Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடலில் பேருந்துகளை போடும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக... தமிழக மீனவர்கள் போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

அங்கு இது புதிது அல்ல ஏற்கனவே திருகோணமலை பக்கம் இப்படி பழைய வாகனம்களை கடலில் அமிழ்த்தியவர்கள்  தூண்டில் மீனவர்கள் பழைய ஒன்றுக்கும் உதவாத மரங்களை தறித்து  போடுவது உண்டு மீன்  வளத்துக்கு  என்று அதை கருப்பு போடுவது என்று சொல்வார்கள் .

தாடியர்  புகழ் இந்திய தமிழ்நாட்டு மீனவர்களால்  பரவுகிறது அதே நேரம் இங்கும் ரோலர்கள் உண்டு யுத்தம் முடிந்தபின் அவசரப்பட்டு ரோலர்களில் முதலிட்டு உள்ளார்கள் தாடியரின் இந்த வேலையால்  நம்ம ஆட்களும் பாதிக்க படுவினம் ஏனென்றால் கடல் நீரோட்டம் விசித்திரமானது இன்று ஓரிடத்தில் இருக்கும் பழைய பஸ் நீரோட்டத்தால் எல்லைதாண்டி இந்திய பகுதிகளிலும் கொண்டு போய்  விட்டு விடும் ஆனால் மீன்வளம் உருவாகும் பருத்திதுறைக்கு மேல் உள்ள கண்ட மேடை அவ்வாறானதல்ல தாடியர் இங்கு பழைய வாகனம்களை இறக்கிய இடம்கள்  நீரோட்டம் அதிகமுள்ள பகுதி  ஆனால் எப்படி பார்த்தாலும்  மீன் வளம்  அதிகரிக்கும்  சிறு தொழில் மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படும். 

நல்ல கருத்து பெருமாள். 

இந்த நீரோட்டம் பற்றி ஒரு கேள்வி. இங்கே போடப்படும் பஸ்கள் எல்லாம் கழட்டின பிறகும் ஒரு 500 கிலோ வரும் என நினைகிறேன். எங்கள் பக்கம் உள்ள நீரோட்டம் இவ்வளவு கனத்தை நகர்த்த வல்லதா?

பெரும் நீரோட்டங்கள் எந்த பெரும் பாரத்தையும் கிளப்பும் என கேள்விபட்டுளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இந்த நீரோட்டம் பற்றி ஒரு கேள்வி. இங்கே போடப்படும் பஸ்கள் எல்லாம் கழட்டின பிறகும் ஒரு 500 கிலோ வரும் என நினைகிறேன். எங்கள் பக்கம் உள்ள நீரோட்டம் இவ்வளவு கனத்தை நகர்த்த வல்லதா?

அவ்வளவுக்கு தெரியாது மாரி  கடல் நீரோட்டம்களில்  விழும் உடல்கள் பொருள்கள் கொடியாக்கரையிலும் வடமராட்சி கடல் பகுதிகளிலும் மாறி மாறி கரையேறும் செய்திகளை அங்கிருந்தபோது தெரிந்துகொண்டேன் .

வயதானவர்களின் கருத்துக்கள் உதாரணமாய் சேது சமுத்திர திட்டம் வரும்போது ஒரு மதிய நேரத்தின் பின்  வாசிகசாலையில் அந்த செய்தியை படித்துவிட்டு சிரித்துக்கொண்டார்கள் அப்போது 1980இன் இறுதிப்பகுதிகள் 300 கோடி மதிப்பீடு அவர்கள் சொன்னார்கள் அத்திட்டம் இந்தியர்களால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது காரணம் அந்த பகுதியில்  உள்ள நீரோட்டம் மண்ணை கொண்டுவந்து கொண்டிருக்கும் பத்து மடங்கு சிலவாகும் அப்படியும் பாரமான கப்பல்கள் தரைதட்டி விடும் என்றார்கள்  .

இவ்வளவு காலம் போனபின் அவர்கள் சொன்னது அவ்வளவும் உண்மையாகின்றது .  

