Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாள் வெட்டு கும்பலின் தாக்குதல் – இரும்பக உரிமையாளர் மரணம்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலுக்கு உள்ளான இரும்பக உரிமையாளர் 3 வாரங்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார். எனினும் சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களுக்கு மேலாகியும் கோப்பாய் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது -47) என்பவரே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் செம்ரெம்பர் 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

அன்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று இரும்பகத்துக்குள் புகுந்து அதன் உரிமையாளரை கண்மூடித்தனமாகத் தாக்கியதுடன், இரும்பகத்துக்குள் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்தது.

இரும்பகத்தில் இருந்த கட்டை ஒன்றை எடுத்து உரிமையாளரின் தலையில் கும்பல் தாக்கியிருந்தது. அதனால் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் 24 நாள்களின் பின்னர் நேற்று இரவு 9.30 மணியளவில் அவர் உயிரிழந்தார் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

“சம்பவ தினத்தன்று கோப்பாய் பொலிஸார் இரும்பகத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும் உரிமையாளரைத் தாக்கல் கும்பல் பயன்படுத்திய மரக்கட்டையை சான்றுப்பொருளாக எடுத்துச் செல்ல பொலிஸார் மறுப்புத் தெரிவித்திருந்தனர்.
எனினும் உரிமையாளர் உயிரிழந்தவுடன் தற்போது உறவினர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு கோப்பாய் பொலிஸார் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்” என்று உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

http://globaltamilnews.net/2019/131421/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலுக்கு உள்ளான இரும்பக உரிமையாளர் 3 வாரங்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார். எனினும் சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களுக்கு மேலாகியும் கோப்பாய் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

குற்றவாளிகளையே குற்றவாளிகளைத் தேடும்படி வேண்டும் அவலநிலைக்குள் வாழும் தமிழ்மக்கள்.

1 hour ago, Paanch said:

குற்றவாளிகளையே குற்றவாளிகளைத் தேடும்படி வேண்டும் அவலநிலைக்குள் வாழும் தமிழ்மக்கள்.

சொறிலங்காடை போலீஸ் காடையர்கள் யாழ்பாணத்துல இருக்கிற காடையர்களோட தான் கூட்டு.
இனம் இனத்தோட சேருமாமே! அந்த மாதிரி!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள,  உறவு ஒருவரின்..  உறவினர் ஒருவரே, கந்தையா கேதீஸ்வரன். அவர்களுக்கே... இவர், ஏன் கொல்லப் பட்டார் என்று, தெரியாத நிலையில் உள்ளார்கள். 😥

 ##############      #############      ##############     

Jaffna-2-720x450.jpg

தாக்குதலுக்கு இலக்கான இரும்பக உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழில் இனந் தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்கான இரும்பக உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று (திங்கட்கிழமை) இரவு உயிரிழந்தார்.

கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது -47) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த பகுதியில் கடந்த செம்டெம்பர் 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர், இரும்பகத்துக்குள் புகுந்து உரிமையாளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்த இரும்பினால் உரிமையாளரை தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் 24 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவர், நேற்று இரவு 9.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று கோப்பாய் பொலிஸார் இரும்பகத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்ததோடு, நேற்று இரவு முதல் உறவினர்களிடம் வாக்குமூலம் பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இச்சம்பவத்துடன் வாள் வெட்டுக் குழுக்கள் சம்மந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் வாள் வெட்டுத் தாக்குதல் ஏதும் இடம்பெறவில்லை என்பதை பிரதேச தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

Jaffna-3-720x341.jpg

1.jpg

4-720x340.jpg

5-720x341.jpg

http://athavannews.com/வாள்வெட்டுக்கு-இலக்கான-ந/

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Arrested.jpg

யாழ். கோண்டாவில் தாக்குதல் சம்பவம் – இளைஞர் கைது

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரும்பு கடை உரிமையாளரை தாக்கி கொலை செய்த நபரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே கிளிநொச்சி பகுதியில் வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் கோண்டாவில் பகுதியில் இரும்புக் கடை வைத்திருக்கும் கடை உரிமையாளரை கடையில் வைத்து இரும்பு கம்பி மற்றும் பொல்லால் தாக்கியிருந்தனர். தாக்குதலுக்கு இலக்காகிய நபர் கடந்த வாரம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் புகைப்படங்கள் மற்றும் சிசிரிவி காணொளிகள் பொலிஸாரினால் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தாக்குதலை மேற்கொண்ட இருவரும் தலைமறைவாகியிருந்தனர்.

பொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கையின் போது, தலைமறைவாகியிருந்த இருவரில் ஒருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

http://athavannews.com/யாழ்-கோண்டாவில்-தாக்குத/

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை என்றால் நல்ல விடையம்.

  • கருத்துக்கள உறவுகள்

கேதீஸ்வரனின் யாழ்கள உறவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

3 hours ago, சுவைப்பிரியன் said:

உண்மை என்றால் நல்ல விடையம்.

நீங்கள் சொல்லவருவது விளங்கிறது. ஆனால் பொலீஸ் பிடிக்காட்டி - சிங்கள பொலீஸ் கள்ளரோட கூட்டு என்போம்.

பிடிச்சா- சிங்கள பொலீஸ் அப்பாவியள பிடிச்சிட்டு என்போம்.

அவங்களும் என்னதான் செய்வது 😂

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த யாழ்கள உறவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

கேதீஸ்வரனின் யாழ்கள உறவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

நீங்கள் சொல்லவருவது விளங்கிறது. ஆனால் பொலீஸ் பிடிக்காட்டி - சிங்கள பொலீஸ் கள்ளரோட கூட்டு என்போம்.

பிடிச்சா- சிங்கள பொலீஸ் அப்பாவியள பிடிச்சிட்டு என்போம்.

அவங்களும் என்னதான் செய்வது 😂

அது தான் சொல்லீட்டிங்களே கள்ளரோடு கூட்டு வைக்க வேண்டும். இல்லாட்டி அப்பாவிகளை பிடிக்க வேண்டும் என்று. நான் அறிந்த வரையில் கண்டும் காணாமல் போவது தான் நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

அது தான் சொல்லீட்டிங்களே கள்ளரோடு கூட்டு வைக்க வேண்டும். இல்லாட்டி அப்பாவிகளை பிடிக்க வேண்டும் என்று. நான் அறிந்த வரையில் கண்டும் காணாமல் போவது தான் நடக்கிறது.

இதை மறுப்பதற்கில்லை. ஆனால் இது வடகிழக்குக்கு மட்டுமானதல்லல. பொலீசாரின் குளறுபடிகள் நாடெங்கிலும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இதை மறுப்பதற்கில்லை. ஆனால் இது வடகிழக்குக்கு மட்டுமானதல்லல. பொலீசாரின் குளறுபடிகள் நாடெங்கிலும்தான்.

தெற்கில் கண்டும் காணாமலும் போவார்கள் என நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. அது எல்லாவற்றையும் சிங்களம்/தமிழ் என்ற tinted glass ஊடாக நீங்கள் பார்பதாலும் இருக்கலாம். தெற்கிலும் பல கண்டுபிடிக்க படாத குற்ற செயயல்கள் நடக்கிறன.

5 minutes ago, nunavilan said:

தெற்கில் கண்டும் காணாமலும் போவார்கள் என நான் நினைக்கவில்லை.

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

ரின்ரட் இல்லாமல் பார்த்தாலும் அப்படி தான் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nunavilan said:

ரின்ரட் இல்லாமல் பார்த்தாலும் அப்படி தான் தெரிகிறது.

சில தரவுகளை இணைத்துள்ளேன் படித்துப்பாருங்கள்.

https://en.m.wikipedia.org/wiki/Kotakethana_murders 

https://www.bbc.com/sinhala/news/story/2010/07/100703_beggars.shtml 

http://www.sundaytimes.lk/140112/news/crimes-murders-decline-but-most-remain-unsolved-with-fewer-successful-prosecutions-79699.html

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

கேதீஸ்வரனின் யாழ்கள உறவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

நீங்கள் சொல்லவருவது விளங்கிறது. ஆனால் பொலீஸ் பிடிக்காட்டி - சிங்கள பொலீஸ் கள்ளரோட கூட்டு என்போம்.

பிடிச்சா- சிங்கள பொலீஸ் அப்பாவியள பிடிச்சிட்டு என்போம்.

அவங்களும் என்னதான் செய்வது 😂

ஆமாண்ணய்.....
சிங்கள போலீஸ் வவுணதீவில் இரண்டு போலீசை சுட்டவர்களை பிடித்த சீத்துவத்தை பார்த்தோம் தானே....
ஸஹ்ரான் வெளியில் வந்திருக்காவிடில் இரண்டு அப்பாவிகள் வருடக்கணக்கில் களி திண்டிருப்பினம் , போலீசை போட்டுத்தள்ளினத்துக்கே அப்பாவிகளை தான் பிடிப்பினம் என்றால் மற்ற கேஸ்களுக்கு காட்டாயம் குற்றவாளிகளை தான் பிடித்திருப்பினம் என்று நீங்கள் வேண்டுமானால் நம்பலாம் அது உங்கள் உரிமை 

Quote

Subsequently, two former LTTE members had been taken into custody over the killing of the policemen. The two suspects were identified as Kadiramathambi Iraja kumaran (Kannan,40) and Rasanaygam Sarvananthan.  

