Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலிபான்களை அடிக்கப் போய் இப்போ இராணுவ நவீன மயப்படுத்திச் செல்லும் அமெரிக்கா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமீப காலமாக அமெரிக்காவின் வெளிநாட்டு இராணுவ ஆக்கிரமிப்புக்கள் படுதோல்வியை சந்தித்து வரும் நிலையில்.. ஆப்கானிஸ்தானில்.... தான் போரிட்ட எதிரியையே இராணுவ நவீன மயப்படுத்தி விட்டு வெளியேறுகிறது அமெரிக்கா.

அமெரிக்க இராணுவ வரலாற்றில்.. இது அமெரிக்காவினதும்.. நேட்டோவினதும்.. மிக மோசமான கொள்கை.. மற்றும் இராணுவத் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது.

தலிபான்களிடம் போயுள்ள.. அமெரிக்க இராணுவ தளபாடங்கள்.. ஆயுதங்கள்.. வாகனங்கள்.. அதி நவீன சாதனங்கள்.. போர் உலங்கு வானூர்திகள்.. விமானங்கள் என்று தலிபான்.. ஒரு முழுமைப்படுத்தப்பட்ட ஆகாயப் படை கொண்ட கடும்போக்கு முஸ்லிம் பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்திருக்கிறது ஆப்கானிஸ்தானில். 

இதற்கு அமெரிக்கா பல பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்ததும் இன்றி.. அமெரிக்கப் படைகளைப் பலியிட்டும் உள்ளது.

தலிபான்களிடம் சிக்கிய அமெரிக்க ஆயுதங்கள்.. ஊர்திகள் பற்றிய தகவல்கள் இப்போ கசிய ஆரம்பித்துள்ளன. தலிபான்களும்.. சல்வாரை கழற்றி எறிந்துவிட்டு சீருடைகளுடன் வீதிகளில் கம்பீரமாக உலா வருவதும்.. ஊடகங்களில் அதிகம் காட்சிப்படுத்தப்படுகின்றன.

அமெரிக்காவும் நேட்டோவும் பயங்கரவாதிகளாக அறிவித்துக் கொண்டு 20 ஆண்டுகளாக யுத்தம் செய்த தலிபான்கள் முன்னிலையில் அமெரிக்கா கூறிக் குணுகி நிற்கும் அதேவேளை..

தலிபான்களிடம் அதிகரித்துள்ள விமானப்படை ஆற்றலானது.. உலகிற்கே புதிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. அதுமட்டுமன்றி அமெரிக்க நவீன ஆயுதங்கள் துப்பாக்கிகள் உள்ளடங்க.. தலிபான்களின் கையில் சிக்கி இருப்பது.. இஸ்லாமிய கடும்போக்கு.. அடிப்படைவாதப் பயங்கரவாதிகளுக்கு புதிய உற்சாகத்தை ஊட்டி உள்ளது. இதன் விளைவுகளை உலகம் தரிசிக்கும் போது.. அது மிக அபாயகரமானதாக இருக்க வாய்ப்புள்ளது.

எனி..

தலிபான்கள் கையில் சிக்கிய அமெரிக்க இராணுவ சாதனங்கள் பற்றிய படங்களை காணலாம். இவை வெளிவந்த தகவல்கள். வெளியிடப் படாமல் எவ்வளவு இருக்கோ..??!

A Taliban fighter walks past a beauty salon carrying an M16 weapon.

 

Graphic showing types and numbers of aircraft operated by the Afghan armed forces

Satellite image of Kandahar Air Base with military aircraft on the ground. Updated 27 Aug.

 

Image showing captured HMMWV (Humvee). Updated 27 Aug

Satellite image of Termez International Airport with military aircraft on the ground.

Image showing Taliban special forces with M4 Carbine

Image showing captured Mobile Strike Force Vehicle

Taliban Fateh fighter, a "special forces" unit, stands guard along with other fighters on a street in Kabul

A Taliban Fateh fighter, a "special forces" unit, stands guard along a street in Kabul on August 29, 2021

spacer.png

Afghanistan: Black Hawks and Humvees - military kit now with the Taliban

https://www.bbc.co.uk/news/world-asia-58356045

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கர் உங்கள் நேரத்துக்கும் ஆக்கத்துக்கும் .

பாட்டிலில் இருந்த  பூதத்தை ஆயுதம்களும் கொடுத்து துறந்துவிட்டுள்ளார்கள் புதிய உலக ஒழுங்கு இதுதானக்கும் அநேகமா வல்லரசு கனவில் இருக்கும் நாடுகள் மீது பூதம் பாயக்கூடும் .

இவ்வளவு ஆயுதம்களை விட்டு விட்டு வருகிறார்கள் என்று நம்ப முடியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு ஆயுத தளபாடங்களையும், 
திரும்ப அமெரிக்காவுக்கு கொண்டு செல்லும்  செலவை... மிச்சப் படுத்த,
தலிபான்களிடம் கொடுத்து விட்டு போயிருக்கலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

சிலதை ஆப்கான் விமானபடை உஸ்பெக் கொண்டு போய் விட்டார்கள்.

இன்னும் சில கன ரக ஆயுதங்களை சாலா பஞ்சீர் கொண்டு போய் விட்டார்.

ஆனாலும் கணிசமான ஆயுதங்கள் தாலிபான் வசமே உள்ளது.

நான் இவற்றை அமெரிக்கா வேண்டும் என்றே விட்டு விட்டு வருகிறது என நினைக்கிறேன்.