  • கருத்துக்கள உறவுகள்

தாடிக்காரர் முந்தி பயத்தில் கடற்புலிகள் கடலால் வந்து போட்டிடுவாய்ங்களோ என்ற நடுக்கத்தில்.. தீவக பனைகளை வெட்டி.. சொறீலங்கா கடற்படை மூலம் கடலில் நட்டவர். 

அதுசரி.. கலப்புலோக.. உக்கல்களை.. கடலுக்க போட்டால்.. கடலில மிதக்குமாப்பா.. மீன்கள் எல்லாம்.. இப்ப கடலுக்கு அடியில தான் குடி இருப்பினம் போல. வலை போடுறது கஸ்டம்... மீனவர்கள் வரமாட்டார்களாம்.

அந்த மீனவர்களுக்கே தெரியுது.. இதனால்.. சூழல் மாசு தான் முக்கிய பிரச்சனை என்று.. உந்த தாடியனுக்கு தெரியல்லையே.... அவரின் விசிறிகளுக்கும் புரியல்லையே.  அவருக்கு ஒரு கிலோவை கடலுக்க கொட்ட ஒரு இலட்சம் கொமிசன் கொடுத்திருப்பாய்ங்க. 

  • கருத்துக்கள உறவுகள்

தாடியன் பஸ்சுகளை இறக்குறான் எண்டுபோட்டு, அங்கால கருணாநிதி பெத்த கேடியன் பழைய ரயில்பெட்டிகளை கொண்டுவந்து இறக்கபோறானோ தெரியல.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

அடிவிண்ட சட்டி என்று வரும் என நினைக்கிறேன், செந்தமிழாசன்கள் நீங்கள் கூறுவது போல் கதைப்பார்கள்.

உங்கள் பின்னூட்டத்தின் பின், நீங்கள் சுட்டிய 'அடிவிண்ட சட்டி' சரியானது என நானும் நினைக்கிறேன். ஆனால் பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரிகள் நான் எழுதியதுபோலவே கூவிக் கேட்டு வந்தது என் நினைவில் ஒலித்ததால் அதனை அப்படியே எழுதினேன். 🙏  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அவ்வளவுக்கு தெரியாது மாரி  கடல் நீரோட்டம்களில்  விழும் உடல்கள் பொருள்கள் கொடியாக்கரையிலும் வடமராட்சி கடல் பகுதிகளிலும் மாறி மாறி கரையேறும் செய்திகளை அங்கிருந்தபோது தெரிந்துகொண்டேன் .

வயதானவர்களின் கருத்துக்கள் உதாரணமாய் சேது சமுத்திர திட்டம் வரும்போது ஒரு மதிய நேரத்தின் பின்  வாசிகசாலையில் அந்த செய்தியை படித்துவிட்டு சிரித்துக்கொண்டார்கள் அப்போது 1980இன் இறுதிப்பகுதிகள் 300 கோடி மதிப்பீடு அவர்கள் சொன்னார்கள் அத்திட்டம் இந்தியர்களால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது காரணம் அந்த பகுதியில்  உள்ள நீரோட்டம் மண்ணை கொண்டுவந்து கொண்டிருக்கும் பத்து மடங்கு சிலவாகும் அப்படியும் பாரமான கப்பல்கள் தரைதட்டி விடும் என்றார்கள்  .

இவ்வளவு காலம் போனபின் அவர்கள் சொன்னது அவ்வளவும் உண்மையாகின்றது .  

நன்றி பெருமாள். உந்த சேது திட்ட நேரம் நானும் இந்த மண் மூடும் என்பதை பற்றி கேள்விபட்டனான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

தாடியன் பஸ்சுகளை இறக்குறான் எண்டுபோட்டு, அங்கால கருணாநிதி பெத்த கேடியன் பழைய ரயில்பெட்டிகளை கொண்டுவந்து இறக்கபோறானோ தெரியல.

இரக்கமாட்டார்கள் அங்கு ஓடும் பாரிய மீன்பிடி ரோலர்கள் திமுகாவின் பினாமிகளின் சொத்து என்று தமிழ்நாட்டு பத்திரிகைகளில் வந்த செய்தி .

