Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Rajesh said:

முன்னாள் பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தமது கட்சியில் போட்டியிடவில்லை என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொம்மாண் சுயேச்சையாக நிற்கப்போறரோ??? 

கருணாவின் தனி வாழ்க்கையுடன் தொடர்புடைய படத்தை அகற்றிவிட்டேன், கருத்திற்கும் அதற்கும் தொடர்பு இல்லை.

Edited by ரஞ்சித்
தவறு

  • Replies 225
  • Views 25.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

3000 படைவீரரை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான மிகச்சிறந்த தகுதியா? சஜித் பிரேமதாச கேள்வி

Post Views: 22
June 21, 2020

கருணா அம்மான் தெரிவித்திருக்கும் விடயங்கள் குறித்த தனது நிலைப்பாட்டை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்தவேண்டும் என சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடுவெலயில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

Sajith.Premadasa.7-june-21-300x150.jpg

பிரதமர் மகிந்த ராஜபக்ச தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்க முன்வந்தார் என கருணா அம்மான் தெரிவித்திருப்பது குறித்தும் அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் கருணா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவராகவும் பிரதிஅமைச்சராகவும் பதவி வகித்தவர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

karuna-3-3-300x169.jpg

கருணா அம்மான் சமீபத்தில் தான் ஆனையிறவில் 3000 இராணுவத்தினரை கொலைசெய்ததால் கொரோனா வைரசிரனைவிட ஆபத்தானவன் எனவும், மகி;ந்த ராஜபக்ச தனக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்கியுள்ளார் எனவும் சஜித்பிரேமதாச கடுவெலயில் சுட்டிக்காட்டியுள்ளார்.
3000 படைவீரரை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான மிகச்சிறந்த தகுதியா என சஜித்பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பௌத்தமத தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

http://thinakkural.lk/article/48299

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

 

“சசி கமலன்” சொல்வதைப் படியுங்கள்.
இது என்னுடைய மாவட்டம் என்பதால், வரும் தேர்தலில் முழு கள நிலவரத்தையும் அத்துப்படியாக அறிந்தவன் என்பதால் உங்களுக்குத் தெளிவூட்டல் ஒன்றை செய்ய விரும்புகிறேன்.
மற்றைய மாவட்டங்கள் போலல்லாது, அம்பாறை மாவட்டத்தின் தேர்தல் நிலைமை தமிழர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைந்திருக்கிறது. இதனை அம்பாறை மாவட்ட தமிழ் மக்களே தயவுசெய்து மறக்க வேண்டாம்.
அம்பாறை மாவட்டத்தில் 95 ஆயிரம் பதிவுசெய்யப்பட்ட தமிழர்களின் வாக்குகள் உள்ளது. இதில் வெறும் 15,000 வாக்குகளைச் சிதைக்கும் வேலை திட்டம் போட்டுக் கருணாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதற்குக் காரணம், வருகின்ற விகிதாசார தேர்தல் அடிப்படையில், 90,000 வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறுமாயின் இரண்டு ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.
இதனால் சிங்களப் பிரதிநிதி ஒருவர் ஆசனத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் அதற்கு தமிழர்களின் வாக்குகளை பிரிப்பதற்குச் சரியான ஆளாக தென்னிலங்கை அரசியல்வாதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் இந்தக் கருணா.
கருணாவின் சொந்த ஊரான கிரான் உள்ளடங்கும் கல்குடா தேர்தல் தொகுதியை விட்டு விட்டு, எந்தவித தொடர்பும் அற்ற திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் கருணா போட்டியிடும் காரணமும், சூழ்ச்சியும் உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும்.
உங்களில் சிலருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதிருப்தி இருக்கலாம். ஆனால் அந்த அதிருப்தியால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களே ஒரு ஆசனத்தை இழந்து விடாதீர்கள்.
ஆகஸ்ட் 5 ஆம் திகதி நாம் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்போமாக இருந்தால் 90 ஆயிரம் வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களைக் கைப்பற்ற முடியும் என்ற உண்மையை குழந்தைப் பிள்ளைகளுக்குச் சொல்வதைப் போல அம்பாறை மாவட்ட மக்களுக்குச் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
“சசி கமலன்”, மல்வத்தை,கணபதிபுரம்.