Kannan was taken into custody in Batticaloa and Sarvananthan at Kilinochchi. Later Sarvananthan was brought to Batticaloa for questioning. He is a former leading intelligence operative of the LTTE. He had told the police that he was in Batticaloa for several weeks to organise a Mahaveer event. Sarvananthan was staying in Kannan’s house in Vavunathivu, Batticaloa. It was also revealed that Sarvananthan had come to Batticaloa several times to celebrate Mahaveer every year.  

Although reports said that one of the suspects had admitted that he was responsible for the killing, the CID has no strong evidence against the two suspects and therefore whether both of them were involved in the double murder is still unknown. Meanwhile, UNP MP Ranjith Madduma Bandara pointed out that the incident in Batticoloa was serious in nature and demands a proper investigation, as such crimes did not take place during the past three and half years.  




 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஆமாண்ணய்.....
சிங்கள போலீஸ் வவுணதீவில் இரண்டு போலீசை சுட்டவர்களை பிடித்த சீத்துவத்தை பார்த்தோம் தானே....
ஸஹ்ரான் வெளியில் வந்திருக்காவிடில் இரண்டு அப்பாவிகள் வருடக்கணக்கில் களி திண்டிருப்பினம் , போலீசை போட்டுத்தள்ளினத்துக்கே அப்பாவிகளை தான் பிடிப்பினம் என்றால் மற்ற கேஸ்களுக்கு காட்டாயம் குற்றவாளிகளை தான் பிடித்திருப்பினம் என்று நீங்கள் வேண்டுமானால் நம்பலாம் அது உங்கள் உரிமை 




 

மற்றைய திரிகளில் சொன்னதுதான்.

1. தமிழ்-சிங்கள அல்லது படையினர் மீது தமிழ் பகுதியில் தாக்குதல் - என்பதை பொலிஸ் அணுகும் முறைக்கும். சாதாரண தமிழர் எதிர் தமிழர் குற்றங்களை பொலீசார் அணுகும் முறைக்கும் வேறுபாடு உண்டு.

2. இலங்கையின் சகல பாகங்களிலும் பொலீசார் ஊழலில் திளைக்கிறார்கள். இது தனியே வடக்கு கிழக்கில் மட்டும் இல்லை.

மற்றும் படி பொலிசாருக்கு நான் ஒன்றும் அதி விசேட சித்தி என்று சேர்டிபிக்கேட் கொடுக்கவில்லை.

பிகு: காட்டுக்குள் சிங்கத்தை தேடிப்போய் மாட்டோடு வந்து அதை நான்தான் சிங்கம் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வைத்த பகிடி தெரியும்தானே? இலங்கை பொலீசின் நிலை இப்போதும் அப்படித்தான். ஆனால் சில நுணுக்கமான வேறுபாடுகள் இருக்கிறன.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அன்றாட மக்களை தவிர யாரையும் நம்ம தயாரில்லை. நியத்தில் நடந்தவைகளை யாழில் எழுதி நிரப்ப விருப்பமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

அன்றாட மக்களை தவிர யாரையும் நம்ம தயாரில்லை. நியத்தில் நடந்தவைகளை யாழில் எழுதி நிரப்ப விருப்பமில்லை. 

மன்னிக்கவும்,

இது டிண்டட் கண்ணாடி அல்ல, டிண்டட் கொண்டாக்ட் லென்ஸ். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

மன்னிக்கவும்,

இது டிண்டட் கண்ணாடி அல்ல, டிண்டட் கொண்டாக்ட் லென்ஸ். 

ஓ அப்படியா? லேசர் விசனில் பார்த்தாலும்  மாற்றமில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

😂 மனத்தின் விந்தை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

😂 மனத்தின் விந்தை.

உண்மையிலேயே மனத்தின் விந்தை தான்! ட்ரம்ப், பிறெக்சிற், ஜோன்சன், இவையெல்லாம் நல்ல சமாச்சாரங்களாக இன்றைக்கு முன்னணியில் திகழக் காரணமான அதே மனத்தின் விந்தை தான் இதுவும்!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.