Jump to content

234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி- சென்னை திருவொற்றியூரில் சீமான் போட்டி!!


Recommended Posts

25 minutes ago, குமாரசாமி said:

நாம் தமிழர் என்றாலே ஓரம் கட்டிய பல தமிழகத்து ஊடகங்கள் இன்று அவர்களின் செய்திகளையும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் புகழ ஆரம்பித்து விட்டன. எனவே இதுவும் ஒரு வித முன்னேற்றம் தான்.

உண்மைகள் சாவதில்லை.

 

உண்மை தான். சீமான் அவர்கள் தேசிய காட்சிகளிடையே புரோக்கர் வேலை பார்க்கும் அளவுக்கு, அவர் புகழ்  தரணியெங்கும் பரவியுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 179
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

ஒருவரைப் பற்றி விமர்சிக்க முன்னர், அவரைப் பற்றி விலாவாரியாக அறிந்திருப்பது அறம் ஆகும்.

சேறடிப்பதற்குவிலாவாரியான ஆராச்சி...

🥴

39 minutes ago, zuma said:

 

உண்மை தான். சீமான் அவர்கள் தேசிய காட்சிகளிடையே புரோக்கர் வேலை பார்க்கும் அளவுக்கு, அவர் புகழ்  தரணியெங்கும் பரவியுள்ளது.

இந்தியாவில் தேசியக் கட்சிகழுக்கு புறோக்கர் வேலை செய்தால் (உங்கள் அர்த்தத்தில்) உங்களுக்குக் கடுப்பு ஆனால் இலங்கையில் இந்திய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டால் தங்களைப் போன்றோரின் ஒன்பது துவாரங்களுக்கும் பூட்டு...... 🤣

🥴

ஏன் திறப்பு தொலைஞ்சு போச்சோ... 😂😂😂😂😂😂😂😂😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நாம் தமிழர் என்றாலே ஓரம் கட்டிய பல தமிழகத்து ஊடகங்கள் இன்று அவர்களின் செய்திகளையும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் புகழ ஆரம்பித்து விட்டன. எனவே இதுவும் ஒரு வித முன்னேற்றம் தான்.

உண்மைகள் சாவதில்லை.

7ம் திகதி நடந்த கூட்டத்தில், மிக நேர்த்தியாக நடந்ததாக பத்திரிகைகள் எழுதி உள்ளன.

அந்த பக்கமே, எந்த வாகனமும் வராத படி, தமது வாகனங்களை, தூரத்தில், கடற்கரை ஓரத்தில், இடம் எடுத்து, பார்க் பண்ணி, நடந்து வந்துள்ளார்கள்.

தண்ணி அடிக்கும் கூட்டங்களுக்கு  மத்தியில், ரத்த தானம், புத்தக வியாபாரம் நடந்துள்ளது.

குப்பைகளை அள்ளி, சுத்தமாக்கி ஒழுங்கா விட்டு சென்றுள்ளனர்.

தொண்டர்கள், வரும் ஆட்களை ஒழுங்கு முறையில் உள்ளே அனுப்பி இருக்கிறார்கள்.

போலீசார், இந்த நிகழ்வுகளை பார்த்து, ஆச்சரியத்தில் குழம்பி போய் இருந்தார்களாம்.

 

Link to comment
Share on other sites

6 hours ago, Nathamuni said:

மேடையில், தலைவர் படம் இல்லாததால், நியூஸ் 7, தந்தி டிவி, உட்பட, பல முன்னணி youtube சானல்கள், நேரலை செய்தன. ஒரு வேண்டுகோள் ஆக இருந்ததாம்.

உங்களுக்கு, ஆறு கடக்கவும் வேணும், அரைக்காசுக்கு குதிரையும் வேணும் எண்டால், எப்படி, பராபரா?

அதாவது, ராஜிவ் கொலையில் சம்பந்தமுள்ளதாக சொல்லப்படும் தலைவரையும் கொண்டோட வேணும்.... தேர்தல் பிரச்சார மேடையிலை, தலைவர் படம்  இருக்கவும் வேணுமெண்டால்...  ??

நன்கு விளக்கியமைக்கு நன்றி ஐயா,

இன்னொரு கேள்வி ஐயா,

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு மாநில அரசினை எந்தவொரு காரணமும் காட்டாது கலைத்து (dismiss) ஆளுநர் ஆட்சியை உண்டாக்க முடியுமென அறியக்கிடைக்கின்றது. 

நாளை ஒருவேளை சீமான் அவர்கள் முதலமைச்சரானால், இந்தியாவினால் தடைசெய்யப்பட்ட அமைப்பின் தலைவரை தனது கட்சித் தலைவராக பிரகடனப்படுத்த முடியுமா? இந்திய மத்திய பார்ப்பணிய கொள்கை வகுப்பாளர்களை மீறி, ஈழ விடயத்தில் செயற்பட முடியுமா? அல்லது மிகவும் கடினப்பட்டு பெற்ற மாநில அரசை இழப்பாரா?

விதண்டாவாதத்திற்காக கேட்கவில்லை ஐயா. இந்திய அரசியலின் நிஜமும் நிதர்சனமும் விளங்காது நாளை நாம் இலவு காத்த கிளிகளாக போய்விடக்கூடாது என்ற அக்கறையின் பாற்பட்ட கேள்வி ஐயா...

