Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாய்... இறந்த சோகத்தில், உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா – யாழில் சம்பவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாய் இறந்த சோகத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா – யாழில் சம்பவம்!

நாய்... இறந்த சோகத்தில், உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் செல்லப் பிராணியான நாய் திடீரென உயிரிழந்த சோகத்தில் 5 நாட்கள் சாப்பிடாமல் இருந்த வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பின்னர் அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை மூளாய் வீதியைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜெயமலர் (வயது-61) என்ற 3 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த சடலம் சுகாதார முறைப்படி மின்தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1233399

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் எல்லோரும் வெளிநாட்டில் இருப்பினம் ....அம்மாவுக்கு நாய் தான் பிள்ளை ...இருவரது ஆன்மாவும் சாந்தியடையட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

பிள்ளைகள் எல்லோரும் வெளிநாட்டில் இருப்பினம் ....அம்மாவுக்கு நாய் தான் பிள்ளை ...இருவரது ஆன்மாவும் சாந்தியடையட்டும் 

இன்றைய சிறீலங்க நாட்டு நடைமுறை இதுதான். நாட்டை ஆட்சி செய்து வருவதே நாய்கள்தான்.😲

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

பிள்ளைகள் எல்லோரும் வெளிநாட்டில் இருப்பினம் ....அம்மாவுக்கு நாய் தான் பிள்ளை ...இருவரது ஆன்மாவும் சாந்தியடையட்டும் 

இருக்கலாம்??

ஏன்  ஊரில்  பிள்ளைகள்  இருந்தாலும்  நிலமை இது  தான்???

  • கருத்துக்கள உறவுகள்

 

அதேநேரம், வீட்டில் வளர்ப்பு பிராணிகள் வளர்த்து பழகிவிட்டால் அது இறந்தாலோ காணாமல் போய்விட்டாலோ எத்தனைபேர் கூட இருந்தாலும்  குடும்பத்தில் ஒரு உறுப்பினரை இழந்ததுபோலொரு  சோகம் அனைவர் வீட்டிலும் நிலவும் சிலவீடுகளில் அதைவிட மோசமா துயரம் நிகழும்.

ஊரில் ஆசையாக ஒரு நாய் வளர்த்திருந்தேன் ,அதிகாலையில் தூங்கவிட மாட்டுது, வெளியில் எங்கேயும் போய் வந்தால் திரும்பி வரும்வரை  வாசல் கதவிலேயே வந்து பார்த்துக்கொண்டு குந்தியிருக்கும்,

உறுக்கி பேசினால் அடிக்கிறமாதிரி போனால் ஒருநாள் முழுவதும் சாப்பிடமாட்டுது, அப்புறம் கெஞ்சி கூத்தாடி இனிமே அப்படி பண்ணமாட்டேன் எண்டு சொல்லி தலையை தடவினாதான் சாப்பிடும். அம்மா அப்பா அண்ணாகூட என்னை திட்டுவது அடிப்பதென்றால் நாய் நிக்குதோ எண்டு வடிவா ஒருக்கா பாத்திட்டுத்தான் ஆரம்பிப்பினம்,  பார்த்துது என்றால் பாய்ஞ்சு கடிச்சு வைச்சிடும்.

திடீரென்று ஒருநாள் காணாமல் போட்டுது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்ன ஆச்சுதோ என்றும் தெரியவில்லை, வீட்டில் உள்ளோர் ஆறுதல் சொல்லியும் பலநாள் அழுதேன்  ஒழுங்கா சாப்பிட்டதும் குறைவு. செத்திடலாமோ என்ற உணர்வுகூட வந்திருக்கு.

எங்கள் அயலில் ஒரு புண்ணியவான் தனக்கு சொந்தமில்லாத கோழிகள் நாய்கள் அவர் ஏரியாவுக்கு போனால் சோற்றில் பொலிடோல் கலந்து வைத்து அவற்றை கொல்வதும் யாரும் அறியாமல் அவற்றை வெட்டி புதைப்பதும் வாடிக்கையாக வைத்திருப்பார், அவர் கைங்கரியமே அது என்று இன்றுவரை நம்புகிறேன்,

என் நாயையும் அவரையும் எந்த காலமும் மறக்கமாட்டேன்.அதற்கப்புறம் வீட்டில்இனி  நாய் வளர்ப்பதேயில்லையென்ற முடிவுக்கு வந்திருந்தேன்.

 

இந்த அம்மா நாய் இறந்த சோகத்திலோ அல்லது கொரோனாவாலோ இறந்திருந்தாலும் இரண்டுமே துயரம்தான். அவருக்கு அஞ்சலிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட வீட்டையும் நான் சின்னனாக இருக்கேக்க ஒரு நாய் வளர்த்தோம்.. எனக்கு அம்மா அடிக்குர அடியில பாதி அம்மம்மாவும் பாதி அந்த நாயும்தான் வாங்குரது.. அம்மாக்கும் எனக்கும் நடுவில நிண்டு முன்கால் ரெண்டாலும் எழும்பி நிண்டு என்னய கட்டிபுடிச்சுகொண்டு என்னைய சுத்தி சுத்தி நிண்டு அடி எனக்கு விழாமல் பாதுகாக்கும்.. அம்மாவை பாத்து உறுமி வெருட்டும் அம்மா எனக்கு அடிக்க கை ஓங்க..  நான் எங்கையாலும் போட்டு ரெண்டு மூண்டு நாள் நிண்டுட்டு திரும்பி வரேக்க ரெண்டு வீட்டுக்கு முன்னுக்கு நான் வரேக்கையே என்னப்பாக்காமலே நான் வாறதை மோப்பம் புடிச்சு குழறி அழும் பெரிய சத்தமா.. அதுக்கு பிறகு வளர்த்த எல்லா நாய்க்கும் அந்த முதல் நாயோட பெயர்தான் வைத்தோம்.. அது இறந்தபோது பலநாட்களாக வீட்டில் யாரும் சரியாக சாப்பிடவில்லை.. அதுக்கு பிறகு பலநாய் வளத்தாலும் என் வாழ்நாளில் அந்த நாய மறக்கேலா… இணையத்தில் பல செக்குரிட்டி கேள்விகளுக்கு முதல் செல்லப்பிராணியோட பெயரை செலக்ட் பண்ணி அந்த நாயோட பேரதான் குடுப்பேன்..❤️❤️

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லையில்லா பாசம்.

