Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Vankalayan said:

குறைபாடு இருக்குமா இருந்தால் அதட்கு அந்தந்த சபைகளின் தவறே தவிர சம்பந்தனை குறை சொல்ல முடியாது. அவருக்கு வயது சென்றபடியாலதான்

வயது போனால் வீட்டுக்குள் படுத்துகிடப்பது தானே அல்லது பேசாமல் முதியோர் இல்லத்தில் போய்  சேருவதுதானே அங்கை இருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழ் சனமாவது  நிம்மதியாய் இருக்கும்கள் .

அண்மையில் இந்தியா உறுதியளித்த 400 மில்லியன் அமெரிக்க டாலர்களில் 100 மில்லியன்கள் வரை சூரியமின் உற்பத்திற்கு என கூறப்பட்டிருந்தது. அது எங்கே எப்பொழுது என தெரியவில்லை. ஆனால், அது அநேகமாக வடக்கு கிழக்கு பகுதிகளுக்காக இருக்கலாம். 

On 12/11/2019 at 4:16 PM, பெருமாள் said:

ஒவ்வொன்றும் 200 மீற்றர் அடி நீளமானவையாக

மீற்றருக்கும் அடிக்கும் வித்தியாசம் தெரியாத ஊடகவியலாளர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரி - மறவன்புலவில் காற்றாலை அமைத்தவர்களை அடித்து விரட்டிய மக்கள்..! பொலிஸ் குவிப்பால் பதற்றம்..

78854446_455041802055384_554987935317046

சாவகச்சேரி- மறவன்புலவு பகுதியில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை அப்பகுதி மக்கள் அடித்து விரட்டியுள்ளனர்

மறவன்புலவில் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கருகில் மின் காற்றாலை அமைக்கப்படுவதாக மக்கள் போராட்டங்கள் பலவற்றை மேற்கொண்டதையடுத்து  அதனை ஆராய்வதற்காக பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அதற்கிடையில், மின் காற்றாலை அமைக்கும் பணிக்கான உபகரணங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனரக வாகனங்களில் கொண்டுவரப்பட்டிருந்ததோடு, மின் காற்றாலைக்கான அலுவலகம் அமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

78891908_701157650410650_252962518918076

இந்நிலையில் அதற்கு எதிராக மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பணிகளை இடைநிறுத்துமாறும் கோரினர்.இதன்போது இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதோடு, ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டனர்

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த சாவகச்சேரிப் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடு,  பணிகளை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளனர் .

https://jaffnazone.com/news/14887

  • கருத்துக்கள உறவுகள்

இது  சம்பந்தமான  முகநூல்  பதிவொன்று

 

 

Shanmugarasa Vadivelu
 

ஜேர்மனி சென்றிருந்தபோது இந்த காற்றாலை மையத்தை கண்டேன். இதுகுறித்து ஜேர்மன் ஊடகவியலாளர் ஒருவருடன் பேசிக்கொண்ட விடயங்களை பதிவின் இடையில் கூறுகிறேன்.

யாழ்ப்பாணத்தில் காற்றாலை மையம் (Wind Farm) அமைக்கப்படுவதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பை வெளியிடுவதாக அறிகிறேன். அந்த மக்கள் வேண்டுமென்றே திசைதிருப்பப்படுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. காற்றாலை மையம் எமது சூழலுக்கு எந்தவித பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அந்த மக்கள் விளங்கிக்கொண்டால் இதற்கான எதிர்வினையை கைவிடுவர்.

காற்றாலை மையத்தால் சூழலுக்கு அபாயகரமான பாதிப்புக்கள் ஏற்படுமா?

இல்லை. சிலர் காற்றின் போக்கு திசைதிருப்பப்பட்டு மழைவீழ்ச்சி குன்றும் என்றும் குறித்த பகுதியில் பறவைகள் அழிவடையும் என்றும் தமக்குத்தெரிந்த விஞ்ஞான விளக்கங்களை அடித்துவிடுகிறார்கள். இது உண்மையல்ல.

ஜேர்மனியின் பேர்லின் நகரிலிருந்து போலாந்துக்குச் செல்லும் சாலையோர வயல்வெளியொன்றில் பல காற்றாலைக் கம்பங்கள் நிறுவப்பட்டு சிறகுகள் சுழன்றுகொண்டிருந்தன. ஒரு புறநகர் பகுதியில் அமைந்திருந்தது அந்த காற்றாலை மையம். "ஜேர்மனியின் மின்னுற்பத்தியில் காற்றாலைகளின் பங்களிப்பு என்ன?" என்று அவரிடம் கேட்டிருந்தேன்.

