Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனக்கு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவே... ஞானசாரரை நியமித்தேன் – ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் எதிர்பார்த்ததைப்போன்று அரசாங்கம் செயற்படவில்லை – ஜனாதிபதி

எனக்கு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவே... ஞானசாரரை நியமித்தேன் – ஜனாதிபதி

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியை அமைந்தமை தனக்கு ஆலோசனைகளை வழங்கட்டுவதற்காக மட்டுமே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த செயலணிக்கு ஞானசாரதேரரை நியமித்தமை நாட்டுக்கு நீதியை வழங்குவதற்காக அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது குறித்த செயலணி தொடர்பாக அதிருப்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

தன்னால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு கட்சித்தலைவர்களிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் தனது நண்பர் ஒருவரை நியமிப்பதற்கும் அனுமதி கோரவேண்டிய நிலை ஏற்படும் என கூறியுள்ளார்.

இதேவேளை நீதி அமைச்சர் அலி சப்ரியின் நியமனத்தின்போது கூட இவ்வாறு எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

https://athavannews.com/2021/1247701

  • கருத்துக்கள உறவுகள்

பன்றியோடு சேர்ந்த ……….

 

ஜனாதிபதியால் பொது  மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட குற்றவாளியிடம் அதே ஜனாதிபதி ஆலோசனை. 😂

  • கருத்துக்கள உறவுகள்

தேரர் ஜனாதிபதியின் ஆலோசகர்.....! கோத்தாவுக்கு நல்லாய் நகைச்சுவை விடவும் தெரியும். தேரர் கடந்த காலங்களில்  தனது எண்ணங்களையே செயற்படுத்திய ஆலோசகர் என்பதை ஏற்றுக்கொள்கிறாரா? கடந்தகால செயற்படுகள் இவரின் தலைமையில் மீண்டும் தொடரும் என்கிறாரா? இது தமிழருக்கு எதிரானது என்பதை தமிழரை சேராததிலருந்து தெரிந்து கொள்ளலாம். அடுத்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டகொலைக்கைதிகள் எல்லாம் இந்தச் செயலணியில் இணைய வாழ்த்துக்கள். நாடு மீண்டும் ஒரு கொலைக்களத்தை எதிர்நோக்குகிறது. ஒரு கொலை, கொள்ளைக்காரனிடம் நாட்டை கையளித்த பவுத்த, சிங்களவரே இதற்கான பொறுப்பேற்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசத்துக்கு ஒரு வாக்குறுதி, நாட்டில் வேறொன்று. சர்வதேசம் பாராட்டட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கடந்த காலங்களில் பொதுபல சேனவின் காட்டுமிராண்டித்தனங்களுக்கு இவர் தான் சொந்தக்காரர். கிறீஸ் பூதங்களின் தந்தையும் இவரே. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணி விவகாரம்: ஜனாதிபதியுடன், நீதியமைச்சர் கலந்துரையாடல்

AVvXsEjertpOM4uPcrYQC8__UerQ6dy_D8o45MHf
'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராகப் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடவுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து எமது செய்திப் பிரிவு வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
ஜனாதிபதி மீள நாடு திரும்பியதன் பின்னர் இது குறித்துக் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் கடந்த 26 ஆம் திகதி விசேட வர்த்தமானி மூலம் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டது.
 
இலங்கை அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டது.
 
இந்தச் செயலணியின் உறுப்பினர்களாக, பேராசிரியர் தயானந்த பண்டார, பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க, பேராசிரியர் சுமேத சிறிவர்த்தன, என். ஜி. சுஜீவ பண்டிதரத்ன, சட்டத்தரணி இரேஷ் செனெவிரத்ன, சட்டத்தரணி சஞ்ஜய மாரம்பே, எரந்த நவரத்ன, பாணி வேவல, மௌலவி மொஹமட், விரிவுரையாளர் மொஹமட் இந்திகாப், கலீல் ரஹுமான், அஸீஸ் நிசார்தீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
இலங்கையினுள் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாகக் கற்றாராய்ந்து அதற்காகச் சட்ட வரைவு ஒன்றைத் தயாரித்தல் இந்தச் செயலணிக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நீதி அமைச்சினால் இதுவரை இதற்குரியதாகத் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களைக் கற்றாராய்ந்து, அவற்றின் பொருத்தப்பாடு மற்றும் தகுந்த திருத்தங்கள் இருப்பின் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தலும், ஏற்றவாறு உரிய வரைவில் உள்ளடக்குதலும் இந்தச் செயலணிக்கு பொறுப்பளிக்கப்பட்டது.
 
