Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2021 வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில், இன்று 03/12/20 தமிழர் தரப்பு குரலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு கஜேந்திரகுமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

2021 வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில், இன்று 03/12/20 தமிழர் தரப்பு குரலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு கஜேந்திரகுமார்

 

https://www.facebook.com/friendsofgajen/videos/580756212763661

 

 

2021 வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில், இன்று 03/12/20 தமிழர் தரப்பு குரலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய உரை:
நேர்மையாகக் கூறுவதானால் மிகுந்த தயக்கத்துடனேயே இந்த விவாதத்தில் கலந்துகொள்கிறேன். எதற்காகத் தயக்கம் என்றால், பாதுகாப்பு அமைச்சு விவகாரமானது இனங்களை துருவங்களாக ஆக்கியுள்ளது. இந்த அவையில் ஆற்றப்படும் உரைகள் மட்டுமல்லாது, இந்த அவைக்கு வெளியிலும் இதுதொடர்பான கருத்துகள் இனங்களை துருவங்களாகவே வைத்திருக்கிறது. அதனடிப்படையில் இவ்விவகாரங்களைக் கையாளுவதில் இந்த அவையில் மோசமான நிலையே காணப்படுகிறது. இவ்விடயத்தில் எதிரான கருத்துகள் வெளியிடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இப்புறச்சூழலில் இவ்விடயம்பற்றிப் பேசுவதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா என ஒருவர் கேள்வியெழுப்பலாம். இருந்தபோதிலும் என்னைத் தெரிவுசெய்த மக்களின் சார்பில் சில கருத்துகளைத் தெரிவிப்பது எனது கடமை. அதனை நான் ஆற்றவேண்டியுள்ளது.
2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி, அப்போது விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராகவிருந்த திரு. நடேசனும், சமாதான செயலகத்திற்கு பொறுப்பாகவிருந்த திரு. புலித்தேவனும் என்னைத் தொடர்புகொண்டனர். அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த 150 ஆயிரம் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாக அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கத்தைத் தொடர்புகொண்டு பேசுமாறு என்னைக் கேட்டுக்கொண்டனர். அந்த மக்கள் தொடர்பான கரிசனையையும், இதுதொடர்பில் அவர்களது நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தாதிருந்தால் அவர்கள் உயிரிழக்க நேரிடும் என்பது அவர்களது கருத்தாகவிருந்தது. அவர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அப்போது அமைச்சராகவிருந்த திரு. பசில் இராஜபக்சவை நான் தொடர்புகொண்டு பேசினேன். அன்றைய தினம் மே பதினாறாம் திகதி, மாலை 4 மணியிலிருந்து இரவு பத்துமணிவரையான காலத்தில் ஏறத்தாள 10 தடவைகள் எமக்கிடையிலான உரையாடல்கள் இடம்பெற்றன என எண்ணுகிறேன். எவ்வாறு அந்த 150 ஆயிரம் மக்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது என்பது தொடர்பிலேயே நாம் பேசிக்கொண்டோம்.
இறுதியில், பாதுகாப்பு அமைச்சு உடன்பட்டுக்கொண்டதன் பிரகாரம் இரவு எட்டுமணிக்கு ஒரு தீர்மானத்திற்கு நாம் வந்தோம். அதன்படி திரு. பசில் இராஜபக்சவும் நானும், இரண்டு மேற்றிராணிகளுடன் (பிஷப்மார்) இணைந்து வன்னிக்குச் சென்று அங்கிருந்த மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்பார்வை செய்வதாக முடிவெடுத்தோம். 16ம் திகதி இரவு எட்டுமணிக்கு இந்த முடிவு எட்டப்பட்டாலும் அடுத்தநாள் நடைபெறவிருந்த பாதுகாப்புச் சபையே இதனை இறுதி செய்வதாகவிருந்தது. ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச அப்போது அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜோர்டன் நாட்டிற்கு சென்றிருந்தார். அவர் மறுநாள் பதினோழாம் திகதி காலையில் நாடுதிரும்பவிருந்தார். அவர் நாடுதிரும்பியதும் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் கலந்துகொள்வார் எனவும் இந்த விடயத்திற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அங்கிருந்த மக்கள் தொகை நூற்றியம்பதாயிரமா அல்லது நூறாயிரமா எனச் சரியாகக் கூறமுடியாவிட்டாலும் பெருந்தொகையான மக்கள் அங்கிருந்தனர்.
பதினேழாம் திகதி காலை பதினொருமணியளவில் நான் ரூபவாகினி தொலைக்காட்சியை பார்த்தபோது அங்கிருந்த அனைத்து மக்களும், ஐமபதாயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும், தற்போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மக்கள் எவரும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டது. இதனைக் கேட்டு நான் பதற்றப்பட்டேன். எனக்குத் தெரியும், யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோது, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் 460 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இருந்தது எனக்குத் தெரியும். இது அரசாங்க பணியகங்களால் வழங்கப்பட்ட புள்ளிவிபரம். அதற்குபின்னர் வெளியேற்றம் ஏற்பட்டது, இறப்புகள் ஏற்பட்டன. இந்த கணிப்பீடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மட்டுமல்ல யுத்தம் பற்றி கண்காணிப்பிலிருந்த எல்லா நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாக இருந்தன.
யுத்தம் நடைபெற்ற நேரத்தில் நான் எங்கேயிருந்தேன் என கௌரவ சரத்விஜயசேகர அன்றைக்கு கேள்வியெழுப்பியிருந்தார். அப்போது நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன், எனக்கிருந்த உரிமைகளையும், அரசாங்கத்துடன் தொடர்புகொள்ளக்கூடய வசதிகளையும் பாவித்து அந்த மக்களைக் பாதுகாப்பதே எனது பணியாகவிருந்தது. அந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு விடுதலைப்புலிகள் உடன்பட்டிருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை.
போர் ஆரம்பித்தபொழுது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் 460 ஆயிரத்துக் மேற்பட்ட மக்கள் இருந்தபோதிலும், ஆரம்பத்திலிருந்து அங்கு 70 ஆயிரம் மக்களே இருந்ததாக அரசாங்கம் கூறிவந்தது. எழுபதாயிரம் மக்களுக்கு ஏற்ற அளவிலேயே உணவுப்பொருட்களும் மருந்துவகையும் அரசாங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்டன. இதுதான் உண்மை. இதனையே அரசாங்கம் மேற்கொண்டது. இறுதியில் 320 ஆயிரம் மக்கள் அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் மனிக்பார்ம் உட்பட பல இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இவ்வாறு அரசாங்கம் மக்கள் எண்ணிக்கைப்பற்றி பொய்யான தகவல்களை வழங்கி, ஒரு யுத்தச்சூழலில் அங்கிருந்த மக்கள் தொகையில் ஓரு சிறு பங்கினருக்கே உணவும், மருந்துப்பொருட்களும் வழங்கியதாயின் அதன் நோக்கம் என்னவாகவிருக்கும்? இதற்கு சாட்சியாக நானிருந்தேன். மே 16ம் திகதி நான் திரு. பசில் இராஜபக்சவை தொடர்புகொண்டபோது, மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதற்கு ஏதுவாக விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதற்கு உடன்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தேன். ஆனால் யுத்தம் நிறுத்தப்பட்டவில்லை. இதிலிருந்து அதன் நோக்கமென்ன என்பதனை நாம் உய்த்தறிய முடியும். அங்கிருந்த மக்களை முழுவதுமாகவோ பகுதியாகவோ அழிப்பதுதான் அதன் நோக்கமில்லையா? இந்த நோக்கம் வெளிப்படுத்தபடவில்லையா? இதுதான் தமிழ்மக்களுக்குத் தெரிந்த உண்மை நிலவரம். அதனாலேயே இந்த அமைச்சானது மக்களை இனங்களின் அடிப்படையில் துருவகளாக வைத்திருக்கிறது எனக்குறிப்பிட்டேன். இந்த உண்மைநிலவரத்தின் மத்தியிலேயே நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 164 ஆயிரத்திற்கு அதிகமான மக்களுக்கு என்ன நடந்தது என்பதுபற்றிய தகவல் எதுவுமில்லை.
