Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்திரியா பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: இரண்டு மசூதிகளை மூட அரசாங்கம் உத்தரவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரியா பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: இரண்டு மசூதிகளை மூட அரசாங்கம் உத்தரவு!  | Athavan News

ஆஸ்திரியா பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: இரண்டு மசூதிகளை மூட அரசாங்கம் உத்தரவு!

வியன்னாவில் தாக்குதல் நடத்திய ஜிஹாதி துப்பாக்கிதாரி அடிக்கடி சென்றுவந்த இரண்டு மசூதிகளை மூட ஆஸ்திரிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரியா நல்லிணக்க சூசேன் ராப் கூறுகையில், ‘திங்களன்று தாக்குதல் நடத்தியவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தாக்குதல் நடத்திய ஜிகாதி ஒருவர் இரண்டு வியன்னா மசூதிகளுக்கு பலமுறை விஜயம் செய்ததாக உட்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.

இந்த இரண்டு மசூதிகள் வியன்னாவின் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ளன, ஒன்று ஒட்டாக்ரிங் மாவட்டத்தில் மெலிட் இப்ராஹிம் மசூதி என்றும் மற்றொன்று மீட்லிங் பகுதியில் உள்ள தெவ்ஹிட் மசூதி என்றும் அழைக்கப்படுகிறது.

உள்நாட்டு புலனாய்வு அமைப்பு ‘இந்த மசூதிகளுக்கு வருகை தாக்குதல் நடத்தியவரின் தீவிரவாத எண்ணங்களை அதிகரித்ததாக எங்களிடம் கூறியது. மசூதிகளில் ஒன்று மட்டுமே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது’ என கூறினார்.

ஆஸ்திரியாவின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய மத சமூகத்தின் அறிக்கையில், ‘மதக் கோட்பாடு மற்றும் அதன் அரசியலமைப்பு’ பற்றிய விதிகளையும், இஸ்லாமிய நிறுவனங்களை நிர்வகிக்கும் தேசிய சட்டங்களையும் மீறியதால் அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட ஒரு மசூதி மூடப்படுவதாகக் கூறியுள்ளது.

ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் சமீபத்தில் துப்பாக்கி ஏந்திய ஜிகாதிகள் நடத்திய தாக்குதலில் 4பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

இந்த தாக்குதலை நடத்தியது 20 வயதான குஜ்திம் ஃபெஜ்ஸுலை என அடையாளம் காணப்பட்டது, அவர் பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டார். தாக்குதலுக்குப் பின்னர் காவலில் வைக்கப்பட்டுள்ள 16பேரில் 6பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/ஆஸ்திரியா-பயங்கரவாத-தாக-2/

  • Replies 56
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதே போல் லண்டனிலும் செய்தால் அடங்குவினம் .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஆஸ்திரியா பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: இரண்டு மசூதிகளை மூட அரசாங்கம் உத்தரவு!

அப்பிடியே ஜேர்மனியிலும்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெருமாள் said:

இதே போல் லண்டனிலும் செய்தால் அடங்குவினம் .

அப்ப..  முஸ்லீம்  சகோதரர்களுக்கு... 
கொஞ்சம்  உசுப்பு, ஏத்தி விட வேண்டியதுதான்.
பக்கெண்டு... பத்து இடத்திலை, வைச்சுட்டு போயிடுவாங்கள்... பக்கிரிகள்.  

பிற்குறிப்பு:  பெருமாள்... இங்கிலாந்து நீதிமன்றம் மென்மையானது.
அது, குற்றவாளியை...  கைது செய்த, காவல் துறையினர் தான்.. குற்றத்தை நிரூபிக்க வேண்டும்.
அது மட்டும், குற்றவாளியின் வழக்கறிஞர் வாதாடிக் கொண்டே இருப்பார்.

ஆனால்... ஜேர்மன்  மொழி பேசும் நாடுகளான...
ஜேர்மனி, ஒஸ்ரியா, சுவிஸ்.. போன்ற நாடுகளில், 
காவல் துறையினர்... சந்தேகத்தின் பேரில், ஒருவரை கைது செய்தால்...
அந்தக் குற்றவாளி,  தான்...  நான், சுற்றவாளி என்பதனை நிரூபிக்க வேண்டும்.

