Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சரி இந்துமதம் சாக்கடை அதை ஒழித்த பின் தாயகத்தில் என்ன செய்வதாக உத்தேசம்?

சாக்கடை அழிந்த பின்பு 
சுத்தமாகவும் சுகாதாரமாகவும் 
ஒரு சாதாரண ஆறாறிவு மனிதனாக வாழ்வதுதான்.
இது என்ன கேள்வி? 

  • Replies 130
  • Views 9.6k
  • Created
  • Last Reply
45 minutes ago, Maruthankerny said:

இல்லாத மாயை அழிந்தால்தான் 
நாம் என்ன என்ன அருமைகளை இழந்தோம் என்ற உண்மை தமிழனுக்கு புரியும். 
இந்த சாக்கடைக்குள் அழிந்த தமிழனின் உழைப்புகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை 
அதனால்தான் இப்படி ஒரு மாயையை நம்புகிறீர்கள். 
உங்களுக்கு இந்த நிலைமை எனும்போது ... அப்பாவிகளின் நிலையை யோசித்துப்பாருங்கள்.?

😍 நான் மதத்தை முழுதாக நம்பவும் இல்லை மறுக்கவும் இல்லை.  🤩

ஆனால், எனது கருத்தாடல் என்னைப்பற்றியது அல்ல. எம்மைப்பற்றியது.  

மனிதன் இருக்குவரை மதமும் இருக்கும். ஆனால், அதன் தாக்கம் சமூகத்தில் குறைவடைய பல காரணிகள் உண்டு, 

1. இலங்கை போன்ற மதம் பிடித்த நாட்டில் மாற்றம் முதன்மை மதத்தின் மத்தியில் இருந்து வரவேண்டும். 
2. மாயை எல்லா மதத்திலும் மாறும்பொழுதே உங்கள் கனவு பலிக்கும் 

3. சமூகத்தில் அறிவு , பொருளுதாராம் வளர மதத்தின் தாக்கம் குறையும் 
4. ஆனால், அதனால் முழுமையாக மறைக்க முடியாது ( ஜப்பான், அமெரிக்கா மற்றும் சீன நாடுகள் உதாரணம்)    

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Rajesh said:

நீங்க (அதான் மதமாற்ற கோஷ்டி) முதல்ல சாதி, பிரிவு, பிரதேச வேறுபாடு இல்லை என்டு பச்சைப் பொய்ச் சொல்லிக்கொண்டு சாதி, பிரிவு, பிரதேச வேறுபாடு பார்க்கிற உங்க ஆட்களை திருந்ததுங்கோ பாப்பம். நீங்க திருந்தினா உங்க மதமாற்ற வியாபாரம் செய்ற உங்க ஆட்களால புகுத்தப்பட்ட சாதி, பிரிவு, பிரதேச வேறுபாடுகள் தானா காணாம போய்டும். 

கொஞ்ச நாளுக்கு  முந்தி எனக்கு நல்ல பழக்கமான ஒரு லோயற சந்திக்க அவரட ஒப்பீசுக்கு  போயிருந்தன். கதச்சுக் கொண்டிருக்கேக்க அவற்ர ஸ்ராப் ஒராள் வந்து லோயறட்ட, ஒரு கிளயன்ற்ருக்கு எப்படிச் சொன்னாலும் புரிஞ்சு கொள்ளுரார் இல்லயயெண்டு சொன்னா. லோயரரும் ஆள வரச் சொல்லி திரும்பத்திரும்ப விளங்கப்படுத்திப் பார்த்தார். கிளயன்ருக்கு ஒரு ......... விளங்கயில்ல. கடசியா லோயர் கேட்டார் " தம்பி நீ என்ன படிச்சனீ " 

கிளயன்ரும்  தான் படிச்சத சொன்னார். லோயர் சொன்னார் " நீ கொஞ்சம் கூடப் படிச்சிருக்க வேணும் . அப்பத்தான் நான் சொல்லுறது உனக்கு விளங்கும்."

(உண்மையில் இது நடந்த சம்பவம். லோயர் கதச்ச முறையில கிளயன்ற் அவருக்கு  ஏற்கனவே தெரிஞ்சவர் போல இருந்தது)

எனக்கு ஏனென்று தெரியவில்லை. இந்தக் சம்பவத்த இப்ப  சொல்லவேணும் போல இருந்தது. சொல்லிப்போட்டன். பெரியவா குற கிற நினைக்கப் படாது. 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ampanai said:

😍 நான் மதத்தை முழுதாக நம்பவும் இல்லை மறுக்கவும் இல்லை.  🤩

ஆனால், எனது கருத்தாடல் என்னைப்பற்றியது அல்ல. எம்மைப்பற்றியது.  

மனிதன் இருக்குவரை மதமும் இருக்கும். ஆனால், அதன் தாக்கம் சமூகத்தில் குறைவடைய பல காரணிகள் உண்டு, 

1. இலங்கை போன்ற மதம் பிடித்த நாட்டில் மாற்றம் முதன்மை மதத்தின் மத்தியில் இருந்து வரவேண்டும். 
2. மாயை எல்லா மதத்திலும் மாறும்பொழுதே உங்கள் கனவு பலிக்கும் 

3. சமூகத்தில் அறிவு , பொருளுதாராம் வளர மதத்தின் தாக்கம் குறையும் 
4. ஆனால், அதனால் முழுமையாக மறைக்க முடியாது ( ஜப்பான், அமெரிக்கா மற்றும் சீன நாடுகள் உதாரணம்)    

மனிதனின் அறிவு என்பது லாஜிக் ரீதியாகவே சிந்திப்பது 
லாஜிக் அல்லாத விடயங்கள் ஒரு முழுமையான எண்ண வடிவை 
மனிதனின் அறிவில் பெறுவதில்லை.
ஏன்? எப்படி? எவ்வாறு? எதுக்காக? என்ற வினாக்களுடனும் 
அதற்காகன விடைகளுடனும் பயணிப்பதே மனித அறிவு 

ஏன் பிரபஞ்சம்? ஏன் பிறப்பு? ஏன் இறப்பு?
எனும்போது கடவுள் இலகுவான விடையாக மனித அறிவுக்கு கிட்டுகிறது 
ஏன் கடவுள்?  எனும்போதுதான்  மதங்கள் பிறக்கின்றன 
ஒவ்வொரு மதமும் ஒரு விளக்கத்துடன் வருகிறது.