சசிகமலன் ஒரு தீவிர கூட்டமைப்பு ஆதரவாளர் என்பது அங்கால எல்லோருக்கும் தெரியும் ...காவிறத்திற்கு வேறு ஒன்றும் இல்லாமல் இதை காவிக் கொண்டு வந்து இணைப்பதன் மூலம் எவ்வளவு பஞ்சம் என்று தெரிகிறது.
கருணா முதலில் மட்டக்களப்பில் தான் கேட்பதாக இருந்தார்...பிள்ளையானோடு இணைந்து செயற்பட அவரது அனுமதியை கேட்க அவர் மறுத்து விட்டார் ...தவிர முதலில் கேட்டு தோல்வி என்பதால் தான் இந்த தடவை அம்பாறையில் கேட்க்கிறார் 

7 hours ago, ரஞ்சித் said:

கொம்மாண் சுயேச்சையாக நிற்கப்போறரோ??? 

 

எவ்வளவு படித்தென்ன?....பாடசாலைக்கு அதிபராய் இருந்தென்ன அடுத்தவனின் தனிப்பட்ட  விசயத்தில் தலையிடும் கேடு கெட்ட புத்தி எம்மை விட்டுப் போகாது.

 

On ‎20‎-‎06‎-‎2020 at 03:43, பெருமாள் said:

ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் இவ்வாறு இராணுவப் படைவீரர்களை கொன்றொழித்ததாகத் தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை தாம் நிராகரித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மான் கொரோனா வைரஸ் தொற்றை விடவும் அபாயமானவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பட்டியல் ஊடாக தெரிவாவதனை விடவும் தாம் மக்களின் ஆணையின் அடிப்படையில் நாடாளுமன்றம் செல்லவே விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/community/01/248995?ref=home-imp-parsely

 

On ‎20‎-‎06‎-‎2020 at 09:22, MEERA said:

ஆனையிறவுச் சமருக்கும் கும்மானுக்கும் என்ன தொடர்பு?

 

 

18 hours ago, MEERA said:

 

 

நீங்கள் செய்தியையே ஒழுங்காக படிக்கவில்லை....

அதுக்குள்ள கும்மானுக்கு முண்டு

மீராவுக்கு தான் என்ன எழுதினது என்று விளங்கிச்சா ? 

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

எவ்வளவு படித்தென்ன?....பாடசாலைக்கு அதிபராய் இருந்தென்ன அடுத்தவனின் தனிப்பட்ட  விசயத்தில் தலையிடும் கேடு கெட்ட புத்தி எம்மை விட்டுப் போகாது.

 

நீங்க மட்டும் அடுத்தவனின் தனிப்பட்ட விசயத்தில் தலையிடலாம்...

கும்மாளம் ஆனையிறவிற்கு போன விடயம் என்னாச்சு?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

நீங்க மட்டும் அடுத்தவனின் தனிப்பட்ட விசயத்தில் தலையிடலாம்...

கும்மாளம் ஆனையிறவிற்கு போன விடயம் என்னாச்சு?

நான் எங்கே எப்ப அடுத்தவனின் படுக்கை விசயத்தில் தலையிட்டேன் 

மேலே தமிழில் தான் எழுதியிருக்கேன் ...உங்களுக்கு தேவை என்றால் தேடிப் பாருங்கள் ...எல்லாத்தையும் கிளிப்பிள்ளைக்கு தீத்திற மாதிரி வாய்க்குள் கொண்டு வந்து திணிக்க முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

நான் எங்கே எப்ப அடுத்தவனின் படுக்கை விசயத்தில் தலையிட்டேன் 

24 மணி நேரம் கூட ஆகவில்லை நீங்கள் சாந்தனின் விடயம் எழுதி....