இன்று இச்சபையில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் 52க்கு அதிகமான உயர் இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு அந்நாடுகளின் உள்நுழைவு அனுமதியை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக குறிப்பிட்டார். ஏன் இவ்வாறு உள்நுழைவு அனுமதி மறுக்கப்படுகிறது? இந்த உயர் அதிகாரிகளுக்கு இவ்வாறு நடைபெறுவது நியாயமற்றது எனில் இந்த அதிகாரிகள் குற்றமிழைக்கவில்லை என்றால் அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிப்பது இந்த அரசாங்கத்தின் கடமையில்லையா? உங்களுடைய நலன் நோக்கில் இது அவசியமானதல்லவா? இதைத்தான் நாங்களும் கேட்கிறோம். ஒரு விசாரணையை நடாத்துங்கள். ஒரு சர்வதேச விசாரணைக்கு உடன்படுங்கள். இதில் மறைப்பதற்கு எதுவுமில்லையென்றால் அதற்கு உடன்படுவதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள்? தயவுசெய்து இவ்வாறு தயக்கம் காட்டாதீர்கள். நீங்கள் இவ்வாறு தயக்கம்காட்டும்போது, சர்வதேச சமூகத்தின் மத்தியில் உங்களைப்பற்றி தவறான அபிப்பிராயம் ஏற்படுவது மட்டுமல்ல, நாட்டிலுள்ள சமூகங்கள் தொடர்ந்தும் பிளவுபட்டு நிற்கும். பாதுகாப்பு அமைச்சு இத்தகைய பிளவுகளை ஏற்படுத்துகிறது. தமிழர்களைப் பொறுத்தவரையில் நீங்கள் இந்த அமைச்சின் பெயரை மாற்ற வேண்டும். இந்த அமைச்சானது தமிழ் இனப்படுகொலைக்கான அமைச்சு என அது அழைக்கப்படவேண்டும். அல்லது தமிழ் விரோத அமைச்சு என அழைக்கப்படவேண்டும். இவ்வாறுதான் நாங்கள் உணர்கிறோம். அதனை ஏன் மறுக்கிறீர்கள்?
கௌரவ சரத் வீரசேகர காவற்துறைக்கு பொறுப்பான அமைச்சர். இச்சபையில் உரையாற்றும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை தடை செய்யவேண்டும என வெட்கமின்றிக் கூறுகிறார். அவர்கள் இந்தச் சபையிலிருந்து தூக்கியெறியப்படவேண்டும் எனவும் கூறினார்.
பல்வேறுநாடுகளும், என்போன்றவர்களும் யுத்தவலயத்தில் சிக்குண்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படவேண்டும் எனக் கோரியிருந்தோம். கடந்தமாதம் 22ம் திகதி இச்சபையில் கௌரவ மகிந்த சமரசிங்க உரையாற்றும்போது, அந்த மக்கள் வெளியேறுவதனை ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச விரும்பவில்லை எனக்குறிப்பிட்டார். ஏனெனில் பிரபாகரன் வெளியேறிவிடமுடியும் என அவர் கருதினாராம். ஒரு மனிதருக்காக ஆயிரக்கணக்கான உயிர்களை அழித்தொழிக்க நீங்கள் முடிவுசெய்தீர்கள். இதனைத்தான் போர்க்குற்றங்கள் என அழைக்கப்படுகிறது. இதனையே இனப்படுகொலை என அழைக்கப்படுகிறது. மக்களை முழுவதுமாக அல்லது பகுதியாக அழிப்பதாக முடிவுசெய்வதனையே இனப்படுகொலை என அழைக்கப்படுகிறது.
கடவுளே, இந்நாட்டின் எதிர்காலச் சந்ததி இந்தக்கலாச்சாரத்தையே தங்களின் முதிசமாகப் பெற்றுக்கொள்ளப் போகிறது. அதற்கு இடமளிக்கக்கூடாது. இந்தச் சபையில் அமர்ந்திருக்கிற மூத்த உறுப்பினர்களை நான் இனவாதி என்று கூறமாட்டேன். ஆனால் இன்று பாதுகாப்பு மற்று பொதுமக்கள் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக நியமனங்கள் பெற்றவர்கள் விடயத்தில் அவ்வாறு கூறமுடியாதுள்ளது.
நீங்கள் இதனை முழுநாட்டுக்குமான பாதுகாப்பு அமைச்சு எனக் குறிப்பிடுகிறீரகள். பாதுகாப்பு அமைச்சில் 20 பிரிவுகள் உள்ளன அவற்றுள்ள 16 வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ளன. ஆறு தலைமைப் பணியகங்கள் உள்ளன அவற்றுள் நான்கு வடக்குகிழக்கில் அமைக்கப்பட்டுள்ளன. யாருடைய பாதுகாப்புக்காக இவ்வாறு நடைபெறுகிறது? யார் உங்களது எதிரி? வீடுதலைப்புலிகள்தான் உங்களது எதிரிகள் என்றீர்கள். ஆனால் தமிழ் மக்களையே நீங்கள் ஒடுக்குகிறீர்கள். அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் இதனையே தெரியப்படுத்துகிறீர்கள்.
கடவுளின் பேரில் இது பற்றி மீளச் சிந்தியுங்கள். இன்றைக்கு நீங்கள் முன்மாதிரியாக காட்டுகிற விடயங்கள் இந்த நாட்டை சாபத்திற்கு உள்ளாக்கப்போகிறது. நீங்கள் எங்களை அழிக்க முடியும் ஆனால் நீங்கள் உங்களையும் சேர்த்து அழித்தொழிக்கப் போகிறீர்கள். இவ்வாறான முன்மாதிரியை நீங்கள் உருவாக்குகையில், நேற்று தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள், இன்று முஸ்லீம்கள் பாதிப்பிற்கு உள்ளாகுகிறார்கள். நாளை உங்களது சொந்த இனத்திற்கு இது நடக்கும். உங்களுக்கு போட்டியானவர்கள் என்று நீங்கள் கருதுபவர்களிற்கு எதிராக இவ்வாறுதான் நடந்துகொள்வீர்கள். இது கீழ்நோக்கிச் செல்லும் சுருள் போன்றது. இங்குள்ள உறுப்பினர்கள், பின்வரிசையிலிருந்து குழப்பம் விழைவிப்பவர்களை நான் குறிப்பிடவில.்லை, இந்த அவையிலிருக்கு மூத்த உறுப்பினர்கள் இந்த விடயத்தில் பாராமுகமாக இருப்பார்களேயானால் இந்த நாடே நாசமாகும். அதனை உங்களால் ஒருபோதும் தடுத்துநிறுத்த முடியாது போய்விடும்.
நான் திரும்பத் திரும்பக் கூறிவருகிறேன். நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன். எனது நண்பர்கள் சிங்களவர்கள். நான் சிங்கள மக்கள் மத்தியில் வளர்ந்தவன். 1983ம் ஆண்டு இனவன்முறையின்போது ஜனாதிபதி சட்டத்தரணி ஆனந்த விஜயசேகர, ஜனாதிபதி சட்டத்தரணி கோசல விஜயதிலக, திரு.ஸ்ரான்லி வில்லியம்ஸ் போன்றவர்களே எங்களைக் காப்பாற்றினார்கள். அவ்வாறான மனிதர்களையே எனக்குத் தெரியும். பத்துவருடங்களுக்கு முன் இச்சபையின் உறுப்பினராக வந்தபோது, விடுதலைப்புலிகள் இருந்தபோதுகூட இவ்வவையில் இவ்வாறான கலாச்சாரம் இருக்கவில்லை. சக உறுப்பினரகள் கூறுகிற கருத்துகளை ஏற்றுக்கொள்ளவிட்டாலும், நடத்தப்படும் உரைகளை கிரகிக்க விரும்புவர்களாகவும், கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புவர்களாகவும் உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது இந்த சீரழிந்த நிலைமக்குத்தான் இந்த நாட்டு வந்திரு்கிறது.
தமிழ்மக்களின் உரிமையற்றவர்களாக ஆக்குவதில் நீங்கள் வெற்றிபெறலாம். தொடர்ச்சியான திட்டமிட்ட இனவழிப்பிற்கூட நீங்கள் வெற்றிபெறலாம். தமிழின அடையாளத்தை முழுமையாக அழிப்பதிற்கூட நீஙகள் வெற்றிபெறலாம். நாங்கள் இந்நாட்டில் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்று கூற முடியாத நிலைகூட ஏற்படலாம்.
எனது வார்த்தைகளை குறித்துக் கொள்ளுங்கள், நீங்கள் விட்டுச் செல்லவிருக்கும் இந்த மரபானது உங்களை அழித்தொழிக்கப்போகிறது.
  • Replies 50
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மக்களை மீட்க பஸிலுடன் நானும் இரு ஆயர்களும் வன்னி செல்ல தீர்மானித்திருந்தோம் – கஜன்