தமிழ் நாட்டு அரசியலை ஒரு பொழுதுபோக்காக (i.e குதிரைப்பந்தயம், றக்பி விளையாட்டு - மிகப்பொருத்தமானது, காலை வாருவது) பார்க்கும் வரை தவறு ஏதும் இல்லை, ஒரு குதிரைப்பந்தய முடிவு நம் வாழ்க்கையையும் இருப்பையும் மாற்றுமென நினைத்து நம் முழுக்கவனத்தையும் அதன்பாற் செலுத்துவது சரியானதா? நாம் நமது முழு கவனத்தையும் ஒன்றிச்செயற்பட வேண்டியது இலங்கை/ஈழ அரசியல் அல்லவா?

** இலங்கை பொதுஜன முன்னணி பொதுச்செயலாளர் பெயர் என்ன?

** அதிமுக பொதுச்செயலாளர் பெயர் என்ன?

முன்னைய கேள்விக்கு பதில் தெரியவில்லை, பின்னைய கேள்விக்கு பதில் தெரிகின்றதென்றால், நாம் மிகவும் தவறான இடத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம் அல்லவா ஐயா?

தயவுசெய்து உங்கள் கருத்துகளை தந்து என்னை மேலும் தெளிவடைய செய்யவும், நன்றி.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பராபரன் said:

நன்கு விளக்கியமைக்கு நன்றி ஐயா,

இன்னொரு கேள்வி ஐயா,

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு மாநில அரசினை எந்தவொரு காரணமும் காட்டாது கலைத்து (dismiss) ஆளுநர் ஆட்சியை உண்டாக்க முடியுமென அறியக்கிடைக்கின்றது. 

நாளை ஒருவேளை சீமான் அவர்கள் முதலமைச்சரானால், இந்தியாவினால் தடைசெய்யப்பட்ட அமைப்பின் தலைவரை தனது கட்சித் தலைவராக பிரகடனப்படுத்த முடியுமா? அல்லது மிகவும் கடினப்பட்டு பெற்ற அரசை இழப்பாரா?

விதண்டாவாதத்திற்காக கேட்கவில்லை ஐயா. இந்திய அரசியலின் நிஜமும் நிதர்சனமும் விளங்காது நாளை நாம் இலவு காத்த கிளிகளாக போய்விடக்கூடாது என்ற அக்கறையின் பாற்பட்ட கேள்வி ஐயா...

தமிழ் நாட்டு அரசியலை ஒரு பொழுதுபோக்காக (i.e குதிரைப்பந்தயம், றக்பி விளையாட்டு - மிகப்பொருத்தமானது, காலை வாருவது) பார்க்கும் வரை தவறு ஏதும் இல்லை, ஒரு குதிரைப்பந்தய முடிவு நம் வாழ்க்கையையும் இருப்பையும் மாற்றுமென நினைத்து நம் முழுக்கவனத்தையும் அதன்பாற் செலுத்துவது சரியானதா? நாம் நமது முழு கவனத்தையும் ஒன்றிச்செயற்பட வேண்டியது இலங்கை/ஈழ அரசியல் அல்லவா?

** இலங்கை பொதுஜன முன்னணி பொதுச்செயலாளர் பெயர் என்ன?

** அதிமுக பொதுச்செயலாளர் பெயர் என்ன?

முன்னைய கேள்விக்கு பதில் தெரியவில்லை, பின்னைய கேள்விக்கு பதில் தெரிகின்றதென்றால், நாம் மிகவும் தவறான இடத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம் அல்லவா ஐயா?

தயவுசெய்து உங்கள் கருத்துகளை தந்து என்னை மேலும் தெளிவடைய செய்யவும், நன்றி.....

அய்யா, ஒரு மாநில அரசினை, அரசியல் காரணங்களுக்காக, டிஸ்மிஸ் பண்ணுவது சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது. அண்மை காலத்தில், இந்த வகை டிஸ்மிஸ் நடக்கவில்லை.

பிரபாகரன் படம் கொண்டு திரிவது சட்ட விரோதம் அல்ல என்றும் அதே உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது அய்யா.

ஆனாலும், youtube, சமூக வலைத்தளங்கள், இலங்கை அரசின் அழுத்தத்தினால், பிரபாகரன் படங்கள் வந்தால், அந்த சானலையே மூடி விடுவதால், நேரலை செய்வதில் சில சிக்கல்கள் இருந்தன. 

ஆகவே மேடையில் வைக்கவில்லை. பதிலாக, பக்கவாட்டில் பெரிதாக இருந்ததே.

இது நியாயமானது தான்.

***

அதிலும் முக்கியமானது, தலைவர் இவர் என்பது பேச்சு. அது ஆவணத்தில் இல்லை. மேலும், அவரது வெளிப்படையான அறிவிப்பின் மீதே, தேர்தலில் போட்டி இட அனுமதியும், 17 லட்ச்சம் வாக்குகளை வெல்லும் நிலையும் இருந்தது.

