Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநா தீர்மானம் சம்மந்தமாக நாட்டின் ஜனாதிபதி சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார் - கருணா அம்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கற்பகதரு said:

 

களைக்கு உரமூட்டி வளர்த்து நாடழிய காரணமானவர்களில் ஒருவராகவும் இருந்துவிட்டு, “அது என் தவறல்ல.” என்று எழுத எப்படி மனம் வருகிறது? அதற்கு விளக்கமாக தத்துவங்களும் சொல்கிறீர்கள்? கருணாவை கூட்டிக்கொண்டு திரிந்தது உங்கள் தவறல்ல என்றால், யாரின் தவறு அது? உங்களிடம் அனுப்பி கூட்டிக்கொண்டு திரியச்சொன்னவரின் தவறா? நாங்கள் கருணாவை வளர்த்து விடவும் இல்லை, அதற்கு ஒரு துளி பங்களிக்கவும் இல்லை - நீங்கள் செய்தது இமாலயத்தவறு. மற்றவர்கள்மீது உங்கள் தவறை போட்டுவிட்டு தத்துவம் பேசாமல், தவறு நடந்துவிட்டது, பிழை விட்டுவிட்டோம். எம்மால் மக்களும் நாடும் அழிந்துவிட்டது என்று சொல்லி வருந்துங்கள்- உங்கள் நேர்மையை  ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.

ஒரு தாய் தன் பிள்ளைகளை நல்லவனாக வளரவேண்டும் வாழ வேண்டும் என  எண்ணித்தான் வளர்த்தெடுப்பார். ஆனால் அந்த பிள்ளை வழி தவறி நடந்தால் தாயின் குற்றமா?

  • Replies 142
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, tulpen said:

முன்னர் பல தடவை குறிப்பிட்டது தான். இருந்தாலும் புரிந்தும்   புரியாதது போல் நீங்கள் ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்பதால்  மீண்டும் கூறுகிறேன். 

இது முழுக்க முழுக்க தமிழ் வாசகர்கள் தளம். எமது வீட்டுக்குள் எமது சொந்த தவறுகளால் எமக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்துதான் கருத்து தெரிவிப்பதும் விவாதிப்பதும்  வினை திறனானது. அதுவே எம்மை யோசிக்க வைக்கும்.  சிங்களவர் எவரும் இதனை வாசிக்காத போது அவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை இங்கு வைப்பது வினைதிறனானதல்ல. வேற்று மொழி நண்பர்கள் வாசிக்கும் தளமும் அல்ல. 

சரி நம்பிட்டம்

எங்கே எந்த வெளியே சிறீலங்கா அரசை விமர்சனம் செய்திருக்கிறீர்கள்??

நாங்களும் வாசிப்பமில்ல

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

மிக தெளிவாக “ கருணா தன்னிச்சையாக செய்ததாக நிறுவ முயற்சிக்கிறார்”,  என்று தமிழில்  எழுதியும் அதன் கருத்தை இப்படி திரிப்பது நேர்மையல்ல. அதாவது அவை கருணாவால் மட்டும்  தன்னிச்சையாக செய்யப்பட்டதல்ல என்பது தான் அந்த தமிழ் வாக்கியத்தின் பொருள். தமிழ் வசனங்களை வாசித்து அதன் பொருளை கிரகித்துக்  கொள்வது சிறந்த கருத்தாடலுக்கு மிக அவசியமானது. 

எங்களுக்கு விளங்குது கிரகித்தல் என்றால் ஆனால்  புலித்தலைவர்கள் மீதான காழ்ப்புணர்வு உங்களை விட்டு ஒருபோதும் போகப்போவதில்லை உங்களுக்காக இங்கு தேடி எடுத்து இணைப்பது வேண்டாத வேலை எனக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ?எல்லோரும் முரளிதரனை  கருணா...கருணா.....கருணா.....என்று  அவன் புலிகள்

இயக்கத்தை விட்டு வெளியேறிய பின்பும் அழைக்கிறார்கள். அது இயக்கப் பெயர் இயக்கத்திலிருக்குமட்டும்தான் பயன்படுத்த முடியும்.  இயக்கத்தை விட்டு வெளியேறியபின் பெற்றேர் வைத்த பெயரைப்  பயன் படுத்துவதுதான்சரியானமுறையாகும்.

