Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்திற்கு ஆதரவாக வடக்கு, கிழக்கு முஸ்லிம் சம்மேளனம் ஐ.நா. அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்குத் தமது கண்டனத்தை வெளியிடும் வகையில் வடக்கு, கிழக்கு முஸ்லிம் சம்மேளனத்தினால் இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

Protest - Clipart - Protest Clipart , Free Transparent Clipart - ClipartKey

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட வடக்கு, கிழக்கு முஸ்லிம் சம்மேளத்தின் தேசிய அமைப்பாளர் இஸடீன் கூறியதாவது:

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அவர் சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாவார்.

அவர் எமது நாட்டின் மூன்று தசாப்தகால யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்த இராணுவத்தினர் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடைசெய்வதற்கு முற்படுகின்றார்.

அவர்கள் எமது நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்யவேண்டிய அவசியம் இல்லை. உள்ளகப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொள்ளும்.

மிச்சேல் பச்லெட் சிலி நாட்டின் ஜனாதிபதியாக இருந்தபோது, உள்ளகப் பிரச்சினைகளில் அங்கு பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்தார்கள். அவ்வாறிருக்கையில் தற்போது அவர் மனித உரிமைகள் தொடர்பில் பேசுகின்றார்.

எனவே இத்தகைய மிரட்டல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சமாட்டோம். இலங்கை தொடர்பான பிரேரணை மீது முன்னெடுக்கப்படவுள்ள வாக்கெடுப்பில் நாம் நிச்சயமாக வெற்றிபெறுவோம்.

ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் எமக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றன. அவ்வாறான நாடுகளின் துணையுடன் இந்தப் பிரேரணையை வெற்றிகொள்வோம் என்று குறிப்பிட்டார்.

மேற்படி கவனயீர்ப்புப்போராட்டத்தில் முடிவில் வடக்கு, கிழக்கு முஸ்லிம் சம்மேளனத்தின் சார்பில் ஐக்கிய நாடுகள் அலுவலக அதிகாரிகளிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

அரசாங்கத்திற்கு ஆதரவாக வடக்கு, கிழக்கு முஸ்லிம் சம்மேளனம் ஐ.நா. அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி மட்டும் இலங்கை முஸ்லிம் சமுகம் தமிழ் மக்களுடன் இணைந்து பயணிக்கப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வாலி said:

கடைசி மட்டும் இலங்கை முஸ்லிம் சமுகம் தமிழ் மக்களுடன் இணைந்து பயணிக்கப்போவதில்லை.

இந்த அமைப்பு  முஸ்லிம் மக்களின் 100% ஆதரவு  உள்ள அமைப்பா?

  • கருத்துக்கள உறவுகள்

போரின்போது இராணுவத்துக்கு தோள் கொடுத்த சீருடையில்லா இராணுவ  துணைக்குழுக்கள் இவை. அவர்களே ஒத்துக்கொண்டிருக்கிறார்கள் தமது உதவியுடனேயே தமிழருக்கெதிரான போராட்டம் வெற்றியாய் முடித்து வைக்கப்பட்டது என. 
இனக்கலவரங்களின் போதும் சில குழுக்கள் கலவரக்காரருடன் இணைந்து தமிழரை கொள்ளையடித்தவர்கள். இவர்களுக்கு தோள்கொடுத்து, இவர்களை அண்டி வாழ்க்கை நடத்துவோர் எப்படி காட்டிக்கொடுக்க முடியும்.? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

கடைசி மட்டும் இலங்கை முஸ்லிம் சமுகம் தமிழ் மக்களுடன் இணைந்து பயணிக்கப்போவதில்லை.

இல்லை அப்படி எல்லாம் இல்லை.சேர்ந்து பயணிப்பார்கள். 😂

முகமதுவின் கொள்கைகளை பின்பற்றும் தமிழர்களை அது தான் முஸ்லிம்களை மதிக்க வேண்டியதும் அவர்களுக்காக அவர்கள் விருப்பங்களுக்கு குரல் கொடுப்பதும் இதர தமிழர்களின் கடமை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

கடைசி மட்டும் இலங்கை முஸ்லிம் சமுகம் தமிழ் மக்களுடன் இணைந்து பயணிக்கப்போவதில்லை.

இன்று யாழிலும் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

இது அரச ஏற்பாடு  

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

போரின்போது இராணுவத்துக்கு தோள் கொடுத்த சீருடையில்லா இராணுவ  துணைக்குழுக்கள் இவை. அவர்களே ஒத்துக்கொண்டிருக்கிறார்கள் தமது உதவியுடனேயே தமிழருக்கெதிரான போராட்டம் வெற்றியாய் முடித்து வைக்கப்பட்டது என. 

புளோட்டும், ஈ.பி.டி.பி.யும், கருணாவின் புலிகளும், குழந்தைகள் புலியின் அண்ணன் பிள்ளையானும் சீருடையணிந்த இராணுவ  துணைக்குழுக்களாகவா இருந்தார்கள்… கோவிக்க கூடாது, தெரியாததால் கேட்கிறேன். 😀

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்குத் தமது கண்டனத்தை வெளியிடும் வகையில் வடக்கு, கிழக்கு முஸ்லிம் சம்மேளனத்தினால் இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முசுலீம் அமைப்புகளில் ஏதாவது ஒன்று இந்த நிகழ்வுகளுக்கு எதிராக அறிக்கை விடுமானால்! அதற்குள் அல்லாவின் கோட்பாடுகளைப் பின்பற்றும் உண்மையான பக்தர்கள் இருப்பதாகக் கொள்ளலாம்.!!  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

புளோட்டும், ஈ.பி.டி.பி.யும், கருணாவின் புலிகளும், குழந்தைகள் புலியின் அண்ணன் பிள்ளையானும் சீருடையணிந்த இராணுவ  துணைக்குழுக்களாகவா இருந்தார்கள்… கோவிக்க கூடாது, தெரியாததால் கேட்கிறேன்

தெரிஞ்சதை தெரியாமற் கேட்கிறேன் என்று குசும்பு பண்ணக்கூடாது. இங்கு பேசுபொருள்:

 

12 hours ago, பிழம்பு said:

கிழக்கு முஸ்லிம் சம்மேளனத்தினால் இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.