முதல் அமைச்சரானால் மட்டும், கொடுத்த அனுமதி எப்படி ரத்தாகும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பராபரன் said:

நன்கு விளக்கியமைக்கு நன்றி ஐயா,

இன்னொரு கேள்வி ஐயா,

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு மாநில அரசினை எந்தவொரு காரணமும் காட்டாது கலைத்து (dismiss) ஆளுநர் ஆட்சியை உண்டாக்க முடியுமென அறியக்கிடைக்கின்றது. 

நாளை ஒருவேளை சீமான் அவர்கள் முதலமைச்சரானால், இந்தியாவினால் தடைசெய்யப்பட்ட அமைப்பின் தலைவரை தனது கட்சித் தலைவராக பிரகடனப்படுத்த முடியுமா? இந்திய மத்திய பார்ப்பணிய கொள்கை வகுப்பாளர்களை மீறி, ஈழ விடயத்தில் செயற்பட முடியுமா? அல்லது மிகவும் கடினப்பட்டு பெற்ற மாநில அரசை இழப்பாரா?

விதண்டாவாதத்திற்காக கேட்கவில்லை ஐயா. இந்திய அரசியலின் நிஜமும் நிதர்சனமும் விளங்காது நாளை நாம் இலவு காத்த கிளிகளாக போய்விடக்கூடாது என்ற அக்கறையின் பாற்பட்ட கேள்வி ஐயா...

தமிழ் நாட்டு அரசியலை ஒரு பொழுதுபோக்காக (i.e குதிரைப்பந்தயம், றக்பி விளையாட்டு - மிகப்பொருத்தமானது, காலை வாருவது) பார்க்கும் வரை தவறு ஏதும் இல்லை, ஒரு குதிரைப்பந்தய முடிவு நம் வாழ்க்கையையும் இருப்பையும் மாற்றுமென நினைத்து நம் முழுக்கவனத்தையும் அதன்பாற் செலுத்துவது சரியானதா? நாம் நமது முழு கவனத்தையும் ஒன்றிச்செயற்பட வேண்டியது இலங்கை/ஈழ அரசியல் அல்லவா?

** இலங்கை பொதுஜன முன்னணி பொதுச்செயலாளர் பெயர் என்ன?

** அதிமுக பொதுச்செயலாளர் பெயர் என்ன?

முன்னைய கேள்விக்கு பதில் தெரியவில்லை, பின்னைய கேள்விக்கு பதில் தெரிகின்றதென்றால், நாம் மிகவும் தவறான இடத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம் அல்லவா ஐயா?

தயவுசெய்து உங்கள் கருத்துகளை தந்து என்னை மேலும் தெளிவடைய செய்யவும், நன்றி.....

அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு வேண்டாம் எனும் உங்கள் வாதம் சரியானதுதான். 

தற்போதைய சூழலில் ஈழ விடுதலைப் போராட்டத்தை மறக்காமல் நினைவுபடுத்தி  வைத்திருக்கும் ஒரே ஒரு அமைப்பு என்கின்ற வகையில் நாதக வினர் தொடர்புபட்ட செய்திகளைப் பார்ப்பதும் அவர்களுக்கெதிரான சேறடிப்பை எதிர்ப்பதும் இயல்பானதுதானே. 😀

இலங்கைத் தமிழர் எவரும் சீமான் ஈழம் பெற்றுத் தருவார் என்கின்ற ரீதியில் அவரை எதிர்பார்க்கிறார்கள் என நான் நம்பவில்லை. 

சற்று கற்பனை செய்யுங்கள்...

நா த க வினர் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் பகிரங்கமாக நினைவுபடுத்தவில்லை என வைத்துக் கொண்டால்  தற்போதைய நிலையில் உலகில் வேறு யாராவது அவர்களை நினைவு கூருகின்றனரா (நாளாந்தம்)..?

இன்னும் பத்து வருடங்களில் நாமே எங்கள் வரலாற்றை மறந்து விட்டிருப்போம். 

எமது நிலை  அப்படியிருக்க,  அவர்கள் பகிரங்கமாக நாளாந்தம் நினைவுபடுத்தும் போது நாம் புழகாங்கிதம் அடைவது இயல்பானதுதானே. 

இதில் குறை காண்பதற்கு ஏதும் இல்லை.

நாம் தமிழர் கட்சியினரை எதிர்ப்பவர்களை எரிச்சலடைய வைப்பதும் இந்த விடுதலைப் புலிகளை போற்றும் புராணமே. 

அவர்களும் புலிகளை மறந்துவிட்டால் எங்கள் விடுதலை போராட்டத்தை உலகமே மறந்துவிடும் என்பது இந்த சேறடிப்பாளர்களுக்கு நன்கு தெரியும். 

 

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

அதுமட்டுமில்லை....

முன்பு வேறு இயக்கங்களில் இருந்தவர்கள், புலிப் பாசம் கொண்டவர்கள் போல், சீமானை திட்டுகிறார்கள்..... தலைவர் பெயரை கெடுகிறாராம். உண்மையில், தலைவர் பெயரை கொண்டு செல்வதால் பயங்கர கொதி....

இவையளை மாதிரி கண பேர் திரியினம்... 😎

உண்மையில் அந்த சுயநலமற்ற மனிதனின் பெயர்தான் பிரச்சனையே. அவரின் பெயரை உச்சரிக்காதவிடத்து சேறடிப்பு ஏதும் நிகழுமென நான் நினைக்கவில்லை. 