நடக்கும் நிகழ்வுகள் அமெரிக்கா-தலிபான் இடையே இரு இரகசிய உடன்பாடு உள்ளதாகவே காட்டுகிறன.

ஐசில், பஞ்சீர் படை, தலிபான் எல்லாரும் அமெரிக்க ஆயுதங்களை கொண்டு தம்மிடையே அடிபட, அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கலாம்.

இப்போ வரும் கார்களே மென்பொருள் மூலம் கட்டுபட கூடியன, எனவே இவற்றில் சிலதை, ஒரு நொடியில் செய்லற்றதாக்கவும் முடிய கூடு?

தவிர தலிபானில் எத்தனை பேருக்கு இவற்றை பாவிக்க தெரிந்திருக்கும்?

புலிகள் போல தொழில்நுட்ப அறிவு தலிபான்களிடம் இல்லை, ஆனால் பாகிஸ்தான் உதவக்கூடும்.

தொழில்நுட்ப, சேர்விசிங், உதிரிபாக உதவி இல்லாத இடத்து, பிளாக் ஹாக்கை காபூலின் தெரு ஒன்றில் தாலிபான்கள் சோடா கடையாக பாவிக்கும் நிலையும் வரலாம்🤣

இந்த ஆயுதங்களை அமெரிக்கா மீது பாவித்தால்தான் இருக்கு விளையாட்டு🤣.

போரில் ஆயுதங்களைக் கைவிடவேண்டி வந்தால் அவற்றை எதிரிக்குப் பயன்படாதவாறு எப்படி இலகுவாகவும் விரைவாகவும் செய்லிழக்க வேண்டும் என்பது கைத்துப்பாக்கியிலிருந்து பீரங்கி வரை செயல்முறைகள் உண்டு. இது இராணுவப் பயிற்ச்சி எடுக்கும் எல்லோருக்கும் கட்டாயமாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவத்தினர் இவ்வளவு தொகையான ஆயுதங்களைப் பத்திரமாக வைத்துவிட்டு வந்திருப்பதை எப்படி எடுத்துக் கொள்ளலாம் ?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, இணையவன் said:

போரில் ஆயுதங்களைக் கைவிடவேண்டி வந்தால் அவற்றை எதிரிக்குப் பயன்படாதவாறு எப்படி இலகுவாகவும் விரைவாகவும் செய்லிழக்க வேண்டும் என்பது கைத்துப்பாக்கியிலிருந்து பீரங்கி வரை செயல்முறைகள் உண்டு. இது இராணுவப் பயிற்ச்சி எடுக்கும் எல்லோருக்கும் கட்டாயமாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவத்தினர் இவ்வளவு தொகையான ஆயுதங்களைப் பத்திரமாக வைத்துவிட்டு வந்திருப்பதை எப்படி எடுத்துக் கொள்ளலாம் ?

உண்மைதான். அதேபோல், ஆப்கானிஸ்தானை தொலைவில் இருந்து அவதானிக்கும் நானே, அமெரிக்கா வெளியேறி 6 மாதத்தில் காபூஸ் தாலிபான் வசமாகும் என யோசித்தேன்.

நிச்சயம் அமெரிக்க உளவு படைகளுக்கு தாம் இல்லாவிட்டால் ஆப்கான் ஆமிக்கு டப்பா டான்ஸ் ஆடிவிடும் என்பது தெரிந்தே இருக்கும். 

இருந்தும் இத்தனை ஆயுதங்களை விட்டு வந்தது சந்தேகத்துகிடமானதே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

விமானங்கள் ஹெலிகொப்டர்களை இயக்குவதற்கு முன்  கோட் நம்பர், கீ வேர்ட் எல்லாம் தேவையெண்டு நினைக்கிறேன். அது தலீபான்களுக்கு தெரிந்திருக்குமா என்பது தெரியவில்லை, பிடிபட்ட விமானிகள்மூலம் அது சாத்தியமாகலாம்.

முன்பு கட்டுநாயக்கா விமான நிலைய தாக்குதலின்போது ஒரு கிபிரை கடத்தும் வாய்ப்பு இருந்ததாகவும், வெளிநாட்டில்  பயிற்சி பெற்ற புலிகளின் விமானிகளும் தாக்குதல் குழுவுடன் சென்றதாகவும்  திறவு சொல் சரிவராததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் அப்போது பேசி கொண்டார்கள். 

தலீபான் வசம் சென்ற Black hawk ஹெலிகள் அமெரிக்காவுக்கு வெளியே உலகின் 85% களில் இருப்பதைவிட அதிகம் என்று அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தாராம்.

பெருந்தொகை ஆயுதங்கள் விமானங்களை ஆப்கான் ராணுவவசம் விட்டுபோனால் ஆப்கானின் சில பகுதிகளையாவது தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்று அமெரிக்கா நம்பியிருக்கலாம், அவனுகதான் ஒரு கிழமைக்குள்ள ஓடி தள்ளிட்டாங்களே.

ஆனால் நாடுகள்மீது போர் தொடுக்கும் அளவிற்கு அவை பெரும் சக்திவாய்ந்த  போர் விமானங்களல்ல என்றே நினைக்கிறேன்.

மற்றும்படி கோசான் சொன்னதுபோலதான் காலபோக்கில் உதிரிபாகங்கள் தொழில்நுட்ப உதவிகளுக்கு அமெரிக்காவைதான் தலீபான்கள் நாடவேண்டும் அதற்கு வாய்ப்பில்லை.

