Jump to content

70ப‌து பெண்க‌ளை காத‌ல் என்று சொல்லி ஏமாத்தி காசை ஆட்டைய‌ போட்ட‌ இளைஞ‌ன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவனை மட்டும்  குறை செல்ல முடியாது ஏமாறும் பொண்களை தான் சொல்லனும், அத்துடன் பெற்றோரின் கவனிப்பும் இல்லாமையும். முன்பின் தெரியாமல்  facebook , whatsapp இல் இணைந்தாவனுடன் காதல் செய்தால்  இப்படிதான்.

இவனும் காவிகளும் ஓன்றே, தேடிப்போபவர்கள் தான் கவனமாக இருக்கனும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை பார்த்து விட்டு... 
"70 வயது பெண்களை.. காத‌ல் என்று சொல்லி, ஏமாத்தி காசை ஆட்டைய‌ போட்ட‌ இளைஞ‌ன்."
என்று வாசித்து விட்டேன். பிறகு தான் தெரிந்தது... 
நம்ம பையன்... அப்பிடித்தான், எழுதுவான் என்று,
மனதை... சமாதானமாக்கி  கொண்டேன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆபாசப்பட விவகாரம் - காசி விரித்த வலையில் பள்ளி தோழி முதல் பெண் டாக்டர் வரை சிக்கியது எப்படி?

பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக
பொள்ளாச்சி சம்பவத்தை போல் பல பெண்களை சீரழித்த குமரி இளைஞர் காசி

தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்று நாகர்கோவில் காசி விவகாரம். பள்ளி மாணவிகள் தொடங்கி கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் என சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களிடம் அன்பாக பழகி காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஏமாற்றி வீடியோ எடுத்து பணம் பறித்து வந்த காசி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்துள்ளது தமிழக காவல்துறை.

யார் இந்த காசி என்ற சுஜி?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி என்ற சுஜி (26). இவர் இன்ஜினீயரிங் படித்துள்ளார். காசியின் தந்தை, அதே பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். கல்லூரி படிப்பு முடித்த காசி, தந்தைக்கு உதவியாக கடையில் இருந்து வந்தார்.இறைச்சி வியாபாரம் முடிந்த பின்பு சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.பெண்ணியம் குறித்தும், பெண்களின் நலன் பற்றியும் பல கருத்துக்களை பதிவிடுவார்.

பார்ப்பதற்கு கட்டுமஸ்தான உடலமைப்பு, சிவப்பு நிறம், ஆடம்பரமான ஆடைகள், விலை உயர்ந்த பைக்கில் இருப்பது போன்ற போட்டோக்கள், வீடியோக்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பெண்கள் பலர் காசியை காதலித்துள்ளனர். அந்த பெண்களை மயக்கும் விதமாக காசி அவ்வப்போது போட்டோக்கள், டிக் டாக் வீடியோக்கள் என பதிவிட்டு வந்துள்ளார். இவர் இளம்பெண்களுடன் தனிமையில் நெருக்கமாக இருப்பதை ஆபாச வீடியோவாக பதிவு செய்து பணம் சம்பாதித்துள்ளார். 

இதே போல் சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் பணிபுரிந்த பெண் மருத்துவரிடம் பழகி அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற போது மருத்துவர் அளித்த புகாரில் கைதாகி நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பள்ளி தோழியிடம் இருந்து தொடக்கம்

காசியின் பள்ளி தோழி ஒருவர் விமான பணிப்பெண்ணாக உள்ளார். இருவரும் நாகர்கோவிலில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் படித்துள்ளனர். சென்னையில் விமான பணிப்பெண்ணுக்கான படிப்பில் இருந்தபோது மீண்டும் காசியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதை தனக்கு சாதகமாக்கிய காசி, அப்பெண் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, அந்த பெண்ணுடன் தனிமையில் இருப்பதை விளையாட்டாக வீடியோ எடுப்பது போல் வீடியோவும் எடுத்துள்ளார் காசி.

காசி

ஒரு நாள் திடீரென தனது அம்மாவுக்கு புற்றுநோய் உள்ளதாகவும்; அதற்கு மருந்து வாங்க வேண்டும் என்று 1.50 லட்சம் பணமும், 16 கிராம் தங்க நகைகளையும் வாங்கியுள்ளார். அதே போன்று பல காரணங்களைச் சொல்லி அடிக்கடி அந்த பெண்ணிடம் பணம் பெற்றுள்ளார். குறிப்பிட்ட சில நாட்களுக்கு பின் காசி அந்த பெண்ணுக்கு போன் செய்வதை நிறுத்தி கொண்டதுடன் அவருடைய தொடர்பையும் தவிர்த்து வந்துள்ளார். 

காசியால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், காசியிடம் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார்.பணத்தை திருப்பிக்கேட்டால்,நாம் இருவரும் இருந்த அந்தரங்க வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதை தொடர்ந்து செய்வதறியாது தவித்த அந்த பெண், தற்போது காசி காவல்துறையினரிடம் சிக்கியது தெரிந்ததும் காசி மீது புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர்

சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து தனது கருத்தை வீடியோவாக பதிவு செய்து அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். டாக்டரின் கருத்துக்கு எதிராக கருத்து விடியோ பதிவு செய்து வந்துள்ளார் 

காசி.இவ்வாறு தனக்கு எதிராக கருத்து சொன்ன பெண் மருத்துவரிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். அந்த மருத்துவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாகியுள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அப்போது இருவரும் நெருக்கமாக இருப்பதை காசி படம் எடுத்துள்ளார்.தனது குடும்ப உறுப்பினருக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி கொஞ்சம் கொஞ்சமாக பெண் மருத்துவரிடமிருந்து ஒரு லட்சம் இரண்டு லட்சம் என ஆறரை லட்சம் ரூபாய் வரை காசி பெற்றுள்ளார்.

காசி சிக்கியது எப்படி?

