Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை காட்டிக்கொடுக்கும் எந்த முயற்சியையும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் – மு.க.ஸ்டாலின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை காட்டிக்கொடுக்கும் எந்த முயற்சியையும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் – மு.க.ஸ்டாலின்

அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடியிருந்தார்.இதன்போது, இருதரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில் இரு நாடுகளுக்கிடையேயான தொடர்ச்சியான முன்னேற்றங்கள் மற்றும் தற்போதைய ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை காட்டிக்கொடுக்கும் எந்த முயற்சியையும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ஸ்டாலின் மோடியை எச்சரித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.இந்த நிலையிலேயே இந்த விடயத்தில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.அத்துடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு திராவிட முன்னேற்ற கழகம் இந்திய அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.இந்த விடயம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதை உறுதிப்படுத்துமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/இலங்கை-தமிழர்களின்-எதிர்/

 

  • கருத்துக்கள உறவுகள்
 
 

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) இந்திய அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த விடயம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதை உறுதிப்படுத்துமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

இந்த நிலையிலேயே இந்த விடயத்தில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு, இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை காட்டிக்கொடுக்கும் எந்த முயற்சியையும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ஸ்டாலின் மோடியை எச்சரித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடியிருந்தார்.

இதன்போது, இருதரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில் இரு நாடுகளுக்கிடையேயான தொடர்ச்சியான முன்னேற்றங்கள் மற்றும் தற்போதைய ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு இந்திய அரசிடம் தி.மு.க. கோரிக்கை! – Athavan News

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) இந்திய அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

சாத்தான் வேதம் ஓதுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

சாத்தான் வேதம் ஓதுது.

திமுக ஈழத்தமிழர்களுக்கான பொது எதிரி. பல அரசியல் பழிவாங்கல்/ அரசியல் வேற்றுமைகள் மூலம் முள்ளிவாய்க்கால் நிகழ்வை ரசித்தவர்கள்.

14 hours ago, கிருபன் said:

இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை காட்டிக்கொடுக்கும் எந்த முயற்சியையும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் – மு.க.ஸ்டாலின்

இது திமுக தன் நன்றி நவிலலுக்காக கூடியிருந்த போது எடுத்த படம்.

Bild

வெட்கம் கெட்ட தமிழின துரோக கட்சியான திமுக பற்றிய செய்திகளையும்   தேர்தல் விளம்பர மீம்ஸ்களையும் தடை செய்ய வேண்டும்.

14 hours ago, கிருபன் said:

அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடியிருந்தார்.இதன்போது, இருதரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில் இரு நாடுகளுக்கிடையேயான தொடர்ச்சியான முன்னேற்றங்கள் மற்றும் தற்போதைய ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை காட்டிக்கொடுக்கும் எந்த முயற்சியையும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ஸ்டாலின் மோடியை எச்சரித்துள்ளார்.

தேர்தல் நேரங்களில் மட்டும் ஈழத்தமிழர் பிரச்சனை திமுகாவுக்கு அரிப்பெடுக்கும் போல....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

திமுக ஈழத்தமிழர்களுக்கான பொது எதிரி. பல அரசியல் பழிவாங்கல்/ அரசியல் வேற்றுமைகள் மூலம் முள்ளிவாய்க்கால் நிகழ்வை ரசித்தவர்கள்.

இது திமுக தன் நன்றி நவிலலுக்காக கூடியிருந்த போது எடுத்த படம்.

Bild

வெட்கம் கெட்ட தமிழின துரோக கட்சியான திமுக பற்றிய செய்திகளையும்   தேர்தல் விளம்பர மீம்ஸ்களையும் தடை செய்ய வேண்டும்.

தேர்தல் நேரங்களில் மட்டும் ஈழத்தமிழர் பிரச்சனை திமுகாவுக்கு அரிப்பெடுக்கும் போல....

எப்படித்தான் புலம்பெயர் தேசங்களில் இருந்து குத்தி முறிஞ்சாலும், வரும் தேர்தலில் திமுக 
பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். அண்ணன் சீமான் அவர்கள் மண்கவ்வுவார் (கட்டுக்காசையும் இழப்பார்), இதை உங்கள் நாட்குறிப்பில் குறித்துக்கொள்ளுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

எப்படித்தான் புலம்பெயர் தேசங்களில் இருந்து குத்தி முறிஞ்சாலும், வரும் தேர்தலில் திமுக 
பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். அண்ணன் சீமான் அவர்கள் மண்கவ்வுவார் (கட்டுக்காசையும் இழப்பார்), இதை உங்கள் நாட்குறிப்பில் குறித்துக்கொள்ளுங்கள். 

