Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரிஷாட்டின் மனைவி உட்பட நால்வரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட்டின் மனைவி உட்பட நால்வரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

July 24, 2021
spacer.png

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த சிறுமி ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நான்கு பேரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த நால்வரையும் 48 மணி நேரம் விசாரணை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் ரிஷாட் பதியுதீனின் மனைவியை விசாரணை செய்ய கிருலப்பனை காவற்துறையினரிற்கும் ஏனைய மூவரையும் விசாரணை செய்ய பொரளை காவற்துறையினரிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 

https://globaltamilnews.net/2021/163817

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாத் வீட்டில் 11 மலையக யுவதிகள் துன்புறுத்தப்பட்டனர் !சிலர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகினர்

 

C47D0D38-8EED-4C4E-AA16-7D5FFCEF0DC4.jpe

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்களாக மலையக பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 11 யுவதிகள் கடுமையான வன்முறைக்குள்ளாகியதாகவும், அவர்களில் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக அழைத்து வரப்பட்ட யுவதியொருவர், பம்பலப்பிட்டி பகுதியில் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்தும் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ரிஷாத் பதியுதீனின் உத்தியோகபூர்வ வீட்டில் வைத்து டயகம பகுதியை சேர்ந்த 22 வயதான யுவதியொருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது பற்றிய முழுமையான தகவல்கள் கிடைத்ததையடுத்து, ரிஷாத் பதியுதீனின் மனைவியின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னை துஷ்பிரயோகம் செய்த அறையையும் யுவதி அடையாளம் காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ரிஷாத் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரன், தரகர் ஆகியோர் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள்.

சிறுமிகளை பணிப்பெண்களாக அமர்த்தியமை, துன்புறுத்தியமை, பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, மேற்கு மாகாண மகளிர் குழந்தைகள் பிரிவை சேர்ந்த வருணி போகவத்த தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்களாக செயற்பட்ட மலையகத்தை சேர்ந்த 11 யுவதிகளிடமும் வாக்குமூலம் பெறுவதற்காக இந்த குழு அந்த பகுதிகளிற்கு சென்றுள்ளது.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள தரகர் பொன்னையா என்பவரே, மலையகத்தை இத்தனை யுவதிகளையும் பணிப்பெண்களாக அழைத்து வந்துள்ளார்.

பணிப்பெண்களை வழங்கி, தரகர் பெருமளவு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த சிறுமி இஷாலினி அண்மையில் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். அவர் நீண்டகாலமாக துஷ்பிரயோகத்திற்குள்ளாகியது தெரிய வந்துள்ளது.

சிறுமியை 8 மாதங்களாக வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை என்றும், ஒரு மாதத்திற்கும் மேலாக தனது பெற்றோருக்கு தொலைபேசியில் பேச அனுமதிக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

சிறுமி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டின் பின்னால் ஒரு தனி சிறிய அறையில் தங்க வைக்கப்பட்டார். அந்த அறையில் மின்சாரம் இல்லை. இருவர் படுக்கக்கூடிய இரும்பு கட்டில் இடப்பட்டிருந்தது.

இரவு 10.30 மணியளவில் சிறுமியை அறையில் வைத்து கதவு மூடப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு அறை திறக்கப்பட்டது. இதற்கிடையில், அவர் கழிப்பறைக்கு செல்ல கூட அனுமதிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

மேற்கு மாகாணத்தின் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி தேசபந்து தென்னக்கோனின் மேற்பார்வையில் ஐந்து சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.
 

https://www.meenagam.com/ரிஷாத்-வீட்டில்-11-மலையக-யு/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதை அரசியலாக்கி குளிர்காய பார்கின்றனர் சிங்கள இனவெறி அரசியல்வாதிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட மூவருக்கும் ஆகஸ்ட் 9 வரை விளக்க மறியல்

சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூன்று பேரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ரிஷாட்டின் மனைவி, அவரின் தந்தை மற்றும் சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து வந்த தரகர் உள்ளிட்டோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கடந்த சனிக்கிழமை முதல் 48 மணி நேரத்திற்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அதன்பின்னர் இன்று அவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது இவர்களை 9 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான்ன் மரணம் தொடர்பில் மற்றுமொரு பிரேத பரிசோதனையை நடத்துமாறும், அதற்காக புதைக்கப்பட்ட உடலை மீண்டும் தோண்டியெடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
http://www.samakalam.com/ரிஷாட்டின்-மனைவி-உள்ளிட்/

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளியாகும் அதிர்ச்சி தகவல் ! மலசலகூடத்திற்குள் பணிப்பெண்களின் முகத்தை வைத்து அசுத்தநீரை திறந்து விடும் ரிசாத்தின் மனைவி

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிலுள்ள மலசலகூடத்தை சரியாக சுத்தம் செய்யாத பட்சத்தில், அவரது மனைவி தமது முகத்தை மலசலகூட கொமட்டிற்குள் வைத்து, அசுத்தமான நீரை தம்மீது திறந்து விடுவார் என பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய பெண்ணொருவரே, பொலிஸாருக்கு இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பிரபல சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த 11 பெண்களில் ஒருவரே இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார். ரிஷாட் பதியுதீனின் மனைவி மாத்திரமன்றி, அவரது உறவினர்களும் வீட்டுப் பணிப் பெண்களுக்கு பாரிய துன்புறுத்தல்களை வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் வீட்டிலுள்ள விளக்குமாறு உடையும் வரை, பணிப் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 11 பேரில், 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர். ஒரு யுவதி பம்பலபிட்டி ரயில் தண்டவாளத்தில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன், மற்றைய யுவதி நோய்க்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், இஷாலினி தீ காயங்களுடன் மர்மமான முறையில் கடந்த 15ம் திகதி உயிரிழந்திருந்தார். ஏற்கனவே உயிரிழந்த யுவதிகளின் மரணங்கள் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரும் தாயத்துக்களைப் பெறத் தொடங்கியுள்ளனர்.