காசி

ஒரு முறை இருவரும் நேரில் சந்தித்து கொண்டபோது காசியின் செல்போனை பெண் மருத்துவர் எடுத்து பார்த்துள்ளார். அப்போது காசி பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் செல்போனில் இருந்துள்ளன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் டாக்டர், காசியிடம் இருந்து விலகத் தொடங்கினார். 

ஆத்திரமடைந்த காசி, தினசரி பெண் மருத்துவரை பணம் கேட்டு அதிகமாக தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளார்.

பெண் மருத்துவர் பணம் தர மறுத்ததையடுத்து பணம் தராவிட்டால் இருவரும் தனிமையில் இருந்த அந்தரங்கப் படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். ஆனால் பெண் டாக்டர் எந்த மிரட்டலுக்கும் பயப்படவில்லை எனவே, கடந்த புதன்கிழமை காசி தனது போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றில் பெண் மருத்துவர், கன்னியாகுமரி விடுதியில் தங்கியிருந்த போது ரகசிய கேமராவில் எடுத்த அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

கோப்புப்படம்NURPHOTO

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் மருத்துவர், உடனடியாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்யிடம் ஆன்லைனில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் காசியிடம் நடத்திய விசாரணையில் பெண் டாக்டரை மிரட்டியதை போன்று பணத்திற்காக பல பெண்களை மிரட்டி ஏமாற்றியது தெரிய வந்ததையடுத்து காசி மீது நாகர்கோவிலில் உள்ள இரு காவல்நிலையங்களில் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காசியை சிறையில் அடைத்தனர்.

கிடுக்குபிடி விசாரணை

போலீசார் நடத்திய விசாரணையில் பல பெண்களை காசி,ஏமாற்றியது தெரிய வந்தது. இந்த குற்றங்களை காசி ஒருவர் மட்டுமே செய்திருக்க வாய்ப்பு இல்லை என போலிசாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் காசியுடன் நெருக்கமாக இருந்த நண்பர்கள் சிலரிடம் போலிசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்களை காசி ஏமாற்றியது எப்படி?

போட்டோக்கள் மற்றும் வீடியோவில் காசியுடன் நெருங்கி பழகிய நண்பர்கள் மட்டுமின்றி, அவருடன் நெருக்கமாக இருக்கும் இளம் பெண்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அவர்களையும் விசாரித்து வாக்குமூலம் பெற தனி பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாதிக்கப்பட்டது போல், காசி தலைமையில் நாகர்கோவிலிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாக விசாரணை நடத்தி வரும் தனி பிரிவு போலிசார் தெரிவித்தனர்.

குமரியில் நடந்த இச்சம்பவம் குறித்து அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் லீமா ரோஸ் பிபிசி தமிழிடம் பேசுகையில் "இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் குமரி மாதர் சங்கம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் ஆன்லைனில் மனு அளித்தோம்".

"சென்னையில் உள்ள மாதர் சங்கம் சார்பில் சென்னை காவல் உயர் அதிகாரிகளிடமும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மாதர் சங்கம் சார்பில் குமரி மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.". என்றார் லீமா ரோஸ்.

காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கதக்கது

"இந்த வழக்கில் இதுவரை ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார் ஆனால் அவர் மட்டும் இதை தனியாக செய்திருக்கவாய்ப்பு இல்லை.

இவனுக்கு பின்னால் அரசியல்வாதிகள், பணம்படைத்தவர்கள் இருக்க அதிக வாய்ப்பு உண்டு.எனவே அவனுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

'இவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை, பெங்களூர்,குமரி என தமிழகம் உட்பட வெளி மாநிலங்களிலும் உள்ளதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்" என்றார்.

பொள்ளாச்சியை விட இது மிக மோசமானது

'குமரியில் நடந்துள்ள இந்த சம்பவம் பொள்ளாச்சியை விட மிக மோசமானது இதில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் பெயர் வெளியே வராத அளவு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்'.

'தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள எவரும் இம்மாதிரியான குற்றங்களை செய்யாமலிருக்க கடுமையான தண்டனை வழங்க வேண்டும்' என்கிறார் லீமா ரோஸ்.

லீமா ரோஸ். லீமா ரோஸ்

இந்த வழக்கு குறித்து குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் பிபிசி தமிழிடம் பேசுகையில் 'பல பெண்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் காசி கைது செய்யபட்டுள்ளார். காசி குறித்து தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது'.

காசி மீது குண்டர் சட்டம்

அவர் மேலும் கூறியதாவது, 'காசியிடம் இருந்து கைபற்றப்பட்ட லேப்டாப்,ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ்,மொபைல் போன,சிடி ஆகியவற்றை மாவட்ட காவல் சைபர் கிரைம் போலிசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 50க்கும் அதிகமான வீடியோக்கள் கண்டுபிக்கப்ட்டுள்ளது.

'காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் எண்ணுடைய மொபைல் எண்ணான 94981 11103 க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிப்பவர்கள் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்' என்றார்.

மேலும் அவர் பேசுகையில் 'சமூக வலைதளங்களில் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் தெரியாத நபர்களிடம் ONLINE CHAT செய்ய வேண்டாம்'. 'இன்ஸ்டாகிராம், பேஸ்புக், போன்ற சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாதவர்கள் பதிவு செய்யும் புகைபடங்கள்,வீடியோக்களுக்கு லைக் போடும் போது கவனமாக இருக்க வேண்டும்.'

'காசி போன்ற நபர்கள் பெண்களை குறிவைத்து ஏமாற்றி வருகின்றனர் இப்படியான நபர்கள் பெண்களை தொடர்பு கொண்டு மிரட்டினால் தைரியமாக காவல்துறையிடம் புகார் கொடுங்கள் அல்லது நம்பிக்கையானவர்களிடம் தெரிய படுத்துங்கள்'.

'பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்;கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்'குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்.

ஸ்ரீநாத் ஸ்ரீநாத்

இந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து பிபிசி தமிழ் காசியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தது ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவிலை சேர்ந்த காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் பரிந்துரையின் பேரில் குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

காசியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை தொடர்பு கொள்ள பிபிசி தமிழ் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. அவர்கள் தரப்பு இது குறித்து விளக்கம் அளித்தவுடன், அந்த விளக்கம் பிரசுரிக்கப்படும.