Ist möglicherweise ein Bild von Text „எஜமானனை தேடி 14 ஆண்டுகள்.. இத்தாலியில் அலுவலகம் சென்ற எஜமான் ஒருநாள் வீடு திரும்பவில்லை. அவர் குண்டடிபட்டு இறந்துபோய் விட்டார் என்பதைக்கூட அறியாத அவரது நாய் பிடோ வழக்கம்போல் மாலை' 6 மணிக்கு பேருந்து நிலையத்திற்கு வந்து காத்திருந்தது எஜமானன் வராததால் ஏமாற்றம் அடைந்த நாய், வீடு திரும்பிவிட்டு மீண்டும் மறுநாள் மாலை பேருந்து நிலையம் வந்தது. அன்றும் ஏமாற்றமே மிஞ்சியது. இப்படியே ஒருநாள் இரண்டு நாள் அல்ல, 14 ஆண்டுகள் தினமும் பேருந்து நிலையம் வந்து காத்தி உயிரை விட்ட பிடோ என்ற நாய்க்கு அதே பேருந்து நிலையத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. AFIDO ESEAPIE EDEETA“

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2021 at 22:43, பாலபத்ர ஓணாண்டி said:

எங்கட வீட்டையும் நான் சின்னனாக இருக்கேக்க ஒரு நாய் வளர்த்தோம்.. எனக்கு அம்மா அடிக்குர அடியில பாதி அம்மம்மாவும் பாதி அந்த நாயும்தான் வாங்குரது.. அம்மாக்கும் எனக்கும் நடுவில நிண்டு முன்கால் ரெண்டாலும் எழும்பி நிண்டு என்னய கட்டிபுடிச்சுகொண்டு என்னைய சுத்தி சுத்தி நிண்டு அடி எனக்கு விழாமல் பாதுகாக்கும்.. அம்மாவை பாத்து உறுமி வெருட்டும் அம்மா எனக்கு அடிக்க கை ஓங்க..  நான் எங்கையாலும் போட்டு ரெண்டு மூண்டு நாள் நிண்டுட்டு திரும்பி வரேக்க ரெண்டு வீட்டுக்கு முன்னுக்கு நான் வரேக்கையே என்னப்பாக்காமலே நான் வாறதை மோப்பம் புடிச்சு குழறி அழும் பெரிய சத்தமா.. அதுக்கு பிறகு வளர்த்த எல்லா நாய்க்கும் அந்த முதல் நாயோட பெயர்தான் வைத்தோம்.. அது இறந்தபோது பலநாட்களாக வீட்டில் யாரும் சரியாக சாப்பிடவில்லை.. அதுக்கு பிறகு பலநாய் வளத்தாலும் என் வாழ்நாளில் அந்த நாய மறக்கேலா… இணையத்தில் பல செக்குரிட்டி கேள்விகளுக்கு முதல் செல்லப்பிராணியோட பெயரை செலக்ட் பண்ணி அந்த நாயோட பேரதான் குடுப்பேன்..❤️❤️

இதே போல்தான் என்னையும் , எங்களையும் கட்டிக்காத்த எனது நாய் ராணுவம் வளவில் வர விடவில்லை அவனது காலை கடிக்க ரவுசர் பல்லில் மாட்டி அதை கிளித்தும் விட்டது கோபத்தில் சுட்டான் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தது அன்றிலிருந்து பாசமாக நாய் வளர்ப்பது கிடையாது இது கூண்டில் அடைத்து வளர்க்கப்படும் நாய் அல்ல நம்ம நாட்டு நாய் . வேகமும் வேகமும் கூடியது .

 

On 10/8/2021 at 11:58, ரதி said:

பிள்ளைகள் எல்லோரும் வெளிநாட்டில் இருப்பினம் ....அம்மாவுக்கு நாய் தான் பிள்ளை ...இருவரது ஆன்மாவும் சாந்தியடையட்டும் 

கன வீடுகளில் இதுதான் நிலை இங்குள்ள சொத்துக்களுக்கு பாதுகாப்பாகவும் பராமரிப்புக்கும் விட்டுச்செல்கிறார்கள் . சிங்கள பகுதியில் வீட்டுனுள்ளே இறந்து கிடந்தாக செய்திகளில் முதியவர்கள் படம் வந்தது அந்த நிலை நமது பிரதேசங்களில் வரக்கூடாது 

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎-‎08‎-‎2021 at 07:41, Paanch said:

இன்றைய சிறீலங்க நாட்டு நடைமுறை இதுதான். நாட்டை ஆட்சி செய்து வருவதே நாய்கள்தான்.😲

அவர்கள் நன்றியுள்ளவர்கள் என்று சொல்கிறீர்கள் 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அவர்கள் நன்றியுள்ளவர்கள் என்று சொல்கிறீர்கள் 😀

ஆமாம், தங்களுக்கு எலும்பு போடுபவர்களைக் கண்டால், அவர்கள் எப்படிப்பட்ட படுபாதகர்களாக இருந்தாலும் நன்றியுடன் அவர்கள் காலை நக்கி வாலையும் ஆட்டுவார்கள். 🐕

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.