரின் படமும் பொறிக்கப்பட்டே பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுவருகின்றன.

குறித்த பிரதேசத்திற்குரிய கம்பரலிய வேலைத்திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

https://jaffnazone.com/news/13608

டிஸ்கி :

kir.png

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

*** எம்பியின் நிதியில் யாழில் ஓர் கோயிலின் வீதி அமைக்கப்படுகிறது, கேள்விக்கோரல் மூலம் தெரிவு செய்யப்பட்டது 18 மில்லியன்கள் ( ஒரு கோடி 80 இலட்சம்) ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி 40 மில்லியன்கள் ( 4 கோடி) அப்போ மிச்சம் 22 மில்லியன்களுக்கு ( 2 கோடி 20 இலட்சம்) என்ன நடக்கும்?????

 

Edited by MEERA

42 minutes ago, MEERA said:

அப்போ மிச்சம் 22 மில்லியன்களுக்கு ( 2 கோடி 20 இலட்சம்) என்ன நடக்கும்?????

(அரசியல்) கடவுளுக்கு தட்சணையாக கொடுக்கப்பட்டிருக்கும் !

பலகையில் அபிவிருத்தி யுத்தம் என்று போடப்பட்டுள்ளது. வீதி போட்டவன் அபிவிருத்தி எண்டதை மறந்திடான். எங்கடை பூந்தோட்டம் சித்திரவதை முகம் புகழ் சித்தர் என்னவும் செய்வார்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, MEERA said:

*** எம்பியின் நிதியில் யாழில் ஓர் கோயிலின் வீதி அமைக்கப்படுகிறது, கேள்விக்கோரல் மூலம் தெரிவு செய்யப்பட்டது 18 மில்லியன்கள் ( ஒரு கோடி 80 இலட்சம்) ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி 40 மில்லியன்கள் ( 4 கோடி) அப்போ மிச்சம் 22 மில்லியன்களுக்கு ( 2 கோடி 20 இலட்சம்) என்ன நடக்கும்?????

 

தமிழர் பகுதியில் மட்டும் கொங்றீட் வீதிகள் மாற்று இனத்தாரின் வீதிகள் இந்த திட்டத்தில் காப்பட் வீதிகளாக மாறுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்

அபிவிருத்தி சம்பந்தமான வேலைகளில் மக்கள் விழிப்போடு இருந்தால் களவு குறையும், வேலையும் நன்றாக நடக்கும்.
கிராம அபிவிருத்தி சங்கங்கள், சனசமூக நிலையங்கள் அபிவிருத்தி செயற்பாடுகளின்போது கண்காணிப்பு குழுக்களை உருவாக்கி கண்காணிக்க வேண்டும்.

முன்னர் வவுனியாவில், வடக்கில் கப்பம் பெற்று கொலைகளுக்கு தரகுப் பணம் பெற்று சொகுசா வாழ்ந்த சித்தார்த்தன் இப்போது இந்தியன் வீசும் பிச்சைக் காசையும் எலும்புத் துண்டுகளையும் வைத்து எப்படி சொகுசாக வாழ்வது? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முந்தியெல்லாம் தார்பீப்பாவை காணேல்லை.....பவுண்டேசன் கல்லை காணேல்லை....குறுணி கல்லை காணேல்லை எண்டுவாங்கள். இப்ப றோட்டையே காணேல்லை எண்டுறாங்கள். நல்லாய் முன்னேறிட்டாங்கள்.😂

ஆனால் சிவராத்திரிக்கு சிவராத்திரி ஊரிலை கனவீடுகளிலை படலை காணாமல் போறது வேறை விசயம்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி சம்பந்தமா ஒரு விபரம் கிடைத்தது.

சரவணபவன் பா.உ வின் இன்றைய பேச்சின்போது புரிந்து கொண்டது என்னவென்றால் வேலை தொடங்க முதலே பெயர்ப் பலகை போடவேண்டும் என்றும் வேலை முடிந்த பின்னரல்ல என்றும் கூறினார். தென்பகுதியில் இதுதான் நடைமுறை என்றும் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/21/2019 at 2:50 PM, MEERA said:

*** எம்பியின் நிதியில் யாழில் ஓர் கோயிலின் வீதி அமைக்கப்படுகிறது, கேள்விக்கோரல் மூலம் தெரிவு செய்யப்பட்டது 18 மில்லியன்கள் ( ஒரு கோடி 80 இலட்சம்) ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி 40 மில்லியன்கள் ( 4 கோடி) அப்போ மிச்சம் 22 மில்லியன்களுக்கு ( 2 கோடி 20 இலட்சம்) என்ன நடக்கும்?????