நான் அறிந்தவரையில்,  இது... நல்ல நடைமுறை என நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

பெருமாள்... இங்கிலாந்து நீதிமன்றம் மென்மையானது.
அது, குற்றவாளியை...  கைது செய்த, காவல் துறையினர் தான்.. குற்றத்தை நிரூபிக்க வேண்டும்.
அது மட்டும், குற்றவாளியின் வழக்கறிஞர் வாதாடிக் கொண்டே இருப்பார்.

நீதிமன்றம் மென்மையானது  ஆனால் எந்த பிரிவு பாதுகாவலர்கள் குறிப்பிட்ட வழக்கை  கையாளுகினம் என்பதை பொறுத்து தண்டனைகள் மாறுபடும் வெளி உலகிற்கு தெரியாமல் சகல அட்டுழியமும் நடக்கும் மீடியா முந்திரிக்கொட்டை போல் மூக்கை நீட்டினாள் சத்தமே இல்லாமல் உள்ளூர் போலீஸிடம் விசாரணையை தள்ளி விட்டு விடுவார்கள் . அவர்களைப்போல்  பாவப்பட்ட ஜென்மங்களை உலகில் வேறு எங்கும் பார்க்க மாட்டீர்கள் ஒரு சாதரண சைக்கிள் கள்ளனை  பிடித்தால் 40 பக்கத்துக்கு மேல் அவரின் உடல்நிலை தொடங்கி முழுவதும் எழுதி அவரின் கையெழுத்துடன் வேறு இருக்கனும் அதன் பின் கோர்ட்டுக்கு அலைச்சல் இவ்வளவும் முடிய யூரிகள் எனப்படும்  தீர்ப்பாயம் 18 மணி நேரம் குற்றவாளிக்கு ரோடு கூட்டும் வேலை  மட்டுமே தண்டனை .

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பெருமாள் said:

நீதிமன்றம் மென்மையானது  ஆனால் எந்த பிரிவு பாதுகாவலர்கள் குறிப்பிட்ட வழக்கை  கையாளுகினம் என்பதை பொறுத்து தண்டனைகள் மாறுபடும் வெளி உலகிற்கு தெரியாமல் சகல அட்டுழியமும் நடக்கும் மீடியா முந்திரிக்கொட்டை போல் மூக்கை நீட்டினாள் சத்தமே இல்லாமல் உள்ளூர் போலீஸிடம் விசாரணையை தள்ளி விட்டு விடுவார்கள் . அவர்களைப்போல்  பாவப்பட்ட ஜென்மங்களை உலகில் வேறு எங்கும் பார்க்க மாட்டீர்கள் ஒரு சாதரண சைக்கிள் கள்ளனை  பிடித்தால் 40 பக்கத்துக்கு மேல் அவரின் உடல்நிலை தொடங்கி முழுவதும் எழுதி அவரின் கையெழுத்துடன் வேறு இருக்கனும் அதன் பின் கோர்ட்டுக்கு அலைச்சல் இவ்வளவும் முடிய யூரிகள் எனப்படும்  தீர்ப்பாயம் 18 மணி நேரம் குற்றவாளிக்கு ரோடு கூட்டும் வேலை  மட்டுமே தண்டனை .

மேலதிக...  நடைமுறை, விபரணங்களை தந்தமைக்கு... நன்றி பெருமாள்.

அப்படியே இலங்கை தமிழர்கள் அகதியாக சென்ற நாடுகளில் எல்லாம் மூலைக்கு மூலை கோயில்கள் என்ற பெயரில் திறந்து வைத்திருக்கும் கொள்ளை கூடங்களான முருகன், பிள்ளையார், சிவா, விஷ்ணு இன்ன பிற வசூல் மையங்களையும் மூடினாள் நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2020 at 10:44, பெருமாள் said:

நீதிமன்றம் மென்மையானது  ஆனால் எந்த பிரிவு பாதுகாவலர்கள் குறிப்பிட்ட வழக்கை  கையாளுகினம் என்பதை பொறுத்து தண்டனைகள் மாறுபடும் வெளி உலகிற்கு தெரியாமல் சகல அட்டுழியமும் நடக்கும் மீடியா முந்திரிக்கொட்டை போல் மூக்கை நீட்டினாள் சத்தமே இல்லாமல் உள்ளூர் போலீஸிடம் விசாரணையை தள்ளி விட்டு விடுவார்கள் . அவர்களைப்போல்  பாவப்பட்ட ஜென்மங்களை உலகில் வேறு எங்கும் பார்க்க மாட்டீர்கள் ஒரு சாதரண சைக்கிள் கள்ளனை  பிடித்தால் 40 பக்கத்துக்கு மேல் அவரின் உடல்நிலை தொடங்கி முழுவதும் எழுதி அவரின் கையெழுத்துடன் வேறு இருக்கனும் அதன் பின் கோர்ட்டுக்கு அலைச்சல் இவ்வளவும் முடிய யூரிகள் எனப்படும்  தீர்ப்பாயம் 18 மணி நேரம் குற்றவாளிக்கு ரோடு கூட்டும் வேலை  மட்டுமே தண்டனை .

 

இந்திய முறையில் என்கவுண்டர் பரவாயில்லை போல.

கோயில்கள்  என்ற பெயரில் நடக்கும் இந்த கொள்ளை கும்பலுக்கு கொட்டிக்கொடுப்பதற்கு பதில் போரினால் பாதிக்கப்பட்டு வாடும் சொந்தங்களுக்கு உதவி செய்தால் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ. வாடும் வயிறுகள் நிச்சயம் வாழ்த்தும் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, karikaalanivan said:

அப்படியே இலங்கை தமிழர்கள் அகதியாக சென்ற நாடுகளில் எல்லாம் மூலைக்கு மூலை கோயில்கள் என்ற பெயரில் திறந்து வைத்திருக்கும் கொள்ளை கூடங்களான முருகன், பிள்ளையார், சிவா, விஷ்ணு இன்ன பிற வசூல் மையங்களையும் மூடினாள் நல்லது. 

திரிக்கு சம்பந்தமில்லமால் உங்கடை  கருத்து நீங்க முஸ்லீம் ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, karikaalanivan said:

அப்படியே இலங்கை தமிழர்கள் அகதியாக சென்ற நாடுகளில் எல்லாம் மூலைக்கு மூலை கோயில்கள் என்ற பெயரில் திறந்து வைத்திருக்கும் கொள்ளை கூடங்களான முருகன், பிள்ளையார், சிவா, விஷ்ணு இன்ன பிற வசூல் மையங்களையும் மூடினாள் நல்லது. 

எங்கேயோ இடிக்குதே .... 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, karikaalanivan said:

கோயில்கள்  என்ற பெயரில் நடக்கும் இந்த கொள்ளை கும்பலுக்கு கொட்டிக்கொடுப்பதற்கு பதில் போரினால் பாதிக்கப்பட்டு வாடும் சொந்தங்களுக்கு உதவி செய்தால் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ. வாடும் வயிறுகள் நிச்சயம் வாழ்த்தும் 

ஒரு முஸ்லீம் பள்ளிவாசலால் மற்றய மதத்தவருக்கு  சோற்று பருக்கையில் ஒன்றை கூட கொடுப்பதில்லை நீங்கள்  மேலே குறிப்பிடும் கோவில்களில் உங்கள் தொழுகை உடுப்பிடன்  பசிக்குது என்று உணவு வாங்கி சாப்பிடலாம் அவர்களும் தருவார்கள் வழிபாடு நடக்கும் நேரம்களில் நீங்கள்  விரும்பினால் கூட நேரில் போய்  பார்க்கலாம் நீங்கள் வழிபடும்போது மற்றவர்களை அனுமதிப்பீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, karikaalanivan said:

அப்படியே இலங்கை தமிழர்கள் அகதியாக சென்ற நாடுகளில் எல்லாம் மூலைக்கு மூலை கோயில்கள் என்ற பெயரில் திறந்து வைத்திருக்கும் கொள்ளை கூடங்களான முருகன், பிள்ளையார், சிவா, விஷ்ணு இன்ன பிற வசூல் மையங்களையும் மூடினாள் நல்லது. 

ஈழத் தமிழர்கள்.... போன இடங்களில், வெள்ளைக்காரனை கத்தியால் குத்தி கொலை செய்தும், பொது இடங்களில் குண்டு வைத்து கொண்டா திரிகிறார்கள்?

