Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை அறிவித்தது கூட்டமைப்பு

Featured Replies

உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை அறிவித்தது கூட்டமைப்பு
Editorial   / 2019 நவம்பர் 07 , மு.ப. 10:17 - 0      - 121


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஏகமனதாக ஆதரிப்பதாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பை இன்று (07) வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமது தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (07) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் அரசு கட்சியின் ஆதரவாளர்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களையும் அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு இரா.சம்பந்தனால் விடப்பட்ட அறிக்கையொன்றில் கோரப்பட்டுள்ளது.

இன்று காலை வெளியான அந்த அறிக்கையில்-

இலங்கைக்கு சனநாயக ரீதியாக ஜனாதிபதியொருவரை தெரிவு செய்தற்கான தேர்தல் 2919 நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது அதிகூடிய எண்ணிக்கையிலான ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) – இலங்கைத் தமிழரசுக் கட்சி (இதக) சொல்லப்பட்ட தேர்தல் தொடர்பாக தனது நிலைப்பாட்டைக் குறிப்பிட விரும்புகிறது.

இத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் – சஜித்பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் – கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் வேட்பாளர் – அநுரகுமார திசாநாயக்க, தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க ஆகியோரும் மற்றும் பலரும் போட்டியிடுகின்றனர்.

தற்போதுள்ளவாறு மேலே குறிப்பிடப்பட்டுள்ள அபேட்சகர்களுள் முதல் இருவருக்கிடையிலேயே போட்டி பிரதானமாக நிலவுவதாகத் தோன்றுகிறது.

புதிதாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி (1) உண்மையாகவே ஜனநாயகத்தில் பற்றுறுதி கொண்டவராகவும், சர்வாதிகாரப் போக்கிற்கு இட்டுச் செல்லக்கூடிய அதிகாரத்துவவாதம் மற்றும் எதேச்சாதிகாரம் ஆகியவற்றிற்கு எதிரானவராகவும், (2) அத்துடன் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை, சேவைத்துறை, குறிப்பாக அரசாங்க சேவை, பொலிஸ் சேவை மற்றும் ஆயுதப்படை சேவை ஆகியவற்றின் மீதும் சொல்லப்பட்ட சேவைகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் பல்வேறு நிறுவனங்களின் மீதும் உண்மையாகவே பற்றுறுதி பூண்டவராகவும், (3) அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீது உண்மையாகவே பற்றுறுதி கொண்ட ஒருவராகவும், (4) நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் மீது உண்மையாகவே பற்றுறுதி கொண்டவராகவும், அனைத்துப் பிரசைகளும் தமது விசேட தனித்துவத்தைப் போற்றிப் பாதுகாக்கும் அதேவேளை, தாம் சமத்துவமானவர்கள் என்றும் நாடு தம் அனைவருக்கும் உரியது என்று உணர்வதைப் போலவே தாம் அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் உணரும் ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்று, சகல பிரசைகளும் தேசிய ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் ஆட்சியில் உண்மையாகவே பங்குபற்ற அவர்களது இனத்துவம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாது அவர்களுக்கு உதவுவதற்கு பற்றுறுதி பூண்டவராகவும் இருக்கவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேற்போந்தவை உயரிய வேணவாக்களாகும் என்பதோடு, இப் பெரும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது சிறந்தது என்பது பற்றி நன்கு சிந்தித்து சரியான ஒரு கணிப்பினை மேற்கொள்வது வாக்காளரின் கடமையாகும்.இக்கணிப்பில் விடும் ஒரு தவறு ஆபத்தான விளைவுகளுக்கு இட்டுச்செல்லக்கூடும்.

முதலிரு வேட்பாளர்களும் ஆட்சியில் ஈடுபட்டிருந்துள்ளதோடு, அண்மைக் காலங்களில் ஆட்சியிலிருந்த அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்களாவர். அவர்களுடைய கடந்தகால செயலாற்றுகை எமக்குத் தெரியும். அதன் அடிப்படையில் பொருத்தமான கணிப்பொன்றை நாம் மேற்கொள்ள முடியும். அவர்களது கொள்கைகளை விளக்கும் தேர்தல் விஞ்ஞாபனங்களும் எம்மிடம் உள்ளன.

அவற்றின் அடிப்படையில், எதேச்சாதிகாரத்தையும் தான்தோன்றித்தனத்தையும் கைவிடுவதாக உறுதியளித்தல் சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை, சேவைத்துறைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் ஓர் ஐக்கிய, பிரிபடாத மற்றும் பிரிக்கமுடியாத நாட்டில் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்து நாட்டை ஒற்றுமைப்படுத்தல் அடங்கலாக அனைத்துப் பிரசைகள் மத்தியிலும் நீதியையும் சமத்துவத்தையும் ஊக்குவித்தல் உள்ளிட்ட அவர்களது ஜனநாயகத்தின் மீதான பற்றுறுதி தொடர்பாக ஒரு கணிப்பை மேற்கொள்ள முடியும்.

பொதுஜன பெரமுன மற்றும் அதன் அபேட்சகர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர்களோடு ஆட்சியதிகாரத்திலிருந்த ஏனையவர்கள் ஆகியோரின் கடந்த காலச் செயற்பாடுகள் கவலையளிப்பவையாகும்.