Edited by பெருமாள்
எழுத்து திருத்தம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

இலங்கை அரசாங்கத்திற்கு செயற்பாடுகளை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் பாரம்பரிய மீன்பிடி கடற்பரப்பில் பயன்பாட்டில் இல்லாத பேருந்துகளை போட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வரம் பேருந்து எதிரே மீனவர்கள் இன்று(புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலை அளிக்கும் நோக்கத்தோடு இலங்கை அரசு சர்வதேச கடல் எல்லையில் இருந்து அருகே இந்திய இலங்கை மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் இடங்களான கச்சத்தீவு, நெடுந்தீவு, நயினாதீவு பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து துறைக்கு சொந்தமான பேருந்துகளை கடல் பரப்பில் இறக்கி வருகின்றனர்.

பேருந்துகளின் கூடுகளை கடலில் இருக்கும் போது கடல் மாசு படுவதுடன் தமிழக மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்தாலும் அவர்கள் விரிக்கும் மீன்பிடி வலைகள் காற்றின் வேகம் காரணமாகவும், கடல் நீரோட்டம் காரணமாக இலங்கை கடற்பகுதிக்கும் செல்லகூடும் இதனால் படகுகள் மற்றும் வலைகளை சேதமடைந்து படகு ஒன்று சுமார் ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்பதால் உடனடியாக இலங்கை மீன்வளத்துறை இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

அதேபோல் நாளுக்கு நாள் உயர்ந்து டீசல் விலையால் மீனவர்கள் தங்களது படகுகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது எனவே மத்திய, மாநில அரசுகள் கலால்,சாலை வரிகளை நீக்கி மீனவர்களுக்கு உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் மீனவர்கள் இலங்கை மீன் வளத்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியிருந்தனர்.

