Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சவேந்திர சில்வாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய சஜித்

Featured Replies

sajith-22.jpg

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச தனது ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்நின்று செயற்பட்ட தளபதிகளில் ஒருவராவார்.

அந்தவகையில் நாடு என்ற ரீதியில் நாம் அவருக்கு ஆதரவாக செயற்பட வேண்டும்” என  சஜித் பதிவேற்றியுள்ளார்.

இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது.

அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் இவ்விடயம் தொடர்பான அறிவித்தலை நேற்று முன்தினம் விடுத்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் குறித்த செயற்பாட்டுக்கு இலங்கை கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

sajith-3.jpg

http://athavannews.com/சவேந்திர-சில்வாவுக்கு-ஆத/

 
  • கருத்துக்கள உறவுகள்

சஜித் பிரேமதாசாவின் உண்மை முகம் இது தான். 

சிங்களவர்கள் எல்லாருமே தமிழர்களின் அழிவை உள்ளூர ரசிப்பவர்கள். 

2 hours ago, nedukkalapoovan said:

சஜித் பிரேமதாசாவின் உண்மை முகம் இது தான். 

சிங்களவர்கள் எல்லாருமே தமிழர்களின் அழிவை உள்ளூர ரசிப்பவர்கள். 

இது மிக மிக தவறான வாதம்,சஜித் இப்படி தான் கூற முடியும் அவர் வேறு மாதிரி அறிக்கை விட்டால் தென் இலங்கையில் ஒரு வாக்கு கூட விழாது. எங்கட தமிழ் மக்களும் கொஞ்சமாவது அரசியல் யதார்த்தங்களை அறிந்து நடப்பதுவே  சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Dash said:

இது மிக மிக தவறான வாதம்,சஜித் இப்படி தான் கூற முடியும் அவர் வேறு மாதிரி அறிக்கை விட்டால் தென் இலங்கையில் ஒரு வாக்கு கூட விழாது. எங்கட தமிழ் மக்களும் கொஞ்சமாவது அரசியல் யதார்த்தங்களை அறிந்து நடப்பதுவே  சிறந்தது.

இப்ப சஜித் இப்படி சொன்னதால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை..???!

சஜித் சிங்கள மக்களின் வாக்குகளை இப்படி போலியாகப் புகழ்ந்து தான் கவர வேண்டும் என்றால்.. அவரின் அரசியல் எதிர்காலத்துக்காக அவர் தமிழ் மக்களுக்கு ஒரு குண்டூசி தானும் வழங்க முடியாது. இது தான் சொறீலங்காவின் இன்றைய யதார்த்தம். இதனை எப்படி தமிழ் மக்கள் கடந்து முன்னேறுவது..??!

7 minutes ago, nedukkalapoovan said:

இப்ப சஜித் இப்படி சொன்னதால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை..???!

சஜித் சிங்கள மக்களின் வாக்குகளை இப்படி போலியாகப் புகழ்ந்து தான் கவர வேண்டும் என்றால்.. அவரின் அரசியல் எதிர்காலத்துக்காக அவர் தமிழ் மக்களுக்கு ஒரு குண்டூசி தானும் வழங்க முடியாது. இது தான் சொறீலங்காவின் இன்றைய யதார்த்தம். இதனை எப்படி தமிழ் மக்கள் கடந்து முன்னேறுவது..??!

அப்படியாயின் மாற்றம் வர வேண்டியது சஜித்திடம் இருந்து அல்ல சிங்கள மக்களிடம் இருந்து....அதே போல் சஜித் தமிழருக்கு என்ன செய்தார் என்றால் வரும் தேர்தலில் மஹிந்த அடுத்த தேர்தலில் 66.66 %  மேல் எடுத்தால் அதனால் வரப் போகும் பின் விளைவுகளை முழு நாடும் அனுபவிக்க வேண்டி வரும். நல்லாட்ச்சியில் இலங்கையின் நிதி நிலை தேறி வந்த நிலையில் தான் கோத்தா வந்து வரிகளை குறைத்து பொருளாதாரத்தை பாதாளத்துக்குள் செல்ல வழி வகுத்திருக்கிறார், அதே போல் மக்கள் மறந்தாலும் இவர்களே அதீத இனவாதத்தை விதைத்து வருகின்றனர் அதால் இவற்றை தடுத்தாலே அது சஜித்தால் விளையும் நன்மையே....!!!!

