Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒலகத்துல நடக்காததையா கே.டி.ராகவன் செஞ்சாரு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

கே.டி.ராகவனின் காணொளி குறித்த...  சீமானின் கருத்தும், அதன் பின் நடந்த அரசியலும். 

  • Replies 62
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

1 - நலன்புரி சங்கம் மூலம் உதவி கேட்டு வரும் ஒருவரிடம் இப்படி நடந்தால் - அதை கட்டாயம் ஆராய வேணும் என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என நினைகிறேன்.

It all depends on the context.

2 - ஒரு பேராசிரியர் விரும்பியே கூட ஒரு பல்கலைகழக மாணவியிடம் இப்படி நடக்கலாமா?

3 - வேலையில் மேலதிகாரி?

அதே போலதான் கட்சியின் முக்கிய பொறுப்பும்.

உங்கள் கருத்தோடு முரண்பாடு இல்லை

ஆனால் உலகம் அப்படி தானே இருக்கிறது.

மேலே நீங்கள் குறிப்பிட்ட 3 விடயங்களில் எனக்கு அனுபவம் மட்டும் அல்ல பாடமும் இருக்கிறது.

அந்த அனுபவம் தந்த பாடம் என்னவென்றால் இதையெல்லாம் பார்த்தால் எந்த காரியத்தையும் எம்மால் செய்து முடிக்க முடியாது.

இந்த உலகத்தை அவ்வாறே ஏற்றுக் கொண்டு அதற்குள்ளாக எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

எமக்கு பொதுவெளியில் கிடைக்கும் விபரங்களை விட, ஒரு கட்சி தலைவரான சீமானுக்கு பல விடயம் போலீஸ் மற்றும்  அதிகாரிகளிடம் இருந்தே வரும். அதனை பெற்று, ஆராய்ந்தே பொது வெளியில் பேசுவர்.

அப்படியாயின் இதே போல் ஜோதிமணிக்குக்கும் இராகவன் தப்பு செய்தார் என போலீஸ் அதிகாரி சொன்னார் என எடுக்கலாமா?

சீமான் ஒரு சிறு கட்சியின் தலைவர். ஜோதிமணி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். ஆகவே பொலீஸ் தகவல் வருவது என்றால் ஜோதிமணிக்குத்தான் வரும்.

இப்படி பார்த்தால், இனி எந்த அரசியல்வாதி என்ன சொன்னாலும், அது பொலிஸ் தகவல் அடிப்படையில் பேசுகிறார், பொது வெளியில் உள்ள நாம் இதை அறிய முடியாது என்று போய்விட வேண்டியதுதான்🤣.

அப்படியே பொலீஸ் சீமானுக்கு சொல்லி இருந்தாலும் (இதில் பொலீஸ் இன்னும் சம்பந்தபடவில்லை என்பதை தவிர்த்து விட்டு பார்த்தாலும் கூட) அதை பொதுவெளியில் சொல்ல கூடாது என்பது அடிப்படை அரசியல் விவேகம். 

 

1 hour ago, விசுகு said:

உங்கள் கருத்தோடு முரண்பாடு இல்லை

ஆனால் உலகம் அப்படி தானே இருக்கிறது.

மேலே நீங்கள் குறிப்பிட்ட 3 விடயங்களில் எனக்கு அனுபவம் மட்டும் அல்ல பாடமும் இருக்கிறது.

அந்த அனுபவம் தந்த பாடம் என்னவென்றால் இதையெல்லாம் பார்த்தால் எந்த காரியத்தையும் எம்மால் செய்து முடிக்க முடியாது.

இந்த உலகத்தை அவ்வாறே ஏற்றுக் கொண்டு அதற்குள்ளாக எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது தான்.

மேலே ஐயா சோமசுந்தரம் எழுதியதிலும், நீங்கள் சொல்வதிலும் எனக்கு அதிக முரண் இல்லை.

ஆனால் வெளிபரப்புக்கு வந்தபின் ஒரு சமூகமாக இதை இப்படித்தான் கையாள வேண்டும் என்ற ஒரு நியதி இருக்கிறது என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுப.சோமசுந்தரம் said:

அந்தப் பெண் ஏற்கெனவே ராகவனுடன் சமரசம் செய்து வாழ்ந்திருக்க வேண்டும். இந்தக் 'கை'பேசி உறவும் அவர்களுக்குள் இன்று புதிதாக நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. திடீரென்று அப்பெண்ணிடம் இந்த முயற்சியில் இறங்க ராகவன் வெள்ளந்தியும் இல்லை, கிறுக்கனும் இல்லை. அப்பெண் செய்தது பச்சைத் துரோகம், இச்சைத் துரோகம் எல்லாம்தான். பில் கிளின்டனுடன் உறவு வைத்துக் கொண்டு பின்னர் பணம் சம்பாதிக்கும் கீழ்த்தரமான எண்ணத்துடன விந்து படிந்த தனது உள்ளாடையை வருடக்கணக்கில் பத்திரப்படுத்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மோனிகா லெவின்ஸ்கியின் கயமை போன்றது. நிற்க.

சிறப்பான பார்வை.....

ஒரு விடயத்தை பல வேறு கோணத்தில் பார்க்கவேண்டும்.

நீஙகள் சொல்வது, நான் மேலே சொன்ன கருத்தை வலுவாக்குகிறது.

மோனிக்கா போலவே, இந்த பெண் மிக அந்நியோன்ய, தொடர்பில் இருந்திருக்கிறார்.

அந்த தொடர்பு வீடீயோ காலிலும் தொடரும் அளவுக்கு பரஸ்பர நம்பகத்தன்மை கொண்டதாகவே இருந்துள்ளது.

வேலை கேட்டு வரும் எந்த அறிமுகம் இல்லாத பெண்ணிடமும் அல்லது அண்மையில் அறிமுகமான பெண்ணுடன், இவ்வளவு அந்நியோன்ய உரையாடல் செய்ய, வக்கீல் ராகவன், முட்டாள் இல்லை.

ஆகவே, அய்யாவுடன், சின்னவீடு வகை உறவில் இருந்த அந்த பெண், பணத்தை வாங்கி கொண்டு முதுகில் குத்தியுள்ளார்.

அன்றைய தினம், ஆத்துக்காரி வெளில போயிருப்பா...... அய்யா, சின்னவீட்டுக்கு போக நேரம் இல்லை. பிசி.... அவசரத்தில் போனை போட்டிருக்கிறார்.

சிக்கிக்கொண்டார்..... மதன் சொல்வதை வைத்து பார்த்தால், ஒரு வீடியோ அல்ல...பல வீடியோக்கள் போலுல்லது.