 

புலியில் இருககுமட்டுத்தான்  கருணாவீரன்  எப்ப புலியைவிட்டு வெளியேறினனே அப்ப தொடக்கம் அவனை விட்டு வீரமும் வெளியேறிவிட்டது.இப்போ அவன் முரளிதரன் தான்  கருணா இலலை.

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

ஏன் ?எல்லோரும் முரளிதரனை  கருணா...கருணா.....கருணா.....என்று  அவன் புலிகள்

இயக்கத்தை விட்டு வெளியேறிய பின்பும் அழைக்கிறார்கள். அது இயக்கப் பெயர் இயக்கத்திலிருக்குமட்டும்தான் பயன்படுத்த முடியும்.  இயக்கத்தை விட்டு வெளியேறியபின் பெற்றேர் வைத்த பெயரைப்  பயன் படுத்துவதுதான்சரியானமுறையாகும்.

 

புலியில் இருககுமட்டுத்தான்  கருணாவீரன்  எப்ப புலியைவிட்டு வெளியேறினனே அப்ப தொடக்கம் அவனை விட்டு வீரமும் வெளியேறிவிட்டது.இப்போ அவன் முரளிதரன் தான்  கருணா இலலை.

 

தாக்குதலகளின் வெற்றிக்கு கருணா தான் காரணம்.....போராட்டத்தின் தோல்விக்கு 

பிரபாகரன் தான் காரணம்.....என்று..அனேகர். இங்கு பதிவுயிடுகிறார்கள்...ஆகவே

தோல்வி  இறந்துவிட்டது ...வெற்றி. உங்களுடனிருக்கிறது..என்று கருதலாமா?

54 minutes ago, விசுகு said:

சரி நம்பிட்டம்

எங்கே எந்த வெளியே சிறீலங்கா அரசை விமர்சனம் செய்திருக்கிறீர்கள்??

நாங்களும் வாசிப்பமில்ல

விசுகு,  எனது கருத்துக்கள் விவாதங்கள்  பொது வெளியில் வெளிப்படையானது. எந்தவொரு   அரசியல் அமைப்புக்கும் சார்பானதோ எதிரானதோ இல்லை. உங்களைப் பொறுத்தவரை அரசியல் தேசியம் என்றால் நீங்கள்  விசுவாசிக்கும் அமைப்பை  மட்டும் ஆரதிப்பதும் துதி பாடுவதும் மட்டும் தான். அதை தராளமாக செய்யுங்கள். அதற்கான உரிமை உங்களுக்கு உண்டு. 

அதே போல்  வெளிப்படையாக எத்த அமைப்பும் சாராது அரசியல் கருத்துக்களை பொது வெளியில் வைக்கும் உரிமையும் எனக்கு உண்டு.   

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 29/3/2021 at 22:29, கற்பகதரு said:

இவனை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து, தனது மெப்பாதுகாவலராக கூடவே வைத்திருந்து பின்னர் தென் தமிழீழத்துக்கே பொறுப்பாக்கி தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டார் —- யாரவர்?

உங்கள் கேள்வி எனக்கு கவலையளிக்கிறது ..பதில். பிரபாகரன்  ஒவ்வொரு தமிழ் இளைஞரின்  திறமையை இனம் கண்டு அதனைப்பயிற்ச்சி  அளிப்பதான் மூலம் 

வெளிப்படுத்தி உன்னால்  சிறந்த இராணுவ வீரனாய்ப் போரிடமுடியுமென  அந்த இளைஞனுக்கே புரிய வைத்தவாரல்  அந்த இளைஞர்களுக்கு முன்னாலும்...பின்னாலும் ..அல்லும்...பகலும்...திரியமுடியவில்லை

(இப்படி வந்த ஒர் இளைஞன் தான்  முரளிதரன்(கருணா))

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கற்பகதரு said:

வேறு என்னவெல்லாம் தலைவருக்கு தெரிந்திருக்கவில்லை என்றும் எழுதுங்கள்....சர்வதேச அரசியல்? புவிசார் அரசியல்? இராஜதந்திரம்? நிறுவன உளவியல்? தனிமனித உளவியல்? சமுக இயங்குமுறை? ஈழநாட்டின் வரலாறு? சிங்களவரின் சர்வதேச அணுகுமுறை?

