Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழரின் தமிழக மயக்கம்: தெளியாத போதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

 

அண்ணா, தம்பி,

என்னை பற்றி எழுதுவதெண்டால் குறைந்த பட்சம் ஒரு @goshan_che போட்டாவது எழுதுங்க மக்காள். நீங்கள் திரி திரியா புறு புறுப்பதற்கெல்லாம் தேடி தேடியா ஒரு மனுசன் பதில் எழுத முடியும்.

1. கூட்டமைப்பு றோவின் கைப்பாவை என்பதை நான் மறுக்கவில்லையே? இந்திய தூதரகத்தில் என்ன சிஐஏ ஆட்களா இருப்பார்கள்? இந்திய வெளிவிவகார அமைச்சரே 90களின் மத்தியில் இலங்கையின் ரோவின் ஏஜெண்ட்தான். கூட்டமைப்பு ரோ கிழித்த கோட்டை தாண்டாத பத்தினி என்பது ஊருக்கே தெரிந்த விசயம் இதில் கோசான் அதை பற்றி எழுதினால் என்ன. எழுதாவிட்டால் என்ன. தவிரவும் அந்த திரியில் - மிக தெளிவாக கோட்டா பேச மறுத்தவுடன், கூடமைப்பு இந்தியாவுடன் போய் பேசியுள்ளது என்று எழுதியே போனேன்.

2. கூட்டமைப்பை அடித்து துவைக்க நானும் ரெடி. ஒவ்வொருக்கா அடிக்கும் போதும் ஒரு @ போட்டு விடுங்கள். வந்து ஒரு கை போடுகிறேன்.

3. ஆனால் வியாழேந்திரனின், சந்திரகாந்தனின், முரளிதரனின் ஓட்டைகளை மறைக்க நீங்கள் கூட்டமைப்பையும், ஒட்டு மொத்த தேசிக்காய்களையும் போட்டு கும்முவதையும் சுட்டியும் காட்டுவேன்🤣.

கூட்டமைப்பு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் கீழேயே இயங்குகிறது. அது 100 வீதம் உண்மை. இது அமிர் காலத்திற்கு முன்பே ஆரம்பமாகிவிட்ட மயக்க நிலை. இந்திய ரோவின் திட்டமிடலான இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான கூட்டணியின் ஆதரவுமுதல், 2009 இல் "யுத்தம் முடியும்வரை வாயை மூடிக்கொள்ளுங்கள், யுத்தத்தின் பின்னர் 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கும் மேலான தீர்வினை மகிந்தவினூடாக வழங்குவோம்"  என்கிற இந்தியாவின் கட்டளைக்குப் பணிந்து கூட்டமைப்பு வேண்டுமென்றே மெளனம் காத்தது வரை. அதனது இன்றைய அரசியல் ஈழத்தமிழரின் அரசியலை புலிநீக்கம் செய்வதாகவும் இந்திய பணிப்புரைகளின்பேரில் நடப்பதனாலும் எதிர்க்கப்படுதல் அவசியம். இன்னொரு வழியில் சொல்லப்போனால், கூட்டமைப்பின் "
தெரிந்தே தமிழர் நலனைப் பலவீனப்படுத்தும்" அரசியல் எதிர்க்கப்படவேண்டும் என்பது கட்டாயம். 

ஆனால் இதற்கு மாற்றாக இனக்கொலையாளிகளால் களமிறக்கப்படும் உதிரிகளை எமது வாழ்வினை மீட்டெடுக்கும் அரசியலை முன்னெடுப்பவர்களாக ஏற்றுக்கொள்ள முடியுமா? இந்தியாவின் விருப்பத்தினால் கூட்டமைப்பு முன்னெடுக்கும் அரசியலால் எமக்கு வரவிருக்கும் ஆபத்தினைக் காட்டிலும், இனக்கொலையாளிகளால் களமிறக்கப்பட்டிருக்கும் உதிரிகள் முன்னெடுக்கும் அரசியல் ஆபத்துக் குறைந்ததா? அப்படியில்லையென்றால், இவர்களை நாம் எமது அரசியல் வழிநடத்துனர்களாக வரிந்துகொள்ளவேண்டிய தேவையென்ன? அப்படியில்லை, இவர்களது அரசியலுக்காக நாம் இவர்களை ஆதரிக்கவில்லை, மாறாக இவர்கள் மூலம் சில சலுகைகளை மட்டுமே பெற்றுக்கொள்ள விரும்புகிறோம் என்றால், அவர்களை அரசியத் தலைமைகளாக முன்னிறுத்துவதையாவது தவிர்க்கலாமே? - இதுதொடர்பாக அக்னியுடன் இனிமேல் பேசுவதில்லை என்றிருக்கிறேன். ஆனால், இக்கேள்வி பொதுவானது என்பதால் இங்கே கேட்கிறேன், இன்னொரு விவாதத்தினைத் தொடங்கவல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

பதில் கருத்து வைக்க பிந்திவிட்டது .

