Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பற்றி இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • ரஞ்சன் அருண்பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக

இன்னும் சில நாள்களில் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இலங்கைத் தமிழர்கள் இந்தத் தேர்தல் குறித்து என்ன கருதுகிறார்கள் என்று ஆராய்ந்தது பிபிசி தமிழ்.

இலங்கை தமிழர் தொடர்பிலான பிரச்னை இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் செல்வாக்கு செலுத்திவந்த நிலையில் அது தற்போது இந்தியாவின் வட பகுதி வரை ஆக்கிரமித்துள்ளதாக இலங்கையின் அரசியல் விமர்சகரான கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவிக்கிறார்.

பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

'இன்று இந்தியப் பிரதமர், இலங்கைக்கு வருவது, தனக்கு பெருமை என சொல்வதை விட, இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு வருவது பெருமை என்று சொல்லியிருப்பது இந்த மாற்றத்தைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

ஜனகன் விநாயகமூர்த்தி
 
படக்குறிப்பு,

ஜனகன் விநாயகமூர்த்தி

இலங்கை தொடர்பிலான பிரச்சினைகளை, தமிழக முன்னாள் தலைவர்கள், தேர்தல் காலப் பகுதியில் அடுக்கு மொழிகளில் பேசுவது வழக்கமாக வைத்திருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

அதேபோன்று, இன்றைய தலைவர்களாக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின் போன்றவர்களும் ஈழத் தமிழர் பிரச்சினைகளை, தேர்தல் மேடைகளில் பேசி வருவதாக அவர் தெரிவிக்கிறார்.

தமிழகத்தில் அகதிகளாக இருக்கக்கூடிய ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொடுப்பது, இந்த முறை தமிழக தேர்தல் களத்தில் முக்கிய கருப் பொருளாக மாறியுள்ளது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்த இலங்கை தமிழர்களின் பார்வை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா, இலங்கையில் தங்களுடைய நல்லிணக்கத்தை கொண்டு வர வேண்டும் என்றால், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு தங்களுடைய ஆதரவு இருக்கு என்பதை ஆணித்தனமாக சொல்ல வேண்டிய தேவைப்பாடு புவியியல் ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

தமிழகத்தில் இருந்த திராவிட கட்சிகள் மாத்திரமன்றி, இன்று போட்டியிடுகின்ற மக்கள் நீதி மய்யம் கூட, ஈழத் தமிழர் பிரச்சினையில் அதிக அக்கறை கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றது என அவர் கூறுகின்றார்.

இலங்கை தமிழ் ஊடகவியலாளரின் பார்வை

தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பில் இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஆர்.சிவராஜாவிடம் பிபிசி தமிழ் வினவியது.

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் கடந்த 10 வருட காலமாக தமிழகத்திலிருந்து பெரிதாக குரல் எழுப்பப்படவில்லை என மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கிறார்.

ஆர்.சிவராஜா
 
படக்குறிப்பு,

ஆர்.சிவராஜா

இவ்வாறான நிலையில், இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் மாற்றமொன்று ஏற்பட்டு, அதனூடாக இலங்கை தமிழர் பிரச்சினையில் புதியதொரு மாற்றம் ஏற்படலாம் என அவர் கூறுகிறார்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க கடந்த காலங்களில் சட்ட சபையில் தீர்மானங்களை நிறைவேற்றியிருந்ததாக கூறும் அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அவ்வாறான திட்டகாத்திரமான தீர்மானங்களை எடுத்ததாக தெரியவில்லை என குறிப்பிடுகிறார்.

இலங்கை பிரச்சினையில் தற்போது ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இவ்வாறான நிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்தால், ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ஸ்டாலின் கடுமையான நெருக்கடிகளை கொடுப்பார் என மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கிறார்.

அதேபோன்று, மீனவப் பிரச்சினையிலும் மத்திய அரசு, இலங்கையுடன் நட்புறவு அடிப்படையில் தீர்வுகளை எடுத்து வருவதாக அவர் கூறுகின்றார்.

இந்த பின்னணியில், மீனவப் பிரச்சினையிலும், ஸ்டாலினின் அழுத்தம் மிக கடுமையாக இருக்கும் என அவர் குறிப்பிடுகிறார்.

அதேபோல, இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வு வர வேண்டும் என்பதை ஸ்டாலின் வலியுறுத்துவார் என அவர் தெரிவிக்கிறார்.

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து, ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் தொடர்ச்சியாக ஏதோ வகையில் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்த வண்ணமே இருந்ததாக கூறும் அவர், தற்போதைய தலைவர்கள் அவ்வாறான அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என குறிப்பிடுகிறார்.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் போன்று, இலங்கை தமிழர் தொடர்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரிய அளவிலான நெருக்குதல்களை கொடுக்கவில்லை என அவர் கூறுகின்றார்.