 

அமெரிக்கர்களுக்கு இந்த விமானங்களால் ஆபத்து விளையுமென்றால் ஆளில்லா விமானங்களை அனுப்பியோ அல்லது F- 22 Raptor விமானங்களையோ அனுப்பி அழிச்சிடுவான், அதுதான் ஈராக் போரின் போதும் சதாமின் விமானபடைக்கு நடந்தது.

அமெரிக்க ராணுவம் விட்டு சென்றதில் Biometric இயந்திரம்தான் மிக பாரதூரமானது என்கிறார்கள், அதில் தீவிரவாதிகள், அமெரிக்க ராணுவத்துக்கு ஆதரவு வழங்கியவர்கள் உட்பட்ட அமெரிக்க ராணுவ ரகசிய  தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும் என்றும் அது பென்டகனில் உள்ள சேர்வர்களுடன் இணைபிலுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

மறுதரப்பினர் தலீபான்களால் அதனை வைத்து ஒன்றும் பண்ண முடியாது  அதைபயன்படுத்தும் தொழில்நுட்ப அறிவு அவர்களுக்கு இல்லையென்றும் கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உய்கூர் முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட வேண்டியதாக இருக்கலாம் விரைவில் சைனாவின் விநியோக கப்பல்கள் தீவிரவாத தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் அதே போல் ஆகாய பறப்புக்கள் கூட தாக்கப்படலாம் பட்சி சொல்லுது 🤣 சீரியஸாக வேண்டாம் .

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

உய்கூர் முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட வேண்டியதாக இருக்கலாம் விரைவில் சைனாவின் விநியோக கப்பல்கள் தீவிரவாத தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் அதே போல் ஆகாய பறப்புக்கள் கூட தாக்கப்படலாம் பட்சி சொல்லுது 🤣 சீரியஸாக வேண்டாம் .

தர்க ரீதியான சந்தேகம்தான்.

என்றைக்கோ ஒருநாள் சைனாவுக்கும், இஸ்லாமிய அடிபடைவாதாத்துக்கும் கொழுவல் வந்தே தீரும் என நான் நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

தர்க ரீதியான சந்தேகம்தான்.

என்றைக்கோ ஒருநாள் சைனாவுக்கும், இஸ்லாமிய அடிபடைவாதாத்துக்கும் கொழுவல் வந்தே தீரும் என நான் நம்புகிறேன்.

ஏற்கனவே உய்கூர் முஸ்லிம்கள் விடயத்தில் கனடா போன்ற நாடுகள் சைனாவின் அடாவடியை கண்டித்து பல தடைகளை ராவோடு ராவா பிறப்பித்துவிட்டன ட்ரம் காலத்திலேயே .

படைகள் ஆப்கானை விட்டு விலக்கு என்றவுடன் பீஜிங் ஓவரா குத்து கரணம் அடிக்குது தாலிபான்களுடன்  .சதாம் இயூரோவில் வெளிநாட்டு நாணயமாற்றை கொண்டுவந்ததால் தொடங்கியது  பிரச்சனை அதே போல் பீஜிங் தேவையில்லாம டொலர் ஸ்வாப் ஊக்குவிப்பதை கண்டு அங்கிள் சாம் ஏகத்துக்கு எகிறிக்கொண்டு இருக்கிறார் ஆகவே என்றோ ஒருநாள் அல்ல விரைவில் கொல்லுபாடு தொடங்கும்  வருமானத்தில் கைவைக்காத வகையில் அங்கிள் சாம் எப்பவுமே கூல்தான் .

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, valavan said:

முன்பு கட்டுநாயக்கா விமான நிலைய தாக்குதலின்போது ஒரு கிபிரை கடத்தும் வாய்ப்பு இருந்ததாகவும், வெளிநாட்டில்  பயிற்சி பெற்ற புலிகளின் விமானிகளும் தாக்குதல் குழுவுடன் சென்றதாகவும்  திறவு சொல் சரிவராததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் அப்போது பேசி கொண்டார்கள். 

 

 

இந்த தகவல் உண்மையே, எனது அம்மம்மாவும் என்னிடம் இதையே கூறியிருக்கிறார். அன்று வெற்றியடைந்திருந்தால் எங்களுக்கும் ஒரு கிபிர் வந்திருக்குமென்று!

 

--------------------------------------

உந்த கம்வீக்களை(Humvee) பராமரிக்கிறது எளிதான காரியமில்லை என்டே சொல்லுறாங்கள். அதிக செலவும் பல விலைகூடிய உதிர்ப் பாகங்களும் உதைப் பராமரிக்க தேவையாம்.  எனவே தலீபான்கள் உதை கன காலம் வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே, வெளிநாடு ஒன்றின் பெரும் பண உதவி கிடைக்கும் வரை.

 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நன்னிச் சோழன் said:

 

இந்த தகவல் உண்மையே, எனது அம்மம்மாவும் என்னிடம் இதையே கூறியிருக்கிறார். அன்று வெற்றியடைந்திருந்தால் எங்களுக்கும் ஒரு கிபிர் வந்திருக்குமென்று!

 

--------------------------------------

உந்த கம்வீக்களை(Humvee) பராமரிக்கிறது எளிதான காரியமில்லை என்டே சொல்லுறாங்கள். அதிக செலவும் பல விலைகூடிய உதிர்ப் பாகங்களும் உதைப் பராமரிக்க தேவையாம்.  எனவே தலீபான்கள் உதை கன காலம் வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே, வெளிநாடு ஒன்றின் பெரும் பண உதவி கிடைக்கும் வரை.

 

இந்த கிபிர் கதை பற்றி எனது சந்தேகங்கள்?

1. கிபிர் சுப்பர் சோனிக் அல்லவா? அது இறங்கும் அளவு ஓடுபாதை வன்னியில் இருந்ததா?

