Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடற்தகுதி பரிசோதனைக்கு சென்ற மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் -  இளஞ்செழியன்  காட்டம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உடற்தகுதி பரிசோதனைக்கு சென்ற மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் -  இளஞ்செழியன்  காட்டம்..!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான அரச வைத்தியசாலையில் உடற்தகுதி பரிசோதனைக்காக சென்ற பாடசாலை மாணவிகள் மீது உயர் பதவியில் உள்ள வைத்தியர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட விடயம் அம்பலமாகியுள்ளது.

Rape2.jpg

குறித்த விடயம் தொடர்பாக தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான பீற்றர் இளஞ்செழியன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், 

கடந்த மாதம் 10ம் திகதி மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசலை ஒன்றிலிருந்து மாணவர்கள் உடற்தகுதி சோதனைக்கு சென்றுள்ளனர். இதன்போது மாவட்டத்தின் பொறுப்புவாய்ந்த வைத்தியசாலை ஒன்றில் பொறுப்புவாய்ந்த பதவில் உள்ள வைத்தியர் ஒருவர் குறித்த மாணவிகளிடம் தனது இழிவான நடத்தையினைக் காண்பித்துள்ளார்.

மேலும் உடற்தகுதி பரிசோதனைக்காக சென்றிருந்த மாணவர்கள் காலையில் 7 மணியில்  இருந்து மாலை 7 மணி வரை வைத்தியசாலையில் மறிக்கப்பட்டிருக்கின்றனர். இது குறித்து சில பெற்றோர் வைத்தியசாலைக்குச் சென்று  கேட்டபோதும் அவர்கள் ஏமாற்றப்பட்டனர்.

மேலும் உடற்தகுதி பரிசோதனைக்கு பாடசாலை நிர்வாகம் ஊடாக  மாணவிகள் அனுப்பப்பட்டிருந்தால் கட்டாயம்  பெண் ஆசிரியை ஒருவர் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். பெண் ஆசிரியர் அனுப்பப்படவில்லை என அறிய முடிகின்றது. 

காலையில் பரிசோதனைக்கு சென்றிருந்த மாணவிகள் மாலைவரை திரும்பாமை குறித்தும் பாடசாலை கவனிக்கவில்லை என்பது கவலை அளிக்கின்றது. மேற்படி பரிசோதனை கூடம் கீழே உள்ள இரு பகுதியிலே அமைந்திருந்தது ஆனால் தை 9 ஆம் திகதி பரிசோதனை கூடம் மேல் மாடிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆகவே இது முன்கூட்டியே திட்டம் இட்டு நடைபெற்றதா என சந்தேகம் எழுந்துள்ளது. அன்று தை 10 திகதி விடுமுறை நாள் ஆகும்.

ஆகவே பாடசாலை நிர்வாகமும் இந்த விடயத்தில் மிக காத்திரமாக செயற்படவேண்டும் இவ்வாறான நிலையில் பாடசாலை இந்த விடயத்தை மூடி மறைக்க  முயற்சிக்ககூடாது. பாதிக்கப்பட்ட பிள்ளைகளை பாதுகாப்பது, அதன் பாடசாலையின் பெயரை பாதுகாப்பது மிக முக்கியமானது.

அதுபோலவே உயர்பதவிகளில் உள்ள காட்டுமிராண்டிகள் தண்டிக்கப்படுவதும் முக்கியமானது. ஆகவே மாணவிகளை பாதுகாத்துக் கொண்டு குறித்த நபருக்கும், பாடசாலை நிர்வாகம் தவறு விட்டிருப்பின் எடுக்கவேண்டிய சட்டரீதியான நடவடிக்கைகளை, ஏனைய நடவடிக்கையையும் எடுப்போம்

அதற்கான ஒழுங்குகள் செய்யப்படும் அதே வேளையில் உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், முல்லைத்தீவு கல்விவலைய பணிப்பாளர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இப்படியான செயற்பாடுகளை உடன் முடிவுக்கு கொண்டுவர அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
 

https://www.virakesari.lk/article/74699

1 hour ago, கிருபன் said:

குறித்த விடயம் தொடர்பாக தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான பீற்றர் இளஞ்செழியன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், 

தமிழரசுக் கட்சியின் சிறீதரனின் கூட்டாளிகள் தான் பரவலா இப்பிடிப்பட்ட வேலைகளில ஈடுபட்டு வந்திருக்கீனம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண் பிள்ளைகள் எதற்காக ஆண் வைத்தியரிடம் பரிசோதனை செய்ய செல்லவேண்டும். பெண் வைத்தியர்களை அழைக்கலாம்தானே. இந்த உடல் தகுதி பரிசோதனை எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை யாராவது விளக்குவார்களா?

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

பெண் பிள்ளைகள் எதற்காக ஆண் வைத்தியரிடம் பரிசோதனை செய்ய செல்லவேண்டும். பெண் வைத்தியர்களை அழைக்கலாம்தானே. இந்த உடல் தகுதி பரிசோதனை எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை யாராவது விளக்குவார்களா?