இந்து என்று ஒரு மதமே இல்லை 
வெள்ளைக்காரன் இந்தியா வந்தபோது பொவுத்தம் இஸ்லாம் கிறிஸ்தவம் கடந்த எல்லாம் 
இந்து என்று அவன்தான் பெயர் சூட்டினான். பிரிஸ்ட்டிஸ் ஆளுமைக்கு உட்படாத பஞ்சாப் சீக்கியர்கள் 
தமது சிக் மதத்தை அதனால்தான் இந்த இந்து என்ற இல்லாத மதத்துக்குள் கொண்டுவரது பாதுக்காக்க முடிந்தது  அவர்கள்மதம் இன்றும் தனித்துவமாக இருக்கிறது. 

தமிழர்களின் சைவம் 1000-1500 வருடங்கள் முன்பே பிழைப்புக்காக வந்த பார்ப்பானின் 
சதியால் அழிய தொடங்கி விட்டது குழுமம் குழுமமாக பாரிய தொடர்புகள் இல்லாமல் மக்கள் வாழ்ந்தது 
அவனுக்கும் வசதியாகி போனது. 
மதங்கள் இருப்பதால் ஏதும் தீமை இருப்பதாக தெரியவில்லை .மதம் பிடித்த மனிதர்களளால்தான் மனிதம் அழிகிறது. இந்து என்று ஒரு மதம் இருந்தால் அதில் தப்பு இல்லை எல்லா மதங்கள்போலவும் சில குறைகள் தவறுகள் இருக்கும் அதை திருத்திக்கொண்டு தொடர முடியும். இங்கு அப்படி ஒன்று இல்லாததுதான் பிரச்சனையே. சைவர்களின் சிவனின் தத்துவம் வேறு .... வைஷ்ணவர்களின் கிருஷ்ண தத்துவத்தின் அடிப்படையே வேறு.இரண்டும் வேறு வேறு என்பதை தென் இந்தியா கடந்தால் தெளிவாக காணலாம்.
தமிழர்கள் எல்லையை கடந்தால் ........பிள்ளையாரின் சொந்த தம்பி முருகனே செத்துவிடுவார் அவரை காண முடியாது. இந்த அரைகுறைகளை மதம் என்று ஒரு அறிவார்ந்த மக்கள் மத்தியில் வாழவைக்க முடியாது.
இதை தொடர்வதென்றால் ஒரே ஒரு வழிதான் உண்டு மக்களை பைத்தியங்களாக கேள்விகள் இல்லாத மூன்று  அறிவு நாலறிவு  நிலையில் வைத்திருக்க வேண்டும். அதைத்தான் பார்ப்பான் தெளிவாக சிந்தித்தது செய்கிறான். தமிழர்களுக்கு ஒரு தன்னார்வ அரசு அமைவதை ஏன் பார்ப்பான் வெறுக்கிறான்? அந்த அரசு மக்களை சிந்தனை நோக்கி தள்ளலாம் எனும் அச்சம்தான். அதனால் சாதாரண மனித அறிவின் லொஜிக் ரீதியான சிந்தனை கூட இல்லாமல் செய்து வைத்திருப்பதால்தான்  ... இலகுவாக  அல்லேலூயா  போன்ற கோஸ்ட்டிகளால் கூட கூட்டி செல்ல முடிகிறது. எத்தனை கத்தோலிக்கர்கள்  முஸ்லிம்கள்  மதம் மாறுகிறார்கள்? அவர்களுக்கு லாஜிக் ரீதியான ஓர் விளக்கம் ஏற்கனவே உண்டு 
எமக்கு கடவுள் இல்லை ... வழிபாட்டு முறைமை இல்லை ........ எதுவித கடமையும் இல்லை 
ஆகவே ஒருவன் ஒரு ஒரு துன்பத்தில் இருக்கும்போது ... இன்னொருவன் வந்து கடவுளை பார் உனக்கு துணையாக இருக்கிறார் எனும்போது அவனுக்கு தன்னம்பிக்கை வருகிறது.
எமக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? பிராமணன் வந்து மணி அடித்து சம்ஸ்கிருதத்தில்  கூப்பிட்டால்தான் எமது பாம்பு கடவுள் பசு கடவுள்களுக்கு கேட்க்கும். 

தமிழ் முருகனுக்கு தமிழ் புரியாது என்ற பைத்தியக்காரத்தனம் 
எவ்வாறு வடிமைக்கப்பட்டு வழிநடத்த படுகிறது?

இன்றைய தொழிநுட்ப உலகில் சோசியல் மீடியாவின் தாக்கம் இருப்பதால்தான் 
பல விடயங்களை நான் நீங்கள் கூட தெளிவாக பார்க்கிறோம்.
ஏன் சீமான் செபஸ்டிடியூனாகவும்  திருமுருகன் காந்தி டேனியல் ஆகவும் சித்தரிக்க படுகிறார்கள் 
அவர்கள் அவ்வாறுதான் இருந்தால் கூட அவர்கள் அரசியலுக்கும் தத்துவத்துக்கு என்ன பிரச்சனை? 
இன்றைய சோசலிமீடியா இல்லாது இருந்து இருப்பின் எனக்கும் உங்களுக்கும் கூட அவர்கள் செபஸ்டியனாகவும்  டானியல் ஆகாவும்தான் தெரிந்திருக்கும். இந்த சாதி கோட்ப்பாடு எங்கிருந்து உருவாகிறது ? 