கொஞ்சம் உற்சாகமாக கூறினார், "ஆம், இது எமது நாட்டின் சுத்தமான சக்தி (Clean Energy) என்று அழைக்கப்படுகிறது. மிகவும் மலிவானது. அத்துடன் எரிபொருள் செலவுகள் இல்லாத ஒரு தற்சார்பு உற்பத்திப்பண்பைக் கொண்டது. ஜேர்மனி இவ்வாறான தற்சார்பு உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிய பாதையிலேயே தொடர்ந்தும் பயணிக்கிறது."

"சரி சூழல் சார்ந்த பிரச்சினைகள் என்று எதுவுமே இல்லையா?" என்று கேட்டேன்.

"சூழல் சார்ந்து பாரதூரமான பிரச்சினைகள் எதுவுமில்லை. இங்கு சில போராட்டக் குழுக்கள் இருக்கின்றன. அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் என்று பார்த்தால், எரிச்சலூட்டும் இரைச்சல், சூரிய வெளிச்சத்தை மறைக்கும் காற்றாலைக் கம்பங்களினதும் சிறகுகளினதும் நிழல் மற்றும் பறவைகளுக்கும் வௌவால்களுக்கும் ஆபத்தை விளைவிக்கவல்ல காற்றாடிச் சிறகுகள் என்பனதான். இவை ஒரு வளர்ந்த நாட்டுக்கு ஏற்கத்தக்க காரணங்கள் இல்லை. ஆனால், மக்கள் குடியிருப்புக்களிலிருந்து சுமார் 1000மீட்டர்களாவது தள்ளி காற்றாலைக் கம்பங்களை நிறுவவேண்டுமென ஜேர்மன் அரசு நிபந்தனை விதிக்கவுள்ளது. தற்போது சுமார் 38% மின்சாரத் தேவை காற்றாலை மற்றும் சூரியக்கலம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களினாலேயே நிரப்பப்படுகிறது. இதனை இனிவரும் காலங்களில் அறுபது வீதத்துக்கும் மேல் அதிகரிப்பதே அரசின் இலக்காக உள்ளது" என்றார்.

"சரி, இரைச்சல் ஏன் மக்களை எரிச்சலூட்டுகிறது? நிழலுக்கு ஏன் பயப்படுகிறார்கள்?"

"காற்றாடிகள் சாதாரணமாக சுழலும்போது இரைச்சல் குறைவாக இருக்கும். ஆனால் பலத்த காற்று வீசும்போது இரைச்சல் பயங்கரமாய் இருக்கும். இது ஒரு சாதாரண விமானம் அருகாக செல்வதுபோல இருக்கும். அருகிலே இருப்பவர்களுக்கு எரிச்சல் வரும்தானே? (சிரிக்கிறார்) நிழலுக்கு பயப்படுகிறார்கள். மிக உயரமான கம்பங்கள் மிகவும் அகலமானவை. இவை ஒரு வீட்டையே மாதக்கணக்கில் வெய்யில் படாமல் மறைக்கவல்லவை. இங்கு குளிர் காலத்தில் சூரிய வெளிச்சம்தான் மக்களின் வாழ்வியல் தேவை. கொந்தளிப்பார்கள்தானே? (மீண்டும் சிரிப்பு) என்னவோ, உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அணு உலைகள், அனல்மின் நிலையங்கள், எரிசக்தி மையங்கள் என்பவற்றோடு ஒப்பிடுகையில் இவை ஒன்றும் அவ்வளவு ஆபத்தானவை இல்லை." என்றார்.

அப்போதுதான் நினைத்தேன், ஜேர்மனியிடம் இந்த வல்லரசுகள் கற்பதற்கு நிறைய உள்ளன என்பதை.

யாழ்ப்பாணத்தில் காற்றாலை அமைக்கப்படுவதன் சாதக பாதகங்களை அடுத்த பதிவில் பகிர்கிறேன். இதுதொடர்பில் நண்பர்களின் கருத்துக்களையும் இங்கு எதிர்பார்க்கிறேன்.

 
 
 

எந்த நல்லதை செய்தாலும் எதிர்த்து பழகிட்டாங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சாவகச்சேரி - மறவன்புலவில் காற்றாலை அமைத்தவர்களை அடித்து விரட்டிய மக்கள்..! பொலிஸ் குவிப்பால் பதற்றம்..