ராகவன், அரசியலில் இருப்பதால், தாம் பத்தரை மாற்று தங்கம் போல, குய்யோ, முறையோ என்று கூப்பாடு போடுவோர் பலரின் தனிப்பட்ட வாழ்வும் அப்படித்தான் இருக்கும். வீடியோ எடுத்தால் மோசாகவே இருக்கும்.

அந்த வகையில் சீமான் சொன்ன கருத்து நேர்மையானது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

ராகவன், அரசியலில் இருப்பதால், தாம் பத்தரை மாற்று தங்கம் போல, குய்யோ, முறையோ என்று கூப்பாடு போடுவோர் பலரின் தனிப்பட்ட வாழ்வும் அப்படித்தான் இருக்கும். வீடியோ எடுத்தால் மோசாகவே இருக்கும்.

எல்லாரையும் எங்களை போல நினைக்க கூடாது🤣.

ஆனாலும், குய்யோ முறையோ என குதிப்பவர்கள் கூட, அவர்கள் வேலை செய்யும் இடத்தில், அவருக்கு கீழ் நிலையில் உள்ள உத்தியோகத்தில் உள்ள பெண்மணியியுடன் சல்லாபித்தால் - அது வெளிவந்தால் கேள்வி வரத்தான் செய்யும்.

அதனால்தான் don’t poke they payroll என்பார்கள்.

சீமானும், ஜோதிமணியும் முழு விபரம் அறியாமலே இந்த விடயத்தில் கருத்து சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கே.டி.ராகவனுக்கு உறுதுணையா; தனிமனித உரிமைக்கு ஆதரவா; சீமானின் சீற்றத்துக்குக் காரணம் என்ன?

''எது அநாகரிகம் என்று நீங்களே பாருங்கள். அவருடைய ஒப்புதல் இல்லை, அவருடைய அனுமதியும் இல்லை! அவருக்கே தெரியாமல், அவருடைய வீட்டின் படுக்கையறையிலும் கழிவறையிலும் கேமராவை வைத்து வீடியோ எடுத்துவிட்டு வருவதுதான் முதலில் சமூகக் குற்றம்! அதைச் செய்து வெளியிட்டவரைத்தான் முதலில் கைது செய்திருக்க வேண்டும். இந்த உலகத்திலேயே எங்கும் நடக்காத ஒன்றை இவர் செய்துவிட்டார் என்பதுபோலக் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?" என்றார் சீமான்.

 

பா.ஜ.க முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த இந்த பதில் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. பல தரப்பில் இருந்தும் அவர்மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர், ஜோதிமணி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'' நாம் தமிழர் கட்சியில் இருக்கும் கள்ளமில்லாத இளைஞர்களின் மனதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சரியென்ற மனநிலையை சீமான் உருவாக்குகிறார். இது ஒட்டுமொத்த பெண்களுக்கும் தமிழ் சமூகத்துக்கும் ஆபத்தாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. பாஜகவிடமிருந்து மட்டுமல்ல இப்படிப்பட்ட ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க, ஆபத்தான செயல்பாடுகளை ஆதரிக்கும் திரு.சீமான் போன்றவர்களிடமும் பெண்களும், தமிழ்சமூகமும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

ஜோதிமணி
 
ஜோதிமணி நா.ராஜமுருகன்

எப்படி காலங்காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடக்கின்றனவோ அதேபோல அதற்கு எதிரான போராட்டங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை திரு.சீமான் நினைவில் கொள்ளவேண்டும். திரு.சீமான் மீதும் கடந்த காலத்தில் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது குற்றத்தை மறைக்கவே சீமான் ராகவனின் பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. மேலும் சீமான் 'பாஜகவின் பி-டீம்' தான் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார். எப்படியிருந்தாலும் திரு.சீமானின் இந்த செயல் வெட்கக்கேடானது. சீமான், கே.டி. ராகவன் போன்றவர்களின் வளர்ச்சி தமிழ்நாட்டின் பெண்களுக்குப் பேராபத்தை விளைவிக்கும். தமிழகம் குறிப்பாக தமிழகத்தின் எதிர்காலமான இளைஞர்களும்,மாணவர்களும் இப்போதாவது சீமானின் பொய் முகத்தைப் புரிந்துகொண்டு அவரைப் புறக்கணிக்க வேண்டும். அதுவே நாம் தமிழ்ச் சமூகத்துக்குச் செய்யும் பெருந்தொண்டு'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

``சட்டசபையில் வைத்தே ஆபாசப் படங்களெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு பொறுப்பில் இருப்பவர்கள் அதையெல்லாம் செய்யக்கூடாது. ஆனால், இவர் தனிப்பட்ட முறையில் செய்த ஒன்றை வீடியோ எடுத்துவைத்துக்கொண்டு அப்படிச் செய்துவிட்டார், இப்படி நின்றுவிட்டார் என்று சொல்வதையெல்லாம் பார்க்கும்போது, ஒரு கேடுகெட்ட சமூகமாக மாறிவிட்டதோ என்ற பயமே வருகிறது. யார் யாருடன் பேசுகிறார்கள், யார் என்ன பேசுகிறார்கள் என ஒட்டுக்கேட்பது, பதிவுசெய்வது, அதை வெளிவிடுவது. என்ன சாதித்துவிட போகிறார்கள், என்ன வந்துவிடப் போகிறது?"
சீமான்
 
 

இந்தநிலையில் சீமானின் பேச்சு குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலபாரதி பேசும்போது,

'' தமிழ்நாடு முழுவதும் வீடியோ விவகாரத்தைக் கண்டித்து கொண்டிருக்கும்போது, சீமான் ஏன் இப்படிப் பேசினார் எனத் தெரியவில்லை. சீமானுக்குத் தனிப்பட்ட முறையில் இப்படியொரு கருத்து இருந்தாலும் பொதுவெளியில், நியாயப்படுத்தும் விதத்தில் பேசியிருக்கக்கூடாது. கே.டி.ராகவன் மீதான எதிர்ப்பைவிட தற்போது சீமான் மீதான எதிர்ப்பு மேலோங்கியிருக்கிறது.

பாலபாரதி
 
பாலபாரதி

'எங்குதான் இப்படி நடக்கவில்லை' என சீமான் பேசியிருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லாக் குற்றத்தையும் எங்குதான் நடக்கவில்லை என அங்கீகரிக்க முடியாது. சாதாரண ஒரு மனிதன் இப்படிப் பேசினால் தனி மனித உரிமையைப் பேசுகிறார் என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அரசியல் கட்சியின் தலைவராக இருந்துகொண்டு இப்படிப் பேசுவது சரியல்ல. அதனால்தான் கடுமையான எதிர்ப்புகள் வருகின்றன. மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்க்காமல் இதை ஏன் பேசுகிறீர்கள் எனக் கேட்கிறார். அதையும் எதிர்க்க வேண்டும், இது போன்ற சம்பவங்களையும் எதிர்க்க வேண்டும். சீமான் இப்படிப் பேசியிருக்க வேண்டாம் என்பதே என் கருத்து'' என்கிறார் அவர்.

