Jump to content

யாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Vankalayan said:

குறைபாடு இருக்குமா இருந்தால் அதட்கு அந்தந்த சபைகளின் தவறே தவிர சம்பந்தனை குறை சொல்ல முடியாது. அவருக்கு வயது சென்றபடியாலதான்

வயது போனால் வீட்டுக்குள் படுத்துகிடப்பது தானே அல்லது பேசாமல் முதியோர் இல்லத்தில் போய்  சேருவதுதானே அங்கை இருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழ் சனமாவது  நிம்மதியாய் இருக்கும்கள் .

Link to comment
Share on other sites

அண்மையில் இந்தியா உறுதியளித்த 400 மில்லியன் அமெரிக்க டாலர்களில் 100 மில்லியன்கள் வரை சூரியமின் உற்பத்திற்கு என கூறப்பட்டிருந்தது. அது எங்கே எப்பொழுது என தெரியவில்லை. ஆனால், அது அநேகமாக வடக்கு கிழக்கு பகுதிகளுக்காக இருக்கலாம். 

Link to comment
Share on other sites

On 12/11/2019 at 4:16 PM, பெருமாள் said:

ஒவ்வொன்றும் 200 மீற்றர் அடி நீளமானவையாக

மீற்றருக்கும் அடிக்கும் வித்தியாசம் தெரியாத ஊடகவியலாளர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரி - மறவன்புலவில் காற்றாலை அமைத்தவர்களை அடித்து விரட்டிய மக்கள்..! பொலிஸ் குவிப்பால் பதற்றம்..

78854446_455041802055384_554987935317046

சாவகச்சேரி- மறவன்புலவு பகுதியில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை அப்பகுதி மக்கள் அடித்து விரட்டியுள்ளனர்

மறவன்புலவில் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கருகில் மின் காற்றாலை அமைக்கப்படுவதாக மக்கள் போராட்டங்கள் பலவற்றை மேற்கொண்டதையடுத்து  அதனை ஆராய்வதற்காக பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அதற்கிடையில், மின் காற்றாலை அமைக்கும் பணிக்கான உபகரணங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனரக வாகனங்களில் கொண்டுவரப்பட்டிருந்ததோடு, மின் காற்றாலைக்கான அலுவலகம் அமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

78891908_701157650410650_252962518918076

இந்நிலையில் அதற்கு எதிராக மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பணிகளை இடைநிறுத்துமாறும் கோரினர்.இதன்போது இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதோடு, ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டனர்

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த சாவகச்சேரிப் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடு,  பணிகளை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளனர் .

https://jaffnazone.com/news/14887

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது  சம்பந்தமான  முகநூல்  பதிவொன்று

 

 

Shanmugarasa Vadivelu
 

ஜேர்மனி சென்றிருந்தபோது இந்த காற்றாலை மையத்தை கண்டேன். இதுகுறித்து ஜேர்மன் ஊடகவியலாளர் ஒருவருடன் பேசிக்கொண்ட விடயங்களை பதிவின் இடையில் கூறுகிறேன்.

யாழ்ப்பாணத்தில் காற்றாலை மையம் (Wind Farm) அமைக்கப்படுவதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பை வெளியிடுவதாக அறிகிறேன். அந்த மக்கள் வேண்டுமென்றே திசைதிருப்பப்படுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. காற்றாலை மையம் எமது சூழலுக்கு எந்தவித பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அந்த மக்கள் விளங்கிக்கொண்டால் இதற்கான எதிர்வினையை கைவிடுவர்.

காற்றாலை மையத்தால் சூழலுக்கு அபாயகரமான பாதிப்புக்கள் ஏற்படுமா?

இல்லை. சிலர் காற்றின் போக்கு திசைதிருப்பப்பட்டு மழைவீழ்ச்சி குன்றும் என்றும் குறித்த பகுதியில் பறவைகள் அழிவடையும் என்றும் தமக்குத்தெரிந்த விஞ்ஞான விளக்கங்களை அடித்துவிடுகிறார்கள். இது உண்மையல்ல.

ஜேர்மனியின் பேர்லின் நகரிலிருந்து போலாந்துக்குச் செல்லும் சாலையோர வயல்வெளியொன்றில் பல காற்றாலைக் கம்பங்கள் நிறுவப்பட்டு சிறகுகள் சுழன்றுகொண்டிருந்தன. ஒரு புறநகர் பகுதியில் அமைந்திருந்தது அந்த காற்றாலை மையம். "ஜேர்மனியின் மின்னுற்பத்தியில் காற்றாலைகளின் பங்களிப்பு என்ன?" என்று அவரிடம் கேட்டிருந்தேன்.