 

நாம் யார்...

தமிழ் நண்டுகள்தானே.... ☹️

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பராபரன் said:

தமிழ் நாட்டு அரசியலை ஒரு பொழுதுபோக்காக (i.e குதிரைப்பந்தயம், றக்பி விளையாட்டு - மிகப்பொருத்தமானது, காலை வாருவது) பார்க்கும் வரை தவறு ஏதும் இல்லை, ஒரு குதிரைப்பந்தய முடிவு நம் வாழ்க்கையையும் இருப்பையும் மாற்றுமென நினைத்து நம் முழுக்கவனத்தையும் அதன்பாற் செலுத்துவது சரியானதா? நாம் நமது முழு கவனத்தையும் ஒன்றிச்செயற்பட வேண்டியது இலங்கை/ஈழ அரசியல் அல்லவா?

ஈழ அரசியலில் உரக்க உணர்ச்சிகரமாக கத்துபவர்கள் இருந்தால் கவனிப்போம்தானே. தமிழீழம் என்பதை சிங்களவர்கள் கபளீகரம் செய்துவிட்டார்கள். அதைத் தடுக்க முடியாத அளவிற்கு தலைக்கு மேல் வெள்ளம். அதனால் இப்ப நாம் தமிழகத்தை வந்தேறிகளிடம் இருந்து காப்பாற்றப் பெரும்படை கொண்டு (இணையத்தில்தான்) புறப்பட்டுள்ளோம்😀

சந்தடி சாக்கில் ஒரு கேள்வி.

ஒரு அம்மையார் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறாவாம். அவர் யாரென்று தெரியுமோ?

5 hours ago, Kapithan said:

இலங்கையில் இந்திய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டால் தங்களைப் போன்றோரின் ஒன்பது துவாரங்களுக்கும் பூட்டு

நீங்கள் யாழ்ப்பாணத்தில் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் மதச் சார்பில்லாத மக்களின் அறிவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இயக்கத்திற்கு ஓவர் பில்டப் கொடுக்கிறீர்கள். அவர்களை அப்படியே ஓரமாக உட்கார்ந்து தட்டை ஏந்தவிடுவதில் என்ன சிக்கல்? கிடைக்கிற செப்புக் காசில் ஒன்றாவது அவர்களுக்கும் விழட்டுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

அதுசரி, எலிப்புழுக்கைகள் காயிறோம்.... எள்ளும் ஏன் உதுகிலை காயுது? 

எலிப்புழுக்கை தன்னை எள்ளு மாதிரி கெட்டிக்காரராகவும் நினைத்துக்கொள்ளலாம். எள்ளும் எலிப்புழுக்கையாக காய்ந்து எலிப்புழுக்கைகள் எல்லாத்தையும் தாங்கள் எள்ளுதான் என்று தன்நம்பிக்கையை அடைய வைக்கலாம்😬

 

அண்மையில் வந்த அலசலில் இருந்து.. 

 

அமெரிக்க கோனெல் பல்கலைக்கழகத்தில் உளவியல் ஆய்வாளர்களாக இருந்த டேவிட் டன்னிங், ஜஸ்டின் க்ரூகர் ஆகியோர் ஓர் ஆய்விதழை, 1999ஆம் ஆண்டு வெளியிடுகிறார்கள். அதில் அவர்கள் வௌிப்படுத்திய விடயம் தற்போது ‘டன்னிங்-க்ரூகர’”விளைவு என்று அறியப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், ‘டன்னிங்-க்ரூகர்’ விளைவு என்பது, ஒரு வகையான அறிவாற்றல் பக்கச்சார்பு. இதில் நபர்கள்,ஒரு விடயம் தொடர்பான தமது அறிவையும் திறனையும் அதிகமாக மதிப்பிட்டுக்கொள்வதன் விளைவாக, தமது அறியாமை பற்றி அறியும் திறனின்மையின் காரணத்தால், தமது அறிவையும் திறனையும் அதிகமாக மதிப்பிட்டு, ஒரு வகையான மாயமான உயர்வுமனப்பான்மையை உருவாக்கிக் கொள்கிறார்கள். மிகச்சுருக்கமாகச் சொல்வதனால், இது அவர்களுக்குத் தெரியாது என்பது, அவர்களுக்குத் தெரியாத நிலை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

பிரபாகரன் படம் கொண்டு திரிவது சட்ட விரோதம் அல்ல என்றும் அதே உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது அய்யா.

ஆனாலும், youtube, சமூக வலைத்தளங்கள், இலங்கை அரசின் அழுத்தத்தினால், பிரபாகரன் படங்கள் வந்தால், அந்த சானலையே மூடி விடுவதால், நேரலை செய்வதில் சில சிக்கல்கள் இருந்தன. 

ஆகவே மேடையில் வைக்கவில்லை. பதிலாக, பக்கவாட்டில் பெரிதாக இருந்ததே.

அண்ணன் இப்படிச் சொல்கின்றாராம். தேர்தல் என்று வந்துவிட்டால் மாஸ் ரீச் வேணும் என்பது வாஸ்தவம்தான்!