 
gajen.600-300.png
 2 Views

“புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் என்னை வலியுறுத்தினர். மக்களை வெளியேற்றிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் புலிகள் இருந்தனர். அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் நான் 10 தடைவைகளுக்கும் அதிகமாக இது குறித்துப் பேசினேன். மக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து பேசினோம். மே 17 ஆம் திகதி காலை நானும் அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் இரு ஆயர்களும் அங்கு சென்று பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது”

இவ்வாறு இறுதிப்போரின் போது இடம்பெற்ற நடவடிக்கைகள் குறித்து சபையில் முழுமையாக விவரித்தார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்-

“இறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்களுடன் பேசினேன். நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோருடன் பேசினேன். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த பொதுமக்களை மீட்க நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர்.

அவர்களை வெளியேற்றிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் புலிகள் இருந்தனர். அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் நான் 10 தடைவைகளுக்கும் அதிகமாக இது குறித்துப் பேசினேன். பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து பேசினோம்.

மே 17 ஆம் திகதி காலை நானும் அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் இரு ஆயர்களும் அங்கு சென்றுபொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. கடல் மார்க்கமாக அவர்களை மீட்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டபோதிலும் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் அது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாத காரணத்தால் அது தாமதமானது.

பின்னர், விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த சகல பொதுமக்களையும் மீட்டுள்ளதாகவும், புலிகளின் கட்டுப்பாட்டில் எந்தவொரு பொதுமகனும் இல்லை, அனைவரையும் மீட்டுள்ளோம் எனவும் தொலைக்கட்சியில் அரசினால் அறிவிப்பு விடப்பட்டது.

அதனை கேட்டுநான் அச்சப்பட்டேன். ஏனெனில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோதே நான்கு இலட்சத்து அறுபதாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் இருந்தனர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அரச தரப்பின் கணக்கெடுப்பு, அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் கணக்கெடுப்பு என அனைவரதும் எண்ணிக்கைக்கு அமைய அதிகளவில் மக்கள் இருந்திருக்கவேண்டும். அவ்வாறு இருக்கையில் பொதுமக்களை எப் படியேனும் வெளியேற்றிவிடவேண்டும் என்ற நோக்கத்தில் எனது தொடர்புகளைப் பயன்படுத்தி, பாராளுமன்ற உறுப்புரிமையைப் பயன்படுத்தி அரச தரப்புடன் பேசி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தேன். ஆனால் அது நடக்கவில்லை” என்றார்.

இவ்வாறு அவர் உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் ஒழுங்குப் பிரச்னை ஒன்றை எழுப்பிய அமைச்சர் சரத் வீரகேசர –

“நீங்கள் சபையை தவறாக வழிநடத்துகின்றீர்கள். மூன்று இலட்சம் மக்களைப் பிரபாகரன் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார். நாங்கள் அவர்களை காப்பாற்றினோம்” என்றார்,

இதன் பின்னர் ஒழுங்குப் பிரச்னை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா, “நாங்கள் ஒவ்வொரு தாக்குதலின் போதும் அதிகளவான பொதுமக்களைப் பாதுகாத்தோம். நீங்கள் பொய்களைக் கூறி சபையை தவறாக வழிநடத்த வேண்டாம். நாம் மக்களை மீட்ட நேரங்களில் நீங்கள் அந்தப் பகுதிகளுக்கு வரவில்லை” என்றார்.

