Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்

Featured Replies

  • தொடங்கியவர்

ஏன் அரசியல் ஆய்வு அவசியமானது ?

அரசியல் என்பது, ஒவ்வொரு நிகழ்வையும் பிரதிபலிப்பது மாத்திரமல்ல; கடந்த கால நிகழ்வுகளை அலசி, எதிர்கால நிகழ்வுகளைக் கணித்து, அதனை நோக்கித் திட்டமிட்டு இயங்குவது. 

  • Replies 61
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

29 ஆம் திகதி இந்தியா செல்கிறார் ஜனாதிபதி

(ரொபட் அன்டனி)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 29 ஆம் திகதி  இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்றே  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இவ்வாறு இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

நேற்று மாலை இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர்   ஜெய்சங்கர்  இந்திய பிரதமர் மோடியின்  அழைப்பு கடிதத்தை  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம்  கையளித்தார்.  

77115635_2455044704816105_15399048182549

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை  இந்திய இந்திய வெளியுறவு அமைச்சர்   ஜெய்சங்கர்   ஜனாதிபதி கோத்தாபயவை சந்தித்து பேச்சு நடத்தியபோது      புதிய ஜனாதிபதிக்கு வாழ்தது தெரிவித்ததுடன்    பிரதமர் மோடியின் அழைப்புக் கடிதத்தையும்   கையளித்தார்.

76760117_2465937486951934_73816471922613

அதன்படி இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷ எதிர்வரும் 29  ஆம் திகதி  இந்தியாவுக்கு விஜயம் செய்வதாக  உறுதியளித்தார்.

இந்த விஜயத்தின்போது  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  இந்திய பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத்  கோவிந்த் மற்றும்  முக்கிய அமைச்சர்களையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இதன்போது  இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது  தொடர்பாகவும் விரிவாக பேசப்படவுள்ளது.  
 

https://www.virakesari.lk/article/69292

கோட்டபாய கை கட்டி பணிவது போல் படம் உள்ளது ஆனால் ஜெய்சங்கருக்கு முகம் சரியில்லை.  அவர்களின் சஜித் கணக்கு பிழைச்ச கோவம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

10 hours ago, ampanai said:

தூதுவராக இருந்தவர்கள் பொதுவாக அந்த நாட்டை , தாம் வேலைசெய்த  அறிந்திருப்பார்கள். தங்கள் தங்கள் நாட்டின் நலன்களை முன்னெடுக்கும் இலாவகங்களை, சூட்ச்சுமங்களை அறிந்திருப்பார்கள். 

அதற்காக, அவர்கள் எல்லோருரையும் "நட்ப்பானவர்கள்" என பார்க்க முடியாது. 

ஜெய்சங்கருக்கு சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுடனுள்ள நட்பு காரணமாக தான் அவர் ஓய்வு பெற்ற பின்னும் அவரை மோடி வெளிவிவகார அமைச்சராக்கினார்.

EJy571fUUAAhZam?format=jpg&name=large

EJy57VKUEAENNLD?format=jpg&name=large

EJzcT3aVUAEh-zD?format=jpg&name=large

EJzcT3aUwAAueDC?format=jpg&name=large

EJzcT3YU8AEOh-T?format=jpg&name=large

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

இங்கே வழமைக்கு மாறாக ஏதுமில்லை. நாம்தாம் கலர் கலர் கண்ணாடிகளை போட்டுக்கொண்டு நடக்கும் விடயங்களுக்கும், புகைப்படங்களுக்கும் நாம் விரும்பிய வியாக்கியானத்தை கொடுத்துகொண்டிருக்கிறோம்.

 

அப்படி ஒரேயடியாக எடுக்க முடியாது.

ராஜாதிஜந்திர சந்திப்பு படங்கள், வெளியிடும் தரப்பையம் அதன் குணாம்சந்தையும்  பொறுத்து, அந்த தரப்பின் எண்ணங்களையும் முடிவுகளையும் பிரதிபலிக்கிறது.