அரசியலமைப்பிற்கான 17வது திருத்தத்தை நீக்கியமை, அரசியலமைப்பிற்கான 18வது திருத்தத்தை நிறைவேற்றியமை, அந்நோக்கத்திற்காக சட்டவாக்கச் சபையை (நாடாளுமன்றத்தை) ஆட்டிப்படைத்தமை, அரசியலமைப்புப் பேரவையை இல்லாதொழித்தமை, சேவைத்துறைகள் மற்றும் நீதித் துறை ஆகியவற்றிற்கான அனைத்து உயர் நியமனங்களும் முழுமையாக நிறைவேற்று சனாதிபதியின் விருப்பத்திற்கமைய மேற்கொள்ளப்பட்டமை ஆகியன ஆட்சிமுறையின் அனைத்து அம்சங்களையும் முழுமையாக நிறைவேற்று சனாதிபதியான ஒரு தனி மனிதரின் எதேச்சாதிகாரமானதும் தான்தோன்றித்தனமானதுமான கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தன.

பிரதம நீதியரசருக்கெதிரான குற்றப் பிரேரணை மற்றும் அற்ப குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் இராணுவத் தளபதிக்கெதிராக வழக்குத் தொடுத்தமை ஆகியன அந்த ஆட்சியின் எதேச்சதிகார மற்றும் தான்தோன்றித்தனமான தன்மையை உறுதிப்படுத்தின. அப்போதைய ஜனாதிபதி எத்தனை தடவையும் பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு உதவும் வண்ணம் அரசியலமைப்பு திருத்தியமைக்கப்பட்டது. இது, சர்வாதிகார ஆட்சியைத் தொடர்வதற்கான திடசங்கற்பத்தை எடுத்துக் காட்டியது.

இயங்கிக் கொண்டிருந்த அரசாங்கத்தைப் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையொன்று இல்லாது, அரசியலமைப்பிற்கு முரணான ஓர் அரசாங்கத்தின் வாயிலாக 2018 ஒக்டோபரில் கடத்தியமை; பதவி வழங்குவதான வாக்குறுதி, இலஞ்சம் மற்றும் வேறு சலுகைகள் மூலம் தூண்டப்பட்ட கட்சி மாறல் வாயிலாக நாடாளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மையைப் பெற ;றுக் கொள்வதற்கான முயற்சிகள் ஆகியன அதிகாரத்திற்கான அளவற்ற ஆசையை எடுத்துக் காட்டுவனவாக இருந்தன.

எமது உயரிய நீதித்துறைச் சுதந்திரத்தின் காரணமாக நாடு பேராபத்திலிருந்து காப்பாற்றப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியாது ஜனநாயகத்திற்காகப் நாடாளுமன்றத்தில் உறுதியாக நின்றது.

பத்திரிகையாளர்கள், சிவிலியன் குடிமக்கள், மாணவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள்,  ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் என். ரவிராஜ் ஆகிய எமது இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் படுகொலைகளும் காணாமற்போதலும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மோசமாக மீறப்பட்டமையை எடுத்துக் காட்டுகின்றன. வெள்ளை வேன் பீதி நன்கு நினைவிலுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட முழுமையான ஒத்துழைப்பு இருந்தும், ராஜபக்ஷ அரசாங்கம் தேசிய பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளைக் கைவிட்டு, மக்கள் முரண்பாட்டையும் ஒற்றுமையின்மையையும் தவிர்த்து ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டில் வாழ்வதற்கு உதவக்கூடியதாக அனைத்து மக்கள் மத்தியிலும் ஒற்றுமையை ஊக்குவிக்கத் தவறியது. ஆட்சி அதிகாரங்களைப் பகிர்வதற்கான தற்போதுள ;ள ஏற்பாடுகளை வலுவற்றதாக்குவதற்கும் குறைப்பதற்கும் அரசாங்கம் மேலும் முயற்சித்தது. ஆட்சி அதிகாரங்களைப் பகிர்வதை அரசியலமைப்பு ரீதியாக மேம்படுத்துவதற்கும் அதனை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும் உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திலுள்ள பல அமைப்புகளுக்கும் அது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் தவறியது.

மற்ற முக்கிய அபேட்சகரான சஜித் பிரேமதாசவினதும் அவர் சார்ந்த அரசியல் இயக்கத்தினதும் செயலாற்றுகை அத்தகைய முறைப்பாட்டிற்கு இடம் வைக்கவில்லை. மாறாக, அவர்கள் அந்நடைமுறையை முன்னெடுத்துச் செல்வதற்கு தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டினுள் தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அரசியல் தீர்வைக் காணும் விடயம், காணாமற் போன ஆட்களின் விடயம், தடுப்புக் காவலில் உள்ள ஆட்களின் விடயம், காணி விடுவிப்பு, மீள்குடியேற்றமும் புனர்வாழ்வும், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்தல் ஆகியன நிறைவேற்றப்படவேண்டும் புதிதாக தெரிவு செய்யப்படும் சனாதிபதி இவ்விடயங்களுக்கு அவசரமாக தீர்வு காணவேண்டும். தமிழ் மக்களின் நலன்களுக்காக மாத்திரமின்றி, முழு நாட்டினதும் அனைத்து மக்களினதும் நலனுக்காகவும் இவ்விடயங்களுக்குத் தீர்வு காணப்படவேண்டும்.