சரி இதெல்லாம் கிடக்கட்டும், 

கும்மாளம் ஆனையிறவிற்கு போன விடயம் என்னாச்சு....

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

 ஆகவே விநாயக மூர்த்தி முரளிதரன் செய்தது சரி. ஆனால் நான் காட்டிக்குடுக்கவில்லை, என்பாட்டில் வெளிநாட்டுக்கு போய் விட்டேன், என்று ஒரு பொய் விட்டார் பாருங்கோ! அதுதான் கையோடு சிங்களவன் புட்டு வைச்சிட்டான்.  சொந்தமா...  பந்தமா...  பிறவிக்குணமா.... சுயநலமா? இப்பிடியெல்லாம் கதைக்க வைக்குது சிலபேரை. இன்னும் பொறுத்திருங்கோ, எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியில வந்து ஐயா உள்ள போவார்.  

உள்ளே போகட்டும் அல்லது மண்டையை போடட்டும்..உங்களுக்கு சந்தோசம் தானே ...நடக்கும் போது பார்த்துக் கொள்ளுங்கோ ...உப்பவே ஏன் குத்தி முறிகிறீர்கள் 

6 minutes ago, MEERA said:

24 மணி நேரம் கூட ஆகவில்லை நீங்கள் சாந்தனின் விடயம் எழுதி....

சரி இதெல்லாம் கிடக்கட்டும், 

கும்மாளம் ஆனையிறவிற்கு போன விடயம் என்னாச்சு....

நான் சாந்தனின் தனிப்படட போட்டோவை கொண்டு வந்த இணைத்தனானா?...கற்பகத்தரு கூட பெயர் மறைத்து தான் எழுதினர் ...விசுகு அண்ணா தேவையில்லாமல் கக்க போய் தான் பேர் வெளியால வந்தது.
 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

உள்ளே போகட்டும் அல்லது மண்டையை போடட்டும்..உங்களுக்கு சந்தோசம் தானே ...நடக்கும் போது பார்த்துக் கொள்ளுங்கோ ...உப்பவே ஏன் குத்தி முறிகிறீர்கள் 

என்ன இப்படி சொல்லீட்டீங்க... எங்களுக்கு Entertainment க்கு ஆள் கிடைக்காதே...

7 minutes ago, ரதி said:

 நான் சாந்தனின் தனிப்படட போட்டோவை கொண்டு வந்த இணைத்தனானா?...கற்பகத்தரு கூட பெயர் மறைத்து தான் எழுதினர் ...விசுகு அண்ணா தேவையில்லாமல் கக்க போய் தான் பேர் வெளியால வந்தது.
 

விசுகு அண்ணா என்னத்தை கக்கினவர்? அவரும் "எங்கேயோ கேட்ட குரல்" என எழுத நீங்கள்தான் பெயரை எழுதினீங்கள்.

 

Edited by MEERA

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

உள்ளே போகட்டும் அல்லது மண்டையை போடட்டும்..உங்களுக்கு சந்தோசம் தானே ...நடக்கும் போது பார்த்துக் கொள்ளுங்கோ ...உப்பவே ஏன் குத்தி முறிகிறீர்கள் 

கிழக்கில் உள்ள மக்களை காப்பற்ற போகிறேன்  என்று பிரிந்தவர் கடைசி அதையும் செய்யாமல் குடிச்சு வெறிச்சு கொண்டு உளறல் கதைகளை சொல்லிக்கொண்டு திரிவதை பார்க்க செத்து போவது மேல்  அவர் செத்தால் பலபேர் வெடி கொளுத்தி ஆரவாரம் பண்ணுவினம் .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

கிழக்கில் உள்ள மக்களை காப்பற்ற போகிறேன்  என்று பிரிந்தவர் கடைசி அதையும் செய்யாமல் குடிச்சு வெறிச்சு கொண்டு உளறல் கதைகளை சொல்லிக்கொண்டு திரிவதை பார்க்க செத்து போவது மேல்  அவர் செத்தால் பலபேர் வெடி கொளுத்தி ஆரவாரம் பண்ணுவினம் .