மதம் ஒன்று இருந்தால் அதை சீர்படுத்தி தொடர்வதை பற்றி சிந்திக்கலாம் 
இல்லாத மாயைகளை கடந்து போவதுதான் சிறப்பு 

36 minutes ago, Maruthankerny said:

மதம் ஒன்று இருந்தால் அதை சீர்படுத்தி தொடர்வதை பற்றி சிந்திக்கலாம் 
இல்லாத மாயைகளை கடந்து போவதுதான் சிறப்பு 

என் பார்வையில் மதமும் ஒரு நிறுவனத்தின் விற்பனைப்பொருளே. திருப்பதியில் மட்டுமல்லாது வத்திக்கானிலும் புத்தகாயக்களிலும் மக்காவிலும் ஜெரூசலத்திலும் ..... 

தான் மட்டுமே மாறுவதால் உலகம் மாறிவிடும் என்பதும்; நான் இவனை மாற்றிவிட்டால் அவனும் மாறிவிடுவான் என்பதும்; நடக்காது.😞

அப்படி இருந்தால் நீங்களும் நானும் இதை இன்று கதைக்கும் தேவை இருந்திருக்காது.
எங்கள் பாட்டன் காலத்திலேயே தீர்வு கிடைத்திருக்கும். எங்கள் பேரன்மாரும் இதையே விவாதிக்கும் நிலை  🙄

ஆனால், மூட நம்பிக்கைகைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டியதில் மாற்றுக்கருத்து இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ திரியில் எழுதினா உற‌வுக‌ளுக்குள் விரிச‌ல் ஏற்ப‌டும் , பிற‌க்கு அது தேவை இல்லா ச‌ண்டையில் போய் முடியும் / இது நூற்றுக்கு நூறு உண்மை 😉

நேற்று ந‌ட‌ந்த‌ காயத்தை எண்ணி
ஞாயத்தை விடலாமா ஞாயம் காயம் அவனே அறிவான்
அவனிடம் அதை நீ
விட்டுச் செல் 🤞🙏

என்ற‌ சொல்லுக்கு ம‌திப்பு குடுத்து இந்த‌ திரியில் எழுதாம‌ விட்ட‌ ( குசா தாத்தாவுக்கு கோடான‌ கோடி ந‌ன்றிக‌ள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

ஒருவன் ஒரு ஒரு துன்பத்தில் இருக்கும்போது ... இன்னொருவன் வந்து கடவுளை பார் உனக்கு துணையாக இருக்கிறார் எனும்போது அவனுக்கு தன்னம்பிக்கை வருகிற

புண்ணுள்ளவன், தனக்கு மருந்து போட்டு வலியை தீர்க்கக்கூடிய மருத்துவனை தேடிப்போவது தவிர்க்க இயலாதது. அது அவனுடைய அடிப்படை உரிமை. அதை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரமில்லை.தடுக்க வேண்டுமெனில் நாம் அவன் வலியைப்போக்கி, ஆறுதற்படுத்த வேண்டும். அதில்லாமல் நானும் மருந்திட மாட்டேன், மற்றவர்களும் போடக்கூடாது. என்பதன் அர்த்தம் என்ன? அவன் வலியோடும், வேதனையோடும் அழியவேண்டும் என்கிற குரூர புத்தியா? மருந்திடுபவன்  அவனது வலியை குறைக்காமல், நோயாளியிடம் வேறொன்றை எதிர்பார்த்தால் வலியுள்ளவன்  அங்கில்லாமல் திரும்பி விடுவான். இல்லை அங்கே தன் வலி நீங்கி ஆறுதல் அடைவானாயின் அவன் அங்கே இருப்பதால் யாருக்கு என்ன நட்டம்?  அதை தடுப்பது அநாகரீகம்என்று கூட நமக்கு புரியாமல் வாதாட்டம் செய்கிறோம்.  தொடர்ந்து இருப்பதும்,  வெளியேறுவதும் மருந்து தேடுபவனதும், போடுபவனதும் பிரச்சனை. இதில் நமக்கென்ன லாபம் நட்டம் வந்துவிடப்போகுது? எங்களுக்கு சவாலாய் எழுந்துவிடப் போகிறார்கள் என்கிற அச்சமா? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

என் பார்வையில் மதமும் ஒரு நிறுவனத்தின் விற்பனைப்பொருளே. திருப்பதியில் மட்டுமல்லாது வத்திக்கானிலும் புத்தகாயக்களிலும் மக்காவிலும் ஜெரூசலத்திலும் ..... 

தான் மட்டுமே மாறுவதால் உலகம் மாறிவிடும் என்பதும்; நான் இவனை மாற்றிவிட்டால் அவனும் மாறிவிடுவான் என்பதும்; நடக்காது.😞

அப்படி இருந்தால் நீங்களும் நானும் இதை இன்று கதைக்கும் தேவை இருந்திருக்காது.
எங்கள் பாட்டன் காலத்திலேயே தீர்வு கிடைத்திருக்கும். எங்கள் பேரன்மாரும் இதையே விவாதிக்கும் நிலை  🙄

ஆனால், மூட நம்பிக்கைகைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டியதில் மாற்றுக்கருத்து இல்லை. 

இப்போது நான் இந்து என்ற போலி மதம் பற்றியே இங்கு எழுதுகிறேன் 
முதலில் நான் கூறியதுபோல மற்றவை எனக்கு இப்போ தேவை இல்லை.

ஆனால் மதம் என்று வரும்போது ... இப்போது உலகில் எங்கேனும் ஒரு மதமும் இல்லை 
மத நிறுவனங்கள்தான் உண்டு இவை நன்கு திட்டமிட்டு குறித்த சாரார் மட்டும் கொழுத்த 
லாபம் காணும்  வகையில் நடைமுறை படுத்த படுகிறது.
எல்லா இடமும் கீழ் நிலை மக்கள் முட்டாள்களாக இருந்து 
ராணிக்கு உணவு  சேகரித்து இறக்கும் எறும்பு போலத்தான் இருக்கிறார்கள்.
சில மாதங்கள் நேரிடையான துஸ்பிரயோகங்களை பெண்கள் மீதும் 
கீழ் தட்டு மக்கள் மீதும் திணிக்கிறார்கள். 