PHOTO-2021-06-16-11-58-45.jpg

https://athavannews.com/2021/1223021

  • கருத்துக்கள உறவுகள்

கடல்களில் உருவாக்கப்படும் ”அமிழ்த்தப்படு வாகனச் சூழற்றொகுதி” சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?
-ஏ.எம். றியாஸ் அகமட், (சிரேஸ்ட விரிவுரையாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை)
உலகெங்கும் பாவித்து, ஒதுக்கப்பட்ட அல்ல கழிக்கப்பட்ட தரையிலோடுகின்ற வாகனங்கள், ரயில் பெட்டிகள், கப்பல்கள், யுத்த தாங்கிகள், கடற் பகுதிக்கு கப்பல்களில் எடுத்துச் செல்லப்பட்டு, செயற்கையாக முருகைக் கற்பாறைகள் வளர்வதற்காகவும், மீன்களின் குடித்தொகையை அதிகரிப்பதற்காகவும் அமிழ்த்தப்படுகின்றன.
2007ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரை, நியுயோர்க்கில் பாவித்து ஒதுக்கப்பட்ட2500 க்கும் மேற்பட்ட நிலக்கீழ் ரயில்பெட்டிகள், அத்திலாந்திக் சமுத்திரப் பகுதிகளில் அமிழ்த்தப்பட்டிருக்கின்றன. இது உலகம் முழுவதும் நெடுங்காலமாக செய்யப்படும் ஒரு நடைமுறையாகும். இதன் மூலம் மீன்கள், சிலந்திரேற்றாக்கள், முருகைக் கற்பாறைகள், அதனை நம்பிய உயிரினங்கள், மற்றும் கடற்தாவரங்கள் வளர்ந்து, நிலைத்துநிற்கக்கூடிய ஒரு சூழற்றொகுதியை உருவாக்குகின்றன. 
நடத்தைச் சூழலியலின் (Behavioural Ecology), உணவு சூழலியலில் (Ecology of feeding) இந்த அமிழ்க்கப்பட்ட வாகனங்கள், முக்கியமான பங்கை வகிக்கின்றன. எப்படி ஒரு இரைகொல்லி விலங்கானது, இரைகளைக் கொல்வதற்கான திறன்களை அவைகளின் கூர்ப்புப் பொறிமுறைகளில் விருத்தி செய்துகொண்டிருக்கின்றனவோ அதே போன்று இரைகளும், இரைகொல்லிகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான ,அவைகளை அடையாளம் காண்பதில், பிடித்துக்கொள்வதில் கடினங்களை ஏற்படுத்தல் போன்ற திறன்களை சமாந்தரமாக விருத்திசெய்துகொண்டிருக்கின்றன. இதற்கு இந்த அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகுதி உதவுகின்றன. அவைகள் ஒழிந்து கொள்வதற்கும், தப்பித்துக்கொள்வதற்கும் பாரிய பங்காற்றுகின்றன. அதே வேளை, ஆழங்களைப் பொறுத்து சிறிய புற்கள், அல்காக்கள் பிளாந்தன்கள் சேரும்போது, தாவரவுண்ணி, ஊனுண்ணி, அனைத்துமுண்ணி போன்ற விலங்குகளின் உயிரியல் பன்மைத்துவம் அதிகரிக்கும்போது உணவுகளின் அளவும் அதிகரிக்கின்றன. ஒழிந்துகொண்டு மற்ற உயிரினங்களையும் வேட்டையாடுகின்றன. வேகமாக நீந்தி உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத, நீரோட்டத்தினால் இலகுவில் அடித்துச் செல்லப்படக்கூடிய உயிரினங்களுக்கும் இந்தச் சூழற்றொகுதி ஒரு வரப்பிரசாதமாகும். இந்த அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகுதியினால் வளர்ச்சி வீதம் அதிகரித்து மீன்களின் குடித்தொகையும், மற்ற விலங்குகளின் குடித்தொகையும் அதிகரிக்கும்.
அதேபோன்று நடத்தைச் சூழலியலின், இனப்பெருப்பெருக்கச் சூழலியலிலும் (Ecology of reproduction), இடவாதிக்க சூழலியலிலும் (Ecology of space) முக்கிய பங்காற்றக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. விலங்குகள் தங்களுக்கான ஆதிக்க இடங்களையும் (territories), வீட்டு வீச்சு இடங்களையும் (home range), அதிபாவனை இடங்களையும் (core area) உருவாக்கிக் கொள்ளுகின்றன. வளங்களுக்கான பங்கீடுகளில் (partitioning resources) ஆரோக்கியத்தன்மை ஏற்பட்டு போட்டியும் குறைக்கப்படுகின்றன. மேலும் பாதுகாப்பளிக்கக்கூடிய, உற்பத்திகூடிய மறைவிடங்களை உருவாக்குவதன் மூலம், இந்த அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகுதியானது, புணரும், இனப்பெருக்க, உணவு, பல்நோக்கு ஆதிக்க பரப்புக்களை ( mating, breeding, feeding, and multi-purpose territories) உருவாக்குகின்றன. அத்துடன் நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்படாது, மீன்களின் முட்டைகளை ஒட்டிவைத்து, முட்டைகள் குஞ்சுகளாய் விருத்தியாவதற்கும் உதவுகின்றன. அத்துடன் இந்த குஞ்சுகளுக்கும்  எதிரிகளிடமிருந்து பாதுகாப்பளிக்கின்றன. இந்தச் சூழற்றொகுதியின் மறைவிடம் காரணமாக பெற்றார் கவனிப்புக்கு (parental care) சக்திச் செலவு குறைவாக செய்யப்படுகின்றன. மேலும் தங்களுடைய இணைகைளைத் தெரிவு (mate selection) செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. இதனால் விலங்குகளின் தப்பிப் பிழைப்பதற்கான வாய்ப்புகளும், இனப்பெருக்க வெற்றியும் (Reproductive success), வளர்ச்சி வேகமும் (growth rate) அதிகரிக்கின்றன.
மன்னார் கடலில் இருபது பாவித்து, கழிக்கப்பட்ட பஸ்களை இலங்கை அரசாங்கம் கடலில் அமிழ்த்திய நடவடிக்கைக்கு எதிராக இந்திய, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவ சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்தியுள்ளன. அதற்கு அவர்கள் கூறும் காரணம், நிறைய மீன்வளங்களை அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகு கவர்ந்துவிடும். இதனால் இந்தியாவில் மீன்வளம் குறையும். இது சிறுபிள்ளைத்தனமான காரணமாக தெரிந்தாலும், அதற்குப் பின்னாலுள்ள காரணம் என்பது, இந்த பஸ்கள் அவர்களது கடல்அடித்தள இழுவை வலைகளை (bottom set trawler nets) சேதமாக்குவதுடன், இலங்கை மீன்வளங்களை கவர்ந்துகொள்வதிலும், அழிப்பதிலும் அந்தப் பிரதேசத்தில் அவர்களுக்கு பாரிய தடைகளாயிருக்கும் என்பது எல்லோராலும் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாகும்.
பொதுவாக, கழிக்கப்பட்ட பொருட்களை கடலில் வீசுவது நல்லதல்ல. குறிப்பாக உலோகப் பொருட்கள், இவை கடலில் கரையக்கூடியன. பாரமான உலோகங்கள், அவற்றின் நியம அளவைிவட கடற்சூழற்றொகுதியில் அதிகரிக்கும்போது, உணவுச் சங்கிலிகளின் மூலம், மனிதர்களையும், மற்றைய விலங்குகளையும் அடைந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும். ஆனால் நன்மைகைளையும், தீமைகளையும் ஒப்பிடும்போது, இங்கே நன்மைகளின் அளவு அதிகரிக்க வேண்டுமானால், கடலில் வாகனங்கள் அமிழ்த்தப்படுவதற்கு முன், அந்த வாகனங்களிலுள்ள, பொலித்தீன், பிளாஸ்ரிக்கிலான சக்கரங்கள் (டயர்கள்), இருக்கைகள், மேலுறைகள், பட்டிகள் போன்றவை கவனமாக அகற்றப்பட வேண்டும். அத்துடன் தீங்கு செய்யக்கூடிய உலோகங்களும் அகற்றப்பட்டு, துப்பரவு செய்யப்பட்டு, கடல் சார் உயிரியல் காரணிகள் கவனத்திற்கொள்ளப்பட்ட பின்னர், உலோகக் கூடாகவே கடலில் போடப்படவேண்டும்.

