Jump to content

கொரோனா வைரஸ்: மூலிகை மருந்துகள் தீர்வு என இந்தியாவில் பரவும் தகவல்கள் உண்மையா? #BBCRealityCheck


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ்: மூலிகை மருந்துகள் தீர்வு என இந்தியாவில் பரவும் தகவல்கள் உண்மையா? #BBCRealityCheck

கொரோனா வைரஸ்: இந்திய பிரதமர் நரேந்திர மோதி பரிந்துரைத்த மருந்து தீர்வாகுமா?Getty Images

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, மக்கள் நடமாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து அரசு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இந்திய செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன.

முன்னணியில் இருக்கும் சிலவற்றை நாங்கள் ஆய்வு செய்தோம்.

பாரம்பரிய மூலிகைகளும் வைரஸ் தாக்குதல்களும்

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக பிரதமர் திரு. நரேந்திர மோதியின் அணுகுமுறைகளில், பாரம்பரிய மூலிகைகளை எடுத்துக் கொள்ளுமாறு குடிமக்களுக்குக் கூறும் யோசனையும் அடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஏழு அம்சத் திட்டத்தைத் திரு. மோதி அறிவித்தார்.

அதிகாரப்பூர்வமான வழிகாட்டுதலின்படி பரிந்துரைக்கப்பட்ட மூலிகை மருந்தை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் திரு. மோதி கூறியுள்ளார். ``காதா'' என்ற பெயரிலான அந்த மருந்து ``நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வைரஸுக்கு எதிராக போரிடும் போது தான் நோய் எதிர்ப்பு சக்தி செயல்படுமே தவிர, இதுபோன்ற வழிகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

``இதுபோன்ற (சில உணவு வகைகள் நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டும் என்பது போன்ற) தகவல்களுக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது தான் பிரச்சினை'' என்று யேல் பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பாற்றல் துறையின் நிபுணர் அகிக்கோ இவசாகி கூறுகிறார்.

கொரோனா வைரஸ்: இந்திய பிரதமர் நரேந்திர மோதி பரிந்துரைத்த மருந்து தீர்வாகுமா?Getty Images

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதற்குப் பாரம்பரிய கிச்சை முறைகளை இந்தியாவின் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இதில் பல சிகிச்சை முறைகள் கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுப்பதற்கானது என குறிப்பாகச் சொல்லப்படுகிறது.

அவை அந்த வகையில் சிறப்பாக செயல்படும் என்பதற்கு அறிவியல்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை.

இளஞ்சூடான நீரைக் குடிப்பது - அல்லது வினிகர் நீரில் அல்லது உப்பு கரைத்த நீரில் வாய் கொப்பளிப்பது தொடர்பான தகவல்கள் தவறானவை என்று இந்திய அரசின் உண்மை அறியும் பிரிவு நிரூபித்துள்ளது.

தேநீர் குடிப்பது இந்த நோயைத் தடுக்கும் என்ற பாரம்பரிய நிவாரணமாகக் கூறப்படும் விஷயத்தை நாங்கள் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். சீனாவில் உருவான போலியான இந்தத் தகவல் இந்தியா  உள்படப் பல பகுதிகளில் பரவியுள்ளது.

Banner image reading 'more about coronavirus' Banner

வைரஸ் தாக்கம் குறித்து இல்லாத ஓர் ஆய்வுக் கட்டுரை

இந்தியாவில் முடக்கநிலை அமல் செய்யாமல் போயிருந்தால் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் 0.8 மில்லியன் பேருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன என்று ABP News என்ற இந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

கொரோனா வைரஸ்: இந்திய பிரதமர் நரேந்திர மோதி பரிந்துரைத்த மருந்து தீர்வாகுமா?Getty Images

இந்தியாவில் மருத்துவத்தின் உயரதிகார அமைப்பான - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலை (ஐ.சி.எம்.ஆர்.) - அது மேற்கோள் காட்டியிருந்தது.

