Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினியை திரும்ப கண்டது சந்தோசம் 

  • Replies 391
  • Views 59.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

 மூலையில் Author   அருகாமையில் மூன்று புள்ளிகள் உள்ளது அதை அழுத்துங்கள்.

மூண்டு  புள்ளிகளை கிளிக் பண்ணினால் "Share" எண்டுதான் வருகுது குசா அண்ணா 

2 hours ago, ரதி said:

நில்மினியை திரும்ப கண்டது சந்தோசம் 

நன்றி ரதி. புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள். எப்படி சுகங்கள்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, nilmini said:

மூண்டு  புள்ளிகளை கிளிக் பண்ணினால் "Share" எண்டுதான் வருகுது குசா அண்ணா 

ஓ...அப்பிடியெண்டால் பெரிய மெக்கானிட்டை(மோகன்) முறைப்பாடு குடுக்க வேணும் எண்டு நினைக்கிறன்...

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா 

எனக்கொரு கேள்வி. உங்களின் அபிப்பிராயத்தைத் (opinion) கூறுங்கள்.

எனது தாயாருக்கு கடந்த 20 வருடங்களாக நீரிழிவு நோய் இருந்து வருகிறது. ஏறக்குறைய 8/9 மாதங்களின் முன்னர் வைத்தியர் அவரது சிறுநீரகங்கள் இரண்டும் ஏறக்குறைய செயலிழந்துவிட்டதாகக்(20%)  கூறிவிட்டார்கள். அதன் பின்னர் எனதி தாயாரிடம் இஞ்சி ஒத்தடம் பிடிக்கும்படி(சிறுநீரகங்கள் இருக்குமிடத்தில் -முதுகில்) கூறினேன்(எங்கோ வாசித்த நினைவு). 

சிறிது காலத்தின் பின்னர் அவரின் செயற்பாட்டில் நல்ல மாறுதல் தெரிந்தது. தற்போது அவரின் நாளாந்தச் செயற்பாடுகளில் மிகவும் ஆரோக்கியமான மாறுதல்களை காணமுடிகிறது (ஆறு மாதங்களின் பின்னர்).

ஆனால் அண்மையில் எடிக்கப்பட்ட சிறுநீர்ப் பரிசோதனையில் சிறுநீரகங்களின் செயற்றிறன் மேலும் குறைந்து விட்டதாக வைத்தியர் கூறியுள்ளார். ஆனால் அம்மா மிகவும் உற்சாகமாக உள்ளார். அவரின் செயற்பாடுகள் மிகவும் நல்ல நிலையில் உள்ளன.

உண்மையில் என்ன நடக்கிறதென புரியவில்லை.

உங்கள் opinion கருத்து என்ன  ?

On 2/10/2020 at 11:45, nilmini said:

சூரியன் உச்சத்தில் இருக்கும் போது  நின்றால்  1 மணிதியாலபடி ஒரு கிழமையில் 4 நாள்கள்  போதுமானது. அந்த நேரத்தில்தான்  கதிரியக்கம் அதிகமாக இருந்து தோல் வைட்டமின்  தயாரிப்பதை விரைவுபடுத்தும். 

வணக்கம் நில்மினி அக்கா,

எனது குடும்ப வைத்தியர் எத்தனை தடவை விற்றமின் D இன் அவசியத்தை வலியுறுத்தியும், இந்த கொறோனா லொக்டௌன் காலத்தில் தான் இது பற்றிய விழிப்புணர்வு அதிகமாயிற்று. அதே சமயம் வெளியிலும் அதிகம் போக முடியாத நிலை. இருந்தாலும் வீட்டு வளவுக்குள்ளே நீங்கள் கூறியது போல என்னால் இயன்றவரை நேரடிச் சூரிய ஒளி படும்படியாக நடக்கும் பழக்கத்தை ஆரம்பித்து ஒரு சில வாரங்களில் என் மனதும், உடலும் முன்னரை விடத் தெம்பாக இருப்பதை உணர்ந்தேன். 