https://www.facebook.com/amritha.ayem/posts/4172333859501230

  • கருத்துக்கள உறவுகள்

டக்ஸஸ் அங்கிள் செய்த உருப்படியான ஒருவேலை இது. அது சரி இலங்கை தன்ட கடல் எல்லைக்குள்ள் பேருந்துகளை போட்டா ஏன் இந்திய மீனவர்கள் போராடுகினம்?😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

கடல்களில் உருவாக்கப்படும் ”அமிழ்த்தப்படு வாகனச் சூழற்றொகுதி” சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?
-ஏ.எம். றியாஸ் அகமட், (சிரேஸ்ட விரிவுரையாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை)
உலகெங்கும் பாவித்து, ஒதுக்கப்பட்ட அல்ல கழிக்கப்பட்ட தரையிலோடுகின்ற வாகனங்கள், ரயில் பெட்டிகள், கப்பல்கள், யுத்த தாங்கிகள், கடற் பகுதிக்கு கப்பல்களில் எடுத்துச் செல்லப்பட்டு, செயற்கையாக முருகைக் கற்பாறைகள் வளர்வதற்காகவும், மீன்களின் குடித்தொகையை அதிகரிப்பதற்காகவும் அமிழ்த்தப்படுகின்றன.
2007ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரை, நியுயோர்க்கில் பாவித்து ஒதுக்கப்பட்ட2500 க்கும் மேற்பட்ட நிலக்கீழ் ரயில்பெட்டிகள், அத்திலாந்திக் சமுத்திரப் பகுதிகளில் அமிழ்த்தப்பட்டிருக்கின்றன. இது உலகம் முழுவதும் நெடுங்காலமாக செய்யப்படும் ஒரு நடைமுறையாகும். இதன் மூலம் மீன்கள், சிலந்திரேற்றாக்கள், முருகைக் கற்பாறைகள், அதனை நம்பிய உயிரினங்கள், மற்றும் கடற்தாவரங்கள் வளர்ந்து, நிலைத்துநிற்கக்கூடிய ஒரு சூழற்றொகுதியை உருவாக்குகின்றன. 
நடத்தைச் சூழலியலின் (Behavioural Ecology), உணவு சூழலியலில் (Ecology of feeding) இந்த அமிழ்க்கப்பட்ட வாகனங்கள், முக்கியமான பங்கை வகிக்கின்றன. எப்படி ஒரு இரைகொல்லி விலங்கானது, இரைகளைக் கொல்வதற்கான திறன்களை அவைகளின் கூர்ப்புப் பொறிமுறைகளில் விருத்தி செய்துகொண்டிருக்கின்றனவோ அதே போன்று இரைகளும், இரைகொல்லிகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான ,அவைகளை அடையாளம் காண்பதில், பிடித்துக்கொள்வதில் கடினங்களை ஏற்படுத்தல் போன்ற திறன்களை சமாந்தரமாக விருத்திசெய்துகொண்டிருக்கின்றன. இதற்கு இந்த அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகுதி உதவுகின்றன. அவைகள் ஒழிந்து கொள்வதற்கும், தப்பித்துக்கொள்வதற்கும் பாரிய பங்காற்றுகின்றன. அதே வேளை, ஆழங்களைப் பொறுத்து சிறிய புற்கள், அல்காக்கள் பிளாந்தன்கள் சேரும்போது, தாவரவுண்ணி, ஊனுண்ணி, அனைத்துமுண்ணி போன்ற விலங்குகளின் உயிரியல் பன்மைத்துவம் அதிகரிக்கும்போது உணவுகளின் அளவும் அதிகரிக்கின்றன. ஒழிந்துகொண்டு மற்ற உயிரினங்களையும் வேட்டையாடுகின்றன. வேகமாக நீந்தி உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத, நீரோட்டத்தினால் இலகுவில் அடித்துச் செல்லப்படக்கூடிய உயிரினங்களுக்கும் இந்தச் சூழற்றொகுதி ஒரு வரப்பிரசாதமாகும். இந்த அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகுதியினால் வளர்ச்சி வீதம் அதிகரித்து மீன்களின் குடித்தொகையும், மற்ற விலங்குகளின் குடித்தொகையும் அதிகரிக்கும்.
