Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனியில் நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க தீர்மானம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

53288494_303-720x450.jpg

ஜேர்மனியில் நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க தீர்மானம்!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க ஜேர்மனி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் மற்றும் பிராந்திய முதல்வர்களுக்கும் இடையிலான வரைவு ஒப்பந்தத்தின்படி குறித்த கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல், ஒரு வரைவு திட்டத்தைத் தீட்டி 16 மாகாண தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

மெர்கலின் திட்டம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், ஒரு வாரகாலத்தில் நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்.

ஜேர்மனியில் அதிகாரப் பரவலாக்க கட்டமைப்பின் மூலமே, தற்போதைய நோய்த் தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தியதாக ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் அண்மையில் அறிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும், கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியில் இருந்து கட்டுப்பாடுகள் எளிதாக்கப்பட்டதிலிருந்து வைரஸ் தொற்று எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகின்றது என்ற போதிலும், பெரிதளவான தாக்கம் இல்லை என கூறப்படுகின்றது.

அனுமதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பின்வருமாறு:

  • கடுமையான சுகாதாரம் மற்றும் சமூக தொலைதூர நடவடிக்கைகளை கடைபிடித்தால், அளவைப் பொருட்படுத்தாமல் அனைத்து கடைகளும் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.
  • அனைத்து மாணவர்களும் கோடை இடைவேளை வரை கட்டங்களில் பாடசாலைக்கு திரும்புவர். ஆனால் மாணவர்களைப் பாதுகாப்பதற்கான நெறிமுறைகளுடன்.
  • ஊரடங்கு நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான பொறுப்பு இப்போது தங்கள் சொந்த திட்டங்களை உருவாக்கக்கூடிய மாநிலத் தலைவர்களுக்கு அனுப்பப்படும்.
  • திருவிழாக்கள், விளையாட்டு போன்ற பெரிய பொது நிகழ்வுகளுக்கான தடை ஒகஸ்ட் இறுதி வரை நடைமுறையில் இருக்கும்.
  • மே மாதத்தின் பிற்பகுதி முதல் பன்டெஸ்லிகா கால்பந்து போட்டிகள், இரசிகர்கள் இல்லாமல் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும்.
  • குழந்தைகள் மற்றும் தொழில்முறை அல்லாத லீக்குகளுக்கான வெளிப்புற விளையாட்டுகளும் நடைபெற அனுமதிக்கப்படும்.
  • பராமரிப்பு இல்லங்களில் உள்ள மூத்தவர்கள் பார்வையாளர்களைப் பெற அனுமதிக்க வேண்டும்.
  •  
  • http://athavannews.com/ஜேர்மனியில்-நடைமுறையில்/
  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் வாழக்கிடைத்தது தமிழர்களுக்கும் ஒரு வரம். :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Paanch said:

யேர்மனியில் வாழக்கிடைத்தது தமிழர்களுக்கும் ஒரு வரம். :100_pray:

சுதந்திரக்காற்றை அனுபவியுங்கள், கவனமாக இருக்கவும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

germany-720x450.jpg

முடி திருத்தும் இடங்களில் வழக்கமான நடைமுறைகளை மாற்றியுள்ள ஜேர்மனி!

ஜேர்மனியில் நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள், கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியில் இருந்து படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

அத்துடன், ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளை நீக்கவும் ஜேர்மனி அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் விதிகளை சமீபத்தில் தளர்த்திய நாடான ஜேர்மனியில், முடி திருத்தும் இடங்களை தற்போது திறக்க அனுமதி தரப்பட்டுள்ளபோதும், வேலை செய்யும் முறை, வழக்கமான நடைமுறைகளில் இருந்து மாறியுள்ளது.

ஜேர்மன் பொருளாதார மற்றும் சமூக நல விவகாரங்கள் அமைச்சகங்கள் இதற்கான விதிமுறைகளை அறிவித்துள்ளன.

இதற்கமைய, வாடிக்கையாளருக்கு இடையில் 1.5 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காத்திருப்புக்கான பகுதி கிடையாது, பத்திரிகைகள் கிடையாது, நுனிகளை மட்டும் சீர் செய்ய முடியாது, வாடிக்கையாளருக்கும், முடி திருத்துபவருக்கும் முகக்கவசம் கட்டாயம் போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, ஜேர்மனியில், மே மற்றும் ஜூன் மாதங்களில் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/முடி-திருத்துடம்-இடங்களி/

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் உள்ள எமது ஆட்கள் இன்று இந்த நாட்டில் வாழக்கிடைத்தது தமிழர்களுக்கு ஒரு வரம் என்பார்கள் அடுத்த நாள் யாழ்பாணத்தில் இருக்கிற மாதிரி சொர்க்கம் வருமோ என்பார்கள் எப்போதும் கற்பனை உலகத்தில் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

88 மில்லியன் சனத்தொகை கொண்ட பல நாடுகளின் எல்லைகளை சுற்றிவரக் கொண்ட.. ஜேர்மனி 4000 கிட்டவான மரணங்களோடு கொரோனாவை கட்டுப்படுத்தி இருக்க..