கொஞ்சம் உற்சாகமாக கூறினார், "ஆம், இது எமது நாட்டின் சுத்தமான சக்தி (Clean Energy) என்று அழைக்கப்படுகிறது. மிகவும் மலிவானது. அத்துடன் எரிபொருள் செலவுகள் இல்லாத ஒரு தற்சார்பு உற்பத்திப்பண்பைக் கொண்டது. ஜேர்மனி இவ்வாறான தற்சார்பு உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிய பாதையிலேயே தொடர்ந்தும் பயணிக்கிறது."

"சரி சூழல் சார்ந்த பிரச்சினைகள் என்று எதுவுமே இல்லையா?" என்று கேட்டேன்.

"சூழல் சார்ந்து பாரதூரமான பிரச்சினைகள் எதுவுமில்லை. இங்கு சில போராட்டக் குழுக்கள் இருக்கின்றன. அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் என்று பார்த்தால், எரிச்சலூட்டும் இரைச்சல், சூரிய வெளிச்சத்தை மறைக்கும் காற்றாலைக் கம்பங்களினதும் சிறகுகளினதும் நிழல் மற்றும் பறவைகளுக்கும் வௌவால்களுக்கும் ஆபத்தை விளைவிக்கவல்ல காற்றாடிச் சிறகுகள் என்பனதான். இவை ஒரு வளர்ந்த நாட்டுக்கு ஏற்கத்தக்க காரணங்கள் இல்லை. ஆனால், மக்கள் குடியிருப்புக்களிலிருந்து சுமார் 1000மீட்டர்களாவது தள்ளி காற்றாலைக் கம்பங்களை நிறுவவேண்டுமென ஜேர்மன் அரசு நிபந்தனை விதிக்கவுள்ளது. தற்போது சுமார் 38% மின்சாரத் தேவை காற்றாலை மற்றும் சூரியக்கலம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களினாலேயே நிரப்பப்படுகிறது. இதனை இனிவரும் காலங்களில் அறுபது வீதத்துக்கும் மேல் அதிகரிப்பதே அரசின் இலக்காக உள்ளது" என்றார்.

"சரி, இரைச்சல் ஏன் மக்களை எரிச்சலூட்டுகிறது? நிழலுக்கு ஏன் பயப்படுகிறார்கள்?"

"காற்றாடிகள் சாதாரணமாக சுழலும்போது இரைச்சல் குறைவாக இருக்கும். ஆனால் பலத்த காற்று வீசும்போது இரைச்சல் பயங்கரமாய் இருக்கும். இது ஒரு சாதாரண விமானம் அருகாக செல்வதுபோல இருக்கும். அருகிலே இருப்பவர்களுக்கு எரிச்சல் வரும்தானே? (சிரிக்கிறார்) நிழலுக்கு பயப்படுகிறார்கள். மிக உயரமான கம்பங்கள் மிகவும் அகலமானவை. இவை ஒரு வீட்டையே மாதக்கணக்கில் வெய்யில் படாமல் மறைக்கவல்லவை. இங்கு குளிர் காலத்தில் சூரிய வெளிச்சம்தான் மக்களின் வாழ்வியல் தேவை. கொந்தளிப்பார்கள்தானே? (மீண்டும் சிரிப்பு) என்னவோ, உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அணு உலைகள், அனல்மின் நிலையங்கள், எரிசக்தி மையங்கள் என்பவற்றோடு ஒப்பிடுகையில் இவை ஒன்றும் அவ்வளவு ஆபத்தானவை இல்லை." என்றார்.

அப்போதுதான் நினைத்தேன், ஜேர்மனியிடம் இந்த வல்லரசுகள் கற்பதற்கு நிறைய உள்ளன என்பதை.

யாழ்ப்பாணத்தில் காற்றாலை அமைக்கப்படுவதன் சாதக பாதகங்களை அடுத்த பதிவில் பகிர்கிறேன். இதுதொடர்பில் நண்பர்களின் கருத்துக்களையும் இங்கு எதிர்பார்க்கிறேன்.

 
 
 
Link to comment
Share on other sites

எந்த நல்லதை செய்தாலும் எதிர்த்து பழகிட்டாங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சாவகச்சேரி - மறவன்புலவில் காற்றாலை அமைத்தவர்களை அடித்து விரட்டிய மக்கள்..! பொலிஸ் குவிப்பால் பதற்றம்..