தான் கிழக்கிலிருந்து தமிழீழத்திற்காக போராடுவன் என்று அறிக்கை விட்டவர், கடைசியில் தன்னை நம்பி வந்தவர்களை சகோதரனைக் கூட காப்பாற்ற முடியாமல் ஓடி ஒளிந்தது தான் மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

கருணாவின் பகிரங்க அறிவிப்பு! கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நெருக்கடி - ஸ்ரீலங்காவில் வெடித்தது சர்ச்சை

மனித குலக்திற்கெதிரான பாரதூரக் கொலைகளைச் செய்த முன்னாள் பிரதியமைச்சரும், பொதுஜன முன்னணியின் வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்யும்படி, சிங்கள ராவய அமைப்பு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

வன்னியில் இடம்பெற்ற போரின் போது 2000 தொடக்கம் 3000 வரையிலான ஸ்ரீலங்கா படையினரை ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் படுகொலை செய்ததாக கருணா அம்மான் நேற்றைய தினம் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

இக்கருத்து தற்போது தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்,

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் கருணா அம்மானைக் கைது செய்யும்படி கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராக களமிறங்கியுள்ள விநாயகமூர்த்தி என்று சொல்லப்படும் கருணா உடலை உலுக்கும் வகையிலான மிகவும் பாரதூரமான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனையிறவு பகுதியில் ஸ்ரீலங்கா படையைச் சேர்ந்த இராணுவத்தினர் 2000 அல்லது 3000 பேரை தான் கொலை செய்ததாக கூறியுள்ளார். இது ஸ்ரீலங்கா சட்டத்தின்படி முரணான அறிவிப்பாகும்.

கொலைக் குற்றச்சாட்டில் அவரைக் கைது செய்ய முடியும். அவரைக் குற்றவாளியாக்க முடியும். சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்க முடியும்.

ஆகவே உடனடியாக அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கும் படியும் பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியோருக்கு நினைவுபடுத்துகின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் நடத்தியிருந்தன. அதனை விடவும் மனித குலக்திற்கெதிரான பாரதூரக் கொலைகளை கருணா செய்திருப்பது அவராலே சொல்லப்பட்டுள்ளது.

ஆனையிறவு பகுதியில் மட்டுமல்ல, கிழக்கு மாகாணத்தில் அரந்தலாவ பகுதியில் பிக்குமார்களை படுகொலை செய்தமை, சில கிராமங்களுக்குள் நுழைந்து அப்பாவி மக்களை வெட்டிக் கொலை செய்தமை போன்ற செயற்பாடுகளை கருணா செய்திருக்கின்றார்.

இப்போது பகிரங்கமாகவே அவரால் செய்யப்பட்ட பாவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சஹ்ரான் செய்த குற்றச் செயல்களைப் போல கருணாவும் இனப்படுகொலையை செய்துள்ளார்.

உடனடியாக அவரைக் கைது செய்ய வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் வைத்து அவர் செய்துள்ள அறிவிப்பின் ஊடாக நாட்டிற்கு மிகவும் ஒரு பயங்கரமான அறிவிப்பை விடுத்து மீண்டும் ஒருமுறை கருணா ஈழத்தை கேட்கின்றாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆகவே ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளிடம் கருணா அம்மான் மீதான நடவடிக்கையை எடுக்க வேண்டும்படி கோருகிறோம். பல்லாயிரக்கணக்கான கொலையை செய்தவரை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்க முடியுமா? நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு சவால் விடுத்தவரை விட்டுவைக்க முடியுமா?

அதேபோல முன்பு செய்த விளையாட்டுக்களை இப்போது செய்ய முடியாது என்பதை கருணா அம்மானுக்கு நினைவூட்டுகின்றோம்.