@கற்பகதருஉங்களுக்கும் தான் பாஸ் தமிழ் இடதுசாரிகளின் முக்கியமான ஆக்கம் ஆறுதலாக படித்து பாருங்கள் .

 

😂வட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால்..என்ற ஊர்ச் சிலேடை தான் நினைவுக்கு வருகிறது! அந்த நீளக் கட்டுரையை வரும் டிசம்பர் விடுமுறைக்குத் தான் வாசிக்க நேரம் கிடைக்கும்! எனவே சுருக்கமாகப் பதிலைச் சொல்லி முடியுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

என்னை பற்றி எழுதுவதெண்டால் குறைந்த பட்சம் ஒரு @goshan_che போட்டாவது எழுதுங்க மக்காள். நீங்கள் திரி திரியா புறு புறுப்பதற்கெல்லாம் தேடி தேடியா ஒரு மனுசன் பதில் எழுத முடியும்.

அண்ணே இது உங்களுக்கு இல்ல அண்ணே 
இது நம்ம தங்கமஜில்ஸ்இற்கும், மீனிலங்கோவிற்கும், வல்லிபுரநாதனுக்கும் அண்ணே 

 

1 hour ago, goshan_che said:

3. ஆனால் வியாழேந்திரனின், சந்திரகாந்தனின், முரளிதரனின் ஓட்டைகளை மறைக்க நீங்கள் கூட்டமைப்பையும், ஒட்டு மொத்த தேசிக்காய்களையும் போட்டு கும்முவதையும் சுட்டியும் காட்டுவேன்🤣.

தாராளமாக நீங்களும் கும்மலாம் அண்ணே, ஆனாலும் பாருங்கோ போட்டது தான் போட்டம் வாக்கை 
அமெரிக்க காங்கிரஸ் விடுதலை புலிகள் தமிழர்களுக்காக போராடினார்கள் என்கிறது, EU GSP + இல் கை வைக்குது, எதிர்க்கட்சியாக இருந்தே சாதிக்கமுடியாத அரசியல் கைதிகள் விடுதலை அசால்ட்டாக நடக்குது 
எவ்வளவு பனம்பழங்கள் விழுகுது, காக்கை இருக்குதோ கொக்கு இருக்குதோ அது முக்கியமில்லை, பழம் விழுதா என்பது தான் இப்போ ஈழத்தமிழர்களுக்கு முக்கியம், அதைவிட முக்கிய தலைவராக ஈழத்தமிழர்களுக்கு தரப்படவிருந்த அம்பிகா அன்றி விதிர்விதிர்த்து போய் விடுதலைக்கு நான்கு ஐந்து மாசம் மிச்சம் இருக்கும்  போதே விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தனது ரிட்டயர்மெண்ட் பிளானில் மண்ணை தூக்கி போட்டுவிட்டார்களே என்று ஒப்பாரி வைக்காத குறையாக அறிக்கை விடுறார், இதையெல்லாம் பார்க்கும் போது ஒன்று மட்டும் தெளிவாக விளங்குது காட்டின காட்டு நல்லாத்தான் வேலை செய்யுது என்று     

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணே இது உங்களுக்கு இல்ல அண்ணே 
இது நம்ம தங்கமஜில்ஸ்இற்கும், மீனிலங்கோவிற்கும், வல்லிபுரநாதனுக்கும் அண்ணே 

 