இருந்தும் ஒரு கேள்வி அக்கா, இங்கு அவுஸில் கான்சர் பயம் காரணமாக கோடையில் அதிகம் sunscreen பயன்படுத்துவோம். இது விற்றமின் D உடலுக்குப் போதுமான அளவு கிடைப்பதைத் தடுக்கிறது என எங்கேயோ கேட்ட ஞாபகம். இது உண்மையா? அப்படியாயின் விற்றமின் Dஐ கான்சர் ஆபத்தில்லாமல் போதியளவு பெறுவது எப்படி எனக் கூறுவீர்களா? நன்றி 😊

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மல்லிகை வாசம் said:

வணக்கம் நில்மினி அக்கா,

எனது குடும்ப வைத்தியர் எத்தனை தடவை விற்றமின் D இன் அவசியத்தை வலியுறுத்தியும், இந்த கொறோனா லொக்டௌன் காலத்தில் தான் இது பற்றிய விழிப்புணர்வு அதிகமாயிற்று. அதே சமயம் வெளியிலும் அதிகம் போக முடியாத நிலை. இருந்தாலும் வீட்டு வளவுக்குள்ளே நீங்கள் கூறியது போல என்னால் இயன்றவரை நேரடிச் சூரிய ஒளி படும்படியாக நடக்கும் பழக்கத்தை ஆரம்பித்து ஒரு சில வாரங்களில் என் மனதும், உடலும் முன்னரை விடத் தெம்பாக இருப்பதை உணர்ந்தேன். 

இருந்தும் ஒரு கேள்வி அக்கா, இங்கு அவுஸில் கான்சர் பயம் காரணமாக கோடையில் அதிகம் sunscreen பயன்படுத்துவோம். இது விற்றமின் D உடலுக்குப் போதுமான அளவு கிடைப்பதைத் தடுக்கிறது என எங்கேயோ கேட்ட ஞாபகம். இது உண்மையா? அப்படியாயின் விற்றமின் Dஐ கான்சர் ஆபத்தில்லாமல் போதியளவு பெறுவது எப்படி எனக் கூறுவீர்களா? நன்றி 😊

 

வணக்கம் மல்லிகை,

12 ம் பக்கத்தில் ஈழபிரியன் அண்ணாவும், 13 இல் நானும் கேட்ட கேள்விகளையும் அதற்கு நில்மினி அக்காவின் பதிலையும் ஒருக்கா பார்க்கவும்.

 

7 minutes ago, goshan_che said:

வணக்கம் மல்லிகை,

12 ம் பக்கத்தில் ஈழபிரியன் அண்ணாவும், 13 இல் நானும் கேட்ட கேள்விகளையும் அதற்கு நில்மினி அக்காவின் பதிலையும் ஒருக்கா பார்க்கவும்.

 

வணக்கம் கோஷன். இந்தத் திரியை முழுமையாகப் பார்க்கவில்லை. தகவலுக்கு நன்றி.👍 பார்க்கிறேன். 😊

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2020 at 19:30, nilmini said:

சிறி, இப்பவும் லைக், நன்றி போன்றவை இல்லை. எடிட்டும் பண்ணமுடியாமல் இருக்கு. யாரிடம் இதைப்பற்றி கதைக்கலாம்? 

நில்மினி...  உங்களுக்கு ஏற்பட்ட,  தடங்கல்களுக்கு...
நீங்கள், கன காலமாக இங்கு வராமல் இருந்ததால்... ஏற்பட்ட,
யாழ்.களத்தின்..  இணைய பொறிமுறை காரணம் என நம்புகின்றேன்.

அதனைத்தான்.... இங்கு, பல உறவுகளும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
இப்ப... சரி, வந்துட்டதா?
 
எதற்கும்...  நிர்வாகத்தித்திற்கு, உங்கள் சார்பாக.. அறிவித்து விடுகின்றேன்.