அதேபோன்று நடத்தைச் சூழலியலின், இனப்பெருப்பெருக்கச் சூழலியலிலும் (Ecology of reproduction), இடவாதிக்க சூழலியலிலும் (Ecology of space) முக்கிய பங்காற்றக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. விலங்குகள் தங்களுக்கான ஆதிக்க இடங்களையும் (territories), வீட்டு வீச்சு இடங்களையும் (home range), அதிபாவனை இடங்களையும் (core area) உருவாக்கிக் கொள்ளுகின்றன. வளங்களுக்கான பங்கீடுகளில் (partitioning resources) ஆரோக்கியத்தன்மை ஏற்பட்டு போட்டியும் குறைக்கப்படுகின்றன. மேலும் பாதுகாப்பளிக்கக்கூடிய, உற்பத்திகூடிய மறைவிடங்களை உருவாக்குவதன் மூலம், இந்த அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகுதியானது, புணரும், இனப்பெருக்க, உணவு, பல்நோக்கு ஆதிக்க பரப்புக்களை ( mating, breeding, feeding, and multi-purpose territories) உருவாக்குகின்றன. அத்துடன் நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்படாது, மீன்களின் முட்டைகளை ஒட்டிவைத்து, முட்டைகள் குஞ்சுகளாய் விருத்தியாவதற்கும் உதவுகின்றன. அத்துடன் இந்த குஞ்சுகளுக்கும்  எதிரிகளிடமிருந்து பாதுகாப்பளிக்கின்றன. இந்தச் சூழற்றொகுதியின் மறைவிடம் காரணமாக பெற்றார் கவனிப்புக்கு (parental care) சக்திச் செலவு குறைவாக செய்யப்படுகின்றன. மேலும் தங்களுடைய இணைகைளைத் தெரிவு (mate selection) செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. இதனால் விலங்குகளின் தப்பிப் பிழைப்பதற்கான வாய்ப்புகளும், இனப்பெருக்க வெற்றியும் (Reproductive success), வளர்ச்சி வேகமும் (growth rate) அதிகரிக்கின்றன.
மன்னார் கடலில் இருபது பாவித்து, கழிக்கப்பட்ட பஸ்களை இலங்கை அரசாங்கம் கடலில் அமிழ்த்திய நடவடிக்கைக்கு எதிராக இந்திய, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவ சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்தியுள்ளன. அதற்கு அவர்கள் கூறும் காரணம், நிறைய மீன்வளங்களை அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகு கவர்ந்துவிடும். இதனால் இந்தியாவில் மீன்வளம் குறையும். இது சிறுபிள்ளைத்தனமான காரணமாக தெரிந்தாலும், அதற்குப் பின்னாலுள்ள காரணம் என்பது, இந்த பஸ்கள் அவர்களது கடல்அடித்தள இழுவை வலைகளை (bottom set trawler nets) சேதமாக்குவதுடன், இலங்கை மீன்வளங்களை கவர்ந்துகொள்வதிலும், அழிப்பதிலும் அந்தப் பிரதேசத்தில் அவர்களுக்கு பாரிய தடைகளாயிருக்கும் என்பது எல்லோராலும் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாகும்.
பொதுவாக, கழிக்கப்பட்ட பொருட்களை கடலில் வீசுவது நல்லதல்ல. குறிப்பாக உலோகப் பொருட்கள், இவை கடலில் கரையக்கூடியன. பாரமான உலோகங்கள், அவற்றின் நியம அளவைிவட கடற்சூழற்றொகுதியில் அதிகரிக்கும்போது, உணவுச் சங்கிலிகளின் மூலம், மனிதர்களையும், மற்றைய விலங்குகளையும் அடைந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும். ஆனால் நன்மைகைளையும், தீமைகளையும் ஒப்பிடும்போது, இங்கே நன்மைகளின் அளவு அதிகரிக்க வேண்டுமானால், கடலில் வாகனங்கள் அமிழ்த்தப்படுவதற்கு முன், அந்த வாகனங்களிலுள்ள, பொலித்தீன், பிளாஸ்ரிக்கிலான சக்கரங்கள் (டயர்கள்), இருக்கைகள், மேலுறைகள், பட்டிகள் போன்றவை கவனமாக அகற்றப்பட வேண்டும். அத்துடன் தீங்கு செய்யக்கூடிய உலோகங்களும் அகற்றப்பட்டு, துப்பரவு செய்யப்பட்டு, கடல் சார் உயிரியல் காரணிகள் கவனத்திற்கொள்ளப்பட்ட பின்னர், உலோகக் கூடாகவே கடலில் போடப்படவேண்டும்.