இவ்விரு வேட்பாளர்களினதும் முன்னைய செயற்பாடுகளுடன் சேர்த்துப் பார்க்கப்படும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்கள் பற்றிய ஒரு பரிச நலனையானது, புதிய ஜனநாயக முன்னணியின்  சஜித் பிரேமதாசவின் வேட்பிலும் நிகழ்ச்சித் திட்டங்களிலும் கொள்கைகளிலும் நம்பிக்கை வைப்பதுதான் சரியான செயலாக அமையும் என்பதை எடுத்துக்காட்டும்.

பொருளாதார விடயங்கள் தொடர்பாக, இரு வேட்பாளர்களும் மிகவும் விரிவான வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர் எந்த அளவிற்கு அவை நிறைவேற்றப்படும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும். ஊழல் என்பது இரு வேட்பாளர்களது அரசாங்கங்களுக்கு எதிராகவும் முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டாகும். இலங்கை இருப்பு கொள்ள வேண்டுமாயின், ஊழல் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும்.

இவ்வனைத்துக் காரணிகளையும் கவனத்தில் கொண்டு, குறிப்பாக முக்கிய முனைகளில் அவர்களது முன்னைய செயற்பாடுகளையும் அவரவர் தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையிலான எதிர்காலச் செயற்பாடுகளையும் கவனத்தில் கொண்டு, தமிழத் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) – இலங்கைத் தமிழரசுக் கட்சி அனைத்து மக்களையும், குறிப்பாக தான் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் மக்களை அன்னச் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.

இரா.சம்பந்தன்,

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/உததயகபபரவ-தரமனதத-அறவததத-கடடமபப/150-240779

  • தொடங்கியவர்
11 minutes ago, ampanai said:

எந்த அளவிற்கு அவை நிறைவேற்றப்படும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும்.

எழுதிச்  செல்லும் விதியின் கைகள் !

1 hour ago, ampanai said:

பத்திரிகையாளர்கள், சிவிலியன் குடிமக்கள், மாணவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள்,  ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் என். ரவிராஜ் ஆகிய எமது இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் படுகொலைகளும் காணாமற்போதலும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மோசமாக மீறப்பட்டமையை எடுத்துக் காட்டுகின்றன. வெள்ளை வேன் பீதி நன்கு நினைவிலுள்ளது.

யாழ் நூலகம் எரிப்பு, 1983 கலவரங்கள், நில ஆக்கிரமிப்புக்கள், அப்பாவிகளை சிறைகளில் அடைத்து வைத்திருத்தல், வடமாகாணசபை செயற்பட முடியாது முடக்கி வைத்திருந்ததை, பல வாக்குறுதிகளைக் கூறி தமிழர்களை நீண்டகாலமாக ஏமாற்றியமை, ... போன்றவை எல்லாமே ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் போன்றவற்றை பேணும் நல்ல செயற்பாடுகள் என்று சம்மந்தன், சுமந்திரன்  நம்புகிறார்கள்.

  • தொடங்கியவர்

நடக்க உள்ள சனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு ஒரு சவால்கள் குறைந்த தரப்பை தெரிவு செய்து தமிழ் மக்களை வாக்களிக்க கேட்டுள்ளது. அத்துடன், அவர்கள் அளித்த வாக்குறுதிகள், "அளவிற்கு அவை நிறைவேற்றப்படும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும்", எனவும் கூறியுள்ளது.

அன்று தந்தை செல்வா இருந்த இடத்திலேயே இன்றும் அரசியல் ரீதியாக உள்ளோமா இல்லை சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு வேறு வழிகள் இருந்தும் அவற்றை துணிவுகரமாக முன்னெடுக்க விரும்பவில்லையா? என்ற கேள்வியும் எழுகின்றது. இந்த வழியை தெரிவு செய்ததன் மூலம், தமது நாடாளுமன்ற தேர்தலை மட்டும் குறிவைத்துள்ளார்களா? என்ற கேள்வியும் எழுகின்றது.

எதுவானாலும், தந்தை செல்வா அன்று கூறியது போன்று,  "எம்மை காப்பாற்ற கடவுள் தான் வரவேண்டும்" என்ற நிலை. ஆனால், கிடைத்த கடவுளையும் தொலைத்துவிட்டவர்கள் நாங்கள்.     

  • தொடங்கியவர்

கோரிக்கையை நிரகாரித்த இருவரும் எவ்வாறு தமிழர்களிடம் வாக்களிக்குமாறு கோருவார்கள் - சிவசக்தி ஆனந்தன் 

தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிராகரித்த பிரதான இரண்டு வேட்பாளர்களும் எந்த அடிப்படையில் தமிழ் மக்களிடம் தங்களுக்கு வாக்களிக்குமாறு கோருவார்கள். அதனால் வேட்பாளர்களை நிராகரிக்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் , மதத் தலைவர்கள் , சுயாதீன அமைப்புகள் இணைந்து 5 கட்சிகளினால் கொண்டு வரப்பட்ட 13 அம்ச கோரிக்கையானது கடந்த 70 வருட காலம் தீர்க்கப்படாதிருக்கும் முக்கியமான அம்சங்களே அவை. 