தற்போதைய ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பவர். இன்றும் ஈழத்தை கருணா அம்மான் கோரினால் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட அதே நிலையே அவருக்கும் ஏற்படும் என்பதை எச்சரிக்கின்றோமென அவர் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/145516?ref=rightsidebar

 

நடவடிக்கை எடுங்கள், சிறைகளில் வாடும் அப்பாவிகளுக்கு விடுதலை கிடைக்கட்டும்

சாட்சிக்கு கும்மானின் சார்பில் யாழ்கள ரதி அக்கா வருவார்....

பி.கு: சிறீலங்காவில் நீதி நிலைபெறுவதும் குதிரைக்கு கொம்பு முளைப்பதும் ஒன்று தான்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ரதி said:

மீராவுக்கு தான் என்ன எழுதினது என்று விளங்கிச்சா ? 

அக்கா இந்த திரியை ஆரம்பத்திலிருந்து ஆறுதலாக வாசியுங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக quote பண்ணி திசை திருப்பாதீர்கள்...

ஒரே இரவில் 3,000 இராணுவ வீரர்களை ஆனையிறவில் கொன்றழித்தேன் -  கும்மான்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

கொம்மாண் சுயேச்சையாக நிற்கப்போறரோ??? 

Hon. Karuna Amman - The One Even Above The God - Colombo Telegraph

உண்மை. தனிப்பட்ட வாழ்க்கையின் ஒழுக்கம் பொதுவாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை புரியாதவர் தான் கும்மான். மேலும் அவர் ஒரு பணப் பேய்.

இதனால் தான் இயக்கத்தை விட்டே விலகி ஓட வேண்டி வந்தது. 

அதன் பின் வழமை போல எல்லா ஒட்டுக்குழு தமிழர்களையும் போல் எதிரியோடு சேர்ந்து நின்று காட்டிக்கொடுத்து.. சொந்த இனத்தையே கருவறுத்து.. இப்போ மீண்டும் ஒரு தொடக்கப்புள்ளியில் வந்து நிற்கினம்.

ஆனால்.. தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமில்லாதவன்.. தமிழர்களுக்கு ஒரு நல்ல பிரதிநிதியாக இருக்க முடியாது.

மேலும்.. ஆனையிறவு வெற்றித் தளபதிகள் யார் என்று அறியாதவர்களுக்காக.. கீழே ஒரு இணைப்பு..

http://eelamhouse.com/vp-paper/V_P_94.pdf

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, ரதி said:

 

 தங்கச்சி!  போராட்டங்கள்,அரசியல் எல்லாவற்றையும் தவிர்த்து கருணா அவர்கள் பொது வெளியில் கூட தன்னை நேர்மை மற்றும் ஒழுக்கவாதியாக இன்றுவரை நிரூபிக்கவில்லை. இவருக்கு சார்பாக நீங்கள் வாதிட்டு உங்கள் பெயரை நீங்களே கெடுத்துக்கொண்டிருக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கருவுக்கு நேரம் சரியில்லை பொத்திகிட்டு இருந்தால் கோத்தா பணத்தை மட்டும் பிடுங்கிட்டு உயிருடன் விட்டிடுவான்

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

 தங்கச்சி!  போராட்டங்கள்,அரசியல் எல்லாவற்றையும் தவிர்த்து கருணா அவர்கள் பொது வெளியில் கூட தன்னை நேர்மை மற்றும் ஒழுக்கவாதியாக இன்றுவரை நிரூபிக்கவில்லை. இவருக்கு சார்பாக நீங்கள் வாதிட்டு உங்கள் பெயரை நீங்களே கெடுத்துக்கொண்டிருக்கின்றீர்கள்.

நீங்கள் சொல்றது எனக்கு விலங்குது அண்ணா.நன்றி  ...நான் அடுத்தவரின் தனிப்பட்ட விசயத்தில் மூக்கை நுழைப்பதில்லை...அது பற்றி எனக்கு அக்கறையுமில்லை .