அவசரப்பட்டு வார்த்தை சொல்லி ஓடி  மறைய வேண்டாம் தேர்தல் முடியும் மட்டும் பொறுங்க .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

எப்படித்தான் புலம்பெயர் தேசங்களில் இருந்து குத்தி முறிஞ்சாலும், வரும் தேர்தலில் திமுக 
பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். அண்ணன் சீமான் அவர்கள் மண்கவ்வுவார் (கட்டுக்காசையும் இழப்பார்), இதை உங்கள் நாட்குறிப்பில் குறித்துக்கொள்ளுங்கள். 

உண்மையை சொன்னால் ஏன் குத்தி முறிகிறோம் என்கிறீர்கள். கருத்துக்கு பலத்த பஞ்சம் உங்கள்  பக்கத்தில்  உள்ளது போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

எப்படித்தான் புலம்பெயர் தேசங்களில் இருந்து குத்தி முறிஞ்சாலும், வரும் தேர்தலில் திமுக 
பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். அண்ணன் சீமான் அவர்கள் மண்கவ்வுவார் (கட்டுக்காசையும் இழப்பார்), இதை உங்கள் நாட்குறிப்பில் குறித்துக்கொள்ளுங்கள். 

ஐயா சும்மா,

பொந்துக்குள்ளிருந்து(Hibernation) எப்போ வெளியே வந்தீர்கள்.. 😂

சீமான் வெற்றிபெறுவாரோ தோல்வியடைவாரோ முக்கியமல்ல அவர் எடுத்துவைத்த கருத்து மக்களிடம் வெற்றிகரமாக சென்றுள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, zuma said:

எப்படித்தான் புலம்பெயர் தேசங்களில் இருந்து குத்தி முறிஞ்சாலும், வரும் தேர்தலில் திமுக 
பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். அண்ணன் சீமான் அவர்கள் மண்கவ்வுவார் (கட்டுக்காசையும் இழப்பார்), இதை உங்கள் நாட்குறிப்பில் குறித்துக்கொள்ளுங்கள். 

இந்த திரியுக்கை ஏன் சீமான் வாறார்? 😎

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

உண்மையை சொன்னால் ஏன் குத்தி முறிகிறோம் என்கிறீர்கள். கருத்துக்கு பலத்த பஞ்சம் உங்கள்  பக்கத்தில்  உள்ளது போலுள்ளது.

கு.சா அண்ணையின் அரிப்பெடுத்த கதைக்கான எதிர்வினை.

 

3 hours ago, புலோலியூரான் ரவீ..ன் said:

சீமான் வெற்றிபெறுவாரோ தோல்வியடைவாரோ முக்கியமல்ல அவர் எடுத்துவைத்த கருத்து மக்களிடம் வெற்றிகரமாக சென்றுள்ளது. 

நாம் தமிழர் கட்சி இந்தமுறை, 2019 பொது தேர்தலில் எடுத்த வாக்குகளை விட குறைவான வாக்குகளை எடுக்கும். சாதி வாக்குகளை நம்பியே களம் இறங்கியுள்ளார், அதற்க்கு ஆப்பு வைத்தால் போல் ஹரி நாடாரை காங்கிரஸ் களம் இறக்கியுள்ளது. ஒட்டு மெத்த தமிழ் தேசிய வாக்குகளும் திமுக வே போய் சேரும். கடந்த காலங்களில் தமிழ் தேசியத்துக்காக கதைத்த பலர் இப்பொழுது கட்சியில் இல்லை ( ராஜிவ் காந்தி, சாட்டை முருகன், கல்யாண சுந்தரம்)

8 hours ago, Kapithan said:

ஐயா சும்மா,

பொந்துக்குள்ளிருந்து(Hibernation) எப்போ வெளியே வந்தீர்கள்.. 😂

தல 
மனிசி பலமுறை எச்சரித்து விட்டார், நெட்டில் அதிக நேரம் செலவிடுகின்றேன் என்று. இனியும்  சொல்வழி கேக்காவிடடால் டைவோஸ்சில் முடியும்.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, zuma said:

கு.சா அண்ணையின் அரிப்பெடுத்த கதைக்கான எதிர்வினை.