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Dash said:

அப்படியாயின் மாற்றம் வர வேண்டியது சஜித்திடம் இருந்து அல்ல சிங்கள மக்களிடம் இருந்து....அதே போல் சஜித் தமிழருக்கு என்ன செய்தார் என்றால் வரும் தேர்தலில் மஹிந்த அடுத்த தேர்தலில் 66.66 %  மேல் எடுத்தால் அதனால் வரப் போகும் பின் விளைவுகளை முழு நாடும் அனுபவிக்க வேண்டி வரும். நல்லாட்ச்சியில் இலங்கையின் நிதி நிலை தேறி வந்த நிலையில் தான் கோத்தா வந்து வரிகளை குறைத்து பொருளாதாரத்தை பாதாளத்துக்குள் செல்ல வழி வகுத்திருக்கிறார், அதே போல் மக்கள் மறந்தாலும் இவர்களே அதீத இனவாதத்தை விதைத்து வருகின்றனர் அதால் இவற்றை தடுத்தாலே அது சஜித்தால் விளையும் நன்மையே....!!!!

அப்போ கூட்டமைப்பு எதற்காக இவரை ஆதரித்து பிரச்சாரமும் செய்தது

6 minutes ago, விசுகு said:

அப்போ கூட்டமைப்பு எதற்காக இவரை ஆதரித்து பிரச்சாரமும் செய்தது

நான் சஜித்தை பற்றி குறிப்பிடவில்லை, கோத்தா வந்தால் வரப்போகும் பாதகமான விளைவுகளையே குறிப்பிட்டுள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

அப்படியாயின் மாற்றம் வர வேண்டியது சஜித்திடம் இருந்து அல்ல சிங்கள மக்களிடம் இருந்து....அதே போல் சஜித் தமிழருக்கு என்ன செய்தார் என்றால் வரும் தேர்தலில் மஹிந்த அடுத்த தேர்தலில் 66.66 %  மேல் எடுத்தால் அதனால் வரப் போகும் பின் விளைவுகளை முழு நாடும் அனுபவிக்க வேண்டி வரும். நல்லாட்ச்சியில் இலங்கையின் நிதி நிலை தேறி வந்த நிலையில் தான் கோத்தா வந்து வரிகளை குறைத்து பொருளாதாரத்தை பாதாளத்துக்குள் செல்ல வழி வகுத்திருக்கிறார், அதே போல் மக்கள் மறந்தாலும் இவர்களே அதீத இனவாதத்தை விதைத்து வருகின்றனர் அதால் இவற்றை தடுத்தாலே அது சஜித்தால் விளையும் நன்மையே....!!!!

சஜித்தால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை..??!

கோத்தா கொடியவன் என்றால்... சஜித் கெட்டவன். அவ்வளவும் தான்.

மாறி மாறி இவர்களுக்கு வாக்குப் போட்டு சிங்கள தேசம் சீரழிவதற்கு நாம் எதற்கு வருந்தனும்.

எமக்குள்ள பிரச்சனை.. எம்மை அழித்தவர்கள் தண்டிக்கப்படுவதும்.. எமது மக்களுக்கு நீதியும் நட்ட ஈடும் கிடைப்பதோடு..  எமது தாயகம் சுயநிர்ணயம் உலகால் அங்கீகரிப்படுவதுமே ஆகும். இதில் கோத்தா.. சஜித் வேறுவேறில்லை. 

7 minutes ago, nedukkalapoovan said:

சஜித்தால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை..??!

கோத்தா கொடியவன் என்றால்... சஜித் கெட்டவன். அவ்வளவும் தான்.