2. அப்படி ஒரு தாக்குதல் அணியுடன் சுப்பர் ஸோனிக் ஓட்ட தெரிந்த ஒரு பெரும் சொத்தான போராளியை அனுப்பும் ரிஸ்க் எடுத்திருப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்+
11 minutes ago, goshan_che said:

இந்த கிபிர் கதை பற்றி எனது சந்தேகங்கள்?

1. கிபிர் சுப்பர் சோனிக் அல்லவா? அது இறங்கும் அளவு ஓடுபாதை வன்னியில் இருந்ததா?

2. அப்படி ஒரு தாக்குதல் அணியுடன் சுப்பர் ஸோனிக் ஓட்ட தெரிந்த ஒரு பெரும் சொத்தான போராளியை அனுப்பும் ரிஸ்க் எடுத்திருப்பார்களா?

நல்ல கேள்விகள்.

  1. ஆம் அதுவொரு மிகையொலிவேக வானூர்தியே. 2001 ஆம் ஆண்டில் புலிகளிடம் இரணைமடு ஓடுதளம் ஓரளவிற்கு மேம்படுத்த தொடங்கி விட்டனர். (2003 இல்தான் உலகம் அறிந்தது) அதன் மொத்த நீளம் 1200 மீட்டர். எனவே விடுதலைப் புலிகள் அதனை இவ்வானூர்தியினை இறக்கப் பயன்படுத்தியிருக்கலாம் (வானூர்தி காவியில் இறக்கும் முறையைப் பயன்படுத்தியிருக்கக் கூடும்.)
  2. நான் நினைக்கிறேன் ஆமென்றே. சென்றவர் முற்றாக மிகையொலிவேக பயிற்சி எடுத்தவராக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அப்படியான வானூர்திகளை இறக்கி எழுப்பும் அளவிலான அத்தியவசிய பயிற்சியினை மாத்திரம் எடுத்தவராக இருந்திருப்பார். அந்த தாக்குதலிற்குச் சென்ற பல பேர் திரும்பி வந்ததாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே திரும்பியவர்களில் இவரும் ஒருவராக இருந்திருக்கக் கூடும். 
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்னி.

17 minutes ago, நன்னிச் சோழன் said:

நல்ல கேள்விகள்.

  1. ஆம் அதுவொரு மிகையொலிவேக வானூர்தியே. 2001 ஆம் ஆண்டில் புலிகளிடம் இரணைமடு ஓடுதளம் ஓரளவிற்கு மேம்படுத்த தொடங்கி விட்டனர். (2003 இல்தான் உலகம் அறிந்தது) அதன் மொத்த நீளம் 1200 மீட்டர். எனவே விடுதலைப் புலிகள் அதனை இவ்வானூர்தியினை இறக்கப் பயன்படுத்தியிருக்கலாம் (வானூர்தி காவியில் இறக்கும் முறையைப் பயன்படுத்தியிருக்கக் கூடும்.)
  2. நான் நினைக்கிறேன் ஆமென்றே. சென்றவர் முற்றாக மிகையொலிவேக பயிற்சி எடுத்தவராக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அப்படியான வானூர்திகளை இறக்கி எழுப்பும் அளவிலான அத்தியவசிய பயிற்சியினை மாத்திரம் எடுத்தவராக இருந்திருப்பார். அந்த தாக்குதலிற்குச் சென்ற பல பேர் திரும்பி வந்ததாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே திரும்பியவர்களில் இவரும் ஒருவராக இருந்திருக்கக் கூடும். 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இந்த கிபிர் கதை பற்றி எனது சந்தேகங்கள்?

1. கிபிர் சுப்பர் சோனிக் அல்லவா? அது இறங்கும் அளவு ஓடுபாதை வன்னியில் இருந்ததா?

2. அப்படி ஒரு தாக்குதல் அணியுடன் சுப்பர் ஸோனிக் ஓட்ட தெரிந்த ஒரு பெரும் சொத்தான போராளியை அனுப்பும் ரிஸ்க் எடுத்திருப்பார்களா?

 

இது வேறு லெவல் அம்புலிமாமா கதை. நம்புவதற்கு ஆட்கள் உள்ளபோது எதுவும் அவிழ்த்துவிடலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு விவாதிக்கப்படுபவை குறித்து ஏலவே பிபிசியில் ஒரு அலசல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பும் மேலே வழங்கப்பட்டிருக்குது.

 

Most of the aircraft were maintained by private US contractors who had started leaving even before the Taliban assault on cities and provinces began in August.

Jodi Vittori, professor of global politics and security at Georgetown University and a US air force veteran who served in Afghanistan, agrees the Taliban lack the expertise to make these aircraft operational. "So there is no immediate danger of the Taliban using these aircraft," she says, pointing out aircraft could have been partially dismantled before the Afghan forces surrendered.

However, the Taliban will try to coerce former Afghan pilots to fly these planes, says Jason Campbell, a researcher at Rand Corporation and former director for Afghanistan in the Office of the US Secretary of Defense for Policy. "They will threaten them and their families. So, they might be able to take some of these planes to the skies, but their long-term prospects look bleak."

And the Taliban are likely to be able to operate the Russian-made MI-17s as they have been in the country for decades. For the rest, they may look to sympathetic countries for maintenance and training.

Other weaponry will be far easier for the the insurgents to get to grips with. Even Taliban foot soldiers appear to be comfortable with the ground-based equipment they have seized. Over the years, captured checkpoints and army deserters have brought them into contact with such weapons.