78854446_455041802055384_554987935317046

சாவகச்சேரி- மறவன்புலவு பகுதியில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை அப்பகுதி மக்கள் அடித்து விரட்டியுள்ளனர்

மறவன்புலவில் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கருகில் மின் காற்றாலை அமைக்கப்படுவதாக மக்கள் போராட்டங்கள் பலவற்றை மேற்கொண்டதையடுத்து  அதனை ஆராய்வதற்காக பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அதற்கிடையில், மின் காற்றாலை அமைக்கும் பணிக்கான உபகரணங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனரக வாகனங்களில் கொண்டுவரப்பட்டிருந்ததோடு, மின் காற்றாலைக்கான அலுவலகம் அமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

78891908_701157650410650_252962518918076

இந்நிலையில் அதற்கு எதிராக மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பணிகளை இடைநிறுத்துமாறும் கோரினர்.இதன்போது இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதோடு, ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டனர்

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த சாவகச்சேரிப் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடு,  பணிகளை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளனர் .

https://jaffnazone.com/news/14887

மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இந்த காற்றாலைகள் அமைவது பிழையானதே வடகிழக்கில் ஆளரவமற்ற இடங்கள் எவ்வளவோ இருக்க மக்கள் குடியிருப்பு பகுதியை ஏன் தெரிவு செய்தார்கள் ?

இல்லாவிடின் இந்த மக்களின் கொந்தளிப்புக்கு பின்னால் காசு சம்பாதிக்கும் அரசியல் வாதி பின்னுக்கு நிட்கிறார் தனியார் அமைப்புத்தானே மக்களை தூண்டி விட்டு பணம் சம்பாதிக்க வழி செய்கிறார் போல் உள்ளது .ஏற்கனவே உள்ள மின் ஆலைகளை அமைக்கும்போது எந்த பிரச்சனையும் வரவில்லையே ?

இதற்கு இலகுவான வழி  உள்ளூர் ஊடகங்களில் காற்றாலைகளின்  நன்மை தீமைகளை ஒப்பிட்டு பொது மக்களுக்கு விளக்கம் கொடுப்பது ஒரு அனல் மின் நிலையத்தை விட காற்றாலைகளின்  நன்மையை விளங்கப்படுத்துவது இலகுவானது .

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு  முகநூல் பதிவு:

L’image contient peut-être : ciel, nuage, arbre et plein air
Vadakovay Varatha Rajan

காற்றாலைகள்
-----------------

அண்மையில் குமரவேல் கணேசன் அவர்கள் காற்றாலைகள் பற்றிய ஓர் பதிவை போட்டிருந்தார் . காற்றாலைகள் பற்றிய எனது கருத்துகளையும் முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
1970 பதுகளில் தொண்டைமானாற்றில் ஓர் பாரிய காற்றாலை இயங்கியதை சிலர் அறிந்திருப்பீர்கள் .
இலங்கை போன்ற நாலுபக்கமும் கடலால் சூழப்படட நாடுகளுக்கு காற்றாலை மின்சாரம் ஓர் வரப்பிரசாதம் என நினைக்கிறேன் .
குறிப்பாக தென்பகுதியில் இருந்து மின்சாரத்தை நம்பியிருக்கும் யாழ் குடாநாட்டுக்கு காற்றாலை மின்சாரம் ஓர் வரப்பிரசாதமாக அமையும் .
இதில் உள்ள சாதக பாதகங்களை எனக்கு தெரிந்தமட்டில் பகிர்கிறேன்.
1 பாரிய அணைகட்டுககளைக் கட்டி நீர்தேக்கங்கள் உருவாக்கி அதில் இருந்து மின்சாரம் பெறும்போது ,
A இதற்கு பெரியளவில் காணி சுவிகரிக்கப்படவேண்டும் .இக்காணி சுவிகரிப்பில் பல பொதுமக்கள் தமக்குரிய நிலங்களை இழக்கின்றனர் .
B இந்நிலங்களை வாழிடமாக கொண்ட கானுயிர்கள் பாதிக்கப் படுகின்றன.
C இதனால் சுற்றுசூழலில் பாதிப்பு ஏற்படுகிறது.
ஆனால் காற்றாலைகளுக்கு இவ்வாறான பாரிய நிலப்பரப்பு தேவையில்லை .
2 டீசல் நிலக்கரி போன்ற , மனிதனுக்கு தேவையான எந்தவொரு மூலப்பொருள்களையும் இவை வேண்டி நிற்பதில்லை .
3 அவாறே சூழலுக்கு தீங்கான எந்தவொரு பொருளையும் இவை விடுவதில்லை .
4 பச்சை வீட்டு விளைவுகளை இவை உருவாக்குவதில்லை .
5 கடல்நீரில் இருந்து நன்நீரை உற்பத்தி செய்யும் போது , நன்நீர் பெற்றபின் செறிவான உப்புநீர் மீண்டும் கடலுக்குள் விடப்படுவது போன்று , இங்கு காற்றின் வேகத்தில் பெரிய மாறுபாடு ஏற்படாது .
6 காற்றின் வேகம் அதிகரிக்கும்போது இவற்றின் உற்பத்தி மும்மடியா அதிகரிக்கும் .
7 அமைப்பதற்கான மூலதனத்தை தவிர வேறெந்த மூலத்தனத்தையும் இவை வேண்டி நிற்பதில்லை .
8 பாதிப்புகள் என்று பார்க்கும் போது இவற்றின் சத்தம் பெரிதாக பேசப்படுகிறது .
குடியிருப்புகளில் இருந்து 100 மீற்றர் தூரத்துக்கு அப்பால் இவை அமைக்கப்படும்போது ,இவற்றின் சத்தம் பெரிதாக கேட்காது .
9 உயரே இருக்கும் மழை மேகங்களை இவை கலைத்து விடும் என்பது அதீத கற்பனையாகும். காற்றாலைகள் அமைக்கப்பட்ட பளைப் பிரதேசத்தில் கடந்த வருடங்களில் மழை வீழ்ச்சியில் எந்த மாற்றத்தையும் காணவில்லை .
10 இவற்றின் இறகுகளில் பறவைகள் மோதி இறக்கின்றன என்பது ஏதோ உண்மைதான் .
ஆனால் இது கூட்டமாக வலசை வரும் பறவைகள் வரும் இடங்களிலே இதற்கு சாத்தியப்பாடு அதிகம் .
உள்ளுர் பறவைகள் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டாலும் காலப்போக்கில் இவற்றின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தம்மை தகவமைத்து கொள்கின்றன .