சீமானின் மீதான இந்த விமர்சனங்கள் குறித்து, நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர், பாக்கியராசனிடம் பேசினோம்,

'' தனிப்பட்ட இரண்டு நபர்களுக்கிடையிலான ஒரு விஷயம் வெளியில் வந்திருக்கிறது. அதை ஒரு விவாதமாக எடுத்து ஏன் நாம் பேசிக்கொண்டிருக்க வேண்டும். தற்போதைய நெருக்கடியான அரசியல் சூழலில் அது பேசுவதற்கான டாபிக் இல்லை என்ற கருத்தையே அண்ணன் சீமான் முன்வைத்தார். ஆனால், அவர் சொன்ன கருத்தை எடுத்துக்கொண்டு இப்போது தேவையில்லாமல் விவாதித்து சர்ச்சையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். ராகவனுக்கு ஆதரவாகப் பேசவேண்டும் என்கிற அவசியம் எங்களுக்கு இல்லை. எங்களை தொலைக்காட்சி விவாதங்களுக்குக் கூட அழைக்கக் கூடாது என மற்றவர்களைவிட எங்களைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருப்பவர் ராகவன். நாங்களும் அரசியல் ரீதியாக அவரை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறோம். அந்தப் பேட்டியிலேயே, வேளாண் சட்டம், தனியார்மயம் குறித்து பா.ஜ.கவை மிகக் கடுமையாக அண்ணன் சீமான் எதிர்த்துப் பேசியிருக்கிறார். ஆனால், எங்களை பா.ஜ.கவின் பி டீம் என்பது வேடிக்கையாக இருக்கிறது. தேர்தல் களத்திலேயே அது இல்லை என நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஜோதிமணிக்கு அவர்கள் கட்சியில் புதிதாக பொறுப்பு வரவிருக்கிறது. அதனால் ஆக்டிவாக இருப்பது போலக் காட்டிக் கொள்கிறார்.

பாக்கியராசன்
 
பாக்கியராசன்

நாங்கள் மரணதண்டனையை எதிர்த்து வருபவர்கள், ஆனால், பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை அளித்தாலும் தவறில்லை என அண்ணன் சீமானே பேசியிருக்கிறார். அதனால், பெண்ணுக்கு எதிரான அநீதியில் ராகவனுக்கு ஆதரவாக சீமான் நிற்கிறார் எனப் பேசுவதில் கொஞ்சமும் அர்த்தமில்லை. சட்டப்படி நடவடிக்கைகளை முன்னெடுத்து ராகவனைக் கூண்டில் நிறுத்துங்கள். அதை விடுத்து பொதுவெளியில் இதை விவாதிப்பதால், எந்தத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை. இதுபோன்ற விஷயங்கள் அடுத்தடுத்து தொடர்ந்தால் சமூகத்துக்குத்தான் ஆபத்து என்பதே எங்களின் கருத்து'' என்கிறார் அவர்.

கே.டி.ராகவனுக்கு உறுதுணையா; தனிமனித உரிமைக்கு ஆதரவா; சீமானின் சீற்றத்துக்குக் காரணம் என்ன?| What is the reason for Seeman's speech on Raghavan's issue - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

ராகவனும் அந்த பொண்ணும் விரும்பி பழகி இருந்தபோது எடுத்த இப்படி ஒரு வீடியோவ நம்பிக்கை துரோகம் செஞ்சு முந்திகொண்டு ராகவன் வெளியிட்டு இருந்தால் இப்பொழுது ராகவனை வரிந்து கட்டிக்கொண்டு அடிப்பவர்கள் என்ன சொல்லி இருப்பார்கள்..?  

ரகவனும் அரசியல்வாதி அந்தபொண்ணும் அரசியல்வாதி ரெண்டுபேரும் விரும்பி உடலுறவு வைக்கிறார்கள் ஒரு பரஸ்பர நம்பிக்கையில் செய்ததை ராகவன் வீடியோ எடுத்து வெளியிட்டு இருந்தால் அப்பொழுது என்ன சொல்லி இருப்பார்கள்..?

உண்மையில் ராகவனும் அந்த பொண்ணும் விரும்பி பழகி இருவர் சம்மதத்துடன் செக்ஸ் வரைபோயிருந்து அந்தபொண்ணு நம்பிக்கை துரோகம் செஞ்சு இப்படி வீடியோ வெளியிட்டு இருந்தால் நல்லவனுக்கு நடிக்காமல் அந்த பொண்ணு முகம் தெரியுற வீடியோ இருந்தா அதை ராகவன் வெளியவிட்டிரனும்.. கழுத்துவரை நனைஞ்சபிறகு முழுசா நனைஞ்சா என்ன.. நம்பிக்கை துரோகிக்கு தண்டனை கொடுத்த சந்தோசத்தோட பூராயும் நனைஞ்சிட்டு போறது..

  • கருத்துக்கள உறவுகள்

screen recording போல இருக்கு. ராகவன் record பண்ணி அவற்றை போனை hack பண்ணி எடுத்தாங்களோ, இல்லை அந்த பெண்மணியோ அவரை சேர்ந்த யாரோ சொல்லி எடுத்து பகிரங்கப்படுத்தி இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

ராகவனும் அந்த பொண்ணும் விரும்பி பழகி இருந்தபோது எடுத்த இப்படி ஒரு வீடியோவ நம்பிக்கை துரோகம் செஞ்சு முந்திகொண்டு ராகவன் வெளியிட்டு இருந்தால் இப்பொழுது ராகவனை வரிந்து கட்டிக்கொண்டு அடிப்பவர்கள் என்ன சொல்லி இருப்பார்கள்..?  

ரகவனும் அரசியல்வாதி அந்தபொண்ணும் அரசியல்வாதி ரெண்டுபேரும் விரும்பி உடலுறவு வைக்கிறார்கள் ஒரு பரஸ்பர நம்பிக்கையில் செய்ததை ராகவன் வீடியோ எடுத்து வெளியிட்டு இருந்தால் அப்பொழுது என்ன சொல்லி இருப்பார்கள்..?

உண்மையில் ராகவனும் அந்த பொண்ணும் விரும்பி பழகி இருவர் சம்மதத்துடன் செக்ஸ் வரைபோயிருந்து அந்தபொண்ணு நம்பிக்கை துரோகம் செஞ்சு இப்படி வீடியோ வெளியிட்டு இருந்தால் நல்லவனுக்கு நடிக்காமல் அந்த பொண்ணு முகம் தெரியுற வீடியோ இருந்தா அதை ராகவன் வெளியவிட்டிரனும்.. கழுத்துவரை நனைஞ்சபிறகு முழுசா நனைஞ்சா என்ன.. நம்பிக்கை துரோகிக்கு தண்டனை கொடுத்த சந்தோசத்தோட பூராயும் நனைஞ்சிட்டு போறது..

