Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவுக்கு வைரமுத்து எழுதிய கவிதை

Featured Replies

 

கொரோனா வைரஸ் தொற்று  காரணமாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த கவிதை இதோ!

"உணவை மருந்தாக்கு
 உடம்பை இரும்பாக்கு

மூச்சுப் பைகளில்
 நம்பிக்கை நிரப்பு
 நோய்த் தடுப்பாற்றல்
 பெருக்குதல் சிறப்பு

கோவிட் - 19
கொல்லுயிரியை
 எழுந்து எதிர்கொள்
 இந்திய நாடே!"

உணவை மருந்தாக்கு
 உடம்பை இரும்பாக்கு

 மூச்சுப் பைகளில்
 நம்பிக்கை நிரப்பு
 நோய்த் தடுப்பாற்றல்
 பெருக்குதல் சிறப்பு

 கோவிட் - 19
கொல்லுயிரியை
 எழுந்து எதிர்கொள்
 இந்திய நாடே
!

#coronavirusindia #CoronaVirusUpdate
— வைரமுத்து (@vairamuthu) March 4, 2020

http://www.tamilmirror.lk/cinema/கரனவகக-வரமதத-எழதய-கவத/54-246394

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, ampanai said:

 

கொரோனா வைரஸ் தொற்று  காரணமாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த கவிதை இதோ!

"உணவை மருந்தாக்கு
 உடம்பை இரும்பாக்கு

மூச்சுப் பைகளில்
 நம்பிக்கை நிரப்பு
 நோய்த் தடுப்பாற்றல்
 பெருக்குதல் சிறப்பு

கோவிட் - 19
கொல்லுயிரியை
 எழுந்து எதிர்கொள்
 இந்திய நாடே!"

உணவை மருந்தாக்கு
 உடம்பை இரும்பாக்கு

 மூச்சுப் பைகளில்
 நம்பிக்கை நிரப்பு
 நோய்த் தடுப்பாற்றல்
 பெருக்குதல் சிறப்பு

 கோவிட் - 19
கொல்லுயிரியை
 எழுந்து எதிர்கொள்
 இந்திய நாடே
!

#coronavirusindia #CoronaVirusUpdate
— வைரமுத்து (@vairamuthu) March 4, 2020

http://www.tamilmirror.lk/cinema/கரனவகக-வரமதத-எழதய-கவத/54-246394

ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பிரச்சனை... 😂

  • கருத்துக்கள உறவுகள்

உணவு விசமாச்சு 

உடம்பு எலும்பாச்சு

 

மூச்சுப் பைகளில் 

கரிவாயு நிறையுது 

நோய் தடுக்க முடியாமல் 

நொந்துபோய் திரிகின்றோம் 

 

கோவிட்டை  எதிர் கொண்டால் 

எதிர் கொள்பவனை  கொல்லாதோ 

செத்தவனை தொலைத்து விட்டு 

இருப்பவனை கணக்கெடுப்போம் 

 

கொல்லுயிரியை 

கொலை செய்ய 

குடுத்தவன்தான் 

மருந்திடனும்.......!

 

அதிகப்பிரசங்கித்தனம்தான்  ஐயா பொறுத்துக்கணும்.....!

😂  😂

  • கருத்துக்கள உறவுகள்

உணவே மருந்து என்பதில் மாற்றுக்கருத்து இல்லை; ஆனால் எல்லாருக்கும் அந்தக்கொடுப்பனவு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2020 at 6:53 PM, ampanai said:

இந்த நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

maxresdefault.jpg

ஓர் சுவிற் ஸ்ராலே சுவிற் சாப்பிடுகிறதே.. ( ! )..👌

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2020 at 12:35 PM, suvy said:

அதிகப்பிரசங்கித்தனம்தான்  ஐயா பொறுத்துக்கணும்.....!

Suvy, உங்கள் கவிதை நன்றாகத்தனே இருக்கிறது.

கடைசியாக நீங்கள் எழுதியது உங்களது தன்னம்பிக்கையை கேள்விகுள்ளாக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

Suvy, உங்கள் கவிதை நன்றாகத்தனே இருக்கிறது.

கடைசியாக நீங்கள் எழுதியது உங்களது தன்னம்பிக்கையை கேள்விகுள்ளாக்கிறது.

நன்றி....நன்றி  கவி அருணாசலம்......!

திரு வைரமுத்து அவர்கள் கவிப்பேரரசு ஆவார்.எனக்குப் மிகவும் பிடித்த  மரியாதைக்கு உரிய கவிஞர்.....அவர் கவிதையை  உல்டா  பண்ணுவது ஒரு மாதிரி இருந்தது.அதுதான்......!   😁

நன்றி சகோதரி காவலூர் கண்மணி.....!

  • கருத்துக்கள உறவுகள்

உணவை மருந்தாக்கு,

முடியவில்லையா? குறைந்தபட்சம் ஒரு பாடகியையாவது விருந்தாக்கு.

மூச்சுப் பைகளில் நம்பிக்கை நிரப்பு,

முடியவில்லையா? குறைந்தபட்சம் (கொ)கலைஞருக்கு ஜால்ரா போட்டு, உன் கல்லாவையாவது நிரப்பு.

