Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேரணியின் இடைநடுவில் வந்து சிவ பூஜையில் கரடி புகுந்த மாதிரி சிலர் கோஷங்களை முன் வைப்பது ஆபத்தானது!-ரவூப் ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேரணியின் இடைநடுவில் வந்து சிவ பூஜையில் கரடி புகுந்த மாதிரி சிலர் கோஷங்களை முன் வைப்பது ஆபத்தானது!-ரவூப் ஹக்கீம்

 

ju.jpg

(நூறுல் ஹுதா உமர்)
காலாகாலமாக எமக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளை இந்த பேரணியுடன் முடிச்சிப்போட்டு எங்களின் ஒற்றுமைக்கு கலங்கம் ஏற்படுத்த கூடாது. எமது ஒற்றுமையை குலைத்து விடாது நாங்கள் எல்லோரும் ஒருமித்த வகையில் நியாயமான கோரிக்கைகளை எங்களுக்கிடையே பேசி தீர்த்துக்கொள்ளலாம். 

இவ்வாறான போராட்டங்களின் போது அதை மட்டும் மையப்படுத்தி கோஷங்களை எழுப்புவதன் மூலம் எமக்கிடையில் உருவாகி வரும் இணைக்கப்பாடு சிதைந்து விடும். எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்களுக்கு மத்தியிலும் நல்லிணக்கம் உருவாக வேண்டும். இந்த நாட்டின் அராஜகத்திற்கு எதிராக ஒன்றுபடுகின்ற பேரணியில் இடைநடுவில் வந்து சிவன் பூஜையில் கரடி புகுந்தமாதிரி சிலர் கோஷங்களை வைப்பது ஆபத்தானது. 

அது தவிர்க்கபட்டப்பட்ட வேண்டியது. என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்று பகல் (07) கல்முனையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் கருத்துக்கள் கேட்டபோது கல்முனை பிரதேசத்தை பேரணி கடந்து சென்ற வேளையில் கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்த்தல் மற்றும் வடகிழக்கு இணைப்பு தொடர்பிலான கோஷங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அங்கு பேசிய அவர்,

மு.கா எம்பிக்களை அந்த பேரணிக்கு ஆதரவளிக்க கூறியிருந்தேன். ஜனாஸா விடயத்தில் இந்த அரசு விட்டுக்கொடுப்புக்கள் இல்லாமல் இருக்கின்ற போது ஜெனிவா பிரேரணையில் இவ்விடயம் உள்ளடக்கியதாக சர்வதேச சமூகம் முன்மொழிந்திருக்கிற பின்னணியிலும் சட்டத்தின் ஆட்சியையும் உள்ளடக்கி அந்த பிரேரணை நிறைவேற்றப்பட உள்ளதனால் இந்த நாட்டில் நடைபெற்ற யுத்தத்தில் தவறிழைத்த விடுதலை புலிகளோ அல்லது அரசாங்க படையணி அதிகாரிகள் என யாராக இருந்தாலும் யுத்த குற்றம் செய்திருந்தால் மாத்திரம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்விவகாரம் தொடர்பில் சர்வதேச நீதி நியாயம் என்ற விடயத்தில் சர்வதேசத்திற்கு பதிலளிக்க வேண்டிய கடமை இருக்கிறது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மு.கா எம்.பிக்களுக்கு ஆலோசனை வழங்கினேன். கலந்து கொள்ள வாய்ப்பிருந்த முன்னாள் எம்.பி ஏ.எல்.எம். நஸீர் உட்பட எல்லோரும் கலந்து கொண்டனர். சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள மூன்று இனங்களும் இணைந்து போராடியே சுதந்திரத்தை பெற்றுக்கொண்டோம். அதன் பின்னர் அரச வைபகங்களில் கலந்து கொள்வதில் அண்மைக்காலங்களில் இந்த அரசின் தலைமைத்துவத்துவம் அசமந்தமாக நடந்து கொள்வதாக ஒரு விசனம் நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில சம்பவங்கள் இப்படி நடக்கிறது.

தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்ல இந்த நாட்டின் நீதியான சுதந்திரமான சட்டத்துறை ஆட்சியில் நாட்டமுள்ள சகல தரப்பும் இந்த பேரணிக்கு ஆதரவளிக்கிறது. இது வெறுமனே தமிழ் பேசும் மக்களின் போராட்டம் அல்ல. இந்த நாட்டின் சகல இன மக்களும் சேர்ந்து நேர்மையான நியாயமான ஆட்சி நடைபெற வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும் .அராஜகம் இல்லாதொழிய வேண்டும் என்பவர்களின் போராட்டம். தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினை மாத்திரமல்ல இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் எதிர்காலம் குறித்த பிரச்சினைகளும் இதில் உள்ளடங்கியுள்ளது.