ஒரே ஒரு கேள்வி புலவரே,

இராகவனும் அந்த பெண்ணும் பரஸ்பரம் விரும்பி பழகினார்கள் என எதை வைத்து முடிவு எடுத்தீர்கள்?

நான் ஒரு ஆல்டெர்னேடிவ் சிச்சுவேசன் சொல்கிறேன் பாருங்கள். (ஊகம்)

1. பெண் பாஜாகாவில் தனக்கு பதவி வேணும் என இராகவனை அணுகுகிறார். வீடியோ கோல் எடுக்கிறார்.

2. பதவி வேணும் என்றால் நீ எனக்கு பாலியல் லஞ்சம்தா என இராகவன் கேட்கிறார். 

3. வீடியோ காலில் பேசி கொண்டு இருக்கும் போதே அந்த பெண்ணை உடைகளை களையுமாறு கேட்கிறார், தானே அதையும் செய்கிறார்.

4. வீடியோவை அந்த பெண்ணோ அல்லது இராகவனோ screen record செய்கிறார்கள்.

நான் மேலே சொன்னதுதான் நடந்தது என்றால் அப்போதும் இது தனிபட்ட விடயம் என்பீர்களா?

 

2 hours ago, பிழம்பு said:

சட்டப்படி நடவடிக்கைகளை முன்னெடுத்து ராகவனைக் கூண்டில் நிறுத்துங்கள். அதை விடுத்து பொதுவெளியில் இதை விவாதிப்பதால், எந்தத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை.

சீமான் இப்படி சொல்லவே இல்லை.

ஆனால் பாக்கியராசன் சீமானை விட தெளிவாக கதைக்கிறார்.

நான் மேலே கூறியது ஊகம்தான் ஆனால் இப்படி பாலியல் லஞ்சம் கேட்பது “ஒலகத்யில ஒருத்தரும் செய்யாத விடயம்” இல்லை.

அண்மையில் கூட மட்டகளப்பில் உதவி அரச அதிபர் ஒருவர் மாட்டினார்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

ஒரே ஒரு கேள்வி புலவரே,

இராகவனும் அந்த பெண்ணும் பரஸ்பரம் விரும்பி பழகினார்கள் என எதை வைத்து முடிவு எடுத்தீர்கள்?

நான் ஒரு ஆல்டெர்னேடிவ் சிச்சுவேசன் சொல்கிறேன் பாருங்கள். (ஊகம்)

1. பெண் பாஜாகாவில் தனக்கு பதவி வேணும் என இராகவனை அணுகுகிறார். வீடியோ கோல் எடுக்கிறார்.

2. பதவி வேணும் என்றால் நீ எனக்கு பாலியல் லஞ்சம்தா என இராகவன் கேட்கிறார். 

3. வீடியோ காலில் பேசி கொண்டு இருக்கும் போதே அந்த பெண்ணை உடைகளை களையுமாறு கேட்கிறார், தானே அதையும் செய்கிறார்.

4. வீடியோவை அந்த பெண்ணோ அல்லது இராகவனோ screen record செய்கிறார்கள்.

நான் மேலே சொன்னதுதான் நடந்தது என்றால் அப்போதும் இது தனிபட்ட விடயம் என்பீர்களா?

 

நானும் முடிவாக சொல்லவில்லை ஜீ.. நானும் எடுகோளாகத்தான் எழுதி இருக்கிறன்… பரஸ்பரம் விருப்பப்பட்டு பழகி ஏமாத்தி இருந்தால் மட்டுமே நான் சொன்னது பொருந்தும்..

 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

ஒரே ஒரு கேள்வி புலவரே,

இராகவனும் அந்த பெண்ணும் பரஸ்பரம் விரும்பி பழகினார்கள் என எதை வைத்து முடிவு எடுத்தீர்கள்?

நான் ஒரு ஆல்டெர்னேடிவ் சிச்சுவேசன் சொல்கிறேன் பாருங்கள். (ஊகம்)

1. பெண் பாஜாகாவில் தனக்கு பதவி வேணும் என இராகவனை அணுகுகிறார். வீடியோ கோல் எடுக்கிறார்.

2. பதவி வேணும் என்றால் நீ எனக்கு பாலியல் லஞ்சம்தா என இராகவன் கேட்கிறார். 

3. வீடியோ காலில் பேசி கொண்டு இருக்கும் போதே அந்த பெண்ணை உடைகளை களையுமாறு கேட்கிறார், தானே அதையும் செய்கிறார்.

4. வீடியோவை அந்த பெண்ணோ அல்லது இராகவனோ screen record செய்கிறார்கள்.

நான் மேலே சொன்னதுதான் நடந்தது என்றால் அப்போதும் இது தனிபட்ட விடயம் என்பீர்களா?

 

சீமான் இப்படி சொல்லவே இல்லை.

ஆனால் பாக்கியராசன் சீமானை விட தெளிவாக கதைக்கிறார்.

நான் மேலே கூறியது ஊகம்தான் ஆனால் இப்படி பாலியல் லஞ்சம் கேட்பது “ஒலகத்யில ஒருத்தரும் செய்யாத விடயம்” இல்லை.

அண்மையில் கூட மட்டகளப்பில் உதவி அரச அதிபர் ஒருவர் மாட்டினார்.

இப்போ மிகவும் வேலைக் களைப்பில் உள்ள என்னிடம் ஒருத்தர் இப்படி கேள்வியை முன் வைத்தால் ரொம்ப முக்கியமான பிரச்சினையா இது? எவன் வீட்டில் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதை தவிர நாட்டில் வேறு பிரச்சினைகளே இல்லையா? போய் வேலையை பாருங்க என்று தான் சொல்ல தோன்றும்?

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

இப்போ மிகவும் வேலைக் களைப்பில் உள்ள என்னிடம் ஒருத்தர் இப்படி கேள்வியை முன் வைத்தால் ரொம்ப முக்கியமான பிரச்சினையா இது? எவன் வீட்டில் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதை தவிர நாட்டில் வேறு பிரச்சினைகளே இல்லையா? போய் வேலையை பாருங்க என்று தான் சொல்ல தோன்றும்?

ஓம். நீங்களோ நானோ சொல்லலாம். ஏனென்றால் நம் மேல் ஒரு சமுதாய எதிர்பார்ப்பு இல்லை.

அப்படியாயினும் கூட, பிறகு களை தீர யோசித்து பார்த்தால், ஏனைவர்கள் கூட இதில் “பாலியல் சுரண்டல்” ஆங்கிள் இருக்கலாம் என கூறினால், நாம் நம் கருத்தை மாற்றி கொள்வோம் அல்லவா?