உறவுகளில், முறுகல்களோ, பதற்றமோ, ஒருவரை ஒருவர் மிதிப்பது, மதிக்காதது போன்றவற்றை இந்த படங்கள் பொதுவாக காட்டும் என்றும், படங்கள் கூட ஒன்றி இணக்கப்பாட்டுடன் தனித்து அல்லது ஒரே படங்களாக வெளியிடப்படும் என்றும், எவர் நாட்டில் படங்கள் எடுக்கப்படுகிறதோ அந்த தரப்பிற்கு முடிவு எடுக்கும் இறைமை உள்ளது என்றும் ராஜதந்திரத்துடன் அடிபட்டவர்களிடம் இருந்து நான் அறிந்தது.    

வேறு திரியில் சொல்லி இருந்தேன், ஆட்சிக்கலையில் இருந்து வெகு தூரம் அந்நியப்பட்டுவிட்டோம் என்று.

மிகவும் சிறந்த உதாரணமாக, நான் கண்டதும், எனக்கு ராஜதந்திரத்துடன் அடிபட்டவர்களாலும் காண்பிக்கப்பதும், விளங்கப்படுத்தபட்டதும், 2009 கு பின், சிவ சங்கர் மேனன், நிருபமா ராவ் ஆல், 2011 அல்லது 2012 இல் மகிந்தவுடன் தீர்வை காண்பதற்கு நடந்த பேச்சு வார்த்தையின் பின் சொறி சிங்கள அரசு வெளியிட்ட படம்.
      
படத்தை செய்தி வழியாக இணைக்கிறேன்.

https://www.thehindu.com/news/international/india-will-help-sri-lanka-reach-political-arrangement/article2096146.ece

இந்த படங்கள், எதனையோ snaps இல் தெரிந்து எடுக்கப்பட்டவை.

இந்த படங்களிலும், அதாவது கோத்த, ஜெய்சங்கர் சந்திப்பு, கோத்த கிந்தியாவை மதிக்கவில்லை என்பதை படக் குறியீடாக, சொறி சிங்களம் வெளியிட்டு  உள்ளது.

மகிந்தவின் படத்தில், சிங்களம் வேண்டுமென்றே சாய்மனை (sofa) ஐ தவிர்த்து, அதனிலும் உயரமான கதிரையில் மகிந்தவை இருக்க வைத்துள்ளது. அது  ஜெய்ஷ்ங்கர் மகிந்தவை இறைஞ்சுவது போலவும் மகிந்த ஆணையிடுவது போன்ற தோற்றத்தையும் ஏற்றப்படுத்தி உள்ளது.

கோத்த, ஜெய்ஷ்ங்கரை நக்கலடிப்பது, எல்லி நகையாடுவது போன்ற தோற்றம்.

மற்றவர், suit இல் இருப்பவர், தடக்கி விழப்போகும் தறுவாயில், கோத்த கை கொடுத்து தூக்கி விடும் தோற்றம்.

இவை, ராஜதந்திரத்துடன் அடிபட்டவர்களிடம் இருந்து நான் பெட்ரா அறிவில், எனது அவதானங்கள்.

Edited by Kadancha
add info.

EJzdxaQU4AEV-Rd?format=jpg&name=large

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kadancha said:

 

அப்படி ஒரேயடியாக எடுக்க முடியாது.

ராஜாதிஜந்திர சந்திப்பு படங்கள், வெளியிடும் தரப்பையம் அதன் குணாம்சந்தையும்  பொறுத்து, அந்த தரப்பின் எண்ணங்களையும் முடிவுகளையும் பிரதிபலிக்கிறது.

உறவுகளில், முறுகல்களோ, பதற்றமோ, ஒருவரை ஒருவர் மிதிப்பது, மதிக்காதது போன்றவற்றை இந்த படங்கள் பொதுவாக காட்டும் என்றும், படங்கள் கூட ஒன்றி இணக்கப்பாட்டுடன் தனித்து அல்லது ஒரே படங்களாக வெளியிடப்படும் என்றும், எவர் நாட்டில் படங்கள் எடுக்கப்படுகிறதோ அந்த தரப்பிற்கு முடிவு எடுக்கும் இறைமை உள்ளது என்றும் ராஜதந்திரத்துடன் அடிபட்டவர்களிடம் இருந்து நான் அறிந்தது.    

வேறு திரியில் சொல்லி இருந்தேன், ஆட்சிக்கலையில் இருந்து வெகு தூரம் அந்நியப்பட்டுவிட்டோம் என்று.