 

https://www.bbc.com/tamil/india-52482238

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

பெண்ணியம் குறித்தும், பெண்களின் நலன் பற்றியும் பல கருத்துக்களை பதிவிடுவார்.

சமூக வலையில்.. பெண்ணியம்.. பெரியாரிசும்.. பேசுறதுகள் பலது இதே தான். இவர் மட்டுமல்ல.. இவருக்கு முன்னரும் பலர் இதே திருவிளையாடல்களை செய்துள்ளனர். சிலர் இப்போ பெரிய பிரபல்யங்களாகியும் விட்டனர். இவர் பிடிபட்டுப் போனார் அவ்வளவே.

இது ஒன்றும் புதிதல்ல. ஏலவே பல பாடங்கள் படித்தும் திருந்துவதாக இல்லை பெண்கள் சமூகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

தலைப்பை பார்த்து விட்டு... 
"70 வயது பெண்களை.. காத‌ல் என்று சொல்லி, ஏமாத்தி காசை ஆட்டைய‌ போட்ட‌ இளைஞ‌ன்."
என்று வாசித்து விட்டேன். பிறகு தான் தெரிந்தது... 
நம்ம பையன்... அப்பிடித்தான், எழுதுவான் என்று,
மனதை... சமாதானமாக்கி  கொண்டேன். :grin:

மாண்புமிகு த‌மிழ் சிறி அண்ணா , இது யாழ் க‌ள‌ம்  அது தான் நாக‌ரிக‌மான‌ முறையில் த‌லைப்பை போட்டேன் ,  இளைஞ‌ன் காத‌ல் என்ற‌ பெய‌ரில் பெண்க‌ளுட‌ன் எடுத்த‌ ஆபாசா காணொளிக‌ளை காட்டி  ப‌ண‌ம் ப‌றித்தார் என்று போட‌ ம‌ன‌ம் வ‌ர‌ல‌ /

அது ச‌ரி த‌மிழ் சிறி அண்ணா , இவ‌னுக்கு என்ன‌ த‌ண்டனை குடுக்க‌னும் என்று எழுத‌ல‌ 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

இவனை மட்டும்  குறை செல்ல முடியாது ஏமாறும் பொண்களை தான் சொல்லனும், அத்துடன் பெற்றோரின் கவனிப்பும் இல்லாமையும். முன்பின் தெரியாமல்  facebook , whatsapp இல் இணைந்தாவனுடன் காதல் செய்தால்  இப்படிதான்.

இவனும் காவிகளும் ஓன்றே, தேடிப்போபவர்கள் தான் கவனமாக இருக்கனும் 

உடையார் ஜ‌யா , இவ‌ன் ந‌ல்ல‌வ‌ன் போல் ப‌ல‌ பெண் பிள்ளைக‌ளுக்கு ந‌டித்து காட்டி இருக்கிறான் , ப‌ள்ளி பிள்ளைக‌ளுக்கு பெரிசா சிந்திக்கும் திற‌மை இல்லை ,

ஏன் இங்கை டென்மார்க்கில் பேஸ்வுக்கை மாதிரி ARTO என்ற‌ பொது வெளி த‌ள‌ம் இருந்த‌து , என்னை விட‌ கொஞ்ச‌ம்  வ‌ய‌து குறைந்த‌ பிள்ளை என்னோடு  chat ப‌ண்ணிட்டு கேட்டா , கோயில் திருவிழாவுக்கு வா இர‌ண்டு பேரும் சோடா குடிச்சு கொண்டு க‌தைப்போம் என்று 😁😁 , ஆளை விட‌ம்மா என்று நான் எஸ்கேப் ஆகிட்ட‌ன் 😁😁 , என்  கூட‌ எழுதின‌ அந்த‌ பொண்ணு இந்த‌ காணொளியில் இருப்ப‌வ‌ர்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ளிட‌ம் எம்பிட‌னும் , அப்ப‌டியான‌ பிள்ளைக‌ளின் எதிர் கால‌ம் கேள்வி குறியா போய் விடும்  உடையார் ஜ‌யா 😓   /

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, nedukkalapoovan said:

சமூக வலையில்.. பெண்ணியம்.. பெரியாரிசும்.. பேசுறதுகள் பலது இதே தான். இவர் மட்டுமல்ல.. இவருக்கு முன்னரும் பலர் இதே திருவிளையாடல்களை செய்துள்ளனர். சிலர் இப்போ பெரிய பிரபல்யங்களாகியும் விட்டனர். இவர் பிடிபட்டுப் போனார் அவ்வளவே.

இது ஒன்றும் புதிதல்ல. ஏலவே பல பாடங்கள் படித்தும் திருந்துவதாக இல்லை பெண்கள் சமூகம். 

ச‌கோத‌ரா , நாங்க‌ள் பிற‌ந்து வ‌ள‌ந்த‌து த‌மிழீழ‌த்தில் , உற‌வின‌ர்க‌ளுக்கு ப‌ய‌ம் , பாட‌சாலை போனா ஆசிரிய‌ர்க‌ளுக்கு ப‌ய‌ம் , எங்க‌ளுக்கு சிறு வ‌ய‌து முத‌லே உற‌வின‌ர்க‌ளும் ஆசிரிய‌ர்க‌ளும் எங்க‌ளுக்கு ந‌ல்ல‌தை சொல்லி த‌ந்து ந‌ல்ல‌ நிலையில் எங்க‌ளை வ‌ள‌த்து விட்ட‌வை , எங்க‌ட‌ நாட்டு இளைஞ‌ர்க‌ள் காத‌ல் க‌த்த‌ரிக்காயை விட‌ எம் போராட்ட‌த்தையும் எம் த‌லைவ‌ரையும் அதிக‌ம் நேசிச்ச‌வை , இப்ப‌டியான‌ அசிங்க‌மான‌ செய‌லில் ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ள் ஒரு போதும் ஈடு ப‌ட‌ மாட்டார்க‌ள் 👏🙏 ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

மாண்புமிகு த‌மிழ் சிறி அண்ணா , இது யாழ் க‌ள‌ம்  அது தான் நாக‌ரிக‌மான‌ முறையில் த‌லைப்பை போட்டேன் ,  இளைஞ‌ன் காத‌ல் என்ற‌ பெய‌ரில் பெண்க‌ளுட‌ன் எடுத்த‌ ஆபாசா காணொளிக‌ளை காட்டி  ப‌ண‌ம் ப‌றித்தார் என்று போட‌ ம‌ன‌ம் வ‌ர‌ல‌ /

அது ச‌ரி த‌மிழ் சிறி அண்ணா , இவ‌னுக்கு என்ன‌ த‌ண்டனை குடுக்க‌னும் என்று எழுத‌ல‌ 😉

கரந்தை ஜெயக்குமார்: சிரிப்போம் ...