ஆனால் சீமான் களைப்பில் வந்ததாய் தெரியவில்லை. இது அவரே கூட்டிய பத்திரிகை சந்திப்பு. ஏனைய கேள்விக்கு எல்லாம் வழமை போல் நிதானமாகவே பதில் சொல்கிறார்.

இந்த கேள்விக்கு பதில் சொல்வதில் மட்டும் ஏனோ தடுமாறி விட்டார்.

இப்போ பாக்கியராசன் damage limitation செய்கிறார்.

 

ஆனால் எச் ராஜா, சேகர், காயத்திரி போன்றோரே வாயை மூடி கொண்டிருக்க சீமான் போய் வாண்டடாக வண்டியில் ஏறிவிட்டார்.

இது அவரை பிஜேபி ஆள் என்று சொல்லும் என் போன்றோர்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தாதா?

ஜோதி மணி சந்தர்பம் பார்த்து அடிக்கிறா. அவவும் ஊகத்தில்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஓம். நீங்களோ நானோ சொல்லலாம். ஏனென்றால் நம் மேல் ஒரு சமுதாய எதிர்பார்ப்பு இல்லை.

அப்படியாயினும் கூட, பிறகு களை தீர யோசித்து பார்த்தால், ஏனைவர்கள் கூட இதில் “பாலியல் சுரண்டல்” ஆங்கிள் இருக்கலாம் என கூறினால், நாம் நம் கருத்தை மாற்றி கொள்வோம் அல்லவா?

ஆனால் சீமான் களைப்பில் வந்ததாய் தெரியவில்லை. இது அவரே கூட்டிய பத்திரிகை சந்திப்பு. ஏனைய கேள்விக்கு எல்லாம் வழமை போல் நிதானமாகவே பதில் சொல்கிறார்.

இந்த கேள்விக்கு பதில் சொல்வதில் மட்டும் ஏனோ தடுமாறி விட்டார்.

இப்போ பாக்கியராசன் damage limitation செய்கிறார்.

 

ஆனால் எச் ராஜா, சேகர், காயத்திரி போன்றோரே வாயை மூடி கொண்டிருக்க சீமான் போய் வாண்டடாக வண்டியில் ஏறிவிட்டார்.

இது அவரை பிஜேபி ஆள் என்று சொல்லும் என் போன்றோர்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தாதா?

ஜோதி மணி சந்தர்பம் பார்த்து அடிக்கிறா. அவவும் ஊகத்தில்தான்.

சீமான் இது பற்றி பேசாமல் விட்டிருக்கலாம் அல்லது வேறு பதில் சொல்லி இருக்கலாம் என்பதே எனது விருப்பமும் ஆனால் பத்திரிகைகாரர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவ்வளவு சுலபமாக விட்டு விட மாட்டார்கள்.☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Nathamuni said:

ராகவன், அரசியலில் இருப்பதால், தாம் பத்தரை மாற்று தங்கம் போல, குய்யோ, முறையோ என்று கூப்பாடு போடுவோர் பலரின் தனிப்பட்ட வாழ்வும் அப்படித்தான் இருக்கும். வீடியோ எடுத்தால் மோசாகவே இருக்கும்.

அந்த வகையில் சீமான் சொன்ன கருத்து நேர்மையானது.

ஒவ்வொரு அரசியல்வாதியும் தனிப்பட்டவாழ்வில் தவறு செய்தவராகவே இருப்பார். இதுவும் உலக நியதிகளில் ஒன்று......

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

ஆனால் பத்திரிகைகாரர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவ்வளவு சுலபமாக விட்டு விட மாட்டார்கள்.☹️

“ஒலிப்பதிவு இல்லாத வீடியோவை வைத்து எதையும் சொல்ல முடியாது. இதில் பாலியல் சுரண்டல் நடந்திருந்தால் அது தவறு. இல்லாமல் இது தனி நபர்களின் மனமொத்த வீடியோ என்றால் அதை வெளியில் விட்டது தவறு”.

“எது உண்மை என்பதை அரசுதான் விசாரிக்க வேண்டும். விசாரிக்கும் என நம்புகிறேன்”.

“இதை தவிர இதில் வேறு நான் கருத்து சொல்ல ஏதும் இல்லை. அடுத்த கேள்வி?”

இப்படி கட்டையை போட்டிருந்தால் - பத்திரிகையாளருக்கு அடுத்து கேட்க கேள்வியே இருந்துதிராது.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

“ஒலிப்பதிவு இல்லாத வீடியோவை வைத்து எதையும் சொல்ல முடியாது. இதில் பாலியல் சுரண்டல் நடந்திருந்தால் அது தவறு. இல்லாமல் இது தனி நபர்களின் மனமொத்த வீடியோ என்றால் அதை வெளியில் விட்டது தவறு”.

“எது உண்மை என்பதை அரசுதான் விசாரிக்க வேண்டும். விசாரிக்கும் என நம்புகிறேன்”.

“இதை தவிர இதில் வேறு நான் கருத்து சொல்ல ஏதும் இல்லை. அடுத்த கேள்வி?”

இப்படி கட்டையை போட்டிருந்தால் - பத்திரிகையாளருக்கு அடுத்து கேட்க கேள்வியே இருந்துதிராது.

நாம் ஒரு பதில் வைத்திருப்போம் பத்திரிகைகாரர்கள் இன்னொன்றை பெறுவதற்கு தயாராக வந்து இருப்பார்கள். களநிலை நாம் நினைப்பது போல் எல்லா நேரங்களிலும் இருப்பது இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, goshan_che said:

“ஒலிப்பதிவு இல்லாத வீடியோவை வைத்து எதையும் சொல்ல முடியாது. இதில் பாலியல் சுரண்டல் நடந்திருந்தால் அது தவறு. இல்லாமல் இது தனி நபர்களின் மனமொத்த வீடியோ என்றால் அதை வெளியில் விட்டது தவறு”.

“எது உண்மை என்பதை அரசுதான் விசாரிக்க வேண்டும். விசாரிக்கும் என நம்புகிறேன்”.

“இதை தவிர இதில் வேறு நான் கருத்து சொல்ல ஏதும் இல்லை. அடுத்த கேள்வி?”