மிகவும் சிறந்த உதாரணமாக, நான் கண்டதும், எனக்கு ராஜதந்திரத்துடன் அடிபட்டவர்களாலும் காண்பிக்கப்பதும், விளங்கப்படுத்தபட்டதும், 2009 கு பின், சிவ சங்கர் மேனன், நிருபமா ராவ் ஆல், 2011 அல்லது 2012 இல் மகிந்தவுடன் தீர்வை காண்பதற்கு நடந்த பேச்சு வார்த்தையின் பின் சொறி சிங்கள அரசு வெளியிட்ட படம்.
      
படத்தை செய்தி வழியாக இணைக்கிறேன்.

https://www.thehindu.com/news/international/india-will-help-sri-lanka-reach-political-arrangement/article2096146.ece

இந்த படங்கள், எதனையோ snaps இல் தெரிந்து எடுக்கப்பட்டவை.

இந்த படங்களிலும், அதாவது கோத்த, ஜெய்சங்கர் சந்திப்பு, கோத்த கிந்தியாவை மதிக்கவில்லை என்பதை படக் குறியீடாக, சொறி சிங்களம் வெளியிட்டு  உள்ளது.

மகிந்தவின் படத்தில், சிங்களம் வேண்டுமென்றே சாய்மனை (sofa) ஐ தவிர்த்து, அதனிலும் உயரமான கதிரையில் மகிந்தவை இருக்க வைத்துள்ளது. அது  ஜெய்ஷ்ங்கர் மகிந்தவை இறைஞ்சுவது போலவும் மகிந்த ஆணையிடுவது போன்ற தோற்றத்தையும் ஏற்றப்படுத்தி உள்ளது.

கோத்த, ஜெய்ஷ்ங்கரை நக்கலடிப்பது, எல்லி நகையாடுவது போன்ற தோற்றம்.

மற்றவர், suit இல் இருப்பவர், தடக்கி விழப்போகும் தறுவாயில், கோத்த கை கொடுத்து தூக்கி விடும் தோற்றம்.

இவை, ராஜதந்திரத்துடன் அடிபட்டவர்களிடம் இருந்து நான் பெட்ரா அறிவில், எனது அவதானங்கள்.

ஒவ்வொரு தரப்பும் தமக்கு சார்பாக காட்டக்கூடிய படங்களை வெளியிடுவது தெரிந்த விடயம்தான் கடஞ்சா.

ஆனால் அது யாருக்கு சொல்லபடும் செய்தி என்பதில்தான் எல்லாமே தங்கியுளது.

இங்கே வெளியிடப்பட்ட படங்கள் சிங்கள வாக்களருக்கான செய்தி. அது இந்தியாவுக்கும் தெரியும். அந்த விம்பத்தை சிங்கள வாக்காளர் மத்தியில் பேண வேண்டிய தேவை கோட்டாவுக்கு இருப்பதை இந்தியா அறியும் எனவே அனுமதிக்கவும் செய்யும்.

ஆனால் இதை வைத்து கோட்ட-இந்திய உறவை எடை போட முடியாது.

மேலும் பாடி லாங்குவேஜ் யார் பார்கிறார்கள் என்பதை பொறுத்தது.

உதராணமாக - கோட்டா கைகட்டி நிற்பது - கீழைதேய கண்களுக்கு இது ஒரு அடங்கும் அறிகுறி (submissive body language), இதுவே மேலைதேய கண்களுக்கு அடங்காமையின் அறிகுறி (closed, protective, and defensive).

இங்கே பார்பவரின் வியாக்கியானம்தான் முக்கியம் பெறுகிறதே ஒழிய உண்மையில் என்ன நடக்கிறது என்பதல்ல.

மகிந்த ஜெய்சங்கருக்கு அருகில் நிற்கும் படத்தை பாருங்கள், மாட்டுப்பட்ட கோழிக்கள்ளன் முழுசுவது போல உள்ளது 😂

இயல்பாகவே கோட்ட அபயவிடம் ஒரு இறுமாந்ததனம் இருக்கிறது- கைகுலுக்கலில் அது தெரிகிறது.  ஒரு ராணுவ லெப்டினெட் கேர்ணலும், சாம்பார் சாதம் சாப்பிடும் இந்திய சவுத் புளொக் அதிகாரியும் சந்திக்கும் போது ஏற்படும் சுவாரசியமான உடல்-மொழி என்பதற்கப்பால் இதில் எனக்கு வேறேதும் தெரியவில்லை.

#காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்.

படத்தை வைத்து என்னால் கணிக்க முடிந்த ஒரே விடயம் - கோட்டவுக்கும் ஜெய்சங்கருக்கும் டயபடீஸ்- மெட்போர்மின் எடுக்கிறார்கள் என்பது மட்டுமே🤪

  • தொடங்கியவர்

பிரதமர் - இந்திய அமைச்சர் சந்திப்பு

image_82d89a6a8a.jpg

 

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கள், நேற்று (19) இரவு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து, விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்துவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/பரதமர-இநதய-அமசசர-சநதபப/46-241249

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

ஆனால் இதை வைத்து கோட்ட-இந்திய உறவை எடை போட முடியாது.


தேர்தலுக்கு முதல் நாள், சீன யுத்தக்க கப்பல் கொழும்புக்கு வருகை தந்தது.

எதிர்ப்பை, மதிக்காததை காட்டி இருக்கிறது.

 

நாமலுடன் சந்தித்த படம் எதற்கு?

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ampanai said:

பிரதமர் - இந்திய அமைச்சர் சந்திப்பு

image_82d89a6a8a.jpg

 

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கள், நேற்று (19) இரவு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து, விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்துவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/பரதமர-இநதய-அமசசர-சநதபப/46-241249

சிங்களத்தின் வழமையான, இந்திய அரசு பேயர்களை, அவமதித்து வெதுப்பிவிட்டு, குளிர்விக்கும் காட்சி.

  • தொடங்கியவர்

அரசியலில் கை  குலுக்கல், உடல் அசைவுகளின் வெளிப்பாடுகள் கூட அரசியல் ஆய்வாளர்களால் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரை உள்ளது. 

What have the politicians been telling us with their body language? 

https://www.bbc.co.uk/bbcthree/article/c46b9432-4703-4bc7-9c25-580eb254445a

 

How Politicians Manipulate You Without Saying a Word

https://medium.com/@pricelindy/how-politicians-manipulate-you-without-saying-a-word-227007439fd9

 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

மகிந்த ஜெய்சங்கருக்கு அருகில் நிற்கும் படத்தை பாருங்கள், மாட்டுப்பட்ட கோழிக்கள்ளன் முழுசுவது போல உள்ளது

ஜெய்ஷ்ங்கர் குழப்பமடைந்தவராகவும் (perturbed), மஹிந்த oozing with confidence ஆக எனக்கு தோற்றமளிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kadancha said:


தேர்தலுக்கு முதல் நாள், சீன யுத்தக்க கப்பல் கொழும்புக்கு வருகை தந்தது.

எதிர்ப்பை, மதிக்காததை காட்டி இருக்கிறது.

 

நாமலுடன் சந்தித்த படம் எதற்கு?

மகிந்த, கோட்ட, நாமல் என்பதே ஒழுங்கு என்பதை நாட்டுக்கும், வெளிநாட்டுக்கும், குடும்பத்துக்கும் அடித்துச் சொல்ல.

 

32 minutes ago, ampanai said:

அரசியலில் கை  குலுக்கல், உடல் அசைவுகளின் வெளிப்பாடுகள் கூட அரசியல் ஆய்வாளர்களால் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரை உள்ளது. 

What have the politicians been telling us with their body language? 

https://www.bbc.co.uk/bbcthree/article/c46b9432-4703-4bc7-9c25-580eb254445a

 

How Politicians Manipulate You Without Saying a Word

https://medium.com/@pricelindy/how-politicians-manipulate-you-without-saying-a-word-227007439fd9

 

👆🏼தட் வெள்ளைகாரன் பொய் சொல்லமாட்டான் மொமெண்ட்.

6 minutes ago, Kadancha said:

ஜெய்ஷ்ங்கர் குழப்பமடைந்தவராகவும் (perturbed), மஹிந்த oozing with confidence ஆக எனக்கு தோற்றமளிக்கிறது.

