Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“எனக்கு சிரிப்பாக வருகிறது” – விக்கியின் வாரமொரு கேள்வி பதில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் சைவத் தமிழர் பற்றி குறிப்பிட வேண்டி வந்தது ஆதித் தமிழர் பற்றி பேசுகையிலேயே! கிறிஸ்துவுக்கு முன்னிருந்து தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் அண்மையில் வெளியாகியுள்ளன.

இலங்கையில் அக்கால கட்டத்தில் இருந்த ஒரே சமயம் சைவமே. இலங்கையைப் பாதுகாக்கும் ஐந்து ஈஸ்வரங்கள் அன்று தொடக்கம் இன்று வரையில் இங்கு இருந்து வருகின்றன. அவை கீரிமலையில் நகுலேஸ்வரம், மன்னாரில் திருக்கேதீஸ்வரம், திருகோணமலையில் திருகோணேஸ்வரம், சிலாபத்தில் முன்னேஸ்வரம் மற்றும் தெற்கில் மாத்தறையில் தொண்டேஸ்வரம் ஆவன. தொண்டேஸ்வரம் இருந்த இடத்தில் தான் தற்போது தென்துறை (Dondura தேனாவரம்) விஷ்ணு கோயில் இருக்கின்றது.

ஆதி சைவத்தமிழர் இந்த நாட்டில் வாழ்ந்த காலத்தில் (பௌத்தம் வரமுன்பு) பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் எதுவும் இருக்கவில்லை. சிங்களமொழி பேசுவோர் இருக்கவில்லை. இந்த நாட்டின் ஆதிக்குடிகள் சைவத்தமிழரே என்ற சரித்திர உண்மையைத்தான் நான் கூறியுள்ளேன்.

இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் கூட்டணி தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாரம் ஒரு கேள்வி பதில் அறிக்கையில் இதனை அவர் தெரிவித்தார். மேலும்,

  • IMG_20200306_182356.png
  • IMG_20200306_182417.png
  • IMG_20200306_182433.png
  • IMG_20200306_182452.png
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பிழம்பு said:

வாரம் ஒரு கேள்வி பதில் அறிக்கையில் இதனை அவர் தெரிவித்தார்.

சொல்ல வந்த தகவல்கள் எல்லாம் சரி ; இவரும் என்ன முரசொலி கருணாநிதி கணக்கா இறங்கிட்டாரு .. 😢

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியரை மதவெறியனாக காட்டி,  மதவெறியை தூண்டி வாக்கு அள்ள நினைப்பவரின் இலக்கு  இந்தக் கேள்விகளின் மூலம் தெரிகிறது. வெளிநாட்டில் உள்ள தமிழர் தம் பாரம்பரிய உடைகளை உடுத்துவது பொட்டு வைப்பதும் அவர்கள் இனவெறியினாலா.

விக்னேஸ்வரன் கேள்வி-பதில் என்ற காலத்துக்கு தேவையற்ற வியாக்கியானங்களில் **** **** காலத்தைக் கடத்துகிறார்.

இதுவும் தமிழரை ஏமாற்றுதலிலே முடியும்.

ஏற்கனவே மாணவர்கள் முயற்சியில் தன்னாலும் துரோகியாக செயற்பட முடியும் என வெளிப்படுத்திய விக்னேஸ்வரன், சுய பாண்டித்தியத்தை காட்ட தமிழகத்தில் தேவையற்ற அறிக்கைகள் மூலம் பகைமையை விரிவுபடுத்தி பொறுப்பற்றவராகவும் செயற்பட முடியும் என வெளிப்படுத்திய விக்னேஸ்வரன், இன்னமும் சரியான பாதையில் பயணிக்க தொடங்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பிழம்பு said:

இலங்கையில் அக்கால கட்டத்தில் இருந்த ஒரே சமயம் சைவமே. இலங்கையைப் பாதுகாக்கும் ஐந்து ஈஸ்வரங்கள் அன்று தொடக்கம் இன்று வரையில் இங்கு இருந்து வருகின்றன. அவை கீரிமலையில் நகுலேஸ்வரம், மன்னாரில் திருக்கேதீஸ்வரம், திருகோணமலையில் திருகோணேஸ்வரம், சிலாபத்தில் முன்னேஸ்வரம் மற்றும் தெற்கில் மாத்தறையில் தொண்டேஸ்வரம் ஆவன. தொண்டேஸ்வரம் இருந்த இடத்தில் தான் தற்போது தென்துறை (Dondura தேனாவரம்) விஷ்ணு கோயில் இருக்கின்றது.

ஆதி சைவத்தமிழர் இந்த நாட்டில் வாழ்ந்த காலத்தில் (பௌத்தம் வரமுன்பு) பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் எதுவும் இருக்கவில்லை. சிங்களமொழி பேசுவோர் இருக்கவில்லை. இந்த நாட்டின் ஆதிக்குடிகள் சைவத்தமிழரே என்ற சரித்திர உண்மையைத்தான் நான் கூறியுள்ளேன்.

