Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

உண்மையாகத்தான் கூறுகின்றீர்களா 🤔

ஹிந்திய ஆமி பாவிக்கும் சப்பாத்தி எண்ணெய் சரியான நாத்தம்.

மேலும்.. ஒரு பக்கட் தண்ணியில்.. தான் குளிப்பு. பெரிய கிணறு இருந்தாலும்.. பக்கட் குளிப்புத்தான். 

ஒப்பரேசன் பவான் ஹிந்தியப் படைகளின் இராணுவ நடவடிக்கையை அடுத்து.. யாழ் இந்து மகளிர் கல்லூரியில்.. முகாம் அமைத்து தங்கியிருந்த போது இதனை கண்ணால் கண்டதுண்டு. 

  • Replies 76
  • Views 6.5k
  • Created
  • Last Reply
7 minutes ago, nedukkalapoovan said:

.. யாழ் இந்து மகளிர் கல்லூரியில்.. முகாம் அமைத்து தங்கியிருந்த போது இதனை கண்ணால் கண்டதுண்டு. 

பொண்ணுங்கள பெரிசா பிடிக்காத நெடுக்ஸ்  நீங்க இந்து மகளிர் கல்லூரிய தான் சுத்தி திரிஞ்சிருக்கிறீங்க.😂 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

விடுங்க உடையார்! விடுதலைப்போராட்டங்கள் நடந்த காலங்களிலும் வியாக்கியானங்கள் கதைத்து காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு இப்போது சும்மாதானே இருக்கின்றார்கள்.அது போல் தான் இதுவும்....

கு.சா. ஐயா,  1982 இல்  முதல் வெடி கேட்டு பிளேனைப் பிடிச்சவர்கள்தான் எப்பவும் போராட்டத்தைப் பற்றி “கதை” கேட்டு வளர்ந்தவர்கள். கற்பனை தூக்கினால்தான் சாகஸங்களில் நம்பிக்கைவரும்😀

அதுக்காக ஓவராக அவிக்கிறைத் பார்த்துட்டு போனால் இல்லாமல்போனவர்களில் எனது ஒரு சில நண்பர்களின் நினைவுக்குக்கூட அவமதிப்பு செய்வதாகத்தான் இருக்கும்.

15,000 இந்தியப் படைகளை இல்லாமல் பண்ணிய இயக்கம் புலிகள் என்று நட்வர் சிங் ஒரு செக்கனில் சொன்னதை உண்மையென்று நம்பி அடைந்த கிளுகிளுப்பை “உச்சம்” கிட்டமுதல் கேள்விக்குட்படுத்தி தடுத்துவிட்டேன் என்று உடையாருக்குக்  வந்த கோபத்தைப் புரிந்துகொள்ளமுடிகின்றது!😂🤣

ஆனால் நட்வர்சிங் ஏன் சொன்னார்? எப்போது சொன்னார்? என்று யாராவது இந்தச் செய்தியின் பின்னணியை ஆராய்ந்தார்களா? இல்லையே! 

உடையார்கட்டு குளம் உடைத்து ஆயிரக்கணக்கான படையினர் பலி என்று பெப் 2009 இல் (அண்ணன் சீமான் வன்னியில் கறி இட்லி சாப்பிட்டு சரியாக ஒரு  வருடத்தின் பின்னர்) ஆராவரித்துக் கிளுகிளுத்து பின்னர் சூம்பிப்போனது நினைவில் இருப்பதால் 15,000 இந்தியப் படைகள் இழக்கப்பட்டது என்பதை சரியான ஆதாரம் இல்லாமல் நம்பிக் கிளுகிளுக்கக்வேண்டாம் என்றுதான் சொல்கின்றேன்.

 

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, tulpen said:

பொண்ணுங்கள பெரிசா பிடிக்காத நெடுக்ஸ்  நீங்க இந்து மகளிர் கல்லூரிய தான் சுத்தி திரிஞ்சிருக்கிறீங்க.😂 

அங்கினை தான் எங்கள் வீடே. எங்கள் வீட்டடியால தான் லேடிஸ் கொலிச்.. வேம்படி.. சுண்டுக்குளி.. கொன்வன்ட் பெட்டையள் போறதே. அதுக்கு மேல ரியூசன் பெட்டையள். அதை விட.. நல்லூர் திருவிழா.. பெருமாள் கோவில் திருவிழா.. இப்படி வீட்டைச் சுற்றி ஆயிரம் கோவில். ஒவ்வொரு திருவிழா மூட்டமும்.. கலர் கலர் பவனி வேற. பார்த்துப் பார்த்து அலுத்துப் போச்சு.  🤣🤣

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

அங்கினை தான் எங்கள் வீடே. எங்கள் வீட்டடியால தான் லேடிஸ் கொலிச்.. வேம்படி.. சுண்டுக்குளி.. கொன்வன்ட் பெட்டையள் போறதே. அதுக்கு மேல ரியூசன் பெட்டையள்.