மற்ற மதங்கள் எல்லாம் வெட்டி கிழிக்கின்றன என்று நான் எழுத முன்வரவில்லை.
அடி மட்ட மக்களை மூளை சலவை செய்வதில் இருந்து பணம் பறிப்பது வரை எல்லா 
மதமும் செய்துகொண்டுதான் இருக்கிறது.

திபெத் தாலை லாமா கூட பச்சை பொறுக்கிதான் 
சீனா ஆக்கிரமித்த பின்பு லாமக்க்ளின் பிடியில் இருந்து விடுபட்ட திபெத்தியர்கள் லட்ஷ கணக்கில் உண்டு. 
இப்போது இந்த கொரோன வைரஸ் நேரம் வத்திக்கான் இத்தாலியில் என்ன கிழிக்கிறது?

எங்கள் வீட்டுக்குள்ளேயே சாக்கடை ஓடும் லட்ஷணத்தில் 
அடுத்தவன் முதுகை சொறிந்தால் .... அவன் ஒரு கேள்வி கேட்டால் அது நிஜாஜம் தானே?
முதலில் இந்த சாக்கடையை கழுவுவோம் 

7 minutes ago, Maruthankerny said:

எங்கள் வீட்டுக்குள்ளேயே சாக்கடை ஓடும் லட்ஷணத்தில் 
அடுத்தவன் முதுகை சொறிந்தால் .... அவன் ஒரு கேள்வி கேட்டால் அது நிஜாஜம் தானே?
முதலில் இந்த சாக்கடையை கழுவுவோம் 

நாம் ஒரு பலமான நிலையில் இருந்தால் இல்லை எமக்கென ஒரு ஆளக்கோட்டிய தேசம் இருந்தால் நிச்சயம் கழுவலாம்., கழுவ வேண்டும். சட்டங்களை உருவாக்கி, மக்கள் ஆதரவுடன் அமுல்படுத்த வேண்டும் 

சொந்தமாக ஒரு நாடு இல்லை  சட்ட அமுலாக்கல் வலிமை இல்லாமல் கழுவ ஆரம்பித்தால், நாம் அடையாளம் இல்லாமல் போய்விடும் சாத்தியங்களும் உண்டு. மதம் மாறி. மொழி மாறி ... இனமாய் மாறிவிடுவோம். அது நூறுவீதம் நடக்காது என்ற வாக்குறுதி தந்தால் நிச்சயம் எங்கள் சாக்கடையை கழுவலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

நாம் ஒரு பலமான நிலையில் இருந்தால் இல்லை எமக்கென ஒரு ஆளக்கோட்டிய தேசம் இருந்தால் நிச்சயம் கழுவலாம்., கழுவ வேண்டும். சட்டங்களை உருவாக்கி, மக்கள் ஆதரவுடன் அமுல்படுத்த வேண்டும் 

சொந்தமாக ஒரு நாடு இல்லை  சட்ட அமுலாக்கல் வலிமை இல்லாமல் கழுவ ஆரம்பித்தால், நாம் அடையாளம் இல்லாமல் போய்விடும் சாத்தியங்களும் உண்டு. மதம் மாறி. மொழி மாறி ... இனமாய் மாறிவிடுவோம். அது நூறுவீதம் நடக்காது என்ற வாக்குறுதி தந்தால் நிச்சயம் எங்கள் சாக்கடையை கழுவலாம்.  

தொடர்ந்து பதில் எழுதுவதால் உங்களுக்கு எதிராக எழுதுகிறேன் என்றில்லை 
எனது நிலைப்பாடு பற்றி விவரிக்கிறேன் 
இவை ஒன்றும் எமக்கு இல்லாமல் போனதுக்கு காரணம் இந்த ஏமாற்று மதம்தானே?
இத்தனை போலி இந்து அமைப்புகள் இந்தியாவில் இருந்தும் 
ஈழத்தில் இவ்வளவு போலி இந்து கோவில்கள் அழிந்த போதும் ஒருவன் கூட வாய் திறக்கவில்லையே?
என்ன காரணம்?

1280px-Secretary_Kerry_Shakes_Hands_With_Indian_Ambassador_Dr._S._Jaishankar.jpg
இந்த நச்சு பாம்பு இவ்வளவு காலமும் எங்கு எங்கு எல்லாம் நஞ்சை கக்கிக்கொண்டு 
திரிந்தது என்று எத்த்தனை எல்லா தமிழருக்கு தெரியும்?
இவளவு நஞ்சையும் ஏன் இவர்கள் கக்கிறார்கள்? 

27 minutes ago, Maruthankerny said:

தொடர்ந்து பதில் எழுதுவதால் உங்களுக்கு எதிராக எழுதுகிறேன் என்றில்லை 
எனது நிலைப்பாடு பற்றி விவரிக்கிறேன் 
இவை ஒன்றும் எமக்கு இல்லாமல் போனதுக்கு காரணம் இந்த ஏமாற்று மதம்தானே?
இத்தனை போலி இந்து அமைப்புகள் இந்தியாவில் இருந்தும் 
ஈழத்தில் இவ்வளவு போலி இந்து கோவில்கள் அழிந்த போதும் ஒருவன் கூட வாய் திறக்கவில்லையே?
என்ன காரணம்?

நாம் இழந்ததும் கேட்பதும் அதிகார பரவலாக்கல் ( காணி, நீதி பொருளாதாரம் உட்பட்ட அரசியல் பரவலாக்கல்),  ஒரு நீண்ட வரலாற்றை கொண்ட இனம் சார்ந்தது. 