 குத்தியன் பத்திரிகை நிருபர்  குமாரசாமி:-  இதே மாதிரி விஜயலட்சுமி மேடம் விசயத்தில உங்க பெயர் அடிக்கடி  அடிபடுதே அத பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்? 🎤

Edited by குமாரசாமி
ஒலிவாங்கி இணைப்பு 😎

  • கருத்துக்கள உறவுகள்
On 30/8/2021 at 11:21, தமிழ் சிறி said:

கே. ரி. ராகவன்  கலியாணம் கட்டியவர்,
அவர்... "கர சேவை"  செய்ததை, சீமான் ஆதரிக்கிறாரா....  :grin: 😂 🤣 

நீஙகள் ஒன்னுமே யோசியாம, குரோவேசியா கடலில குளித்து, முமுகி, சாப்பிட்டு, முடிஞ்சா, கேடிக்கும், ஒரு மோட்சார்சனை பண்ணி கொண்டு ஆறுதலா வாருஙகோ.

திரி ஓடும்..... 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 குத்தியன் பத்திரிகை நிருபர்  குமாரசாமி:-  இதே மாதிரி விஜயலட்சுமி மேடம் விசயத்தில உங்க பெயர் அடிக்கடி  அடிபடுதே அத பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்? 🎤

சீமான்: நிருபர் குமாரசாமி ஒரு நல்ல கேள்வியை கேட்டுள்ளார்.

எனக்கும் விஜயலக்சுமிக்கும் இடையே காதல் உறவு இருந்தது. ஆனால் அந்த உறவு இடையில் கசந்து போய்விட்டதால் நாம் இருவரும் பிரிந்து விட்டோம்.

இன்றைய உலகில் பல வருடம் மணம் முடித்து, பிள்ளைகள் உடையவர்கள் கூட மன முறிவு ஏற்பட்டதால், மண முறிவுக்கு போகின்றனர். அதே போல் ஒரு மனமுறிவு எனக்கும் விஜய லக்சுமிக்கும் திரு மணத்திற்கு முன்னதாகவே ஏற்பட்டது.

இதில் யாரும் யாரையும் ஏமாற்றவும் இல்லை, பாலியல் துஸ்பிரயோகம் செய்யவும் இல்லை.

இதுதான் உண்மை. இதற்கு மேலாக இந்த விசயத்தில் என் மேல் கூறப்படுவது எல்லாம் வெறும் அவதூறு.

ஏதாவது வழக்கு போட்டால் அதை சந்திக்க தயாராய் உள்ளேன். 

அடுத்த கேள்வி?

2 hours ago, விசுகு said:

நாம் ஒரு பதில் வைத்திருப்போம் பத்திரிகைகாரர்கள் இன்னொன்றை பெறுவதற்கு தயாராக வந்து இருப்பார்கள். களநிலை நாம் நினைப்பது போல் எல்லா நேரங்களிலும் இருப்பது இல்லை.

உண்மைதான் ஆனால் பத்திரிகைகார்களை டீல் பண்ணுவது எப்படி என தெரியாமல் அரசியல் செய்யவும் முடியாது. 

அவர்களுக்கு பயந்து கேள்வியை தட்டி கழிக்க முயன்றால் - இப்படி எதையாவது சொல்லி இராகவனை விட பெரிய செய்தியாக அது மாறிவிடும். 

கருநாநிதி பண்ணாத உட்டாலக்கடி வேலையா? சந்திக்காதா நிருபர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

சீமான்: நிருபர் குமாரசாமி ஒரு நல்ல கேள்வியை கேட்டுள்ளார்.

எனக்கும் விஜயலக்சுமிக்கும் இடையே காதல் உறவு இருந்தது. ஆனால் அந்த உறவு இடையில் கசந்து போய்விட்டதால் நாம் இருவரும் பிரிந்து விட்டோம்.

இன்றைய உலகில் பல வருடம் மணம் முடித்து, பிள்ளைகள் உடையவர்கள் கூட மன முறிவு ஏற்பட்டதால், மண முறிவுக்கு போகின்றனர். அதே போல் ஒரு மனமுறிவு எனக்கும் விஜய லக்சுமிக்கும் திரு மணத்திற்கு முன்னதாகவே ஏற்பட்டது.

இதில் யாரும் யாரையும் ஏமாற்றவும் இல்லை, பாலியல் துஸ்பிரயோகம் செய்யவும் இல்லை.

இதுதான் உண்மை. இதற்கு மேலாக இந்த விசயத்தில் என் மேல் கூறப்படுவது எல்லாம் வெறும் அவதூறு.

ஏதாவது வழக்கு போட்டால் அதை சந்திக்க தயாராய் உள்ளேன். 

அடுத்த கேள்வி?

யெஸ் கரெக்டான பதில்.. இந்த பதிலுக்கு பெண்ணியவாதிகள்கூட கம்பு சுத்தமுடியாது… ஏனெனில் பிடிக்காவிட்டால் பிரிந்துவிடவேண்டும் காலம்பூரா புடிக்காத வாழ்க்கை வாழத்தேவையில்லை என்பதே அவர்கள் நிலைப்பாடும்… நான் நல்லவன் என்று நடிக்கவெளிக்கிடுவது இல்லையெண்டால் பதில் சொல்லாமல் பம்முவது இது ரெண்டும்தான் அரசியல் எதிரிகளுக்கு வாய்ப்பாகிவிடுகிறது வச்சு செய்ய..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

என் மனதில் பட்டது, சீமான் வேண்டுமென்றே பேசுகிறாரோ?! தன்னை பற்றி பேச வைக்க!

  • கருத்துக்கள உறவுகள்
3B12788B-F87E-4069-B7B4-2BCAAAB48906.jpeg
 

 

தமிழக பாஜகவை காப்பாற்ற ஒரே வழி
 
இதை நான் கே.டி ராகவனை ஆதரிக்கும் பொருட்டு எழுதவில்லை. இது சரியான விதத்தில் புரிந்து கொள்ளப்படும் எனும் நம்பிக்கையில் எழுதுகிறேன்:  கே.டி ராகவனின் இந்த ஆபாச வீடியோ வந்து பந்தாடப்பட்டு பதவி இழந்த பிறகு எனக்கு அவர் மீதுள்ள கோபம், எரிச்சல் எல்லாம் மறைந்து விட்டது. முன்பு அவரைப் பார்த்தாலே செம கடுப்பு வரும். ஆனால் இப்போது பாவம் எனத் தோன்றுகிறது. அவர் அதிகார துஷ்பிரயோகம் பண்ணித்தான் அந்த வெட் சாட்டில் ஈடுபட்டார், ஆகையால் பதவியில் இருந்து தூக்கப்பட்டது நியாயம் தான் என நம்புகிறேன். இருந்தாலும் அண்ணாமலை ஒரு குழந்தையை குளிப்பாட்டி குப்பைத் தொட்டியில் போட்டது போல இவரைத் தூக்கி செப்டிக் டேங்கில் போட்டு மூடி விட்டார். இனி ஒரு போதும் எழுந்து வர முடியாத வீழ்ச்சி இது. இதன் பின்னால் உள்ள நிஜமான வில்லன் ஜி.முருகனே, அவர் தான் இந்த காணொலி வெளியான பின்னர் ஊடகங்களை தொடர்புகொண்டு இதைப் பற்றி அதிகமாகப் பேசும்படி தூண்டினார் என்று நக்கீரன் பிரகாஷ் சொல்லுகிறார். இது ஒரு படுபயங்கர திருப்பம்.
 
