Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சியா ? : ஐந்து இளைஞர்கள் கைது

Featured Replies

எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது அவரது குடும்ப உருப்பினர் ஒருவரை கொலைச் செய்வதன் ஊடாக பாரிய பணத் தொகையைப் பெறலாம் எனவும் வெளிநாட்டில் சென்று வாழக் கூடிய சூழலும் கிடைக்கும் எனவும்  கூரி சிலருடன் இணைந்து கொலை  சதித் திட்டம் தீட்டியதாக தெரிவித்து ஐந்து இளைஞர்களை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந் நிலையில் அவர்களில் நால்வரை விடுவித்த  நீதிமன்றம் பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தபப்டும் சந்தேக நபரை மட்டும் 72 மணி நேரம் தடுப்பில் வைத்து விசாரிக்க கட்டுநாயக்க பொலிஸாருக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை நீதிவான் கேசர சமரதிவாகர இதன்கான அனுமதியை இன்று மாலை வழங்கினார். அதன்படி  வாழச்சேனை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரை தொடர்ந்து தடுப்பில் வைத்து விசாரிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

 கடந்த திங்களன்று கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பொருப்பதிகாரி , உப பொலிஸ் பரிசோதகர் இந்திக தலைமையிலான குழுவினர்,  சீதுவை - ஜயவர்தனபுர , அமந்தொழுவை பகுதியில் வாடகையில் பெற்ற வீட்டடில் தங்கியிருந்த ஐவரைக் கைது செய்தனர். 

வாழச்சேனை , கிளிநொச்சி- அக்காரயன்குளம் , விஷ்வமடு - தர்மபுரம்  விஷ்வமடு - கல்லாரு  மற்றும் மஸ்கெலியாவைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

அத்தோடு கைது செய்யப்பட்ட நபர்களில் மேலதிக விசாரணையின் பின்னர் நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

பிரதான சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/70428

  • கருத்துக்கள உறவுகள்

7 பேரை ரகசியமா விட்டிட்டு.. 5 பேரை உள்ள போட்டாச்சு. இதுக்கும் நம்மாக்கள் நன்றி சொல்லுவாய்ங்களாக்கும். விடுபட்ட 7 பேரில் எத்தனை பேருக்கு என்னென்ன நடக்குமோ..??! 

முதளை வாயில் அகப்பட்ட இரையாகிவிட்டனர்.. கோத்தா மகிந்த கும்பலிடம் அகப்பட்ட எம் தமிழ் மக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அல்லது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரை கொலை செய்யவதற்கு சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இளைஞர்களில் நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், பிரதான சந்தேகநபரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய மினுவாங்கொடை நீதிவான் கேசர சமரதிவாகர, இன்று மாலை அனுமதி வழங்கியுள்ளார்.

அந்த வகையில், வாழச்சேனை பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேக நபரை தொடர்ந்து தடுப்பில் வைத்து விசாரணை செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

குறித்த ஐந்து இளைஞர்களும், கடந்த திங்கட்கிழமை சீதுவை - ஜயவர்தனபுர , அமந்தொழுவை பகுதியில் வாடகை வீட்டடில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

வாழச்சேனை, கிளிநொச்சி- அக்கராயன்குளம் , விஷ்வமடு - தர்மபுரம் விஷ்வமடு - கல்லாரு மற்றும் மஸ்கெலியாவைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களில் மேலதிக விசாரணையின் பின்னர் நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், பிரதான சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்வின் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

7 பேரை ரகசியமா விட்டிட்டு.. 5 பேரை உள்ள போட்டாச்சு. இதுக்கும் நம்மாக்கள் நன்றி சொல்லுவாய்ங்களாக்கும். விடுபட்ட 7 பேரில் எத்தனை பேருக்கு என்னென்ன நடக்குமோ..??! 

முதளை வாயில் அகப்பட்ட இரையாகிவிட்டனர்.. கோத்தா மகிந்த கும்பலிடம் அகப்பட்ட எம் தமிழ் மக்கள். 

நம்மாட்கள் சீமான் எப்போ உளறுவார் என்றும் ரஜனிதிறனகமவை போட்டது புலி தான் என்று நிருபிப்பதிலும் மும்முரமாய் இருக்கினம் ரஜனி திறனகம  வின் ஆவியே வந்து வாக்கு மூலம் புலி தன்னை போடவில்லை என்று சொன்னாலும் இவர்கள் நம்ப போவதில்லை . நாங்க இப்படி பழைய புண்ணை நோண்டிக்கொண்டு இருக்கையில் அங்கு கோத்தா தமிழில்  இருக்கிறவனை ஒரு வழி  பண்ணிபோடுவான் .

இரவு செய்தியின்படி ஒரு முஸ்லீம் நபர் மட்டும் 72 மணித்தியால தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றையவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்ட்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

நம்மாட்கள் சீமான் எப்போ உளறுவார் என்றும் ரஜனிதிறனகமவை போட்டது புலி தான் என்று நிருபிப்பதிலும் மும்முரமாய் இருக்கினம் ரஜனி திறனகம  வின் ஆவியே வந்து வாக்கு மூலம் புலி தன்னை போடவில்லை என்று சொன்னாலும் இவர்கள் நம்ப போவதில்லை . நாங்க இப்படி பழைய புண்ணை நோண்டிக்கொண்டு இருக்கையில் அங்கு கோத்தா தமிழில்  இருக்கிறவனை ஒரு வழி  பண்ணிபோடுவான் .

ஓ  நாங்கள் அதில் பிசி தான் . நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்குறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

ஓ  நாங்கள் அதில் பிசி தான் . நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்குறீங்கள்?

அதுவும் சரிதான் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ஓ  நாங்கள் அதில் பிசி தான் . நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்குறீங்கள்?

இங்க பாரடா இவவுக்கு வந்த கோபத்தை

  • தொடங்கியவர்

"ஜனாதிபதி கோத்தாபய கொலை விவகாரம்; சரியான தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் உரிய நடவடிக்கை" 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

samal_rajapaksha.jpg

சீன அரசாங்கத்தின் நிதி உதவியில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 75 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 187 மோட்டார் சைக்கிள்களை நாடளாவிய ரீதியிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பரிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள பொலிஸ் காலாட்படை தலைமையகத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். 

நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/70498

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ragaa said:

இங்க பாரடா இவவுக்கு வந்த கோபத்தை

உங்கள் எல்லா ஐடிக்கும் ஒரே பாஸ்வேட்டா வைத்து இருக்கிறீர்கள் 

jaffna muslim என்று ஒரு இனைய தளம் இருக்கிறது। இவர்கள் எதுக்கு எடுத்தாலும் புலிகளையும் தமிழர்களையும்தான் தாக்கி எழுதுவார்கள்।

இந்த சம்பவத்துக்கும் அப்படித்தான் எழுதினார்கள்। நான் அதட்கு மறுப்பு தெரிவித்து இங்கு  ஒரு முஸ்லீம் எலிதான் பிடிபட்ட்து , அந்த எலியை 14 நாட்களுக்கு வைத்து விசாரிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது என்று எழுதினேன் ।

இருந்தாலும் அந்த பதிவை அவர்கள் பிரசுரிக்கவில்லை। எலிகள் எல்லாம்  புலிகளைப்போல வெளிக்கிடடால் இதுதான் நடக்கும்। 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.