Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

LTTE உறுப்பினர்கள் உட்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்குமாறு நாமல் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

LTTE உறுப்பினர்கள் உட்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்குமாறு நாமல் கோரிக்கை

வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டதால் 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை செயற்படுத்துமாறு இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய அவர், முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் உட்பட பல இளைஞர்கள் தங்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படாமலோ அல்லது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலோ நீண்ட கால சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அவர்களின் வழக்குகளை விரைவுபடுத்துவதற்கும் அல்லது வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கும் அவர்களை தண்டிப்பதற்கும் விடுவிப்பதற்கும் ஒரு பொறிமுறையை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் என்று நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

https://athavannews.com/2021/1224322

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வு அல்லது சாவு இரண்டில் ஏதாவது ஒரு முடிவுக்கு அரசு வந்தால் தான் தமிழ் அரசியல் கைதிகள் விடிவு சாத்தியம். 

ஒவ்வொருவரின் துயரம் நிறைந்த கதைகளுக்கு முடிவு வர வேண்டும். 

நாமலின் குரலுக்கு அவர்கள் விடுதலைக்கான வழிகள் வருமென்ற கைதிகள் நம்பிக்கை உண்மையாக வேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, shanthy said:

வாழ்வு அல்லது சாவு இரண்டில் ஏதாவது ஒரு முடிவுக்கு அரசு வந்தால் தான் தமிழ் அரசியல் கைதிகள் விடிவு சாத்தியம். 

ஒவ்வொருவரின் துயரம் நிறைந்த கதைகளுக்கு முடிவு வர வேண்டும். 

நாமலின் குரலுக்கு அவர்கள் விடுதலைக்கான வழிகள் வருமென்ற கைதிகள் நம்பிக்கை உண்மையாக வேண்டும். 

நாமலின்…. அப்பாவும், சித்தப்பாவும்தான்…

பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாமலின்…. அப்பாவும், சித்தப்பாவும்தான்…

பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இருக்கிறார்கள்.

இது ஒரு நம்பிக்கையான செய்தி. இவர் இதை வெளிப்படையாக முன் வைக்கிறார் என்றால் விடப்போகிறார்கள் போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நாமலின்…. அப்பாவும், சித்தப்பாவும்தான்…

பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இருக்கிறார்கள்.

நாடென்ன குடும்ப சொத்தா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

இது ஒரு நம்பிக்கையான செய்தி. இவர் இதை வெளிப்படையாக முன் வைக்கிறார் என்றால் விடப்போகிறார்கள் போல இருக்கு.

நானும், அப்படித்தான் நினைக்கின்றேன்.

நாமல் பாராளுமன்றத்தில் கேட்டவுடன், அவர்களை விடுவித்தால்… அடுத்த தேர்தலுக்கு சின்னவனை, கனமான பதவியில் உட்கார வைக்கலாம் என்று, பெரிசுகளே திட்டம் தீட்டி கொடுத்திருப்பார்கள்.

சம்பந்தர் ஐயாவும்…. அடிக்கடி அரசாங்கத்துக்கு, காட்டமாக எச்சரித்து… பாரிய பின்விளைவுகள் ஏற்படும் என்று அறிக்கைகள் விடுவதால்… அரசும் கொஞ்சம் யோசிக்கத்தானே செய்யும்.

எது எப்படியோ… அவர்கள் வெளியே வரவேண்டும் என்பதுதான், அனைவரின் பிரார்த்தனை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கற்பகதரு said:

நாடென்ன குடும்ப சொத்தா?

பின்னை…. குடும்பமே, அரசியலுக்கு வந்தால், குடும்ப சொத்துதானே… 😁 🤣

உங்களுக்கு, என்ன மாதிரி தெரியுது

  • கருத்துக்கள உறவுகள்

குடும்ப அரசியல் நாட்டை எங்கு கொண்டுபோகும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

குடும்ப அரசியல் நாட்டை எங்கு கொண்டுபோகும்?

பண்டாரநாயக்கா குடும்ப… அரசியலிருந்து,

இந்தியாவில்…. காங்கிரஸ் கட்சி குடும்ப அரசியல் வரை எல்லாம் செய்து…

இப்ப…..  ”ஈ” அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். 😁

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, கற்பகதரு said:

நாடென்ன குடும்ப சொத்தா?

பசில்லும் கெதியா நாடாளுமன்றம் புகுந்துவிடுவார் போல கிடக்கு ?