78854446_455041802055384_554987935317046

சாவகச்சேரி- மறவன்புலவு பகுதியில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை அப்பகுதி மக்கள் அடித்து விரட்டியுள்ளனர்

மறவன்புலவில் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கருகில் மின் காற்றாலை அமைக்கப்படுவதாக மக்கள் போராட்டங்கள் பலவற்றை மேற்கொண்டதையடுத்து  அதனை ஆராய்வதற்காக பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அதற்கிடையில், மின் காற்றாலை அமைக்கும் பணிக்கான உபகரணங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனரக வாகனங்களில் கொண்டுவரப்பட்டிருந்ததோடு, மின் காற்றாலைக்கான அலுவலகம் அமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

78891908_701157650410650_252962518918076

இந்நிலையில் அதற்கு எதிராக மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பணிகளை இடைநிறுத்துமாறும் கோரினர்.இதன்போது இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதோடு, ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டனர்

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த சாவகச்சேரிப் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடு,  பணிகளை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளனர் .

https://jaffnazone.com/news/14887

மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இந்த காற்றாலைகள் அமைவது பிழையானதே வடகிழக்கில் ஆளரவமற்ற இடங்கள் எவ்வளவோ இருக்க மக்கள் குடியிருப்பு பகுதியை ஏன் தெரிவு செய்தார்கள் ?

இல்லாவிடின் இந்த மக்களின் கொந்தளிப்புக்கு பின்னால் காசு சம்பாதிக்கும் அரசியல் வாதி பின்னுக்கு நிட்கிறார் தனியார் அமைப்புத்தானே மக்களை தூண்டி விட்டு பணம் சம்பாதிக்க வழி செய்கிறார் போல் உள்ளது .ஏற்கனவே உள்ள மின் ஆலைகளை அமைக்கும்போது எந்த பிரச்சனையும் வரவில்லையே ?

இதற்கு இலகுவான வழி  உள்ளூர் ஊடகங்களில் காற்றாலைகளின்  நன்மை தீமைகளை ஒப்பிட்டு பொது மக்களுக்கு விளக்கம் கொடுப்பது ஒரு அனல் மின் நிலையத்தை விட காற்றாலைகளின்  நன்மையை விளங்கப்படுத்துவது இலகுவானது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு  முகநூல் பதிவு:

L’image contient peut-être : ciel, nuage, arbre et plein air
Vadakovay Varatha Rajan

காற்றாலைகள்
-----------------

அண்மையில் குமரவேல் கணேசன் அவர்கள் காற்றாலைகள் பற்றிய ஓர் பதிவை போட்டிருந்தார் . காற்றாலைகள் பற்றிய எனது கருத்துகளையும் முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
1970 பதுகளில் தொண்டைமானாற்றில் ஓர் பாரிய காற்றாலை இயங்கியதை சிலர் அறிந்திருப்பீர்கள் .
இலங்கை போன்ற நாலுபக்கமும் கடலால் சூழப்படட நாடுகளுக்கு காற்றாலை மின்சாரம் ஓர் வரப்பிரசாதம் என நினைக்கிறேன் .
குறிப்பாக தென்பகுதியில் இருந்து மின்சாரத்தை நம்பியிருக்கும் யாழ் குடாநாட்டுக்கு காற்றாலை மின்சாரம் ஓர் வரப்பிரசாதமாக அமையும் .
இதில் உள்ள சாதக பாதகங்களை எனக்கு தெரிந்தமட்டில் பகிர்கிறேன்.
1 பாரிய அணைகட்டுககளைக் கட்டி நீர்தேக்கங்கள் உருவாக்கி அதில் இருந்து மின்சாரம் பெறும்போது ,
A இதற்கு பெரியளவில் காணி சுவிகரிக்கப்படவேண்டும் .இக்காணி சுவிகரிப்பில் பல பொதுமக்கள் தமக்குரிய நிலங்களை இழக்கின்றனர் .
B இந்நிலங்களை வாழிடமாக கொண்ட கானுயிர்கள் பாதிக்கப் படுகின்றன.
C இதனால் சுற்றுசூழலில் பாதிப்பு ஏற்படுகிறது.
ஆனால் காற்றாலைகளுக்கு இவ்வாறான பாரிய நிலப்பரப்பு தேவையில்லை .
2 டீசல் நிலக்கரி போன்ற , மனிதனுக்கு தேவையான எந்தவொரு மூலப்பொருள்களையும் இவை வேண்டி நிற்பதில்லை .
3 அவாறே சூழலுக்கு தீங்கான எந்தவொரு பொருளையும் இவை விடுவதில்லை .
4 பச்சை வீட்டு விளைவுகளை இவை உருவாக்குவதில்லை .
5 கடல்நீரில் இருந்து நன்நீரை உற்பத்தி செய்யும் போது , நன்நீர் பெற்றபின் செறிவான உப்புநீர் மீண்டும் கடலுக்குள் விடப்படுவது போன்று , இங்கு காற்றின் வேகத்தில் பெரிய மாறுபாடு ஏற்படாது .
6 காற்றின் வேகம் அதிகரிக்கும்போது இவற்றின் உற்பத்தி மும்மடியா அதிகரிக்கும் .
7 அமைப்பதற்கான மூலதனத்தை தவிர வேறெந்த மூலத்தனத்தையும் இவை வேண்டி நிற்பதில்லை .
8 பாதிப்புகள் என்று பார்க்கும் போது இவற்றின் சத்தம் பெரிதாக பேசப்படுகிறது .
குடியிருப்புகளில் இருந்து 100 மீற்றர் தூரத்துக்கு அப்பால் இவை அமைக்கப்படும்போது ,இவற்றின் சத்தம் பெரிதாக கேட்காது .
9 உயரே இருக்கும் மழை மேகங்களை இவை கலைத்து விடும் என்பது அதீத கற்பனையாகும். காற்றாலைகள் அமைக்கப்பட்ட பளைப் பிரதேசத்தில் கடந்த வருடங்களில் மழை வீழ்ச்சியில் எந்த மாற்றத்தையும் காணவில்லை .
10 இவற்றின் இறகுகளில் பறவைகள் மோதி இறக்கின்றன என்பது ஏதோ உண்மைதான் .
ஆனால் இது கூட்டமாக வலசை வரும் பறவைகள் வரும் இடங்களிலே இதற்கு சாத்தியப்பாடு அதிகம் .
உள்ளுர் பறவைகள் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டாலும் காலப்போக்கில் இவற்றின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தம்மை தகவமைத்து கொள்கின்றன .