நெடுக்ஸின் பிரச்சினைகளுக்குத் தோற்றுவாய் வலு கிளியாராக விளங்குது!😀

நெடுக்ஸ்,
நட்வர் சிங் (இப்ப அவருக்கு 89 வயசு) “we lost 15,000 people in Sri Lanka” என்று எத்தனையாம் ஆண்டு சொன்னார்? அது உண்மையா இல்லையா?

உண்மையென்றால், வடமராட்சியில் ஐயன் ஒவ்வொருநாளும் ஐந்து இந்தியன் ஆர்மியை சுட்டு அவர்களின் துப்பாக்கிகளை எடுத்ததை நானும் உண்மை என்றே சொல்வேன்.😎

  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2020 at 10:13, nedukkalapoovan said:

எதுஎப்படியோ.. ஒரு விடுதலை வேண்டி நிற்கும் இனமாக நாம் அடைந்த இழப்பு எல்லாரையும் விட அதிகம்.. குறிப்பாக இத்தனை இழப்புக்குப் பின்னும் எமது தேசம் அடிமைப்பட்டு.. சிங்கள பெளத்த மயமாவது தான் இன்னும் இன்னும் வேதனை. இதை வெற்றி கொள்வதன் மூலமே.. எமது தரப்பு இழப்புக்களுக்கு நாம் பதில் சொல்ல முடியும். 

இந்த தலைபிற்கு இது தான் எங்கள் கருத்து. 

11 minutes ago, கிருபன் said:

நெடுக்ஸ்,
நட்வர் சிங் (இப்ப அவருக்கு 89 வயசு) “we lost 15,000 people in Sri Lanka” என்று எத்தனையாம் ஆண்டு சொன்னார்? அது உண்மையா இல்லையா?

உண்மையென்றால், வடமராட்சியில் ஐயன் ஒவ்வொருநாளும் ஐந்து இந்தியன் ஆர்மியை சுட்டு அவர்களின் துப்பாக்கிகளை எடுத்ததை நானும் உண்மை என்றே சொல்வேன்.😎

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Par.jpg

பெங்களூரில் வாரம் ஒரு முறை இன்னும் குளிர் பிரதேசங்களில் என்டா மாதம் ஒரு முறை குளிப்பினம் என்டு அவயளே பெருமையா கதைப்பினம் தோழர்..☺️..😊

18 hours ago, Kapithan said:

அது ஒருவித கொழுப்பின் மணம். ரெண்டு கிலோ மீற்றறுக்கு அங்கால வரேக்கேயே இங்க நாய்கள் குரைக்கத் தொடங்கும். நாய்க்கே தாங்க ஏலாத மணத்தை எப்படி மனுசர் தாங்குறதாம். 😂

 

கிந்தியன் ஆமி யாழ்ப்பாணத்து சனங்களுக்கு அடிக்கேக்கை......
ஜேஆர் உங்களுக்கு வீட்டுக்கு வீடு கிணறு கட்டித்தந்திருக்கிறான்  இதை விட உங்களுக்கு என்ன வேணும் எண்டு கேட்டுக்கேட்டு அடிச்சவங்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

 

கிந்தியன் ஆமி யாழ்ப்பாணத்து சனங்களுக்கு அடிக்கேக்கை......
ஜேஆர் உங்களுக்கு வீட்டுக்கு வீடு கிணறு கட்டித்தந்திருக்கிறான்  இதை விட உங்களுக்கு என்ன வேணும் எண்டு கேட்டுக்கேட்டு அடிச்சவங்களாம்.

அவன் கேட்டது radio இருக்கு கிணறு இருக்கு, electronic சாமான் எல்லாம் இருக்கு toilet இருக்கு. உங்களுக்கு என்ன பிரச்சனை. ஏன் வீணா சண்ட புடிக்கிறீங்க.🤥

 

இது எப்படி இருக்கு 😂😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, Kapithan said:

அவன் கேட்டது radio இருக்கு கிணறு இருக்கு, electronic சாமான் எல்லாம் இருக்கு toilet இருக்கு. உங்களுக்கு என்ன பிரச்சனை. ஏன் வீணா சண்ட புடிக்கிறீங்க.🤥

 

இது எப்படி இருக்கு 😂😂

மணி😂

அவன் சொன்னதிலையும் ஞாயம் இருக்குத்தானே....இதை விட வேறை என்ன வேணும்?🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

அவன் கேட்டது radio இருக்கு கிணறு இருக்கு, electronic சாமான் எல்லாம் இருக்கு toilet இருக்கு. உங்களுக்கு என்ன பிரச்சனை. ஏன் வீணா சண்ட புடிக்கிறீங்க.🤥

 

இது எப்படி இருக்கு 😂😂

அவங்கடை வாயாலேயே நேரில் கேட்டனான்....அவனுகள்  அடி இன்னும் மறக்கலை..