மாறி மாறி இவர்களுக்கு வாக்குப் போட்டு சிங்கள தேசம் சீரழிவதற்கு நாம் எதற்கு வருந்தனும்.

எமக்குள்ள பிரச்சனை.. எம்மை அழித்தவர்கள் தண்டிக்கப்படுவதும்.. எமது மக்களுக்கு நீதியும் நட்ட ஈடும் கிடைப்பதோடு..  எமது தாயகம் சுயநிர்ணயம் உலகால் அங்கீகரிப்படுவதுமே ஆகும். இதில் கோத்தா.. சஜித் வேறுவேறில்லை. 

அப்ப யாருக்கு வாக்களிக்கலாம் ...?? அதே போல் சஜித் கெட்டவன் என்பதை எதை வைத்து குறிப்பிடுகிறீர்கள், எம்மை அழித்தவர்களை தண்டிக்க போவது யார் ? நட்ட ஈடு பெற்று தரப்போவது யார் ..? அதற்காக போராடப் போவது  யார்??

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Dash said:

அப்ப யாருக்கு வாக்களிக்கலாம் ...?? அதே போல் சஜித் கெட்டவன் என்பதை எதை வைத்து குறிப்பிடுகிறீர்கள், எம்மை அழித்தவர்களை தண்டிக்க போவது யார் ? நட்ட ஈடு பெற்று தரப்போவது யார் ..? அதற்காக போராடப் போவது  யார்??

எங்களை அழிக்க சிங்களவனுக்கு யார் முண்டுகொடுத்தார்களோ அவர்கள் தான்.

இன்று அவர்களில் ஒரு தரப்பு உண்மையை ஏற்றுக் கொள்கிறது.. நடந்தது பெரும் மனித உரிமை மீறல்... போர்க்குற்றம் என்று. ஆனால் சிங்களவனோ.. அது கோத்தா.. சஜித் ஆகட்டும் சொல்வது பயங்கரவாத அழிப்பு... மனிதபிமான நடவடிக்கை என்று.

முதலில் நாங்கள் சிங்களவனின் நடிப்பு.. நாடகத்துக்குள் இருந்து வெளி வரனும். எந்தச் சிங்களவனுக்கு வாக்குப் போட்டாலும்.. நமக்கு ஒரு நன்மையும் இல்லை. தொடர்ந்து ஏமாற்றப்படுவதிலும்..

சிங்களவன் எமக்கு எதிராக.. நிற்க துணை நின்றோரை.. நோக்கியே நாம் எமது கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும். அவர்கள் இன்றேல்.. சிங்களவன் எம்மை அழித்திருக்கவோ.. ஆக்கிரமித்திருக்கவோ முடியாது.

அதைவிடுத்து.. கோத்தா.. சஜித்.. சரத் பொன்சேகா என்று எம்மை அழித்தவர்களுக்கே.. அல்லது அதற்கு துணை நின்றோருக்கே.. எம் மக்களின் வாக்கைப் போடென்று கேட்பது போல் கொடுமை இந்த உலகில் வேறெதும் இல்லை. 

3 minutes ago, nedukkalapoovan said:

எங்களை அழிக்க சிங்களவனுக்கு யார் முண்டுகொடுத்தார்களோ அவர்கள் தான்.

இன்று அவர்களில் ஒரு தரப்பு உண்மையை ஏற்றுக் கொள்கிறது.. நடந்தது பெரும் மனித உரிமை மீறல்... போர்க்குற்றம் என்று. ஆனால் சிங்களவனோ.. அது கோத்தா.. சஜித் ஆகட்டும் சொல்வது பயங்கரவாத அழிப்பு... மனிதபிமான நடவடிக்கை என்று.

முதலில் நாங்கள் சிங்களவனின் நடிப்பு.. நாடகத்துக்குள் இருந்து வெளி வரனும். எந்தச் சிங்களவனுக்கு வாக்குப் போட்டாலும்.. நமக்கு ஒரு நன்மையும் இல்லை. தொடர்ந்து ஏமாற்றப்படுவதிலும்..