எனவே எல்லாவற்றுக்கும் குறை கூறிக் கொண்டிருக்காமல் , இக்காற்றாலைகள் அமைப்பத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விசுகு said:

இலங்கை போன்ற நாலுபக்கமும் கடலால் சூழப்படட நாடுகளுக்கு காற்றாலை மின்சாரம் ஓர் வரப்பிரசாதம் என நினைக்கிறேன் .
குறிப்பாக தென்பகுதியில் இருந்து மின்சாரத்தை நம்பியிருக்கும் யாழ் குடாநாட்டுக்கு காற்றாலை மின்சாரம் ஓர் வரப்பிரசாதமாக அமையும்

இலங்கை அல்ல வளர்ந்த நாடுகளே முடிவு கட்டி விட்டன 2035 க்கு முன்  அனல் மின் நிலையம் தொடக்கம் அணுமின் வரை முற்றாக நிறுத்துகின்றனர் காற்றாலைகள் கடல் அலைகள் சூரிய சக்தி போன்ற இயற்கையில் கிடைக்கும் சுற்று சூழலுக்கு பாதிப்பு  குறைவான சக்தி வழங்கலை  பெறுவதை ஊக்குவிக்கின்றனர் .

இங்கு சனம்  கொந்தளிக்க காரணம் தனியார் நிறுவனம் கையகப்படுத்திய காணிகள் பற்றிய தெளிவின்மை இரண்டாவது ஆலைகள் அமைவிடம் குடியிருப்பு பகுதிக்கு நெருக்கமாய் உள்ள காரணம் என்று முகநூல் உறுதி செய்யாத செய்திகள் கூறுகின்றன மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய உள்ளூர் ஊடகங்கள் இந்த விடயத்தில்  அமைதியாக இருப்பது சந்தேகமாய் உள்ளது அதாவது அந்த ஏரியா அரசியல் வாதியை  தனியார் கம்பனி இன்னும் கவனிக்க இல்லை போல் இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Rajesh said:

எந்த நல்லதை செய்தாலும் எதிர்த்து பழகிட்டாங்கள்!

✔️😥

தமிழ் அரசியல் வாதிகள் தங்கள் இலாபங்களுக்காக சமயயோசிதமாக திட்டமிட்டு மக்களை அப்படி செய்ய பழக்கி உள்ளார்கள்.
மக்களும் எதையும் யோசிக்காமல் தங்களுக்கு தாங்களே தீமை செய்து கொள்கிறார்கள்

Link to comment
Share on other sites

On 12/13/2019 at 8:12 PM, Rajesh said:

எந்த நல்லதை செய்தாலும் எதிர்த்து பழகிட்டாங்கள்!

 

On 12/13/2019 at 8:12 PM, Rajesh said:

எந்த நல்லதை செய்தாலும் எதிர்த்து பழகிட்டாங்கள்!

உண்மை. செம்மறி ஆடுகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.