இந்தியாவில் ஆளும் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாளவியா இந்தச் செய்தியை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதை ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்து மறுட்விட் செய்திருந்தனர்.

ஆனால் அதுபோல எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை என்று இந்தியாவின் சுகாதார அமைச்சகம் கூறிவிட்டது. ஐ.சி.எம்.ஆரும் அதே கருத்தைக் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ்: இந்திய பிரதமர் நரேந்திர மோதி பரிந்துரைத்த மருந்து தீர்வாகுமா?GoI

``முடக்கநிலை அமல் செய்ததால் எந்த அளவுக்கு தாக்கம் ஏற்பட்டது என்பது குறித்து ஐ.சி.எம்.ஆர். எந்த ஆய்வும் நடத்தவில்லை'' என்று அதன் ஆராய்ச்சி மேலாண்மை மற்றும் கோட்பாட்டுப் பிரிவு பிராந்தியத் தலைமை அதிகாரி டாக்டர் ரஜினிகாந்த் பிபிசியிடம் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சகமே மறுத்துவிட்ட நிலையிலும், தன் செய்தியில் இருந்து ABP News பின்வாங்கவில்லை.

கொரோனா வைரஸ்: இந்திய பிரதமர் நரேந்திர மோதி பரிந்துரைத்த மருந்து தீர்வாகுமா?ABP

இருந்தபோதிலும் நோய் பாதிப்பு எப்படி இருந்திருக்கும் என்பது குறித்து ``உள்ளுக்குள் ஆராய்ச்சி'' நடந்தது என்றும், அந்தத் தகவல் வெளியிடப்படவில்லை என்றும் அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது.

முடக்கநிலை அமல் செய்யாதிருந்தால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது தெரியாது. ஏனெனில் இந்தியாவில் மக்கள் மார்ச் 25 ஆம் தேதியில் இருந்தே வெளியில் செல்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தன.

தேநீர் குடிப்பது பற்றி கட்டுக்கதை பதிவு

கொரோனா வைரஸ்: இந்திய பிரதமர் நரேந்திர மோதி பரிந்துரைத்த மருந்து தீர்வாகுமா?Getty Images

``இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஒரு கப் தேநீர் தீர்வாக இருக்கும் என்று யாருக்குத் தெரிந்திருக்கும்.'' பொய்யான இந்தத் தகவல் - சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது - சீன டாக்டர் வென்லியாங் சொன்னதாகப் பரவுகிறது. வுஹானில் இந்த வைரஸ் பரவியது பற்றி ஆரம்பத்திலேயே எச்சரித்த, பின்னர் அதே நோயால் இறந்துவிட்ட நிலையில், ஹீரோவாக மதிக்கப்படும் அவர் சொன்னதாக இந்தத் தகவல் பரவுகிறது.

தேநீரில் காணப்படும் மெதிலெக்ஸான்தைன்கள் - எனப்படும் பொருள் வைரஸ் தாக்கத்தைக் குறைக்கும் என்று தனது குறிப்புகளில் அவர் எழுதி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சீனாவில் கோவிட்-19 பாதித்த நோயாளிகளுக்குத் தினமும் 3 வேளை தேநீர் கொடுக்கப்பட்டது என்றும் கூறும் அந்தப் பதிவுகள் பரவலாகப் பகிரப்படுகின்றன.

தேநீரில் மெதிலெக்ஸான்தைன்கள் இருக்கிறது என்பது உண்மை.  அது காபி, சாக்லெட்டிலும் கூட இருக்கிறது.

ஆனால் இதன் தாக்கம் பற்றி டாக்டர் லீ வென்லியாங் ஆராய்ச்சி செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அவர் வைரஸ் நிபுணர் என்பதைக் காட்டிலும் கண் சிறப்பு மருத்துவர். - சீனாவில் கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவமனைகளிலும் தேநீர் தரப்படவில்லை.
 

https://www.bbc.com/tamil/india-52350644

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகெங்கினும் உள்ள லொக்  டவுனில் தேவையில்லாத வருத்தங்களுக்கு  என்று சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்க போவது போல் வைத்தியரை பார்க்க  வரிசையில் நிக்கும் நோயாளிகள் எங்கு போனார்கள் ?