பிரகாஷின் பார்வையில், முதலில் தேர்தலுக்குப் பின் ஜி.முருகன் உள்ளிட்ட பார்ப்பனரல்லாத பாஜக தலைவர்களை காலி செய்ய ராகவன் ஒரு சதித்திட்டம் தீட்டுகிறார். அவர் தினமலர் மூலம் இத்தலைவர்களின் பலான செயல்பாடுகளை பாஜக மேலிடம் அறிந்து கண்டித்தது பற்றின சேதிகளை வெளியிடுகிறது. விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும் எனக் கோருகிறது. இதன் பின்னால் ராகவனே என அறிந்து கொண்ட முருகன் தன் ஆதரவாளர்களைக் கொண்டு ராகவனின் பாலியல் அத்துமீறல்கள் பற்றின ஆதாரங்களை சேகரிக்கிறார்; அவை எப்படியோ மதனிடம் வந்து சேர்கின்றன. மதன் அண்ணாமலையிடம் போகிறார் அல்லது அண்ணாமலையே அவரிடம் வருகிறாரோ தெரியவில்லை. ஆனால் அண்ணாமலை யோசிக்கிறார்: “எப்படியும் முருகன் காலியாகி விட்டார். அவர் வீடியோவும் அகப்பட்ட நிலையில் இனி அவர் நம் பிடிக்குள். ராகவனை அப்படி கட்டியாள முடியாது. அவரை மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தி, அசிங்கப்படுத்தி ஒரேயடியாக துரத்த வேண்டும். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்!”. அண்ணாமலை அந்த காணொலியை பதிவேற்றும்படி உத்தரவிடுகிறார். இங்கு அவர் எதிர்பாராதது எந்த எதிரியையும் அப்படி புறங்கையால் டீல் பண்ண முடியாது என்பதே. ஒரு பூனைக் கூடி எதிர்த்து சீறும். ராகவன் தன் அத்தனை தொடர்புகளையும் பயன்படுத்தி தன் மீது இதற்கு மேல் சேறு வாரி இறைக்கப்படாதபடி தற்காத்துக் கொள்கிறார். விளைவாக மதனுக்கும் அண்ணாமலைக்கும் முட்டிக்கொள்ள, மதன் அண்ணாமலையை நிர்வாணப்படுத்துகிறார். ஒரே நாளில் அண்ணாமலை ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் வில்லன் ஆகி விடுகிறார். அவர் ஒரு சிறுபிள்ளைத்தனமான குரூரமான அரசியல்வாதி, சாடிஸ்ட் எனத் தெரிய வருகிறது.
 
 இந்த இடத்தில் தான் எனக்கும் ராகவன் மீது சற்றே soft corner வருகிறது. இப்போதெல்லாம் நானும் நண்பர்களும் கே.டி ராகவனைப் பற்றி பேசிப் பேசி சிரிக்கிறோம். அவருடைய அந்த பிரசித்தமான சிலுவை வரையும் சைகையை நான் வீட்டில் பண்ணிக் காட்டினால் அது ஆபாசமாக அன்றி வேடிக்கையாக மாறி விடுகிறது. இதற்கு முன் எந்த அரசியல் தலைவர் நமக்கு இத்தகைய வாய்ப்பை வழங்கி இருக்கிறார்? வடிவேலுவுக்கு அடுத்தபடியாக பல முத்திரைகள், பாவங்கள் காட்டி நம் பொழுதுகளை ஜாலியாக்கிய பெருமை ராகவனையே சாரும். இப்போதெல்லாம் மனம் சோர்ந்தால் ஒன்று வடிவேலு அல்லது ராகவனின் வீடியோ தான்.
 
இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், அடுத்தடுத்து முருகன் உள்ளிட்ட பிற பாஜக தலைவர்களின் காணொலிகளையும் வெளியிட்டு விடுங்கள் எனக் கோரத் தான். அவர்கள் மீது தமிழர்களுக்கு உள்ள வெறுப்பைப் போக்கி, உச்சுக்கொட்ட வைக்க ஒரே வழி ஒவ்வொருவரையாய் எக்ஸ்போஸ் பண்ணி பதவியை விட்டுத் தூக்குவது தான். அதனால் தான் அண்ணன் அண்ணாமலையிடம் வேண்டுகிறேன், “உங்கள் ஸ்டிங்க் ஆபரேஷன்ஸ் தொடருங்கள். பாஜகவை காப்பாற்ற ஒரே வழி அது தான்.”
அங்க பல உள்குத்து இருக்கும் போலயே!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, goshan_che said:

அடுத்த கேள்வி?

நிருபர் பொன்ராசு:- சார் உங்க தலைவர் பிரபாகரன் ஆட்சி நடந்தப்போ சாதி,சீதண கொடுமைகள் இல்லாம இருந்திச்சு....இப்போ அது மீண்டும் தலைதூக்கினதா பேசிக்கிறாங்க அத பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க...அதோட நீங்க தமிழ்நாட்ல ஆட்சிக்கு வந்தா சாதி வேகுபாட இல்லாம செய்வீங்களா? 🎤

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 30/8/2021 at 09:03, ஏராளன் said:

`நாட்டில் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது, `எனது வீடியோவை பார்த்து ரசியுங்கள்' என ராகவன் சொன்னாரா?

அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேடி ராகவன் விசயத்தில் மேலே சொன்னதோடு நிறுத்திக்கொண்டால் சீமானை குறிவைத்து எவரும் எதுவும் பேசியிருக்க வாய்ப்பேயில்லை.

அதைவிடுத்து ....

On 30/8/2021 at 09:03, ஏராளன் said:

கே.டி.ராகவனின் அனுமதியில்லாமல் தனிப்பட்ட இடங்களில் அவரை வீடியோ எடுப்பது என்பது சமூக அவலம். உலகில் நடக்காத ஒன்றைச் செய்ததாகக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். சட்டசபையில் ஆபாச காட்சிகளைப் பார்த்துள்ளனர். அவர் தனது தனிப்பட்ட அறையில் செய்த காட்சிகளை வெளியில் விடுவதன் மூலம், கேடுகெட்ட சமூகமாக மாறிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது

......................இந்த காணொளியை வெளியிட்ட நபரைக் கைது செய்திருக்க வேண்டும். உலகின் யாரும் செய்யாத ஒன்றையா அவர் செய்துவிட்டார்

இப்படி எல்லாம் பேசியிருந்தால் சீமான் கேடி ராகவனுக்கு வக்காலத்து வாங்குகிறார் என யார்தான் நினைக்கமாட்டார்கள்? 