தாமதமான.. பதிலுக்கு, மன்னிக்கவும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

ஓ...அப்பிடியெண்டால் பெரிய மெக்கானிட்டை(மோகன்) முறைப்பாடு குடுக்க வேணும் எண்டு நினைக்கிறன்...

சின்ன மெக்கானிக்  சொல்லி பெரிய மெக்கானிக் திருத்தித்தந்து விட்டார்கள் குசா அண்ணா 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

அக்கா 

எனக்கொரு கேள்வி. உங்களின் அபிப்பிராயத்தைத் (opinion) கூறுங்கள்.

எனது தாயாருக்கு கடந்த 20 வருடங்களாக நீரிழிவு நோய் இருந்து வருகிறது. ஏறக்குறைய 8/9 மாதங்களின் முன்னர் வைத்தியர் அவரது சிறுநீரகங்கள் இரண்டும் ஏறக்குறைய செயலிழந்துவிட்டதாகக்(20%)  கூறிவிட்டார்கள். அதன் பின்னர் எனதி தாயாரிடம் இஞ்சி ஒத்தடம் பிடிக்கும்படி(சிறுநீரகங்கள் இருக்குமிடத்தில் -முதுகில்) கூறினேன்(எங்கோ வாசித்த நினைவு). 

சிறிது காலத்தின் பின்னர் அவரின் செயற்பாட்டில் நல்ல மாறுதல் தெரிந்தது. தற்போது அவரின் நாளாந்தச் செயற்பாடுகளில் மிகவும் ஆரோக்கியமான மாறுதல்களை காணமுடிகிறது (ஆறு மாதங்களின் பின்னர்).

ஆனால் அண்மையில் எடிக்கப்பட்ட சிறுநீர்ப் பரிசோதனையில் சிறுநீரகங்களின் செயற்றிறன் மேலும் குறைந்து விட்டதாக வைத்தியர் கூறியுள்ளார். ஆனால் அம்மா மிகவும் உற்சாகமாக உள்ளார். அவரின் செயற்பாடுகள் மிகவும் நல்ல நிலையில் உள்ளன.

உண்மையில் என்ன நடக்கிறதென புரியவில்லை.

உங்கள் opinion கருத்து என்ன  ?

வணக்கம் தம்பி Kapithan,

நீரிழிவு ஒரு நோயே அல்ல. அது உண்மையில் இன்சுலின் குறைபாடு (Type 2 Diabetes). இது border level இல் இருக்கும்போது சுலபமாக மீண்டு வந்துவிடலாம். அந்த சந்தர்ப்பத்தை விட்டுட்டால்  வாழ் நாள் முழுவதும் மருத்துவர்கள் சொல்வதை கவனமாக கேட்டு அதன்படி நடக்க வேணும். மருந்துகளை நேரம் தவறாமல் எடுத்து, உடற்பயிற்சி செய்து, சாப்பாட்டு பழக்கவழக்கங்களையும் மாற்றவேணும். மிகவும் ஆரம்ப கால டியபெடீஸ் என்றால் கடினமான lifestyle மாற்றத்தால் மருந்து எடுக்காமலேயே மாற்றலாம் என்று ஆராச்சிகள் கூறுகின்றன. கட்டுப்படுத்தப்படாத டியபெடீஸ் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளையும் பாதிக்கும். அந்தவகையில் சிறுநீரகம் மிகவும் பாதிப்படையும். ஆங்கில மருத்துவ முறையில் இதற்கு இப்போதைக்கு சிகிச்சைகள் இல்லை. ஆனால் ஆயுர்வேத முறையில் இஞ்சி ஒத்தடம், அல்லது இஞ்சித்தேநீர் நல்ல பலன்களை தருகிறது என்று கேள்விப்பட்டேன். அமெரிக்காவிலும் பலர் இதனை செய்கிறார்கள். 
உங்களது அம்மாவுக்கு சிறுநீரகம் பாதித்ததால் அதற்காக ஏதாவது மருந்து எடுத்தார்களா?  ஏனெனில் சில மருந்துகள் சிறுநீரகத்தை மேலும் பாதிக்கும். ஒரு வைத்தியரின் ஆலோசனையுடன் நிற்காமல் பல நாடுகளில் இருக்கும் வைத்தியர்களிடம் ஆலோசனைகள் எடுப்பது நல்லது.
உங்களது அம்மா, மாச்சத்து சாப்பிடுவதை மிக மிக குறைத்து, நடை பயிற்சி அல்லது ஏதாவது உடற்பயிற்சி தினமும் செய்து வந்தால் மேலு நல்ல பலனை பெறலாம். இஞ்சி ஒத்தடம் மற்றும் green tea with ginger தொடர்ந்து செய்து வரவும். இஞ்சி, சிறுநீரக குழாய்களை சுத்திகரித்து, நீரிழிவால் புண்பட்ட திசுக்களை திருத்தி, நச்சு பொருட்களை அகற்றி சிறுநீரகத்தை மிக நல்ல வகையில் செயல்பட வைக்கும்.
உங்களது அம்மா இந்த முறைகளாலும், மருந்துகளாலும் டயாபடீஸ் ஐயும் அதன் தாக்கங்களையும் குறைத்து நீண்ட ஆயுள் வாழ வாழ்த்துகிறேன்.  