அவற்றில் அரசியல் தீர்வு தவிர்த்து ஏனையவை யுத்தத்திற்கு பின்னரான நிலைமைகளாகவே உள்ளது. அதாவது அரசியல் கைதிகளின் விடுதலை , காணி விடுவிப்பு , பயங்கரவாத தடைசட்டம் நீக்குதல் , அபிவிருத்தி , வேலைவாய்ப்பு ஆகியன காணப்படுகின்றன. இவை தனி நாட்டுக்கான கோரிக்கையல்ல. தமிழ் மக்களின் மீதான இன படுகொலை காரணமாக தீர்க்கப்படாதிருக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வகையிலேயே 13 அம்ச கோரிக்கைகளை வேட்பாளர்களுக்கு கையளிக்க நடவடிக்கையெடுத்தோம்.

 ஆனால் பொதுஜன பெரமுன வேட்பாளர் வெளிப்படையாகவே இந்த கோரிக்கைகள் தொடர்பில் எங்களை  சந்திக்க தயார் இல்லையென கூறிவிட்டார். அதேபோன்று சஜித் பிரேமதாசவும் ஒரு படி மேலே சென்று யாருடைய  நிபந்தனைகளுக்கும் கட்டுப்படப்போவதில்லை என குறிப்பிட்டிருந்தார். 

இவ்வாறான நிலைமையில் தமிழ் மக்கள் உங்களுக்கு என்ன அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்பது தமிழ் மக்களிடம் இருக்கும் கேள்விகளாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களிடம்  தமிழ் கட்சிகள் முன்வைத்த 13 கோரிக்கைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/68471

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 மக்களே கடவுள் மேல் பாரத்தை போட்டு வாக்களியுங்கள்.

On 11/7/2019 at 3:04 PM, ampanai said:

நடக்க உள்ள சனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு ஒரு சவால்கள் குறைந்த தரப்பை தெரிவு செய்து தமிழ் மக்களை வாக்களிக்க கேட்டுள்ளது. அத்துடன், அவர்கள் அளித்த வாக்குறுதிகள், "அளவிற்கு அவை நிறைவேற்றப்படும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும்", எனவும் கூறியுள்ளது.

அன்று தந்தை செல்வா இருந்த இடத்திலேயே இன்றும் அரசியல் ரீதியாக உள்ளோமா இல்லை சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு வேறு வழிகள் இருந்தும் அவற்றை துணிவுகரமாக முன்னெடுக்க விரும்பவில்லையா? என்ற கேள்வியும் எழுகின்றது. இந்த வழியை தெரிவு செய்ததன் மூலம், தமது நாடாளுமன்ற தேர்தலை மட்டும் குறிவைத்துள்ளார்களா? என்ற கேள்வியும் எழுகின்றது.

எதுவானாலும், தந்தை செல்வா அன்று கூறியது போன்று,  "எம்மை காப்பாற்ற கடவுள் தான் வரவேண்டும்" என்ற நிலை. ஆனால், கிடைத்த கடவுளையும் தொலைத்துவிட்டவர்கள் நாங்கள்.     

என்ன தான் கூட்டமைப்பில் எனக்கு விமர்சனம் இருந்தாலும் கூட்டமைப்பு சஜித்துக்கு வாக்களிக்குமாறு மக்களை கோரியது மகிழ்ச்சி.

நல்ல வேளை உங்களை மாதிரி புலம்பெயர் டமிழ்ஸ்களால் வாக்களிக்க முடியாது. வாக்களிக்க முடிந்தால் உங்கள் வாக்குகளாலேயே கோத்தாவை வெற்றி பெற வைத்து விடுவீர்கள்.🤣

இம்முறை அநுர களமிறங்குவதால் கோத்தா வெல்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது. ஆனாலும் தமிழர்கள் வாக்குகளால் வெல்லக்கூடாது.

  • தொடங்கியவர்

image_a4c8188f50.jpg

On ‎11‎/‎7‎/‎2019 at 6:41 AM, ampanai said:

தமிழ் அரசு கட்சியின் ஆதரவாளர்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களையும் அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு இரா.சம்பந்தனால் விடப்பட்ட அறிக்கையொன்றில் கோரப்பட்டுள்ளது

எதிர்பார்த்ததே நடந்துள்ளது; எதிர்பாராதது நடந்ததுபோல, காட்டப்படும் பாவனை, கோமாளிக்கூத்தன்றி வேறல்ல.   தமிழரசுக் கட்சி, தேர்தலைப் புறக்கணித்திருந்தாலோ,  கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலோ, எதிர்பாராதது நடந்தது என்று சொல்லலாம்.  - ஏகலைவா

  1. ஆறுகட்சிகளிடையேயான பேச்சுவார்த்தையின் பின், அதில் ஐந்து கட்சிகளின் கூட்டணி, 13 அம்சக் கோரிக்கை என்ற அனைத்து நாடகங்களும் அரங்கேறி, இறுதியில் ‘நிபந்தனையற்ற ஆதரவு’ என்ற முடிவைத் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகள் என்று தம்மைச் சொல்லிக் கொள்வோரில் ஒருபகுதியினர் எட்டியுள்ளனர்.   

      2. ஒருவரைத் தோற்கடிப்பதற்காக இன்னொருவருக்கு ஆதரவு என்ற வாதத்தை முன்வைக்கின்றார்கள். இது புதிதல்ல; இறுதிப்போரை நடத்திப் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று தீர்த்தவர் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டவரான, இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டணி ஆதரவளித்தபோதும், , இதே போன்றதொரு சாட்டையே சொன்னது. இப்போது அது வேறு வடிவங்களில் தொடர்கிறது.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எதரபரததத-பலவ-நடநதத-அடதத-வலயப-பரககலம/91-240771

27 minutes ago, Lara said:

 

இம்முறை அநுர களமிறங்குவதால் கோத்தா வெல்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது. ஆனாலும் தமிழர்கள் வாக்குகளால் வெல்லக்கூடாது.