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

எது எப்படியோ… அவர்கள் வெளியே வரவேண்டும் என்பதுதான், அனைவரின் பிரார்த்தனை.

🙏🏾

யாரின் அரசியலுக்காகவேனும் அவர்கள வெளியே வர அனுமதிக்பட்டால் சந்தோசமே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நாமலின்…. அப்பாவும், சித்தப்பாவும்தான்…

பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இருக்கிறார்கள்.

அந்தப் பதவிக்கு வேறு யாரையும் இருத்தலாமெண்டு யோசிக்கிறேன். யாரை என்று தெரியவில்லை 🤔

1 hour ago, goshan_che said:

இது ஒரு நம்பிக்கையான செய்தி. இவர் இதை வெளிப்படையாக முன் வைக்கிறார் என்றால் விடப்போகிறார்கள் போல இருக்கு.

விடாமல் பண்ணினால் தானே பலருக்கு அரசியல் ஓடலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, shanthy said:

அந்தப் பதவிக்கு வேறு யாரையும் இருத்தலாமெண்டு யோசிக்கிறேன். யாரை என்று தெரியவில்லை 🤔

விடாமல் பண்ணினால் தானே பலருக்கு அரசியல் ஓடலாம். 

சாந்தி அக்கா! நீங்கள் ஏதோ சொல்லவாறியள் எண்டு விளங்குது. ஆனால் என்னெண்டுதான் எனக்கு விளங்கேல்லை? 🙃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கற்பகதரு said:

நாடென்ன குடும்ப சொத்தா?

தம்பி சனாதிபதி. அண்ணர் முன்னாள் சனாதிபதியும் இந்நாள் பிரதமரும் ஆவார். அது மட்டுமல்லாமல் மகன் அமைச்சர். மற்றும் குடும்பத்தார் உற்றார் உறவினர்கள் உயர் அதிகார பதவிகளில்..... நாடு குடும்பச்சொத்து எண்டதுக்கு வேறை என்ன ஆதாரம் வேணும்.

கற்பகத்தார் நீங்கள் வர வர மங்கிக்கொண்டு போறியள் 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இது ஒரு நம்பிக்கையான செய்தி. இவர் இதை வெளிப்படையாக முன் வைக்கிறார் என்றால் விடப்போகிறார்கள் போல இருக்கு.

நான் நினைக்கவில்லை  வழக்கம் போல் சுமத்திரன்  ராகவனை பார்த்து நாய் போல் குரைக்க வேண்டாம் என்று வெண்ணெய் திரண்டு வரும் தாழியை  உடைக்குதுகள் எங்கடை தலையெழுத்து.

சுமந்திரனுக்கும், சுரேன் ராகவனுக்கும் இடையில் நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், ஆளும் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றிய போது சுமந்திரன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியில் இருந்து கொண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய சுரேன் ராகவன் எதனையும் செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நாயைப் போன்று குரைக்க வேண்டாம் என சுரேன் ராகவனை சுமந்திரன் கோரியிருந்தார்.

அரசாங்கத்தின் அடிவருடியாக ராகவன் செயற்பட்டு வருவதாகவும், நலன்களுக்காக அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சரியென கூறி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, 15 ஆண்டுகள் நாடாளுமன்றில் இருந்து தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றீர்கள் என சுரேன் ராகவன், சுமந்திரனிடம் கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/sumanthiran-at-parliament-1624439780

  

சுமத்திரன்  பதவியில் இருந்தபோது என்ன செய்தார் ?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

நான் நினைக்கவில்லை  வழக்கம் போல் சுமத்திரன்  ராகவனை பார்த்து நாய் போல் குரைக்க வேண்டாம் என்று வெண்ணெய் திரண்டு வரும் தாழியை  உடைக்குதுகள் எங்கடை தலையெழுத்து.

சுமந்திரனுக்கும், சுரேன் ராகவனுக்கும் இடையில் நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், ஆளும் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றிய போது சுமந்திரன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியில் இருந்து கொண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய சுரேன் ராகவன் எதனையும் செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நாயைப் போன்று குரைக்க வேண்டாம் என சுரேன் ராகவனை சுமந்திரன் கோரியிருந்தார்.

அரசாங்கத்தின் அடிவருடியாக ராகவன் செயற்பட்டு வருவதாகவும், நலன்களுக்காக அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சரியென கூறி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, 15 ஆண்டுகள் நாடாளுமன்றில் இருந்து தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றீர்கள் என சுரேன் ராகவன், சுமந்திரனிடம் கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/sumanthiran-at-parliament-1624439780

  

சுமத்திரன்  பதவியில் இருந்தபோது என்ன செய்தார் ?