உங்களுக்கு... எதனை, எதனுடன் ஒப்பிடக் கூட தெரியாதா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, karikaalanivan said:

கோயில்கள்  என்ற பெயரில் நடக்கும் இந்த கொள்ளை கும்பலுக்கு கொட்டிக்கொடுப்பதற்கு பதில் போரினால் பாதிக்கப்பட்டு வாடும் சொந்தங்களுக்கு உதவி செய்தால் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ. வாடும் வயிறுகள் நிச்சயம் வாழ்த்தும் 

ம.. முதல்ல உங்க  பெயரை மாத்துங்க பிறகு அல்லல் ஓயாவில போய் சேருங்க 

பெரும்பாலான புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் பகுத்தறிவோ, சிந்திக்கும் திறனோ அற்ற பதர்கள் என்பதை மேலே உள்ள பதில்கள் தெளிவாக காட்டுகின்றது. ஒரு சரியான விமர்சனத்தில் உள்ள நியாயத்தை கூட விளங்கிக்கொண்டு வாதிக்க தெரியாத மக்கள் கூட்டம்.

ஒன்று நிச்சயம்.. இலங்கை தமிழர்கள் மனம் மகிழும் வண்ணம் இனிக்க இனிக்க பேசினால் உங்களை எல்லாம் மிக எளிதாக ஏமாற்றலாம். ஏற்கனவே சர்க்கரை நோயினால் அவதிப்படும் சமூகத்துக்கு மேலும் இனிப்பை கொடுப்பது நஞ்சுக்கு சமம்!உங்களுக்கு தேவை உண்மை எனும் கசப்பு மருந்து. 

நான் முஸ்லிமாக இருந்தாலும் இஸ்லாத்தில் இருக்கும் சீழ்பிடித்த விடயங்களையும் விமரிசனம் செய்யத்தான் செய்வேன். சுயவிமர்சனமும், சுய மதிப்பீடும் செய்ய தவறும்  எந்த சமூகமும் சீழ்பிடித்து அழுகும். சுய விமர்சனமோ, மதிப்பீடு செய்வதே பாவம் என்று நினைக்கும் முஸ்லீம் மக்களை போலத்தான் இலங்கை தமிழ் சமூகமும் இருக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, karikaalanivan said:

பெரும்பாலான புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் பகுத்தறிவோ, சிந்திக்கும் திறனோ அற்ற பதர்கள் என்பதை மேலே உள்ள பதில்கள் தெளிவாக காட்டுகின்றது. ஒரு சரியான விமர்சனத்தில் உள்ள நியாயத்தை கூட விளங்கிக்கொண்டு வாதிக்க தெரியாத மக்கள் கூட்டம்.

பதருக்கு என்ன அர்த்தம்; 

உங்கள் சிந்தனைகளின் வீச்சு, நன்றாக இருக்கு, பாவிக்க வேண்டிய இடத்தில் பாவியுங்கள், வீணாக போய்விடக்கூடாதல்லவா; 

பழைய கள்ளொன்று புதிய உருவில்

https://agarathi.com/word/பதர்

நீங்கள் சொல்வதும் சரிதான் அறிவார்ந்த விடயங்களை விளங்கிக்கொண்டு விவாதிப்பதற்கும் தகுதி கொண்டோரிடம்தான் விவாதிக்க வேண்டும்.. மற்றபடி பழைய கள்ளுக்குத்தான் வீரியம் அதிகம் என்று அறியாதவரா நீங்கள் 😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, உடையார் said:

பதருக்கு என்ன அர்த்தம்; 

உங்கள் சிந்தனைகளின் வீச்சு, நன்றாக இருக்கு, பாவிக்க வேண்டிய இடத்தில் பாவியுங்கள், வீணாக போய்விடக்கூடாதல்லவா; 

பழைய கள்ளொன்று புதிய உருவில்

உடையார்... அவர், யாழ். களத்தில்  இணைந்த அடுத்த நாளே...
மட்டுறுத்தினர் பார்வையில், வைத்து  இருக்கப் பட்டு... 
இன்றுதான்...  "ரிலீஸ்" ஆகி  விடுவிக்கப் பட்டு வந்துள்ளார். 
அவரிடம்... நல்ல கருத்துக்களை எதிர்பார்ப்பது, வேஸ்ட்டு.  :grin:

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, karikaalanivan said:

அப்படியே இலங்கை தமிழர்கள் அகதியாக சென்ற நாடுகளில் எல்லாம் மூலைக்கு மூலை கோயில்கள் என்ற பெயரில் திறந்து வைத்திருக்கும் கொள்ளை கூடங்களான முருகன், பிள்ளையார், சிவா, விஷ்ணு இன்ன பிற வசூல் மையங்களையும் மூடினாள் நல்லது. 