 

1 hour ago, MEERA said:

அக்கா இந்த திரியை ஆரம்பத்திலிருந்து ஆறுதலாக வாசியுங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக quote பண்ணி திசை திருப்பாதீர்கள்...

ஒரே இரவில் 3,000 இராணுவ வீரர்களை ஆனையிறவில் கொன்றழித்தேன் -  கும்மான்.

மீரா, என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை ஆனையிறவு சண்டையில் பெரும்பாலும் எல்லாத் தளபதிகளும் பங்கு பற்றியிருந்தார்கள் ... சூசை  ,பானு , தீபன் ,  துர்க்கா போன்றவர்களோடு கருணாவும் தன்  படையணியை வழி நடத்தினார்...இவர்கள் எல்லோரும் ஒவ்வொரு பக்கத்தால் வழி நடத்தினார்கள்... ஆனால் சண்டையை தலைமை தாங்கி ஊடறுத்து வழி நடத்தியது பால்ராஜ்  அண்ணா...அவர் மூலம் தான் ஆனையிறவு பிடிப்பட்ட்து ...ஆனால் கொடியேற்றியது பானு..இது பற்றி நன்கு தெரிந்தவர்கள் தங்கள் நியாயமான கருத்தை சொல்லலாம்  

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

மீரா, என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை ஆனையிறவு சண்டையில் பெரும்பாலும் எல்லாத் தளபதிகளும் பங்கு பற்றியிருந்தார்கள் ... சூசை  ,பானு , தீபன் ,  துர்க்கா போன்றவர்களோடு கருணாவும் தன்  படையணியை வழி நடத்தினார்...இவர்கள் எல்லோரும் ஒவ்வொரு பக்கத்தால் வழி நடத்தினார்கள்... ஆனால் சண்டையை தலைமை தாங்கி ஊடறுத்து வழி நடத்தியது பால்ராஜ்  அண்ணா...அவர் மூலம் தான் ஆனையிறவு பிடிப்பட்ட்து ...ஆனால் கொடியேற்றியது பானு..இது பற்றி நன்கு தெரிந்தவர்கள் தங்கள் நியாயமான கருத்தை சொல்லலாம்  

என்ன இப்ப பம்முறியள்...

ஏற்கனவே கேட்ட கேள்விதான்

கும்மாளம் எங்க எந்த ரீமை கொண்டு போனவர்?

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

என்ன இப்ப பம்முறியள்...

ஏற்கனவே கேட்ட கேள்விதான்

எங்க எந்த ரீமை கொண்டு போனவர்?

எனக்கு உண்மையிலேயே  நினைவில் இல்லை ...இவர் கொண்டு போறதாய் இருந்தால் ஜெயந்தன் படையணியாய்த் தான் இருக்கும்.

இது பற்றிய செய்திகள் யாழிலும் இருக்கும் ...உங்களால் முடிந்தால் தேடி இணையுங்கள் 

நான் நினைக்கிறேன் அவர் அந்த நேரம் கட்டளை தளபதியாய் பணியாற்றினார் என்று  :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, valavan said:

 நீங்கள் விடுதலைபுலிகள் அமைப்பில் இருந்திருக்காவிட்டால்

ஒரு  சிங்களபடைவீரனின் வீட்டு நாயைகூட உங்களால் கொல்ல முடிந்திருக்குமா அம்மான்?