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, alvayan said:

அவங்கடை வாயாலேயே நேரில் கேட்டனான்....அவனுகள்  அடி இன்னும் மறக்கலை..

Lux soap பை கையில் எடுத்துப்  பார்த்துவிட்டு வாழ்க்கையின் அதி உச்ச பயனை அடைந்துவிட்டதாக புழகாங்கிதமடைந்தவர்களல்லவா 😂😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இந்த செய்தியை இணைத்த காரணம் .ஒருகாலத்தில் இலங்கை வந்த இந்திய படைகளுக்கு ipkf  என்று பெயர் சூட்டும் வல்லமையை கொண்ட ராஜதந்திரி  இன்று தமிழ்மக்களை விட மோசமாக காங்கிரஸ் அதிலும் சோனியா வெறுப்பில் இருப்பதை பார்த்து அதிசயித்து நேரம் இந்தால்  கூறிய 15ஆயிரத்தை இழந்த கதையை மீம்ஸ்களிலும் வேறு பல் இடங்களிலும் வரவே இங்கு இணைத்தது . இங்கு உள்வாங்கப்பட விடயம் என்னவென்றால் எம்மை விடவும் காங்கிரஸ் வெறுப்புணர்வு ஆளை அடையாளம் காட்டவே .

ஆனால் 15ஆயிரம் கதை உண்மையாக இல்லாவிட்டாலும் போகட்டும் .தயவு செய்து இணைப்பின்  காரணத்தை புரிந்து கொள்ளுங்கள் .

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இங்கு இந்த செய்தியை இணைத்த காரணம் .ஒருகாலத்தில் இலங்கை வந்த இந்திய படைகளுக்கு ipkf  என்று பெயர் சூட்டும் வல்லமையை கொண்ட ராஜதந்திரி  இன்று தமிழ்மக்களை விட மோசமாக காங்கிரஸ் அதிலும் சோனியா வெறுப்பில் இருப்பதை பார்த்து அதிசயித்து நேரம் இந்தால்  கூறிய 15ஆயிரத்தை இழந்த கதையை மீம்ஸ்களிலும் வேறு பல் இடங்களிலும் வரவே இங்கு இணைத்தது . இங்கு உள்வாங்கப்பட விடயம் என்னவென்றால் எம்மை விடவும் காங்கிரஸ் வெறுப்புணர்வு ஆளை அடையாளம் காட்டவே .

ஆனால் 15ஆயிரம் கதை உண்மையாக இல்லாவிட்டாலும் போகட்டும் .தயவு செய்து இணைப்பின்  காரணத்தை புரிந்து கொள்ளுங்கள் .

 

இந்தப் பேட்டியின் சரித்திரத்தை இணையத்தில் நோண்டிப் பிடித்தாயிற்று😀

 

அண்மையில் அழகரத்தினம் பாலன் என்பவர் பேட்டியின் சிறு துணுக்கை யூரியுப்பில் இருந்து கத்தரித்து (அல்லது அவர் வேறு எங்காவது சுட்டும் இருக்கலாம்) தனது முகநூலில் பதிந்திருக்கின்றார். 

 

இதை தமிழ்வின் ஒரு செய்தியாகப் போட்டு பரபரப்பாக்கியுள்ளது. அதைப் பார்த்து 15,000 இந்தியப் படைகளை முடித்தார்கள் புலிகள் என்று கிளுகிளுப்புக் கொண்டனர் பலர். 😂🤣

 

ஆனால் இந்தப் பேட்டியின் துணுக்கு இரண்டு நீண்ட பகுதிகளாக வந்த பேட்டிகளில் இருந்து எடுக்கப்பட்டது.

நட்வர்சிங் 1986-89 ஆண்டுகளில் ராஜீவின் கீழ் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். பின்னர் மன்மோகன் சிங் கீழும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனார். ஆனால் ஈராக் எண்ணெய்க்கு உணவு கொடுத்த திட்டத்தில் செய்தஊழல் காரணமாக 2006 இல்  அவர் நீக்கப்பட்டார். சோனியா காந்தி மீது வெறுப்பை உமிழ்பவர்.

பா.ஜ.க. கூட்டம் ஒன்றில் காங்கிரஸில் இருந்து  விலகுவாதாக அறிவித்தார். ஆனால் பா.ஜ.க. இல் சேரவில்லை அல்லது சேர்க்கப்படவில்லை. 2008 இல் நட்வர் சிங் தம் மகனுடன் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார்.  அங்கும் நிலைத்திருக்கமுடியவில்லை. அந்த ஆண்டிலேயே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பல வருடங்கள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்ததால், இறுதிக் காலத்தில் சுயசரிதை எழுதி காசு பார்க்கலாம் என்று One life is not enough புத்தகம் ஆகஸ்ட் 2014 இல் வெளியிட்டார்.