எனினும், ஸ்டாலின் இலங்கை தமிழர் பிரச்சினையில் சற்று முன்னோக்கிய நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கிறார்.

இலங்கை தமிழர்களின் பார்வை

பிரேம்
 
படக்குறிப்பு,

பிரேம்

தமிழக சட்ட மன்றத் தேர்தல் தொடர்பில் இலங்கை வாழ் தமிழ் மக்களின் கருத்துக்களையும் கேட்டோம்.

தற்போது இலங்கை தொடர்பில் பேசுபவர்கள், ஆட்சிக்கு வந்ததன் பின்னர், உறுதி மொழிகளை நிறைவேற்றுவார்களா என்ற கேள்வியை மனதில் எழுகின்றது என கொழும்பு - வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த பிரேம் தெரிவிக்கிறார்.

எங்களுடைய கைகளை நாங்களே நம்பி இருக்க வேண்டிய நிலைமையே காணப்படுகிறது எனவும் அவர் கூறுகின்றார்.

தனக்கு அரசியல்வாதிகளின் கருத்துக்கள் மீது நம்பிக்கை கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

இதேவேளை, மற்றுமொரு தமிழரும் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

புஷ்பநாதன்
 
படக்குறிப்பு,

புஷ்பநாதன்

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இலங்கை அரசியல்வாதிகளினாலேயே தீர்வை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்ற நிலையில், இந்திய அரசியல்வாதிகளினால் அதனை எவ்வாறு தீர்க்க முடியும் என அவர் கேட்கிறார்.

ஜெயலலிதா, கருணாநிதி கூறிய விடயங்களையே, இன்று வரை கூறி வருவதாகவும், ஆனால் தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் மலையகத்தைச் சேர்ந்த புஷ்பநாதன் தெரிவிக்கிறார்.

சதிஷ்
 
படக்குறிப்பு,

சதிஷ்

தேர்தல் காலப் பகுதியிலாவது, இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேசுவது வரவேற்கத்தக்கது என கிளிநொச்சியைச் சேர்ந்த சதிஷ் தெரிவிக்கிறார்.

இந்தியாவில் வழங்கப்படும் வாக்குறுதிகள் இலங்கையில் தாக்கத்தை செலுத்தாது என்ற போதிலும், இந்திய அரசியலில் மாத்திரமே அது தாக்கத்தை செலுத்தி வருவதாகவும் கூறுகிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பற்றி இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன? - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சனம் கெட்டிக்காறர்கள் தான்

ஒருத்தரும் சீமான் பெயரை உச்சரிக்க கூட இல்லை

ஊரில இருக்கின்ற ஒருத்தரும் சீமானை கணக்கெடுப்பதும் இல்லை. படிச்ச சனம் படிச்ச சனம் தான்.

முதல் வெடி வெடிக்க முன் ஊரை விட்டு கிளம்பியவர்களும்
அப்படி கிளம்பியும் ஊரில காணியை வைச்சு கொண்டு அதன் பெறுமதி கூடிக் குறைவதை பார்த்து வியர்த்து கொட்டுகின்றவர்களும்
தனித் தமிழ் என்றதற்காக சீமான ஒரு பக்கத்தால ஆதரிச்சுக் கொண்டு
**********

அப்ப நான் வரட்டே

Edited by நிழலி
தனி மனித தாக்குதல் நீக்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வைரவன் said:

எங்கட சனம் கெட்டிக்காறர்கள் தான்

ஒருத்தரும் சீமான் பெயரை உச்சரிக்க கூட இல்லை

ஊரில இருக்கின்ற ஒருத்தரும் சீமானை கணக்கெடுப்பதும் இல்லை. படிச்ச சனம் படிச்ச சனம் தான்.

முதல் வெடி வெடிக்க முன் ஊரை விட்டு கிளம்பியவர்களும்
அப்படி கிளம்பியும் ஊரில காணியை வைச்சு கொண்டு அதன் பெறுமதி கூடிக் குறைவதை பார்த்து வியர்த்து கொட்டுகின்றவர்களும்
தனித் தமிழ் என்றதற்காக சீமான ஒரு பக்கத்தால ஆதரிச்சுக் கொண்டு
தெலுங்கு மலையாள சஞ்சிகைகளை லண்டனில பாரிசில விற்கின்றவர்களும் தான் அவர தூக்கிப் பிடிக்கினம் பாருங்கோ

அப்ப நான் வரட்டே

உங்கள் அறிவோ, அறிவு.... இதை எங்களுக்கு போதனை செய்யவே கிளம்பி வந்தனியள்?

பிரபாகரன் மற்றும் சீமான் பெயரை யாராவதும் ஊரிலை உச்சரித்தால், நாலாம் மாடி தான் எண்டு தெரியுமா? இது தெரியாமல்.... என்னத்தை எழுதுறியளோ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Nathamuni said:

உங்கள் அறிவோ, அறிவு.... இதை எங்களுக்கு போதனை செய்யவே கிளம்பி வந்தனியள்?