தாராளமாக நீங்களும் கும்மலாம் அண்ணே, ஆனாலும் பாருங்கோ போட்டது தான் போட்டம் வாக்கை 
அமெரிக்க காங்கிரஸ் விடுதலை புலிகள் தமிழர்களுக்காக போராடினார்கள் என்கிறது, EU GSP + இல் கை வைக்குது, எதிர்க்கட்சியாக இருந்தே சாதிக்கமுடியாத அரசியல் கைதிகள் விடுதலை அசால்ட்டாக நடக்குது 
எவ்வளவு பனம்பழங்கள் விழுகுது, காக்கை இருக்குதோ கொக்கு இருக்குதோ அது முக்கியமில்லை, பழம் விழுதா என்பது தான் இப்போ ஈழத்தமிழர்களுக்கு முக்கியம், அதைவிட முக்கிய தலைவராக ஈழத்தமிழர்களுக்கு தரப்படவிருந்த அம்பிகா அன்றி விதிர்விதிர்த்து போய் விடுதலைக்கு நான்கு ஐந்து மாசம் மிச்சம் இருக்கும்  போதே விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தனது ரிட்டயர்மெண்ட் பிளானில் மண்ணை தூக்கி போட்டுவிட்டார்களே என்று ஒப்பாரி வைக்காத குறையாக அறிக்கை விடுறார், இதையெல்லாம் பார்க்கும் போது ஒன்று மட்டும் தெளிவாக விளங்குது காட்டின காட்டு நல்லாத்தான் வேலை செய்யுது என்று     

நீங்கள் கோல்டன் பீகொக்கிற்கு எறிந்த தொப்பியை நான் மாட்டி கொண்டதற்கு மன்னிகவும்.

ஆனால் இந்த நற்பலன்கள் எல்லாம் நீங்கள் கூட்டமைப்பை தோற்கடித்ததாலோ, வியாழேந்திரனையும், சந்திரகாந்தனையும் வெல்ல வைத்ததாலோ நடக்கவில்லை அக்னி. 

இது காகம் இருக்க பனம் பழம் இல்லை, பனை மரம் வீழ்ந்த கதை.

அமெரிக்க தீர்மானத்துக்கு - அமெரிக்க நலன் முழுமுதல் காரணம்.

ஜி எஸ் பி க்கும் அதுவே.

அரசியல் கைதிகள் விடயத்துக்குக்கும் துமிந்த சில்வாவும், நாமலின் எதிர்கால அரசியல் கனவும் காரணம். 

ஆனால் கோட்ட வெல்ல வேண்டும் என்று எழுதியது - நீங்கள் அந்த நேரம் சொல்லிய அபிவிருத்தி/ முஸ்லீம்களுக்கு எதிரான பாதுகாப்பு என்ற விதத்தில் கொஞ்சமும் பலந்தராதுவிடிலும், இலங்கையின் சீன நெருக்கம் கூடியதன் மூலம் சிறிதளவு பலன் தருமால் போல் படுகிறது.

இது காக்கை இருக்க விழுந்த பனம் பழம்தான். ஆனாலும் கோட்ட வென்றால் எமக்கு நன்மை வரும் என்ற உங்கள் கணிப்பு, நீங்கள் எதிர்பாரா கோணத்திலாகவேனும் பலித்துள்ளது என்பதை ஏற்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ஆனாலும் கோட்ட வென்றால் எமக்கு நன்மை வரும் என்ற உங்கள் கணிப்பு,

சிறு திருத்தம் அண்ணை, கோத்தா வென்றால் எமக்கு நன்மை வரும் என்பதல்ல எனது கணிப்பு 
கோத்தா வெல்லப்போகிறார் அதுவும் தனிச்சிங்கள பெரும்பான்மையுடன் வெல்லப்போகிறார் என்பதே எனது கணிப்பு, அதுதான் நடந்தது அப்போது நான் கேட்ட கேள்வி அப்படி அவர் வென்றால் தமிழ் தரப்பிடம் என்ன அரசியல் இருக்கிறது ...? அல்லது   நாம்  செய்யப்போகும் அரசியல் என்ன என்பதே..? அதற்கான தெளிவான பதிலை யாராலும் வழங்கமுடியவில்லை, கூத்தமைப்பிற்கு அதிர்ச்சி வைத்தியமும் குறுகிய கால நலன்களுக்குமாகவே இந்த மாற்றுத்தெரிவுகள். தற்போதும்  பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன் நான்  இவர்களை மனிதரில் மாணிக்கங்களாகவோ, தேவதூதர்களாகவோ காட்சிப்படுத்தவில்லை.
கூத்தமைப்பிற்கெதிரான இந்த பரிசோதனை முயற்சி சிறப்பான தருணத்தில் நடத்தப்பட்டுள்ளதாகவே நான்  பார்க்கிறேன், கூத்தமைப்போ  மாற்று அணியினரோ பலமாக இருந்தாலோ அல்லது பலமிழந்து இருந்தாலோ எதனையும் சாதிக்க முடியாத இந்த  புறச்சூழல் கூத்தமைப்பிற்கு எதிரான பரிசோதனை முயற்சிக்கு கனகச்சிதமாக பொருந்தி விட்டது, காரணம் கூத்தமைப்பும் பின்னொரு நாள் நாங்கள் தமிழர்களின் முழுப்பிரதிநிதித்துவத்தையும் பெற்றிருந்தால் கிழித்திருப்போம் என்று எக்காலத்திலும் கூறமுடியாத அளவுக்கு அவர்களது பிரதிநிதிகளும், எஜமானாரும்  முடங்கியிருப்பதால் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளட்டும், அரச ஆதரவு பிரதிநிதிகளோ தாங்கள் எத்தனை முன்னிறுத்தினார்களோ அவற்றில் கவனம் செலுத்தட்டும், இரு பக்கத்திற்கும் சமனான வாய்ப்பு, இருபக்கத்தாலும் முடியவில்லை என்றால் 
இருபக்கத்தையும் உறங்கு நிலையில் வைத்து இவர்களை வைத்து தங்களது அபிலாசைகளை நிறைவேற்ற துடிக்கும் எஜமானர்களை கோதாவில் இறக்கிவிடல் ,  (தற்போது மெதுவாக மெதுவாக இந்த ஆட்டம் சூடு பிடிக்கிறது), நாம் கையாளப்படமுடியாதவர்களாக மாறுவதே இனி எம்முடைய அரசியலாக இருக்க முடியும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