சிங்களவன் எமக்கு எதிராக.. நிற்க துணை நின்றோரை.. நோக்கியே நாம் எமது கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும். அவர்கள் இன்றேல்.. சிங்களவன் எம்மை அழித்திருக்கவோ.. ஆக்கிரமித்திருக்கவோ முடியாது.

அதைவிடுத்து.. கோத்தா.. சஜித்.. சரத் பொன்சேகா என்று எம்மை அழித்தவர்களுக்கே.. அல்லது அதற்கு துணை நின்றோருக்கே.. எம் மக்களின் வாக்கைப் போடென்று கேட்பது போல் கொடுமை இந்த உலகில் வேறெதும் இல்லை. 

என்னை அழித்தவனை   நோக்கி நியாயம் கேட்பதில் எந்த பிரியோசனமும் இல்லை. முதலில் நாம் செய்ய வேண்டியது எம்மை பொருளதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கால் ஊன்ற வேணும் அதன் பின்னர் தான் எதையும் செய்யலாம். அதை விட சஜித் அழித்தவர் என எதை வைத்த்ய் குறிப்பிடுகிறீர்கள் அதற்கான சில ஆதாரங்களை முன் வைத்தாலாவது கொஞ்சமாவது பிரியோசனமாக  இருக்கும்...!!!

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Dash said:

என்னை அழித்தவனை   நோக்கி நியாயம் கேட்பதில் எந்த பிரியோசனமும் இல்லை. முதலில் நாம் செய்ய வேண்டியது எம்மை பொருளதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கால் ஊன்ற வேணும் அதன் பின்னர் தான் எதையும் செய்யலாம். அதை விட சஜித் அழித்தவர் என எதை வைத்த்ய் குறிப்பிடுகிறீர்கள் அதற்கான சில ஆதாரங்களை முன் வைத்தாலாவது கொஞ்சமாவது பிரியோசனமாக  இருக்கும்...!!!

சும்மா பொருளாதார ரீதியில் அரசியல் ரீதியில் கால் ஊன்ற வேண்டும் என்று எழுதலாம். ஆனால்.. இன்றைய ஆக்கிரமிப்புச் சூழலில் தாயகத்தில்.. எம்மவர்களின் எந்த எழுச்சியும் பல்வேறு வடிவங்களில் கட்டுப்படுத்தப்படுவதோடு.. நாம் நிமிர்வதற்குள்.. எம் முழு தேசமும்.. சிங்கள மற்றும் இஸ்லாமிய மயமாகிவிடும். 

சஜித் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் மக்களுக்காக ஒரு வார்த்தையும் தயவாகப் பேசியது கிடையாது. மாறாக.. பயங்கரவாத அழிப்பு என்று தமிழர்களை அழிப்பதை நியாயப்படுத்திக் கொண்டு இருந்தவர். பாராளுமன்றில்.. அவசரகாலச் சட்டம்.. பயங்கரவாத தடைச் சட்டம் என்று எல்லா சிங்கள ஆதிக்க இனவழிப்பு சட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்து வந்த ஒருவர்.

இப்போ.. முழு உலகுக்கும் தெரிந்த.. ஒரு போர்க்குற்றவாளிக்கு மனித உரிமை மீறலாளருக்கு.. வக்காளத்துக்கு வேறு வாங்குகிறார். இது போதாது.. சஜித் யாரென்று இனம் காண. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

இது மிக மிக தவறான வாதம்,சஜித் இப்படி தான் கூற முடியும் அவர் வேறு மாதிரி அறிக்கை விட்டால் தென் இலங்கையில் ஒரு வாக்கு கூட விழாது. எங்கட தமிழ் மக்களும் கொஞ்சமாவது அரசியல் யதார்த்தங்களை அறிந்து நடப்பதுவே  சிறந்தது.