மீண்டும் உரையாற்ற ஆரம்பித்த கஜேந்திரகுமார்? “போராட்டம் தொடங்கியவேளையில் நான்கரை இலட்சம் பொதுமக்கள் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்தனர். ஆனால் 17 ஆயிரம் பொதுமக்களே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தது என அரசு கூறியது. உணவு மற்றும் மருந்துகளை வெறுமனே 17 ஆயிரம் மக்களுக்கு மட்டுமே அனுப்பினார்கள். இதுதான் உண்மை. மூன்றரை இலட்சம் மக்கள் பின்னர் முகாம்களுக்கு வந்தனர். ஆகவே இலக்கங்களில் அரசு பொய்களை கூறிக் கொண்டுள்ளது. இறுதி யுத்தத்தில் சிக்கிய ஒன்றரை இலட்சம் மக்களுக்கு என்னவானது என்றே தெரியவில்லை. 164 ஆயிரம் மக்களை அரசு கணக்கில் எடுக்கப்படவில்லை.

54 இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச நாடுகளுக்கான வீஸா வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் சபையில் கூறினார். ஏன் அவர்களுக்கு வீஸா வழங்கவில்லை என சிந்தித்துப்பாருங்கள். குறித்த 54 அதிகாரிகளும் அப்பாவிகள் என்றால் அதனை நிரூபிக்கவேண்டும். ஆனால் அவர்கள் குற்றவாளிகள். அதனால் தான் இந்த நிலைமை உருவாகியுள்ளது. நீங்கள் இந்த நிலைமைகளை நினைத்து வெட்கப்படவேண்டும். இப்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாம் இந்த அமைச்சை இனவழிப்பு அமைச்சு, தமிழர்களுக்கு எதிராக அமைச்சு என்றே நினைக்கின்றோம். அமைச்சுக்கு பொறுப்பான சரத்வீரசேகர சற்று முன்னர் இந்தச் சபையில் ஒன்றை கூறினார். தமிழ் தேசியக் கூட்ட மைப்பை தடை செய்யவேண்டும் என்றார். இதனை நினைத்து வெட்கப்பட வேண்டும். அதேபோல் மஹிந்த சமரசிங்க அண்மையில் இதே சபையில் அவர் ஒன்றைக் கூறினார். பொதுமக்களை பாதுகாக்க சர்வதேச நாடுகள் வந்த வேளை அதனை அனுமதிக்க முடியாது என மஹிந்த ராஜபக்ஷ கூறியதாக தெரிவித்தார். பிரபாகரன் தப்பித்து விடுவார் என்ற காரணத்திற்காக தமிழ் மக்களை வெளியேற்ற இடமளிக்க முடியாது என்றாராம்.

இதுதான் போர் குற்றம். ஒரு நபரை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக இலட்சம்கணக்கான அப்பாவி மக்களை கொன்றமையே போர் குற்றமாகும். இன்றும் நாட்டில் உள்ள பாதுகாப்புத் தளங்களில் அளவுக்கு அதிகமானவை வடக்கு-கிழக்கிலேயே உள்ளன. இவர்களின் எதிரிகள் தமிழர்கள் என்பதே இவர்களது நிலைப்பாடாகும். விடுதலைப்புலிகளின் பெயரை க்கூறி தமிழர்களை இன அழிப்பு செய்துள்ளீர்கள்.

தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் நடவடிக்கையே முன்னெடுக்கப்பட்டது. நேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இதுவே நாளை உங்கள் இனத்திற்கு எதிராகவும் திரும்பும். இதனை நன்றாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அரக்கத்தனமான ஆட்சியை நடத்தும் உங்களுக்கு நான் இதனை மீண்டும் கூறிப் பதிவு செய்துகொள்கிறேன். தமிழர்களை பாதுகாக்கும் பொறுப்பில் அரசு தோற்று விட்டது. இது நாட்டின் சகல வளர்ச்சிக்கும் பாதிப்பாக அமையும்” என்றார்.

சரத் வீரகேகர :- இவர் முழுமையாகப் பொய்களை கூறிகின்றார். புலம்பெயர் பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இவர் பெசிக்கொண்டுள்ளார். நாம் பொதுமக்களை பாதுகாத்தோம். உலகத்தில் பொதுமக்களை மீட்ட மிகப்பெரிய நடவடிக்கையாகும். சர்வதேசமே அதனை ஏற்றுக்கொண்டது. எமது இராணுவத்திற்கு தங்கப்பதக்கம் கொடுக்கவேண்டும் எனவும், உலகிற்கே நாம் சிறந்த எடுத்துக்காட்டு எனவும் சர்வதேச நிபுணர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிரபாகரன் முன்னிலையில் வாக்குறுதி எடுத்தவர்கள். அவர்களை தடை செய்யவேண்டும் என்பது சரியானது” என்றார்.

கஜேந்திரக்குமார் எம்.பி:- நீங்கள் கூறுவதெல்லாம் உண்மை என்றால் ஏன் சர்வதேச விசாரணைக்கு தயங்குகின்றீர்கள். நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொள்ளவதை விடவும் தைரியம் இருந்தால் சர்வதேச விசாரணைக்குச் செல்லுங்கள். ஏன் அதற்கு அஞ்சுகின்றீர்கள்” என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்னை எழுப்பிய அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, “கஜேந்திரகுமார் எம்.பியின் உரையில் பாராளுமன்றத்திற்கு பொருத்தமில்லாத சகல கருத்துக்களையும் நீக்கவேண்டும். இவர்கள் பிணங்களை விற்று வாழ்பவர்கள். சர்வதேச டொலர்களுக்காக இவர்கள் பேசிக்கொண்டுள்ளனர்” என்றார்.

இதனை அடுத்து சபையில் சிங்களஎம்.பிக்களிடையே கடும் விமர்சனம் ஏற்பட்டது. பின்வரிசையில் இருந்த சிங்கள உறுப்பினர்கள் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் கஜேந்திரகுமார் எம்.பியை விமர்சித்தனர்.

 

https://www.ilakku.org/மக்களை-மீட்க-பஸிலுடன்-நா/

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போரின்போது மக்களை மீட்க பஸிலுடன் நானும் இரு ஆயர்களும் அங்கு செல்ல தீர்மானிக்கப்பட்டிருந்தது – கஜேந்திரகுமார்

 

gajenrakumar-parl.jpg“புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் என்னை வலியுறுத்தினர். மக்களை வெளியேற்றிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் புலிகள் இருந்தனர். அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் நான் 10 தடைவைகளுக்கும் அதிகமாக இது குறித்துப் பேசினேன். மக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து பேசினோம். மே 17 ஆம் திகதி காலை நானும் அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் இரு ஆயர்களும் அங்கு சென்று பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது”

இவ்வாறு இறுதிப்போரின் போது இடம்பெற்ற நடவடிக்கைகள் குறித்து சபையில் முழுமையாக விவரித்தார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்-

“இறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்களுடன் பேசினேன். நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோருடன் பேசினேன். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த பொதுமக்களை மீட்க நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர்.