பையா.... இவங்களுக்கு, இருட்டடி  கொடுத்து, 
பாக்கு வெட்டியால்..  அதை  "கட்"  பண்ணி விட வேணும் என்று, ஆசை இருந்தாலும்..
நடக்கிற காரியமா

தமிழகத்தில்.... இதற்கு முன் எத்தனையோ... பாலியல் வன் கொடுமைகள் நடந்தும்,
அவர்கள்... அரசியல் செல்வாக்காலும், செல்வ செழிப்பாலும்...
சட்டத்தில்,  இருந்து தப்பி... வந்து விடுகிறார்கள்.

இப்படியான செயல்களை... அரசும், நீதித்துறையும்... 
கடுமையான நடவடிக்கைள்,எடுக்கத் தவறாத பட்சத்தில்... 
இந்தச் சம்பவமும், இரண்டு மூன்று கிழமைகளில்...மக்களால் மறக்கப் பட்டு,  
புதிய ஒரு.... காமக் கொடூரன் உருவாகி வருவான். 

அதனைத்தான்... அரசியல் வாதிகளும், நீதித்துறையும்... விரும்புகின்றதோ தெரியவில்லை. 😥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பையன்26 said:

ச‌கோத‌ரா , நாங்க‌ள் பிற‌ந்து வ‌ள‌ந்த‌து த‌மிழீழ‌த்தில் , உற‌வின‌ர்க‌ளுக்கு ப‌ய‌ம் , பாட‌சாலை போனா ஆசிரிய‌ர்க‌ளுக்கு ப‌ய‌ம் , எங்க‌ளுக்கு சிறு வ‌ய‌து முத‌லே உற‌வின‌ர்க‌ளும் ஆசிரிய‌ர்க‌ளும் எங்க‌ளுக்கு ந‌ல்ல‌தை சொல்லி த‌ந்து ந‌ல்ல‌ நிலையில் எங்க‌ளை வ‌ள‌த்து விட்ட‌வை , எங்க‌ட‌ நாட்டு இளைஞ‌ர்க‌ள் காத‌ல் க‌த்த‌ரிக்காயை விட‌ எம் போராட்ட‌த்தையும் எம் த‌லைவ‌ரையும் அதிக‌ம் நேசிச்ச‌வை , இப்ப‌டியான‌ அசிங்க‌மான‌ செய‌லில் ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ள் ஒரு போதும் ஈடு ப‌ட‌ மாட்டார்க‌ள் 👏🙏 ,

நான் அறிய பிரான்ஸில் இருந்து ஒருவர் பெண்ணியம்.. பெரியாரிசம்.. பேசிப் பேசி பெண்களை மடக்கி.. இப்ப பெரிய பகுத்தறிவு வாதியாக மட்டுமல்ல.. விடுதலைப்புலிகளையும் தலைமையையும் படுமோசமாக சித்தரிக்கும் அளவுக்கு வளர்த்திட்டார். இப்படிப் பலர். இவர்களும் ஈழத்தவர்கள் தான். 

விடுதலைப்புலிகளின் சமூகக் கட்டுப்பாட்டை  நன்னடத்தைகளை விரும்பாத பல தறுதலைகள் தப்பி வெளிநாட்டுக்கு ஓடியாந்து போடுற கூத்து அதிகம். அவர்கள் ஒளிய கிடைத்திருக்கும்.. விடயங்கள்.. பெண்ணியம்.. பெரியாரிசம்... புலியெதிர்ப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பையன்26 said:

உடையார் ஜ‌யா , இவ‌ன் ந‌ல்ல‌வ‌ன் போல் ப‌ல‌ பெண் பிள்ளைக‌ளுக்கு ந‌டித்து காட்டி இருக்கிறான் , ப‌ள்ளி பிள்ளைக‌ளுக்கு பெரிசா சிந்திக்கும் திற‌மை இல்லை ,

ஏன் இங்கை டென்மார்க்கில் பேஸ்வுக்கை மாதிரி ARTO என்ற‌ பொது வெளி த‌ள‌ம் இருந்த‌து , என்னை விட‌ கொஞ்ச‌ம்  வ‌ய‌து குறைந்த‌ பிள்ளை என்னோடு  chat ப‌ண்ணிட்டு கேட்டா , கோயில் திருவிழாவுக்கு வா இர‌ண்டு பேரும் சோடா குடிச்சு கொண்டு க‌தைப்போம் என்று 😁😁 , ஆளை விட‌ம்மா என்று நான் எஸ்கேப் ஆகிட்ட‌ன் 😁😁 , என்  கூட‌ எழுதின‌ அந்த‌ பொண்ணு இந்த‌ காணொளியில் இருப்ப‌வ‌ர்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ளிட‌ம் எம்பிட‌னும் , அப்ப‌டியான‌ பிள்ளைக‌ளின் எதிர் கால‌ம் கேள்வி குறியா போய் விடும்  உடையார் ஜ‌யா 😓   /

 

இவனைபோல் இன்னும் எத்தனை பேரோ வெளியில், இவனுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக இருக்கனும், ஆனா நீதி துறையில்ல விளையாடி வெளியே வந்துடுவான் கொஞ்ச காலத்தில்😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

நான் அறிய பிரான்ஸில் இருந்து ஒருவர் பெண்ணியம்.. பெரியாரிசம்.. பேசிப் பேசி பெண்களை மடக்கி.. இப்ப பெரிய பகுத்தறிவு வாதியாக மட்டுமல்ல.. விடுதலைப்புலிகளையும் தலைமையையும் படுமோசமாக சித்தரிக்கும் அளவுக்கு வளர்த்திட்டார். இப்படிப் பலர். இவர்களும் ஈழத்தவர்கள் தான். 

