Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலை எண்ணெய் தாங்கிகள் எம்வசமாகும் – கம்மன்பில

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகள் மிக விரைவில் இலங்கை வசமாகவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு பெற்றதாகவும் கொலன்னாவையில் இன்று (17) இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் கூறியுள்ளார்.

2017ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையும் புறந்தள்ளி, தாம் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதற்கு இந்த பேச்சுவாரத்தையின் போது இணக்கம் காணப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

திருமலை எண்ணெய் தாங்கிகள் எம்வசமாகும் – கம்மன்பில – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்

2003ல் 30 வருடத்துக்கு குத்தகை என்றுதானே ஒப்பந்தம் போட்டவை ? சும்மா சொல்லக்கூடாது நந்தசேனவை .😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, பெருமாள் said:

2003ல் 30 வருடத்துக்கு குத்தகை என்றுதானே ஒப்பந்தம் போட்டவை ? சும்மா சொல்லக்கூடாது நந்தசேனவை .😁

சீனாவை மடக்க கிந்தியா ஏதும் விட்டுக்கொடுப்புகளை செய்யாதா? 😀

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

சீனாவை மடக்க கிந்தியா ஏதும் விட்டுக்கொடுப்புகளை செய்யாதா? 😀

பிள்ளைகள் பிறப்பதென்னவோ சீனாவுக்கு தான். ஆனால் பிள்ளைகளுக்கு படி அளிக்கிறது இந்தியா? 

என்ன மாயமோ வசியமோ? ஒருமுறை கூட யாருமே வெட்கப் படல?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமைச்சருக்கு யாருடன் பேசவேண்டும் என்று தெரியவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சீனாவை மடக்க கிந்தியா ஏதும் விட்டுக்கொடுப்புகளை செய்யாதா? 😀

கொழும்புக்கு இந்தியா தன்னை கவனிக்கணும் அலுவல் முடிந்ததும் கழட்டி விடணும் சைனாவிடம் இறைன்சனும் எப்படியோ இந்த கொரனோ கால நெருக்கடியில் தப்பனும் ரூபாவை மிதக்கிவிடாமல் நிறுத்தி வைத்து உள்ளனர் எந்தப்பக்கம் அரங்கினாலும் ராஜாவுக்கு வெட்டு என்ற நிலையை சிங்களம் இன்னும் நெருங்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு முனையம் , மேற்கு முனையம் .. 3 தீவுகள் ..     இப்போ ( ? ) 

Screenshot-2021-02-18-08-26-26-198-org-m

கிந்தியனின்ர நிலைமை அய்யோ பாவம்கள்..மூன்று ஊரின்ர ஏரி, குளம் , குட்டை ஏதாவது கொடுத்து விடுங்கப்பா ..  😢

 தூர் வாரி பிழைத்து போகட்டும். ..😢

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ வெளிநாட்டு எண்ணெய்த் தாங்கிகளை கைப்பற்றியதுபோல் கதை விடுகிறார்.

17 hours ago, பிழம்பு said:

இந்திய உயர்ஸ்தானிகருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு பெற்றதாகவும்

கெஞ்சி கூத்தாடியிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை எரிபொருள் தாங்கி  இந்தியாவிடம் இருந்து  மீளப்பெறப்படும் – அமைச்சர் கம்மன்பில

 
1-161.jpg
 16 Views

“திருகோணமலையில் உள்ள எரிபொருள் தாங்கிகள் வெகுவிரைவில் இந்தியாவிடமிருந்து இலங்கை பெற்றுக்கொள்ளும்” என  அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொலன்னாவைப் பகுதியில்  நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “திருகோணமலை எரிபொருள் தாங்கி தொடர்பால் பல பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கான இந்தியத் தூதுவருடன் இடம்பெற்ற பேச்சு வெற்றியடைந்துள்ளது.

திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் அனைத்தும் வெகுவிரைவில் இலங்கை வசமாகும். எரிபொருள் தாங்கியை இலங்கை வசமாக்க தொழிற்சங்கத்தினர், அரசியல் தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பேச்சு முன்னெடுக்கப்பட்டு ஒரு தீர்வு பொறிமுறை வகுக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பான பேச்சில் 2017ஆம் ஆண்டு எண்ணெய் தாங்கி குறித்து செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைப் புறம் தள்ளி புதிய அணுகுமுறையைக் கையாள்வதாக இந்தியத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பிறகு முழுமையாக பயன்பெறாதுபோன திருகோணமலை எரிபொருள் தாங்கி 2003ஆம் ஆண்டு இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. பெறுமதி மிக்க இந்தத் தேசிய வளத்தை வெகுவிரைவில் சொந்தமாக்கிக் கொள்வோம் என்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

திருகோணமலை கடல் மார்க்கத்தின் ஊடாகச் செல்லும் கப்பல்கள் இந்தியாவுடன் தொடர்புப்பட்டுள்ளன. ஆகவே, எரிபொருள் சார் வியாபாரத்தை மேம்படுத்திக்கொள்ள இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியமாகும்.

இலங்கை ஐ.ஓ.சி. நிறுவனத்துடன் இணைந்து திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனூடாக அதிக தேசிய வருவாயை குறுகிய காலத்தில் ஈட்டிக்கொள்ள முடியும்.

85 வருட காலத்துக்கும் அதிகமான பழமை வாய்ந்த திருகோணமலை எண்ணெய் தாங்கியை அபிவிருத்தி செய்து எதிர்கால சந்ததியினருக்கு இந்தத் தேசிய வளத்தை சிறந்த முறையில் கையளிப்போம் என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்” – என்றார்.

 

https://www.ilakku.org/?p=42519

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை எண்ணெய் குத விவகாரம்! - மறுப்பு வெளியிட்டுள்ள இந்தியா

Report us Ajith 3 hours ago

இலங்கையுடனான திருகோணமலை எரிபொருள் குத ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற கூற்றை இந்தியா மறுத்துள்ளது.

திருகோணமலையில் அமைந்துள்ள எரிபொருள் குதப் பண்ணையை கூட்டாக அபிவிருத்தி செய்வது மற்றும் இயக்குவது குறித்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்பாடு ரத்துச்செய்யப்பட்டது என்று சில ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

2021 பெப்ரவரி 17 அன்று ஒரு நிகழ்வில் இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில் கூறிய கருத்துக்களை இலங்கையின் சில ஊடகங்கள், முறையாக வெளிப்படுத்தவில்லை என்று உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையின் எரிசக்தி அமைச்சர் தாமே இந்த விஷயத்தை இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பின் மூலம் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார் என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2017 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட தற்போதுள்ள இருதரப்பு புரிதல்களுக்கு ஏற்ப, கூட்டாக குறித்த எரிபொருள் குதத்தை அபிவிருத்தி செய்வதற்கும் இயக்குவதற்கும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைகளை ஆராய இரு அரசாங்கங்களும் ஆலோசனை நடத்தியதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் முறையான கலந்துரையாடல்களையும், பரஸ்பர நன்மைக்காக அவற்றின் முடிவுகளை விரைவாக செயற்;படுத்தவும் இந்தியா எதிர்பார்ப்பதாக இந்திய உயர்ஸ்தானிகரம் குறிப்பிட்டுள்ளது.

https://www.tamilwin.com/politics/01/269048?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையும் இந்தியாவும் கள்ளன் போலீஸ் விளையாடுகினம். 

சீனாவை வைச்சுக்கொண்டு இந்தியாவை அலைக்கழித்தால், இந்தியா வேறு வழியில்லாமல் தனக்கு அடங்கிப்போகும் என்று இலங்கை நினைக்கிறது. தமிழரை அடக்கின மாதிரி. இந்தியாவுக்கு வேறு தெரிவுமுண்டோ? தெரியாமல் காலை விட்டிட்டார்.  இலங்கையை தன் பிடிக்குள் வைத்திருக்க தமிழரை பகடைக்காய் ஆக்கின இந்தியாவை அடக்க, சீனாவை பயன்படுத்துது இலங்கை. சீனாவோ எல்லாரையும் விழுங்கி ஏப்பமிடப்போகுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.