தமிழர் தரப்பில் அவர்கள் சார்ந்த கோரிக்கைகள் தனியாகவும், முஸ்லிங்கள் தனியாகவும் பிரச்சினைகள் இருப்பதென்பது புவியியல் ரீதியாக இருந்துகொண்டுதான் வருகிறது. 

காலாகாலமாக இருக்கும் அந்த முரண்பாடுகளை இந்த பேரணியுடன் முடிச்சிப்போட்டு எங்களின் ஒற்றுமைக்கு கலங்கம் ஏற்படுத்த கூடாது. எமது ஒற்றுமையை குலைத்துவிடாது நாங்கள் எல்லோரும் எங்களின் நியாயமான கோரிக்கைகளை எங்களுக்கிடையே பேசி தீர்த்துக்கொள்ளலாம். 

இவ்வாறான போராட்டங்களின் போது அதை மட்டும் மையப்படுத்தி கோஷங்களை எழுப்புவதன் மூலம் உருவாகி வரும் இணைக்கப்பாடும் எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் அதே போல சிங்கள மக்களுக்கு மத்தியிலும் உருவாக வேண்டும். 

இந்த நாட்டின் அராஜகத்திற்கு ஒன்றுபடுகின்ற பேரணியில் இடைநடுவில் வந்து சிவன் பூஜையில் கரடி புகுந்தமாதிரி சிலர் கோஷங்களை வைப்பது ஆபத்தானது. அது தவிர்க்கபட்டப்பட்ட வேண்டியது என்றார் 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை உப பிரதேச செயலக தரம் உயர்த்தும் கோசம் வடகிழக்கு இணைப்பு கோசங்கள் இவருக்கு அல்லாவின் பூசையில் கரடி புகுந்த மாதிரி இவருக்கு தெரிகிறது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

கல்முனை உப பிரதேச செயலக தரம் உயர்த்தும் கோசம் வடகிழக்கு இணைப்பு கோசங்கள் இவருக்கு அல்லாவின் பூசையில் கரடி புகுந்த மாதிரி இவருக்கு தெரிகிறது 🤣

கேட்க நினைத்தேன், நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.

அதென்ன சிவபூசையில் கரடி நுழைந்த கதை?

பள்ளியில் தொழுகை நடத்தும் போது, பன்றி நுழைந்த கதை என்று சொல்லக்கூடாதா? 😁

******

இது பூனைக்கும் தோழன், பாலுக்கும் காவல் கதை.

இவர் சிங்களவர்கள் மத்தியில், மத்திய மாகாணத்தினை சேர்ந்தவர்.

மேலும், ஜனாஸா எரிப்பு பிரச்சனை மட்டுமே முஸ்லிகளுக்கு இருப்பதுபோலவும், அது தீர்ந்துபோனால், வேறு பிரச்சனையே இல்லை என்பது போலவும் அல்லவா பேசுகின்றனர்.

இதுக்கு தான் சொல்லுறது, போராட்டம் யாரையுமே நம்பி இருக்க கூடாது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Nathamuni said:

அதென்ன சிவபூசையில் கரடி நுழைந்த கதை?

நல்ல கேள்வி..நல்ல கேள்வி..நல்ல கேள்வி..? இவையள் அடிக்கடி சனியன் எண்டும் சொல்லி கதைப்பினம். ஏன் எண்டு ஒருக்கால் விசாரிக்க வேணும். 😁
 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

கேட்க நினைத்தேன், நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.

அதென்ன சிவபூசையில் கரடி நுழைந்த கதை?

பள்ளியில் தொழுகை நடத்தும் போது, பன்றி நுழைந்த கதை என்று சொல்லக்கூடாதா? 😁

******

இது பூனைக்கும் தோழன், பாலுக்கும் காவல் கதை.

இவர் சிங்களவர்கள் மத்தியில், மத்திய மாகாணத்தினை சேர்ந்தவர்.

மேலும், ஜனாஸா எரிப்பு பிரச்சனை மட்டுமே முஸ்லிகளுக்கு இருப்பதுபோலவும், அது தீர்ந்துபோனால், வேறு பிரச்சனையே இல்லை என்பது போலவும் அல்லவா பேசுகின்றனர்.

இதுக்கு தான் சொல்லுறது, போராட்டம் யாரையுமே நம்பி இருக்க கூடாது.