 

3 hours ago, Dash said:

அப்படியாயின் மாற்றம் வர வேண்டியது சஜித்திடம் இருந்து அல்ல சிங்கள மக்களிடம் இருந்து....அதே போல் சஜித் தமிழருக்கு என்ன செய்தார் என்றால் வரும் தேர்தலில் மஹிந்த அடுத்த தேர்தலில் 66.66 %  மேல் எடுத்தால் அதனால் வரப் போகும் பின் விளைவுகளை முழு நாடும் அனுபவிக்க வேண்டி வரும். நல்லாட்ச்சியில் இலங்கையின் நிதி நிலை தேறி வந்த நிலையில் தான் கோத்தா வந்து வரிகளை குறைத்து பொருளாதாரத்தை பாதாளத்துக்குள் செல்ல வழி வகுத்திருக்கிறார், அதே போல் மக்கள் மறந்தாலும் இவர்களே அதீத இனவாதத்தை விதைத்து வருகின்றனர் அதால் இவற்றை தடுத்தாலே அது சஜித்தால் விளையும் நன்மையே....!!!!

டாஸ் ஐயா  இலங்கையின் வரலாற்றை மனதில் இருத்தி அதன் வழி பதிலிறுப்பது நல்லது. 

இனவாதியல்லாத ஓர் சிங்கள அரசியல்வாதியைத்தானும் உங்களால் காட்ட முடியுமா ?

அதுவரையாவது சஜித்துக்கு வெள்ளையடிப்பதை நிறுத்திவைக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

1) பிரதான அரசியல் கட்சியின் தலைமைப் (?) பொறுப்பில் இருக்கும் ஒருவரின் எதிர்வினை இப்படித்தான் இருக்கலாம் என்பதற்காக 

2) இவர் இனவாதியல்ல என்பது

சரியான பார்வை அல்ல.

 

57 minutes ago, Dash said:

என்னை அழித்தவனை   நோக்கி நியாயம் கேட்பதில் எந்த பிரியோசனமும் இல்லை. முதலில் நாம் செய்ய வேண்டியது எம்மை பொருளதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கால் ஊன்ற வேணும் அதன் பின்னர் தான் எதையும் செய்யலாம். அதை விட சஜித் அழித்தவர் என எதை வைத்த்ய் குறிப்பிடுகிறீர்கள் அதற்கான சில ஆதாரங்களை முன் வைத்தாலாவது கொஞ்சமாவது பிரியோசனமாக  இருக்கும்...!!!

அரசியல்வாதிகள் களத்தில் நின்றுதான் அழிக்க வேண்டுமா ? 

உண்மையில் உங்கள் கேள்வி இதே அர்த்தத்தில் விடுத்தீர்களா அல்லது வேறு  ஏதும்  தொக்கு நிற்கிறதா ?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

சஜித்தால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை..??!

கோத்தா கொடியவன் என்றால்... சஜித் கெட்டவன். அவ்வளவும் தான்.

மாறி மாறி இவர்களுக்கு வாக்குப் போட்டு சிங்கள தேசம் சீரழிவதற்கு நாம் எதற்கு வருந்தனும்.

எமக்குள்ள பிரச்சனை.. எம்மை அழித்தவர்கள் தண்டிக்கப்படுவதும்.. எமது மக்களுக்கு நீதியும் நட்ட ஈடும் கிடைப்பதோடு..  எமது தாயகம் சுயநிர்ணயம் உலகால் அங்கீகரிப்படுவதுமே ஆகும். இதில் கோத்தா.. சஜித் வேறுவேறில்லை. 

 அமெரிக்க அரசுக்கு இருவருமே ஆதரவளிப்பார்கள் என்று அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. ஆகவே, ராஜபக்சவை 2015லும் பின்னர்   2019லும் ஆட்சிக்கு கொண்டு வருவதை விரும்பிய தமிழ் உணர்வாளர்கள் பலர் எதிர்பார்த்த காலம் வந்துள்ளது போல தெரிகிறது.