அரசியல்வாதிகள் புத்தகம் வெளியிடுவதை promote செய்ய பேட்டிகள் கொடுப்பது வழமைதானே ( முன்னாள் பிரித்தானிய பிரதமர் David Cameron உம் இப்படிப் பேட்டிகள் கொடுத்தவர்). அப்படி பல பேட்டிகளை நட்வர் சிங்கும் ஆகஸ்ட் 2014 இல் கொடுத்திருந்தார். அதில் ஆகஸ்ட் முதலாம் தேதி வந்த பேட்டியில்தான் நட்வர்சிங் போகிற போக்கில் we lost 15,000 people in Sri Lanka என்று சொலியிருந்தார். அதாவது ஆறு வருடங்களுக்கு முன்னர்😮

அப்போது அவர் சொன்ன பல விடயங்கள் பேசுபொருளாக இருந்திருந்தும் 15,000 நம்பர்க் கணக்கு பெரிதாகக் கவனிக்கப்படவில்லை. அதை யூரியூப்பில் கவனித்தவர்களும் நட்வர் சிங் 15,000 தமிழர்களை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார் என்று பின்னூட்டம் விட்டுள்ளனர். ஆங்கிலத்தில் we lost 15,000 people in Sri Lanka என்று சொன்னதை ஒவ்வொருவரும் தங்கள் நோக்கங்களின் தேவைக்கேற்றவாறு அர்த்தப்படுத்துகின்றனர். அதுதான் இப்ப வைரலாக வந்தது என்று தமிழ்வின் சொன்னது (உண்மையில் வைரலாக வந்ததா என்பது வேறு விடயம்!).

நட்வர்சிங்கின் சுயசரிதையில் அவர் என்ன சொல்லியிருக்கின்றார் என்று காசைக் கொடுத்துத்தான் படித்துச் சொல்லமுடியும். காசு கொடுக்கிற அளவுக்கு இது ஒன்றும் அவ்வளவு முக்கிய புத்தகம் இல்லை என்பதால் விட்டுவிட்டேன். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரிஜினல் செவ்விகள்

 

 

 

👇🏾இதுதான் இந்தத் திரியில்  வந்த வீடியோத் துணுக்கின் ஒரிஜினல்.

 

 

12 நிமிடம் 30 செக்கனில் இருந்து பார்த்தால் புரியும்.😎

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

கு.சா. ஐயா,  1982 இல்  முதல் வெடி கேட்டு பிளேனைப் பிடிச்சவர்கள்தான் எப்பவும் போராட்டத்தைப் பற்றி “கதை” கேட்டு வளர்ந்தவர்கள். கற்பனை தூக்கினால்தான் சாகஸங்களில் நம்பிக்கைவரும்😀

அதுக்காக ஓவராக அவிக்கிறைத் பார்த்துட்டு போனால் இல்லாமல்போனவர்களில் எனது ஒரு சில நண்பர்களின் நினைவுக்குக்கூட அவமதிப்பு செய்வதாகத்தான் இருக்கும்.

15,000 இந்தியப் படைகளை இல்லாமல் பண்ணிய இயக்கம் புலிகள் என்று நட்வர் சிங் ஒரு செக்கனில் சொன்னதை உண்மையென்று நம்பி அடைந்த கிளுகிளுப்பை “உச்சம்” கிட்டமுதல் கேள்விக்குட்படுத்தி தடுத்துவிட்டேன் என்று உடையாருக்குக்  வந்த கோபத்தைப் புரிந்துகொள்ளமுடிகின்றது!😂🤣

ஆனால் நட்வர்சிங் ஏன் சொன்னார்? எப்போது சொன்னார்? என்று யாராவது இந்தச் செய்தியின் பின்னணியை ஆராய்ந்தார்களா? இல்லையே! 

உடையார்கட்டு குளம் உடைத்து ஆயிரக்கணக்கான படையினர் பலி என்று பெப் 2009 இல் (அண்ணன் சீமான் வன்னியில் கறி இட்லி சாப்பிட்டு சரியாக ஒரு  வருடத்தின் பின்னர்) ஆராவரித்துக் கிளுகிளுத்து பின்னர் சூம்பிப்போனது நினைவில் இருப்பதால் 15,000 இந்தியப் படைகள் இழக்கப்பட்டது என்பதை சரியான ஆதாரம் இல்லாமல் நம்பிக் கிளுகிளுக்கக்வேண்டாம் என்றுதான் சொல்கின்றேன்.