அப்ப  இவ்வளவு காலமும் வைத்தியர்கள் முக்கியமாய் பல்லு  வைத்தியர்கள் தேவையில்லாமல் அதை புடுங்கி இதை புடுங்கி பணம் பார்த்து இருக்கினம் என்பது உண்மை .

கொரனோ  மூலம் பல உண்மைகள் உலகிற்கு சொல்லப்படுது .

தீர்வுகள் அருகில் இருந்தாலும் எவனாவது பட்டமெடுத்த அறிவாளி எனப்படுகின்றவர் அதை பிழை என்பதும் ஆனால் வைரஸ் எப்படி பரவுது எவ்வளவு நாள் உயிர்ப்புடன் இன்ன இடங்களில் இருக்கும் என்பதெல்லாம் தெரியாது அவருக்கு .

பல நூற்றாண்டு களாக ஸ்கெர்வி நோய்க்கு தீர்வை தேடி அலைந்து மனித குலம்   கடைசியில் கொள்ளை புறம் நிக்கும் தேசிக்காய் தான் தீர்வாகியது.

https://www.linkedin.com/posts/queen's-university-belfast_coronavirus-covid19-covid19uk-activity-6650458234136199168-1rYq?utm-source=twitter&utm-medium=organicsocial&utm-content=ba6cb70a-79ed-4cb1-a541-1262fcb67b92 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இந்த உலகெங்கினும் உள்ள லொக்  டவுனில் தேவையில்லாத வருத்தங்களுக்கு  என்று சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்க போவது போல் வைத்தியரை பார்க்க  வரிசையில் நிக்கும் நோயாளிகள் எங்கு போனார்கள் ?

அப்ப  இவ்வளவு காலமும் வைத்தியர்கள் முக்கியமாய் பல்லு  வைத்தியர்கள் தேவையில்லாமல் அதை புடுங்கி இதை புடுங்கி பணம் பார்த்து இருக்கினம் என்பது உண்மை .

கொரனோ  மூலம் பல உண்மைகள் உலகிற்கு சொல்லப்படுது .

தீர்வுகள் அருகில் இருந்தாலும் எவனாவது பட்டமெடுத்த அறிவாளி எனப்படுகின்றவர் அதை பிழை என்பதும் ஆனால் வைரஸ் எப்படி பரவுது எவ்வளவு நாள் உயிர்ப்புடன் இன்ன இடங்களில் இருக்கும் என்பதெல்லாம் தெரியாது அவருக்கு .

பல நூற்றாண்டு களாக ஸ்கெர்வி நோய்க்கு தீர்வை தேடி அலைந்து மனித குலம்   கடைசியில் கொள்ளை புறம் நிக்கும் தேசிக்காய் தான் தீர்வாகியது.

https://www.linkedin.com/posts/queen's-university-belfast_coronavirus-covid19-covid19uk-activity-6650458234136199168-1rYq?utm-source=twitter&utm-medium=organicsocial&utm-content=ba6cb70a-79ed-4cb1-a541-1262fcb67b92 

இதற்கு எனது தாயாரே சிறந்த உதாரணம். ஆரம்பத்தில் அருக்கு எந்த நோயும் இருந்ததில்லை. நாளடைவில் எனக்கு அப்பிடி இருக்கு இப்பிடி இருக்கு அங்க குத்துது இஞ்ச குத்துது, தல ஒரு மாதிரி இருக்கு என்றெல்லாம் சொல்லுவார். ஆனால் மருத்துவர்களால் எந்த நோயையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ☹️

ஆனாலும் மாதமொரு தடவையாகினும் தவறாது வைத்தியரிடம் செல்வார். அது சிறிது சிறிதாக அதிகரித்து கிழமைக்கு ஒருதடவை என்றாகியது. 😏