ஆஹா ....தலைவருக்கு தெரியாத எல்லா அறிவும், அணுகுமுறையும் தெரிந்தவர். ஆனால் செயற்படுத்த முன்வராதவர், வந்தவருக்கு ஆணி அறைகிறார். கைதட்டுகள்! 

  • கருத்துக்கள உறவுகள்
On 29/3/2021 at 12:20, ரஞ்சித் said:

தமிழர் இனவரலாற்றில் இதுவரை கண்டிராத துரோகி. இந்தப் பிறப்பே இருந்திருக்கத் தேவையில்லை. இவனைப் பெற்ற தாய் கருத்தரிக்கமலேயே இறந்திருக்கலாம். இவனைப் பெற்று தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டாள்.

 

2 hours ago, குமாரசாமி said:

ஒரு தாய் தன் பிள்ளைகளை நல்லவனாக வளரவேண்டும் வாழ வேண்டும் என  எண்ணித்தான் வளர்த்தெடுப்பார். ஆனால் அந்த பிள்ளை வழி தவறி நடந்தால் தாயின் குற்றமா?

 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, tulpen said:

விசுகு,  எனது கருத்துக்கள் விவாதங்கள்  பொது வெளியில் வெளிப்படையானது. எந்தவொரு   அரசியல் அமைப்புக்கும் சார்பானதோ எதிரானதோ இல்லை. உங்களைப் பொறுத்தவரை அரசியல் தேசியம் என்றால் நீங்கள்  விசுவாசிக்கும் அமைப்பை  மட்டும் ஆரதிப்பதும் துதி பாடுவதும் மட்டும் தான். அதை தராளமாக செய்யுங்கள். அதற்கான உரிமை உங்களுக்கு உண்டு. 

அதே போல்  வெளிப்படையாக எத்த அமைப்பும் சாராது அரசியல் கருத்துக்களை பொது வெளியில் வைக்கும் உரிமையும் எனக்கு உண்டு.   

 

 

நீங்கள் தான் அப்படிச்சொல்கிறிர்கள். ஆனால் உங்கள் எழுத்துக்கள் அப்படிச்சொல்லாவில்லை...விசுகரின் ...கேள்விககு...உங்கள்  பதில்.   எங்கே. போகிறிர்கள் என்று கேட்டால் பையில். நாலு தேங்காய். என்பது போலிருககிறது. 

அவர் கேட்டது இதுவரை. இலங்கையை விமர்சித்திருந்தால்  அதனைப்பதியும்படி ...என்ன செய்வது. நான் விமர்சிக்கவிலலையெனக் உங்களால் துணிவுடன் கூறமுடியவிலலை...

1 hour ago, பெருமாள் said:

எங்களுக்கு விளங்குது கிரகித்தல் என்றால் ஆனால்  புலித்தலைவர்கள் மீதான காழ்ப்புணர்வு உங்களை விட்டு ஒருபோதும் போகப்போவதில்லை உங்களுக்காக இங்கு தேடி எடுத்து இணைப்பது வேண்டாத வேலை எனக்கு .

இங்கு காழ்புணர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற பல சம்பவங்களை குறிப்பிட்டு அதனை கருணா தன்னிச்சையாக செய்ததாக ரஞ்சித் குறிப்பிட்ட போது இல்லை அப்படி தன்னிச்சையாக செய்திருக்க சாத்தியம் இல்லை என்று மட்டுமே நான் குறிப்பிட்டேன். அவ்வாறு கூறியது காழ்புணர்வா?  அதற்காக கருணாவுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் அந்த பெரிய சம்பவங்களை செய்ய அவரால் தனித்து முடிவெடுத்திருக்க முடியாது என்பது சாதாரணமாக எல்லோருக்கும்  தெரிந்த விடயம். 