நோய்த்தடுப்பாற்றல்

பெருக்குதல் சிறப்பு

இனம் விற்று, பொருள் ஈட்டல் 

அதைவிடச் சிறப்பு.

கோவிட்19 கொல்லுயுரியை

எழுந்து எதிர்கொள் இந்திய நாடே.

இதோ முள்ளிவாய்கால் நேரம்

கண்ணையும், காதையும், வாயையையும் மூடி நான் அணிந்திருந்த முகக்கவசம்.

இதை அணிந்து கொண்டு,

கோவிட்19 கொல்லுயுரியை

எழுந்து எதிர்கொள் இந்திய நாடே.

-கவிஞர் பித்தளை முத்து-

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2020 at 12:35 PM, suvy said:

உணவு விசமாச்சு 

உடம்பு எலும்பாச்சு

 

மூச்சுப் பைகளில் 

கரிவாயு நிறையுது 

நோய் தடுக்க முடியாமல் 

நொந்துபோய் திரிகின்றோம் 

 

கோவிட்டை  எதிர் கொண்டால் 

எதிர் கொள்பவனை  கொல்லாதோ 

செத்தவனை தொலைத்து விட்டு 

இருப்பவனை கணக்கெடுப்போம் 

 

கொல்லுயிரியை 

கொலை செய்ய 

குடுத்தவன்தான் 

மருந்திடனும்.......!

 

அதிகப்பிரசங்கித்தனம்தான்  ஐயா பொறுத்துக்கணும்.....!

😂  😂

வைரமுத்துவை.... விட,
நம்ம,  யாழ். களத்து  சுவி. அருமையாக... கவிதை எழுதியிருக்கிறார்.

சுவியின்... இந்தக் கவிதையை, வைரமுத்துக்கு....  அனுப்பினால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

உணவை மருந்தாக்கு,

முடியவில்லையா? குறைந்தபட்சம் ஒரு பாடகியையாவது விருந்தாக்கு.

மூச்சுப் பைகளில் நம்பிக்கை நிரப்பு,

முடியவில்லையா? குறைந்தபட்சம் (கொ)கலைஞருக்கு ஜால்ரா போட்டு, உன் கல்லாவையாவது நிரப்பு.

நோய்த்தடுப்பாற்றல்

பெருக்குதல் சிறப்பு

இனம் விற்று, பொருள் ஈட்டல் 

அதைவிடச் சிறப்பு.

கோவிட்19 கொல்லுயுரியை

எழுந்து எதிர்கொள் இந்திய நாடே.

இதோ முள்ளிவாய்கால் நேரம்

கண்ணையும், காதையும், வாயையையும் மூடி நான் அணிந்திருந்த முகக்கவசம்.

இதை அணிந்து கொண்டு,

கோவிட்19 கொல்லுயுரியை

எழுந்து எதிர்கொள் இந்திய நாடே.

-கவிஞர் பித்தளை முத்து-

கோசான்..... வைரத்தையும், பித்தளையையும்  ஒன்றாக   கலக்கி விட்டீங்க . 😎
அப்பிடிஏ .... ஷாக்... ஆகி, போய் விட்டேன்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

வைரமுத்துவை.... விட,
நம்ம,  யாழ். களத்து  சுவி. அருமையாக... கவிதை எழுதியிருக்கிறார்.

சுவியின்... இந்தக் கவிதையை, வைரமுத்துக்கு....  அனுப்பினால் நல்லது.

அப்படியே பித்தளை முத்தின் பிதற்றலையும் அனுப்பி விடுங்கள். உறைக்கிறதா பார்ப்போம் 😂

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

திரு வைரமுத்து அவர்கள் கவிப்பேரரசு ஆவார்.எனக்குப் மிகவும் பிடித்த  மரியாதைக்கு உரிய கவிஞர்.....அவர் கவிதையை  உல்டா  பண்ணுவது ஒரு மாதிரி இருந்தது.அதுதான்......!   😁

கண்ணதாசன் கவியரசு என்றால் கவிப்பேரரசு என்று இவர் அவரை விட மேலே போய் நிற்பார்.

உல்டா என்பதை பலர் செய்கிறார்கள்.  தனது பாடல் வரிகளை இந்த இலக்கியத்தில் இருந்துதான் எடுத்தேன் என்று கண்ணதாசன் சொல்லுவார். கவிப்பேரரசு சொல்லமாட்டார்.

கவிப்பேரரசு வின் உல்டாவுக்கு ஒரு உதாரணம்

ஆலங்குடி சோமு எம்ஜிஆருக்காக எழுதிய பாடல்,

“ஆண்டவன் உலகத்தின் முதலாளி

அவனுக்கு நான் ஒரு தொழிலாளி...” என்றிருக்கும்.

கவிப்பேரரசு ரஜனிகாந்திற்கு இப்படி எழுதியிருப்பார்,

“ஒருவன் ஒருவன் முதலாளி

மற்றவர் எல்லாம் தொழிலாளி..”