விடுதலைப்புலிகளின் சமூகக் கட்டுப்பாட்டை  நன்னடத்தைகளை விரும்பாத பல தறுதலைகள் தப்பி வெளிநாட்டுக்கு ஓடியாந்து போடுற கூத்து அதிகம். அவர்கள் ஒளிய கிடைத்திருக்கும்.. விடயங்கள்.. பெண்ணியம்.. பெரியாரிசம்... புலியெதிர்ப்பு. 

கனடாவிலையும் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

கரந்தை ஜெயக்குமார்: சிரிப்போம் ...

பையா.... இவங்களுக்கு, இருட்டடி  கொடுத்து, 
பாக்கு வெட்டியால்..  அதை  "கட்"  பண்ணி விட வேணும் என்று, ஆசை இருந்தாலும்..
நடக்கிற காரியமா

தமிழகத்தில்.... இதற்கு முன் எத்தனையோ... பாலியல் வன் கொடுமைகள் நடந்தும்,
அவர்கள்... அரசியல் செல்வாக்காலும், செல்வ செழிப்பாலும்...
சட்டத்தில்,  இருந்து தப்பி... வந்து விடுகிறார்கள்.

இப்படியான செயல்களை... அரசும், நீதித்துறையும்... 
கடுமையான நடவடிக்கைள்,எடுக்கத் தவறாத பட்சத்தில்... 
இந்தச் சம்பவமும், இரண்டு மூன்று கிழமைகளில்...மக்களால் மறக்கப் பட்டு,  
புதிய ஒரு.... காமக் கொடூரன் உருவாகி வருவான். 

அதனைத்தான்... அரசியல் வாதிகளும், நீதித்துறையும்... விரும்புகின்றதோ தெரியவில்லை. 😥

தமிழ் சிறீ,

அந்த ஒரு படமே போதும்.  ஆயிரம் அர்த்தங்கள்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

 

யாரை இருக்கும் அந்த‌ வ‌ள‌ந்து வ‌ரும் த‌றுத‌ல‌ இசை அமைப்பாள‌ர் 😡

இவ‌ர்க‌ள் த‌ங்க‌ளின் ஊட‌க‌த்தில் அவ‌ரின் பெய‌ரை சொல்லா விட்டாலும் , வேறு ஒரு யூடுப் ச‌ண‌ல் திற‌ந்து ம‌க்க‌ளுக்கு ஆதார‌த்தோடு அந்த‌ பிராடு இசை அமைப்பாள‌ர் யார் என்று தெரிவிச்சா அவ‌ர் கூடிய‌ சீக்கிர‌மே த‌னிமை ப‌டுத்த‌ ப‌டுவார் / 

Link to comment
Share on other sites

20 hours ago, nedukkalapoovan said:

நான் அறிய பிரான்ஸில் இருந்து ஒருவர் பெண்ணியம்.. பெரியாரிசம்.. பேசிப் பேசி பெண்களை மடக்கி.. இப்ப பெரிய பகுத்தறிவு வாதியாக மட்டுமல்ல.. விடுதலைப்புலிகளையும் தலைமையையும் படுமோசமாக சித்தரிக்கும் அளவுக்கு வளர்த்திட்டார். இப்படிப் பலர். இவர்களும் ஈழத்தவர்கள் தான். 

விடுதலைப்புலிகளின் சமூகக் கட்டுப்பாட்டை  நன்னடத்தைகளை விரும்பாத பல தறுதலைகள் தப்பி வெளிநாட்டுக்கு ஓடியாந்து போடுற கூத்து அதிகம். அவர்கள் ஒளிய கிடைத்திருக்கும்.. விடயங்கள்.. பெண்ணியம்.. பெரியாரிசம்... புலியெதிர்ப்பு. 

என்ன சார் இவ்வாறான குற்றங்களுக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு? புலிகளின் ஆதரவாளர்களாக  உறுப்பினர்களாக இருந்து இப்படிப்பட்ட குற்றங்களை செய்தவர்களையும் எனக்கு தெரியும். அதற்காக போராளிகள் அதற்கு பொறுப்பேற்க முடியுமா?  குற்றம்  செய்பவர்கள் எல்லாத்தரப்பிலும் உள்ளார்கள். அதற்அகு புலி ஆதரவு, புலி எதிர்பபு என்று எந்த வித்தியாசமும் இல்லை  அது தனி மனித ஒழுக்கம் சார்ந்தது. 

பொதுவாக இப்படியான குற்றங்களை செய்பவர்கள் நல்லவர்கள் போல் நடித்து தான் பின்னர் தமது உண்மை முகத்தை வெளிப்படுத்துவர். ஆகவே தனிமனித குற்றங்களுக்கு அரசியல் சாயம் பூசுவது தவறு.

2009 யுத்த இறுதிக்காலத்தில் தாயகத்தை நேசித்த மக்களை திட்டமிட்டு ஏமாற்றி சுவிஸ் வங்கிகளிடம்  பல ஆயிரம் பிராங்குகளை கடனான பெறவைத்து திரட்டிய மில்லியன் கணக்கான  பணத்தை கொள்ளையடித்த அனைவரும் பிரபாகரனையும் புலிகளையும் சாட்டி தான்அந்த ஈனச்செயலைப் புரிந்தனர்.  அதற்காக பிரபாகரனையும் புலிப் போராளிகளையும் அதற்கு பொறுப்பாளியாக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. அவ்வாறு  கூறிய பலருடன் நான் விவாதித்துள்ளேன்.  அந்த கடனை கட்டி முடியும் வரை கிட்டத்தட்ட 2015 வரை தமது பிள்ளைகளுக்கு நல்ல உடை கூட வாங்க முடியாமல் கஷ்ரத்தின் மத்தியில்  மாத கட்டுத் தொகையை கட்டி முடித்த எத்தனையோ குடும்பங்களை  எனக்கு தெரியும். 