Edited by tulpen
எழுத்துப் பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

எப்படி பத்மநாபா இந்திய இராணுவத்துடன் இணைந்து செய்ததா???? 😁

தலைவர் எவருடனும் சேராமல் செய்த முள்ளிவாய்க்கால் சாதனையிலும் பார்க்க பத்மநாபா எதையும் மோசமாக செய்யவில்லை. தலைவரின் சாதனை மக்களையும் சொத்துக்களையும் ஒட்டுமொத்தமாக அழித்து எல்லோரையும் அடிமைகளிலும் கேவலமாக வாழ்ந்து மடிய வைத்ததன்றி வேறெதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kandiah57 said:

உங்கள் கேள்வி எனக்கு கவலையளிக்கிறது ..பதில். பிரபாகரன்  ஒவ்வொரு தமிழ் இளைஞரின்  திறமையை இனம் கண்டு அதனைப்பயிற்ச்சி  அளிப்பதான் மூலம் 

வெளிப்படுத்தி உன்னால்  சிறந்த இராணுவ வீரனாய்ப் போரிடமுடியுமென  அந்த இளைஞனுக்கே புரிய வைத்தவாரல்  அந்த இளைஞர்களுக்கு முன்னாலும்...பின்னாலும் ..அல்லும்...பகலும்...திரியமுடியவில்லை

(இப்படி வந்த ஒர் இளைஞன் தான்  முரளிதரன்(கருணா))

ம் .... தலைவர் பள்ளிக்கூட வாத்தி போல இருந்தவர் என்கிறீர்கள். இராணுத்தலைவர்களும் அரசுகளின் தலைவர்களும் சிறந்த புலனாய்வு துறைகளை அமைத்து அவற்றின் உதவியோடு துரோகிகளையும் எதிரிகளையும் வேர்விட முதல் அகற்றிவிடுவர்கள். இந்த பள்ளிக்கூட வாத்தி துரோகளின் பின்னால் அலைய முடிவில்லை என்று மக்களை முள்ளிவாய்க்காலில் காவு கொடுத்துவிட்டார். குறைந்தது கோத்தபாயாவின் புலனாய்வு துறையை பார்த்தாவது தமக்கும் ஒன்றை உருப்படியாக அமைத்திருக்கலாம், ஆனால் பள்ளிக்கூட வாத்தியார் போல செயற்பட்டவருக்கு அது புரிந்திருக்கும் சாத்தியமில்லை என்பதும் உண்மையே. நன்றி விளக்கத்துக்கு.

30 minutes ago, satan said:

ஆஹா ....தலைவருக்கு தெரியாத எல்லா அறிவும், அணுகுமுறையும் தெரிந்தவர். ஆனால் செயற்படுத்த முன்வராதவர், வந்தவருக்கு ஆணி அறைகிறார். கைதட்டுகள்! 

 

6 hours ago, கற்பகதரு said:

 

செய்ய முயன்றவர்கள் சிலர் இங்கே.

K._Pathmanabha.jpg

 

https://en.m.wikipedia.org/wiki/Sri_Sabaratnam#/media/File%3ASri_Sabaratnam.jpg

http://dbsjeyaraj.com/dbsj/wp-content/uploads/2018/04/NT.png
 

களை வளர்த்த விவசாயி மற்ற விவசாயிகளை கொன்றளித்ததை வரலாறு மறக்கவில்லை.

 

 

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, கற்பகதரு said:

தலைவர் எவருடனும் சேராமல் செய்த முள்ளிவாய்க்கால் சாதனையிலும் பார்க்க பத்மநாபா எதையும் மோசமாக செய்யவில்லை. தலைவரின் சாதனை மக்களையும் சொத்துக்களையும் ஒட்டுமொத்தமாக அழித்து எல்லோரையும் அடிமைகளிலும் கேவலமாக வாழ்ந்து மடிய வைத்ததன்றி வேறெதுமில்லை.