பல அரசியல் அவதானிகள் இதை கூறுவதை அவதானித்துள்ளேன். ஆனால் இது எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

மகிந்த + கோத்தாவின் கோட்டைகளாகக் கருதக்கூடிய இடங்களாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, அனுராதபுரம், முழு வடமேல் மாகாணம் (குருணாகல், புத்தளம்) ஆகியன காணப்படுகின்றன. இவற்றில் இலங்கையில் ஜேவிபி யின் செல்வாக்கு அதிகமாக இருக்கும் இடங்களாக இருப்பவை காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் ஆகியனவே. ஆகவே மகிந்தவின் கோட்டைகளில் அரைவாசி பகுதிகளில் அவர்களுக்கு செல்லவிருக்கும் வாக்குகள் பிரிந்து ஜேவிக்கு செல்ல சந்தப்பர்பங்கள் அதிகம். அத்துடன் இப் பகுதிகளில் என்றைக்குமே யூ என் பி வெல்வதில்லை என்பதால் (சில இடங்களில் மூன்றாவதாக வருவதற்கும் சந்தர்ப்பம் உள்ளன) அவர்கள் இங்கு கிடைக்காவிடினும் ஒட்டு மொத்த வாக்கு வீதத்தை கருத்தில் கொண்டால் பெரிய மாற்றம் வந்து விடாது.

என் கணிப்பின் படி சஜித்துக்கு வடக்கு (65வீதம்), கிழக்கு (55 வீதம்), கண்டி, கொழும்பு (3.5 இலட்சம் வாக்குகளாவது அதிகமாக கிடைக்கும்., நுவரேலியா, மாத்தளை போன்ற இடங்களுக்கு கை கொடுக்கும். இவை ஜேவிபியின் செல்வாக்கு அதிகமற்ற பகுதிகளாகவும் உள்ளன.

4 hours ago, நிழலி said:

பல அரசியல் அவதானிகள் இதை கூறுவதை அவதானித்துள்ளேன். ஆனால் இது எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

மகிந்த + கோத்தாவின் கோட்டைகளாகக் கருதக்கூடிய இடங்களாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, அனுராதபுரம், முழு வடமேல் மாகாணம் (குருணாகல், புத்தளம்) ஆகியன காணப்படுகின்றன. இவற்றில் இலங்கையில் ஜேவிபி யின் செல்வாக்கு அதிகமாக இருக்கும் இடங்களாக இருப்பவை காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் ஆகியனவே. ஆகவே மகிந்தவின் கோட்டைகளில் அரைவாசி பகுதிகளில் அவர்களுக்கு செல்லவிருக்கும் வாக்குகள் பிரிந்து ஜேவிக்கு செல்ல சந்தப்பர்பங்கள் அதிகம். அத்துடன் இப் பகுதிகளில் என்றைக்குமே யூ என் பி வெல்வதில்லை என்பதால் (சில இடங்களில் மூன்றாவதாக வருவதற்கும் சந்தர்ப்பம் உள்ளன) அவர்கள் இங்கு கிடைக்காவிடினும் ஒட்டு மொத்த வாக்கு வீதத்தை கருத்தில் கொண்டால் பெரிய மாற்றம் வந்து விடாது.

என் கணிப்பின் படி சஜித்துக்கு வடக்கு (65வீதம்), கிழக்கு (55 வீதம்), கண்டி, கொழும்பு (3.5 இலட்சம் வாக்குகளாவது அதிகமாக கிடைக்கும்., நுவரேலியா, மாத்தளை போன்ற இடங்களுக்கு கை கொடுக்கும். இவை ஜேவிபியின் செல்வாக்கு அதிகமற்ற பகுதிகளாகவும் உள்ளன.

ஜேவிபி உடைந்ததும் விமல் வீரவன்ச தரப்பு மகிந்த பக்கமும் சோமவன்ச அமரசிங்க தரப்பு (தொடர்ந்து ஜேவிபியாக இயங்கிய தரப்பு) ஐதேக பக்கமும் நின்றன. 2010 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தது. 2010 நாடாளுமன்ற தேர்தலில் சரத் பொன்சேகா தரப்புடன் இணைந்து போட்டியிட்டது. 

அநுர ஜேவிபியின் தலைவரானது 2014 இல். 2015 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி மைத்திரிக்கு ஆதரவளித்தது. 2015 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 543,944 வாக்குகளை பெற்றது. போன வருட உள்ளூராட்சி தேர்தலில் 710,932 வாக்குகளை பெற்றது. இத்தேர்தலில் 10 இலட்சம் வாக்குகள் பெறுவது அநுரவின் இலக்கு. ஜனாதிபதி வேட்பாளராக எவ்வளவு வாக்குகளை பெறுவார் என தெரியாது. ஆனால் அவருக்கு கிடைக்கும் வாக்குகளில் பெருமளவிலானவை சஜித்துக்கு கிடைக்கவிருப்பதிலிருந்து பிரிந்து வருபவை. அத்துடன் அவருக்கு வாக்களிக்கும் அனைவரும் இரண்டாம் விருப்ப தெரிவை இடுவார்கள் என்றில்லை.