பாரதிதாசன் இப்படி ஒரு கவிதை எழுதியிருந்தார்

அதோ பார் கடல்மகள்

தன்னுடை களைந்து

பொன்னுடை பூண்டாள்

என்னென்று கேள்

நிலவுப் பெண் ஒளிகொட்டிற்று

பாரதிதாசனின் கவிதையை கவிப்பேரரசு உல்டா பண்ணியிருந்தால் எப்படி எழுதியிருப்பார்?

13 hours ago, goshan_che said:

உணவை மருந்தாக்கு,

முடியவில்லையா? குறைந்தபட்சம் ஒரு பாடகியையாவது விருந்தாக்கு.

 

13 hours ago, goshan_che said:

இதோ முள்ளிவாய்கால் நேரம்

கண்ணையும், காதையும், வாயையையும் மூடி நான் அணிந்திருந்த முகக்கவசம்.

இதை அணிந்து கொண்டு,

கோவிட்19 கொல்லுயுரியை

எழுந்து எதிர்கொள் இந்திய நாடே.

 

Goshan-Che  பாராட்டுகள். கவிதை அருமை

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kavi arunasalam said:

கண்ணதாசன் கவியரசு என்றால் கவிப்பேரரசு என்று இவர் அவரை விட மேலே போய் நிற்பார்.

உல்டா என்பதை பலர் செய்கிறார்கள்.  தனது பாடல் வரிகளை இந்த இலக்கியத்தில் இருந்துதான் எடுத்தேன் என்று கண்ணதாசன் சொல்லுவார். கவிப்பேரரசு சொல்லமாட்டார்.

கவிப்பேரரசு வின் உல்டாவுக்கு ஒரு உதாரணம்

ஆலங்குடி சோமு எம்ஜிஆருக்காக எழுதிய பாடல்,

“ஆண்டவன் உலகத்தின் முதலாளி

அவனுக்கு நான் ஒரு தொழிலாளி...” என்றிருக்கும்.

கவிப்பேரரசு ரஜனிகாந்திற்கு இப்படி எழுதியிருப்பார்,

“ஒருவன் ஒருவன் முதலாளி

மற்றவர் எல்லாம் தொழிலாளி..”

பாரதிதாசன் இப்படி ஒரு கவிதை எழுதியிருந்தார்

அதோ பார் கடல்மகள்

தன்னுடை களைந்து

பொன்னுடை பூண்டாள்

என்னென்று கேள்

நிலவுப் பெண் ஒளிகொட்டிற்று

பாரதிதாசனின் கவிதையை கவிப்பேரரசு உல்டா பண்ணியிருந்தால் எப்படி எழுதியிருப்பார்?

 

Goshan-Che  பாராட்டுகள். கவிதை அருமை

நன்றி. உங்கள் தூரிகையின் பரம ரசிகன் நான்.

பிகு: இவர்கள் இருவரையும் விட, பாரதி, பாரதிதாசனுக்கு பின் தமிழின் முதன்மை கவி என்றால் அது பட்டுக்கோட்டைதான் என்பது என் தாழ்மையான கருத்து.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

 

பாரதிதாசன் இப்படி ஒரு கவிதை எழுதியிருந்தார்

அதோ பார் கடல்மகள்

தன்னுடை களைந்து

பொன்னுடை பூண்டாள்

என்னென்று கேள்

நிலவுப் பெண் ஒளிகொட்டிற்று

பாரதிதாசனின் கவிதையை கவிப்பேரரசு உல்டா பண்ணியிருந்தால் எப்படி எழுதியிருப்பார்?

 

இப்போதான் உங்கள் பதிவில் இருந்த கேள்வியை கண்டேன்.

பதில் கீழே, சரியா?

இது ஒரு பொன்மாலை பொழுது...
வானமகள், நாணுகிறாள்...
வேறு உடை, பூணுகிறாள்...
இது ஒரு பொன்மாலை பொழுது...
 

கடலை, வானம் என திருப்பி போட்டு முதல் பாடலிலே வேலையை ஆரம்பித்துவிட்டார்😂

இதெல்லாம் inspiration தெரியுமா? கொப்பி அல்ல😂

Edited by goshan_che

ஆதி இந்தப்பக்கம்   கவி....கள் கவனம் கண்டியோ

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

இதெல்லாம் inspiration தெரியுமா? கொப்பி அல்ல😂

Suvyஇன் காதிலும் போட்டு வையுங்கள் Goshan-ch

10 hours ago, ஆதிவாசி said:

ஆதி இந்தப்பக்கம்   கவி....கள் கவனம் கண்டியோ

ஆதிவாசிக்குத்தான் ‘கவிகள்’ உடனான பழக்கங்கள் அதிகம்🤪

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2020 at 7:26 PM, சுவைப்பிரியன் said:

உணவே மருந்து என்பதில் மாற்றுக்கருத்து இல்லை; ஆனால் எல்லாருக்கும் அந்தக்கொடுப்பனவு இல்லை.

பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்த கதை. சோதனைமேல் சோதனை போதுமப்பா.:100_pray:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.