மேடை பதாகையில் பிரபாகரனின் படங்களை வைத்திருந்தால் அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பமாட்டார்கள். இவ்வளவு கடினமான சூழலில் தான் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் என சீமான் என்று குறிப்பிட்டுள்ளார்”

Link to comment
Share on other sites

12 hours ago, zuma said:
சசிகலா அம்மாவுக்கும் எடப்பாடி அய்யாவுக்கும் தூதுவன் வேலை( broker) பார்க்க தயாராக இருந்ததாகவும்   சசிகலா விலகியது அதிர்ச்சியாக இருந்ததாகவும், எல்லோரும் ஒன்று பட்டு செயற்பட இருந்ததாகவும்   சீமான் தெரிவிப்பு. Cat out of the bag.
 

 

இதயமும் காது பிரச்சினை என்றால் நல்ல வைத்தியர் பார்ப்பது  நல்லது   என் அன்பான வேண்டுகோள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

1) ஈழ அரசியலில் உரக்க உணர்ச்சிகரமாக கத்துபவர்கள் இருந்தால் கவனிப்போம்தானே. தமிழீழம் என்பதை சிங்களவர்கள் கபளீகரம் செய்துவிட்டார்கள். அதைத் தடுக்க முடியாத அளவிற்கு தலைக்கு மேல் வெள்ளம். அதனால்

2) இப்ப நாம் தமிழகத்தை வந்தேறிகளிடம் இருந்து காப்பாற்றப் பெரும்படை கொண்டு (இணையத்தில்தான்) புறப்பட்டுள்ளோம்😀

சந்தடி சாக்கில் ஒரு கேள்வி.

3) ஒரு அம்மையார் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறாவாம். அவர் யாரென்று தெரியுமோ?

4) நீங்கள் யாழ்ப்பாணத்தில் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் மதச் சார்பில்லாத மக்களின் அறிவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இயக்கத்திற்கு ஓவர் பில்டப் கொடுக்கிறீர்கள்.

5) அவர்களை அப்படியே ஓரமாக உட்கார்ந்து தட்டை ஏந்தவிடுவதில் என்ன சிக்கல்?

6)கிடைக்கிற செப்புக் காசில் ஒன்றாவது அவர்களுக்கும் விழட்டுமே!

1) சேறடிப்பதை தொழிலாகச் செய்பவர்களை விட இது எவ்வளவோ மேல் என்கிறேன். 

2) தமிழகத்தவனும் உங்களைப் போல என்னைப் போல அடையாளமற்று அலைய வேண்டும் என்பதில்தான் உங்களுக்குத் திருப்தியோ அல்லது நாத க வினரும் DMK ADMK DDMK or DADADADA DMk......... போன்று அரிசி ஒரு ரூபாய் பால் அரை அணா முட்டை இரண்டு பைசா என்கின்ற கணக்கில் இலவசங்களை கொடுக்க வேண்டும் அல்லது வாக்குக்கு காசு கொடுக்கவில்லை என்பதில்தான் சிக்கலோ (உங்களுக்கு)

😂

3) பருவத்தே பயிர் செய் என்பதன் அர்த்தமும் தனி மரம் தோப்பாகாது என்பதும் உண்ணாவிரதமிருக்கும் அம்மையாரின் பெயரை அறிந்த பலருக்கு தெரியாதோ. 

4) ""பாரதிய"." இலங்கையில் இருந்து செயற்பட ஆரம்பிக்கும் ஒரு அரசியல் கட்சியின் பெயர் இந்தியாவின் பெயரில் ஆரம்பிக்கிறது... 🤥

(கிருபனின் பார்வையில்..( 🤣).. மக்களின் அறிவை வளர்க்க... (😂)... மதச் சார்பில்லாத (🥴) விளையாட்டை ஊக்குவிக்க... (😩) ஓர் அரசியல் கட்சி ...

இதற்கெல்லாம் ஏன் அரசியற் கட்சி ஆரம்பிக்க வேண்டும் ? பேசாமல் ஒரு NGO அல்லது ஒரு விளையாட்டுக் களகமோ ஆரம்பித்தால் என்ன.. ? 

(கிருபன் நீங்கள் கூறுவதை தஞ்சை பெரிய கோவில் வாசலில் கல்வெட்டாக பதிந்துவிட்டால் பின்வரும் நம் சந்ததிகள் அதை வாசித்து வியந்து போற்றுவார்கள். வரலாறு முக்கியம் கிருபன்)

5) நாதக வினரும் ஒரு ஓரமாகவிருந்து தட்டை ஏந்த விடுவதில் உங்களுக்கு என்ன சிக்கல்.. 🤥

6) கிடைக்கிற செப்புக் காசில் நாதக யினருக்கும் ஏதாவது விழட்டிமே. குடியா முழுகிவிடும்.. 🤥

 

*** மலையகத் தமிழ் வர்த்தகரைக் கொண்டு, யாழ்ப்பாணத்தின் மையத்தில் நின்று, பாரதத்தின் பெயரில், மதச் சார்பில்லாத(🤣), விளையாட்டையும் கல்வியையும் ஊக்குவிக்க(🥴) ஒரு கட்சி, இந்தியன் Embassy யால் தொடங்கப்படுகிறது.***

இதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு கிருபன் குழந்தை அல்லவே 

😀

(பலர் BJP யின் இலங்கை வருகையை உள்ளூர வரவேற்கிறார்கள் என உணரக்கூடியதாக உள்ளது.. ம்ம்ம்ம்ம்.)