இதேவேளை, ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த அனைத்து பெண்களிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

 

https://www.meenagam.com/வெளியாகும்-அதிர்ச்சி-தகவ/

 

  • கருத்துக்கள உறவுகள்

பலநாள் திருடர் ஒருநாள் அகப்பட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

வெளியாகும் அதிர்ச்சி தகவல் ! மலசலகூடத்திற்குள் பணிப்பெண்களின் முகத்தை வைத்து அசுத்தநீரை திறந்து விடும் ரிசாத்தின் மனைவி

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிலுள்ள மலசலகூடத்தை சரியாக சுத்தம் செய்யாத பட்சத்தில், அவரது மனைவி தமது முகத்தை மலசலகூட கொமட்டிற்குள் வைத்து, அசுத்தமான நீரை தம்மீது திறந்து விடுவார் என பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

—-இதற்கிடையில், ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரும் தாயத்துக்களைப் பெறத் தொடங்கியுள்ளனர்.

ரிஷாத்தின் மனைவிக்கு…. சவூதி அரேபியாவில் கொடுக்கிற மாதிரி… சவுக்கடி கொடுத்து, தலையை சீவி எறிய வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்கள் மட்டுமல்ல

வீடும் அராபிய நாடுகளின் குடும்பமாகவே   இருந்திருக்கிறது???😢

ரிஷாட்டிற்கும் அவர் குடும்பத்துக்கும் சார்பாக (அதாவது இந்த சிறுமியின் குடும்பத்துக்கு எதிராக) வாதாடுவது தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர்  K.V தவராசாவின் மனைவியாரான கெளரிசங்கரி தவராஜா ஆகும்.

..கேட்டால் இது தொழில் ரீதியிலானது என்று சப்பைக் கட்டு கட்டவும் பலர் உள்ளனர். ஆனால் தொழிலில் தர்மம் என்றது கொஞ்சமாவது இருக்க வேண்டாமா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தவராசா தானே சுமந்திரனுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு திரிபவர். தவத்தைப் பார்த்து பரிதாபமாகச் சிரிக்கத்தான் முடிகிறது!

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வாலி said:

இந்தத் தவராசா தானே சுமந்திரனுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு திரிபவர்.

சுமந்திரனுக்கு எதிரானவர் என்றால் அவர் நியாயத்தின் பக்கம் நிற்பவர் என்றுதானே பொருள்படும்?

2 hours ago, நிழலி said:

ஆரிஷாட்டிற்கும் அவர் குடும்பத்துக்கும் சார்பாக (அதாவது இந்த சிறுமியின் குடும்பத்துக்கு எதிராக) வாதாடுவது தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர்  K.V தவராசாவின் மனைவியாரான கெளரிசங்கரி தவராஜா ஆகும்.

ஆகவே நியாயம் ரிஷாட்டின் குடும்பத்தின் பக்கம் என்றாகிறது இல்லையா? இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுமந்திரன் அநியாயத்தின் பக்கமான சிறுமியின் பக்கம் வழக்கை முன்னெடுத்து வெற்றியீட்ட வாழ்த்துகள்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ரிஷாட்டிற்கும் அவர் குடும்பத்துக்கும் சார்பாக (அதாவது இந்த சிறுமியின் குடும்பத்துக்கு எதிராக) வாதாடுவது தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர்  K.V தவராசாவின் மனைவியாரான கெளரிசங்கரி தவராஜா ஆகும்.

..கேட்டால் இது தொழில் ரீதியிலானது என்று சப்பைக் கட்டு கட்டவும் பலர் உள்ளனர். ஆனால் தொழிலில் தர்மம் என்றது கொஞ்சமாவது இருக்க வேண்டாமா?

நானும் இதனைப் பார்த்த போது அவமானத்தால் அவதிப்பட்டேன்😭

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

ரிஷாட்டிற்கும் அவர் குடும்பத்துக்கும் சார்பாக (அதாவது இந்த சிறுமியின் குடும்பத்துக்கு எதிராக) வாதாடுவது தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர்  K.V தவராசாவின் மனைவியாரான கெளரிசங்கரி தவராஜா ஆகும்.

அப்பவே சொல்லல எங்கடை புட்டுக்கள் நீதிமன்ற கேற் பூட்டியிருக்கென்று  மதில் தாண்டிக்குதிச்சாவது ஓடிப்போய் தேங்காய்ப்பூக்களுக்காக ஆஜராவினம் என்று, 
அதிலும் காமெடி இந்த புட்டுக்களின் தாசர்களது உள்வீட்டு குடுமிப்புடி சண்டைகள், முழுப்புட்டுகளுமே திருட்டு கூத்தாடிகள் தான் அதிலென்ன நல்லபுட்டு கள்ளப்புட்டு,
எங்கே  இதே ரிசார்ட்டாக ஒரு தமிழனும் தீவைத்து கொல்லப்பட்ட இடத்தில் ஒரு முஸ்லீம் சிறுமியும் இருந்திருந்தால் ஒரு தேங்காய்ப்பூவாவது எவ்வளவு கோடி கொட்டிக்கொடுத்தாலும் நீதிமன்ற வாசல்படி எட்டி பார்த்திருக்குமா ...? 
அதுதான் அவர்கள் இதுதான் நாங்கள்   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.