தற்போது  பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப்போட்டிகள் நடந்து வருகின்றது ஓட்டத்தில் பங்கு பற்ற சில உடல் தகமைகள் வேண்டும் அதாவது அவர்கள் மூச்சுகளை (ஈ. சி. ஜீ , பிறசர் , செக் பண்ணுவார்கள் , எக்ஸ்ரே எடுப்பார்கள் கால்களில் ஏதாவது முறிவுகள் இருக்கிறதா இல்லையா எனப்பார்ப்பதற்கு கடந்த வருடத்தில் பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டியில் பங்கு பற்றி மாணவர்களுக்கான மரதன் ஓட்டப்போட்டியில் பங்கு பற்றிய மாணவர் இறந்த பின்னர் அரசு இதை கட்டாயமாக உடல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மாணவர்களுக்கும் பாடசாலை நிர்வாகத்தும் கட்டாயமாக அறிவித்துள்ளது . சுற்று நிருபம் அனுப்பி வணங்காமுடி 

On 2/2/2020 at 4:02 PM, கிருபன் said:

7 மணியில்  இருந்து மாலை 7 மணி வரை வைத்தியசாலையில் மறிக்கப்பட்டிருக்கின்றனர். இது குறித்து சில பெற்றோர் வைத்தியசாலைக்குச் சென்று  கேட்டபோதும் அவர்கள் ஏமாற்றப்பட்டனர்.

இது ஏதோ ஒரு மாஸ்டர் பிளானோட நடந்திருக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2020 at 7:21 AM, vanangaamudi said:

பெண் பிள்ளைகள் எதற்காக ஆண் வைத்தியரிடம் பரிசோதனை செய்ய செல்லவேண்டும். பெண் வைத்தியர்களை அழைக்கலாம்தானே. இந்த உடல் தகுதி பரிசோதனை எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை யாராவது விளக்குவார்களா?

நான் விளக்கி இருந்தேன். மட்டுறுத்துனர்களுக்கு பிடிக்கவில்லை - தூக்கிவிட்டார்கள். தணிக்கை உள்ள இடங்களில் அறிவுப் பஞ்சம் தவிர்க்க முடியாதது இல்லையா?

On 2/2/2020 at 10:18 PM, தனிக்காட்டு ராஜா said:

தற்போது  பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப்போட்டிகள் நடந்து வருகின்றது ஓட்டத்தில் பங்கு பற்ற சில உடல் தகமைகள் வேண்டும் அதாவது அவர்கள் மூச்சுகளை (ஈ. சி. ஜீ , பிறசர் , செக் பண்ணுவார்கள் , எக்ஸ்ரே எடுப்பார்கள் கால்களில் ஏதாவது முறிவுகள் இருக்கிறதா இல்லையா எனப்பார்ப்பதற்கு கடந்த வருடத்தில் பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டியில் பங்கு பற்றி மாணவர்களுக்கான மரதன் ஓட்டப்போட்டியில் பங்கு பற்றிய மாணவர் இறந்த பின்னர் அரசு இதை கட்டாயமாக உடல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மாணவர்களுக்கும் பாடசாலை நிர்வாகத்தும் கட்டாயமாக அறிவித்துள்ளது . சுற்று நிருபம் அனுப்பி வணங்காமுடி 

உண்மை தான்.
மாணவிகளை பெண் வைத்தியர் பரிசோதிப்பது தான் முறையானது.
பெண் வைத்தியர் இல்லை என்றால் பெண் தாதியர் கட்டாயம் கூட இருக்க வேணும்.
அதுக்கு கூட பெண் ஆசிரியர்களை மாணவிகளுடன் அனுப்பியிருக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கேடு கெட்ட ஜென்மங்களோ தெரியவில்லை ....

இயக்ககங்கள் அங்கு சுட்டார்கள் இங்கு சுட்டார்கள் என்று 
கூப்பாடு போடும் ஆட்களையும் சேர்த்து சுட்டால்தான் நாடு உருப்படும்.

இப்படியான பிசாசுகள் வாழும் நாட்டில் எத்தனை பேரை சுடவேண்டும் 
என்பதை இன்றைய செய்திகள் சொல்லி நிற்கின்றன 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வைத்தியரின்... பெயரை,  சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, நாறடிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Rajesh said:

உண்மை தான்.
மாணவிகளை பெண் வைத்தியர் பரிசோதிப்பது தான் முறையானது.
பெண் வைத்தியர் இல்லை என்றால் பெண் தாதியர் கட்டாயம் கூட இருக்க வேணும்.
அதுக்கு கூட பெண் ஆசிரியர்களை மாணவிகளுடன் அனுப்பியிருக்க வேணும்.

தற்போது இருப்பவர்கள் உன்மையான குரு அல்ல குரு என்ற போர்வையில் ஒரு சிலரை தவிர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.