இலங்கையின் ஆதிக்குடிகள் சைவர்கள் என்பதற்கான ஆதாரத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இந்த சைவர்கள் தமிழர்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. ஆதிகால சைவ மன்னனான இராவணணனை உலகறிந்நதே வடமொழி காப்பியமான இராமாயணத்தில் இருந்து. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றன மணிமேகலை இலங்கையை பௌத்த நாடாகவும் நாகர்களின் பிரதேசமாகவும் காட்டுகிறது. நாகர்கள் தமிழ் பேசியதாக எங்கும் ஆதாரம் இல்லை. 

8 hours ago, கற்பகதரு said:

இலங்கையின் ஆதிக்குடிகள் சைவர்கள் என்பதற்கான ஆதாரத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இந்த சைவர்கள் தமிழர்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. ஆதிகால சைவ மன்னனான இராவணணனை உலகறிந்நதே வடமொழி காப்பியமான இராமாயணத்தில் இருந்து. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றன மணிமேகலை இலங்கையை பௌத்த நாடாகவும் நாகர்களின் பிரதேசமாகவும் காட்டுகிறது. நாகர்கள் தமிழ் பேசியதாக எங்கும் ஆதாரம் இல்லை. 

ஆதிக்குடிகள் யார் ? இயக்கர் மற்றும் நாகர்கள்.  ஆதிக்குடிகள் சைவர்கள் என்கிறீர்கள். 

அப்படியானால் அது சைவ நாடாகத்தானே இருந்திருக்க முடியும் ?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

இலங்கையின் ஆதிக்குடிகள் சைவர்கள் என்பதற்கான ஆதாரத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இந்த சைவர்கள் தமிழர்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. ஆதிகால சைவ மன்னனான இராவணணனை உலகறிந்நதே வடமொழி காப்பியமான இராமாயணத்தில் இருந்து. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றன மணிமேகலை இலங்கையை பௌத்த நாடாகவும் நாகர்களின் பிரதேசமாகவும் காட்டுகிறது. நாகர்கள் தமிழ் பேசியதாக எங்கும் ஆதாரம் இல்லை. 

சிங்களவர்களிலும் சைவர்கள் இருந்தார்கள் அதே போன்று தமிழர்களிலும் பெளத்தர்கள் இருந்தார்கள் .....இதை ஏற்று கொள்ள முடியாமா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

ஆதிக்குடிகள் யார் ? இயக்கர் மற்றும் நாகர்கள்.  ஆதிக்குடிகள் சைவர்கள் என்கிறீர்கள். 

அப்படியானால் அது சைவ நாடாகத்தானே இருந்திருக்க முடியும் ?

நிச்சயமாக இலங்கை ஆதிகாலத்தில் சைவ நாடாக இருந்ததற்கு தாராளமாக ஆதாரங்கள் உள்ளன.

சிங்கள பௌத்த தீவிரவாத ஆய்வாளர்கள் கூட இதை மறுக்க முடியாது. நாகர்கள் மத்தியில் நாகவழிபாடு முதன்மையாக இருந்தது. நாகபூசணி அம்மன் வழிபாடு இதன் அங்கமாக இருக்கலாம். ஆனால் விக்னேஸ்வரன் சொல்வதுபோல இந்த ஆதிகால மக்கள் தமிழர்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.

12 hours ago, கற்பகதரு said:

இலங்கையின் ஆதிக்குடிகள் சைவர்கள் என்பதற்கான ஆதாரத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இந்த சைவர்கள் தமிழர்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. ஆதிகால சைவ மன்னனான இராவணணனை உலகறிந்நதே வடமொழி காப்பியமான இராமாயணத்தில் இருந்து. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றன மணிமேகலை இலங்கையை பௌத்த நாடாகவும் நாகர்களின் பிரதேசமாகவும் காட்டுகிறது. நாகர்கள் தமிழ் பேசியதாக எங்கும் ஆதாரம் இல்லை. 

 

3 hours ago, putthan said:

சிங்களவர்களிலும் சைவர்கள் இருந்தார்கள் அதே போன்று தமிழர்களிலும் பெளத்தர்கள் இருந்தார்கள் .....இதை ஏற்று கொள்ள முடியாமா?

உண்மையை ஏற்றுக்கொள்ளும் நேர்மை உள்ளவர்கள் இதை நிச்சயமாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கற்பகதரு said:

விக்னேஸ்வரன் சொல்வதுபோல இந்த ஆதிகால மக்கள் தமிழர்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.

விக்னேஸ்வரனே இந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த பாண்டியரின் வாரிசுகள் பலர் இங்கு வசிக்கிறார்கள் என்று  இவேறு ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.