தற்போது கொறானாக் காலம். அவருக்கு மிகச் சாதாரண வியாதிகளைத் தவிர(காச்சல், தடிமன்) எந்த வருத்தமும் இல்லை. வைத்தியரிடமும் செல்வதில்லை. அவருடைய  வயது 72. 😉

நாங்களோ கொறோனாவுக்கு நன்றி சொல்ல வேண்டிய நிலையில் 😂.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இதற்கு எனது தாயாரே சிறந்த உதாரணம். ஆரம்பத்தில் அருக்கு எந்த நோயும் இருந்ததில்லை. நாளடைவில் எனக்கு அப்பிடி இருக்கு இப்பிடி இருக்கு அங்க குத்துது இஞ்ச குத்துது, தல ஒரு மாதிரி இருக்கு என்றெல்லாம் சொல்லுவார். ஆனால் மருத்துவர்களால் எந்த நோயையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ☹️

ஆனாலும் மாதமொரு தடவையாகினும் தவறாது வைத்தியரிடம் செல்வார். அது சிறிது சிறிதாக அதிகரித்து கிழமைக்கு ஒருதடவை என்றாகியது. 😏

தற்போது கொறானாக் காலம். அவருக்கு மிகச் சாதாரண வியாதிகளைத் தவிர(காச்சல், தடிமன்) எந்த வருத்தமும் இல்லை. வைத்தியரிடமும் செல்வதில்லை. அவருடைய  வயது 72. 😉

நாங்களோ கொறோனாவுக்கு நன்றி சொல்ல வேண்டிய நிலையில் 😂.

அது மட்டும்தானா மேல் உள்ள லிங்க் பற்றி சொல்லணும் உலகமெல்லாம் மாஸ்க் அடிபட  3d  பிரிண்டர் மூலமாக மாஸ்க் தயாரிப்பு மட்டுமல்ல nhs சப்பிளை நடக்குது .

Link to comment
Share on other sites

2 minutes ago, பெருமாள் said:

அது மட்டும்தானா மேல் உள்ள லிங்க் பற்றி சொல்லணும் உலகமெல்லாம் மாஸ்க் அடிபட  3d  பிரிண்டர் மூலமாக மாஸ்க் தயாரிப்பு மட்டுமல்ல nhs சப்பிளை நடக்குது .

அது மாஸ்க் அல்ல முகத்தைச் சுற்றிய பிளாஸ்டிக் கண்ணாடிக் கவசம். என்னுடன் வேலை செய்பவர்களும் எமது நிறுவனத்திலுள்ள 3d  பிரிண்டரினைப் பயன்படுத்தி இவற்றைச் செய்து கொடுத்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, இணையவன் said:

அது மாஸ்க் அல்ல முகத்தைச் சுற்றிய பிளாஸ்டிக் கண்ணாடிக் கவசம். என்னுடன் வேலை செய்பவர்களும் எமது நிறுவனத்திலுள்ள 3d  பிரிண்டரினைப் பயன்படுத்தி இவற்றைச் செய்து கொடுத்தனர்.

ஆமாம் பிழை என்னில்தான்  face shields  என்பதை கவனிக்காமல் விட்டேன் .நன்றி திருத்தியமைக்கு .

Link to comment
Share on other sites

3 hours ago, பெருமாள் said:

இந்த உலகெங்கினும் உள்ள லொக்  டவுனில் தேவையில்லாத வருத்தங்களுக்கு  என்று சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்க போவது போல் வைத்தியரை பார்க்க  வரிசையில் நிக்கும் நோயாளிகள் எங்கு போனார்கள் ?

தனிமைப்படுத்தல் முடிவடைந்ததும் அத்தனை வியாதிகளையும் திரட்டிக் கொண்டு வரிசையில் வருவார்கள். 😀. இது தவிர வீட்டில் சும்மா இருந்து சாப்பிட்டு, கொலஸ்ரரோனையும் சீனியையும் நன்றாக ஏற்றிக் கொண்டு புதிய வியாதிகளோடு படையெடுக்கப் போகிறார்கள் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.