பிரபாகரன் மற்றும் சீமான் பெயரை யாராவதும் ஊரிலை உச்சரித்தால், நாலாம் மாடி தான் எண்டு தெரியுமா? இது தெரியாமல்.... என்னத்தை எழுதுறியளோ?

ஊரில இருந்து தலைவரின் படத்தில் இருந்து போராளிகளின் வீரவணக்கம் வரைக்கும் முக நூலில் போடும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர் தெரியுமா?

ஜெரா தம்பி, காவலூர் அகிலன், தீபச்செல்வன், பிரின்ஸ் காசினாதர், சுப்பிரமணிய பிரபா போன்ற ஆட்களின் பெயர்களை எப்பவாவது கேள்விப்பட்டிருக்கியலோ

தலைவரின் படத்தை போட்டதால பேசு புக்கு முடக்கப்பட்ட பலர் அங்குதான் அண்ணை உள்ளனர்.

இடைக்கிடை ஊர்ச் செய்திகளையும் பாருங்கோ.

இலவசக் கல்வியில் பயின்ற பாசம் மட்டும் இருந்துட்டால் போதாது பாருங்கோ ஊர்ச் செய்திகளையும் பார்க்க வேண்டும்.

யதார்த்தம் என்னவென்றால் ஊரில ஒருவரும் சீமானை கணக்கெடுப்பதில்லை என்பது தான். முதல் வெடிக்கு முன் ஓடி வந்தவர்கள் தான் காவிக் கொண்டு திரிகினம்.

இந்த உண்மை சகக்கும் தான் பிரோ.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வைரவன் said:

ஊரில இருந்து தலைவரின் படத்தில் இருந்து போராளிகளின் வீரவணக்கம் வரைக்கும் முக நூலில் போடும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர் தெரியுமா?

ஜெரா தம்பி, காவலூர் அகிலன், தீபச்செல்வன், பிரின்ஸ் காசினாதர், சுப்பிரமணிய பிரபா போன்ற ஆட்களின் பெயர்களை எப்பவாவது கேள்விப்பட்டிருக்கியலோ

தலைவரின் படத்தை போட்டதால பேசு புக்கு முடக்கப்பட்ட பலர் அங்குதான் அண்ணை உள்ளனர்.

இடைக்கிடை ஊர்ச் செய்திகளையும் பாருங்கோ.

இலவசக் கல்வியில் பயின்ற பாசம் மட்டும் இருந்துட்டால் போதாது பாருங்கோ ஊர்ச் செய்திகளையும் பார்க்க வேண்டும்.

யதார்த்தம் என்னவென்றால் ஊரில ஒருவரும் சீமானை கணக்கெடுப்பதில்லை என்பது தான். முதல் வெடிக்கு முன் ஓடி வந்தவர்கள் தான் காவிக் கொண்டு திரிகினம்.

இந்த உண்மை சகக்கும் தான் பிரோ.

தகவலை சரியாக பதியுங்கள். சும்மா பத்தி, பத்தியாக பதிந்து பிரயோசனம் இல்லை.

பிரபாகரன் குறித்து பதிந்த 30 பேர் கைதாகி உள்ளனர். இது குறித்து சாணக்கியன் பாராளுமன்றிலேயே பேசி உள்ளார். 

போனவாரம் யாழ்ப்பாணத்தில், புலிகள் குறித்த பதிவுகளால் இருவர் கைது.

http://www.dailymirror.lk/breaking_news/Two-arrested-in-Jaffna-for-operating-website-promoting-LTTE/108-208840

நீங்கள் எத்திணையாவது வெடிக்கு கிளம்பினீர்கள்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

தகவலை சரியாக பதியுங்கள். சும்மா பத்தி, பத்தியாக பதிந்து பிரயோசனம் இல்லை.

பிரபாகரன் குறித்து பதிந்த 30 பேர் கைதாகி உள்ளனர். இது குறித்து சாணக்கியன் பாராளுமன்றிலேயே பேசி உள்ளார். 

போனவாரம் யாழ்ப்பாணத்தில், புலிகள் குறித்த பதிவுகளால் மூவர் கைது.

http://www.dailymirror.lk/breaking_news/Two-arrested-in-Jaffna-for-operating-website-promoting-LTTE/108-208840

நீங்கள் எத்திணையாவது வெடிக்கு கிளம்பினீர்கள்?

ஆக

தலைவரை குறித்து அங்கு இன்னும் எழுதுகின்றார்கள் தானே?
புலிகளை பற்றி எழுதுகின்றனர் தானே
நீங்கள் சொன்ன மாதிரி எழுதாமல் இல்லையே

நான் முதல் வெடிக்கும்
இரண்டாம் வெடிக்கும்
இடையில் கிளம்பினனான்

ஆனால் கிளம்பி வந்து
தமிழக சீமான்களுக்கு
காவடி தூக்கவில்லை

அது சரி

ஆகக் குறைஞ்சது தலைவர் என்று கூட அவரை குறிப்பிட மாட்டீர்களா?
வெறுமனே அவர் பெயரை தான் குறிப்பிடுவீர்களா?
அந்தளவுக்கு அவர் மரியாதைக்குரியவர் இல்லையா?