அவர்களை வெளியேற்றிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் புலிகள் இருந்தனர். அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் நான் 10 தடைவைகளுக்கும் அதிகமாக இது குறித்துப் பேசினேன். பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து பேசினோம்.

மே 17 ஆம் திகதி காலை நானும் அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் இரு ஆயர்களும் அங்கு சென்றுபொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. கடல் மார்க்கமாக அவர்களை மீட்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டபோதிலும் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் அது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாத காரணத்தால் அது தாமதமானது.

பின்னர், விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த சகல பொதுமக்களையும் மீட்டுள்ளதாகவும், புலிகளின் கட்டுப்பாட்டில் எந்தவொரு பொதுமகனும் இல்லை, அனைவரையும் மீட்டுள்ளோம் எனவும் தொலைக்கட்சியில் அரசினால் அறிவிப்பு விடப்பட்டது.

அதனை கேட்டுநான் அச்சப்பட்டேன். ஏனெனில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோதே நான்கு இலட்சத்து அறுபதாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் இருந்தனர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அரச தரப்பின் கணக்கெடுப்பு, அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் கணக்கெடுப்பு என அனைவரதும் எண்ணிக்கைக்கு அமைய அதிகளவில் மக்கள் இருந்திருக்கவேண்டும். அவ்வாறு இருக்கையில் பொதுமக்களை எப் படியேனும் வெளியேற்றிவிடவேண்டும் என்ற நோக்கத்தில் எனது தொடர்புகளைப் பயன்படுத்தி, பாராளுமன்ற உறுப்புரிமையைப் பயன்படுத்தி அரச தரப்புடன் பேசி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தேன். ஆனால் அது நடக்கவில்லை” என்றார்.

இவ்வாறு அவர் உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் ஒழுங்குப் பிரச்னை ஒன்றை எழுப்பிய அமைச்சர் சரத் வீரகேசர –

“நீங்கள் சபையை தவறாக வழிநடத்துகின்றீர்கள். மூன்று இலட்சம் மக்களைப் பிரபாகரன் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார். நாங்கள் அவர்களை காப்பாற்றினோம்” என்றார்,

இதன் பின்னர் ஒழுங்குப் பிரச்னை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா, “நாங்கள் ஒவ்வொரு தாக்குதலின் போதும் அதிகளவான பொதுமக்களைப் பாதுகாத்தோம். நீங்கள் பொய்களைக் கூறி சபையை தவறாக வழிநடத்த வேண்டாம். நாம் மக்களை மீட்ட நேரங்களில் நீங்கள் அந்தப் பகுதிகளுக்கு வரவில்லை” என்றார்.

மீண்டும் உரையாற்ற ஆரம்பித்த கஜேந்திரகுமார்? “போராட்டம் தொடங்கியவேளையில் நான்கரை இலட்சம் பொதுமக்கள் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்தனர். ஆனால் 17 ஆயிரம் பொதுமக்களே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தது என அரசு கூறியது. உணவு மற்றும் மருந்துகளை வெறுமனே 17 ஆயிரம் மக்களுக்கு மட்டுமே அனுப்பினார்கள். இதுதான் உண்மை. மூன்றரை இலட்சம் மக்கள் பின்னர் முகாம்களுக்கு வந்தனர். ஆகவே இலக்கங்களில் அரசு பொய்களை கூறிக் கொண்டுள்ளது. இறுதி யுத்தத்தில் சிக்கிய ஒன்றரை இலட்சம் மக்களுக்கு என்னவானது என்றே தெரியவில்லை. 164 ஆயிரம் மக்களை அரசு கணக்கில் எடுக்கப்படவில்லை.

54 இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச நாடுகளுக்கான வீஸா வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் சபையில் கூறினார். ஏன் அவர்களுக்கு வீஸா வழங்கவில்லை என சிந்தித்துப்பாருங்கள். குறித்த 54 அதிகாரிகளும் அப்பாவிகள் என்றால் அதனை நிரூபிக்கவேண்டும். ஆனால் அவர்கள் குற்றவாளிகள். அதனால் தான் இந்த நிலைமை உருவாகியுள்ளது. நீங்கள் இந்த நிலைமைகளை நினைத்து வெட்கப்படவேண்டும். இப்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாம் இந்த அமைச்சை இனவழிப்பு அமைச்சு, தமிழர்களுக்கு எதிராக அமைச்சு என்றே நினைக்கின்றோம். அமைச்சுக்கு பொறுப்பான சரத்வீரசேகர சற்று முன்னர் இந்தச் சபையில் ஒன்றை கூறினார். தமிழ் தேசியக் கூட்ட மைப்பை தடை செய்யவேண்டும் என்றார். இதனை நினைத்து வெட்கப்பட வேண்டும். அதேபோல் மஹிந்த சமரசிங்க அண்மையில் இதே சபையில் அவர் ஒன்றைக் கூறினார். பொதுமக்களை பாதுகாக்க சர்வதேச நாடுகள் வந்த வேளை அதனை அனுமதிக்க முடியாது என மஹிந்த ராஜபக்ஷ கூறியதாக தெரிவித்தார். பிரபாகரன் தப்பித்து விடுவார் என்ற காரணத்திற்காக தமிழ் மக்களை வெளியேற்ற இடமளிக்க முடியாது என்றாராம்.

இதுதான் போர் குற்றம். ஒரு நபரை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக இலட்சம்கணக்கான அப்பாவி மக்களை கொன்றமையே போர் குற்றமாகும். இன்றும் நாட்டில் உள்ள பாதுகாப்புத் தளங்களில் அளவுக்கு அதிகமானவை வடக்கு-கிழக்கிலேயே உள்ளன. இவர்களின் எதிரிகள் தமிழர்கள் என்பதே இவர்களது நிலைப்பாடாகும். விடுதலைப்புலிகளின் பெயரை க்கூறி தமிழர்களை இன அழிப்பு செய்துள்ளீர்கள்.

தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் நடவடிக்கையே முன்னெடுக்கப்பட்டது. நேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இதுவே நாளை உங்கள் இனத்திற்கு எதிராகவும் திரும்பும். இதனை நன்றாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அரக்கத்தனமான ஆட்சியை நடத்தும் உங்களுக்கு நான் இதனை மீண்டும் கூறிப் பதிவு செய்துகொள்கிறேன். தமிழர்களை பாதுகாக்கும் பொறுப்பில் அரசு தோற்று விட்டது. இது நாட்டின் சகல வளர்ச்சிக்கும் பாதிப்பாக அமையும்” என்றார்.