இவ‌ர ப‌ற்றி இன்னொரு திரியில் எழுதினான் , நீங்க‌ள் எழுதின‌தும் நான் எழுதின‌தும் கிட்ட‌ த‌ட்ட‌ பொருந்துது , இவ‌ர‌ விட‌ எம் போராட்ட‌த்தில் திற‌மையான‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் இருந்த‌வ‌ர்க‌ள் த‌ன்ன‌ விட‌ ஒரு த‌ர் வ‌ள‌ந்து விட‌ப் போகிறார் என்று இந்திய‌ன் ஆமி கால‌த்தில் க‌ருணா போட்டு த‌ள்ளின‌வ‌ர் ,

பால்ராஜ் அண்ணாவோடு இந்த‌ காம‌வெறிய‌ன‌ ஒப்பிட்டு பார்க்க‌ முடியாது , 

பால்ராஜ் அண்ணா தான் ஆனையிற‌வில் முன்னுக்கு நின்று போராளிக‌ளை வ‌ழி ந‌ட‌த்தி வெற்றியும் க‌ண்ட‌வ‌ர் ,

 

 

இந்த‌க் காணொளியை பாருங்கோ க‌ருணா 1989ம்ப‌தில் செய்த‌ முத‌ல் துரோக‌ம் , இது என‌க்கு நேற்றுத் தான் தெரியும் 

 

Edited by பையன்26

4 hours ago, Rajesh said:

இது ஏமாந்த தமிழர்ற்றை வாக்குகளை அபகரிக்கும் மகிந்த-கருணா கோஷ்டியின் திட்டமிட்ட பிரச்சாரம்.

கயவனாக மாறிய கருணா சொன்னதும் பொய். சோ எந்த நடவடிக்கையும் எடுக்க முடியா. 

அதன்பின் மகிந்த கருணாவை புகழ்ந்து விட்ட அறிக்கையும் இது திட்டமிட்ட தேர்தல் பிரச்சார தந்திரம் என்டு சொல்லுது.

 

மகிந்த இராஜபக்ச பயங்கரவாத கும்பலின் திட்டமிட்ட பிரச்சாரமாக இருக்கலாம்.
எதிர்ப்புகள் ஓங்கியொலிப்பதால் கருணாவை கழட்டிவிடுவதாக இப்போது நாடகமாடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

எனக்கு உண்மையிலேயே  நினைவில் இல்லை ...இவர் கொண்டு போறதாய் இருந்தால் ஜெயந்தன் படையணியாய்த் தான் இருக்கும்.

இது பற்றிய செய்திகள் யாழிலும் இருக்கும் ...உங்களால் முடிந்தால் தேடி இணையுங்கள் 

நான் நினைக்கிறேன் அவர் அந்த நேரம் கட்டளை தளபதியாய் பணியாற்றினார் என்று  :unsure:

ஐயோ ஐயோ..... 🤣🤣🤣🤣🤣🤣

படையணியை வழி நடத்தினது என்கிறீர்கள் பிறகு கட்டளை தளபதி என்கிறீர்கள்.... ஜெயந்தன் படையணி என்கிறீர்கள்.. ஏன் இப்படி குழப்பம்...

ஏற்கனவே நெடுக்கர் இணைச்சிருக்கிறார்.. 

நீங்கள் தான் ஆனையிறவிற்கும் கும்மானிற்கும் என்ன தொடர்பு என்று தேடி இணைக்க வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

ஐயோ ஐயோ..... 🤣🤣🤣🤣🤣🤣

படையணியை வழி நடத்தினது என்கிறீர்கள் பிறகு கட்டளை தளபதி என்கிறீர்கள்.... ஜெயந்தன் படையணி என்கிறீர்கள்.. ஏன் இப்படி குழப்பம்...

ஏற்கனவே நெடுக்கர் இணைச்சிருக்கிறார்.. 

நீங்கள் தான் ஆனையிறவிற்கும் கும்மானிற்கும் என்ன தொடர்பு என்று தேடி இணைக்க வேண்டும்.

 

மீரா , நான் ஏற்கனவே எழுதினது தான் ...கருணா பங்கு பற்றின தாக்குதல்களில் இருந்து அவரது பெயரை எல்லாம் நீக்குவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

 தங்கச்சி!  போராட்டங்கள்,அரசியல் எல்லாவற்றையும் தவிர்த்து கருணா அவர்கள் பொது வெளியில் கூட தன்னை நேர்மை மற்றும் ஒழுக்கவாதியாக இன்றுவரை நிரூபிக்கவில்லை. இவருக்கு சார்பாக நீங்கள் வாதிட்டு உங்கள் பெயரை நீங்களே கெடுத்துக்கொண்டிருக்கின்றீர்கள்.