😂வட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால்..என்ற ஊர்ச் சிலேடை தான் நினைவுக்கு வருகிறது! அந்த நீளக் கட்டுரையை வரும் டிசம்பர் விடுமுறைக்குத் தான் வாசிக்க நேரம் கிடைக்கும்! எனவே சுருக்கமாகப் பதிலைச் சொல்லி முடியுங்கள்!

கடை வீதியில் வேகமாக போய்க்கொண்டு இருக்கிறேம்  திடிரென வயதான  அம்மா வீதியை கடக்க உதவி கேட்க்கிறார்  அமைதியாக அதே நேரம் அவரின் வேகத்துக்கு மெதுவாக அவருடன் கடந்து உதவி செய்வதில்லையா ?

@Justinஉங்களை புரிந்துகொள்கிறேன் பரவாயில்லை ஆறுதலாகவே இது பற்றி விவாதிப்பம் டிசம்பர் விடுமுறையின் பின் விவாதிப்பம் நன்றி வணக்கம் .🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 28/6/2021 at 22:24, Kandiah57 said:

உண்மை  

இது  உண்மை தான்  இந்திரா  எம்.ஜி.ஆரிடம்  நேரேயே சொல்லியுள்ளார் தமிழ் ஈழம் உருவாகக்கமாட்டோம்  என்று. காரணம். இலங்கையில். பகை நாட்டை உருவாக்க விரும்பவில்லை....மலையகத்தமிழர்  கஸ்ரப்படவேண்டிவரும்.  இதனை  எம்.ஜி ஆர் எதிர்க்கவில்லை  தமிழ்நாட்டை ஆட்சிசெய்த (கவனிக்கவும்  ஆட்சி செய்த)

எந்தத்தலைவரும்  தமிழ்ஈழம் அமைத்துக்கொடுக்குமாறு  இந்திய மத்தியரசை கோரவில்லை மாறாக. இந்திய மத்தியரசு செய்ததை பார்த்துக்கொண்டருந்தார்கள்  எதிர்த்து போராடியதில்லை. துணித்து போராடியதில்லை...ராஜிவ்.  ஜே.ஆர்....அத்துல்ல முதலி .. போன்றோர். சொன்னாதை. முழுமையாக் ஏற்றுக்கொண்டார்...இராணுவழியை பின்பற்றாது. அமிருடன்  பேசி தீர்வுகாணுமாறு வேண்டிக்கொண்டார் ..பார்த்தசாரதியையும் துக்கிவிட்டார் ...இது ஜே.ஆரின் வெற்றியாகும். ஜே.ஆர் இந்தியாவில்  ஒன்றையும்.  இலங்கையில் வேறு ஒன்றையும் சொல்லுவார்  பேச்சுவார்த்தையை  குழப்புவதற்காக. புத்தபிக்குகளையும்  சேர்த்து. வட்டமேசை மாகநாடு. என நாடகமாடி. காலத்தைக் கடத்தினார்.  காலம் கடத்தே ராஜிவ். ஜே.ஆரைப் புரித்து கொண்டார்  அந்தக்கோபத்திலிருந்தபோது தான் இலங்கையில் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்தது  எனவே சாப்பட்டைப்போட்டு. கோபத்தை தீர்த்துக்கொண்டார்.  இதனால் இலங்கைத் தமிழருக்கு தீர்வா கிடைத்துவிட்டது.  இந்தியா இணுவத்தின். செயல்பாடுகளை வடக்கு..கிழக்கில். கட்டுப்படுத்த முடியாத கருணநிதி. அந்த இராணுவத்தை. வரவேற்கமால் விட்டதில் என்ன வியப்புண்டு...இதனால்  ஈழத்தமிழருக்கு எந்த நன்மையும் எற்படவில்லை 