7 hours ago, ampanai said:

நாம் ஒரு பலமான நிலையில் இருந்தால் இல்லை எமக்கென ஒரு ஆளக்கோட்டிய தேசம் இருந்தால் நிச்சயம் கழுவலாம்., கழுவ வேண்டும். சட்டங்களை உருவாக்கி, மக்கள் ஆதரவுடன் அமுல்படுத்த வேண்டும் 

சொந்தமாக ஒரு நாடு இல்லை  சட்ட அமுலாக்கல் வலிமை இல்லாமல் கழுவ ஆரம்பித்தால், நாம் அடையாளம் இல்லாமல் போய்விடும் சாத்தியங்களும் உண்டு. மதம் மாறி. மொழி மாறி ... இனமாய் மாறிவிடுவோம். அது நூறுவீதம் நடக்காது என்ற வாக்குறுதி தந்தால் நிச்சயம் எங்கள் சாக்கடையை கழுவலாம்.  

இந்த பதிவில் நீங்கள்  கூறியிருப்பது சஎகடையை கழுவினால் அடையாளம. இல்லாமல் போய்விடுவோம் என்று. அப்படியானால் எமது அடையாளம் அந்த சாக்கடை என்று கூறுகின்றீர்களா?

 எமது மொழி அந்த சாக்கடையை  விட எவ்வளவு உயர்ந்தது என்பதை மறந்து எமது உயரிய மொழியை அந்த சாக்கடை மதத்துடன் கலக்கின்றீர்களே! அந்த சாக்கடையுடன. சேர்ந்தால்  எமது மொழி காட்டுமிராண்டி  மொழியாகி விடும். அது அறிவியல்  மொழியாக தனது பரிணமிக்க வேண்டும். 

12 hours ago, Maruthankerny said:

சாக்கடை அழிந்த பின்பு 
சுத்தமாகவும் சுகாதாரமாகவும் 
ஒரு சாதாரண ஆறாறிவு மனிதனாக வாழ்வதுதான்.
இது என்ன கேள்வி? 

இந்த பதிலுக்கு ஆயிரம் நன்றிகள். இதை விட சுருக்கமாக கூற முடியாது. 

12 hours ago, ampanai said:

 

3. சமூகத்தில் அறிவு , பொருளுதாராம் வளர மதத்தின் தாக்கம் குறையும் 
4. ஆனால், அதனால் முழுமையாக மறைக்க முடியாது ( ஜப்பான், அமெரிக்கா மற்றும் சீன நாடுகள் உதாரணம்)    

நன்றி  அம்பனை. நீங்கள் கூறிய இந்த  நிலை தமிழருக்கு வந்தாலே போதும்  தமிழரின் வெற்றி ஆரம்பிக்கிறது என்று அர்ததம். மதத்தின தாக்கம் குறைந்து அறிவுக்கும் அதனுடன் இணைந்த சமூக வாழ்விற்கு  தமிழர்  முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினால் வியக்கத்தக்க பல சாதனைகளை புரிய முடியும். 

On 3/30/2020 at 1:00 PM, ரதி said:

 

மருதர் ,நான் உங்கள் அளவுக்கு இவைகளை கரைத்து குடிக்கவில்லை ...ஆனால் பாரதம்,ராமாயணம்  போன்றவற்றை எப்படி ஒரு மனிதன் /சமூகம் பின்பற்ற கூடாது அல்லது கடைப்பிடித்தால் ஏற்படும் தீமைகளை இந்த இரு இரிகாசங்கள் படிப்பதன்  மூலம் பாடம் படித்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் 

 

 ரதி  நீங்கள் கூறுவது உண்மையானால் செய்யக்கூடாத‍த்தை செய்த பலர்  இந்த இரண்டு இதிகாசங்களிலும் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றபடுவது ஏன்.  அவர்கள் உயர் சாதி என்பதை தவிர வேறு என்ன உண்டு?  அதன் மூலம் அந்த இதிகாசங்கள் மக்களுக்கு கூறவரும் செய்தி என்ன?

உதாரணமாக துரோணாச்சாரியார் மகாபாரத‍த்தில் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றபடும் ஒரு கதாபாத்திரம். இன்றும் இந்திய விளையாட்டு துறையில் சிறந்த பயிற்சியாளருக்கான விருதாக துரோணாச்சாரியார் விருது கொடுக்கப்படுகிறது. இத்த‍னைக்கும் துரோணாச்சாரியார் செய்த‍து என்ன?  கீழ் சாதி என தன்னால் துர‍த்தபட்ட ஏகலைவன் சிறந்த வில்வித்தையாளனாகியதை பொறுக்க மாட்டாமல் அவனது கட்டை விரலை கேட்டு அவனது திறமையை மழுங்கடித்த‍த்துதான். இவ்வானான கீழ்தரமான செயலை செய்த துரோணாசாரியார் என்ற கதாபாதிரத்திற்கு மகாபாரத‍த்தில் உயர்ந்த மரியாதையான இடம் வழங்கபட்டுள்ளது. இதன் மூலம் சொல்ல வந்த செய்தி எம்மால் தாழ்த்த‍ப்பட்ட எவரும் படிக்க‍கூடாது. அவ்வாறு படிப்பது தர்ம‍ம் அல்ல என்பதே. 

உண்மையில் சிறந்த பயிற்சியாளர் என்றால் திறமையானவர்களை ஊக்குவிப்பது தான். ஆனால் துரோணாச்சாரியார் போன்ற கீழ்தரமானவர்களின் பெயரில் சிறந்த பயிசியாளர் விருது. அதனால் தான் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு குறிப்பிட்ட அவாள்கள் மட்டுமே அதிக எண்ணிக்கை. மகாபாரதம் காட்டிய தர்ம்ம் இது தான். 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

 ரதி  நீங்கள் கூறுவது உண்மையானால் செய்யக்கூடாத‍த்தை செய்த பலர்  இந்த இரண்டு இதிகாசங்களிலும் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றபடுவது ஏன்.  அவர்கள் உயர் சாதி என்பதை தவிர வேறு என்ன உண்டு?  அதன் மூலம் அந்த இதிகாசங்கள் மக்களுக்கு கூறவரும் செய்தி என்ன?