That the group have access to such modern weapons is a "colossal failure" says Michael Kugelman, deputy director of the Wilson Center in Washington.

But the effects will not be limited to Afghanistan. There are fears the small arms may start appearing on the black market and fuelling other insurgencies around the world.

It's not an immediate risk, says Ms Vittori, but a supply chain could appear in the coming months. The onus of stopping this is on neighbouring countries like Pakistan, China and Russia.

Mr Campbell says the Taliban appear keen to project a responsible face, although it will be hard for them not to support ideologically similar groups around the world.

Unity among the Taliban is another crucial factor which will play a part in how these weapons are used.

Ms Vittori says there is a possibility that splinter groups from within the Taliban alliance may decide to leave, taking the weapons with them. So, a lot will ride on how the leadership keeps the group together when the initial euphoria of taking over Afghanistan settles down.

source: bbc.co.uk

 

================================

Here's a timeline of some of the biggest developments during the 20-year conflict.

  • 7 October 2001: A US-led coalition bombs Taliban and al-Qaeda facilities in Afghanistan. Targets include Kabul, Kandahar and Jalalabad. The Taliban, who took power after a decade-long Soviet occupation was followed by civil war, refuse to hand over al-Qaeda leader Osama Bin Laden
  • 13 November 2001: The Northern Alliance, a group of anti-Taliban rebels backed by coalition forces, capture Kabul
  • 7 February 2009: US President Barack Obama approves a major increase in the number of troops sent to Afghanistan. At their peak, they number about 140,000
  • 28 December 2014: Nato ends its combat operations in Afghanistan. With the surge now over, the US withdraws thousands of troops. Most of those who remain focus on training and supporting the Afghan security forces
  • 29 February 2020: The US and the Taliban sign an “agreement for bringing peace” to Afghanistan, in Doha, Qatar. The US and Nato allies agree to withdraw all troops within 14 months if the militants uphold the deal
  • 13 April 2021: US president Joe Biden announces that all US troops will leave Afghanistan by 11 September that year
  • 16 August 2021: In just over a month, the Taliban sweep across Afghanistan, taking control of towns and cities all over the country, including Kabul. Afghan security forces collapse in the face of the Taliban advance
  • 31 August 2021: The US completes its withdrawal from Afghanistan
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்திற்கே தொழில்நுட்பங்களை வழங்கும் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் விடயத்தில் தனது இராணுவ தொழில்நுட்பங்களை தலிபான்களிடம் பறிகொடுத்திருக்கும் என நம்பமுடியாது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

உலகத்திற்கே தொழில்நுட்பங்களை வழங்கும் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் விடயத்தில் தனது இராணுவ தொழில்நுட்பங்களை தலிபான்களிடம் பறிகொடுத்திருக்கும் என நம்பமுடியாது. 

அமெரிக்கா நேரடியாகக் கொடுத்ததோ இல்லையோ.. ஆப்கானிஸ்தான் படைகள் அமெரிக்க ஆயுதங்களை கொடுத்து விட்டுச் சரணடைந்திருக்கிறார்கள்.

நிச்சயம் தலிபான்களோடு அவர்கள் இணங்கிச் செயற்படவே செய்வார்கள்.. தங்களைப் பாதுகாக்க. அப்படியான நிலையில்.. அமெரிக்க ஆயுதங்கள் தலிபான்களின்.. இதர இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் பாவனைக்கு வரும்.. அது ஆபத்தே.

இரட்டை கோபுரத் தாக்குதலை தலிபான்களின் கட்டுப்பாட்டில்.. அல் குவைடா அமைப்பு செய்ததாகச் சொன்னாலும்.. அந்த தாக்குதலில் ஈடுபட்ட அநேகர் சவுதி ஆட்களாவர். 

ஆக.. தலிபான்.. அமெரிக்கா இப்போ உலகிற்கு காட்ட நினைப்பது போல்.. ஒரு நாட்டை நிர்வகிக்கக் கூடிய அமைப்பு அல்ல. ஆனால்.. அமெரிக்கா தலிபானுக்கு வெள்ளையடித்து.. அதற்கு வசதியாக... ஐ  எஸ் ஐ எஸ்.. ஆப்கான் கிளையை உருவாக்கிவிட்டுள்ளது.

உண்மையில்.. அல் குவைடா என்ற அமைப்புக் கூட இல்லை. எல்லாமே தலிபான்களின் அதாவது இஸ்லாமிய கடும்போக்கு பயங்கரவாதிகளின் கூட்டுத்தான். ஆனால்... அமெரிக்கா தன் தேவைக்கு ஏற்ப பகுத்துப் பிரிச்சுக் காட்டும். அவ்வளவும் தான்.

அமெரிக்கா.. அடிப்படையில்... இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தின் முன் மண்டியிட்டு நிற்பதை மறைக்க.. நிறைய பாடுபடும். கதைகளை அவிழ்த்துவிடும். 

ஆப்கானில்.. உலகிற்கான அச்சுறுத்தல்.. வலுப்பெறும் ஒரு அமைப்பாகவே தலிபான் இருக்கும்.. அதாவது கடும்போக்கு இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அமைப்பாகவே அது இருக்கும். அதில் மாற்றம் இருக்காது.. அமெரிக்கா என்ன தான் வெள்ளையடிக்க முனைந்தாலும்.. தன் தோல்வியை மறைக்க. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, nedukkalapoovan said:

ஆக.. தலிபான்.. அமெரிக்கா இப்போ உலகிற்கு காட்ட நினைப்பது போல்.. ஒரு நாட்டை நிர்வகிக்கக் கூடிய அமைப்பு அல்ல. ஆனால்.. அமெரிக்கா தலிபானுக்கு வெள்ளையடித்து.. அதற்கு வசதியாக... ஐ  எஸ் ஐ எஸ்.. ஆப்கான் கிளையை உருவாக்கிவிட்டுள்ளது.