அன்புடன் நில்மினி அக்கா 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎01‎-‎01‎-‎2021 at 22:17, nilmini said:

 

நன்றி ரதி. புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள். எப்படி சுகங்கள்? 

நான் சுகமாய் இருக்கிறேன் ...நீங்களும் ,உங்கள் குடும்பத்தாரும் சுகமாய் இருப்பீர்கள் என நம்புகிறேன் ...உங்களுக்கு இனிய புது வருட நாள் வாழ்த்துக்கள் 

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி இங்கை தான் எங்கையோ பச்சை குத்தின மாதிரி இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, சுவைப்பிரியன் said:

நில்மினி இங்கை தான் எங்கையோ பச்சை குத்தின மாதிரி இருக்கு.

இந்த பச்சை குத்தை பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கோ சுவைப்பிரியன் 

மருத்துவர்கள் எடுத்ததெல்லாவற்றுக்கும் மருந்து எழுதுவது ஏனென்று கு சா அண்ணா பல மாதங்களுக்கு முன்பு கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் போடவில்லை. பாதி எழுதினபடி இருக்கு. மோகன் கேட்ட மடகாஸ்க்கார் பயண அனுபவமும் எழுதகிடக்கு. 
ஆனால் Kapithaan அவரது அம்மாவின் நீரிழிவு பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்து பல நாட்களாகியும் அவர் அதை பார்த்த மாதிரியே தெரியவில்லை. இப்ப பாக்க லைக் ஒன்று போட்டிருக்கிறார் போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nilmini said:

இந்த பச்சை குத்தை பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கோ சுவைப்பிரியன் 

மருத்துவர்கள் எடுத்ததெல்லாவற்றுக்கும் மருந்து எழுதுவது ஏனென்று கு சா அண்ணா பல மாதங்களுக்கு முன்பு கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் போடவில்லை. பாதி எழுதினபடி இருக்கு. மோகன் கேட்ட மடகாஸ்க்கார் பயண அனுபவமும் எழுதகிடக்கு. 
ஆனால் Kapithaan அவரது அம்மாவின் நீரிழிவு பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்து பல நாட்களாகியும் அவர் அதை பார்த்த மாதிரியே தெரியவில்லை. இப்ப பாக்க லைக் ஒன்று போட்டிருக்கிறார் போல இருக்கு.

நான் சொல்ன்னது உங்களை நீன்ட நாட்க்களாக கான வில்லை.நீங்கள் பச்சை போட்டதால் மீன்டும் களத்துக்கு வந்துள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் சக கள உறவுகளுக்கு தெரிவிக்கவே.மற்றும்படி உங்கள் பச்சை பற்றி எந்த விமர்சனமும் இல்லை.தொடர்ந்து இணைந்திருங்கள்.