 

நாம் தமிழர் கட்சி இந்தமுறை, 2019 பொது தேர்தலில் எடுத்த வாக்குகளை விட குறைவான வாக்குகளை எடுக்கும். சாதி வாக்குகளை நம்பியே களம் இறங்கியுள்ளார், அதற்க்கு ஆப்பு வைத்தால் போல் ஹரி நாடாரை காங்கிரஸ் களம் இறக்கியுள்ளது. ஒட்டு மெத்த தமிழ் தேசிய வாக்குகளும் திமுக வே போய் சேரும். கடந்த காலங்களில் தமிழ் தேசியத்துக்காக கதைத்த பலர் இப்பொழுது கட்சியில் இல்லை ( ராஜிவ் காந்தி, சாட்டை முருகன், கல்யாண சுந்தரம்)

 

கரிநாடார் போடும் நகைக்கு இணையாக மக்கள் வாக்களிப்பார்கள்   என நம்புவோமாக. 

154354930_3688192851301966_5499038609439

  • கருத்துக்கள உறவுகள்

162453144_4057427624320278_6513493345201

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2021 at 23:43, zuma said:

எப்படித்தான் புலம்பெயர் தேசங்களில் இருந்து குத்தி முறிஞ்சாலும், வரும் தேர்தலில் திமுக 
பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். அண்ணன் சீமான் அவர்கள் மண்கவ்வுவார் (கட்டுக்காசையும் இழப்பார்), இதை உங்கள் நாட்குறிப்பில் குறித்துக்கொள்ளுங்கள். 

அண்ணன்  புதியதலைமுறை இணையத்தளம் பார்க்கவில்லையாக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2021 at 22:00, zuma said:

ராஜிவ் காந்தி, சாட்டை முருகன், கல்யாண சுந்தரம்

முதலாவது சாட்டை துரை முருகன் இன்னும் நாம் தமிழர் கட்சி தொடர்பாகத்தான் பிரச்சாரம் செய்கிறார்.

நிற்க, கல்யாணசுந்தரமோ, ரஜீவ் காந்தியோ தமிழ்த் தேசியம் சார்பாக நிற்கவில்லை. நின்றிருந்தால் இன்று பணத்திற்காக அ தி மு க வையும் தி மு க வையும் தேடி ஓடியிருக்க மாட்டார்கள்.

தமிழர்களை அழித்ததே தி மு க தான் என்றாகிறபோது தமிழ்த் தேசியவாதிகள் அவர்களுக்கு வாக்களிப்பது எப்படியென்று புரியவில்லை.

திராவிடம், பெரியாரிஸம் என்று சப்பைக் கட்டும் தி மு க வுக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் உள்ள தொடர்பை குத்தி முறிபவர்கள் விளக்கினால் நலம்.

யுத்தத்தை நடத்திய சிவ்ஷங்கர் மேனன் சொன்னதையே நம்பமாட்டேன் என்று அடம்பிடித்த தி மு க செம்புகள் எப்படி தி மு க தான் வெல்லும் என்று சத்தியம் செய்கிறார்கள். சிலவேளை சாத்திரம் கீத்திரம் பார்க்கின்றார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2021 at 18:03, குமாரசாமி said:

திமுக ஈழத்தமிழர்களுக்கான பொது எதிரி. பல அரசியல் பழிவாங்கல்/ அரசியல் வேற்றுமைகள் மூலம் முள்ளிவாய்க்கால் நிகழ்வை ரசித்தவர்கள்.

இது திமுக தன் நன்றி நவிலலுக்காக கூடியிருந்த போது எடுத்த படம்.

Bild

வெட்கம் கெட்ட தமிழின துரோக கட்சியான திமுக பற்றிய செய்திகளையும்   தேர்தல் விளம்பர மீம்ஸ்களையும் தடை செய்ய வேண்டும்.

தேர்தல் நேரங்களில் மட்டும் ஈழத்தமிழர் பிரச்சனை திமுகாவுக்கு அரிப்பெடுக்கும் போல....

இந்தப் படத்தைப் பார்க்கும்போது மிகத் தெளிவாகத் தெரிவது ஒன்றுதான்.

அது..

""விடுதலைப் புலிகளை அழித்தொழித்ததற்கு நன்றி கூறுவதற்கு கும்பலாக வந்துள்ளார்கள்""

இதில் ஏமாற்றத்தைத் தருவது திருமாவளவன் உள்ளடங்குவதுதான். எப்படித்தான்அவர் முற்போக்கு அரசியல்வாதியாக இருந்தாலும் அவர்ரும் ஒரு இந்திய அரசியல்வாதிதானே...😏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.