ஆகவே தனி மனித குற்றங்களை அரசியலுடன் இணைத்து உங்களுக்கு பிடிக்காத அரசியல் சித்தாந்தம் உடையவர்கள் எல்லோரும்  குற்றவாளிகள் என்ற பிம்பத்தை உருவாக்க முயலாதீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

ஆகவே தனி மனித குற்றங்களை அரசியலுடன் இணைத்து உங்களுக்கு பிடிக்காத அரசியல் சித்தாந்தம் உடையவர்கள் எல்லோரும்  குற்றவாளிகள் என்ற பிம்பத்தை உருவாக்க முயலாதீர்கள். 

நாங்கள் நிராகரிப்பதை இன்னொருவன் பொறுக்கிறான் என்பதற்காக அவன் மீது குற்றம் சுமத்தும் நிலை எமக்கில்லை.

இங்கு சொல்ல வந்த விடயம் அரசியல் சார்ந்ததும் அல்ல. நாங்களும் தனிநபர்களை பற்றித்தான் சொல்கிறோம். 

தறுதலைகளாக வகுத்துக் கொண்டதுகள் தம்மை பெண்களின் முன் உத்தமர்களாக.. இன்னும் கொஞ்சம்.. கெட்ட உத்தமர்களாக போக்குக் காட்டி பெண்களை வசப்படுத்தும்.. கருவியாக பெண்ணியம்.. பெரியாரிசம்.. புலியெதிர்ப்பை கையாண்டதை தான் சொல்கிறோம். நிதர்சனத்தில் தரிசித்ததை அடிப்படையாகக் கொண்டு.

நீங்கள் ஏன் இதற்குள் அரசியல் சித்தாந்தங்களை புகுத்துகிறீர்கள்.

அரசியல் அறிவற்றதுகள் பேசுவதை எல்லாம் நாங்கள் அரசியல் சித்தாந்தமாகவே கருதுவதில்லை. அதுவேற விடயம். 

குறிப்பாக உங்களின் அனுபவத்தை பாருங்கள்..

சுவிஸில் கடன் எடுத்து மண்மீட்பு நிதிக்கு கொடுத்ததை.. பிரபாகரனுக்கு புலிகளுக்கு கொடுத்ததாகச் சித்தரிக்கிறீர்கள்.

இதே ஊரில் இருந்த மக்கள் பலர் தாமாக முன் வந்து தங்கம் தங்கமாக கொட்டிக் கொடுத்தார்கள் மண்மீட்பு நிதிக்கு. இன்னும் சிலர் கேட்ட போது கொடுக்காமல்.. கொழும்புக்கு போக பாஸ் எடுக்க தங்கத்தை கொடுக்க வேண்டிய சூழலில் கொடுத்தார்கள்.

மேலும்.. தாமாக முன் வந்து பங்களித்த பலருக்கு அது மீளக் கையளிக்கப்பட்டிருந்தது. எங்களுக்கும் கூட.. வழங்கப்பட்ட தங்கத்தை மீளப் பெறுமாறு கடிதம் அனுப்பி.. அதனை மீளக் கையளித்தார்கள். எங்கள் அனுபவமும் உங்கள் அனுபவமும் ஒன்றல்ல. அவரவர் எப்படி ஒரு விடயத்தை கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே பெறுதிகள் அமைகின்றன. 

மண்மீட்பு நிதிக்கு என்று கொடுத்துவிட்டு.. அது எங்கபோகுது என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால்.. அது விளங்கின மாதிரித்தான். அதேபோல்.. உங்களால்.. கொடுக்க முடியாத சூழலில் மண்மீட்பு நிதியை கொடுக்க யாரும் கட்டாயப்படுத்தியதாக எங்கள் அனுபவத்தில் காணவில்லை. 

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

நாங்கள் நிராகரிப்பதை இன்னொருவன் பொறுக்கிறான் என்பதற்காக அவன் மீது குற்றம் சுமத்தும் நிலை எமக்கில்லை.

இங்கு சொல்ல வந்த விடயம் அரசியல் சார்ந்ததும் அல்ல. நாங்களும் தனிநபர்களை பற்றித்தான் சொல்கிறோம். 

தறுதலைகளாக வகுத்துக் கொண்டதுகள் தம்மை பெண்களின் முன் உத்தமர்களாக.. இன்னும் கொஞ்சம்.. கெட்ட உத்தமர்களாக போக்குக் காட்டி பெண்களை வசப்படுத்தும்.. கருவியாக பெண்ணியம்.. பெரியாரிசம்.. புலியெதிர்ப்பை கையாண்டதை தான் சொல்கிறோம். நிதர்சனத்தில் தரிசித்ததை அடிப்படையாகக் கொண்டு.

நீங்கள் ஏன் இதற்குள் அரசியல் சித்தாந்தங்களை புகுத்துகிறீர்கள்.

அரசியல் அறிவற்றதுகள் பேசுவதை எல்லாம் நாங்கள் அரசியல் சித்தாந்தமாகவே கருதுவதில்லை. அதுவேற விடயம். 

குறிப்பாக உங்களின் அனுபவத்தை பாருங்கள்..

சுவிஸில் கடன் எடுத்து மண்மீட்பு நிதிக்கு கொடுத்ததை.. பிரபாகரனுக்கு புலிகளுக்கு கொடுத்ததாகச் சித்தரிக்கிறீர்கள்.

இதே ஊரில் இருந்த மக்கள் பலர் தாமாக முன் வந்து தங்கம் தங்கமாக கொட்டிக் கொடுத்தார்கள் மண்மீட்பு நிதிக்கு. இன்னும் சிலர் கேட்ட போது கொடுக்காமல்.. கொழும்புக்கு போக பாஸ் எடுக்க தங்கத்தை கொடுக்க வேண்டிய சூழலில் கொடுத்தார்கள்.