உதாரணமாக துரோணாச்சாரியார் மகாபாரத‍த்தில் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றபடும் ஒரு கதாபாத்திரம். இன்றும் இந்திய விளையாட்டு துறையில் சிறந்த பயிற்சியாளருக்கான விருதாக துரோணாச்சாரியார் விருது கொடுக்கப்படுகிறது. இத்த‍னைக்கும் துரோணாச்சாரியார் செய்த‍து என்ன?  கீழ் சாதி என தன்னால் துர‍த்தபட்ட ஏகலைவன் சிறந்த வில்வித்தையாளனாகியதை பொறுக்க மாட்டாமல் அவனது கட்டை விரலை கேட்டு அவனது திறமையை மழுங்கடித்த‍த்துதான். இவ்வானான கீழ்தரமான செயலை செய்த துரோணாசாரியார் என்ற கதாபாதிரத்திற்கு மகாபாரத‍த்தில் உயர்ந்த மரியாதையான இடம் வழங்கபட்டுள்ளது. இதன் மூலம் சொல்ல வந்த செய்தி எம்மால் தாழ்த்த‍ப்பட்ட எவரும் படிக்க‍கூடாது. அவ்வாறு படிப்பது தர்ம‍ம் அல்ல என்பதே. 

உண்மையில் சிறந்த பயிற்சியாளர் என்றால் திறமையானவர்களை ஊக்குவிப்பது தான். ஆனால் துரோணாச்சாரியார் போன்ற கீழ்தரமானவர்களின் பெயரில் சிறந்த பயிசியாளர் விருது. அதனால் தான் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு குறிப்பிட்ட அவாள்கள் மட்டுமே அதிக எண்ணிக்கை. மகாபாரதம் காட்டிய தர்ம்ம் இது தான். 

 

இதற்கு நான் ஏற்கனவே மருதருக்கு வடிவாய் விளக்கம் கொடுத்துட்டேன் 

16 hours ago, பையன்26 said:

இந்த‌ திரியில் எழுதினா உற‌வுக‌ளுக்குள் விரிச‌ல் ஏற்ப‌டும் , பிற‌க்கு அது தேவை இல்லா ச‌ண்டையில் போய் முடியும் / இது நூற்றுக்கு நூறு உண்மை 😉

நேற்று ந‌ட‌ந்த‌ காயத்தை எண்ணி
ஞாயத்தை விடலாமா ஞாயம் காயம் அவனே அறிவான்
அவனிடம் அதை நீ
விட்டுச் செல் 🤞🙏

என்ற‌ சொல்லுக்கு ம‌திப்பு குடுத்து இந்த‌ திரியில் எழுதாம‌ விட்ட‌ ( குசா தாத்தாவுக்கு கோடான‌ கோடி ந‌ன்றிக‌ள் 🙏

பையா இப்படி எல்லோரும் விலகிப் போவதால் தான் இவர்களது கொட்டம் கூடிக் கொண்டு போகின்றது 

6 hours ago, tulpen said:

நன்றி  அம்பனை. நீங்கள் கூறிய இந்த  நிலை தமிழருக்கு வந்தாலே போதும்  தமிழரின் வெற்றி ஆரம்பிக்கிறது என்று அர்ததம். மதத்தின தாக்கம் குறைந்து அறிவுக்கும் அதனுடன் இணைந்த சமூக வாழ்விற்கு  தமிழர்  முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினால் வியக்கத்தக்க பல சாதனைகளை புரிய முடியும். 

இவை ஒன்றும் வராமலேயே தமிழ் இனம்  உலகில் அழிந்துவிடும் சந்தர்ப்பங்களே அதிகம் உண்டு. 

 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Maruthankerny said:

சாக்கடை அழிந்த பின்பு 
சுத்தமாகவும் சுகாதாரமாகவும் 
ஒரு சாதாரண ஆறாறிவு மனிதனாக வாழ்வதுதான்.
இது என்ன கேள்வி? 

இலங்கையை எடுத்து கொண்டால் இந்துக்கள்[சைவர்கள்] ,பெளத்தர்கள்,கிறிஸ்தவர்கள் ,முஸ்லீம்கள் போன்ற மத குழுமத்தை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள் .
நீங்கள் இந்துமதம் அதனால் அந்த சாக்கடையை நீங்கள் ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் ....சரி ... அடுத்து எப்படி உங்களை அடையாளப்படுத்துவீர்கள் என்று சொல்லுங்கள்?
தற்போதைய சூழ்நிலையில் எப்படி மதம் மாற்றும் குழுக்களில் இருந்து எப்படி எமது இனத்தை காப்பாற்றுவீர்கள்?
எமது இனத்தின் அடையாளம் என்ன?
ஆக்க பூர்வமான பதிலை தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் .

7 hours ago, tulpen said:

இந்த பதிவில் நீங்கள்  கூறியிருப்பது சஎகடையை கழுவினால் அடையாளம. இல்லாமல் போய்விடுவோம் என்று. அப்படியானால் எமது அடையாளம் அந்த சாக்கடை என்று கூறுகின்றீர்களா?

 எமது மொழி அந்த சாக்கடையை  விட எவ்வளவு உயர்ந்தது என்பதை மறந்து எமது உயரிய மொழியை அந்த சாக்கடை மதத்துடன் கலக்கின்றீர்களே! அந்த சாக்கடையுடன. சேர்ந்தால்  எமது மொழி காட்டுமிராண்டி  மொழியாகி விடும். அது அறிவியல்  மொழியாக தனது பரிணமிக்க வேண்டும். 

இந்த பதிலுக்கு ஆயிரம் நன்றிகள். இதை விட சுருக்கமாக கூற முடியாது. 

இன்று தாயகத்தில் ஊரடங்கு உள்ளது. அதனால் பல வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் பட்டினிச்சாவிற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஒரு 15வயது சிறுவன் மீன்பிடிக்க சென்று முதலையால் இறந்துள்ளான்.

இங்கே, மதம் சாராமல் மக்களுக்கு ஆலயங்கள் உதவவேண்டும். ஆனால், அந்தளவிற்கு அங்கில்லை மனிதாபிமானம்.  

தமிழர்களை சில சைவ கோவில்கள் உணவு கொடுத்து காப்பாற்றுகின்றன. இதை உங்களால் பாராட்ட முடியுமா? 