Beauty is in the eyes of the beholder.

  • தொடங்கியவர்

"சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் தூதுக்குழு ஜெய்சங்கருடன் நடத்திய அந்த சந்திப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு விவகாரம் குறித்து அவரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். சமாதான உடன்படிக்கையின் அடிப்படையில் இந்தியாவுக்கு ஒரு கடப்பாடு இருப்பதால் இரு மாகாணங்களையும் மீண்டும் இணைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் புதுடில்லி கேட்கவேண்டும் என்று பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், "இணைப்பை மீண்டும் செய்யுமாறு இலங்கையை இந்தியா இனிமேல் வற்புறுத்தப்போவதில்லை.1987 சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு இதுவரையான காலகட்டத்தில் பெருமளவு நிகழ்வுப்போக்குகள் நடந்தேறிவிட்டன.  இணைப்பை மீண்டும் செய்வது இக்கட்டத்தில் கஷ்டமானது. கடந்த காலத்துக்கு திரும்பிச்செல்லமுடியாது. அரசியல் தீர்வுடன் சம்பந்தப்பட்ட ஏனைய சகல விவகாரங்களையும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்ற பிரச்சினைக்கு பணயமாக வைத்திருப்பது விவேகமான செயலாக இருக்காது. இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில்  இணைப்பு விவகாரத்தை தமிழர்கள் தொடர்ந்து முக்கியத்துவப்படுத்தினால் இந்தியாவுக்கு ஆட்சேபனை இல்லை.காலத்துக்கு காலம் வரலாறு புதிய வாய்ப்புக்களைத் தருகிறது.அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் இறுதியில் தமிழர்கள் எதையும் பெறமுடியாத நிலையே ஏற்பட்டுவிடவும் கூடும்" என்று கூறினார்."

https://yarl.com/forum3/topic/228330-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments#comment-1381957

 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ampanai said:

அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், "இணைப்பை மீண்டும் செய்யுமாறு இலங்கையை இந்தியா இனிமேல் வற்புறுத்தப்போவதில்லை.1987 சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு இதுவரையான காலகட்டத்தில் பெருமளவு நிகழ்வுப்போக்குகள் நடந்தேறிவிட்டன.  இணைப்பை மீண்டும் செய்வது இக்கட்டத்தில் கஷ்டமானது. கடந்த காலத்துக்கு திரும்பிச்செல்லமுடியாது. அரசியல் தீர்வுடன் சம்பந்தப்பட்ட ஏனைய சகல விவகாரங்களையும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்ற பிரச்சினைக்கு பணயமாக வைத்திருப்பது விவேகமான செயலாக இருக்காது. இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில்  இணைப்பு விவகாரத்தை தமிழர்கள் தொடர்ந்து முக்கியத்துவப்படுத்தினால் இந்தியாவுக்கு ஆட்சேபனை இல்லை.

இது ஏற்கனவே தெரிந்தது. ஜெய்ஷ்ங்கரின் வாயாலேயே சொல்லப்பட்டது.

25 minutes ago, ampanai said:

காலத்துக்கு காலம் வரலாறு புதிய வாய்ப்புக்களைத் தருகிறது.அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் இறுதியில் தமிழர்கள் எதையும் பெறமுடியாத நிலையே ஏற்பட்டுவிடவும் கூடும்" என்று கூறினார்."

இது புதியது. மோடியின் வெளிபடையான 13 க்கு மேல் என்ற அறிவிப்புடன்  ஒவ்வாதது.
 

  • தொடங்கியவர்

தமிழில் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். பல சினிமா படங்களில் கூட ஒருவரின் நடை, பாவனைகளை வைத்து காவல்துறை தெரிந்து கொள்ளும் இவரை விசாரிக்கலாமா இல்லையா என்று. 

ஏன், ஒருவரின் நேர் முக பரீட்சையிலும் கூட கை குலுக்கல் ஒரு முக்கிய விடயம்.

எனவே, விஜய்சங்கர் இலங்கைக்கும் விரைந்ததும் அப்பொழுது அவரின் முகபாவனை, கை குலுக்கும் விதம் கூட இவர் சந்திப்பது ஒரு நல்ல நண்பரையா இல்லையா எனக்காட்டி கொடுத்துவிடும்.