இது 2015 நாடாளுமன்ற தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஜேவிபி பெற்ற வாக்குகள்.

கொழும்பு - 81,391

கம்பஹா - 87,880

களுத்துறை - 38,475

கண்டி - 30,669

மாத்தளை - 10,947

நுவரெலியா - 5,590

காலி - 37,778

மாத்தறை - 35,270

அம்பாந்தோட்டை - 36,527

யாழ்ப்பாணம் - 247

வன்னி - 876

மட்டக்களப்பு - 81

அம்பாறை - 5,391

திருகோணமலை - 2,556

குருணாகல் - 41,077

புத்தளம் - 12,211

அநுராதபுரம் - 28,701

பொலநறுவை - 13,497

பதுளை - 21,445

மொனராகலை - 13,626

இரத்தினபுரி - 21,525

கேகாலை - 18,394

2018 உள்ளூராட்சி தேர்தலில் பெற்ற வாக்குகளை தற்சமயம் என்னால் தனித்தனியாக இணைக்க முடியவில்லை.

வடக்கு கிழக்கில் சஜித் முன்னிலை வகிப்பார் என்று தான் நான் நினைக்கிறேன். ஆனாலும் பல வேட்பாளர்கள் வாக்குகளை பிரிக்க களமிறங்கியிருப்பதால் 2015 ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கில் மைத்திரிக்கு கிடைத்த வாக்குகளை போல் இம்முறை சஜித்துக்கு கிடைக்காது, குறைவாகவே கிடைக்கும் என நினைக்கிறேன். அதுவும் தேர்தல் இறுதி முடிவில் தாக்கம் செலுத்தலாம்.

Edited by Lara

  • தொடங்கியவர்

சஜித் ஆட்சியில் ஒருமித்த நாட்டுக்குள் ஏற்கக்கூடிய அதிகாரப் பகிர்வு கிடைக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா,சம்பந்தன்

சஜித் பிரேமதாஸ தலைமையில் ஏற்படுத்தப்படும் ஆட்சி அனைத்து மக்களின் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், ஒருமித்த நாட்டுக்குள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

எனவே சஜித் பிரேமதாஸவை எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறச் செய்ய அன்னம் சின் னத்திற்கு வாக்களிக்குமாறும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார். 

இதேவேளை சுயேட்சையாக கள மிறங்கியுள்ள சிறுபான்மை ஜனாதிபதி வேட்பாளர்களின் போட்டி என்பது ஒரு போதும் தமிழர்களுக்குச் சாதகமாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர்களுக்கு வாக்களிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம். எனவே அப் படியான வேட்பாளர்களை தமிழ், முஸ்லிம் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டார். 

http://valampurii.lk/valampurii/content.php?id=19771&ctype=news

  • தொடங்கியவர்
9 hours ago, Lara said:

நல்ல வேளை உங்களை மாதிரி புலம்பெயர் டமிழ்ஸ்களால் வாக்களிக்க முடியாது. வாக்களிக்க முடிந்தால் உங்கள் வாக்குகளாலேயே கோத்தாவை வெற்றி பெற வைத்து விடுவீர்கள்.🤣

ஈழ மண்ணின் மீது  காதல் இன்றி வாழ முடியுமா ? 😅

  • தொடங்கியவர்

Image

  • தொடங்கியவர்

இவருக்கு வாக்களியுங்கள்... ஆனால் தீர்வு கிடையாது

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எடுக்கக்கூடிய முடிவு என்னவாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

எனினும் தமிழ் அரசியல் கட்சிகள் தத்தம் கடமைக்காக ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என அறிக்கை விடுக்கின்றனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது எனத் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.

இதுதவிர, 13 அம்சக்கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரும் தமது நிலைப்பாட்டை அறிவிக்காத காரணத்தால், யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவைத் தமிழ் மக்கள் தாமாக எடுக்க வேண்டும் எனத் தனது கட்சி நிலைப்பாட்டை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இதேபோல ஏனைய   தமிழ் அரசியல் கட்சி களும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி யுள்ளன.
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி; ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ் கரிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது.
எதுஎவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தமது நிலைப்பாட்டை சரி யாக எடுப்பர் என்பதில் ஐயம் கிடையாது.

ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர் தமிழ் மக்களின் பிரச்சி னைக்குத் தீர்வைத் தரப்போவதில்லை என்பது மட்டும் நிறுதிட்டமான உண்மை.

ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்ற தமிழ் மக்களின் நினைப்புக் குப் பின்னால், தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதி பதவிக்கு வருகின்றவர் எங்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணுவார் என்றோ அல்லது அவர் வந்தால் தமிழினம் தலை நிமிரும் என்றோ தமிழ் மக்கள் ஒருபோதும் நினைக்கவில்லை.

இந்த உண்மையை தமிழ் அரசியல்வாதிகள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்தவர்கள் என்பதை தமிழ் அரசியல்வாதிகளை விட தமிழ் மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.

எனவே கோடிகளை கை நீட்டி வாங்கி விட்டோம் என்பதற்காக பொய்யான வாக்குறுதி களை தமிழ் அரசியல்வாதிகள் வழங்கக் கூடாது.