சீமான் தான் உங்கள் தலைவர் ஆச்சே

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வைரவன் said:

ஆக

தலைவரை குறித்து அங்கு இன்னும் எழுதுகின்றார்கள் தானே?
புலிகளை பற்றி எழுதுகின்றனர் தானே
நீங்கள் சொன்ன மாதிரி எழுதாமல் இல்லையே

நான் முதல் வெடிக்கும்
இரண்டாம் வெடிக்கும்
இடையில் கிளம்பினனான்

ஆனால் கிளம்பி வந்து
தமிழக சீமான்களுக்கு
காவடி தூக்கவில்லை

அது சரி

ஆகக் குறைஞ்சது தலைவர் என்று கூட அவரை குறிப்பிட மாட்டீர்களா?
வெறுமனே அவர் பெயரை தான் குறிப்பிடுவீர்களா?
அந்தளவுக்கு அவர் மரியாதைக்குரியவர் இல்லையா?


சீமான் தான் உங்கள் தலைவர் ஆச்சே

 

முகநூல் பதிவுகள், கைதுகளை தொடர்ந்து, பதிவது நின்று போனது. பதித்தவர்கள் நீக்கினாலும், போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர்.

நீங்கள் வேறு, பேரை எழுதி, காட்டி கொடுக்கிறீர்களே. வேண்டுமென்றே செய்கிறீர்களா?

இலங்கை அரசின் அழுத்தம் காரணமாக, தமிழகத்தில், பிரபாகரன் போட்டோ பயன்படுத்தும் youtube, முகப்புத்தக கணக்குகள் முடக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் நிலைமை எப்படி இருக்கும்.

இங்கிருந்து, நான், யாழ்ப்பாணம் போயிருந்த போது ஒரு முகப்புத்தக கணக்கு திறந்தேன். அது இலங்கை கணக்கா, வெளிநாட்டு கணக்கா என்று சொல்லுங்கள் பார்ப்போம். அதில் பிரபாகரன் படம் போடடால், இருக்கும், இலங்கை போலீஸ் என்னை போய் தேடி பிடிக்கேலுமே?

ஓமோம்... சீமான் தான் .... உங்கடை, டக்கியா அல்லது டைரக்ட்டா  கோத்தவா? 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

முகநூல் பதிவுகள், கைதுகளை தொடர்ந்து, பதிவது நின்று போனது. பதித்தவர்கள் நீக்கினாலும், போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர்.

நீங்கள் வேறு, பேரை எழுதி, காட்டி கொடுக்கிறீர்களே. வேண்டுமென்றே செய்கிறீர்களா?

இலங்கை அரசின் அழுத்தம் காரணமாக, தமிழகத்தில், பிரபாகரன் போட்டோ பயன்படுத்தும் youtube, முகப்புத்தக கணக்குகள் முடக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் நிலைமை எப்படி இருக்கும்.

இங்கிருந்து, நான், யாழ்ப்பாணம் போயிருந்த போது ஒரு முகப்புத்தக கணக்கு திறந்தேன். அது இலங்கை கணக்கா, வெளிநாட்டு கணக்கா என்று சொல்லுங்கள் பார்ப்போம். அதில் பிரபாகரன் படம் போடடால், இருக்கும், இலங்கை போலீஸ் என்னை போய் தேடி பிடிக்கேலுமே?

ஓமோம்... உங்கடை, டக்கியா அல்லது டைரக்ட்டா  கோத்தவா? 

பிளாக்கில் பழைய பதிவை தேடிப்பிடித்து விசாரிக்க வந்தவர்கள் போனை வேண்டி வாட்ஸ் அப் குழுமங்களை  பார்க்க இங்குள்ள நபர்களின் பதிவுகளை பார்த்து பயந்து போய்  நண்பர் வாட்சப் என்ற ஒன்றே வேண்டாம் என்று வெறுத்து போய் உள்ளார் .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

முகநூல் பதிவுகள், கைதுகளை தொடர்ந்து, பதிவது நின்று போனது. பதித்தவர்கள் நீக்கினாலும், போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர்.

நீங்கள் வேறு, பேரை எழுதி, காட்டி கொடுக்கிறீர்களே. வேண்டுமென்றே செய்கிறீர்களா?

ஓமோம்... சீமான் தான் .... உங்கடை, டக்கியா அல்லது டைரக்ட்டா  கோத்தவா? 