அவர்கள் வளர்த்த கட்சிகள் பிளட் உட்பட இன்றுவரை என்ன செய்கின்றன? அல்லது என்ன செய்தார்கள்? சும்மா மாற்றுக்கருத்து எனும் போர்வையில் உங்கள் சாயத்தை மற்றவர்கள் மீது பூசாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கற்பகதரு said:

ம் .... தலைவர் பள்ளிக்கூட வாத்தி போல இருந்தவர் என்கிறீர்கள். இராணுத்தலைவர்களும் அரசுகளின் தலைவர்களும் சிறந்த புலனாய்வு துறைகளை அமைத்து அவற்றின் உதவியோடு துரோகிகளையும் எதிரிகளையும் வேர்விட முதல் அகற்றிவிடுவர்கள். இந்த பள்ளிக்கூட வாத்தி துரோகளின் பின்னால் அலைய முடிவில்லை என்று மக்களை முள்ளிவாய்க்காலில் காவு கொடுத்துவிட்டார். குறைந்தது கோத்தபாயாவின் புலனாய்வு துறையை பார்த்தாவது தமக்கும் ஒன்றை உருப்படியாக அமைத்திருக்கலாம், ஆனால் பள்ளிக்கூட வாத்தியார் போல செயற்பட்டவருக்கு அது புரிந்திருக்கும் சாத்தியமில்லை என்பதும் உண்மையே. நன்றி விளக்கத்துக்கு.

 

 

உங்களுக்கு  விளங்கிய மாதிரித்தெரியவில்லை ....எனவே. நாளைய. வகுப்புக்கும்....வரவும்..

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, tulpen said:

கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற பல சம்பவங்களை குறிப்பிட்டு அதனை கருணா தன்னிச்சையாக செய்ததாக ரஞ்சித் குறிப்பிட்ட போது இல்லை அப்படி தன்னிச்சையாக செய்திருக்க சாத்தியம் இல்லை என்று மட்டுமே நான் குறிப்பிட்டேன்

வி. முரளிதரன்மேல்  தலைவருக்கு இருந்த அதீத நம்பிக்கை அதை பயன்படுத்தி இந்த கருநாகம் ஆடிய ஆட்டம் தெரிய வந்து விசாரிக்க அழைத்த போது, அதுக்கு தெரிந்தது இனிமேலும் தாக்குபிடிக்கவோ, ஆட்டத்தை தொடரவோ முடியாதென்கிற சூழ்நிலையில் ஆட்டத்திலிருந்து விலகி குறுக்காலை ஓடி எல்லோருக்கும் குழி வெட்டி தான் தப்பித்துக்கொண்டது. தான் பெயர் எடுப்பதற்காக போராட்ட காலத்தில்  எத்தனை போராளிகளை, தளபதிகளை விலை கொடுத்திருக்குமோ? தலைவருக்காக உயிரை விட வேண்டியது  பதவிக்காக தலைவரை விலை பேசியது  தான் இதன் சாதனை. அதற்காக சிங்களத்திடம் பட்டமும், பதவியும் பெற்றுக்கொண்டது. அதனை சாதனையாக கொள்பவர்கள் நீதிநெறி தெரியாதோர். அது தெரிந்தோர் இந்த கருநாகத்தை எதிர்ப்பர்.  

32 minutes ago, Kandiah57 said:

நீங்கள் தான் அப்படிச்சொல்கிறிர்கள். ஆனால் உங்கள் எழுத்துக்கள் அப்படிச்சொல்லாவில்லை...விசுகரின் ...கேள்விககு...உங்கள்  பதில்.   எங்கே. போகிறிர்கள் என்று கேட்டால் பையில். நாலு தேங்காய். என்பது போலிருககிறது. 

அவர் கேட்டது இதுவரை. இலங்கையை விமர்சித்திருந்தால்  அதனைப்பதியும்படி ...என்ன செய்வது. நான் விமர்சிக்கவிலலையெனக் உங்களால் துணிவுடன் கூறமுடியவிலலை...