மேலும்.. தாமாக முன் வந்து பங்களித்த பலருக்கு அது மீளக் கையளிக்கப்பட்டிருந்தது. எங்களுக்கும் கூட.. வழங்கப்பட்ட தங்கத்தை மீளப் பெறுமாறு கடிதம் அனுப்பி.. அதனை மீளக் கையளித்தார்கள். எங்கள் அனுபவமும் உங்கள் அனுபவமும் ஒன்றல்ல. அவரவர் எப்படி ஒரு விடயத்தை கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே பெறுதிகள் அமைகின்றன. 

மண்மீட்பு நிதிக்கு என்று கொடுத்துவிட்டு.. அது எங்கபோகுது என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால்.. அது விளங்கின மாதிரித்தான். அதேபோல்.. உங்களால்.. கொடுக்க முடியாத சூழலில் மண்மீட்பு நிதியை கொடுக்க யாரும் கட்டாயப்படுத்தியதாக எங்கள் அனுபவத்தில் காணவில்லை. 

நெடுக்ஸ் நான் முன்னரே சொன்னது போல்  தறுதலைகளாக வகுத்து கொண்டவர்கள் நல்லவர்கள் போல் நடிப்பது இயல்பு தான். ஆனால்  இதில் புலி ஆதரவு எதிர்ப்பு என்ற கருத்தை நீங்கள் கூறியது தான் முரணானது. தறுதலைகளுக்கு புலி ஆதரவு எதிர்ப்பு என்ற பாகுபாடு இல்லை. நீங்கள் நிதர்சனத்தில் கண்டது போல் நானும் புலி ஆதரவு எதிர்ப்பு என்ற பாகுபாடு இன்றி இப்படியான குற்றங்களை செய்தவர்களை கண்டிருக்கிறேன். 

அது போக நான் குறிப்பிட்டது மக்கள் தொடர்ந்து பங்களித்து வந்த மண்மீட்பு நிதி பற்றியது அல்ல. அதை தொடர்ச்சசியாக பல வருடங்களாக நாம் செய்துதான் வந்துள்ளோம். அது வல்ல நான் கூறியது. போராட்டத்தின் இறுதி பகுதியில் இனி புலிகளால் தாக்கு பிடிக்க முடியாது என்று தெரிந்த பின்னரும் அவசர அவசரமாக  புலிகளையும் பிரபாகரனையும் சாட்டி மக்களை கடனாளியாக்கி  பெருமளவு பணத்தை கொள்ளையடித்தவர்கள் புலி உறுப்பினர்களாக இருந்தவர்கள் தான். மே 12 / 13 திகதிகளில் கூட பெருமளவு (ஒருவரிடம் சராசரியாக 20000 இருந்து 50000  பிராங்வரை) கடன்களை எடுத்தவர்கள் நேர்மையாளர்களாக இருந்திருந்தால் மே 19 ம் திகதி க்கு பிறகு அதை திருப்பி கொடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யாமல்  மக்களை 5 வருடங்களுக்கு மேலாக கடன்கார‍ர்கள் ஆக்கினார்கள். சுவிற்சர்லாந்தின் வாழ்க்கைச்செலவில்  மாதம் 1000 பிராங்குகளை கடன் மீள்ளிப்புக்கு செலுத்துவது எவ்வளவு சுமை என்பது தாங்கள் அறியாத‍தல்ல. இறுதி வாரங்களில் கடன் எடுத்து கொடுத்தவர்கள் 5 -6 வருடங்ள் பாரிய சுமையுடம் வாழ்ந்தார்கள். 

அதனால் தான் கூறினேன் இவ்வாறான தறுதலைகள் புலி எதிர்பாளர்களில் மட்டுமல்ல புலி ஆதரவாளர்கள் உறுப்பினர்களிலும் இருந்திருக்கிறார்கள்.  சமயம் வரும்போது தமது புத்தியை காட்டி இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

இனி என்ன செய்யிறது எல்லாருமே எங்களைபோல் நல்லவய இருக்கேலாது தானே.

நீந்த தெரிஞ்சவன் சுழியோடுறன் , மற்றவை கரையில் நிண்டு புதினம் பார்க்க வேண்டியதுதான் 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, உடையார் said:

 

இணைப்புக்கு ந‌ன்றி உடையார் ஜ‌யா , ந‌க்கீர‌ன் கோபாலு ஆதார‌த்தோடு ப‌ல‌ உண்மைக‌ளை சொல்லி இருக்கிறார் ,  

இந்த ஊர் மேயும் பிசாசுக்கு அர‌சிய‌ல் பின் புல‌ம் இருப்ப‌த‌ ந‌க்கீர‌ன் கோலு வெளிப்ப‌டையாய் சொல்லி இருக்கிறார் /

போர‌ போக்கை பார்த்தா இந்த‌ எச்சை சீக்கிர‌மே வெளிய‌ வ‌ந்து விடுவான் போல‌ இருக்கு 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/4/2020 at 02:12, பையன்26 said:

அது ச‌ரி த‌மிழ் சிறி அண்ணா , இவ‌னுக்கு என்ன‌ த‌ண்டனை குடுக்க‌னும் என்று எழுத‌ல‌ 😉

யாருக்கு
தலைப்பைப் போட்டவனுக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2020 at 10:16, பையன்26 said:

இணைப்புக்கு ந‌ன்றி உடையார் ஜ‌யா , ந‌க்கீர‌ன் கோபாலு ஆதார‌த்தோடு ப‌ல‌ உண்மைக‌ளை சொல்லி இருக்கிறார் ,  

இந்த ஊர் மேயும் பிசாசுக்கு அர‌சிய‌ல் பின் புல‌ம் இருப்ப‌த‌ ந‌க்கீர‌ன் கோலு வெளிப்ப‌டையாய் சொல்லி இருக்கிறார் /

போர‌ போக்கை பார்த்தா இந்த‌ எச்சை சீக்கிர‌மே வெளிய‌ வ‌ந்து விடுவான் போல‌ இருக்கு 😡

 

26 minutes ago, ஈழப்பிரியன் said:

யாருக்கு
தலைப்பைப் போட்டவனுக்கா?