கருத்து எழுத வேறு வழி இல்லாட்டி
இருக்கும் ஒரே குறுக்கு வழி
காட்டிக் கொடுக்கின்றீரோ என்று கேட்பது
டக்கியோ கோத்தாவோ டைரக்டர் என்பது

நான் குறிப்பிட்ட அனைவரும் இன்றும்
இந்த வினாடியும் முக நூலில் உயிர்ப்புடன்
உள்ளவர்கள்
உங்களை மாதிரி என்னை மாதிரி முகம் காட்டாமல்
இருப்பவர்கள் அல்ல
அதிலும் ஒருவர் 3 வரிசம் பூசாவில் இருந்தவர்

சீமான் தான் தலைவர் என்று
ஒத்துக் கொண்டதுக்கு
நன்றிங்கோ

ஆனாலும் தேசிய தலைவரை
வெறுமனே பெயரை சொல்லி
குறிப்பிடுவது சரி இல்லை.
அவரது தியாகங்களுக்கான
நேர்மையும் இல்லை,

 

2 hours ago, வைரவன் said:

தனித் தமிழ் என்றதற்காக சீமான ஒரு பக்கத்தால ஆதரிச்சுக் கொண்டு
**********

அப்ப நான் வரட்டே

நான் எழுதியதை நீக்கிய நிழலி
என்னை கோத்தா ஆளோ என்று கேட்டதை
நீக்க மாட்டார்

நாதம் அவர்ட செல்லம்
என்று தெரியும்

ஆனாலும் நீக்க வேண்டாம்

கருத்துக்கு பஞ்சம் வந்தால்
துரோகி என்று முத்திரை குத்த
முனைவது
கருத்தாளனுக்கு வெற்றி தான்

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வைரவன் said:

கருத்து எழுத வேறு வழி இல்லாட்டி
இருக்கும் ஒரே குறுக்கு வழி
காட்டிக் கொடுக்கின்றீரோ என்று கேட்பது
டக்கியோ கோத்தாவோ டைரக்டர் என்பது

நான் குறிப்பிட்ட அனைவரும் இன்றும்
இந்த வினாடியும் முக நூலில் உயிர்ப்புடன்
உள்ளவர்கள்
உங்களை மாதிரி என்னை மாதிரி முகம் காட்டாமல்
இருப்பவர்கள் அல்ல
அதிலும் ஒருவர் 3 வரிசம் பூசாவில் இருந்தவர்

சீமான் தான் தலைவர் என்று
ஒத்துக் கொண்டதுக்கு
நன்றிங்கோ

ஆனாலும் தேசிய தலைவரை
வெறுமனே பெயரை சொல்லி
குறிப்பிடுவது சரி இல்லை.
அவரது தியாகங்களுக்கான
நேர்மையும் இல்லை,

 

வந்த வேகத்திலை, கத்தி வெட்டு வாங்கிப் போட்டீர்கள், பார்த்து எழுதுங்கோ.

எனது தலைவன் சீமான் தானே என்று நீங்கள் சொல்லலாம். திருப்பி உங்கள் தலை, டக்கியா அல்லது, நேரடியாக கோத்தாவே என்று கேட்டால் கோபம் வருகுது.

உங்களுக்கு எண்டால் ரத்தம், அடுத்தவனுக்கு தக்காளி சாறு..... அப்படித்தானே.  🙄

உங்க கண பேர், தீடீர் தேசிய தலைவர் ஆதரவு வேசம் போட்டுக்கொண்டு வருகினம்.😁

நீங்கள் அப்படி இல்லை எண்டு எனக்கு தெரியுமே.

முதலில், சூசை எதுக்கு, கடைசியில் சீமானுக்கு கோரிக்கை விடுத்து ஒரு ஒலிப்பதிவு விடுத்தார், தலைவர் சொல்லாமலேயே, தனது இஷ்டத்துக்கு, சீமானுக்கு கோரிக்கை விடுத்து இருப்பார் என்று எனக்கு ஒருக்கா விளக்கப்படுத்த ஏலுமா?

சூசை சொன்னதை கேட்பதா, வைரவன் சொல்வதை கேட்பதா... சொல்லுங்கோ, வைரவா, சொல்லுங்கோ.

அல்லது, சூசை, வாய்ஸ் டப்பிங்... எண்டாவது சொல்லுங்கோ.... நம்புறேன்

அந்த கோரிக்கை, ஏன், வைகோவுக்கோ, கலைனருக்கோ, ஜெயலலிதாவுக்கோ, திருமவளவனுக்கோ போகவில்லை என்று விளக்கப்படுத்துங்கள், பார்ப்போமே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

முதலில், சூசை எதுக்கு, கடைசியில் சீமானுக்கு கோரிக்கை விடுத்து ஒரு ஒலிப்பதிவு விடுத்தார், தலைவர் சொல்லாமலேயே, தனது இஷ்டத்துக்கு, சீமானுக்கு கோரிக்கை விடுத்து இருப்பார் என்று எனக்கு ஒருக்கா விளக்கப்படுத்த ஏலுமா?