 

அமரிக்கா தனது நலன் கருதி ஈழத்தமிழரை ஆதரிக்கும் சாத்தியம் தெரிகிறது. இந்த ஆதரவின் ஆழம் சிங்களவரின் அமெரிக்க எதிர்ப்பின் ஆழத்திலும் சீனாவின் ஸ்ரீ லங்கா மீதான விருப்பின் ஆழத்திலும் தங்கி இருக்கிறது. இந்த ஆழங்களை அதிகரிக்க செய்யும் முயற்சி முக்கியமானது. இந்த ஆழங்கள் உச்ச நிலையை அடைந்தால் இந்திய எதிர்ப்பையும் மீறி அமேரிக்கா ஒரு பொம்மை ஈழ அரசை தமிழ்ப் பகுதிகளில் நிறுவி நாடு கடந்த அரசை நாடு உள்ள அரசாக மாற்றி தனது தேவைகளை பூர்த்தி செய்யும் சாத்தியம் வெகுதூரத்தில் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

 அமெரிக்க அரசுக்கு இருவருமே ஆதரவளிப்பார்கள் என்று அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. ஆகவே, ராஜபக்சவை 2015லும் பின்னர்   2019லும் ஆட்சிக்கு கொண்டு வருவதை விரும்பிய தமிழ் உணர்வாளர்கள் பலர் எதிர்பார்த்த காலம் வந்துள்ளது போல தெரிகிறது.

 

அமரிக்கா தனது நலன் கருதி ஈழத்தமிழரை ஆதரிக்கும் சாத்தியம் தெரிகிறது. இந்த ஆதரவின் ஆழம் சிங்களவரின் அமெரிக்க எதிர்ப்பின் ஆழத்திலும் சீனாவின் ஸ்ரீ லங்கா மீதான விருப்பின் ஆழத்திலும் தங்கி இருக்கிறது. இந்த ஆழங்களை அதிகரிக்க செய்யும் முயற்சி முக்கியமானது. இந்த ஆழங்கள் உச்ச நிலையை அடைந்தால் இந்திய எதிர்ப்பையும் மீறி அமேரிக்கா ஒரு பொம்மை ஈழ அரசை தமிழ்ப் பகுதிகளில் நிறுவி நாடு கடந்த அரசை நாடு உள்ள அரசாக மாற்றி தனது தேவைகளை பூர்த்தி செய்யும் சாத்தியம் வெகுதூரத்தில் தெரிகிறது.

கிறீமியா (Crimia) வை இரஸ்யா இணைத்துக் கொண்டதுபோல வட கிழக்கை இந்தியா தன்னுடன் இணைத்து கொள்ளக்கூடிய சாத்தியக் கூறுகள் வெளித் தெரிவதாக எனது நண்பர் கூறுகிறார். இதற்கு மேற்குலகு ஆதரவளிக்கும் என்றும் எதிர்வு கூறுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kapithan said:

கிறீமியா (Crimia) வை இரஸ்யா இணைத்துக் கொண்டதுபோல வட கிழக்கை இந்தியா தன்னுடன் இணைத்து கொள்ளக்கூடிய சாத்தியக் கூறுகள் வெளித் தெரிவதாக எனது நண்பர் கூறுகிறார். இதற்கு மேற்குலகு ஆதரவளிக்கும் என்றும் எதிர்வு கூறுகிறார். 

இந்தியா நேரடியாக தலையிடும் அளவுக்கு பலம் பொருந்திய நாடாக இன்று இல்லை. பாகிஸ்தானில் இருந்து பங்களாதேக்ஷ்யை பிரித்த காலத்து இந்தியா இன்று இல்லை. இதனிலும் பார்க்க, போர்க்குற்றங்களை காரணம் காட்டி நாடுகடந்த அரசை தூண்டிவிட்டு அமெரிக்கா அதனது பின்னணியில் அதனது தேவைகளை பெற்றுக்கொள்ளும் சாத்தியமே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஆதரவுக்குள் தமிழர்கள் செல்வதையும் ஹிந்தியா விரும்பாது. 

அதேவேளை ஹிந்தியாவை தாண்டிய தெற்காசிய ஆசிய பசுபிக் விரிவாக்கம் அமெரிக்காவுக்கு சீனச் சவாலை சந்திக்க தேவை.

அதேபோல்.. ஹிந்தியாவையும் அமெரிக்கா பிராந்தியத்தின்.. தனிப்பெரும் சக்தியாக இருக்க அனுமதிக்காது. 

