Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம் : ஐந்து தமிழர்கள் உடல் கருகி பலி - இராகலையில் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(க.கிஷாந்தன்)

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை இலக்கம் (01) தோட்ட பிரிவில் மண்ணால்  அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தனி வீடு ஒன்று நேற்று (07) இரவு பத்து மணியளவில் தீ பிடித்துள்ளது.

Photo__13_.jpg

இந்த  திடீர் தீ விபத்து சம்பவத்தில்  குறித்த வீட்டில் வசித்து வந்த ஆறு பேரில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் தீயில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.

இதன் போது குறித்த சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் மகள், மகளுடைய ஒரு வயது மற்றும் 12 வயது உடைய இரு ஆண் பிள்ளைகள் என ஐவர் தீயில் எரிந்து சம்பவ வீட்டிலேயே உயிரிழந்துள்ளனர். 

Photo__7_.jpg

மேலும் சம்பவத்தை கேள்வியுற்ற  வீட்டில் அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து கூச்சலிட்டு தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சித்தும் அது பயனளிக்கவில்லை.

இதன் போது வீட்டின் சுவருகளை உடைத்து எரிந்த நிலையிலான சடலத்தை கண்டுள்ளனர் .

இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவயது சிறுவனான மோகன்தாஸ் ஹெரோஷனுக்கு நேற்று (07)  இரவு முதலாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த உயிரிழப்பு சம்பவத்தில் இராமையா தங்கையா (வயது 61), அவரின் மனைவி செவனமுத்து லெட்சுமி (வயது 57), ஆகியோருடன், மகளான தங்கையா நதியா (வயது 34) இவரின் பிள்ளைகளான, சத்தியநாதன் துவாரகன் (13), முதல் கணவரின் பிள்ளை) மற்றும் தற்போதைய பிள்ளையான மோகன்தாஸ் ஹெரோசன் (வயது 01) ஆகியோரே தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

Photo__8_.jpg

இதையடுத்து  இன்று (08.10.2021) காலை 11.46 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்ற வலப்பனை நீதிமன்ற நீதவான் டி.ஆர்.எஸ்.குனதாச மரண விசாரணையை முன்னெடுத்தார்.

இதன்போது சம்பவத்தில் உயிர் தப்பிய மகன் தங்கையா இரவீந்திரன் (வயது 30) சடலங்களை அடையாளம் காண்பித்தார்.

பின் சட்ட வைத்தியரின் விசாரணைக்கு பின் சடலங்களை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார்.

இதன் பிரகாரம் பகல் 1.23 மணியளவில் சட்ட வைத்தியர் பி.ராஜகுரு வருகைதந்து  விசாரணையை மேற்கொண்டார்.

Photo__1_.jpg

அதன்பின் பகல் 2.05 மணியளவில் சடலங்கள் லொரி ஒன்றின் மூலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவத்தில் உயிர் தப்பிய தங்கையா இரவீந்திரன் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் இராகலை பொலிஸார்,  நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம் : ஐவர் உடல் கருகி பலி - இராகலையில் சம்பவம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

எங்கு பார்த்தாலும்… தமிழர்களைத்தான், மரணம் குறி வைக்கின்றது. 😢

கண்ணீர் அஞ்சலிகள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பு:: இந்த வீடியோ பார்ப்பவர்களை கவலைப்பட வைக்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வேதனை இது.......!

கண்ணீர் அஞ்சலிகள்.....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

image_971fd85459.jpg

ஆர். ரமேஷ்

நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

எனினும், அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் சோகத்தில் மூழ்கியுள்ளது. அந்த நாயின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது.

யார் விரட்டினாலும் தலையைக் குனிந்தவாறே இருக்கிறது.

Tamilmirror Online || தீ பிடித்த வீட்டில் இருந்த நாய் அழுகிறது

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். மிக சோகமான நிகழ்வு.

  • கருத்துக்கள உறவுகள்

Photo__7_.jpg

இலங்கையின் பொருளாதாரத்தையே தூக்கி நிறுத்தும் தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்தவீடு...

நாலு தடி அதுக்குமேல நாலு தகரம் குட்டி சுவர் அதுக்குள்ள பத்து பதினைந்துபேர் வாழ்வு.இதில் தீப்பிடித்தால் என்னதான் மிஞ்ச இருக்கு? 

புலம்பெயர்ந்த நாமெல்லாம் வாழும் நாடுகளில் ஐந்து வருசம் முடிஞ்சவுடனேயே சிட்டிசன் கிடைக்கவில்லையென்று சினந்து கொள்கிறோம் சில நூறு ஆண்டுகளாய் வாழும் அவர்களில் பலருக்கு அதுவும் கிடைத்திருக்கவில்லை. கூடவே போதிய வருமானம் இல்லை பசியுடன் அட்டை கடிக்க கடிக்க கொழுந்து பறிக்கும் வாழ்க்கை.

 எந்த சுகமும் அனுபவிக்காது வாழ்ந்தார்கள் எல்லோரும் ஒன்றாய் போய்விட்டார்கள்.

அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும் ...ஒருத்தர் கூட போய் நெருப்பை அணைக்காமல்  விடுப்பு பார்த்துக் கொண்டு வீடியோ எடுத்து கொண்டு நிக்கினம் ...தீயணைப்பு படையினரைத் தன்னும் அவசரமாய் போன் பண்ணி கூப்பிடுவம் என்றில்லை tw_dissapointed:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.