Jump to content

இந்தியாவா? சீனாவா? - தேர்லுக்குப் பின் இலங்கை எந்தப் பக்கம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவா? சீனாவா? - தேர்லுக்குப் பின் இலங்கை எந்தப் பக்கம்?

கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியின் பின்னணியில் இந்தியா முக்கிய பங்காற்றியதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்ற பிறகு இலங்கையில் சீன முதலீடுகள் ஏதும் பாதிக்கப்படவில்லை.

இந்தப் பின்னணியில் இப்போது நடக்கும் ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளை எப்படிப் பாதிக்கும்? இலங்கையில் இருந்து இது குறித்து ஆராய்கிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன்.

காணொளிப் பதிவு & தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

https://www.bbc.com/tamil/sri-lanka-50369034

Link to comment
Share on other sites

55 minutes ago, ஏராளன் said:

கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியின் பின்னணியில் இந்தியா முக்கிய பங்காற்றியதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்ற பிறகு இலங்கையில் சீன முதலீடுகள் ஏதும் பாதிக்கப்படவில்லை.

இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து தான் போன முறை மைத்திரியை வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் புதிய அரசும் வந்தவுடன் சீனாவின் அபிவிருத்தி திட்டங்களை இடைநிறுத்தி போக்கு காட்டி விட்டு பின் அதை தானே முன்னின்று செய்தது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு கொடுத்த போது அதற்கெதிராக நாமல் ராஜபக்ச கருத்து தெரிவிக்குமளவுக்கு நிலைமை போச்சுது. 🤣

Link to comment
Share on other sites

1 hour ago, ஏராளன் said:

இந்தப் பின்னணியில் இப்போது நடக்கும் ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளை எப்படிப் பாதிக்கும்?

யார் வந்தாலும் சீனாவின் உதவியை பெறுவார்கள்.

சஜித் ஏற்றுமதிகளை அதிகரித்தல், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளல், அனைத்து மாகாணங்களிலும் சிறப்பு பொருளாதார வலயங்களை உருவாக்குதல், பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்கள் பற்றி கூறியுள்ளார். அனைத்தையும் செய்வார் என்றில்லை. ஆனால் செய்ய முற்படுபவற்றில் சீனாவின் உதவியை எப்படியும் பெறுவார். அதே போல் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் இதில் பங்கிருக்கும்.

கோத்தா வந்தால் அவரை தனது puppet ஆக வைத்திருக்க அமெரிக்கா முயலும். ஆனால் அவர் அதை தாண்டி சீனாவின் உதவிகளை பெறுவார். ஏனைய நாடுகளுக்கும் இடமளிப்பார்.

Link to comment
Share on other sites

வெளிநாட்டு கொள்கை பற்றி சஜித் கூறுவது இது.

வலுவான வெளிநாட்டு கொள்கை

இந்தியப் பெருங்கடலின் மையத்தில் உள்ள இலங்கையின் புவியியல் வரலாற்று ரீதியாக வர்த்தக மற்றும் சர்வதேச பயணங்களின் குறுக்கு வழியில் நம்மை நிறுத்தியுள்ளது. இப்புவியியல் நிலையம் பெரும்பாலும் நன்மைகள் மற்றும் பிரச்சினைகளையும் ஒருங்கே கொண்டு வந்தாலும், இன்று அனைத்து நாடுகளுடனும் நட்பு பாராட்டும் வெளியுறவுக் கொள்கைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் நமது உடனடி அண்டை நாடுகளாக இருந்தாலும் அல்லது பரந்து விரிந்த பல உலகச் சமூகமாக இருந்தாலும் சரி, இலங்கையை இந்தியப் பெருங்கடலின் மையமாக மாற்ற அனைத்து நாடுகளுடனும், பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளுடனும் பங்காளிகளாக பணியாற்றுவதற்காக நமது புவியியல் இருப்பிடத்தையும் வரலாற்று தொடர்புகளையும் நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம்.

இந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டு அதை வலுப்படுத்த, திறந்த வர்த்தகம், வழிசெலுத்தல் சுதந்திரம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கொள்கைகளுக்கு நாங்கள் உறுதியுடன் இருப்போம். சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் தீர்மானங்களுக்கான எங்கள் தன்னார்வ கடமைகளை நாங்கள் செயற்படுத்துவதை உறுதி செய்வதன் மூலம் எங்கள் சர்வதேச நம்பகத்தன்மையை மீண்டும் உருவாக்குவோம். இந்தியப் பெருங்கடலில் வழிசெலுத்தல் சுதந்திரத்தையும் உறுதி செய்வோம்.

எங்கள் சர்வதேச உறவுகள் “அனைவருடனும் நட்பு, யாருடனும் பகையில்லை” என்ற அடிப்படையில் அமைந்திருக்கும்.

இந்தியப் பெருங்கடலின் மையமாக எங்கள் பங்கைக் காட்ட, நமது அண்டை நாடுகளுடன் வலுவான தொடர்புகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துவோம். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்கா போன்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு பிராந்தியங்களில் உள்ள நாடுகளின் மேல் குறிப்பான கவனம் செலுத்தப்படும்.

எங்கள் வெளியுறவுக் கொள்கை மூலோபாயத்தின் படி நமது வெளிநாட்டுப் பணிகள் பகுத்தறிவு செய்யப்படும். மேலும் பொருளாதார இராஜதந்திரத்தில் அதிக கவனம் செலுத்துவதற்காக நமது வெளியுறவு சேவை மறுசீரமைக்கப்படும்.

ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும், முதலீட்டை அதிகரிப்பதற்கும், தொழில்நுட்ப பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கும் முதலீட்டு வாரியம், பொருளாதார அபிவிருத்தி வாரியம் மற்றும் வர்த்தகத் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் குழுக்களை பொருத்தமான பணிகளில் நிறுத்துவோம். அனைத்து வெளிநாட்டு தூதரகங்களினதும் எமது தேசிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு ஆகியவற்றிற்கான பங்களிப்பு குறித்து தொடர்ந்து மதிப்பீடு செய்யப்படும்.

முடிந்தவரை, எங்கள் தூதர்கள் அனைவரும் வெளிநாட்டு சேவை அதிகாரிகள் என்பதை உறுதி செய்வோம். பொருத்தமான வெளிநாட்டு சேவை அதிகாரிகள் கிடைக்காத இடங்களில், வெளிப்படையான அளவுகோல்களின் படி தகுதியான மாற்று உத்தியோகத்தவர்களை நாங்கள் நியமிப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2019 at 11:21 AM, ஏராளன் said:

இந்தியாவா? சீனாவா? - தேர்லுக்குப் பின் இலங்கை எந்தப் பக்கம்?

சிங்கள சிறிலங்காவுக்கு யார் காசு கூட குடுக்கினமோ அவையள்  வைச்சிருக்கலாம்.
வருசக்கணக்கிலும் வைச்சிருக்கலாம்....மாதக்கணக்கிலும் வைச்சிருக்கலாம் அது அவரவர் குடுக்கிற தொகையை பொறுத்திருக்குtw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும்... ☺️

10438978_1501366006748083_34154075629156

Link to comment
Share on other sites

50 minutes ago, குமாரசாமி said:

சிங்கள சிறிலங்காவுக்கு யார் காசு கூட குடுக்கினமோ அவையள்  வைச்சிருக்கலாம்.
வருசக்கணக்கிலும் வைச்சிருக்கலாம்....மாதக்கணக்கிலும் வைச்சிருக்கலாம் அது அவரவர் குடுக்கிற தொகையை பொறுத்திருக்குtw_glasses:

அப்ப சீனாவிற்கு தான். அவர்கள், இன்னும் ஒரு பத்து இல்லை இருப்பது ஆண்டுகளில் உலகின் பொருளாதார வல்லரசாகி விடுவார்கள். அமெரிக்க நாடு அன்று பிரித்தானியா போன்று அஸ்தமிக்க தொடங்கி விட்டது.

 

Link to comment
Share on other sites

10 minutes ago, ampanai said:

அப்ப சீனாவிற்கு தான். அவர்கள், இன்னும் ஒரு பத்து இல்லை இருப்பது ஆண்டுகளில் உலகின் பொருளாதார வல்லரசாகி விடுவார்கள்.

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு முதலில் இந்தியாவின் உதவி தான் கேட்கப்பட்டது. அதை அபிவிருத்தி செய்வதால் எந்த நன்மையும் இல்லை, இலாபம் இல்லை, அது, இது என கூறி இந்தியா உதவி செய்ய மறுத்து விட்டது. அதன் பின் தான் சீனா அதை தான் பெற்றுக்கொள்ள முயற்சித்து பெற்றது. 

கொழும்பு துறைமுக அபிவிருத்திக்கும் மேற்குலகின் உதவி தான் முதலில் கேட்கப்பட்டது. அது கைவிரித்த பின் சீனா அதையும் தான் பெற்றது.

சீனா கையில் போன பின் இந்நாடுகள் குய்யோ முய்யோ என்று கத்தி என்ன பிரயோசனம்? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2019 at 5:21 AM, ஏராளன் said:

இந்தியாவா? சீனாவா? - தேர்லுக்குப் பின் இலங்கை எந்தப் பக்கம்?

பணம் கொடுக்கும் நாடுகளுக்கெல்லாம் முந்தானை விரிக்கும்.

Link to comment
Share on other sites

கிந்தியா, இளநகை தீவை மீண்டும் இரண்டாக இன்று பிரித்தால் மட்டுமே சீனாவிடம் இருந்து தம்மை பாதுகாக்கலாம். 

ஆனால், தனக்கு இல்லாவிட்டாலும்  தமிழர்கள் மீது கொண்ட வெறுப்பு இந்திய கொள்கை வகுப்பாளர்களின் கண்ணை மறைத்துவிடுகின்றது. 

இங்கே, தமிழக உறவுகள், தலைமைகள் டில்லியில் இன்றும் கொள்கை மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் உள்ளனர். அங்கே தான் திறப்பு உள்ளது, ஒப்பீட்டளவில் இலகுவான திறப்பு. 

Link to comment
Share on other sites

On 11/13/2019 at 12:17 PM, ampanai said:

கிந்தியா, இளநகை தீவை மீண்டும் இரண்டாக இன்று பிரித்தால் மட்டுமே சீனாவிடம் இருந்து தம்மை பாதுகாக்கலாம். 

இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து செயற்படுகிறது. இலங்கை அமெரிக்காவுடனான MCC, SOFA உடன்படிக்கைகளில் கையெழுத்து போட்டால் பின் அமெரிக்கா பார்த்துக்கொள்ளும்.

இலங்கையை இரண்டாக பிரிக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கோ இந்தியாவுக்கோ இல்லை.

Link to comment
Share on other sites

On 11/11/2019 at 3:51 PM, ஏராளன் said:

இந்தியாவா? சீனாவா? - தேர்லுக்குப் பின் இலங்கை எந்தப் பக்கம்?

இலங்கை எங்க உதவி கிடைக்குதோ அங்க நிக்கும்.

ஆனா சம்பந்தன், சுமந்திரன் தமிழரசுக்கட்சி யார் தமிழரை கொல்லினமோ அவங்களிட்டை இருந்து ஏதாவது கிடைச்சா அவர்கள் பின்னாடியே நிப்பினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.