https://www.facebook.com/amritha.ayem/posts/4172333859501230

நன்றி ஏராளன்.

நான் பார்த்தவரை உலோக கூடுகள் மட்டுமே இறக்கப்பட்டன. ஒன்றில் ஒரு டயர் இருந்த நினைவு. 

ஆனால் விரிவுரையாளர் உலோகங்களை பற்றி பட்டும் படாமலும் நழுவுவது போல தெரிகிறது. 

43 minutes ago, வாலி said:

ஏன் இந்திய மீனவர்கள் போராடுகினம்?😂

எமது கடல் வளத்தை ஆட்டைய போட விடுறம் இல்லையாம்🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்

சில நூற்றாண்டுகளின் பின்.....

சிறீலங்காவின் வாகனங்கள்  மீட்பு

கடலால்  ஆக்கிரமிக்கப்பட்ட சிறீலங்கா  புராதன  நகரம்  கண்டு  பிடிப்பு???

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

சில நூற்றாண்டுகளின் பின்.....

சிறீலங்காவின் வாகனங்கள்  மீட்பு

கடலால்  ஆக்கிரமிக்கப்பட்ட சிறீலங்கா  புராதன  நகரம்  கண்டு  பிடிப்பு???

ஒவ்வொரு பஸ்சுக்கயும் ஒரு புத்தர் சிலையை போட்டு இறக்கினால் இன்னும் விசேசம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஒவ்வொரு பஸ்சுக்கயும் ஒரு புத்தர் சிலையை போட்டு இறக்கினால் இன்னும் விசேசம்.

அதை  டக்லசு  மாமா செய்திருப்பார்  என்று  சிங்களத்துக்கு நன்கு தெரியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.