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல ஊடகங்கள் சீமான் குறித்து பேசுகின்றன.

நல்ல ஒரு ஆய்வு.

 

இந்த ஆய்வாளர்களில் பலர், சும்மா அடிச்சு விடுவார்கள்.

திமுக 67ல் வந்தது எப்படி? 77ல் எம்ஜிஆர் வந்தது எங்கனம் என்று சொல்ல மாட்டார்கள்?

ரவீந்திரன் துரைசாமி எண்டு ஒருத்தர், சீமான் கட்சி படுக்கும் என்று பாராளுமனற தேர்தலின் முன்பு சொன்னார்.

4% எடுத்தபின்னர், நானே எதிர்பார்க்கவில்லை என்றார். 

தமிழகம், எப்போதுமே, கவர்ச்சியான தலைமைக்கு வாக்களிக்கும் என்பது பழைய கதை. இவர்கள் நினைக்கும் தமிழகம் இப்போது இல்லை. இணைய, சமூக தள  புரட்சி. அவனவன், அமெரிக்கா, ஐரோப்பா என்று ஓடி, ஓடி பணம் சம்பாதிக்கும் போது, பழைய திமுக சுத்துமாத்து தியரி வேலைக்காகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2021 at 00:24, பராபரன் said:

மேடையில் தலைவர் பட நீக்கம்....

அரசியல் பரிணாம வளர்ச்சிக்காக இன்னும் பல உண்டு....

 

உண்மையில் எதற்காக  இக்கேள்வியை  வைத்தீர்கள் என்று  தெரியவில்லை

இங்கே  சீமான் மீது 

தலைவரை  வைத்து  பிழைக்கிறார்  என்ற  கருத்தை  கொண்டவராக  நீங்கள் இருந்தால்??

தலைவர் படத்தை இப்பொழுதாவது எடுத்தது உங்களுக்கு  திருப்தியாகவும்  ஆறுதலாகவும் தானே  இருக்கணும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்  கட்சியினர் வெல்ல வாழ்த்துக்கள்,  இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி வெல்லவும் வாழ்த்துக்கள்    சொல்லிவைப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

ஈழ அரசியலில் உரக்க உணர்ச்சிகரமாக கத்துபவர்கள் இருந்தால் கவனிப்போம்தானே. தமிழீழம் என்பதை சிங்களவர்கள் கபளீகரம் செய்துவிட்டார்கள். அதைத் தடுக்க முடியாத அளவிற்கு தலைக்கு மேல் வெள்ளம். அதனால் இப்ப நாம் தமிழகத்தை வந்தேறிகளிடம் இருந்து காப்பாற்றப் பெரும்படை கொண்டு (இணையத்தில்தான்) புறப்பட்டுள்ளோம்😀

சந்தடி சாக்கில் ஒரு கேள்வி.

ஒரு அம்மையார் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறாவாம். அவர் யாரென்று தெரியுமோ?

நீங்கள் யாழ்ப்பாணத்தில் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் மதச் சார்பில்லாத மக்களின் அறிவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இயக்கத்திற்கு ஓவர் பில்டப் கொடுக்கிறீர்கள். அவர்களை அப்படியே ஓரமாக உட்கார்ந்து தட்டை ஏந்தவிடுவதில் என்ன சிக்கல்? கிடைக்கிற செப்புக் காசில் ஒன்றாவது அவர்களுக்கும் விழட்டுமே!

கிருப‌ப‌ன் பெரிய‌ப்பா உங்க‌ளிட‌ம் ஒரு வெளிப்ப‌டையான‌ கேள்வி ( த‌மிழீழ‌ நிலைப்பாட்டில் இப்போது என்ன‌ ம‌ன‌ நிலையில் இருக்கிறீங்க‌ள் )

த‌மிழீழ‌ம் வேனுமா வேண்டாமா அல்ல‌து ஒன்று ப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் எம் இன‌த்தை அழித்த‌ சிங்க‌ள‌வ‌ர் கூட‌ ஒன்னா வாழுவ‌தை விரும்புகிறிங்க‌ளா ?

மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் ப‌ற்றிய‌ உங்க‌ள் நிலைப்பாடு என்ன‌ என்று கொஞ்ச‌ம் சொல்லுங்கோ பிளிஸ் /

 

என்னை கேட்டால் த‌மிழீழ‌ நிலைப்பாட்டில் எதிரியை உருவாக்காம‌ நண்ப‌ர்க‌ளை உருவாக்கினா அது ந‌ம‌க்கு கூடுத‌ல் ப‌ய‌ன் அளிக்கும் த‌மிழீழ‌ விடைய‌த்தில் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சீமான்  கட்சியினர் வெல்ல வாழ்த்துக்கள்,  இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி வெல்லவும் வாழ்த்துக்கள்    சொல்லிவைப்போம்

அந்த சீதா அம்மன் கோயில்.... நினைவிலே இருக்கட்டும்...😜

2 minutes ago, பையன்26 said:

கிருப‌ப‌ன் பெரிய‌ப்பா உங்க‌ளிட‌ம் ஒரு வெளிப்ப‌டையான‌ கேள்வி ( த‌மிழீழ‌ நிலைப்பாட்டில் இப்போது என்ன‌ ம‌ன‌ நிலையில் இருக்கிறீங்க‌ள் )

த‌மிழீழ‌ம் வேனுமா வேண்டாமா அல்ல‌து ஒன்று ப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் எம் இன‌த்தை அழித்த‌ சிங்க‌ள‌வ‌ர் கூட‌ ஒன்னா வாழுவ‌தை விரும்புகிறிங்க‌ளா ?

மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் ப‌ற்றிய‌ உங்க‌ள் நிலைப்பாடு என்ன‌ என்று கொஞ்ச‌ம் சொல்லுங்கோ பிளிஸ் /

 

என்னை கேட்டால் த‌மிழீழ‌ நிலைப்பாட்டில் எதிரியை உருவாக்காம‌ நண்ப‌ர்க‌ளை உருவாக்கினா அது ந‌ம‌க்கு கூடுத‌ல் ப‌ய‌ன் அளிக்கும் த‌மிழீழ‌ விடைய‌த்தில் 🙏

உங்கண்ட பெரியப்பர், இதுக்கு பதிலை, வெட்டி, ஒட்ட, மின்னம்பலத்தில், தேடிக்கொண்டிருப்பார், பொறுங்கோ.  😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Nathamuni said:

அந்த சீதா அம்மன் கோயில்.... நினைவிலே இருக்கட்டும்...😜

ம்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

உங்கண்ட பெரியப்பர், இதுக்கு பதிலை, வெட்டி, ஒட்ட, மின்னம்பலத்தில், தேடிக்கொண்டிருப்பார், பொறுங்கோ.  😜

அது நீங்கள் பார்க்கும் நாலாந்தர யூடியூப் சனல்களையும் ரப்லொயிட் தளங்களையும் (இங்கிலீஷயும் சேர்த்துத்தான்) விட பரவாயில்லை😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

கிருப‌ப‌ன் பெரிய‌ப்பா உங்க‌ளிட‌ம் ஒரு வெளிப்ப‌டையான‌ கேள்வி ( த‌மிழீழ‌ நிலைப்பாட்டில் இப்போது என்ன‌ ம‌ன‌ நிலையில் இருக்கிறீங்க‌ள் )

த‌மிழீழ‌ம் வேனுமா வேண்டாமா அல்ல‌து ஒன்று ப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் எம் இன‌த்தை அழித்த‌ சிங்க‌ள‌வ‌ர் கூட‌ ஒன்னா வாழுவ‌தை விரும்புகிறிங்க‌ளா ?

மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் ப‌ற்றிய‌ உங்க‌ள் நிலைப்பாடு என்ன‌ என்று கொஞ்ச‌ம் சொல்லுங்கோ பிளிஸ் /

 

என்னை கேட்டால் த‌மிழீழ‌ நிலைப்பாட்டில் எதிரியை உருவாக்காம‌ நண்ப‌ர்க‌ளை உருவாக்கினா அது ந‌ம‌க்கு கூடுத‌ல் ப‌ய‌ன் அளிக்கும் த‌மிழீழ‌ விடைய‌த்தில் 🙏

இதில் தமிழ் கட்சிகள் மாதிரி மழுப்பல் பதில் சொல்லவேண்டிய தேவை இல்லை.

தமிழீழம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்த காலம் தலைவர் இருக்கும்போதே போய்விட்டது. தலைவர் இருக்கும்போது கிடைக்காத தனிநாட்டை தமிழர்கள் ஒருபோதும் அடையமாட்டார்கள்.

தாயகத்தில் இருக்கும் தமிழர்கள் சகல உரிமைகளுடனும் வாழ ஒரு தீர்வு தேவை. அது எப்படியான அரசியல் தீர்வு என்பதை அவர்களே தீர்மானிக்கவேண்டும். புலம்பெயர் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், தாயகத் தமிழருக்கு அனுசரணையாக இருந்து, தேவையான முன்னெடுப்புக்களையும், அழுத்தங்களையும், லொபியிங்களையும் செய்து சர்வதேச நாடுகளின் உதவியோடு தீர்வை அடையவேண்டும். சிறிலங்கா இனவழிப்பு புரிந்தது என்பது நிறுவப்படவேண்டும். அப்படி நிறுவாமல் ஒரு நிரந்தரத் தீர்வு வராது.

மாவீரர் தமிழரின் உரிமைகளுக்காக தமது உயிரைத் துறந்தவர்கள். தமிழீழம் அவர்கள் கனவாக இருந்தது. ஆனால் அது கனவாகவே இருக்கின்றது என்பதுதான் யதார்த்தம். எனது மிக நெருங்கிய நண்பர்கள், வகுப்புத் தோழர்கள், படித்த கல்லூரியின் ஆளுமை மிக்க மாணவர்களும் அடக்கம். அவர்களின் தியாகத்தை மதிக்காதவர்களையும், கொச்சைப்படுத்துபவர்களையும் நான் கால் தூசுக்கும் மதிப்பதில்லை. அதில் 2009 இலண்டன் மாவீரர் தினத்தில் சிலரை விசிலடிக்க வைத்த சீன்மானும் அடக்கம். மாவீரர்களின் தியாகத்தை தமது சுயநலங்களுக்கும், தம்மை முன்னிறுத்தவும், விளம்பரப்படுத்தவும் பாவிப்பவர்களுக்கும் மரியாதை கொடுப்பதில்லை.