ஆம், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுவது உங்கள் சுதந்திரம். அதைச் செய்யுங்கள்.
அதைவிடுத்து, அவர் ஜனாதிபதியாக வந்தால் தீர்வு கிடைக்கும் என்று நீங்கள் கூறு வீர்களாயின் உங்களை விட்ட வடிகட்டினவர்கள் வேறு எவருமாக இருக்க முடியாது.

ஆகையால் தமிழ் மக்களை நம்பவைத்து ஏமாற்றாதீர்கள். சிங்களவர் யாரும் தீர்வு தரமாட்டார்கள். இருந்தும் இவருக்கு வாக்களியுங்கள் என்று சொல்வதுதான் ஓரளவுக் கேனும் நேர்மையான அரசியலாக இருக்க முடியும்.

http://valampurii.lk/valampurii/content.php?id=19776&ctype=news

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் ஊருக்கு கதைத்தேன் குத்தைப்பு சொல்ல முன்பே பலர் சஜித்துக்கே ஆதரவு நிலை எடுத்து விட்டார்கள்.

  • தொடங்கியவர்

அதியுச்ச அதிகார பகிர்வு தீர்வை நாம் பெறுவோம்

Monday, November 11, 2019 - 6:00am
NW03.jpg?itok=ZcTypDhI

சஜித் பிரேமதாச  துவேஷமில்லாதவர்

நாங்கள் எவரிடமும் பிச்சை வாங்கத் தயாராக இல்லை. தமிழ் மக்களது கடந்தகால அனுபவங்களை சிந்தித்து, ஒரு தீர்வை நாங்கள் பெறுவோம். அதி உச்ச அதிகாரப் பகிர்வுடன், எமது மக்கள் கௌரவத்துடன், பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரு தீர்வை பெறுவோம்.

கணிசமான தூரம் பயணித்துள்ளோம். அதிகாரப் பகிர்வைப் பெறக்கூடிய வாசலில் நாங்கள் தற்போது நிற்கின்றோம். ஆகையினால், நாங்கள் உறுதியாக, ஒற்றுமையாக, ஒருமித்து 98 வீதமான வாக்குகளை அளித்து எமக்கு ஆதரவு

வழங்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அமரர் ரவிராஜின் 13வது நினைவு தினம் தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரதான போட்டி முக்கியமாக இரண்டு வேட்பாளர்களுகிடையில் நடைபெறுகின்றது. சஜித் பிரேமதாச மற்றும் கோட்டாபய ராஜபக்ச இவர்களில் ஒருவர் தான் வெற்றி பெறுவார். ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் பங்கு பெற்றுவதா இல்லையா என்பது முதல் கேள்வி.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் பங்குகொள்ளவில்லை. பங்குபற்றாத காரணத்தினால் தான் மகிந்த தெரிவு செய்யப்பட்டார். அவருடைய ஆட்சியின் கீழ் 2005 மற்றும் 2015 ஆம் ஆண்டுக்குள் நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் மக்கள் அனுபவித்த துயரங்கள் பற்றிக் கூற வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு தெரியும். அந்தத் தேர்தலில் நாங்கள் சிந்தித்து வாக்களித்திருந்தால், அன்று வாக்களித்திருந்தால், அந்த நிலமை ஏற்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

அவர் யாராக இருக்க வேண்டுமென்பதில் நாங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டும். அந்தப் பங்களிப்பு எமக்கு சாதகமான முடிவாக எம்மைப் பொறுத்தவரையில் ஏற்பட்டிருக்கும். பாதகமான ஒரு முடிவைத் தவிர்ப்பதற்கும், நாங்கள் பங்களிப்பைச் செய்ய முடியுமாக இருந்தால், அந்தப் பங்களிப்பைச் செய்ய வேண்டுமென்று நாங்கள் நினைக்கின்றோம்.

சஜித் பிரேமதாசவை துவேசவாதியாக நான் கருதவில்லை. அவரை நீண்டகாலமாக தெரியும். அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். அதில், எல்லா மக்களையும் ஒற்றுமைப்படுத்தி, அந்த ஒற்றுமையின் அடிப்படையில் நாடு முன்னேற்றமடைந்து, அனைத்து மக்களும், சமத்துவமாக வாழ வேண்டுமென்ற கருத்தை கூறியுள்ளதுடன், இதுவே எனது திடமான நிலைப்பாடு என கூறியிருக்கின்றார். அதி உச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். அதன் மூலமாக மக்கள் மத்தியில் சமத்துவத்தை ஏற்படுத்தி சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென கூறியிருக்கின்றார்.

கோட்டா வெளியிட்ட விஞ்ஞாபனத்தில் அதிகாரப் பகிர்வு பற்றி எதுவும் கூறப்படவில்லை. நாங்கள் செய்த தவறுகளை மன்னித்துக்கொள்ளுங்கள். இனியும் செய்யமாட்டோம் என கூறவில்லை.

நடந்தது நடந்துவிட்டது. நடந்ததை மறந்துவிட்டு வாருங்கள் ஒன்றாக பயணிப்போம் என சொல்கின்றார்கள். எங்கு கூட்டிச் செல்லப் போகின்றார்களோ தெரியவில்லை என்றார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

https://www.thinakaran.lk/2019/11/11/உள்நாடு/43665/அதியுச்ச-அதிகார-பகிர்வு-தீர்வை-நாம்-பெறுவோம்

இவர்கள் சொல்லும் முன்பே மக்கள் சில தீர்மானகளை எடுத்து விடடார்கள். நிச்சயமாக தமிழ் மக்களால் கோத்தாவிட்க்கு வாக்களிக்க முடியாது. பகிஷ்கரித்தல் கோட்டா வர சந்தர்ப்பம் உண்டு. எனவே மக்களுக்கு வேற தெரிவு இல்லை. இருந்தாலும் சிங்கள மக்களில் எழுபது வீதமளவில் கோடாவிட்க்குத்தான் சான்ஸ் இருக்கிறது. எனவே வெற்றி தோல்வியை கணிப்பது மிகவும் சிரமம்.