சரத் வீரகேகர :- இவர் முழுமையாகப் பொய்களை கூறிகின்றார். புலம்பெயர் பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இவர் பெசிக்கொண்டுள்ளார். நாம் பொதுமக்களை பாதுகாத்தோம். உலகத்தில் பொதுமக்களை மீட்ட மிகப்பெரிய நடவடிக்கையாகும். சர்வதேசமே அதனை ஏற்றுக்கொண்டது. எமது இராணுவத்திற்கு தங்கப்பதக்கம் கொடுக்கவேண்டும் எனவும், உலகிற்கே நாம் சிறந்த எடுத்துக்காட்டு எனவும் சர்வதேச நிபுணர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிரபாகரன் முன்னிலையில் வாக்குறுதி எடுத்தவர்கள். அவர்களை தடை செய்யவேண்டும் என்பது சரியானது” என்றார்.

கஜேந்திரக்குமார் எம்.பி:- நீங்கள் கூறுவதெல்லாம் உண்மை என்றால் ஏன் சர்வதேச விசாரணைக்கு தயங்குகின்றீர்கள். நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொள்ளவதை விடவும் தைரியம் இருந்தால் சர்வதேச விசாரணைக்குச் செல்லுங்கள். ஏன் அதற்கு அஞ்சுகின்றீர்கள்” என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்னை எழுப்பிய அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, “கஜேந்திரகுமார் எம்.பியின் உரையில் பாராளுமன்றத்திற்கு பொருத்தமில்லாத சகல கருத்துக்களையும் நீக்கவேண்டும். இவர்கள் பிணங்களை விற்று வாழ்பவர்கள். சர்வதேச டொலர்களுக்காக இவர்கள் பேசிக்கொண்டுள்ளனர்” என்றார்.

இதனை அடுத்து சபையில் சிங்களஎம்.பிக்களிடையே கடும் விமர்சனம் ஏற்பட்டது. பின்வரிசையில் இருந்த சிங்கள உறுப்பினர்கள் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் கஜேந்திரகுமார் எம்.பியை விமர்சித்தனர்.

https://thinakkural.lk/article/95054

 

மிக ஆணித்தரமாக கருத்துக்களை வைத்திருக்கிறார். ஸ்ரீதரனும் கூட தமது நேரத்தை இவருக்கு ஒதுக்கி கொடுத்திருந்தார். உண்மையாகவே இது நல்ல ஒரு செயல். இவர்கள் எல்லோரும் இப்படியே ஒற்றுமையாக இணைந்து செயல்படும் நாள்தான் மக்கள் எதிர்பார்க்கும் நாள்.

நான் நினைக்கிறேன் இந்த வீரசேகர எல்லா தமிழ் கட்சிகளையும் விரைவில் ஒற்றுமையாக்கிவிடுவார் போல இருக்குது. அவர் ஒரு பக்கம் பிரச்சினையாக இருந்தாலும் மற்ற பக்கம் நல்ல வேலையும் செய்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

128419809_4137444786316337_8169675494507795441_n.jpg?_nc_cat=101&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=JRm8efDpMIwAX9Wf9Nk&_nc_ht=scontent-frt3-2.xx&oh=900fc7b1564fec0ceb91464cc310d796&oe=5FF122C5

நேற்று கஜேந்திர குமார் பொன்னம்பலம் பாராளுமன்றில் ஆங்கிலத்தில் ஆற்றிய உரை அற்புதம் அவ்வளவு உள்ள குமுறல்களையம் கொட்டி தீர்த்திருக்கிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தங்கள் நேரத்தில் இருந்து சில நிமிடங்களை கொடுத்து உரையை முடிக்க வைத்திருக்கிறாரகள் நான் இதுவரை இலங்கை பாராளுமன்றில் தமிழர் தரப்பில் கேட்ட மிக சிறந்த உரைகளில் இதுவும் ஓன்று .... மிக்க நன்றிகள் கஜேந்திர குமார் பொன்னம்பலம்.

 

Prashanthan Navaratnam

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

128419809_4137444786316337_8169675494507795441_n.jpg?_nc_cat=101&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=JRm8efDpMIwAX9Wf9Nk&_nc_ht=scontent-frt3-2.xx&oh=900fc7b1564fec0ceb91464cc310d796&oe=5FF122C5

நேற்று கஜேந்திர குமார் பொன்னம்பலம் பாராளுமன்றில் ஆங்கிலத்தில் ஆற்றிய உரை அற்புதம் அவ்வளவு உள்ள குமுறல்களையம் கொட்டி தீர்த்திருக்கிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தங்கள் நேரத்தில் இருந்து சில நிமிடங்களை கொடுத்து உரையை முடிக்க வைத்திருக்கிறாரகள் நான் இதுவரை இலங்கை பாராளுமன்றில் தமிழர் தரப்பில் கேட்ட மிக சிறந்த உரைகளில் இதுவும் ஓன்று .... மிக்க நன்றிகள் கஜேந்திர குமார் பொன்னம்பலம்.

 

Prashanthan Navaratnam

10 வரிசமாய் தமிழ்மக்களின் பிரதிநிதி தானும் எண்டு பாராளுமன்றம் போய்வாற குடத்தனையார் இதுக்கு என்ன சொல்லப்போறார்?
குடத்தனையார்ரை அறுசுவை சாப்பாட்டு பார்சல்களில் மூழ்கி திளைத்த தம்பிமார் என்ன சொல்ல போயினம்?

தம்பிமாரே! சைக்கிள்  ஓட வெளிக்கிட்டவுடனை வேகமாய் போகாது....ஓட ஓடத்தான் வேகமும் விவேகமும் தெரியும். 😁

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான தேவையான சாட்சியான  பேச்சு

நன்றி தம்பி

3 minutes ago, விசுகு said:

மிகவும் அருமையான தேவையான சாட்சியான  பேச்சு

நன்றி தம்பி

ஒரே ஒரு கேள்வி

சிங்கள பெளத்த பேரினவாதத்தை நிலை நிறுத்துகின்ற, அதை வலுப்படுத்துகின்ற இலங்கைப் பாராளுமன்றத்தில் இதை பேசுவதால் என்ன பலன் கிடைக்கும் என்று கூற முடியுமா?
 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

ஒரே ஒரு கேள்வி

சிங்கள பெளத்த பேரினவாதத்தை நிலை நிறுத்துகின்ற, அதை வலுப்படுத்துகின்ற இலங்கைப் பாராளுமன்றத்தில் இதை பேசுவதால் என்ன பலன் கிடைக்கும் என்று கூற முடியுமா?
 

ஏதோ  ஒரு வகையில்  செய்தி  வெளியில் வருகுதல்லே??

மற்றும்  ஐநா ஆனாலும் சந்திப்புக்கள்  ஆனாலும் அவர் இவற்றை  செய்தே  வருகின்றார்

வரவேற்பது தவறல்லவே????