கந்தையா ஒரு புலம் பெயர் தமிழனாக எல்லோரையும் போல்  இலங்கை  அரசின் அடக்கு முறைக்கு  எதிரான தமிழர் போராட்டத்திற்கு  பங்களிப்பை செய்ததை பொது வெளியில் கூறவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.  அரசியல் விவாதத்தில்  தவறுகளை ஒருவர் சுட்டி க்காட்டினால் அதற்கு பதிலளிக்கலாம் அல்லது மௌனமாக  கடந்து செல்லலாம். ஆனால் கூறிய தவறுகளை மறுக்காமல் இலங்கை அரசை இங்கு விமர்சித்தால் மட்டுமே  புலிகளை விமர்சிக்க முடியும் என்ற ரீதியில் விசுகு கூறியதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.  இது தமிழ்தளம் இதற்குள் எமது பக்க தவறுகளை மட்டும் விவாதிப்பதே வினை திறனானது என்பதே எனது வாதம். 

 விசுகுவின் பிரச்சனை வேறு. அதை அவருக்கான பதிலில் குறிப்பிட்டுவிட்டேன்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கற்பகதரு said:

ம் .... தலைவர் பள்ளிக்கூட வாத்தி போல இருந்தவர் என்கிறீர்கள். இராணுத்தலைவர்களும் அரசுகளின் தலைவர்களும் சிறந்த புலனாய்வு துறைகளை அமைத்து அவற்றின் உதவியோடு துரோகிகளையும் எதிரிகளையும் வேர்விட முதல் அகற்றிவிடுவர்கள். இந்த பள்ளிக்கூட வாத்தி துரோகளின் பின்னால் அலைய முடிவில்லை என்று மக்களை முள்ளிவாய்க்காலில் காவு கொடுத்துவிட்டார். குறைந்தது கோத்தபாயாவின் புலனாய்வு துறையை பார்த்தாவது தமக்கும் ஒன்றை உருப்படியாக அமைத்திருக்கலாம், ஆனால் பள்ளிக்கூட வாத்தியார் போல செயற்பட்டவருக்கு அது புரிந்திருக்கும் சாத்தியமில்லை என்பதும் உண்மையே. நன்றி விளக்கத்துக்கு.

 

 

உங்கள் நக்கல் நளினங்களை தலைவரில் வேண்டம், மரியாதை கொடுத்து பதியவும்.

எத்தனையோ நாடுகளின் உதவியுடன் அழிக்கப்பட்ட போராட்டத்தை இப்படி நீங்கள் தலைவரில் மட்டும் பழி போடுவதைவிட்டுவிட்டு, உங்களை நோக்கியும் கேள்விநை கேளுங்கள்

5 minutes ago, satan said:

வி. முரளிதரன்மேல்  தலைவருக்கு இருந்த அதீத நம்பிக்கை அதை பயன்படுத்தி இந்த கருநாகம் ஆடிய ஆட்டம் தெரிய வந்து விசாரிக்க அழைத்த போது, அதுக்கு தெரிந்தது இனிமேலும் தாக்குபிடிக்கவோ, ஆட்டத்தை தொடரவோ முடியாதென்கிற சூழ்நிலையில் ஆட்டத்திலிருந்து விலகி குறுக்காலை ஓடி எல்லோருக்கும் குழி வெட்டி தான் தப்பித்துக்கொண்டது. தான் பெயர் எடுப்பதற்காக போராட்ட காலத்தில்  எத்தனை போராளிகளை, தளபதிகளை விலை கொடுத்திருக்குமோ? தலைவருக்காக உயிரை விட வேண்டியது  பதவிக்காக தலைவரை விலை பேசியது  தான் இதன் சாதனை. அதற்காக சிங்களத்திடம் பட்டமும், பதவியும் பெற்றுக்கொண்டது. அதனை சாதனையாக கொள்பவர்கள் நீதிநெறி தெரியாதோர். அது தெரிந்தோர் இந்த கருநாகத்தை எதிர்ப்பர்.  