16 minutes ago, ரதி said:

இலங்கையை எடுத்து கொண்டால் இந்துக்கள்[சைவர்கள்] ,பெளத்தர்கள்,கிறிஸ்தவர்கள் ,முஸ்லீம்கள் போன்ற மத குழுமத்தை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள் .
நீங்கள் இந்துமதம் அதனால் அந்த சாக்கடையை நீங்கள் ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் ....சரி ... அடுத்து எப்படி உங்களை அடையாளப்படுத்துவீர்கள் என்று சொல்லுங்கள்?
தற்போதைய சூழ்நிலையில் எப்படி மதம் மாற்றும் குழுக்களில் இருந்து எப்படி எமது இனத்தை காப்பாற்றுவீர்கள்?
எமது இனத்தின் அடையாளம் என்ன?
ஆக்க பூர்வமான பதிலை தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் .

இலங்கையை எடுத்துக் கொண்டால் சிங்களவர்கள்,  தமிழர்கள், சோனகர்கள், பறங்கியர் ஆகிய இனத்தவர் வாழ்கின்றார்கள். இதில் 2000 ஆண்டுக்கு முன்பு திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் இனமான தமிழர் என்ற அடையாளத்தவர் நாம். அந்த பெருமையான அடையாளத்துடன் கால மாற்றத்தை  ஏற்றுக் கொண்டு எம்மை update செயது வாழ்வதே மகிழ்வான வாழ்வு.

( மருதரை கேட்ட கேள்விக்கு முந்திக்கொண்டு நான் பதில் தந்ததற்கு நீங்கள் என்னை கடிந்து கொள்வது தெரிகிறது. இருப்பினும் மருதர் சிறந்த பதிலை வழங்குவார் என்று எதிர்பார்கிறேன்) 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

இலங்கையை எடுத்துக் கொண்டால் சிங்களவர்கள்,  தமிழர்கள், சோனகர்கள், பறங்கியர் ஆகிய இனத்தவர் வாழ்கின்றார்கள். இதில் 2000 ஆண்டுக்கு முன்பு திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் இனமான தமிழர் என்ற அடையாளத்தவர் நாம். அந்த பெருமையான அடையாளத்துடன் கால மாற்றத்தை  ஏற்றுக் கொண்டு எம்மை update செயது வாழ்வதே மகிழ்வான வாழ்வு.

( மருதரை கேட்ட கேள்விக்கு முந்திக்கொண்டு நான் பதில் தந்ததற்கு நீங்கள் என்னை கடிந்து கொள்வது தெரிகிறது. இருப்பினும் மருதர் சிறந்த பதிலை வழங்குவார் என்று எதிர்பார்கிறேன்) 

பதிலுக்கு நன்றி ...மருதரின் பதிலுக்கு பின் எழுதுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Maruthankerny said:

சாக்கடை அழிந்த பின்பு 
சுத்தமாகவும் சுகாதாரமாகவும் 
ஒரு சாதாரண ஆறாறிவு மனிதனாக வாழ்வதுதான்.
இது என்ன கேள்வி? 

ஓம் ஓம் அதுதான் உங்கள் நாட்டின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் அறிவியலையும் கொரோன விடயத்தில் நானென்ன உலகமே பார்த்து மெச்சிக்கொண்டிருக்கிறதே !

நீங்கள் உங்கள் வீட்டு சாக்கடையை மட்டும் கழுவுங்கள். அதுபோதும். மறவர்களுக்கு அவரவர் சாக்கடைகளை சுத்தம் செய்ய சுய அறிவு உள்ளது. அதை அவர்களே செய்துகொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, satan said:

புண்ணுள்ளவன், தனக்கு மருந்து போட்டு வலியை தீர்க்கக்கூடிய மருத்துவனை தேடிப்போவது தவிர்க்க இயலாதது. அது அவனுடைய அடிப்படை உரிமை. அதை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரமில்லை.தடுக்க வேண்டுமெனில் நாம் அவன் வலியைப்போக்கி, ஆறுதற்படுத்த வேண்டும். அதில்லாமல் நானும் மருந்திட மாட்டேன், மற்றவர்களும் போடக்கூடாது. என்பதன் அர்த்தம் என்ன? அவன் வலியோடும், வேதனையோடும் அழியவேண்டும் என்கிற குரூர புத்தியா? மருந்திடுபவன்  அவனது வலியை குறைக்காமல், நோயாளியிடம் வேறொன்றை எதிர்பார்த்தால் வலியுள்ளவன்  அங்கில்லாமல் திரும்பி விடுவான். இல்லை அங்கே தன் வலி நீங்கி ஆறுதல் அடைவானாயின் அவன் அங்கே இருப்பதால் யாருக்கு என்ன நட்டம்?  அதை தடுப்பது அநாகரீகம்என்று கூட நமக்கு புரியாமல் வாதாட்டம் செய்கிறோம்.  தொடர்ந்து இருப்பதும்,  வெளியேறுவதும் மருந்து தேடுபவனதும், போடுபவனதும் பிரச்சனை. இதில் நமக்கென்ன லாபம் நட்டம் வந்துவிடப்போகுது? எங்களுக்கு சவாலாய் எழுந்துவிடப் போகிறார்கள் என்கிற அச்சமா? 

நானும் எனக்கு புண்ணிருந்தால் நானிருக்கும் நாட்டின் மருத்துவரிடம் சென்று மருந்தெடுக்கிறேன் ஆனால் அவர் ஒரு நாளும் என்னை அவரது மதத்துக்கு மாறச்சொல்லவில்லையே. ஏனென்றால் நான் அவரது சேவைக்கு பணம் கொடுக்கிறேன். 

பணமில்லாதவனை எனது மதத்திற்கு வந்தால்தான் நோயை மாற்றுவேன் என்று ஒரு மருத்துவர் சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான தெரியவில்லையா உங்களுக்கு. உங்களுக்கு அது தெரியாது ஏன்னென்றால் அதன்பின் நீங்கள் உங்களை அடையாளப்படுத்த முடியாதே!! 

