Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானும் யாழ் இணையமும் - கோமகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யாழ் இணையமும் - கோமகன்

நான் யாழ் இணையத்தின் கருத்துக்களத்தில் 2011 இல் இணைந்தேன். எனது முதல் எழுத்தான 'நெருடிய நெருஞ்சி ' குறுநாவலும் அங்கேதான் உருவாக்கியது. நான் அங்கு இருந்த காலம் மிகக்குறுகியது. ஏறத்தாழ 2013 வரை அங்கு இருந்தேன். அப்பொழுதெல்லாம் இந்த முகநூல் பெரிய பிரபல்யம் அடையாத நேரம். கருத்துக்களம் எமக்கு பெரும் புதினமாக இருந்தது. அங்கேயே பாய் போட்டு படுத்திருந்தோம். ஒருவருக்குப்  பல முகங்கள் இருந்தன. சிலமுகங்கள்  சர்வதேசரீதியாக ஒரே தடவையில் கருத்துக்களத்தில் கருத்தாடுவார்கள். மட்டுநிறுத்தினர்கள் முழி பிதுங்குவார்கள், காரணம் அப்பொழுது பெரிதாக தொழில் நுட்பம் வளரவில்லை. கருத்துக்கள் பொறி பறக்கும். சண்டை சமாதானம் என்று எல்லாமே இருந்தது. அது ஒரு பொற்காலம் என்றே சொல்வேன். பலருக்குப் பலரை இன்னார் என்றே தெரியாது. ஆனால் அண்ணன் தம்பி போல் கட்டிப்பிரண்டு இருக்கின்றோம். ஐ டி க்களைப்பற்றி அறியும் ஆர்வம் எமக்கு இருந்தது. ஆனால் இன்றுவரை அவர்கள் யார் என்றே தெரியாது. ஆனால் இன்று முகநூல் ஒரு சிலரை அடையாளப்படுத்தி இருக்கின்றது அதில் முக்கியமானவர் எனது எழுத்து ஆசான்களில் ஒருவரான கிருபன் ஜி. அதே வெளியில் நான் சுருக்கு சுறுக்கராக வலம்வந்து பனங்கொட்டைத்தமிழில் எழுதுவதற்கு எனக்கு ஆதர்சமாக இருந்தவர் குமாரசாமி மற்றும் சுப்பையா. இன்று இங்கு உலாத்தும் உழவாரத்தை சில வேளைகளில் நான் குமாரசாமியோ என்று கூட எண்ணுவதுண்டு. இன்றும் கூட முகநூலில் யாழ் நண்பர்கள் நிதானம் தப்பாது நாகரிகமாக கருத்தாடுவதற்குரிய பயிற்சியை யாழ் கருத்துக்களுமே தந்தது.    

இன்று இலக்கியப்பரப்பில் நட்சத்திர எழுத்தாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் எழுத்தாளப்பெருமக்களின் ஆதி மூலம் யாழ் இணையம் தான். அதுதான் புலம்பெயர் ஈழத்து தமிழ் எழுத்துப்பரப்பிற்குப் பெரும்கொடையாளியாக இருந்தது. அதில் முக்கியமானவர்களை இங்கு வரிசைப்படுத்துகின்றேன். 

தமிழ்நதி 
வல்வைசஹாரா 
சந்திரவதனா 
கறுப்பி சுமதி 
சாந்தி 
நிவேதா உதயராஜன் ( மொசப்பத்தேமியா சுமேரியர் )
மயோ மனோ 
சாத்திரி 
சயந்தன் 
கானா பிரபா 
கோமகன் 
சஞ்சயன் 
ஜே கே படலை 
நெற்கொழுதாசன் 
இணுவையூர் மயூரன் 

இவர்கள் அனைவரும் தாங்கள் புனைந்த நூல்களின் அடிப்படையில் பொதுவெளியில் அறியப்பட்டவர்கள். சில பேர்கள் தவறவிடப்பட்டிருக்கலாம். அறியத்தந்தால் மிக்க நன்றியுடையவனாக இருப்பேன். நன்றி .

 

 

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் முகநூலில் இட்ட பதில்

 

///எனது எழுத்து ஆசான்களில் ஒருவரான கிருபன் ஜி. //

கோமகன் அண்ணா, இது ரொம்ப ஓவர்!

