Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளை கருணா அழித்தது போல தமிழரசு கட்சியை சுமந்திரன் அழிக்கிறார்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை கருணா அழித்தது போல தமிழரசு கட்சியை அழிக்கிறார் சுமந்திரன் – மகளிர் அணி குற்றச்சாட்டு.!

tna.jpg

சுமந்திரன் இருக்கும் மட்டும் தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட உப தலைவர் மிதுலை செல்வி ஸ்ரீ பத்மநாதன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கருணா அழித்தது போல் தமிழரசுக் கட்சியையும் ,தமிழ் மக்களையும் அழிக்கும் வகையிலேயே சுமந்திரன் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மிதுலை செல்வி ஸ்ரீ பத்மநாதன் மேலும் தெரிவித்ததாவது…

சுமந்திரன் தான்தோன்றி தனமான முடிவுகள் எடுப்பதை கட்சியில் உள்ள அனைவரும் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் .இவ்வாறு அனைவரும் வேடிக்கை பார்ப்பது ஏன் என்பது தெரியாமல் இருக்கின்றது.

தந்தை செல்வா சொல்லியிருந்தார் "தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என ஆனால் சுமந்திரன் இருக்கும் மட்டும் தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது. யாழ்ப்பாண மக்களை அழிப்பதற்காக சுமந்திரன் உருவாக்கி விடப்பட்டுள்ளாரா என நான் கேட்க விரும்புகின்றேன்.

இதன் போது விமலேஸ்வரி கருத்து தெரிவிக்கையில்..

2010 ஆண்டு சுமந்திரன் இலங்கைத் தமிழரசு கட்சிக்குள் வரும் போது இவருடைய வரவு ஒரு ஆபத்தானது என தான் அன்றே கூறியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சி.விமலேஸ்வரி தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக சுமந்திரன் தேர்தலில் தோல்வியடைவார் எனவும் அவ்வாறு தோல்வியடையும் போது தமிழரசு கட்சி தேசியப்பட்டியலில் இடம் கொடுக்காவிட்டாலும் பெரும்பான்மை சிங்கள கட்சிகள் ஒரு இடத்தை கொடுக்கும் என சி.விமலேஸ்வரி மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.vanakkamlondon.com/tna-13-03-2020/

இவர் யாரோ ? கொழும்பில் தமிழர்களுக்காக கதைத்ததை அல்லது தமிழ் மக்களுக்கு எதாவது உதவி செய்ததை நான் கண்டோ , கேடடாதோ இல்லை। இருந்தாலும் இப்பொழுது உங்களுடைய பிரச்சினை என்ன? கதிரை கிடைக்கவில்லையா?

அவர் தான்தோன்றித்தனமான முடிவு எடுக்கிறார் என்றால் அங்குள்ள மற்ற எல்லோரும் பொண்ணையார்களா? என்ன முடிவு எடுத்தார் என்று கூறினாலும் நல்லது।

மற்றது இப்போது மாற்றுதலமை எண்டு சில கட்சிகள் உருவெடுத்திருக்கின்றன। மக்களும் இதை ஆதரிப்பதாக இணைய தள போராளிகளும் தெரிவிக்கிறார்கள்।  எனவே உங்களுடைய கட்சி அழிந்தால்தானே அப்படி நடக்கும்।

மக்கள் மாற்றுதலைமையை விரும்பும்போது நீங்கள் சொல்லுவதைப்போன்று நடந்தால் நல்லதுதானே? அவர் மாற்றுதலைமையை ஆதரிக்கிறார் என்றால் நாங்களும் ஆதரிப்போம்। இனி சம், சும்மை குற்றம் சொல்லாமல் ஆதரிப்போம்। அப்போதுதான் மாற்றுதலமை உருவாகும்।

6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட உப தலைவர் மிதுலை செல்வி ஸ்ரீ பத்மநாதன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கருணா அழித்தது போல் தமிழரசுக் கட்சியையும் ,தமிழ் மக்களையும் அழிக்கும் வகையிலேயே சுமந்திரன் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வளவு காலமும் சுமந்திரன் செய்துவரும் தமிழின விரோத செயல்களை கண்டும் காணாமல் சுமந்திரன், மாவை சொல்லைக்கேட்டு ஐதேக வுக்கும் ரோஸி சேனநாயக்கவுக்கும் ஆதரவாக செயற்பட்டவரே இந்த மிதுலைசெல்வி ஸ்ரீ பத்மநாதன். அதன்மூலம் கொழும்பு மாநகரசபை உறுப்பினராக முடியும் என முயற்சித்தவர்.