தனிமைப் படுத்தலில் சாதாரண காய்சல் போன்ற தொற்றுக் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் வரச் சந்தர்ப்பம் குறைவாகையால் தற்போது பிரச்சனைகள் குறைவு. 

 தினமும் அரை மணிநேரம் சாதாரண உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது முடியாதவர்கள் இடம் சிறியதாக இருந்தாலும் வீட்டுக்குள்ளேயே அரை மணி நேரம் நடக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இதற்கு எனது தாயாரே சிறந்த உதாரணம். ஆரம்பத்தில் அருக்கு எந்த நோயும் இருந்ததில்லை. நாளடைவில் எனக்கு அப்பிடி இருக்கு இப்பிடி இருக்கு அங்க குத்துது இஞ்ச குத்துது, தல ஒரு மாதிரி இருக்கு என்றெல்லாம் சொல்லுவார். ஆனால் மருத்துவர்களால் எந்த நோயையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ☹️

ஆனாலும் மாதமொரு தடவையாகினும் தவறாது வைத்தியரிடம் செல்வார். அது சிறிது சிறிதாக அதிகரித்து கிழமைக்கு ஒருதடவை என்றாகியது. 😏

தற்போது கொறானாக் காலம். அவருக்கு மிகச் சாதாரண வியாதிகளைத் தவிர(காச்சல், தடிமன்) எந்த வருத்தமும் இல்லை. வைத்தியரிடமும் செல்வதில்லை. அவருடைய  வயது 72. 😉

நாங்களோ கொறோனாவுக்கு நன்றி சொல்ல வேண்டிய நிலையில் 😂.

 

என்ட அம்மாவும் தான் ...பிள்ளைகள் ஊரில் இருக்கும் மட்டும் அரச ஆஸ்பத்திரிக்கு தான் ஏதாவது அவசரம் என்றால் போறது....பிள்ளைகள் வெளியில் வந்தவுடன் சும்மா ஒரு சின்ன வருத்தத்திற்கு பிரைவேட் கொஸ்பிட்டல் போறது...கிளீனிக் என்று ஒரு டொக்டரிடம் போய் தேவையில்லாமல் கண்ட பாட்டுக்கு மருந்தெடுத்து, மேலே போய் சேர்ந்திட்டா 😌...மருந்துக்களை கண்ட பாட்டுக்கு எடுக்க கூடாது ...கொஞ்ச காலத்தின் பின் வேலை செய்யாது 

3 hours ago, இணையவன் said:

தனிமைப்படுத்தல் முடிவடைந்ததும் அத்தனை வியாதிகளையும் திரட்டிக் கொண்டு வரிசையில் வருவார்கள். 😀. இது தவிர வீட்டில் சும்மா இருந்து சாப்பிட்டு, கொலஸ்ரரோனையும் சீனியையும் நன்றாக ஏற்றிக் கொண்டு புதிய வியாதிகளோடு படையெடுக்கப் போகிறார்கள் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.

தனிமைப் படுத்தலில் சாதாரண காய்சல் போன்ற தொற்றுக் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் வரச் சந்தர்ப்பம் குறைவாகையால் தற்போது பிரச்சனைகள் குறைவு. 

 தினமும் அரை மணிநேரம் சாதாரண உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது முடியாதவர்கள் இடம் சிறியதாக இருந்தாலும் வீட்டுக்குள்ளேயே அரை மணி நேரம் நடக்கலாம். 