இவ்வளவு காலமும் ஆப்கானிஸ்தானிலை  குடும்பம் நடத்தின அமெரிக்கா எங்கை என்னத்தை தாட்டு வைச்சிட்டு போச்சுதோ ஆருக்கு தெரியும்? 😎
ஒரு கிழமைக்கு முதல் சவுண்டு விட்ட ரஷ்யாவும் சீனனும் இப்ப கப்சிப் போல கிடக்கு 😁

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் கைகளில் சிக்கிய போர் விமானங்கள், ராட்சத ஹெலிகாப்டர்கள், இயந்திர துப்பாக்கிகள்

  • விகாஸ் பாண்டே & ஷதாப் நஸ்மி
  • பிபிசி செய்திகள்
தாலிபன்கள் கையில் நவீன் ஆயுதங்கள்

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, தாலிபன்கள் கையில் இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் சிக்கியுள்ளன

கந்தஹார் விமான நிலையத்தில் அமெரிக்காவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பறப்பதை தாலிபன்கள் பார்த்துக்கொண்டிருப்பதை சமூக ஊடகங்களில் வெளியான காணொளி ஒன்று காட்டுகிறது. அது நான்கு இறக்கைகளை உடைய ப்ளேக் ஹாக் ஹெலிகாப்டர்.

தாலிபன்கள் இனியும் வெறுமனே ஏகே ரக துப்பாக்கிகளை கையில் வைத்துக் கொண்டு டிரக்குகளில் வலம் வரும் ஒரு சாதாரண குழுவல்ல என்கிற செய்தியை, அது உலகுக்கு உணர்த்துகிறது.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி காபூல் தாலிபன்களிடம் வீழ்ந்ததில் இருந்து தாலிபன்கள் அமெரிக்காவின் ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை படமெடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சிலரை முழு கை உடைகளோடு சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. அவர்களையும், மற்ற உலக நாடுகளின் சிறப்பு ஆயுதப் படையினரையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

அவர்களிடம் நீண்ட தாடியோ, பாரம்பரியமான சல்வார் கமீஸோ, துருப்பிடித்த ஆயுதங்களோ இல்லை. அவர்கள் தங்களின் பணிக்கும் பண்புகளுக்கும் ஏற்றார்போல் இருந்தனர்.

ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகள் தாலிபன்களிடம் ஒவ்வொரு நகரமாக சரணடைந்த பிறகு, தாலிபன்கள் இந்த ஆயுதங்களைக் கைப்பற்றினர். 

இந்த கைப்பற்றலால், தாலிபன் குழு மட்டுமே உலகில் வான்படை கொண்ட ஒரே பயங்கரவாத குழுவாக இருக்கிறது என ஒருவர் சமுக வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

தாலிபன்களிடம் எத்தனை விமானங்கள் இருக்கின்றன?

தாலிபன்களிடம் எத்தனை விமானங்கள் இருக்கின்றன
 
படக்குறிப்பு, 

ஜூன் 2021 நிலவரப்படி ஆஃப்கன் விமானப் படையிடம் 167 விமானங்கள் இருந்தன. இதில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களும் இருந்தன என்று அமெரிக்காவில் இருக்கும் ஆப்கானிஸ்தானின் மறுகட்டுமானத்துக்கான சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அறிக்கை கூறுகிறது.

ஆனால் அதில் எத்தனை விமானங்களை தாலிபன்கள் கைப்பற்றி இருக்கிறார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ப்ளேனெட் லேப்ஸ் என்கிற நிறுவனம் பிபிசியிடம் கொடுத்த காந்தஹார் விமான நிலைய செயற்கைக் கோள் படங்களில், பல ஆப்கானிஸ்தான் ராணுவ விமானங்கள், ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டிருந்ததைக் காண முடிகிறது.

தாலிபன்கள் ஆஃப்கனை கைப்பற்றி ஆறு நாட்களுக்குப் பிறகு, இரு எம்.ஐ -17 ஹெலிகாப்டர்கள், இரு ப்ளேக் ஹாக் (UH-60) ஹெலிகாப்டர்கள் மற்றும் ஐந்தாவது விமானமும் ப்ளேக் ஹாக் ஆக இருக்கலாம் என அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் என்கிற டெல்லி அமைப்பைச் சேர்ந்த ராணுவ விமான நிபுணர் அங்கத் நிங் கூறியுள்ளார்.

இதற்கு மாறாக, கடந்த ஜூலை 16ஆம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் புகைப்படத்தில் 9 பிளாக் ஹாக், இரு எம்.ஐ- 17, நிரந்தரமாக இறக்கைகள் பொருத்தப்பட்ட ஐந்து விமானங்கள் என மொத்தம் 16 விமானங்களைப் பார்க்க முடிகிறது. 

மீதமுள்ள விமானங்கள் நாட்டை விட்டு வெளியே பறந்துவிட்டன அல்லது மற்ற விமான தளங்களுக்குச் சென்று இருக்கின்றன என்று பொருள் கொள்ளலாம். 