13 minutes ago, விசுகு said:

ஏதோ  ஒரு வகையில்  செய்தி  வெளியில் வருகுதல்லே??

மற்றும்  ஐநா ஆனாலும் சந்திப்புக்கள்  ஆனாலும் அவர் இவற்றை  செய்தே  வருகின்றார்

வரவேற்பது தவறல்லவே????

ஆகக் கூடியது இது பாராளுமன்றத்தின் ஹன்சாட்டில் தான் பதியப்படும். 

ஆனால் இப்படியான உணர்ச்சிமிகு உரைகளால் தன் அரசியல் வாழ்வை கொஞ்ச நாட்களுக்கு கொண்டு செல்ல முடியும். அதற்கு அப்பால் இலங்கை பாராளுமன்றத்தில் பேசப்படும் இப்படியான பேச்சுகளால் வாக்களித்த மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை.

இன்னொரு கேள்வி இருக்கின்றது. பசிலுடன் இணைந்து மக்களை வெளியேற்ற போர் நடைபெறும் இடங்களுக்கு போக திட்டம் இருந்ததாக சொல்கின்றார். இதை இவர் சொல்வது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன் (தவறெனில் திருத்திக் கொள்ள விரும்புகின்றேன்). இதை இதற்கு முதல் சொல்லி இருக்கின்றாரா? முக்கியமாக ஜெனிவாவில் இதை கூறியிருக்கின்றாரா. போர்க் குற்றம் ஒன்றின் முக்கிய சாட்சியாக இருக்கும் கஜேந்திரக் குமார் இதனை இலங்கை பாராளுமன்றத்தில் சொல்லுவதை விட ஜெனிவா போன்ற இடங்களில் சொன்னால் அதன் பலன் பலமடங்கு அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

ஒரே ஒரு கேள்வி

சிங்கள பெளத்த பேரினவாதத்தை நிலை நிறுத்துகின்ற, அதை வலுப்படுத்துகின்ற இலங்கைப் பாராளுமன்றத்தில் இதை பேசுவதால் என்ன பலன் கிடைக்கும் என்று கூற முடியுமா?
 

நிழலி
சிங்கள பாராளுமன்றம் போவதால் என்ன தான் கிடைக்கும்?

9 minutes ago, நிழலி said:

இதை இவர் சொல்வது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன்

பல ஊடகங்களிலும் சொல்லி காணொளியாக வந்திருக்கிறது.

1 minute ago, ஈழப்பிரியன் said:

நிழலி
சிங்கள பாராளுமன்றம் போவதால் என்ன தான் கிடைக்கும்?

இந்த அரசியலமைப்பு இருக்கும் வரை ஒரு சில சில்லறை அபிவிருத்தி திட்டங்களை தவிர தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக எத்வும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதுகாப்புப்படை இல்லாமல் உலாவரும் உறுப்பினர்கள்
கஜேந்திரகுமாரும்
கஜேந்திரனும்
என எண்ணுகிறேன்.

3 minutes ago, நிழலி said:

இந்த அரசியலமைப்பு இருக்கும் வரை ஒரு சில சில்லறை அபிவிருத்தி திட்டங்களை தவிர தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக எத்வும் இல்லை. 

கொரோனா முடிந்து உலக பயண ஒழுங்குகள் சரியாக வரும் போது இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நிழலி said:

ஆகக் கூடியது இது பாராளுமன்றத்தின் ஹன்சாட்டில் தான் பதியப்படும். 

ஆனால் இப்படியான உணர்ச்சிமிகு உரைகளால் தன் அரசியல் வாழ்வை கொஞ்ச நாட்களுக்கு கொண்டு செல்ல முடியும். அதற்கு அப்பால் இலங்கை பாராளுமன்றத்தில் பேசப்படும் இப்படியான பேச்சுகளால் வாக்களித்த மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை.

இன்னொரு கேள்வி இருக்கின்றது. பசிலுடன் இணைந்து மக்களை வெளியேற்ற போர் நடைபெறும் இடங்களுக்கு போக திட்டம் இருந்ததாக சொல்கின்றார். இதை இவர் சொல்வது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன் (தவறெனில் திருத்திக் கொள்ள விரும்புகின்றேன்). இதை இதற்கு முதல் சொல்லி இருக்கின்றாரா? முக்கியமாக ஜெனிவாவில் இதை கூறியிருக்கின்றாரா. போர்க் குற்றம் ஒன்றின் முக்கிய சாட்சியாக இருக்கும் கஜேந்திரக் குமார் இதனை இலங்கை பாராளுமன்றத்தில் சொல்லுவதை விட ஜெனிவா போன்ற இடங்களில் சொன்னால் அதன் பலன் பலமடங்கு அல்லவா?

இதை  உணர்ச்சிகரம்  என்பதற்குள் அடக்கமுடியாது

சில  சாட்சிகள்  மற்றும் ஆதாரங்களுடன்  பேசுகின்றார்

பல  இடங்களிலும்  பேசி  இரக்கிறார்

நமக்க  பிடிக்காதவர்  என்பதால் சிலவற்றை கேட்க  ஏற்க  மறப்பது  நமது  வழமையான செயல் தானே??

  • கருத்துக்கள உறவுகள்

கஜன் ஒரு பக்கத்தால் அளுத்த, சும் ஒரு பக்கத்தால் நசிய, சீவி இன்னொரு பக்கத்தால் சீற, வியாழனும் அங்கஜசனும் பிள்ளையானும் டக்லசும் முடிந்த அபிவிருத்தியை செய்ய - 

இங்கே முன்பு ஒரு முறை கள உறவு முதல்வன் (ஆளை கொஞ்ச காலமாய் காணோம்) எழுதியது போல - இது எமக்கான அரசியலை முந்தள்ள ஒரு நல்ல பொறிமுறையாகவும் இருக்க கூடும். 

Is there a method to this madness? இருந்தால் சந்தோசம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

கஜன் ஒரு பக்கத்தால் அளுத்த, சும் ஒரு பக்கத்தால் நசிய, சீவி இன்னொரு பக்கத்தால் சீற, வியாழனும் அங்கஜசனும் பிள்ளையானும் டக்லசும் முடிந்த அபிவிருத்தியை செய்ய - 

இங்கே முன்பு ஒரு முறை கள உறவு முதல்வன் (ஆளை கொஞ்ச காலமாய் காணோம்) எழுதியது போல - இது எமக்கான அரசியலை முந்தள்ள ஒரு நல்ல பொறிமுறையாகவும் இருக்க கூடும். 

Is there a method to this madness? இருந்தால் சந்தோசம். 