வணக்கம் வாங்கோ. முருகன் சிவனை விமர்சனம் செய்யலாம் உங்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது. போட்டு தாக்குங்கோ. 

 

 

 

 

17 minutes ago, தமிழ் சிறி said:

உடையார்... அவர், யாழ். களத்தில்  இணைந்த அடுத்த நாளே...
மட்டுறுத்தினர் பார்வையில், வைத்து  இருக்கப் பட்டு... 
இன்றுதான்...  "ரிலீஸ்" ஆகி  விடுவிக்கப் பட்டு வந்துள்ளார். 
அவரிடம்... நல்ல கருத்துக்களை எதிர்பார்ப்பது, வேஸ்ட்டு.  :grin:

 

 

 

அய்யகோ..  ஐ நா சபை பாதுகாப்பு மன்றத்திலிருந்து என்னை விலத்தி வெச்சுட்டாங்கள் இண்டைக்குத்தான் இணைத்துக்கொண்டார்கள்.

 

5 minutes ago, விசுகு said:

வணக்கம் வாங்கோ. முருகன் சிவனை விமர்சனம் செய்யலாம் உங்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது. போட்டு தாக்குங்கோ. 

முருகனையோ, சிவனையோ, அல்லாவையோ நான் விமர்சனம் செய்யவும் இல்லை போட்டுத்தாக்கவும் இல்லை மக்களின் முட்டாள்தனத்தைத்தான் சுட்டிக்காட்டினேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியன்னாவில் 6 இடங்களில் பயங்கரவாத தாக்குதல்; மக்கள் மத்தியில் அச்சம் -  Canadamirror

வியன்னாவில் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவு என சந்தேகிக்கப்படும் 60 இடங்களில் சோதனை!

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுடன் தொடர்பை பேணியதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள், பல்வேறு அமைப்பு நிறுவனங்களில் பொலிஸ் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளிலேயே நேற்று (திங்கட்கிழமை) சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த சோதனைக்கும், வியன்னாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 70 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவு என சந்தேகிக்கப்படும் அலுவலகங்கள், குடியிருப்புகள் என 60 இடங்களில் சோதனை நடந்தது.

33 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தல், பண மோசடி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிh என்ற சந்தேகத்தில் கண்காணித்து வருகிறோம். இவர்களிடம் ஓராண்டுக்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது.

ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் சமீபத்தில் துப்பாக்கி ஏந்திய ஜிகாதிகள் நடத்திய தாக்குதலில் 4பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

இந்த தாக்குதலை நடத்தியது 20 வயதான குஜ்திம் ஃபெஜ்ஸுலை என அடையாளம் காணப்பட்டது, அவர் பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டார்.

http://athavannews.com/வியன்னாவில்-பயங்கரவாத-இய/

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதப் பிறவிக்கு 20வயதில் உலக இன்பங்களை அனுபவிக்கும் உணர்வுகளை ஊட்டி வருகிறது இயற்கை. அந்த இயற்கையை மறுத்துப் பயங்கர உணர்வுகளை 20வயதிலும் ஊட்டி வளர்க்கும் செயல்பாடுகளைச் செய்கின்றதோ இசுலாமிய மதம் என எண்ணத் தோன்றுகிறது.🤔 

43 minutes ago, Paanch said:

ஒரு மனிதப் பிறவிக்கு 20வயதில் உலக இன்பங்களை அனுபவிக்கும் உணர்வுகளை ஊட்டி வருகிறது இயற்கை. அந்த இயற்கையை மறுத்துப் பயங்கர உணர்வுகளை 20வயதிலும் ஊட்டி வளர்க்கும் செயல்பாடுகளைச் செய்கின்றதோ இசுலாமிய மதம் என எண்ணத் தோன்றுகிறது.🤔 

இதே கருத்துதான் எனக்கும் பதின் வயதில் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய காலத்தில் களத்தில் தம் இன்னுயிர் ஈந்த தமிழ் போராளிகளுக்கும்        அவர்களின் சாவை சாக்காட்டி  வெளிநாடுகளில் குளிர்காயும் அற்ப பிறவிகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னவாக இருக்கும்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.