நக்கீரன் கோபால் நித்திரை கொண்டு இருப்பார்....

இப்படி, பொள்ளாச்சி, நாகர்கோவில் டைப்பான கேசுகள் எண்டால், எழும்பி ஓடி வந்து நீட்டி முழக்கி வீடியோ போடுவார்.

பத்திரிகைக்காரர்கள் எப்போதும் நடுநிலைமை கொண்டே செயல் படவேண்டும். 

நாகர்கோவில் கேசிலும், இன்னும் போலீஸ் விசாரணை, நீதிமன்ற விசாரணை முடியவில்லை. அவனை அப்பாவி என்று சொல்ல வரவில்லை. ஆனால்.... விசாரித்து தீர்ப்பு சொல்ல நீதிமன்றம் இருக்கிறது.

இவர் தனது விசாரணைகளை முடித்து, சுட்டிருக்க வேண்டும் என்று தனது தீர்ப்பினையும் சொல்லி விட்டார்.

இது, தனது பத்திரிகைக்கு இவர் தேடும் மலிவான விளம்பரம் இல்லாமல் வேறு என்ன?

தமிழகத்தில் தனது மனைவியை கொலை செய்து விட்டார் என்று ஒருவரை போலீசார் பிடித்து நீதிமன்றில் நிறுத்தி தண்டனையும் வாங்கி கொடுத்து விட்டனர்.

பத்திரிகைகள் எல்லாம் அவரை வறுத்து எடுத்தன.

ஆனால், கணவனுடன் கோபித்துக் கொண்டு எங்கோயோ கோவிலில் தங்கி பிச்சை எடுத்து உண்டு கொண்டிருந்த மனைவி, நடந்தது தெரியாமல், வீடு வருகிறார்.

உறவினர்கள் போலீஸ் நிலையம் அழைத்து செல்கின்றனர். அதிர்ந்து போன இன்ஸ்பெக்டர் ஐயா.... அவரை மறைந்து வாழ சொல்லியும், இல்லாவிடில் அவரை வேறு கேசில் உள்ள போட்டு விடுவேன் என்றும் பயமுறுத்துகின்றார். உறவினர்களையும் பயமுறுத்துகின்றார்.

பெண்ணை முடித்து விட்டால் தான் தனது தலை தப்பும் என்று முடிவு செய்கிறார். சரியான விசாரணை செய்யாமல், அடித்தே ஒப்புக்கொள்ள வைத்திருந்தார் அவர்.

அங்கே இருந்த நல்ல போலீஸ் காரர் ஒருவர், விகடன் இதழுக்கு இரசியமாக கடிதம் ஒன்றினைப் எழுதுகிறார்.

அவ்வளவுதான்....

விகடன் களமிறங்கி.... பெண்னை பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தி, நீதிமன்றில் நிறுத்தி, கணவன் விடுதலையானார். 

பெரும் பரபரப்பான வழக்காக, விகடனில் புகழை அதிகரித்தது அது.

இன்ஸ்பெக்டர் பதவி இழந்தார்.

இது பழைய விகடன் இதழில் வாசித்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

யாருக்கு
தலைப்பைப் போட்டவனுக்கா?

என்ன‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , குசா தாத்தாவின் க‌ள்ளுக்கொட்டிலுக்கு போயிட்டு வ‌ந்த‌ மாதிரி தெரியுது லொல் 😁😍 /

த‌மிழ் சிறி அண்ணாவுக்கு ப‌தில் எழுதின‌து நான் , நீங்க‌ள் த‌டு மாற்ற‌த்தில் த‌வ‌றாக‌ புரிந்து விட்ட‌தா தெரியுது 😉

அந்த‌ பொம்பிளை பொருக்கிக்கு என்ன‌ த‌ண்ட‌ன‌ குடுக்க‌லாம் என்று த‌மிழ் சிறி அண்ணாவிட‌ம் கேட்ட‌து நான் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

 

நக்கீரன் கோபால் நித்திரை கொண்டு இருப்பார்....

இப்படி, பொள்ளாச்சி, நாகர்கோவில் டைப்பான கேசுகள் எண்டால், எழும்பி ஓடி வந்து நீட்டி முழக்கி வீடியோ போடுவார்.

பத்திரிகைக்காரர்கள் எப்போதும் நடுநிலைமை கொண்டே செயல் படவேண்டும். 

நாகர்கோவில் கேசிலும், இன்னும் போலீஸ் விசாரணை, நீதிமன்ற விசாரணை முடியவில்லை. அவனை அப்பாவி என்று சொல்ல வரவில்லை. ஆனால்.... விசாரித்து தீர்ப்பு சொல்ல நீதிமன்றம் இருக்கிறது.

இவர் தனது விசாரணைகளை முடித்து, சுட்டிருக்க வேண்டும் என்று தனது தீர்ப்பினையும் சொல்லி விட்டார்.

இது, தனது பத்திரிகைக்கு இவர் தேடும் மலிவான விளம்பரம் இல்லாமல் வேறு என்ன?

ந‌க்கீர‌ன் கோபாலு இத‌ சொல்லி தான் விள‌ம்ப‌ர‌ம் தேட‌ வேண்டும் என்று இல்லை 😉

ந‌க்கீர‌ன் கோபாலு த‌ன‌து உயிரை கூட‌ யோசிக்காம‌ ம‌க்க‌ளுக்கு ப‌ல‌ உண்மைக‌ளை எடுத்து சொன்ன‌வ‌ர் போன‌ நூற்றாண்டில் கூட‌ , வீர‌ப்ப‌னை ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌வ‌ர் போல் எடுத்து சொன்ன‌தே இந்த‌ ந‌க்கீர‌ன் கோபாலு  தான் / ந‌க்கீர‌ன் கோபாலுவை அதிக‌ இந்திய‌ ம‌க்க‌ளுக்கு க‌ட‌ந்த‌ கால‌த்திலே தெரியும் /

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.