சம்பந்தர்...  பதுங்கி, இருந்து கொண்டு பாய... என்பதனை, 
எழுத மறந்து விட்டீர்கள்  கோசான். :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தர்...  பதுங்கி, இருந்து கொண்டு பாய... என்பதனை, 
எழுத மறந்து விட்டீர்கள்  கோசான். :grin:

அவர் தீபாவளிக்கு தீபாவளி தான் பாய்வார்.
மற்ற நேரமெல்லாம் தூங்குவார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தர்...  பதுங்கி, இருந்து கொண்டு பாய... என்பதனை, 
எழுத மறந்து விட்டீர்கள்  கோசான். :grin:

மறக்கவில்லை, சின்ன குருக்களை எழுதியதால், எப்போதும் ஆழ்ந்த நிஸ்டையில் (தூக்கத்தில்) இருக்கும், இடையிடையே எழும்பி, சமஸ்டி, கந்தஷஸ்டி என்று அருள்வாக்கு மட்டும் சொல்லும் பிரதான குருக்களை குறிக்காமல் விட்டேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, விசுகு said:

மிகவும் அருமையான தேவையான சாட்சியான  பேச்சு

நன்றி தம்பி

5 hours ago, ஈழப்பிரியன் said:


சிங்கள பாராளுமன்றம் போவதால் என்ன தான் கிடைக்கும்?

பல ஊடகங்களிலும் சொல்லி காணொளியாக வந்திருக்கிறது.

 

கொஞ்சக்காலம் கஜேந்திரகுமார் பாராளுமன்றத்துக்கே போகேல்லை.மக்கள் செல்வாக்கு இல்லை. சயிக்கிளுக்கு காத்து போட்டுது.ஆள் கள்ளன் , இவ்வளவுகாலமும் என்னத்தை வெட்டிப்புடுங்கினவர் எண்டுச்சினம். இப்ப கஜேந்திரகுமார் பாராளுமன்றம் போய் உள்ள நிலவரங்களை எடுத்துச்சொல்ல வெளிக்கிட குத்துது குடையுது எண்டீனம். ஆக மிஞ்சிப்போனால்  ஹஞ்சாட்டிலைதான் பதியப்படுமாம்.
அப்ப இவ்வளவு காலமும் சம்சும் கொம்பனி பாராளுமன்றத்திலை பேசினதெல்லாம் எங்கை கொண்டு போய் பதிஞ்சு வைச்சிருக்கினமாம்.

கஜேந்திரகுமார் இப்பதான் சர்வதேச மேடைக்கு சட்டபூர்வமாக வந்திருக்கிறார். இனித்தான் இருக்கு கூத்து.

சுமந்திரனும் சம்பந்தனும் போரகுற்றங்களை மறைக்க துணைபோகத்தான் லாயக்கு....

 

டக்கிளஸ் அண்ணை இணக்க அரசியலுக்கு வந்தகாலத்திலையிருந்து கணக்கு பாத்தால் இத்தடிக்கு அரைவாசி வடகிழக்கு சனம் பஞ்சம் பசி பட்டினி இல்லாமல் நல்ல வீடு வளவுகளோடை எல்லோ வாழவேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

”1958, 77, 83களில் தமிழர்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்தபோது, தற்பாதுகாப்பிற்காக போராடியது மிருகத்தனமா? படுகொலைகளை புரிந்துவிட்டு அதனை அரசாங்கம் மூடிமறைப்பது மிருகத்தனமா?” அதிகாரத்தின் மூலம் தமிழர்களை ஒடுக்கலாம் என நினைக்கூடாது” செல்வராசா கஜேந்திரன் MP நாடாளுமன்றில் வலியுறுத்தல்....

Bild

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Robinson cruso said:

மிக ஆணித்தரமாக கருத்துக்களை வைத்திருக்கிறார். ஸ்ரீதரனும் கூட தமது நேரத்தை இவருக்கு ஒதுக்கி கொடுத்திருந்தார். உண்மையாகவே இது நல்ல ஒரு செயல். இவர்கள் எல்லோரும் இப்படியே ஒற்றுமையாக இணைந்து செயல்படும் நாள்தான் மக்கள் எதிர்பார்க்கும் நாள்.

நான் நினைக்கிறேன் இந்த வீரசேகர எல்லா தமிழ் கட்சிகளையும் விரைவில் ஒற்றுமையாக்கிவிடுவார் போல இருக்குது. அவர் ஒரு பக்கம் பிரச்சினையாக இருந்தாலும் மற்ற பக்கம் நல்ல வேலையும் செய்கிறார்.

அருமையான கருத்து ஆனால் இடையிடையே உங்கள் பெயரில் வேறு யாரும் எழுதுகிறார்களா ?

9 hours ago, குமாரசாமி said:

10 வரிசமாய் தமிழ்மக்களின் பிரதிநிதி தானும் எண்டு பாராளுமன்றம் போய்வாற குடத்தனையார் இதுக்கு என்ன சொல்லப்போறார்?
குடத்தனையார்ரை அறுசுவை சாப்பாட்டு பார்சல்களில் மூழ்கி திளைத்த தம்பிமார் என்ன சொல்ல போயினம்?

தம்பிமாரே! சைக்கிள்  ஓட வெளிக்கிட்டவுடனை வேகமாய் போகாது....ஓட ஓடத்தான் வேகமும் விவேகமும் தெரியும். 😁

அவர் இனி நிறைய ஹாம் வோர்க் செய்யணும் அதுக்குள் அவரின் கனடியன்  அசையா சொத்து பற்றி சிங்களவர்கள் கிண்ட தொடங்கிவிட்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் ஆங்கிலம் தெரிந்த ஒரேயொரு தமிழ் அரசியல்வாதி என்று தன்னை தானே சொல்லியவர் சுமத்திரன். .

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி இவர் ஏன் தேவையில்லாத இடத்தில நின்று அழுகிறார் என்று புரியவில்லை .அவர்கதைக்கும் போது மாளுகடையில் சத்தம் வருவது போல் சத்தம் போடுகிறார்கள்  வெளியில் நின்று சொன்னாலும் போர் குற்ற விசாரணையை தொடங்குவார்கள் .எமக்கு அதுதான் முக்கியம் அதன்மூலமே தீர்வுகளை பெறக்கூடிய அணுகுமுறை உள்ளது மற்றபடி சிங்களம் ஒன்றுக்கும் இறங்கி வராது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, பெருமாள் said:

அருமையான கருத்து ஆனால் இடையிடையே உங்கள் பெயரில் வேறு யாரும் எழுதுகிறார்களா ?

அவர் இனி நிறைய ஹாம் வோர்க் செய்யணும் அதுக்குள் அவரின் கனடியன்  அசையா சொத்து பற்றி சிங்களவர்கள் கிண்ட தொடங்கிவிட்டார்கள் .

ஏன் எங்கடை மற்ற  அரசியல்வாதிகளுக்கு வெளிநாட்டிலை சொத்து சொகங்கள் இல்லையோ?

அதிலையியும் நாமலுக்கு கனடாவிலை எக்கச்சக்கமாமே......மெல்லமாய் கதைப்பம் பினாமியள் இஞ்சையும் நிப்பினம்...😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.