 

சூசை அண்ணையின் ஒலிப்பதிவு முழுமையாக வெளியிடப்படாமல் இருந்ததாக ஒரு கதை வந்தது. உண்மையா?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

வந்த வேகத்திலை, கத்தி வெட்டு வாங்கிப் போட்டீர்கள், பார்த்து எழுதுங்கோ.

எனது தலைவன் சீமான் தானே என்று நீங்கள் சொல்லலாம். திருப்பி உங்கள் தலை, டக்கியா அல்லது, நேரடியாக கோத்தாவே என்று கேட்டால் கோபம் வருகுது.

உங்களுக்கு எண்டால் ரத்தம், அடுத்தவனுக்கு தக்காளி சாறு..... அப்படித்தானே.  🙄

உங்க கண பேர், தீடீர் தேசிய தலைவர் ஆதரவு வேசம் போட்டுக்கொண்டு வருகினம்.😁

நீங்கள் அப்படி இல்லை எண்டு எனக்கு தெரியுமே.

முதலில், சூசை எதுக்கு, கடைசியில் சீமானுக்கு கோரிக்கை விடுத்து ஒரு ஒலிப்பதிவு விடுத்தார், தலைவர் சொல்லாமலேயே, தனது இஷ்டத்துக்கு, சீமானுக்கு கோரிக்கை விடுத்து இருப்பார் என்று எனக்கு ஒருக்கா விளக்கப்படுத்த ஏலுமா?

சூசை சொன்னதை கேட்பதா, வைரவன் சொல்வதை கேட்பதா... சொல்லுங்கோ, வைரவா, சொல்லுங்கோ.

அல்லது, சூசை, வாய்ஸ் டப்பிங்... எண்டாவது சொல்லுங்கோ.... நம்புறேன்

அந்த கோரிக்கை, ஏன், வைகோவுக்கோ, கலைனருக்கோ, ஜெயலலிதாவுக்கோ, திருமவளவனுக்கோ போகவில்லை என்று விளக்கப்படுத்துங்கள், பார்ப்போமே.

நீங்கள் என் என்னை பைரவன் என்று அழைக்கிறீர்கள் என்பது இப்பதான் விளங்குது. நான் அவர் அல்ல.

Btw, கே.பி(பத்மநாதன்) ஐ  கூட இயக்கம் கடைசி நேரத்தில் சர்வதேச தலைவராக நியமித்திருந்தனர்.
அதற்காக இயக்கம் கை காட்டி விட்டு சென்றவர்கள் எல்லாம் தேவதூதர்களா?. அவர்கள் பாதை மாரமாட்டார்களா?

9 minutes ago, nunavilan said:

 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=28224

உங்களுடைய தர்க்கத்தின்  படி K P இப்பவும்  இயக்கத்தின் சர்வதேச தலைவர்.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

சூசை அண்ணை 25, 000 பேர் காயப்பட்டதாகவும் இறந்துகொண்டிருப்பதாகவும் சொல்லியிருந்தார். அது எல்லாம் முக்கியமில்லை. ஆனால் போகிற போக்கில் வைகோ, நெடுமாறன், சீமான் என்று அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பெயரின் சீன்மானின் பெயரும் இருந்ததை அப்படியே தூக்கி தங்கள் பரப்புரைக்கு பாவித்துக்கொண்டிருக்கின்றார்கள். இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் சூசை அண்ணை குறிப்பிட்ட வைகோ துரோகி, பத்மநாதன் துரோகி.. ஆனால் சீன்மான் அடுத்த தேசியத் தலைவர்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

நீங்கள் என் என்னை பைரவன் என்று அழைக்கிறீர்கள் என்பது இப்பதான் விளங்குது. நான் அவர் அல்ல.

உங்களை, பைரவா என்று அழைத்தேன் என்று நினைத்துக் கொண்டு இருந்தீர்களா? என்னத்தை சொல்ல? தொப்பி அளவா இருந்தோன்ன, தூக்கி தலையில போடுறதே? 😁 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சூசை அண்ணை 25, 000 பேர் காயப்பட்டதாகவும் இறந்துகொண்டிருப்பதாகவும் சொல்லியிருந்தார். அது எல்லாம் முக்கியமில்லை. ஆனால் போகிற போக்கில் வைகோ, நெடுமாறன், சீமான் என்று அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பெயரின் சீன்மானின் பெயரும் இருந்ததை அப்படியே தூக்கி தங்கள் பரப்புரைக்கு பாவித்துக்கொண்டிருக்கின்றார்கள். இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் சூசை அண்ணை குறிப்பிட்ட வைகோ துரோகி, பத்மநாதன் துரோகி.. ஆனால் சீன்மான் அடுத்த தேசியத் தலைவர்!