மன்னிக்க வேண்டும்  சாத்தான் உங்கள் பதிலுடன் ஒத்துப் போக முடியவில்லை. ரஞ்சித் மேற்கோள் காட்டிய அனைத்தும் நடைபெற்றது 1990 களின் ஆரம்பத்தில்.  அத்தனையும் விடுதலைப்புலிகளுக்கு களங்கம் ஏற்படுத்திய சம்பவங்கள்.  அதன் பின்னர் வன்னியில் நடைபெற்ற பல இராணுவ நடவடிக்கைகளில் கருணா பங்கு பற்றினார்.  

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கற்பகதரு said:

ம் .... தலைவர் பள்ளிக்கூட வாத்தி போல இருந்தவர் என்கிறீர்கள். இராணுத்தலைவர்களும் அரசுகளின் தலைவர்களும் சிறந்த புலனாய்வு துறைகளை அமைத்து அவற்றின் உதவியோடு துரோகிகளையும் எதிரிகளையும் வேர்விட முதல் அகற்றிவிடுவர்கள். இந்த பள்ளிக்கூட வாத்தி துரோகளின் பின்னால் அலைய முடிவில்லை என்று மக்களை முள்ளிவாய்க்காலில் காவு கொடுத்துவிட்டார். குறைந்தது கோத்தபாயாவின் புலனாய்வு துறையை பார்த்தாவது தமக்கும் ஒன்றை உருப்படியாக அமைத்திருக்கலாம், ஆனால் பள்ளிக்கூட வாத்தியார் போல செயற்பட்டவருக்கு அது புரிந்திருக்கும் சாத்தியமில்லை என்பதும் உண்மையே. நன்றி விளக்கத்துக்கு.

ஆடத் தெரியாதவள் அரங்கு பிழை என்றாளாம். இலங்கை அரசு புலிகள் இருந்த காலத்தில் சர்வதேசத்துக்கு கூறிய காரணம்: நாட்டில் அமைதி சமாதானத்தை புலிகளே குழப்புகிறார்கள், அவர்களை அழித்த பின் நாட்டில் அவை கட்டியெழுப்பப்படும். இப்போ நீ சொன்னதை நிறைவேற்று என்று கேட்டால் கையை விரிக்குது இலங்கை. அதனிடம் அன்றும் தீர்வு இருக்கவில்லை, இன்றும் இல்லை. வெறுங்கை முளமிடுமா? புலிகள் அதை செய்தார்கள், இதை செய்யவில்லை என்று பாடம் எடுப்பவர்கள் ஒரு அடிதானும் நகரவில்லை அவர்கள் விட்டு இடத்திலிருந்து. அவர்கள், ஊமையாக அழிந்து கொண்டிருந்த எம்மினத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள். அதை தொடர முடியாமல் இன்றும் குறை பிடித்துக்கொண்டிருக்கிறோம். 

 

 

10 minutes ago, tulpen said:

மன்னிக்க வேண்டும்  சாத்தான் உங்கள் பதிலுடன் ஒத்துப் போக முடியவில்லை. ரஞ்சித் மேற்கோள் காட்டிய அனைத்தும் நடைபெற்றது 1990 களின் ஆரம்பத்தில்.  அத்தனையும் விடுதலைப்புலிகளுக்கு களங்கம் ஏற்படுத்திய சம்பவங்கள்.  அதன் பின்னர் வன்னியில் நடைபெற்ற பல இராணுவ நடவடிக்கைகளில் கருணா பங்கு பற்றினார்.  

துரோகம் என்பது ஒருநாளிலோ, ஒரு இரவிலோ  நடைபெறுவதில்லை. அதற்க்கு காலம், சந்தர்ப்பம், ஆதாரம் என்பன தேவைப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, உடையார் said:

உங்கள் நக்கல் நளினங்களை தலைவரில் வேண்டம், மரியாதை கொடுத்து பதியவும்.

எத்தனையோ நாடுகளின் உதவியுடன் அழிக்கப்பட்ட போராட்டத்தை இப்படி நீங்கள் தலைவரில் மட்டும் பழி போடுவதைவிட்டுவிட்டு, உங்களை நோக்கியும் கேள்விநை கேளுங்கள்

நாடு அமைக்க தலைமை வகித்தவருக்கு, மற்ற அமைப்புக்களை அழித்து நாம் தான் நாடமைப்போம் என்று மேலாண்மை செய்தவருக்கு, மற்ற நாடுகளை கையாளத தெரியாவிட்டால், மற்ற அமைப்புகளிடம் அந்த நாடமைக்கும்வேலையை விட்டுருக்க வேண்டும்.