ச‌ரியாய் சொன்னீங்க‌ள் தாத்தா , இந்த‌ விடைய‌த்தில் யாழ்க‌ள‌த்தில் ர‌தி அக்கா ந‌ல்ல‌ உற‌வுக‌ளை கூட‌ இழ‌க்க‌ போகிறா , 

ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் க‌ருணாவை விட‌ எவ‌ள‌வோ திற‌மையான‌ த‌ள‌ப‌திக‌ள் இருந்த‌வை அவ‌ர்க‌ள் இந்திய‌ன் ஆமியுட‌னான‌ ச‌ண்டையில் வீர‌ச்சாவு அடைந்து விட்டார்க‌ள் ,
2006ம் ஆண்டு ஆமியின் சின‌ப்ப‌ர் தாக்குத‌லில் வீர‌ச்சாவு அடைந்த‌   ர‌ம‌ண‌ன் அண்ணா கூட‌ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு என்று நினைக்கிறேன் , 2004ம் ஆண்டு க‌ருணாவிட‌ம் இருந்த‌ போராளிக‌ளையும் க‌ருணாவின் க‌ட்டு பாட்டில் இருந்த‌ இட‌ங்க‌ளை ர‌ம‌ண‌ன் அண்ணா த‌ல‌மையிலான‌ போராளிக‌ள் தான் கைப்ப‌ற்றினார்க‌ள் , அப்போது க‌ருணா ஆமியின் இருப்பிட‌ம் நோக்கி த‌ப்பி ஓடின‌வ‌ர் ,

Edited by பையன்26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பையன்26 said:

ச‌ரியாய் சொன்னீங்க‌ள் தாத்தா , இந்த‌ விடைய‌த்தில் யாழ்க‌ள‌த்தில் ர‌தி அக்கா ந‌ல்ல‌ உற‌வுக‌ளை கூட‌ இழ‌க்க‌ போகிறா , 

ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் க‌ருணாவை விட‌ எவ‌ள‌வோ திற‌மையான‌ த‌ள‌ப‌திக‌ள் இருந்த‌வை அவ‌ர்க‌ள் இந்திய‌ன் ஆமியுட‌னான‌ ச‌ண்டையில் வீர‌ச்சாவு அடைந்து விட்டார்க‌ள் ,
2006ம் ஆண்டு ஆமியின் சின‌ப்ப‌ர் தாக்குத‌லில் கொல்ல‌ப் ப‌ட்ட‌ ர‌ம‌ண‌ன் அண்ணா கூட‌ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு என்று நினைக்கிறேன் , 2004ம் ஆண்டு க‌ருணாவிட‌ம் இருந்த‌ போராளிக‌ளையும் க‌ருணாவின் க‌ட்டு பாட்டில் இருந்த‌ இட‌ங்க‌ளை ர‌ம‌ண‌ன் அண்ணா த‌ல‌மையிலான‌ போராளிக‌ள் தான் கைப்ப‌ற்றினார்க‌ள் , அப்போது க‌ருணா ஆமியின் இருப்பிட‌ம் நோக்கி த‌ப்பி ஓடின‌வ‌ர் ,
 

அப்பன்! சிங்கள அரசியல்வாதிகளே விடுதலைப்புலிகளின் அழிப்புக்கு கருணா உதவிக்கரமாக இருந்தவர் என வெளிப்படையாக கூறுகின்றார்கள். இதற்கு பின்னரும்.....????????

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு படித்தென்ன?....பாடசாலைக்கு அதிபராய் இருந்தென்ன அடுத்தவனின் தனிப்பட்ட  விசயத்தில் தலையிடும் கேடு கெட்ட புத்தி எம்மை விட்டுப் போகாது.

 

அவரின் படத்தை அகற்றிவிட்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.