காந்தஹார் விமானப் படைதளம்
 
படக்குறிப்பு, 

ஹெராத், கோஸ்ட், குண்டுஸ், மஷர் இ ஷெரிப் என ஆப்கானிஸ்தானின் ஒன்பது விமானப் படை தளங்களையும் தாலிபன்கள் கைப்பற்றினர் என்பது நினைவுகூரத்தக்கது. எனவே அவ்விமான படைதளங்களிலிருந்து எத்தனை விமானங்களைக் கைப்பற்றினர் என தெளிவாகத் தெரியவில்லை. காரணம் அந்த விமானப் படைத்தளங்களிலிருந்து செயற்கைக் கோள் படங்கள் கிடைக்கவில்லை.

இந்த விமானப் படைத் தளங்களிலிருந்து கைப்பற்றிய விமானங்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்களின் படங்களை தாலிபன் போராளிகள் மற்றும் உள்ளூர் ஊடகத்தினர் பதிவிட்டு வருகின்றனர். 

சில விமானங்கள், தாலிபன்களின் கைக்குக் கிடைப்பதற்கு முன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியே பறந்து சென்றன என்றும் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 16ஆம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் படங்களை ஆராய்ந்த போது உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருக்கும் டெர்மெஸ் விமான நிலையத்தில் எம்.ஐ- 17, எம்.ஐ- 25, ப்ளேக் ஹாக் உட்பட இரண்டு டஜன்களுக்கும் அதிகமான ஹெலிகாப்டர்கள், சில ஏ-29 இலகு வர தாக்குதல் நடத்தும் விமானங்கள், சி 208 விமானங்கள் காணப்பட்டதாக, டெல்லியைச் சேர்ந்த, பெயர் குறிப்பிட விரும்பாத விமான நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

இது ஆப்கானிஸ்தானில் இருந்து வந்திருக்கலாம் என்று சி.எஸ்.ஐ.எஸ் என்கிற பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.

வேறு எதையெல்லாம் கைப்பற்றியுள்ளனர்?

டெர்மெஸ் விமானப் படைதளம்
 
படக்குறிப்பு, 

தாலிபன்களின் விமானப் படை குறித்து பல கேள்விகள் எழுந்தாலும், தாலிபன்கள் பல முன்னணி நவீன ரக துப்பாக்கிகள், ரைஃபிள்கள் மற்றும் வாகனங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். அவை ஆப்கானிஸ்தானில் எக்கச்சக்கமாக இருக்கின்றன.

2003 - 2016 காலகட்டத்தில் அமெரிக்கா ஏகப்பட்ட ராணுவ சாதனங்களை ஆப்கானிஸ்தான் படையில் கொண்டு வந்தது. பல நிறுவனத்தின் 3,58,530 ரைஃபிள்கள் 64,000 இயந்திரத் துப்பாக்கிகள், 25,327 க்ரெனைட் லாஞ்சர்கள், 22,174 ஹம்வீ (அனைத்து நிலபரப்பிலும் பயணிக்கும் வாகனம்) வாகனங்களை ஆஃப்கனில் கொண்டு வந்ததாக அமெரிக்கா அரசின் அறிக்கை கூறுகிறது.

2014ஆம் ஆண்டு நேட்டோ படைகள் தங்கள் போரை நிறுத்திய பிறகு, நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு ஆஃப்கன் ராணுவத்திடம் கொடுக்கப்பட்டது. அந்நாட்டு ராணுவம் தாலிபன்களை எதிர்கொள்ள திணறியதால், அமெரிக்கா பல நவீன ரக ராணுவ தளவாடங்களை வழங்கியது.

கிட்டத்தட்ட 20,000 எம்-16 ரைஃபிள்களை 2017ஆம் ஆண்டில் மட்டும் விநியோகித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் 3,598 எம் 4 ரைஃபிள்கள், 3,012 ஹம்வீ வாகனங்களுடன் இன்னும் பல ராணுவ தளவாடங்களையும் ஆஃப்கான் ராணுவத்துக்கு வழங்கியது என அமெரிக்காவில் இருக்கும் ஆப்கானிஸ்தானின் மறுகட்டுமானத்துக்கான சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அறிக்கை கூறுகிறது.

புதிய ஆயுதங்களைக் கொண்டு தாலிபன்களால் என்ன செய்ய முடியும்?

ஹம்வீயில் தாலிபன்கள்
 
படக்குறிப்பு, 

இந்தக் கேள்விக்கான பதில் தாலிபன்கள் கைகளில் கிடைத்துள்ள ஆயுதங்களைப் பொறுத்தது அது. 

விமானங்களைக் கைப்பற்றுவது தாலிபன்களுக்கு எளிதாக இருந்திருக்கலாம், ஆனால் அவற்றை இயக்குவதும் பராமரிப்பதும் அவர்களுக்கு அத்தனை எளிதாக இருக்காது என சிஎன்ஏ ஆலோசனைக் குழுவின் இயக்குநரும் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கப் படைகளின் முன்னாள் ஆலோசகருமான முனைவர் ஜோனதன் ஷ்ரோடன் கூறுகிறார். 

விமானத்தின் பாகங்கள் பெரும்பாலும் பழுது பார்க்கப்பட வேண்டும், சில நேரங்களில் மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு விமானமும் வானில் சரியாக இயங்க ஒரு பெரிய தொழில்நுட்ப வல்லுநர்களின் குழு பணியாற்றுவர்.

ஆகஸ்ட் மாதத்தில் ஆஃப்கானின் நகரங்கள் மற்றும் மாகாணங்கள் மீது தாலிபன் தாக்குதல் தொடங்குவதற்கு முன்பே, ஆஃப்கான் படைகளின் விமானங்களை பராமரித்து வந்த தனியார் அமெரிக்க ஒப்பந்ததாரர்கள் வெளியேறிவிட்டனர். 