அந்த வகையில்... 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nedukkalapoovan said:

அமெரிக்க ஆதரவுக்குள் தமிழர்கள் செல்வதையும் ஹிந்தியா விரும்பாது. 

அதேவேளை ஹிந்தியாவை தாண்டிய தெற்காசிய ஆசிய பசுபிக் விரிவாக்கம் அமெரிக்காவுக்கு சீனச் சவாலை சந்திக்க தேவை.

அதேபோல்.. ஹிந்தியாவையும் அமெரிக்கா பிராந்தியத்தின்.. தனிப்பெரும் சக்தியாக இருக்க அனுமதிக்காது. 

அந்த வகையில்... 

தமிழர்கள் எப்போதும் போல கறி வேப்பிலையாக பாவிக்கப்பட்டு தூக்கி எறியப்படுவார்கள் ?

41 minutes ago, கற்பகதரு said:

இந்தியா நேரடியாக தலையிடும் அளவுக்கு பலம் பொருந்திய நாடாக இன்று இல்லை. பாகிஸ்தானில் இருந்து பங்களாதேக்ஷ்யை பிரித்த காலத்து இந்தியா இன்று இல்லை. இதனிலும் பார்க்க, போர்க்குற்றங்களை காரணம் காட்டி நாடுகடந்த அரசை தூண்டிவிட்டு அமெரிக்கா அதனது பின்னணியில் அதனது தேவைகளை பெற்றுக்கொள்ளும் சாத்தியமே தெரிகிறது.

ஆனால் இந்தியாவின் நகர்வுகளை உற்ருக் கவனித்தால் தென் இந்தியாவிலும் இலங்கையின் வட கிழக்கிலும், குறிப்பாக வடக்கிலும் வேறு ரூபம் எடுப்பதாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்னதான் நடக்கும் கெரியா சொல்லுங்கோ.இருப்புகொள்ளுதில்லை.

3 hours ago, சுவைப்பிரியன் said:

அப்ப என்னதான் நடக்கும் கெரியா சொல்லுங்கோ.இருப்புகொள்ளுதில்லை.

Dash  அவர்கள் யதார்த்தமான வாதத்தைத்தான்  வைத்தார்। இலங்கையில் உள்ள நிலைமை அப்படி। எவ்வளவுதான் தமிழ் வாக்குகள் கிடைத்தாலும் சிங்களவர்களின் ஆதரவில்லாமல் ஆட்சியை பிடிக்க முடியாது।

இருக்கிற பிசாசில் எது நல்ல பிசாசு என்பதுதான் எமது தெரிவு। இல்லாவிடடாள் இருக்கிறதையும் இழக்க வேண்டியதுதான்। சஜித்தை பொறுத்தளவில் தமிழரை ஆதரிப்பவர் என்று சொல்ல முடியாது। அப்படி செய்வதாக இருந்தால் தனது அரசியலுக்காகத்தான் அப்படி செய்வார்। ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும் , அவருடைய தந்தையார் புலிகளினால் கொல்லப்பட்டார்। எனவே அவருக்குள் ஒரு காயம் இருந்துகொண்டே இருக்கும்।

அமெரிக்கா எதாவது ஒரு காரியம் செய்யுமா இருந்தால் அது தனக்கு சாதகமான விளைவை தருவதாக இருக்க வேண்டும்। இதட்கு பின்னால் நிறைய காய் நகர்த்தல்கள் இருக்கின்றன। அத்துடன் சவேந்திர சில்வா சொல்லி இருக்கிறார் தனக்கோ , தனது குடும்பத்தினருக்கோ அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று। எனவே சவேந்திர சில்வா அல்ல இங்கு பிரச்சினை। ஓர் போர் குற்றவாளியை இலங்கை அரசு ராணுவ தளபதியாக நியமித்திருக்கிறது என்பதுதான் பிரச்சினை।