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2020 at 17:50, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!

ஒரு புதிய சர்ச்சையை உங்கள் முன் வைக்கின்றேன்.நேரமிருக்கும் போது இந்த காணொலியை பாருங்கள். ஆறுதலாக அமைதியாக பதில் அளித்தால் மிகவும் சந்தோசப்படுவேன்.
இன்றைய காலத்தில் மருத்துவம் ஒரு வியாபாரம் என்றே சம்பந்தப்பட்ட வைத்தியர் சொல்ல முனைகின்றார். எனக்கும் நீண்ட காலமாக இந்த வியாபார சந்தேகம் இருக்கின்றது. அதை விட சுருக்கமாக சொல்வதானால்  என்னையே பல இடங்களில் வருமான பொருளாக்கி பதம் பார்த்துள்ளார்கள். உயிருடன், உடல் நலத்துடன் விளையாடியிருக்கின்றார்கள்.இது எனது சொந்த அனுபவம்.

எனது கேள்வி என்னவென்றால் இந்த வியாபார மருத்துவத்தை எப்படி என்னைப்போன்றவர்கள் இனம் கண்டு தப்பித்துக்கொள்ளலாம்?.

கு சா அண்ணாவின் இந்த கேள்விக்கு மறுமொழி போடுகிறேன் என்று சொல்லிவிட்டு அப்படியே கொஞ்சகாலம் மறந்து விட்டேன். பிறகு ஞாபகம் வந்தது ஆனால் கேள்வி என்னவென்று மறந்துவிட்டேன். இன்று இந்த பதிவை பார்க்க நேரிட்டது.

நான் பார்த்தவரையிலும், கேள்விப்பட்டவரையிலும் அமெரிக்க டொக்டர்கள்  தான் அனாவசியமாக மருந்துகள், மற்றும் டெஸ்டுகள் எடுக்கும்படி சொல்லி அவர்கள் சிபாரிசு செய்யும் சில மருந்துகள் மூலம் அந்த மருந்து கம்பெனி அல்லது முகவர்கள் மூலம் மருத்துவர்களுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும். அத்ததுடன் நிறைய பேருக்கு அப்படி வைத்தியர்கள் செய்வது, தாங்கள் நன்றாக் கவனிக்கப்படுகிறோம் என்ற நிலைமையும் இருக்கு.

இந்தக்காரணங்கள் ஓரளவு இருந்தாலும், நான் நினைக்கிறன் முக்கிய காரணம், அநேகமான வைத்தியர்களுக்கு எமக்குள்ள பிரச்ச்னைகளை ஓரிரு டெஸ்டுகளுடன் diagose பண்ண தெரியாது. ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிகளிலும் ஒரு வகுப்பில் குறைந்தது 160 மாணவர்கள் இருப்பார்கள் அதில் முதலாவதாக தேறும் மாணவரும் டொக்டர் தான் கடைசியும் டொக்டர் தான். ஏனெனில் மருத்துக்கல்லூரியில்  எல்லா மாணவர்களும் ஒரே மாதிரிபடிப்பதும் இல்லை. எப்படியோ இழுபட்டு 99 வீதமானவர்களும் மருத்துவாராகத்தான் வெளியில் வருவார்கள்.

மருத்துவருக்கே உரிய அந்த instinct, dedication எல்லோருக்கும் இருப்பதும் இல்லை. அத்துடன் எல்லா மருத்துவர்களும் தமது patientsஐ முழு அர்ப்பணிப்போடு கவனிப்பதும் இல்லை. இப்படி நடப்பதை நான் பார்த்திருந்தாலும், அண்மையில் எமது அம்மா 10 நாட்கள் அவசர சிகிச்சையில் இருந்து பிறகு சாதாரண அறைக்கு மாற்றப்பட்டு வீட்டுக்கு வரும் வரையில் நான் பார்த்த தெல்லாம் ஒரு அதிசயம் போல் இருந்தது. மருத்துவர்கள், தாதிகள், சாப்பாடு கொண்டு வருவோர், கழிவுத்தொழிலாளிகள் எல்லோரும் கடவுள் போல தோன்றினார்கள். அதிலும் ICU வில் அம்மாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தமது அம்மாவுக்கு செய்வதை போல் ஓடி ஓடி விரைந்து அளித்த முதலுதவியால் தான் அம்மா பிழைக்க முடிந்தது.