எனக்கு தெரிந்த அநேகமான சிங்களவர்கள் கோடவுட்குத்தான் வாக்களிப்பதாக கூறினார்கள். கடந்த காலத்தில் யு என் பி இட்கு வாக்களித்தவர்களும் இம்முறை மாறி விடடார்கள்.

தமிழ் தலைமைகள் வன்னி , கிழக்கு தமிழர் பற்றி சிந்திப்பதில்லை. இம்முறை சுமந்திரன் மன்னருக்கு வந்திருந்தபோது அங்குள்ள தமிழ் மக்கள் கேடட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடி விடடார். வன்னி கிழக்கு மக்கள் கோதாவிட்கு போட விரும்பினாலும் அவருடைய கடந்த கால செயல்களினால் அவர்களால் அப்படி செய்ய முடியவில்லை. மத்தபடி இவ்ரகள் சொல்லித்தான் சஜித்திட்கு தமிழர்கள் வாக்களிக்கிறார் என்று என்ன வேண்டாம்.

கோத்த வென்றால் வடக்கு , கிழக்கு மக்கள் ஒட்டு குழுக்களின் கீழ் வாழ வேண்டும். சஜித் வென்றால் வன்னி , கிழக்கு மக்கள் முஸ்லிம்களின் கீழ் வாழ வேண்டும். இதை இங்கு வாழும் மக்கள் விளங்கினால் சரி. 

  • தொடங்கியவர்
17 hours ago, Vankalayan said:

கோத்த வென்றால் வடக்கு , கிழக்கு மக்கள் ஒட்டு குழுக்களின் கீழ் வாழ வேண்டும். சஜித் வென்றால் வன்னி , கிழக்கு மக்கள் முஸ்லிம்களின் கீழ் வாழ வேண்டும். இதை இங்கு வாழும் மக்கள் விளங்கினால் சரி. 

இதுவும் ஒரு சாத்தியமான எதிர்வுகூறலாக தெரிகின்றது. 

மொத்தத்தில், எமது மக்கள் தொடர்ந்தும் அவல வாழ்கைக்குள்ளேயே வாழ நேரிடப்போகின்றது.  

எமது தலைமைகள் மத்தியில் ஒரு தீர்வும் இல்லை அது பற்றி சிந்தித்து அரங்கேற்றகூடிய திறமையும் இல்லை. 

  • தொடங்கியவர்

 

 

  • தொடங்கியவர்

உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தேர்தல்

1. இத்தனை கட்சிகள் களத்தில் நிற்கின்ற போதிலும், வாக்களிப்பு முறை பற்றி மக்கள் அறிவூட்டப்படவில்லை. ‘எங்கள் சின்னத்துக்குப் புள்ளடியிட்டால் போதும்’ என்கிற வரையில்தான் வாக்காளர்களை அனைத்துக் கட்சிகளும் பழக்கி வைத்திருக்கின்றன.  

2. அரசியலை உணர்வுபூர்வமாக அணுகுவதற்கே, அநேகமானோர் பழகியிருக்கின்றனர்; பழக்கப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். மக்கள் அப்படியிருப்பதுதான் தமக்கு நல்லது என்று, பெரும்பாலான அரசியல்வாதிகளும் எண்ணுகின்றனர். அரசியலை, அறிவு ரீதியாக மக்கள் அணுக முற்பட்டால், பல அரசியல்வாதிகள் தமது ‘கடைகளை’ இழுத்து, மூட வேண்டியேற்படும்.  

3. அறிவு ரீதியாக அணுகுதல் என்பதை, முதலில் விளங்கிக் கொள்ளுதல்  அவசியமாகும். உண்மையைத் தேடுவதே, அறிவுரீதியான அணுகுதலின் அடிப்படையாகும். நமக்குப் பிடித்த அரசியல்வாதியொருவர் கூறுகின்றார் என்பதற்காக, அவர் சொல்லும் விடயங்களைக் கண்களை மூடிக்கொண்டு நம்பாமல், அந்த விடயம் உண்மையானதா என்று ஆராய முற்படுவதே அறிவுரீதியான அணுகுமுறையாகும்.  

மறுபுறம், நமக்குப் பிடிக்காத அரசியல்வாதிகள் குறித்து வரும் மோசமான செய்திகளை, உடனடியாக நம்பி விடாமல், அதிலும் உண்மையைத் தேடுவதற்கு முற்படுதல் வேண்டும்.  

4. கடந்த ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியவற்றின்போது, தற்போதைய ஆட்சியாளர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் கணிசமானவை இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், அதே வாக்குறுதிகளைத் தற்போதைய ஆளுந்தரப்பு ஜனாதிபதி வேட்பாளரும், மக்கள் மத்தியில் வழங்கி விட்டுச் செல்கின்றார்.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உணரசசககம-அறவககம-இடயல-சககத-தவககம-தரதல/91-240931

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.