பத்மநாதன் குறித்த உங்கள் புரிதல் என்ன? அவர் துரோகி என்று தலைவர் கடைசி வரை அறிந்திருக்கவில்லை என்று தெரியுமா? வெறும் கப்பலை அனுப்பி, கூடவே தகவலையும் கசிய வைத்து, அதனை தாக்க வைத்து, ஆயுதங்களுடன் மூழ்கிவிட்டது என்று சொன்னதும், கோத்தாவுடன் டீலை போட்டு, கொழும்புக்கு விமானம் ஏறமுன்னர், நடேசன் மகனை கோலாலம்பூரில் சந்தித்து, சாட்சியாக வைத்துக்கொண்டே நாடகம் போட்டது துரோகம் இல்லையா?

மலேசியாவினால், கைது செய்து அனுப்பப்பட்டு, ஒரு நாள் கூட சிறையில் இருக்காத பத்தர், உங்களுக்கு பத்தரை மாற்று தங்கம். அநியாயத்துக்கு அப்பாவியா இருக்கிறீர்களே, கிருபன் அய்யா.

ஒரு பெரும் அரசியல்வாதி வைக்கோ எங்கே, அப்போது பெரிதாக யாருக்கும் தெரியாத சீமான் எங்கே? வைக்கோவுக்கு சொல்லுங்கோ என்பது புரிகிறது. நெடுமாறனுக்கு சொல்லுங்கோ என்பதும் புரிகிறது. 

ஆனால் சீமானுக்கு சொல்லுங்கோ, சீமான் சாருக்கு சொல்லுங்கோ, தொடர்ந்து முன் எடுக்க சொல்லி. அவரை நம்பித்தான் விட்டுவிட்டு போறோம் என்று சொல்லுங்கோ என்று சொன்னதன் காரணம் என்ன? பத்திரிகைகளுக்கு கொடுக்கலாமா என்று கேட்க, கொடு என்கிறாரே, அப்படியானால், இயக்க தலைமை முடிவை வெளியே அறிவிப்பதில் தயக்கம் இல்லை என்பது தானே.

தொடர்ந்து முன் எடுக்க சொல்லிய கோரிக்கையில், இன்றளவும் உறுதியாக நிலைத்து இருப்பது யார்?

திருமுருகன் காந்தி என்ற ஒரு சந்தர்ப்பவாதியும் இருக்கிறாரே. இயக்கத்துக்கும், அவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர் போட்ட சத்தத்தில், நம்பிய ஆட்கள் சுவிசுக்கு அழைத்து இருந்தார்கள். அப்படியே, சுபவியையும், திருமாவையும்..... எங்கே அவர்கள்?

கூட்டமாக, திமுக, காங்கிரசில் ஐக்கியம். அவர்களுக்கு உங்கள் ஆதரவு.... விளங்கும்!...

சீமானை இங்கே யாரும் தேசிய தலைவர் என்று தூக்கி கொண்டாடவில்லை. உங்களை தவிர.

சீமான், பிரபாகரனை தூக்கி வீசினால், நாமும் அவரை தூக்கி வீசுவோம். அவ்வளவு தான்.

தொடர்ந்து முன் எடுக்க சொல்லி - அப்படியானால் அங்கே முன்னதாக ஒரு புரிதல் இருந்திருக்கிறது, இல்லையா?

Edited by Nathamuni

மேலை நாடுகளின் சமூக பாதுகாப்பு நன்மைகளை (இன்றைக்கு தொழில் இல்லையேல் அல்லது இழப்பில், அரசு நாளை முதல் வங்கியில் நிதி வைப்பிலிடும்) முழுவதுமாக அனுபவித்துக் கொண்டு, எந்தவொரு சமூக பாதுகாப்புமற்ற நாட்டில் ஓரு ரூபாய் அரிசியை இலவசம் (freebies) என்று சொல்லக்கூடிய, ஒரு ஏழைத்தொழிலாளி பிள்ளையின் பசியை துச்சமென நினைக்கும் கயவர்களுக்கு,

தம் மாநில சுயாட்சி தொடர்ந்தும் பறிக்கும் சித்தாந்தத்திற்கு எதிராக, ராம ராஜ்ஜியம் எனும் பார்ப்பன ராஜ்ஜத்திற்கு எதிராக, சனாதனம் என்ற மனிதர்கள் சமனற்றவர்கள் என்ற கோட்பாட்டிக்கு எதிராக, மனுநீதியை நிலைநாட்டி, சமூக நீதியை சூறையாடும் சித்தாந்தத்திற்கு எதிராக, ஒடுக்கபட்ட சமூகத்தின் கல்வியை அபகரிக்கும் பொறிமுறைக்கு எதிராக... இன்னும் பலவற்றிக்கும் எதிராக.. தாம் நம்பும் ஒரு கட்சிக்கு வாக்களிக்கப் போகும்... 3 கோடிக்கும் மேலான தமிழர்களும் துரோகிகளே.....