 

கிருபன் எப்படி ஐயா உங்களால் இப்படி கிளுகிளுப்பாக ஒவ்வொரு திரியிலும் கலக்க முடிகின்றது. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பதில்கள். 

எனக்கும் ஒருக்கா அந்த தேள் வடிவ தக்குதலை விளக்கி எழுதுங்களேன்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

அவன் கேட்டது radio இருக்கு கிணறு இருக்கு, electronic சாமான் எல்லாம் இருக்கு toilet இருக்கு. உங்களுக்கு என்ன பிரச்சனை. ஏன் வீணா சண்ட புடிக்கிறீங்க.🤥

 

இது எப்படி இருக்கு 😂😂

அவ‌ங்க‌ள் செய்த‌ அட்டூழிய‌ங்க‌ளை எங்க‌ட‌ முன்னேர்க‌ள் விப‌ர‌மாய் சொல்லுவின‌ம் தாத்தா ,

அப்ப‌ம்மா வீட்டுக்கு ப‌க்க‌த்து வீட்டு அக்காவை வேறு ஊரை சேர்ந்த‌ அண்ணா திரும‌ண‌ம் செய்தாம் ஒரு வ‌ய‌தில் ஒரு ம‌க‌ளுமாம், வேக்க‌ரியில் வேலை செய்து குடும்ப‌த்தை பார்த்து தானும் த‌ன்ர‌ குடும்ப‌மும் என்று வாழ்ந்த‌ அந்த‌ அண்ணாவுக்கு வேலை முடிந்து சைக்கில்ல‌ வீடு வ‌ரும் போது துப்பாக்கியால் நெஞ்சு ம‌ற்றும் வ‌யித்த‌டியில் சுட்டு அந்த‌ அண்ணா ச‌ம்ம‌ப‌வ‌ இட‌த்திலே இற‌ந்து விட்டாராம் , பிற‌க்கு அவ‌ரின் உட‌லை லாம‌ஸ்ர‌ரில் கொண்டு வ‌ந்து இற‌க்கின‌வையாம்  , அந்த‌ அண்ணனின் உட‌லை பார்க்க‌வே ப‌ரிதாவ‌மாய் இருந்த‌தாம் ப‌ல‌ தோட்டா அவ‌ரின் உட‌ம்பில் பாய்ந்து இருக்காம் /

அர‌ச‌ன் அன்று கொல்லுவான் தெய்வ‌ம் நின்று கொல்லும் என்ற‌ மாதிரி / ராஜிவ் காந்தி ஈழத்தில் செய்த‌ அட்டூழிய‌த்துக்கு ஆண்ட‌வ‌ர் அவ‌னுக்கு குடுத்த‌ த‌ண்ட‌னையாய் உண‌ருகிறேன் , அது தான் அவ‌னின் இற‌ப்பும் மிக‌ கொடிய‌தாய் இருந்த‌து /

த‌மிழ் நாடு போன‌ போது பார்த்தேன் ராஜிவ் காந்தி இற‌ந்த‌ இட‌ம் , சாலைக்கு ப‌க்க‌த்தில் தான் அந்த‌ குண்டு ச‌ம்ம‌வ‌ம் ந‌ட‌ந்து இருக்கு / 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

கு.சா. ஐயா,  1982 இல்  முதல் வெடி கேட்டு பிளேனைப் பிடிச்சவர்கள்தான் எப்பவும் போராட்டத்தைப் பற்றி “கதை” கேட்டு வளர்ந்தவர்கள். கற்பனை தூக்கினால்தான் சாகஸங்களில் நம்பிக்கைவரும்😀

அதுக்காக ஓவராக அவிக்கிறைத் பார்த்துட்டு போனால் இல்லாமல்போனவர்களில் எனது ஒரு சில நண்பர்களின் நினைவுக்குக்கூட அவமதிப்பு செய்வதாகத்தான் இருக்கும்.

15,000 இந்தியப் படைகளை இல்லாமல் பண்ணிய இயக்கம் புலிகள் என்று நட்வர் சிங் ஒரு செக்கனில் சொன்னதை உண்மையென்று நம்பி அடைந்த கிளுகிளுப்பை “உச்சம்” கிட்டமுதல் கேள்விக்குட்படுத்தி தடுத்துவிட்டேன் என்று உடையாருக்குக்  வந்த கோபத்தைப் புரிந்துகொள்ளமுடிகின்றது!😂🤣

ஆனால் நட்வர்சிங் ஏன் சொன்னார்? எப்போது சொன்னார்? என்று யாராவது இந்தச் செய்தியின் பின்னணியை ஆராய்ந்தார்களா? இல்லையே! 

