Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மற்றுமோர் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மற்றுமோர் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா!

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-1-720x450.jpg

விண்ணில் குறிப்பிட்ட துார இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரேல் தொழில்நுட்ப உதவியுடன் தரையில் இருந்து விண்ணில் குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை இந்தியா உருவாக்கியுள்ளது.

இந்த ஏவுகணை  ஒடிசா மாநில கடற்கரையில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பறக்கவிடப்பட்ட ஆளில்லா விமானத்தை அடுத்ததாக ஏவப்பட்ட புதிய ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது.

இதுகுறித்து இராணுவ அதிகாரிகள் கூறும்போது “புதிய ஏவுகணை பரிசோதனை முழுமையாக வெற்றி அடைந்துள்ளது. இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பின் இந்த ஏவுகணையின் செயல்திறன் கணிசமாக மேம்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றுமோர் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா! | Athavan News

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தரைப்பாலம் இல்லாததால் நீரில் இறங்கி உடல் அடக்கம்.: 50 ஆண்டுகளாக இன்னலுக்கு ஆளாவதாக மக்கள் குமுறல்...

Tamil_News_12_24_2020_561123073101044.jpg

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நந்தி மங்களம் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல சரியான தரைப்பாலம் இல்லாததால் தண்ணீரில் இறங்கி சடலத்தை எடுத்து செல்லும் பரிதாப நிலை தொடர்கிறது. இந்த கிராமத்தை சேர்ந்த 97 வயது மூதாட்டி சின்ன கனகாம்பாள் நேற்று உயிரிழந்த போதும் அவரது உடலை அடக்கம் செய்வதில் மக்கள் இன்னலை சந்தித்தனர்.

கால்வாயில் தண்ணீர் சென்றதால் சடலத்தை சுமந்த படி தண்ணீரில் இறங்கி மறு கரைக்கு என்று உறவினர்கள் அடக்கம் செய்தனர். 50 ஆண்டுகளாக இப்படி பாதை இல்லாமல் இன்னலுக்கு ஆளாவதாக நந்தி மங்களம் கிராமமக்கள் குமுறுகின்றனர். இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தரைப்பாலம் அமைத்து தர வேண்டும்  என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=641568

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

தரைப்பாலம் இல்லாததால் நீரில் இறங்கி உடல் அடக்கம்.: 50 ஆண்டுகளாக இன்னலுக்கு ஆளாவதாக மக்கள் குமுறல்...

Tamil_News_12_24_2020_561123073101044.jpg

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நந்தி மங்களம் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல சரியான தரைப்பாலம் இல்லாததால் தண்ணீரில் இறங்கி சடலத்தை எடுத்து செல்லும் பரிதாப நிலை தொடர்கிறது. இந்த கிராமத்தை சேர்ந்த 97 வயது மூதாட்டி சின்ன கனகாம்பாள் நேற்று உயிரிழந்த போதும் அவரது உடலை அடக்கம் செய்வதில் மக்கள் இன்னலை சந்தித்தனர்.

கால்வாயில் தண்ணீர் சென்றதால் சடலத்தை சுமந்த படி தண்ணீரில் இறங்கி மறு கரைக்கு என்று உறவினர்கள் அடக்கம் செய்தனர். 50 ஆண்டுகளாக இப்படி பாதை இல்லாமல் இன்னலுக்கு ஆளாவதாக நந்தி மங்களம் கிராமமக்கள் குமுறுகின்றனர். இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தரைப்பாலம் அமைத்து தர வேண்டும்  என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=641568

பாலமென்றால் அதுவும் ஆத்துக்கு மேலே பாலம் என்றால் சனம் எல்லாம் தண்ணீரும் சேறுமாக வெறுங்காலால் மிதித்து மிதித்து அழுக்காக்கிக் கொண்டு போவார்கள்.....ஏவுகணை அப்படியல்ல பத்து செக்கன் எண்டாலும் வானத்தில பொறி பறக்க கிளம்பி போலி இலக்குகளைத் தாக்கி.....எவ்வளவு சந்தோசம் தெரியுமா.....!  😂

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

ஏவுகணை அப்படியல்ல பத்து செக்கன் எண்டாலும் வானத்தில பொறி பறக்க கிளம்பி போலி இலக்குகளைத் தாக்கி.....எவ்வளவு சந்தோசம் தெரியுமா

இலக்குகளை தாக்குவது இருக்கட்டும் .. 

முக்கியமான அதுவும் போர் நடக்கும் சூழலில் "கிளம்பும் " என்டு நம்புறியள் பாருங்கோ அங்க தான் தோழர் தாங்கள் நிற்கிறீர்கள் ..! 😢..😢

முதலில் கிந்தியனே நம்பமாட்டான் ..☺️..😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாயரசு வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொண்டு வருகிறது. உலகளவில் உயிருள்ளவர்களை எவ்வளவு பெரும்தொகையாக மேலே அனுப்பமுடியுமெனப்பரிசோதித்துப்பார்க்கிறர்கள் இறந்தவர்களுக்கு எந்தவிதவாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை.😜😇

 

  • கருத்துக்கள உறவுகள்

 

22 hours ago, குமாரசாமி said:

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நந்தி மங்களம் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல சரியான தரைப்பாலம் இல்லாததால் தண்ணீரில் இறங்கி சடலத்தை எடுத்து செல்லும் பரிதாப நிலை தொடர்கிறது.

கவலை வேண்டாம் சாமிகளே! இந்தியர்களின் ஏவுகணைப் பரிசோதனை தற்போது விண்ணில்தான். அது முடிந்த பின்புதான் மண்ணில் பிணம் காவுவது பற்றிய பரிசோதனை  தொடங்கப்படும்.🧐 

  • கருத்துக்கள உறவுகள்

இவைட ஏவுகணை சீனாவின் தரத்தை எட்ட முதல் சீனா ஹிந்தியாவை சிதறடித்துவிடும்.

உதாரணத்திற்கு..

சீனா இவர்களுக்கு பிறகு விண்வெளிக்கு போக ஆரம்பித்து.. இப்போ சந்திரனில் இருந்து பாறை மாதிரிகளைக் கூட பூமிக்கு கொண்டு வந்துவிட்டது.

ஆனால்.. இவர்களால் ஒரு சந்திராயணைக் கூட சரியாக சந்திரனில் தரையிறக்க முடியவில்லை.

இதில.. வல்லரசுக்கனவு. 

வேணும் என்றால் விடுதலைப்புலிகளை தடைப்பட்டியலில் வைச்சு தமக்கு தாமே தமது வீரத்தை மெச்சிக்கலாம். மற்றும்படி.. உலக அரங்கில்.. இவர்கள் ஒரு செல்லாக்காசு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Paanch said:

 

கவலை வேண்டாம் சாமிகளே! இந்தியர்களின் ஏவுகணைப் பரிசோதனை தற்போது விண்ணில்தான். அது முடிந்த பின்புதான் மண்ணில் பிணம் காவுவது பற்றிய பரிசோதனை  தொடங்கப்படும்.🧐 

இப்போதுதான் ஜேர்மன் ரிவியில்(BR) கிந்தியாவின் தண்ணீர் பிரச்சனை பற்றி காட்டினார்கள். பேட்டியெடுத்த பேட்டியாளரே கண்கலங்கி விட்டார். நிலமை இப்பிடியிருக்க.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.