இவங்கள் கோசம் போடுவதுக்கு  அழுகிறான்கள் பகிடி என்னவென்றால் இந்த போராட்டம் இன்ன கோரிக்கைகளுக்கு சமயம் சம்பந்தமானத்துக்கு மட்டுமே நடைபெறுகிறது என்று ஐநாவுக்கு  லெட்டர் போயிருக்கு . யார் அதை அனுப்பியது என்று தேடினால் எல்லோருமே நான் இல்லை என்கிறார்கள் இந்த நிமிடம் வரை யாரும் தாங்கள்  தான் அனுப்பியது என்று உரிமை கோரல் விடவில்லை போராட்டம் முடிந்த பின்தான் ஐநாவுக்கு  அனுப்புவதாக பிளான் .ஆனால் அதுக்குமுதலே யாரோ முந்தி விட்டார்கள் .

 

உங்களுக்கு யாருக்கும் உண்மை தெரிந்தால் சொல்லுங்க .😀

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

அதென்ன சிவபூசையில் கரடி நுழைந்த கதை?

நல்ல காரியங்களில் எதிர்பாராத தடங்கல் வரும்போது சிவபூசையில் கரடி நுழைந்தது என்கிறோம்.

கரடிகை (அல்லது காடிகை) என்பது பண்டைய தமிழரின் தோல் இசைக்கருவிகளில் ஒன்று.

பழைய காலத்தில் சிவபூசையில் தீபாராதனை வேளையில் இந்த இசைக்கருவியை கோவிலுக்குள் ஒலிப்பார்கள். கரடிகை ஒலிக்கும்போது உள்ளே இப்போது தீபாராதனை நடைபெறுகின்றது என்பதை கோவிலுக்குள்ளே செல்லமுடியாமல் வெளியில் நின்று வழிபாடு செய்வோருக்கு அறிவிக்கவும் இந்த வாத்தியம் முழங்கும்போது மக்கள் அமைதியாக நின்று தரிசனம் செய்யவும்  அவர்களின் கவனத்தை வழிபாட்டில் திசை திருப்பவும் ஒலிக்கப்பட்டது.

இந்த வாத்தியத்துக்கு பதிலாக கோவில்களில் இப்போது நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கருவிகளை உரத்து வாசிப்பதை காணலாம். கரடிகை என்பது நாளடைவில் மருவி கரடி ஆனதுடன்பிற்காலத்தில் சிவ பூஜையில் வேண்டப்படாத ஒருபொருளாகவும் மாறிவிட்டது. இதுதான் சிவபூஜையில் கரடி நுழைந்த கதை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கரடிக்கு இந்த பேரணி பிடிக்கவில்லை .அதுவும் சாணக்கியன் என்றவுடன் வயித்தாலை போகாத குறை...வெளியிலை மினுக்கி ஆதரவு மாதிரி காட்டினவை...இப்ப வாச்சுப்போச்சு ..வெட்டி விழுத்திறார்...எப்ப்படியும் ஒருமந்திப்பதவி எடுக்கலாம் என்று சுதந்திர தினத்துக்கும் போனவர்...அங்கை கோட்டா முகத்திலை அடிக்கிறமாதிரி  ...சேர்ச் தாக்குதல் காரரை 2 கிழமையிலை தண்டிப்பன் என்று சொல்ல அந்த ஆசையும்  நிராசையாகிட்டுது...பாவம் அதுதான் புலம்புது

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடியும் இந்தப் பேரணியை கோத்தா அடக்கிவிடுவார் என்கிற எண்ணத்தில் ஆதரவு தெரிவித்திருப்பார்.    அவரோ ஐ. நாத்தொடரை எண்ணி கையை கட்டியிருப்பார். இவர் விட்ட பகிடி வெற்றியாய் போனதால்  பாவம் பதறுகிறார்.  

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சொல்வது யாழ் மாவட்ட mp கஜேந்திரன் முழக்கத்தினை.

சாணக்கியனுடனும், சுமேந்திரனுடனும், முஸ்லீம் இளைஞர்கள் செல்பி எடுக்க ஆர்வம் காட்டியதும், மாலைகள் போட்டு நன்றிகள் தெரிவித்ததும், இவருக்கு கடுப்பாகியதாகவும், எமக்கு வேண்டும், தமிழீழம் என்று முழங்க தொடங்கியதாகவும், சிவில் அமைப்பு பிரதிநிதிகள், அத்தகைய முழக்கத்தினை இப்போது செய்வது தவறாகி விடும் என்று அவருக்கு சொன்னதாகவும் தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.