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

இதில் தமிழ் கட்சிகள் மாதிரி மழுப்பல் பதில் சொல்லவேண்டிய தேவை இல்லை.

தமிழீழம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்த காலம் தலைவர் இருக்கும்போதே போய்விட்டது. தலைவர் இருக்கும்போது கிடைக்காத தனிநாட்டை தமிழர்கள் ஒருபோதும் அடையமாட்டார்கள்.

தாயகத்தில் இருக்கும் தமிழர்கள் சகல உரிமைகளுடனும் வாழ ஒரு தீர்வு தேவை. அது எப்படியான அரசியல் தீர்வு என்பதை அவர்களே தீர்மானிக்கவேண்டும். புலம்பெயர் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், தாயகத் தமிழருக்கு அனுசரணையாக இருந்து, தேவையான முன்னெடுப்புக்களையும், அழுத்தங்களையும், லொபியிங்களையும் செய்து சர்வதேச நாடுகளின் உதவியோடு தீர்வை அடையவேண்டும். சிறிலங்கா இனவழிப்பு புரிந்தது என்பது நிறுவப்படவேண்டும். அப்படி நிறுவாமல் ஒரு நிரந்தரத் தீர்வு வராது.

மாவீரர் தமிழரின் உரிமைகளுக்காக தமது உயிரைத் துறந்தவர்கள். தமிழீழம் அவர்கள் கனவாக இருந்தது. ஆனால் அது கனவாகவே இருக்கின்றது என்பதுதான் யதார்த்தம். எனது மிக நெருங்கிய நண்பர்கள், வகுப்புத் தோழர்கள், படித்த கல்லூரியின் ஆளுமை மிக்க மாணவர்களும் அடக்கம். அவர்களின் தியாகத்தை மதிக்காதவர்களையும், கொச்சைப்படுத்துபவர்களையும் நான் கால் தூசுக்கும் மதிப்பதில்லை. அதில் 2009 இலண்டன் மாவீரர் தினத்தில் சிலரை விசிலடிக்க வைத்த சீன்மானும் அடக்கம். மாவீரர்களின் தியாகத்தை தமது சுயநலங்களுக்கும், தம்மை முன்னிறுத்தவும், விளம்பரப்படுத்தவும் பாவிப்பவர்களுக்கும் மரியாதை கொடுப்பதில்லை.

 

 

 

 

 

 

பாலா அண்ணையை தவற விட்டாச்சோ....? 

அப்போ விசில் அடித்தவர்களில் தவறில்லை, அடிக்க வைத்தவர்களில் தான் தவறு என்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

பாலா அண்ணையை தவற விட்டாச்சோ....? 

அப்போ விசில் அடித்தவர்களில் தவறில்லை, அடிக்க வைத்தவர்களில் தான் தவறு என்கிறீர்களா?

பாலசிங்கத்தார் விசிலடிக்க வைத்த காலத்தில் புலிகளின் தலைமையும், தலைவரும் இருந்தார்கள். அவர் கொள்கை விளக்க உரைகள் மீது உன்னிப்பான கவனத்தைக் கொண்டுவர இடையிடையே விசிலடிக்க வைக்கக்கூடிய கதைகளைச் சொன்னார்.  2009 மாவீரர் தினத்தில் புலிகளின் தலைமையும் இல்லை, தலைவரும் இல்லை. ஆனால் அன்றும் தலைவர் உரை வருமென்று கதையும் மண்டபத்திலும் உலவிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் சீன்மான் திரையில் தோன்றி குஞ்சுகளை விசிலடிக்கச் செய்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, கிருபன் said:

அதில் 2009 இலண்டன் மாவீரர் தினத்தில் சிலரை விசிலடிக்க வைத்த சீன்மானும் அடக்கம். மாவீரர்களின் தியாகத்தை தமது சுயநலங்களுக்கும், தம்மை முன்னிறுத்தவும், விளம்பரப்படுத்தவும் பாவிப்பவர்களுக்கும் மரியாதை கொடுப்பதில்லை.

இதை இப்படி முடிக்க தானே மேலே எழுதிய வர்ணிப்புக்கள் அனைத்தும். முடிவுரையை தயார் செய்து அதற்கேற்ப முகவுரை எழுதுதல்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இதை இப்படி முடிக்க தானே மேலே எழுதிய வர்ணிப்புக்கள் அனைத்தும். முடிவுரையை தயார் செய்து அதற்கேற்ப முகவுரை எழுதுதல்??

நான் பலதடவை யாழில் சொல்லியதுதான். திரும்பவும் நினைவுபடுத்தவேண்டியிருக்கின்றது. அத்தோடு புலம்பெயர் நாடுகளில் தாங்களும் போராளிகள் என்று நினைத்து லெப்டினன்ட் கேர்ணல் மதிப்பு வேணும் என்பவர்களையும் சட்டை செய்வதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 07:19 PM   கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.  இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்  அக்கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு  ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அக்கோரிக்கையின் பிரகாரம், ஆளுநர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/182051
    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.