On 29/3/2021 at 21:20, ரஞ்சித் said:

தமிழர் இனவரலாற்றில் இதுவரை கண்டிராத துரோகி. இந்தப் பிறப்பே இருந்திருக்கத் தேவையில்லை. இவனைப் பெற்ற தாய் கருத்தரிக்கமலேயே இறந்திருக்கலாம். இவனைப் பெற்று தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டாள்.

 

3 hours ago, குமாரசாமி said:

ஒரு தாய் தன் பிள்ளைகளை நல்லவனாக வளரவேண்டும் வாழ வேண்டும் என  எண்ணித்தான் வளர்த்தெடுப்பார். ஆனால் அந்த பிள்ளை வழி தவறி நடந்தால் தாயின் குற்றமா?

இந்த திரியில்  மிகச்சிறந்த இரண்டு கருத்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

அவர்கள் வளர்த்த கட்சிகள் பிளட் உட்பட இன்றுவரை என்ன செய்கின்றன? அல்லது என்ன செய்தார்கள்? சும்மா மாற்றுக்கருத்து எனும் போர்வையில் உங்கள் சாயத்தை மற்றவர்கள் மீது பூசாதீர்கள்.

அவர்கள் எவரும் கட்சிகள் வளர்க்கவில்லை. தலைவர் அவர்களுடைய அமைப்புகளை கொன்றழித்த பிறகு மிஞ்சியவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்து விட்டார்கள். சிறிலங்கா அரசு தனது தேவைக்காக அவர்களை அரசியல்கட்சிகளாக அமைத்து வைத்திருக்கிறது. பாதுகாப்பும் சம்பளமும் அவர்களுக்கு கிடைக்க அவர்களும் விடுதலைப்புலிகளை காட்டிக் கொடுத்தார்கள். இதுதான் இன்றுவரை அவர்கள் செய்வது. மக்களை பொறுத்தளவில், தலைவர் ஆயுதமுனையில் மற்றவர்களை அழித்து மக்களை பொறுப்பெடுத்து பின்னர் தோற்று, மக்களையும் சொத்துக்களையும் அழித்துவிட்டார். இன்றும் இனிமேலும் எதுவும் இல்லை, தலைமை வகிக்கவோ, வழிகாட்டவோ எவரும் இல்லை.

14 minutes ago, கற்பகதரு said:

நாடு அமைக்க தலைமை வகித்தவருக்கு, மற்ற அமைப்புக்களை அழித்து நாம் தான் நாடமைப்போம் என்று மேலாண்மை செய்தவருக்கு, மற்ற நாடுகளை கையாளத தெரியாவிட்டால், மற்ற அமைப்புகளிடம் அந்த நாடமைக்கும்வேலையை விட்டுருக்க வேண்டும்.

உங்கள் கருத்தில் சற்று முரண்படுகிறேன். தமிழ் ஈழம் என்பது சாத்தியமாகாது என்ற உண்மையை உரிய வேளையில் உணர்ந்திருக்க வேண்டும் என்பதே எனது பார்வை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

தலைவர் எவருடனும் சேராமல் செய்த முள்ளிவாய்க்கால் சாதனையிலும் பார்க்க பத்மநாபா எதையும் மோசமாக செய்யவில்லை. தலைவரின் சாதனை மக்களையும் சொத்துக்களையும் ஒட்டுமொத்தமாக அழித்து எல்லோரையும் அடிமைகளிலும் கேவலமாக வாழ்ந்து மடிய வைத்ததன்றி வேறெதுமில்லை.

உங்களுடைய பிரச்சனையே வேறு.

பத்மநாபா 87-89 வரை செய்த விவசாயத்தை நீங்கள் அனுபவிக்கவில்லை. அது தொடர்ந்திருந்தால் வட கிழக்கு பகுதி எப்பவோ சுடுகாடாயிருக்கும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.