தற்போது சுமந்திரன் இரகசியமாக புதிய பெண் ஒருவரைக் கண்டுபிடித்து பின்கதனால் இரகசியமாக உள்ளே அழைத்து வந்ததால் கடுப்பாகி சுமந்திரன் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.

 

சுமந்திரன் தான் எப்படி இரகசியமாக பின்கதவால் நுழைந்தாரோ அவருக்கு பழக்கமான அதே வழியில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமக்கும் ஒரு பெண்ணை இரகசியமாக பின்கதவால் நுழைந்திருக்கிறார். இதன் மூலம் சுமந்திரனின் சுயரூபம் பற்றிய உண்மைகளை மீண்டும் பலர் கிளற ஆரம்பித்துள்ளனர்.

கடைசில கருணாவையும் சுமந்திரனையும் ஒரே தட்டுல வைச்சாச்சு!
வைச்சது வேறு யாருமில்ல தமிழரசுக் கட்சியின் உபதலைவி ஒராள்.

இணையதள போராளிகள் என்னதான் கூறினாலும் இலங்கை மக்கள்தான் எதையும் தீர்மானிக்க வேண்டும்। வரும் தேர்தல் எல்லாவற்றிட்கும் பதில் சொல்லும்। 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Vankalayan said:

இணையதள போராளிகள் என்னதான் கூறினாலும் இலங்கை மக்கள்தான் எதையும் தீர்மானிக்க வேண்டும்। வரும் தேர்தல் எல்லாவற்றிட்கும் பதில் சொல்லும்। 

இணைய தள போராளிகள் என்று யாரை குறிப்பிடுகின்றீர்கள்? தங்களையும் சேர்த்து தானே? 😎

10 minutes ago, குமாரசாமி said:

இணைய தள போராளிகள் என்று யாரை குறிப்பிடுகின்றீர்கள்? தங்களையும் சேர்த்து தானே? 😎

அவங்க தங்களை இணையத்தள சாத்தான்கள் என்டு தான் நினைக்கிறவை!

😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

அவங்க தங்களை இணையத்தள சாத்தான்கள் என்டு தான் நினைக்கிறவை!

😂

தரம் ! தரம் ! தரம்! 😜

2 hours ago, குமாரசாமி said:

இணைய தள போராளிகள் என்று யாரை குறிப்பிடுகின்றீர்கள்? தங்களையும் சேர்த்து தானே? 😎

இங்கு பிடுங்குப்படும் மிகப் பெரும்பான்மையானோர் இணையத்தளப் போராளிகளே. இதிலென்ன சந்தேகம் சாமியாருக்கு 😀

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் உள்ளே புகுந்த காலம் தொடக்கம் சுமத்திரனுக்கு எதிராக இங்கிருந்த பலரும்  செயற்பட்டார்கள் அன்டிமார்  இப்பத்தான் அவருக்கு   எதிராக நிக்கினம் நாளையே எலும்புத்துண்டு விழுந்தால் மாறிவிடுவினம் . 

On 3/14/2020 at 9:54 PM, குமாரசாமி said:

இணைய தள போராளிகள் என்று யாரை குறிப்பிடுகின்றீர்கள்? தங்களையும் சேர்த்து தானே? 😎

நாங்கள் ஈழத்தில் களத்தியிலும் இருக்கிறோம்। எங்களுக்கு உண்மையன கள நிலவரம் மற்றவர்களைவிட தெரியும்।  பக்கத்தில் உள்ள இந்தியர்களே  உண்மை நிலவரம் தெரியாமல் எழுதுகிறார்கள்। எனவே உங்களுக்கு எங்களைவிட உண்மை நிலவரம் சரியாக தெரியாமல் இருக்கலாம்। எனவே நாங்கள் களத்திலும் இருக்கிறோம் , இனைய தளத்திலும் இருக்கிறோம்। ஒரு சில விளக்கம் குறைந்த, வெற்றுகுண்டுகளை வீசும்  இனைய தள போராளிகளே தவிர வேறொன்றும் இல்லை। 

On 3/15/2020 at 12:31 AM, பெருமாள் said:

அன்டிமார்  இப்பத்தான் அவருக்கு   எதிராக நிக்கினம் நாளையே எலும்புத்துண்டு விழுந்தால் மாறிவிடுவினம் . 

உண்மை தான். இவர்கள் எலும்புத் துண்டைக் கண்டாலே மாறிவிடுவார்கள்.
இல்லை என்றால் இவர்கள் தமிழரசுக் கட்சியில் உபதலைவர் பதவி வகிக்கவும் அதுவும் தமிழரை அழிப்பதற்கு உள்நுழைக்கப்பட்ட சுமந்திரன் போன்ற வைரசுகள் கோலோச்சும் காலத்தில் இருக்கவும் முடியுமா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.