நானும் ஒரு உதாரணம்...இன்னும் கொஞ்ச நாள் வீட்ல இருந்தால் வெடித்திடுவேன்😂 ...என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று வேலைக்கு போறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

என்ட அம்மாவும் தான் ...பிள்ளைகள் ஊரில் இருக்கும் மட்டும் அரச ஆஸ்பத்திரிக்கு தான் ஏதாவது அவசரம் என்றால் போறது....பிள்ளைகள் வெளியில் வந்தவுடன் சும்மா ஒரு சின்ன வருத்தத்திற்கு பிரைவேட் கொஸ்பிட்டல் போறது...கிளீனிக் என்று ஒரு டொக்டரிடம் போய் தேவையில்லாமல் கண்ட பாட்டுக்கு மருந்தெடுத்து, மேலே போய் சேர்ந்திட்டா 😌...மருந்துக்களை கண்ட பாட்டுக்கு எடுக்க கூடாது ...கொஞ்ச காலத்தின் பின் வேலை செய்யாது 

 

எனது தந்தயாருக்கு கர்றாக் (கண் புரை) பிரச்சனை. கண்டியிலுள்ள தனியார் கண் வைத்தியசாலைக்குத்தான் போவேன் என்று விடாப் பிடியாய் நின்றார். தனியார் வைத்தியசாலைக்குப் போனால் செலவுதான் மிஞ்சும். செய்யப் போகும் வைத்தியத்தில் நிச்சயம்  பெரிய வேறுபாடு இராது என்று எவ்வளவோ அடுத்துச்  சொல்லியும் கேட்ட்கவில்லை.

சரி போங்கோ என்று சொல்லியாயிற்று. 

ஒரு நாள் தற்செயலாய் எனக்கு நன்கு பரிச்சயமான வைத்தியர் ஒருவரைக் கண்டேன். பரஸ்பரம் குடும்பங்களை சுகம் விசாரிக்கும்போது என்னுடைய தகப்பனாரின் கண் புரை சத்திர சிகிச்சை பற்றி கூறினேன். அவர் கொழும்பிலுள்ள அரசினர் பொது வைத்தியசாலைதான் சிறந்தது. அங்கேதான் மிக நவீன வசதிகளெல்லாம் இருக்கென்று கூறி அங்கேதான் அனுப்புங்கோ என்றார். இதை எனது அப்பாவிடம் கூறினேன். சரி தம்பி நான் அங்கே போகிறேன் என்று கூறினார்.

கண் சத்திர சிகிச்சை முடிந்து வீடு வந்த பின்னர் கேட்டேன் " எப்படியப்பா ஒப்பறேசன். கண் எப்பிடி ஒருக்குதெண்டு. 

அப்பா கூறினார்

" தம்பி நல்லகாலம்.ரெண்டரை லட்சம்  ரூபாய் மிச்சம்"
 

😜😜😜😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

நானும் ஒரு உதாரணம்...இன்னும் கொஞ்ச நாள் வீட்ல இருந்தால் வெடித்திடுவேன்😂 ...என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று வேலைக்கு போறன் 

அட நாங்கள் என்னவோ ரதி எண்டால்  கொடி இடையாள் !  அன்ன நடை !! என்றெல்லாம் எல்லவோ கற்பனை பண்ணி வச்சிருக்கிறம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

அட நாங்கள் என்னவோ ரதி எண்டால்  கொடி இடையாள் !  அன்ன நடை !! என்றெல்லாம் எல்லவோ கற்பனை பண்ணி வச்சிருக்கிறம்??

எனக்கும் ஏமாற்றம்தான். 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Eppothum Thamizhan said:

அட நாங்கள் என்னவோ ரதி எண்டால்  கொடி இடையாள் !  அன்ன நடை !! என்றெல்லாம் எல்லவோ கற்பனை பண்ணி வச்சிருக்கிறம்??

கொடியிடையா😉 அப்படின்னா 🤔

Link to comment
Share on other sites

On 21/4/2020 at 20:06, ரதி said:

கொடியிடையா😉 அப்படின்னா 🤔

இந்த வீடியோவில் ஆடும் அழகிகளையும் பார்த்துப் பாடலையும் கேளுங்கள் புரியும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.   வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.   பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.   நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.   பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.   கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.