உடையார்கட்டு குளம் உடைத்து ஆயிரக்கணக்கான படையினர் பலி என்று பெப் 2009 இல் (அண்ணன் சீமான் வன்னியில் கறி இட்லி சாப்பிட்டு சரியாக ஒரு  வருடத்தின் பின்னர்) ஆராவரித்துக் கிளுகிளுத்து பின்னர் சூம்பிப்போனது நினைவில் இருப்பதால் 15,000 இந்தியப் படைகள் இழக்கப்பட்டது என்பதை சரியான ஆதாரம் இல்லாமல் நம்பிக் கிளுகிளுக்கக்வேண்டாம் என்றுதான் சொல்கின்றேன்.

 

கிருப‌ன் அண்ணா ப‌ழைய‌ திரிக‌ளை ஏன் கில‌றுகிறார் தெரிய‌ல‌ , 
2009 மிக‌வும் ப‌த‌ட்ட‌மான‌ ஆண்டு , உண்மை நில‌வ‌ர‌ங்க‌ள் எது என்று அறிய‌முடியாத‌ த‌ர‌ன‌ம் /

ம‌க்க‌ள் இற‌ந்த‌ விப‌ர‌ங்க‌ள் உட‌னுக்கு உட‌ன் வ‌ரும் , தாக்குத‌ல் செய்திக‌ள் வ‌ருவ‌தே இல்லை எம்ம‌வ‌ர் ஊட‌க‌த்தில் / 
புதின‌ம் ம‌ற்று. ப‌திவு , இந்த‌ இர‌ண்டு ஊட‌க‌த்தில் வார‌ செய்தி நூற்றுக்கு நூறு உண்மை  / நான் நினைக்கிறேன் புதின‌ம் அவுஸ்ரேலியாவில் இருந்து இய‌ங்கின‌ இணைய‌த‌ள‌ம் என்று , புதின‌ம் செய்தி புதின‌ இணைய‌ த‌ள‌த்துக்கு வ‌ந்த‌ உட‌ன‌ அனைத்து செய்தியும் யாழ்க‌ள‌த்துக்கும் உட‌ன‌ வ‌ரும் /

முன்ன‌னி த‌ள‌ப‌திக‌ள் ப‌ல‌ர் ஆன‌ந்த‌ புர‌த்தில் வீர‌காவிய‌மான‌ செய்தி கூட‌ உட‌ன‌ வெளி வ‌ர‌ வில்லை , அப்ப‌டி ப‌ல‌ சிக்க‌லான‌ கால‌ம் அது /

அப்ப‌டி இருக்கும் போது இப்ப‌டியான‌ செய்திக‌ளை அன்று ப‌ல‌ரும் ந‌ம்பி இருந்தின‌ம் உண்மையாய் இருக்கும் என்று , நானும் என் ம‌ன‌சில் ப‌ட்ட‌த‌ 2009ம் ஆண்டு அந்த‌ திரியில் எழுதினேன் , இப்ப‌டி தான் அப்ப‌ ப‌ல‌ரின் ம‌ன‌ நிலை 😓

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பையன்26 said:

த‌மிழ் நாடு போன‌ போது பார்த்தேன் ராஜிவ் காந்தி இற‌ந்த‌ இட‌ம் , சாலைக்கு ப‌க்க‌த்தில் தான் அந்த‌ குண்டு ச‌ம்ம‌வ‌ம் ந‌ட‌ந்து இருக்கு / 

வட நாட்டு அதிகாரிகள் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போதைக்குக் கிடைத்த எளிய ஆதாரங்கள் எடுத்து வீசப்பட்டன. அதே மே 21ம் தேதி, அதே ஸ்ரீபெரும்புதூரில் நடக்கவிருந்த கலைஞர் கருணாநிதியின் பொதுக்கூட்டம். சற்றும் முன்னறிவிப்பின்றி, அது அன்றைய தினம் காலை சடாரென்று ஒத்திவைக்கப்பட்டது. கலைஞரின் ஸ்ரீபெரும்புதூர் வருகை தவிர்க்கப்பட்டது.

கே. ரகோத்தமன். Rajiv Kolai Vazhakku  (Tamil) . Kizhakku Pathippagam. Kindle Edition. 

கே. ரகோத்தமன். Rajiv Kolai Vazhakku எழுதிய புத்தகத்தின் ஒரு பகுதி யில் கபடநாடக நரி  கருணாநிதியின் தோலுரிப்பு .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

கிருபன் எப்படி ஐயா உங்களால் இப்படி கிளுகிளுப்பாக ஒவ்வொரு திரியிலும் கலக்க முடிகின்றது. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பதில்கள். 

