Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதலைக்கு இரையாகிய இளைஞன் : உணவு தேடி அலைந்தபோது இடம்பெற்ற சோகம்

Featured Replies

முதலை கடித்து, உயிரிழந்த நிலையில், இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்னது.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புனாணை மைலந்தனை பிரதேசத்தில் முதலை கடித்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று (03.04.2020) மாலை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

நாட்டின் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் உணவுக்காக மைலந்தனை பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத நிலையில் இளைஞனை முதலை கடித்து இழுத்து சென்றதாக இவருடன் மீன்பிடிக்க சென்ற நண்பர்கள் தெரிவித்தனர்.

78051292_448269296077649_871072253708599


புனாணை மைலந்தனை பகுதியைச் சேர்ந்த தியாகராஜா கஜேந்திரன் (வயது 15) எனும் இளைஞரே இவ்வாறு முதலைக்கு இரையாகி, மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

சம்பவம் குறித்த, மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\

https://www.virakesari.lk/article/79198

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் ஊரங்கு சட்டம் போட்டானுகள் காசு இருக்குறவன் சாமான்களை வாங்கி வைத்துள்ளான் ஆனால் நாள் தோறும் கடல் ,ஆறு , குளம் என அலைந்து மீன்பிடித்து வாழும் மக்களை என்ன செய்வது  எங்கு பிரச்சினை நடந்தாலும் அது ஏழைகளையே பாதிக்கிறது  மீன் பிடித்து வந்தாலும் அதை விற்க முடியாமலும் இருக்கின்றனர் வியாபாரிகள் இல்லை விற்பதற்கு .

ஆழ்ந்த இரங்கல்கள் 

  • தொடங்கியவர்

முதலில், சிறுவனின் ஆத்மா சாந்தியடையட்டும், அஞ்சலிகள்!

புலம்பெயர் தேசங்களிலும் பல தமிழர்கள் இறந்துள்ளனர். அவர்களும், வறுமை காரணமாக வேலை செய்ய வேண்டிய தேவை உள்ளவர்களாகவே தெரிகிறார்கள். உதாரணம் "ஊபர்" ஓடும் நம்வர்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ampanai said:

முதலில், சிறுவனின் ஆத்மா சாந்தியடையட்டும், அஞ்சலிகள்!

புலம்பெயர் தேசங்களிலும் பல தமிழர்கள் இறந்துள்ளனர். அவர்களும், வறுமை காரணமாக வேலை செய்ய வேண்டிய தேவை உள்ளவர்களாகவே தெரிகிறார்கள். உதாரணம் "ஊபர்" ஓடும் நம்வர்கள்.  

புலம்பெயர்ந்தவர்களை இங்குள்ளவர்கள் ஏழையாக பார்ப்பதில்லை ஆனால் அங்கு நடக்கும் நிலமைகள் , செய்யும் தொழில்கள் அது அவர்களுக்கே வெளிச்சம் அது இங்கு தெரிய வாய்ப்பில்லை காரணம் பணத்தின் பெறுமதி .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

முதலில், சிறுவனின் ஆத்மா சாந்தியடையட்டும், அஞ்சலிகள்!

புலம்பெயர் தேசங்களிலும் பல தமிழர்கள் இறந்துள்ளனர். அவர்களும், வறுமை காரணமாக வேலை செய்ய வேண்டிய தேவை உள்ளவர்களாகவே தெரிகிறார்கள். உதாரணம் "ஊபர்" ஓடும் நம்வர்கள்.  

வறுமைகாரணமாக புலம்பெயர் தேசத்தில் இறந்தார்களா ? 

 

பலியானவரின் ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.😢

  • தொடங்கியவர்
3 minutes ago, Kapithan said:

வறுமைகாரணமாக புலம்பெயர் தேசத்தில் இறந்தார்களா ? 

ஆமைய்யா. இங்கேயும் வறுமைக்கோடும் வறுமையும் உள்ளன. 

https://en.wikipedia.org/wiki/Poverty_in_the_United_Kingdom

 

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம், இயற்கை, நோய் என்று எதுவந்தாலும்  முதற்பலியாவது ஏழைகளே. அது இலங்கையில் என்றால் தமிழர்கள்!................. இந்தவிதியை யார் மாற்றுவது. இப்படியே கடந்துபோய்;  கலைந்துபோவிடுவதாகவே இருக்கிறோம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நாட்டில் ஊரங்கு சட்டம் போட்டானுகள் காசு இருக்குறவன் சாமான்களை வாங்கி வைத்துள்ளான் ஆனால் நாள் தோறும் கடல் ,ஆறு , குளம் என அலைந்து மீன்பிடித்து வாழும் மக்களை என்ன செய்வது  எங்கு பிரச்சினை நடந்தாலும் அது ஏழைகளையே பாதிக்கிறது  மீன் பிடித்து வந்தாலும் அதை விற்க முடியாமலும் இருக்கின்றனர் வியாபாரிகள் இல்லை விற்பதற்கு .

ஆழ்ந்த இரங்கல்கள் 

இயற்கை அழிவிற்கும் செயற்கை அழிவிற்கும் பலிக்கடா ஆவது ஏழை மக்களே.

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ampanai said:

 

78051292_448269296077649_871072253708599


புனாணை மைலந்தனை பகுதியைச் சேர்ந்த தியாகராஜா கஜேந்திரன் (வயது 15) எனும் இளைஞரே இவ்வாறு முதலைக்கு இரையாகி, மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

முதலை கூட....  நொந்து போயுள்ள,  தமிழனைப்  பார்த்துத்தான்.. கடித்து தின்னுது. ஹ்ம்ம்... 😢

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைகளுக்கு எங்கு போனாலும் வாழ்வு இல்லை. அவர்கள் வாழத் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இயற்கை அழிவிற்கும் செயற்கை அழிவிற்கும் பலிக்கடா ஆவது ஏழை மக்களே.

ஆழ்ந்த இரங்கல்கள்.

ம் உன்மைதான் 

சின்ன வயசுல அநியாய மரணம்!

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமையான மரணம். சிறுவனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

குளம், வாவியில் மீன்பிடிப்பது வழமை. ஊரவர்களுக்கு முதலையின் பிரசன்னம் வழமையாக தெரிந்து இருக்கும். தம்பாட்டில் சிறுவர்கள் எதேச்சையாக செய்யும் செயற்பாடுகள் ஆபத்தில் முடிந்து போகலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.