சும், சும்மா இருந்தாலே போதும். தானா விடுறவங்களையும் குழப்பி அடியாமல்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:
5 hours ago, shanthy said:

வாழ்வு அல்லது சாவு இரண்டில் ஏதாவது ஒரு முடிவுக்கு அரசு வந்தால் தான் தமிழ் அரசியல் கைதிகள் விடிவு சாத்தியம். 

ஒவ்வொருவரின் துயரம் நிறைந்த கதைகளுக்கு முடிவு வர வேண்டும். 

நாமலின் குரலுக்கு அவர்கள் விடுதலைக்கான வழிகள் வருமென்ற கைதிகள் நம்பிக்கை உண்மையாக வேண்டும். 

நாமலின்…. அப்பாவும், சித்தப்பாவும்தான்…

பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இருக்கிறார்கள்.

வெளிநாடுகளின் அழுத்தங்களில் இருந்து தப்பிக்கவும்

பொருளாதார சுமைகளில் இருந்து மக்களை திசைதிருப்பவும்

இப்படிப்பட்ட சேவைகள் தேவையாகுது.

எங்களுக்கு அரிசியானால் சரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, பெருமாள் said:

சுமத்திரன்  பதவியில் இருந்தபோது என்ன செய்தார் ?

மற்றவன் வாயை கிளறுவது :cool:

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

சும், சும்மா இருந்தாலே போதும். தானா விடுறவங்களையும் குழப்பி அடியாமல்.

வெகுவிரைவில் சிங்களவர்க்கு எதிராக தமிழர்களுக்கு பாவிக்கப்பட்ட ஆயுதம் திரும்பும் இன்று தென்னிலங்கை .

 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

மற்றவன் வாயை கிளறுவது :cool:

அதே ஆள் அதே வாய் இப்படியும் சொல்லுது .

அரசியல் கைதிகளை பொசன் போயாவில் விடுதலை செய்யவும்

BY ADMIN ON JUNE 23, 2021

அரசியல் கைதிகள் பற்றி, கடந்த 11 வருடங்களாக பேசிக்கொண்டிருக்கின்றோம். எதிரணியில் இருக்கும் எங்களுடைய அழுதங்களால், 100 கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்,  பொசன் போயா தினத்தன்று, முடிந்தால் சிலரை விடுதலைச் செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

https://thaainaadu.com/2021/06/23/அரசியல்-கைதிகளை-பொசன்-போ/?fbclid=IwAR2BPzouwLJyMxSNpk7DwIMRT6Z59tCVLVBDSE12CY_UKYphqc51pzec8iU

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதய வானொலிச் செய்தி நாளை சில அரசியல் கைதிகள் விடுவிக்கப் படவுள்ளனர்.மகிழ்ச்சியான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, சுவைப்பிரியன் said:

தற்போதய வானொலிச் செய்தி நாளை சில அரசியல் கைதிகள் விடுவிக்கப் படவுள்ளனர்.மகிழ்ச்சியான செய்தி.

சந்தோசம்.  

ஆனந்தசுதாகரனும் இன்னும் விடுவிக்கபடவில்லை என நினைக்கிறேன். அவரும் இதில் ஒருவர் என்றால் மேலும் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சும், சும்மா இருந்தாலே போதும். தானா விடுறவங்களையும் குழப்பி அடியாமல்.

சிலர் வாயால் பலரின் வாழ்க்கை தொலைந்து போயிட்டுது. ஆனால் அதுகள் தாங்கள் கூவித்தான் விடியுதெண்டு நினைக்கினம். 

38 minutes ago, goshan_che said:

சந்தோசம்.  

ஆனந்தசுதாகரனும் இன்னும் விடுவிக்கபடவில்லை என நினைக்கிறேன். அவரும் இதில் ஒருவர் என்றால் மேலும் மகிழ்ச்சி.

ஆனந்தசுதாகரன் உட்பட ஆயுள் தண்டனை கைதிகள் வரை இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

7 பேர் மட்டும் விடுதலை என்கிறது. டெயிலி மிரர்.

https://www.dailymirror.lk/breaking_news/Seven-ex-LTTE-members-in-prison-to-be-released/108-214677

  • கருத்துக்கள உறவுகள்

சூரியன் செய்தி 17 பேர் என்று சொல்லுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.