எனக்கும் ஒருக்கா அந்த தேள் வடிவ தக்குதலை விளக்கி எழுதுங்களேன்

கடந்த வாரம் வேலைக்கு லீவு! கொரோனாவால் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் நேரம் கிடைத்தது. 😬

இந்த நேரம் பார்த்து அண்ணன் சீமான் வேறு விகடனுக்கு பேட்டி கொடுத்தாரு! நட்வர்சிங் பேட்டியை வேறு யாரோ தோண்டி எடுத்தார்கள்!  பொழுது போயிடுச்சு!

தேள் வடிவ தாக்குதலைப் பற்றி அரூஸ் விட்ட பூரூஸை நான் அல்லது நம்ம கறுப்பிதான் யாழில் இணைத்திருக்கவேண்டும்! கூகிளில் தேடியும் இணையத்தில் கிடைக்கவில்லை! யாழிலும் அகப்படவில்லை.☹️

கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கு!

1 hour ago, பையன்26 said:

அப்ப‌டி இருக்கும் போது இப்ப‌டியான‌ செய்திக‌ளை அன்று ப‌ல‌ரும் ந‌ம்பி இருந்தின‌ம் உண்மையாய் இருக்கும் என்று , நானும் என் ம‌ன‌சில் ப‌ட்ட‌த‌ 2009ம் ஆண்டு அந்த‌ திரியில் எழுதினேன் , இப்ப‌டி தான் அப்ப‌ ப‌ல‌ரின் ம‌ன‌ நிலை 😓

பையன் இப்ப பதட்டமான நிலை இல்லைத்தானே. அதனால் உண்மைகளை ஆராய்ந்து எழுதலாம்☺️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

தேள் வடிவ தாக்குதலைப் பற்றி அரூஸ் விட்ட பூரூஸை நான் அல்லது நம்ம கறுப்பிதான் யாழில் இணைத்திருக்கவேண்டும்! கூகிளில் தேடியும் இணையத்தில் கிடைக்கவில்லை! யாழிலும் அகப்படவில்லை.☹️

பதிவில் வன்னியன் எனும் புனைபெயரில் மயூரன் என்பவர் எழுதியவர் பின்னாளில் இவரின் லீலைகள் முகநூலில் படங்களுடன் வந்தது  ஆள் கடைசியாக  தமிழ் ஈழ ஆவணக்காப்பகம் என்று கதை விட்டு கொண்டு திரிந்தவர்  .

2 hours ago, பையன்26 said:

 

அர‌ச‌ன் அன்று கொல்லுவான் தெய்வ‌ம் நின்று கொல்லும் என்ற‌ மாதிரி / ராஜிவ் காந்தி ஈழத்தில் செய்த‌ அட்டூழிய‌த்துக்கு ஆண்ட‌வ‌ர் அவ‌னுக்கு குடுத்த‌ த‌ண்ட‌னையாய் உண‌ருகிறேன் , அது தான் அவ‌னின் இற‌ப்பும் மிக‌ கொடிய‌தாய் இருந்த‌து /

 

 பையன் நீங்கள் அப்படி உணர்ந்தாலும் அவருக்கு ஆண்டவர் ஒன்றும் தண்டனை கொடுக்கவில்லை. அவர்  தானே வைத‍்த‍தாக சீமான் கூறிய  குண்டு வெடிப்பு தாக்குலதலில் படுகொலை செய்யபட்டார். தலைவர் பிரபாகரன் இறந்த போதும் நீங்கள் சொன்னதை தான் சிலர் சொன்னார்கள். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, பெருமாள் said:

பதிவில் வன்னியன் எனும் புனைபெயரில் மயூரன் என்பவர் எழுதியவர் பின்னாளில் இவரின் லீலைகள் முகநூலில் படங்களுடன் வந்தது  ஆள் கடைசியாக  தமிழ் ஈழ ஆவணக்காப்பகம் என்று கதை விட்டு கொண்டு திரிந்தவர்  .

நினைவுபடுத்தியதற்கு நன்றி பெருமாள். அரூஸ் தொடர்ந்து பல புரூஸ்களை விட்டதால் அவர்தான் தேள்வடிவ தாக்குதலையும் டிசைன் பண்ணினார் என்று மாறி நினைத்துவிட்டேன்.

வன்னியன் என்ற பெயரில் எழுதிய “தேள்வடிவ ஆய்வு” தேடிப்பார்க்கவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

தேள்வடிவ தாக்குதல் - ஜேர்மனியிலிருந்து சபேசனால் எழுதப்பட்டது என நினைக்கின்றேன், பின்னாளில் அவர் தான் அப்படி எழுதியதற்கான விளக்கம் ஒன்றையும் கூறியிருந்தார் .

13 minutes ago, கிருபன் said:

நினைவுபடுத்தியதற்கு நன்றி பெருமாள். அரூஸ் தொடர்ந்து பல புரூஸ்களை விட்டதால் அவர்தான் தேள்வடிவ தாக்குதலையும் டிசைன் பண்ணினார் என்று மாறி நினைத்துவிட்டேன்.