 

கேள்விக்கோரலில் தெரிவிக்கப்படுவது அரசு எதிர்பார்க்கும் செலவு. பல காரணங்களால் இறுதியில் உண்மையான செலவு பல மடங்காகலாம். ஒதுக்கப்பட்ட நிதி இறுதி செலவை கருத்தில் கொள்கிறது. செலவு செய்யப்படாத தொகையை அரசு கொடுக்காமல் வேறு திட்டங்களுக்கு ஒதுக்கும்.

On 9/22/2019 at 4:16 AM, தனிக்காட்டு ராஜா said:

தமிழர் பகுதியில் மட்டும் கொங்றீட் வீதிகள் மாற்று இனத்தாரின் வீதிகள் இந்த திட்டத்தில் காப்பட் வீதிகளாக மாறுகிறது 

காப்பட் வீதிகள் இயற்கை கற்களலும் தாராலும் வேறு வேதியங்களாலும் அமைக்கப்படுகின்றன. தென்பகுதியில் உள்ள இயற்கை கற்கள் கரும்கற்பாறைகளில் இருந்து பெறப்படுகின்றன. இவை மழைக்கு இளகாது. வடக்கின் இயற்கை கற்கள் சுண்ணாம்பு கற்கள். மழைக்கு இந்த கற்கள் இளகி வீதிகளை உடைத்து விடுகின்றன. சுண்ணாம்பு கற்களில் வேறு வேதிகள் கலந்து உயர்வெப்பத்தில்   உருவாகும் சீமேந்தில் தயாரிக்கப்படும் கொங்றீட் வீதிகள் மழைக்கு இளகாத உறுதியான வீதிகள். இவற்றிற்கான செலவும் காப்பட் வீதிகளிலும் பார்க்க அதிகம்.

39 minutes ago, ஏராளன் said:

இந்த செய்தி சம்பந்தமா ஒரு விபரம் கிடைத்தது.

சரவணபவன் பா.உ வின் இன்றைய பேச்சின்போது புரிந்து கொண்டது என்னவென்றால் வேலை தொடங்க முதலே பெயர்ப் பலகை போடவேண்டும் என்றும் வேலை முடிந்த பின்னரல்ல என்றும் கூறினார். தென்பகுதியில் இதுதான் நடைமுறை என்றும் கூறினார்.

அமெரிக்காவிலும் இதுவே நடைமுறை.  என்ன வேலை நடக்கிறது?, யார் வேலை செய்கிறார்கள்? யாருடன் தொடர்பு கொள்வது? போன்ற விடயங்களை பெயர்ப் பலகை வளங்குகிறது.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

கேள்விக்கோரலில் தெரிவிக்கப்படுவது அரசு எதிர்பார்க்கும் செலவு. பல காரணங்களால் இறுதியில் உண்மையான செலவு பல மடங்காகலாம். ஒதுக்கப்பட்ட நிதி இறுதி செலவை கருத்தில் கொள்கிறது. செலவு செய்யப்படாத தொகையை அரசு கொடுக்காமல் வேறு திட்டங்களுக்கு ஒதுக்கும்.

உங்களுக்கு சிறீலங்காவின் நிலமை தெரியவில்லை. தனியார் திட்டங்களை விட அரச திட்டங்களிலேயே வெட்டு கொத்துகள் அதிகம் இலாபமும் அதிகம். நான் குறிப்பிட்ட திட்டத்திற்கு குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவுசெய்தது 18m ஆனால் மத்திய அரசிற்கு அனுப்பியது 40m திட்டம். அரச திறைசேரியிலிருந்து குறிப்பிட்ட ஒப்பந்தகாரருக்கு 40m வழங்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

உங்களுக்கு சிறீலங்காவின் நிலமை தெரியவில்லை. தனியார் திட்டங்களை விட அரச திட்டங்களிலேயே வெட்டு கொத்துகள் அதிகம் இலாபமும் அதிகம். நான் குறிப்பிட்ட திட்டத்திற்கு குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவுசெய்தது 18m ஆனால் மத்திய அரசிற்கு அனுப்பியது 40m திட்டம். அரச திறைசேரியிலிருந்து குறிப்பிட்ட ஒப்பந்தகாரருக்கு 40m வழங்கப்படும்.