பல எழுத்தாளர்களின்/கருத்தாளர்களின் எழுத்துக்களை வாசிப்பது மட்டும்தான் நான் செய்வது. யாழ் களத்தில் புனைபெயர்களூடாக அறிமுகமான பலர் இன்று எழுத்துலகில் முன்னணியில் திகழ்வதையிட்டு எனக்கும் நிறைய பெருமிதம் உள்ளது.😀

கனதியான எழுத்துக்களைப் புரிய நுணுக்கமான வாசிப்புப் பயிற்சி அவசியம் என்று புகழ் பூத்த சிற்றிலக்கிய/பேரிலக்கிய எழுத்துவனைஞர்கள் தொடர்ந்தும் சொல்லிவருவதால் கிடைக்கும் ஐந்து நிமிட இடைவெளியிலும் எதையாவது வாசித்துக்கொண்டே இருக்கின்றேன். யாழ் களத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ந்தும் எழுதுவர்களின் வாசிப்பில் இன்னும் பயில நிறைய இருக்கின்றது. 😃
 

இதில் தமிழ் நதி, ஜே கே படலை, கறுப்பி சுமதி ஆகியோர் யாழில் முதன் முதலில் எழுதாகாமலேயே பிரபலமானவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

இதில் தமிழ் நதி, ஜே கே படலை, கறுப்பி சுமதி ஆகியோர் யாழில் முதன் முதலில் எழுதாகாமலேயே பிரபலமானவர்கள்.

இவர்களும் யாழில் எழுதினார்கள் என்று இன்றைக்கு தான் தெரியும் ...கறுப்பி சுமதி என்பவர் அர்ஜுன் அண்ணாவின் தங்கச்சியா?
 

5 hours ago, கிருபன் said:

நான் முகநூலில் இட்ட பதில்

 

///எனது எழுத்து ஆசான்களில் ஒருவரான கிருபன் ஜி. //

கோமகன் அண்ணா, இது ரொம்ப ஓவர்!

பல எழுத்தாளர்களின்/கருத்தாளர்களின் எழுத்துக்களை வாசிப்பது மட்டும்தான் நான் செய்வது. யாழ் களத்தில் புனைபெயர்களூடாக அறிமுகமான பலர் இன்று எழுத்துலகில் முன்னணியில் திகழ்வதையிட்டு எனக்கும் நிறைய பெருமிதம் உள்ளது.😀

கனதியான எழுத்துக்களைப் புரிய நுணுக்கமான வாசிப்புப் பயிற்சி அவசியம் என்று புகழ் பூத்த சிற்றிலக்கிய/பேரிலக்கிய எழுத்துவனைஞர்கள் தொடர்ந்தும் சொல்லிவருவதால் கிடைக்கும் ஐந்து நிமிட இடைவெளியிலும் எதையாவது வாசித்துக்கொண்டே இருக்கின்றேன். யாழ் களத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ந்தும் எழுதுவர்களின் வாசிப்பில் இன்னும் பயில நிறைய இருக்கின்றது. 😃
 

 

அவர் உங்களை புகழுவார் ...நீங்கள் தான் அவர் கதைகளை யாழில் கொண்டு வந்து இணைக்கிறீர்கள் tw_lol:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

அவர் உங்களை புகழுவார் ...நீங்கள் தான் அவர் கதைகளை யாழில் கொண்டு வந்து இணைக்கிறீர்கள் tw_lol:

Vadivelu Thank You GIF - Vadivelu ThankYou Advocate GIFs

ஆஹா... ரதி.
இதற்குத்தான்.... யாழ். களத்தில்,  நல்ல  சட்டத்தரணிகளும் வேண்டும். 😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, ரதி said:

இவர்களும் யாழில் எழுதினார்கள் என்று இன்றைக்கு தான் தெரியும் ...கறுப்பி சுமதி என்பவர் அர்ஜுன் அண்ணாவின் தங்கச்சியா?
 

அவர் உங்களை புகழுவார் ...நீங்கள் தான் அவர் கதைகளை யாழில் கொண்டு வந்து இணைக்கிறீர்கள் tw_lol:

நானும் கேட்க வேணுமெண்டு நினைச்சனான். சுமதி கறுப்பி எண்டவர் அர்ஜுன் அண்ணையின்ரை அக்காவோ தங்கச்சியோ?
"மனுசி" எண்ட குறும் படமும் நடிச்சவ எண்டு நினைக்கிறன்.:)

வெளியே எழுதாவிட்டாலும் புத்தன், சுவி அண்ணா போன்ற சிறந்த எழுத்தாளர்களும் யாழில் உள்ளனர். சிறந்த எழுத்தாளுமை உள்ள இன்னுமொருவன் யாழுக்கு வெளியே எழுதுவதில்லை என்று எங்கோ சொன்னதாக ஞாபகம். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