வன்னியன் என்ற பெயரில் எழுதிய “தேள்வடிவ ஆய்வு” தேடிப்பார்க்கவேண்டும்!

 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, tulpen said:

 பையன் நீங்கள் அப்படி உணர்ந்தாலும் அவருக்கு ஆண்டவர் ஒன்றும் தண்டனை கொடுக்கவில்லை. அவர்  குண்டு வெடிப்பு தாக்குலதலில் படுகொலை செய்யபட்டார். தலைவர் பிரபாகரன் இறந்த போதும் நீங்கள் சொன்னதை தான் சிலர் சொன்னார்கள். 

வ‌ண‌க்க‌ம் துல்ப‌ன் ,
த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னின் இர‌க்க‌ குன‌மும் ம‌னித‌ நேய‌மும் தெரியாத‌ ஆட்க‌ள் த‌லைவ‌ரை தூற்றுவார்க‌ள் /

( அண்ண‌ன் சீமான் சொன்னார் த‌லைவ‌ர் அனியாய‌த்துக்கு எல்லாம் ந‌ல்ல‌வ‌ரா இருந்திட்டார்  ) 


ஏன் என்ர‌ அத்தை கூட‌ த‌லைவ‌ரை என‌க்கு முன்னால் பேசினா இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் நான் தாய‌க‌த்தில் நின்ற‌ போது /  

என‌க்கு ந‌ல்லாவே தெரியும் அத்தையின் உல‌க‌ம் எவ‌ள‌வு சிறுசு ம‌ற்றும் புரித‌ல் இல்லா ஈன‌ பிற‌வி என‌து அத்தை 😠😡

த‌லைவ‌ர் இல்லாட்டி இன்று ப‌ல‌ர் ஈழ‌ தேச‌த்திலும் த‌ற்போது புல‌ம்பெய‌ர் நாட்டில் வாழ்ப‌வ‌ர்க‌ளும் உயிருட‌ன் இருந்து இருக்க‌ மாட்டின‌ம் இது நித‌ர்ச‌ன‌ உண்மையும் கூட‌ , சிங்க‌ள‌ம் மெது மெதுவாக‌ த‌மிழ‌ர்க‌ளை அழித்து இருப்பாங்க‌ள் / 

இற‌ந்து போன‌ பெண் போராளியின் உடுப்பை க‌ல‌ட்டி போட்டு சிங்க‌ள‌ இராணுவ‌ம் உட‌ல் உற‌வு செய்த‌ வ‌ர‌லாறும் உண்டு , 

ஏன் க‌ண‌க்க‌ எழுதுவான் 1995ம் ஆண்டு நவாலி தேவாலைய‌த்தில் அடைக்க‌ல‌ம் புகுந்த‌ ம‌க்க‌ளை தேவாலைய‌த்துக்கை வைச்சே விவான‌த்த‌ல் குண்டு போட்டு ப‌ள்ளி சிறுமிக‌ள் தொட்டு முதிய‌வ‌ர்க‌ள் வ‌ரை எல்லாரையும் சிங்க‌ள‌ம் கொன்று குவிச்ச‌து , இதை எல்லாம் நாம் எம்  க‌ண்ணால் க‌ண்டு சிங்க‌ள‌ பேய்க‌ள் மேல் அதிக‌ வெறுப்பும் கோவ‌மும் /
ந‌வாலி தேவ‌லைய‌ தாக்குத‌ல‌ நேரில் க‌ண்ட‌ சின்ன‌  பெடிய‌ன் பின்னாளில் க‌ரும்புலியாய் உருவ‌ம் எடுத்து 2007ம் ஆண்டு எல்லாள‌ன் ந‌ட‌வ‌டிக்கையின் போது இன‌த்துக்காக‌ நேர‌ம் பார்த்து உயிர் தியாக‌ம் செய்த‌வ‌ர்  

1995ம் ஆண்டு சின்ன‌ பெடிய‌னாய் இருந்த‌ போது இன‌ துய‌ர‌த்தை க‌ண்டு பின்னாளில் போராட்ட‌த்தில் இணைந்து க‌ரும்புலியாய் பிற‌ப்பெடுத்த‌ க‌ரும்புலி ம‌ற‌வ‌ர் இவ‌ர் தான் 

வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏

20200530-192850.png

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, MEERA said:

தேள்வடிவ தாக்குதல் - ஜேர்மனியிலிருந்து சபேசனால் எழுதப்பட்டது என நினைக்கின்றேன், பின்னாளில் அவர் தான் அப்படி எழுதியதற்கான விளக்கம் ஒன்றையும் கூறியிருந்தார் .

 

இல்லை. சபேசன் எழுதவில்லை.

திரி இங்குள்ளது.😎

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.