தாலிபன்கள் கைப்பற்றிய விமானங்களை இயக்குவதில் அவர்களுக்கு நிபுணத்துவம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் உலக அரசியல் மற்றும் பாதுகாப்பு பேராசிரியரும், ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய முன்னாள் அமெரிக்க விமானப்படை வீரருமான ஜோடி விட்டோரி. எனவே இந்த விமானங்களைப் பயன்படுத்தி தாலிபன்களால் எந்த வித பிரச்னையும் இப்போதைக்கு ஏற்படாது எனவும் கூறியுள்ளார்.

ஆப்கானியப் படைகள் தாலிபன்களிடம் சரணடைவதற்கு முன்பு விமானத்தை ஓரளவுக்காவது பல்வேறு பாகங்களாக பிரித்திருக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டுகிறார் ஜோடி விட்டோரி. 

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள்

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள்

இருப்பினும், இந்த விமானங்களை இயக்க தலிபான்கள் முன்னாள் ஆப்கானிஸ்தான் விமானிகளை கட்டாயப்படுத்த முயற்சிப்பார்கள் என ராண்ட் கார்ப்பரேஷனின் ஆராய்ச்சியாளர் ஜேசன் காம்ப்பெல் கூறுகிறார். 

"அவர்கள் விமானிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் அச்சுறுத்துவார்கள். எனவே, இந்த விமானங்களில் சிலவற்றை அவர்கள் பறக்க வைக்க முடியும், ஆனால் அவர்களின் நீண்டகால வாய்ப்புகள் தெளிவாகத் தெரியவில்லை" என்கிறார் ஜேசன்.

ஆப்கானிஸ்தானில் பல தசாப்தங்களாக ரஷ்யா இருந்ததால் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட எம்ஐ -17 விமானங்களை தாலிபன்களால் இயக்க முடியும். மீதமுள்ள விமானங்களின் பராமரிப்பு, பயிற்சிக்கு மற்ற அனுதாபி நாடுகளிடம் பேச வாய்ப்பு இருக்கிறது. 

விமானங்கள் தவிர, மற்ற ஆயுதங்களை தாலிபன்கள் பயன்படுத்துவது எளிது. தாலிபன்கள் கைப்பற்றிய மற்ற சாதனங்களை அவர்கள் லாவகமாக கையாள்வது போலத் தெரிகிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள்

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள்

தாலிபன் போன்ற ஒரு குழுவினர் கையில் நவீன ஆயுதங்கள் கிடைப்பது "மிகப்பெரிய தோல்வி" என வாஷிங்டன்னில் உள்ள வில்சன் மையத்தின் துணை இயக்குநர் மைக்கேல் குகல்மேன் கூறுகிறார்.

இதன் விளைவுகள் ஆப்கானிஸ்தானில் மட்டும் இருக்காது. கறுப்புச் சந்தையில் சிறிய ஆயுதங்கள் வரத் தொடங்கும். உலகெங்கிலும் உள்ள மற்ற கிளர்ச்சியாளர்களுக்கு இது சாதகமாக அமையலாம். 

இது உடனடி ஆபத்தல்ல என்கிறார் விட்டோரி, ஆனால் வரவிருக்கும் மாதங்களில் ஆயுதங்கள் தொடர்பான ஒரு விநியோகச் சங்கிலி தோன்றக்கூடும். இதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷ்யாவுக்கு உள்ளது.

இந்த ஆயுதங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதில் தாலிபன்களுக்கிடையே உள்ள ஒற்றுமை என்கிற காரணி தீர்மானிக்கும்.

தாலிபன் கூட்டணியிலிருந்து, அதன் கூட்டணி குழுக்கள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வெளியேற முடிவு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகான ஆரம்பகால உற்சாகம் தீரும்போது, தாலிபனின் தலைமை எவ்வாறு குழுவை ஒன்றாக வைத்திருக்கிறது என்பதை பொருத்து இருக்கிறது என்கிறார் விட்டோரி.

https://www.bbc.com/tamil/global-58387813

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 30/8/2021 at 20:27, தமிழ் சிறி said:

இவ்வளவு ஆயுத தளபாடங்களையும், 
திரும்ப அமெரிக்காவுக்கு கொண்டு செல்லும்  செலவை... மிச்சப் படுத்த,
தலிபான்களிடம் கொடுத்து விட்டு போயிருக்கலாம். :)

கொடுத்த ஆயுதங்களை பாவிக்க தெரிய வேணும் ...ஒடித்திரிய பெற்றோல் வேண்டும் ....ரவைகள் வேணும்....

அந்த நாட்டில் பயங்கரவாதம் தொடர வேண்டும் அந்த பிராந்தியம்  யுத்த பூமியாக திகழ வேணும் என்பது கொடுத்தவனின் விருப்பம் ...

ஆயுத தளபாடங்கள் இயங்கு நிலையில் இல்லை என்ற செய்தியும் அடிபடுகிறது....மேலும் பஞ்சீர் பள்ளதாக்கில் அமேரிக்காவினதும் மேற்குலகினதும் செல்லபிள்ளகளும் ஆயுதத்துடன் திரியினம் ....எல்லாம் திட்டமிட்டபடி நடக்கின்றது ....

On 31/8/2021 at 17:32, கிருபன் said:

இதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷ்யாவுக்கு உள்ளது.

அவர் கொடுத்து விட்டு போனது தப்பாம்......ஆனால் அதை தடுத்து நிறுத்த வேண்டுமாம் சீனா,பாகிஸ்தான்,ரஸ்யா....
அரசியலடா சாமி ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.