எனவே எல்லாவற்றுக்கும் குறை கூறிக் கொண்டிருக்காமல் , இக்காற்றாலைகள் அமைப்பத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விசுகு said:

இலங்கை போன்ற நாலுபக்கமும் கடலால் சூழப்படட நாடுகளுக்கு காற்றாலை மின்சாரம் ஓர் வரப்பிரசாதம் என நினைக்கிறேன் .
குறிப்பாக தென்பகுதியில் இருந்து மின்சாரத்தை நம்பியிருக்கும் யாழ் குடாநாட்டுக்கு காற்றாலை மின்சாரம் ஓர் வரப்பிரசாதமாக அமையும்

இலங்கை அல்ல வளர்ந்த நாடுகளே முடிவு கட்டி விட்டன 2035 க்கு முன்  அனல் மின் நிலையம் தொடக்கம் அணுமின் வரை முற்றாக நிறுத்துகின்றனர் காற்றாலைகள் கடல் அலைகள் சூரிய சக்தி போன்ற இயற்கையில் கிடைக்கும் சுற்று சூழலுக்கு பாதிப்பு  குறைவான சக்தி வழங்கலை  பெறுவதை ஊக்குவிக்கின்றனர் .

இங்கு சனம்  கொந்தளிக்க காரணம் தனியார் நிறுவனம் கையகப்படுத்திய காணிகள் பற்றிய தெளிவின்மை இரண்டாவது ஆலைகள் அமைவிடம் குடியிருப்பு பகுதிக்கு நெருக்கமாய் உள்ள காரணம் என்று முகநூல் உறுதி செய்யாத செய்திகள் கூறுகின்றன மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய உள்ளூர் ஊடகங்கள் இந்த விடயத்தில்  அமைதியாக இருப்பது சந்தேகமாய் உள்ளது அதாவது அந்த ஏரியா அரசியல் வாதியை  தனியார் கம்பனி இன்னும் கவனிக்க இல்லை போல் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Rajesh said:

எந்த நல்லதை செய்தாலும் எதிர்த்து பழகிட்டாங்கள்!

✔️😥

தமிழ் அரசியல் வாதிகள் தங்கள் இலாபங்களுக்காக சமயயோசிதமாக திட்டமிட்டு மக்களை அப்படி செய்ய பழக்கி உள்ளார்கள்.
மக்களும் எதையும் யோசிக்காமல் தங்களுக்கு தாங்களே தீமை செய்து கொள்கிறார்கள்

On 12/13/2019 at 8:12 PM, Rajesh said:

எந்த நல்லதை செய்தாலும் எதிர்த்து பழகிட்டாங்கள்!

 

On 12/13/2019 at 8:12 PM, Rajesh said:

எந்த நல்லதை செய்தாலும் எதிர்த்து பழகிட்டாங்கள்!

உண்மை. செம்மறி ஆடுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.