Edited by பராபரன்

தமிழ்த் தேசியத்தின் எதிரி பாஜக வே.. தெலுங்கர்கள் அல்ல - பெ. மணியரசன்

 

  • கருத்துக்கள உறவுகள்

சில புலம்பெயர் விசில் அடிச்சான் குஞ்சுகளால், தமிழகத்தில் இருக்கும்  கொஞ்சம் நஞ்சம் ஆதரவையும் இழக்கப்போகிறேம். எமக்கு கட்சி பேதம் இன்றிய ஆதரவு தான் தேவை, அமெரிக்காவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இஸ்ரேலை ஆதரிப்பது போல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, zuma said:

சில புலம்பெயர் விசில் அடிச்சான் குஞ்சுகளால், தமிழகத்தில் இருக்கும்  கொஞ்சம் நஞ்சம் ஆதரவையும் இழக்கப்போகிறேம். எமக்கு கட்சி பேதம் இன்றிய ஆதரவு தான் தேவை, அமெரிக்காவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இஸ்ரேலை ஆதரிப்பது போல்.

முதலில் உங்களுக்குள் இருக்கும் பேதத்தை நீக்கி சர்வசாதாரண பொது மகனாக உரையாட பழகுங்கள். 
 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

முதலில் உங்களுக்குள் இருக்கும் பேதத்தை நீக்கி சர்வசாதாரண பொது மகனாக உரையாட பழகுங்கள். 
 

 

என் கருத்தில் என்ன குற்றம் கண்டீர்? சொற்குற்றமா? அல்லது பொருட்குற்றமா?🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, zuma said:

 

என் கருத்தில் என்ன குற்றம் கண்டீர்? சொற்குற்றமா? அல்லது பொருட்குற்றமா?🤣

முதலில் யார் பக்கமும் சாராமல் பொது கருத்துக்களை எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, zuma said:

 

என் கருத்தில் என்ன குற்றம் கண்டீர்? சொற்குற்றமா? அல்லது பொருட்குற்றமா?🤣

உங்கள் கருத்துக்கள் நீக்கப்படுவதால், உதாரணம் காட்டிட முடியவில்லை. ஆகவே துணிந்து என்ன குற்றம் கண்டீர் என்று சொல்கிறீர்கள். 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

பத்மநாதன் குறித்த உங்கள் புரிதல் என்ன?

கேபி பத்மநாதன் தலைவர் பிரபாகரனின் திருமணத்தில் தோழனாக இருந்தவர். புலிகள் இந்தியாவை உச்சி ஆயுதப் போராட்டத்தில் முன்னேற தனது உழைப்பை செலுத்தியவர்.

இப்போது இலங்கையில் சிறை செல்லாமல் பல அநாதரவான குழந்தைகள், முதியோரை பராமரிக்கும் இல்லங்களை நடாத்துபவர். 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

அவர் துரோகி என்று தலைவர் கடைசி வரை அறிந்திருக்கவில்லை என்று தெரியுமா?

ஆமாம். ஆமாம். ஆமாம்.

தலைவர் போராட்டத்திற்கு ஆயுதக்கொள்வனவு செய்து தந்த கேபியை இறுதிவரை நம்பினார் என்று Daily Mirror ஆங்கில இணையத்தளத்தில் சிங்கள அறிவுஜீவி Umberto Eco எழுதியிருந்தார்!  அவர் காஸ்ரோவின் வீண்பேச்சைக் கேட்டு கேபியை 2000 ஆண்டளவில் ஒதுக்கத் தொடங்கியிருந்தார். தகடு வைப்பவர்களின் பேச்சைக் கேட்டு 2003 இல் கேபியை ஆயுதக் கொள்வனவு பொறுப்பில் இருந்து மாற்றியிருந்தார். ஆனால் தனது நண்பனை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை என்று சிங்கள அறிவுஜீவி Umberto Eco இன்னும் விளக்கமாக எழுதியிருந்தார்!

நாதம்ஸ், நீங்கள் யாழில் தமிழில் வரும் பெரும் கட்டுரைகள், பேட்டிகளைக் படிப்பதில்லை என்று தெரியும். குறைந்தபட்சம் சூடான திரிகளில் என்னவெல்லாம் அலசியிருப்பார்கள் என்றாவது பார்த்தால் மேலே மேற்கோள் காட்டியதை எழுதியிருக்கம்மாட்டீர்கள்😬

 

11 hours ago, Nathamuni said:

சீமான், பிரபாகரனை தூக்கி வீசினால், நாமும் அவரை தூக்கி வீசுவோம். அவ்வளவு தான்.

இல்லை! உங்களால் முடியாது.!!

உங்களது விசுவாசம் தலைவர் பிரபாகரன் மீது இல்லை என்பதை யாழ் களத்தில் நீங்கள் இதுவரை காலமும் வைத்த கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் புரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.