நானும் கேட்க வேணுமெண்டு நினைச்சனான். சுமதி கறுப்பி எண்டவர் அர்ஜுன் அண்ணையின்ரை அக்காவோ தங்கச்சியோ?
"மனுசி" எண்ட குறும் படமும் நடிச்சவ எண்டு நினைக்கிறன்.:)

தங்கச்சியாய்த் தான் இருக்க கூடும் ...எல்லோரும் சொல்றத்திற்கு பயப்பிடினம் 🙂

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர்கள் வரிசையில் எனது பெயரைக் கானவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் புத்தகம் பிரசுரித்தவர்களைத்தான் பட்டியல் போட்டிருக்கின்றார். ஆனால் யாழ் இணையத்தில் புனைவு எழுத்தையும், கருத்தாடல்களில் தர்க்க ரீதியாக எழுதியவர்கள்/எழுதிக்கொண்டிருப்பவர்கள் எல்லோருமே சிறந்த படைப்பாளிகள், கருத்தாளர்கள்தான். 

 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, சுவைப்பிரியன் said:

எழுத்தாளர்கள் வரிசையில் எனது பெயரைக் கானவில்லை.

நாமெல்லாம் சுருக்கர்ட லிஸ்ட்டில் இல்லை சுவைப்பிரியன் அண்ணா  நாமெல்லாம் சின்ன பொடியன்கள் 

சுருக்கர் இப்ப ஏன் யாழிணையத்தை பற்றியும் இணைந்து கருத்து கதை கவிதை எழுதியவர்களையும் நினைவு கூருகிறார் கிருபன் 

19 hours ago, கிருபன் said:

இன்றும் கூட முகநூலில் யாழ் நண்பர்கள் நிதானம் தப்பாது நாகரிகமாக கருத்தாடுவதற்குரிய பயிற்சியை யாழ் கருத்துக்களுமே தந்தது.    

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சுருக்கர் இப்ப ஏன் யாழிணையத்தை பற்றியும் இணைந்து கருத்து கதை கவிதை எழுதியவர்களையும் நினைவு கூருகிறார் கிருபன் 

கொரோனா எல்லோருக்கும் பழையவற்றை மீள் நினைவுக்குக் கொண்டுவரவும் கனகாலம் தொடர்புகள் அற்று இருப்பவர்களுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தவும் நேரத்தைக் கொடுத்துள்ளது.

சின்னச் சின்ன விடயங்களுக்கு கோபப்படுவதையும், இறப்பில்லாத வாழ்வு நித்தியம் என்ற இறுமாப்பையும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரி இல்லாமல் ஆக்கியுள்ளது!

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா நாமளும் நட்சத்திர எழுத்தாளர் லிஸ்டில் இருக்கிறமா???????????🤩

  • கருத்துக்கள உறவுகள்

அருமை ந‌ண்ப‌ன் ஜ‌முனா   எவ‌ள‌வ‌த்தை எழுதி இருக்கிறார் ,
ச‌கோத‌ர‌ர் நொடுங்ஸ் , விக‌ட‌க‌வி அண்ணா ,  க‌லைஞ‌ன் அண்ணா ,

ஜ‌முனா தொட‌ர்ந்து யாழில் எழுதி இருக்க‌னும் இன்னும் ப‌ல‌ நூறு ஆக்க‌ங்க‌ளை எழுதி இருப்பார் ,

 மேல‌ கோம‌க‌ன் எழுதின‌ ஆட்க‌ளின் பெய‌ரை விட இன்னும் ந‌ல்லா எழுத‌க் கூடிய‌ ப‌ல‌ உற‌வுள் யாழ் குடும்ப‌த்தில் இணைந்து இருந்த‌வை க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் 🙏

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2020 at 16:10, கிருபன் said:

நானும் யாழ் இணையமும் - கோமகன்

நான் யாழ் இணையத்தின் கருத்துக்களத்தில் 2011 இல் இணைந்தேன். எனது முதல் எழுத்தான 'நெருடிய நெருஞ்சி ' குறுநாவலும் அங்கேதான் உருவாக்கியது. நான் அங்கு இருந்த காலம் மிகக்குறுகியது. ஏறத்தாழ 2013 வரை அங்கு இருந்தேன். அப்பொழுதெல்லாம் இந்த முகநூல் பெரிய பிரபல்யம் அடையாத நேரம். கருத்துக்களம் எமக்கு பெரும் புதினமாக இருந்தது. அங்கேயே பாய் போட்டு படுத்திருந்தோம். ஒருவருக்குப்  பல முகங்கள் இருந்தன. சிலமுகங்கள்  சர்வதேசரீதியாக ஒரே தடவையில் கருத்துக்களத்தில் கருத்தாடுவார்கள். மட்டுநிறுத்தினர்கள் முழி பிதுங்குவார்கள், காரணம் அப்பொழுது பெரிதாக தொழில் நுட்பம் வளரவில்லை. கருத்துக்கள் பொறி பறக்கும். சண்டை சமாதானம் என்று எல்லாமே இருந்தது. அது ஒரு பொற்காலம் என்றே சொல்வேன். பலருக்குப் பலரை இன்னார் என்றே தெரியாது. ஆனால் அண்ணன் தம்பி போல் கட்டிப்பிரண்டு இருக்கின்றோம். ஐ டி க்களைப்பற்றி அறியும் ஆர்வம் எமக்கு இருந்தது. ஆனால் இன்றுவரை அவர்கள் யார் என்றே தெரியாது. ஆனால் இன்று முகநூல் ஒரு சிலரை அடையாளப்படுத்தி இருக்கின்றது அதில் முக்கியமானவர் எனது எழுத்து ஆசான்களில் ஒருவரான கிருபன் ஜி. அதே வெளியில் நான் சுருக்கு சுறுக்கராக வலம்வந்து பனங்கொட்டைத்தமிழில் எழுதுவதற்கு எனக்கு ஆதர்சமாக இருந்தவர் குமாரசாமி மற்றும் சுப்பையா. இன்று இங்கு உலாத்தும் உழவாரத்தை சில வேளைகளில் நான் குமாரசாமியோ என்று கூட எண்ணுவதுண்டு. இன்றும் கூட முகநூலில் யாழ் நண்பர்கள் நிதானம் தப்பாது நாகரிகமாக கருத்தாடுவதற்குரிய பயிற்சியை யாழ் கருத்துக்களுமே தந்தது.    

இன்று இலக்கியப்பரப்பில் நட்சத்திர எழுத்தாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் எழுத்தாளப்பெருமக்களின் ஆதி மூலம் யாழ் இணையம் தான். அதுதான் புலம்பெயர் ஈழத்து தமிழ் எழுத்துப்பரப்பிற்குப் பெரும்கொடையாளியாக இருந்தது. அதில் முக்கியமானவர்களை இங்கு வரிசைப்படுத்துகின்றேன். 

தமிழ்நதி 
வல்வைசஹாரா 
சந்திரவதனா 
கறுப்பி சுமதி 
சாந்தி 
நிவேதா உதயராஜன் ( மொசப்பத்தேமியா சுமேரியர் )
மயோ மனோ 
சாத்திரி 
சயந்தன் 
கானா பிரபா 
கோமகன் 
சஞ்சயன் 
ஜே கே படலை 
நெற்கொழுதாசன் 
இணுவையூர் மயூரன் 

இவர்கள் அனைவரும் தாங்கள் புனைந்த நூல்களின் அடிப்படையில் பொதுவெளியில் அறியப்பட்டவர்கள். சில பேர்கள் தவறவிடப்பட்டிருக்கலாம். அறியத்தந்தால் மிக்க நன்றியுடையவனாக இருப்பேன். நன்றி .

 

 

 

கிருப‌ன் அண்ணா , கோம‌க‌ன் என் கூட‌ முந்தி ஜாலியா எழுத‌ நான் நினைத்தேன் இவ‌ருக்கு 25 , 26 வ‌ய‌து இருக்கும் என்று , நீங்க‌ள் இணைத்த‌ இணைப்பில் அவ‌ரின் முக‌ நூல் பெய‌ர் இருக்கு உள்ள‌ போய் பார்த்தா , கோம‌க‌ன் ஜ‌யாவை விட‌ ( என்ர‌ குசா தாத்தா கொஞ்ச‌ம் இள‌மையா இருக்கிறார் )


யாழில் இருந்த‌ சின்ன‌ பெடிய‌ங்க‌ள் என்றால்
நான்
ஜ‌முனா
ஈழ‌வ‌ன்85
சுவேஸ்
ஜீவா
சுண்ட‌ல் மாமா 😁

கூடுத‌லா யாழில் 45வ‌ய‌தில் இருந்து 65வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌வை தான் கூட‌ /
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.