ராஜிவ் சாப்பாடு போடமால். தமிழ்ஈழக்கோரிக்கையை. அங்கீகரித்திருத்தால் ....இன்று. பிரச்சனை. தீர்த்து இருக்கும் .

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இது  உண்மை தான்  இந்திரா  எம்.ஜி.ஆரிடம்  நேரேயே சொல்லியுள்ளார் தமிழ் ஈழம் உருவாகக்கமாட்டோம்  என்று. காரணம். இலங்கையில். பகை நாட்டை உருவாக்க விரும்பவில்லை....மலையகத்தமிழர்  கஸ்ரப்படவேண்டிவரும்.  இதனை  எம்.ஜி ஆர் எதிர்க்கவில்லை  தமிழ்நாட்டை ஆட்சிசெய்த (கவனிக்கவும்  ஆட்சி செய்த)

எந்தத்தலைவரும்  தமிழ்ஈழம் அமைத்துக்கொடுக்குமாறு  இந்திய மத்தியரசை கோரவில்லை மாறாக. இந்திய மத்தியரசு செய்ததை பார்த்துக்கொண்டருந்தார்கள்  எதிர்த்து போராடியதில்லை. துணித்து போராடியதில்லை...ராஜிவ்.  ஜே.ஆர்....அத்துல்ல முதலி .. போன்றோர். சொன்னாதை. முழுமையாக் ஏற்றுக்கொண்டார்...இராணுவழியை பின்பற்றாது. அமிருடன்  பேசி தீர்வுகாணுமாறு வேண்டிக்கொண்டார் ..பார்த்தசாரதியையும் துக்கிவிட்டார் ...இது ஜே.ஆரின் வெற்றியாகும். ஜே.ஆர் இந்தியாவில்  ஒன்றையும்.  இலங்கையில் வேறு ஒன்றையும் சொல்லுவார்  பேச்சுவார்த்தையை  குழப்புவதற்காக. புத்தபிக்குகளையும்  சேர்த்து. வட்டமேசை மாகநாடு. என நாடகமாடி. காலத்தைக் கடத்தினார்.  காலம் கடத்தே ராஜிவ். ஜே.ஆரைப் புரித்து கொண்டார்  அந்தக்கோபத்திலிருந்தபோது தான் இலங்கையில் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்தது  எனவே சாப்பட்டைப்போட்டு. கோபத்தை தீர்த்துக்கொண்டார்.  இதனால் இலங்கைத் தமிழருக்கு தீர்வா கிடைத்துவிட்டது.  இந்தியா இணுவத்தின். செயல்பாடுகளை வடக்கு..கிழக்கில். கட்டுப்படுத்த முடியாத கருணநிதி. அந்த இராணுவத்தை. வரவேற்கமால் விட்டதில் என்ன வியப்புண்டு...இதனால்  ஈழத்தமிழருக்கு எந்த நன்மையும் எற்படவில்லை 

ராஜிவ் சாப்பாடு போடமால். தமிழ்ஈழக்கோரிக்கையை. அங்கீகரித்திருத்தால் ....இன்று. பிரச்சனை. தீர்த்து இருக்கும் .

 

"சில விடயங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சினையில், எந்த நிலையிலுமே தமிழக அரசு, மத்திய அரசை மீறிச் செயற்படத் துணிந்ததில்லை. உண்மையில், அந்த விதமான எண்ணம் இருந்ததுமில்லை"

நீங்கள் எழுதியது எல்லாம் கால நேர்கோட்டில் இல்லை 
எல்லாவற்றையும் கால நேர்கோட்டில் தேதி ரீதியாக சரிபடுத்தினாலே போதும் 
எவ்வாறான அழுத்தம் எம்ஜிஆர் இடம் இருந்து கிடைத்து என்பதுக்கு. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.