கேடி ராகவன் பற்றிய கேள்விக்கு நாட்ல எவ்வளவு பிரச்சனையிருக்கு அதைபோய் பாருங்க என்று சொல்லி அந்த கேள்வியை தவிர்த்திருந்தால் இனமான போராளி என்று தன்னாலும் தனது ஆதரவாளர்களாலும் அடையாளபடுத்தும் சீமானுக்கு அழகூட்டியிருக்கும்.

உலகத்தில் பலகோடிபேர் இதை செய்து கொண்டிருக்கிறார்கள்தான், தனிப்பட்டவர்கள் இப்படி நடந்துகொண்டால் சபையேற்றி எவனும் இதுபற்றிகேட்கபோவதில்லை.

ஆனால் மக்கள் பிரதிநிதியென்று தம்மை சொல்லி கொள்பவர்கள் தனியொழுக்கமின்றி தனியறையில் இருந்து செயற்பட்டால்கூட அது சர்வதேச அளவில் சர்ச்சைக்குரியதாகும், அதற்கு பில்கிளிண்டன்டலிருந்து கேடி ராகவன்வரை விதிவிலக்கல்ல, 

நான் சீமான் கட்சியின் ஆதரவாளன் இல்லை, அதேநேரம் சீமான் செய்யும் அரசியலை வேண்டாம் என்று சொல்பவனும் இல்லை. ஆனால் ராகவன் சார்ந்த கட்சிக்காரர்களே அவர் செயலை நியாயபடுத்தாத ஒரு நிலையில் சக அரசியல்வாதி செய்த தவறை எப்படியெல்லாம் நியாயபடுத்துகிறார் சீமான், சமூகத்தைகூட கேடுகெட்ட சமூகம் என்கிறார், எய்தவனை விடு அம்பை கைது செய் என்று முழங்குகிறார், இது எந்தவகை இனமான அரசியல்? 

சட்டசபையில் ஆபாச படம் பார்க்கவில்லையா என்று கேட்கிறார், அவர்கள் பார்த்தது தப்பு என்று சொல்லபடவில்லையா? சபை ஒழுங்குவிதிமுறைபடி அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கபடவில்லையா?  அப்போ யாராவது சட்டசபை கமெராமேன் மேலதான் தப்பு என்று கொதித்தார்களா?

தனி அறையானாலும் சட்டசபை ஆனாலும் ஒழுக்கம் தவறும் மக்கள் பிரதிநிதிகள் விமர்சனத்திற்குள்ளாவார்கள்.

நீங்கள் கேட்டதையே திருப்பி உங்களை பலர் கேட்பார்கள், நாட்டில் எவ்வளவோ பிரச்சனையிருக்க ராகவனை படம் பிடித்தவனை கைது செய்,கேடுகெட்ட சமூகம் என்று எதற்கு இந்த பிரச்சனையை தலையில் தூக்கி வைக்கிறீர்கள்?

எமக்கு ஒருவரை பிடிக்கும் என்பதற்காக அவர் செய்வது எல்லாவற்றையும் நாம் நியாயபடுத்தகூடாது, அது சீமான் ஆனாலும் சரி ராகவன் ஆனாலும் சரி. அதுவெறும் பச்சோந்திதன  அரசியல் மற்றும், ஆதரவு என்றாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நிருபர் பொன்ராசு:- சார் உங்க தலைவர் பிரபாகரன் ஆட்சி நடந்தப்போ சாதி,சீதண கொடுமைகள் இல்லாம இருந்திச்சு....இப்போ அது மீண்டும் தலைதூக்கினதா பேசிக்கிறாங்க அத பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க...அதோட நீங்க தமிழ்நாட்ல ஆட்சிக்கு வந்தா சாதி வேகுபாட இல்லாம செய்வீங்களா? 🎤

சீமான் மைண்ட் வாய்ஸ் (வடிவேலு பாணியில் வாசிக்கவும்) : ஐயோ… என் மனசு கூட தேவையில்லாமல் அங்கயே போகுதே…..பொன்ராசு…நான் எப்படி சொல்வேன் பொன்ராசு? நான் அத எப்படி சொல்வேன்…

ஒரு காட்டு முகாம், ஐநூறு போராளிகள், மூன்று மணி நேரம் தலைவரோட பேசினேன் அப்டீன்னு சொல்லத்தான் ஆசை. 

ஆனா அதுதான் இல்ல. 3 மணி நேரம் அவருக்காக காத்திருத்தேன் . வந்தாரு…ஒரு ஒண்ரை நிமிசம், படம் நல்லா போகுதா, படம் எடுக்க வந்ததுக்கு நன்றி அப்டீன்னாரு. கிளம்பிட்டாரு. 

அண்ணே ஒரு போட்டோ எடுக்கவான்னு…கேட்டேன்.

இவன் ரொம்ப நல்லவண்டா…எடுத்துக்கட்டும்னு அவர் பாடிகாட்ஸ்கிட்ட சொன்னாரு.

இதுதான் பொன்ராசு நடந்தது. 

அவருக்கும் எனக்கு ஒரு போட்டோ எடுத்த உறவுதான் பொன்ராசு.

அவர் போனதுக்கு அப்பறம் சில பல பேர் சொல்லி தந்தைபோல நான் ஒரு புளோவில சிலதை சொல்லிகிட்டு ஏதோ பிழைப்பை பாக்கிறன், இதில மண்ணை அள்ளி போட்டிராத பொன்ராசு.

(மைட்ன்வாய்ஸ் முடிகிறது)

சீமான் ஆக்ரோசமாக கையை உயர்தி ஆரம்பிக்கிறார்…

சீமான் அம்பி வாய்ஸில் : தலைவர் பிரபாகரன் போல் ஒரு சாதியற்ற சமூகத்தை படைப்போம்…..

சீமான் அந்நியன் வாய்சில் : சாதியை வைத்துத்தான் நீ தமிழனா இல்லையா என அடையாளம் காண்போம். 

நிருபர் பொன்ராசுவுக்கு மூக்கால் பொல, பொல என இரத்தம் வழிகிறது. அவர் மயங்கி சரிகிறார்

(திரை மூடல்)

பிண்ணனியில் பட்டுக்கோட்டையின்

உப்பு கல்லை வைரம் என்று சொன்னால், நம்பி ஒப்பு கொள்ளும் மூடருக்கு முன்னால், நாம் கதறி என்ன, குழறி என்ன ஒன்றுமே நடக்கவில்லை தோழா, ரொம்ப நாளா என்ற பாடல் ஒலிக்கிறது.

கடுப்பு துறப்பு

திரி திசை திரும்பினால் நான் பொறுப்பல்ல🤣.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.