என்றபடியால் அடிப்படையில் இது ஒரு பெரிய பிரச்னையாக இருந்தாலும், உயிரை காப்பாற்ற என்ற ஒரு நிலை வரும்போது அவர்கள் தம்மை தொழிலுக்காக அர்ப்பணித்து செய்வதை பார்க்கக்கூடியதாக இருக்கிறது. 

நான் போகும் டொக்டர் அலுவலகத்தில் இரண்டு டொக்டர்மார் உள்ளார்கள். நடுத்தர வயது மிகவும் அன்பாக ஆனால் இரண்டு நிமிடம் மட்டுமே கதைத்து நிறைய மருந்து எழுதுவார். மற்ற வயதானவர், 15 நிமிடம் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு கதைத்து மருந்தே எழுத்தமாட்டார். அடுத்த இரண்டு கிழமைக்கு நடந்து, சாப்பாடு பழக்கங்களை மாற்றி தான் சொன்னபடி செய்துவிட்டு மீண்டும் வரும்படி சொல்லுவார். 

ஏனெனில் நிறைய பிரச்சனைகளை சரியான உணவு மற்றும் உடல் பயிற்சியினால் எமது உடல் தானாகவே திருத்தி விடும். எமது முன்னோர்கள் காட்டில் வேட்டையாடி, பின்பு தோட்டம் செய்து, மிகக்குறைவாக உண்டு, குறைந்த நேர நித்திரை கொண்டவர்கள். அந்த genes உடன் பிறந்த எமது உடல்களும் அதையேதான் எதிர்பார்க்கும். 

முடிவு என்னெவென்றால் ஒரு வைத்தியரிடம் மட்டும் போகாமல் அனுபவம் வாய்ந்த, அல்லது எல்லோராலும் விரும்பபப்படும் வைத்தியர் மாரிடம் ஆலோசனை கேட்பது நல்லது

On 2/1/2021 at 10:00, தமிழ் சிறி said:

நில்மினி...  உங்களுக்கு ஏற்பட்ட,  தடங்கல்களுக்கு...
நீங்கள், கன காலமாக இங்கு வராமல் இருந்ததால்... ஏற்பட்ட,
யாழ்.களத்தின்..  இணைய பொறிமுறை காரணம் என நம்புகின்றேன்.

அதனைத்தான்.... இங்கு, பல உறவுகளும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
இப்ப... சரி, வந்துட்டதா?
 
எதற்கும்...  நிர்வாகத்தித்திற்கு, உங்கள் சார்பாக.. அறிவித்து விடுகின்றேன்.

தாமதமான.. பதிலுக்கு, மன்னிக்கவும். :)

இப்ப சரி வந்திட்டுது சிறி. நன்றி

Edited by nilmini

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, nilmini said:

கு சா அண்ணாவின் இந்த கேள்விக்கு மறுமொழி போடுகிறேன் என்று சொல்லிவிட்டு அப்படியே கொஞ்சகாலம் மறந்து விட்டேன். பிறகு ஞாபகம் வந்தது ஆனால் கேள்வி என்னவென்று மறந்துவிட்டேன். என்று இந்த பதிவை பார்க்க நேரிட்டது.

நல்ல தகவல்களுக்கு மிக்க நன்றி சகோதரி. :thumbs_up:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நல்ல தகவல்களுக்கு மிக்க நன்றி சகோதரி. :thumbs_up:

நான் இவரது சில காணொளிகளை பார்த்திருக்கிறேன். மிகவும் பிரயோசனம் ஆண விடயங்களை பற்றி பேசுவார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.