சிறிலங்காவில் பல்கலைக்கழக ஆய்வுகூடங்களுக்கு கேள்விக்கோரல்களை பெற்று தெரிவு செய்த அனுபவத்தை வைத்தே எனது கருத்து அமைந்து இருந்தது. மத்திய அரசு குறிப்பிட்ட ஒப்பந்தகாரரின் செலவுகள் பற்றிய ஆவணங்களை ஆராயாமல் 40m கொடுத்தால் அது பாரிய ஊழல். சம்பந்தப்பட்டவர்கள் சிறைக்கு போகும் சாத்தியம் அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/29/2019 at 11:14 PM, Jude said:

காப்பட் வீதிகள் இயற்கை கற்களலும் தாராலும் வேறு வேதியங்களாலும் அமைக்கப்படுகின்றன. தென்பகுதியில் உள்ள இயற்கை கற்கள் கரும்கற்பாறைகளில் இருந்து பெறப்படுகின்றன. இவை மழைக்கு இளகாது. வடக்கின் இயற்கை கற்கள் சுண்ணாம்பு கற்கள். மழைக்கு இந்த கற்கள் இளகி வீதிகளை உடைத்து விடுகின்றன. சுண்ணாம்பு கற்களில் வேறு வேதிகள் கலந்து உயர்வெப்பத்தில்   உருவாகும் சீமேந்தில் தயாரிக்கப்படும் கொங்றீட் வீதிகள் மழைக்கு இளகாத உறுதியான வீதிகள். இவற்றிற்கான செலவும் காப்பட் வீதிகளிலும் பார்க்க அதிகம்.

 செலவு அதிகமாக இருக்கலாம் ஆனால் உறுதியானவையாக இருக்க வேண்டும் அதாவது கொங்றீட் வீதிகள் மலையக பிரதேசங்களுக்கு சரிவரும் காரணம் நிலச்சரிவுக்கு உடையமால் இருக்கும் ( உடையலாம் ஏற்படும் நிலச்சரிவை பொறுத்து) ஆனால் இங்கே 6 இஞ்சி உயரம் இரு பக்கத்திலும் தான் இருக்கிறது நடுப்பகுதியில் வெறும் 2 இஞ்சிதான் நாள் போனபிறகு உள்ளே இருக்கும் இரும்பு தட்டு வெளியில் தெரிய ஆரம்பிக்கிறது இது எங்கள் ஊரில் நடந்தது போனவாரம் கூட ஓர் பாதையை பிரதேச தவிசாளருக்கு அறிவித்து அதை ஒழுங்கான முறையில் இடச்சொன்னோம்  நடுவில் கிளறிய மண்ணை கூட வேறு இடங்களுக்கு கொடுக்காமல் காசாக்கும் ஒப்பந்தக்காரர்கள் என்ன செய்வது சேவையிலும் உழைக்க வேண்டும் ஒப்பந்தக்காரர்கள் அரசியல் வாதிகள் கடைக்காரர்கள் இன்னும் பலர் உள்ளிருக்கிறார்கள் ஒவ்வொரு பாதைக்கும் 

On 9/29/2019 at 10:48 PM, ஏராளன் said:

இந்த செய்தி சம்பந்தமா ஒரு விபரம் கிடைத்தது.

சரவணபவன் பா.உ வின் இன்றைய பேச்சின்போது புரிந்து கொண்டது என்னவென்றால் வேலை தொடங்க முதலே பெயர்ப் பலகை போடவேண்டும் என்றும் வேலை முடிந்த பின்னரல்ல என்றும் கூறினார். தென்பகுதியில் இதுதான் நடைமுறை என்றும் கூறினார்.

சித்தார்தனுக்கு விழுந்த அடில சரவணபவன் ஏன் வாய்திறக்கிறார்?
கூட்டுக் களவாணிகள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.