இலங்கையின் தற்போதைய சனாதிபதி ஒரு அரசியல்வாதி அல்ல. அவர், அதிகம் கோபப்படும் பேர்வழி எனவும் கூறப்படுகின்றது. எனவே, அவரிடத்தில் அதிகம் இராசதந்திர பாவனைகளை பார்க்கமுடியாது. மனத்தில் உள்ளது முகத்தில் தெரியும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

தமிழில் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். பல சினிமா படங்களில் கூட ஒருவரின் நடை, பாவனைகளை வைத்து காவல்துறை தெரிந்து கொள்ளும் இவரை விசாரிக்கலாமா இல்லையா என்று. 

ஏன், ஒருவரின் நேர் முக பரீட்சையிலும் கூட கை குலுக்கல் ஒரு முக்கிய விடயம்.

எனவே, விஜய்சங்கர் இலங்கைக்கும் விரைந்ததும் அப்பொழுது அவரின் முகபாவனை, கை குலுக்கும் விதம் கூட இவர் சந்திப்பது ஒரு நல்ல நண்பரையா இல்லையா எனக்காட்டி கொடுத்துவிடும்.

இலங்கையின் தற்போதைய சனாதிபதி ஒரு அரசியல்வாதி அல்ல. அவர், அதிகம் கோபப்படும் பேர்வழி எனவும் கூறப்படுகின்றது. எனவே, அவரிடத்தில் அதிகம் இராசதந்திர பாவனைகளை பார்க்கமுடியாது. மனத்தில் உள்ளது முகத்தில் தெரியும்.

 

 

அது ஆரப்பா விஜய்சங்கர்?

  • தொடங்கியவர்
6 hours ago, Kadancha said:

நாமலுடன் சந்தித்த படம் எதற்கு?

அடுத்த சனாதிபதி இல்லை பிரதம மந்திரி வேட்ப்பாளர் 😎

7 hours ago, goshan_che said:

மகிந்த ஜெய்சங்கருக்கு அருகில் நிற்கும் படத்தை பாருங்கள், மாட்டுப்பட்ட கோழிக்கள்ளன் முழுசுவது போல உள்ளது 😂

இலங்கைக்கான சீன தூதர் Cheng Xueyuan இன்று காலை மகிந்தவை சந்தித்திருக்கிறார். 

EJzd4RXUUAAAVET?format=jpg&name=large

EJzd4RZUEAEgbZq?format=jpg&name=large

மகிந்தவுக்கு கான்சர் உள்ளது, அதற்கு சிகிச்சை எடுத்து வருபவர் என Twitter இல் யாரோ எழுதியிருந்தார்கள். அது பற்றி ஏதும் உங்களுக்கு தெரியுமா?

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Lara said:

இலங்கைக்கான சீன தூதர் Cheng Xueyuan இன்று காலை மகிந்தவை சந்தித்திருக்கிறார். 

EJzd4RXUUAAAVET?format=jpg&name=large

EJzd4RZUEAEgbZq?format=jpg&name=large

மகிந்தவுக்கு கான்சர் உள்ளது, அதற்கு சிகிச்சை எடுத்து வருபவர் என Twitter இல் யாரோ எழுதியிருந்தார்கள். அது பற்றி ஏதும் உங்களுக்கு தெரியுமா?

எனக்குத் தெரியாது லாரா,

ஆனால் ஆளின்ர முகத்தில இப்பெல்லாம் பழைய சந்தோசம், கெத்து இல்லை.  வெற்றியின் பின்பு கூட.

#சாக்களை

On 11/19/2019 at 6:45 PM, ampanai said:

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவசர விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியன் அவசர அவசர விஜயமாக பிச்சை எடுக்கும் படலத்தை ஆரம்பித்துள்ளான்! 

சீன தூதுவர் Cheng Xueyuan இன்று காலை கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

This morning, Chinese Ambassador Cheng Xueyuan went to the Presidential Office of Sri Lanka to pay a visit to the new president @GotabayaR. Also the Ambassador handed over a letter from President Xi jinping with best wishes to Sri Lankan people on electing a new President.

EJ4r0ZVUcAAB6-4?format=jpg&name=medium

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.