 இது வருகிறதான  மனித உரிமைகள் பேரவையில் எழுப்பப்படலாம்। அமெரிக்கா ஏன் இப்போது இந்த பிரச்சினையை எழுப்பியது? தனது ராணுவ தந்திரோபாயத்தை பலப்படுத்த இலங்கையூடாக நிறையவே செய்ய வேண்டி இருக்கிறது। ரணிலின் ஆட்சி  காலத்தில் செய்ய முட்பட்டதை ராஜபக்சவின் செய்ய விடவில்லை। இவர்கள் ஆட்சியில் இப்படியான பயமுறுதல்களூடாகவே தனது காரியத்தை செய்ய முட்படுகிறது।

 மேலும் கோத்தாவின் குடியுரிமை சம்பந்தமான பெயர் பட்டியலில் இன்னும் கோத்தாவின் பெயர் வரவில்லை। எனவே அமெரிக்கா ஒரு நோக்குடன்தான் செயல்படுகிறதே ஒழிய தமிழர்களுக்கு உரிமையை பெற்றுக்கொடுக்க அல்ல। 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

அப்ப என்னதான் நடக்கும் கெரியா சொல்லுங்கோ.இருப்புகொள்ளுதில்லை.

இது தொலைகாட்சி சீரியல் மாதிரி தொடர்ந்து நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Dash said:

நான் சஜித்தை பற்றி குறிப்பிடவில்லை, கோத்தா வந்தால் வரப்போகும் பாதகமான விளைவுகளையே குறிப்பிட்டுள்ளேன்

அதே தான்  ஐயா

சஜித்துக்கு வாக்களிக்காதீர்கள் என்ற போது அப்போ  கோத்தாவை ஆதரிக்கின்றீர்களா  என்றீர்கள்???

தமிழருக்கு சிங்களமே தலமையும் கதியும்  என்பது  போல....

அதை  தாண்டி நாம் சிந்திக்க  முடியாதா???

28 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இது தொலைகாட்சி சீரியல் மாதிரி தொடர்ந்து நடக்கும்.

அதை தாண்டி  தமிழர்கள் சிந்திப்பார்களா????

சவேந்திர சில்வா சட்டவிரோத கொலைகளை செய்த ஒரு போர்க்குற்றவாளி என்று அமெரிக்கா அறிவிச்சுள்ள நிலைல, அந்த பேயை  சஜித் ஆதரிச்சு அறிக்கைவிட்டுள்ள நிலைல சஜித் என்ற பேயின் பின்னால அலைந்து திரிந்த சுமந்திரன்-சம்பந்தன் குரூப்பும், மனோகனேஷன்  குரூப்பும் தொடர்ந்தும் சஜித் பின்னால அலையப்போகினமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Gowin said:

சவேந்திர சில்வா சட்டவிரோத கொலைகளை செய்த ஒரு போர்க்குற்றவாளி என்று அமெரிக்கா அறிவிச்சுள்ள நிலைல, அந்த பேயை  சஜித் ஆதரிச்சு அறிக்கைவிட்டுள்ள நிலைல சஜித் என்ற பேயின் பின்னால அலைந்து திரிந்த சுமந்திரன்-சம்பந்தன் குரூப்பும், மனோகனேஷன்  குரூப்பும் தொடர்ந்தும் சஜித் பின்னால அலையப்போகினமா?

அண்மையில் ஐரோப்பிய பாராளுமன்ற  வளாகத்தில்

பயங்கரவாதம்  சம்பந்தமாக  நடந்த கருத்தரங்கில்

புலம் பெயர் தமிழர்கள் ஐநா முன்றலில் கூடுவது ஒருவகை சுற்றுலா அவர்களுக்கு என்ற கருத்து

அங்கத்தவர்களால் வைக்கப்பட்டதாம்

நானறிய இந்தக்கருத்தை முதன் முதலில் பொது வெளியில் வைத்தவர் சுமேந்திரன் அவர்கள்  தான்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் போன்றவர்களை அகற்ற தாயகத்தில் உள்ள மக்களாலதான் முடியும்.இங்கையிருந்து குத்தி முறிஞ்சு என்னத்தை செய்ய.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.