வெறும் 66 மில்லியன் சனத்தொகை கொண்ட பிரித்தானியா.. அதிகம் கடல் எல்லைகளைக் கொண்ட நாடு.. 30,000 க்கும் மேற்பட்ட மரணங்களோடு இன்னும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மும்மரமாக உள்ளது.

ஜேர்மனி அரசுக்கு ஆலோசனை வழங்குபவர்களும் மக்களும் உருப்படியாக செயற்பட்டிருக்கிறார்கள் என்பதே இதன் பொருள். 

பிரித்தானியா வெட்டிப் பெருமையை விட்டுத்தள்ளி.. ஜேர்மனியிடம் ஆலோசனை பெறுவது நல்லது எனியும் காலம் தாழ்த்தாது. 

நீங்கள்  தானே  வெளியால்  போட்டிங்கள் பிறகு  எதுக்கு ஆலோசனை 
கம்முண்டு  இருங்க

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

88 மில்லியன் சனத்தொகை கொண்ட பல நாடுகளின் எல்லைகளை சுற்றிவரக் கொண்ட.. ஜேர்மனி 4000 கிட்டவான மரணங்களோடு கொரோனாவை கட்டுப்படுத்தி இருக்க..

வெறும் 66 மில்லியன் சனத்தொகை கொண்ட பிரித்தானியா.. அதிகம் கடல் எல்லைகளைக் கொண்ட நாடு.. 30,000 க்கும் மேற்பட்ட மரணங்களோடு இன்னும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மும்மரமாக உள்ளது.

ஜேர்மனி அரசுக்கு ஆலோசனை வழங்குபவர்களும் மக்களும் உருப்படியாக செயற்பட்டிருக்கிறார்கள் என்பதே இதன் பொருள். 

பிரித்தானியா வெட்டிப் பெருமையை விட்டுத்தள்ளி.. ஜேர்மனியிடம் ஆலோசனை பெறுவது நல்லது எனியும் காலம் தாழ்த்தாது. 

வாற  கிழமை எல்லாத்தையும் தளர்த்தப் போயினமாம் ...வெள்ளையள் சாகும் வீதம்  குறைவாக இருப்பதால் அவர்களுக்கு  லொக் டவுண் பற்றி கவலை இல்லை 😟

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

ஜேர்மனியில், மே மற்றும் ஜூன் மாதங்களில் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருப்பியும் வருமெண்டால் காக்கா குருவி கூட வெளியிலை வரேலாது. அந்தளவுக்கு லொக்டவுண் மூலம் இறுக்குவார்கள். லொக்டவுணுக்கு எதிராய் ஆர்ப்பாட்டங்கள் தொடங்க ஆரம்பிததாலையே இந்த முற்று முழுதான தளர்த்தல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரதி said:

வாற  கிழமை எல்லாத்தையும் தளர்த்தப் போயினமாம் ...வெள்ளையள் சாகும் வீதம்  குறைவாக இருப்பதால் அவர்களுக்கு  லொக் டவுண் பற்றி கவலை இல்லை 😟

 

வெள்ளையள் இறக்கும் சதவீதம் குறைவு மட்டுமல்ல..  key workers ஆக உள்ள பிற இனத்தவர்களே அதிகம் வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அண்மையில் குப்பை எடுக்க வந்த போது பார்த்தேன் வழமையா வாற வெள்ளைகளைக் காணவில்லை. எல்லோரும் கறுப்பர்களால் பிரதியீடு செய்யப்படிருந்தார்கள்.

மேலும்.. அரச வேலைப் பாதுகாப்பு பொறிமுறைக்குள் (Furlough) அநேக வெள்ளைகள் மாறி மாறி பதுங்கிக் கொள்கிறார்கள். ஆனால்.. எம்மவர்களும்.. பிற ஆசியர்களும்.. கறுப்பினத்தவர்களும்.. வெள்ளைகள் போல்.. சட்டம் கதைக்கமாட்டார்கள் வேலை பறிபோயிடுமோ என்ற பயத்தில். முகாமையாளர்களுக்கு நல்ல பிள்ளைகளாக நடிக்கினமாம். 

வெள்ளைகளின் இறப்பு வீதம் குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவர்கள் பரிசோதிப்பை உடனுக்குடன் செய்து கொள்வார்கள். அரச விதிமுறைகளை சலுகைகளை ஆலோசனைகளை இயன்ற வரை பின்பற்றுவார்கள். வேலைக்கு வர முடியாது என்றால் முடியாது தான்... நெழிஞ்சு கொண்டு நிற்கமாட்டார்கள்... வேலை போயிடும் என்ற பயம் இல்லை. நோய் அறிகுறி கண்டால்.. உடனே ஆலோசனை பெறுவார்கள்.

ஆனால் மற்றவர்களுக்கு எல்லாம் பய மயம். எங்கும் தயக்கம்.. சுணக்கம். அதுதான் மரணமும் அதிகம் அவர்களிடம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.