1 hour ago, ampanai said:

இன்று தாயகத்தில் ஊரடங்கு உள்ளது. அதனால் பல வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் பட்டினிச்சாவிற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஒரு 15வயது சிறுவன் மீன்பிடிக்க சென்று முதலையால் இறந்துள்ளான்.

இங்கே, மதம் சாராமல் மக்களுக்கு ஆலயங்கள் உதவவேண்டும். ஆனால், அந்தளவிற்கு அங்கில்லை மனிதாபிமானம்.  

தமிழர்களை சில சைவ கோவில்கள் உணவு கொடுத்து காப்பாற்றுகின்றன. இதை உங்களால் பாராட்ட முடியுமா? 

நிச்சயமாக இதைச் செய்த அந்த ஆலயங்களின் நிர்வாகப்பொறுப்பில்  உள்ள மனிதர்களைப் பாராட்டுகின்றேன். ஆலயத் திருப்பணி என்று பணத்தை வீண் விரயம் செய்யாமல் இவ்வாறான நல்ல காரியங்களுக்கு கொடுத்த அந்த மனிதர்களின் செயல் பாராட்டப்பட வேண்டியது. யுத்தம் நடைபெற்றபோது  இங்கு பல ஆலய நிர்வாகிகளுடன் இதே காரணத்திற்காக  முரண் பட்டிருக்கிறேன்.  

தற்போது பல இளைஞர்கள்  தன்னிச்சையாக மக்களுக்கு உதவி வருவதாக கேள்விப்பட்டேன. அவர்களுக்கும் வாழ்ததுக்கள்.  உலகெங்கு எங்கு பேரிடர் நடந்தாலும்  சுவிஸ்  மக்களிடம்  பல பில்லியன் பிராங்குகளைத் திரட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பும் சுவிஸ்.  Glückskette தற்போதய நிலைமையால் பாதிக்கப்பட்ட சுவிஸ் மக்களுக்குகாக 9 மில்லியன் நிதி திரட்டி  கொடுத்துள்ளது. அவர்களுக்கும் பாராட்டுக்கள். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பையன்26 said:

இந்த‌ திரியில் எழுதினா உற‌வுக‌ளுக்குள் விரிச‌ல் ஏற்ப‌டும் , பிற‌க்கு அது தேவை இல்லா ச‌ண்டையில் போய் முடியும் / இது நூற்றுக்கு நூறு உண்மை 😉

நேற்று ந‌ட‌ந்த‌ காயத்தை எண்ணி
ஞாயத்தை விடலாமா ஞாயம் காயம் அவனே அறிவான்
அவனிடம் அதை நீ
விட்டுச் செல் 🤞🙏

என்ற‌ சொல்லுக்கு ம‌திப்பு குடுத்து இந்த‌ திரியில் எழுதாம‌ விட்ட‌ ( குசா தாத்தாவுக்கு கோடான‌ கோடி ந‌ன்றிக‌ள் 🙏

சண்டையில் போய் முடிந்தாலும் ஒருவரும் உங்களுடன் கோவிக்கப் போவதில்லை என்கின்ற நம்பிக்கை எனக்குண்டு. பயப்படாமல் நீங்களும் கோதாவில் இறங்கி  ரெண்டு குத்து விடுங்கோ. 😂

1 hour ago, ampanai said:

இன்று தாயகத்தில் ஊரடங்கு உள்ளது. அதனால் பல வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் பட்டினிச்சாவிற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஒரு 15வயது சிறுவன் மீன்பிடிக்க சென்று முதலையால் இறந்துள்ளான்.

இங்கே, மதம் சாராமல் மக்களுக்கு ஆலயங்கள் உதவவேண்டும். ஆனால், அந்தளவிற்கு அங்கில்லை மனிதாபிமானம்.  

தமிழர்களை சில சைவ கோவில்கள் உணவு கொடுத்து காப்பாற்றுகின்றன. இதை உங்களால் பாராட்ட முடியுமா? 

காலத்தால் செய்த உதவி

ஞாலத்தில்  மாளப் பெரிது.  👍

 

11 minutes ago, tulpen said:

நிச்சயமாக இதைச் செய்த அந்த ஆலயங்களின் நிர்வாகப்பொறுப்பில்  உள்ள மனிதர்களைப் பாராட்டுகின்றேன். ஆலயத் திருப்பணி என்று பணத்தை வீண் விரயம் செய்யாமல் இவ்வாறான நல்ல காரியங்களுக்கு கொடுத்த அந்த மனிதர்களின் செயல் பாராட்டப்பட வேண்டியது. யுத்தம் நடைபெற்றபோது  இங்கு பல ஆலய நிர்வாகிகளுடன் இதே காரணத்திற்காக  முரண் பட்டிருக்கிறேன்.  

தற்போது பல இளைஞர்கள்  தன்னிச்சையாக மக்களுக்கு உதவி வருவதாக கேள்விப்பட்டேன. அவர்களுக்கும் வாழ்ததுக்கள்.  உலகெங்கு எங்கு பேரிடர் நடந்தாலும்  சுவிஸ்  மக்களிடம்  பல பில்லியன் பிராங்குகளைத் திரட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பும் சுவிஸ்.  Glückskette தற்போதய நிலைமையால் பாதிக்கப்பட்ட சுவிஸ் மக்களுக்குகாக 9 மில்லியன் நிதி திரட்டி  கொடுத்துள்ளது. அவர்களுக்கும் பாராட்டுக்கள். 

நன்றி. இருந்தாலும், சுவிசுடன் இலங்கையை ஒப்பிடுவதும், தன்னார்வ உதவியாளர்களையும் குறிப்பிட்டுள்ளீர்கள். இதன் மூலம், நீங்கள் ஆலயங்கள் மக்களுக்கு உதவுவதை முழு மனத்துடன் ஏற்கவில்லை என்பதை காட்டுகின்றது. அதில் பிழையும் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.