இந்நிலையில் குறித்த செயலணி இந்த வாரம் முதற்தடவையாகக் கூடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராகப் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமைக்கு மௌலவிகள், நீதியமைச்சர் அலி சப்ரியிடம் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராகப் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமைக்கு மௌலவிகள், நீதியமைச்சர் அலி சப்ரியிடம் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

யாருடைய பரும்பும் வேகாது. யோபைடனிடம் முறையிட்டாலும் நடக்காது. சிங்களத்தைக் கொம்புசீவி மாலைபோட்டு வளர்த்துவிட்டதே நீங்கள்தானே. மத்தியகிழக்கின் உதவி. துருக்கியின் உதவியென்று சிங்கள சகோதரயட்ட என்று தமிழ்மொழி பேசுவோராக இருந்து சிங்களத்தை வளர்த்ததன் அறுவடை ஈஸ்ரர் தாக்குதலோடு பார்க்கிறீர்கள். ஆனால் மாற்றமில்லை. இன்னும் பல செயலணிகள் வரும். தமிழரை அழிக்க உதவி வளரநினைத்ததன் அறுவடையை சிங்களம் செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. அப்டியே யாழ்களப் பக்கம் வந்தால்.. கூடவே ஒரு கொஞ்ச "அட்வைஸர்ஸ்" எடுத்திருக்கலாம்.  😜

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளிக்கு குற்றவாளி தான் ஆலோசனை சொல்ல முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா பயணத்தை வெள்ளோட்டம் பாத்து, பயமில்லாமல் கிளாஸ்க்கோ சென்ற மாத்தையா செய்வதறியாமல் முழிக்கிறாராம். அண்ணரிடம் கொஞ்சம் ஆலோசனை கேட்டுக்கொண்டு போயிருக்கலாம் எப்படி தப்பிப்பது என்று.  நானே நினைத்தேன், எப்படி புலம்பெயர்ந்தவர்கள் மாத்தையாவை பாதுகாப்பா அனுப்பிவைத்துவிட்டாங்களே என்று. ம்..ம் ஐயாவும் பயமில்லாமல் பயணத்தை தொடர,  ஓடுமீன் ஓடி உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு.   வந்ததும் கொதி உச்சந்தலைக்கு ஏற நாட்டை பத்தி எரிச்சுபோடுவார் வாற கொதியில. எதுக்கும் மனவள ஆலோசகர் தயாராயிருப்பது நல்லது ஆளை கட்டுப்படுத்த.  அடுத்த முறை வெள்ளை வானையும் கூட கொண்டுபோகும் ஆள்! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

அமெரிக்கா பயணத்தை வெள்ளோட்டம் பாத்து, பயமில்லாமல் கிளாஸ்க்கோ சென்ற மாத்தையா செய்வதறியாமல் முழிக்கிறாராம். அண்ணரிடம் கொஞ்சம் ஆலோசனை கேட்டுக்கொண்டு போயிருக்கலாம் எப்படி தப்பிப்பது என்று.  நானே நினைத்தேன், எப்படி புலம்பெயர்ந்தவர்கள் மாத்தையாவை பாதுகாப்பா அனுப்பிவைத்துவிட்டாங்களே என்று. ம்..ம் ஐயாவும் பயமில்லாமல் பயணத்தை தொடர,  ஓடுமீன் ஓடி உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு.   வந்ததும் கொதி உச்சந்தலைக்கு ஏற நாட்டை பத்தி எரிச்சுபோடுவார் வாற கொதியில. எதுக்கும் மனவள ஆலோசகர் தயாராயிருப்பது நல்லது ஆளை கட்டுப்படுத்த.  அடுத்த முறை வெள்ளை வானையும் கூட கொண்டுபோகும் ஆள்! 

நானும்... உங்களைப் போலவே ஆச்சரியப்  பட்டேன்.
கிளாஸ்க்கோ சென்றவருக்கு.... எதிர் பாரத அதிர்ச்சி  கொடுத்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சியை  சரியாக திட்டமிட்டு ஒழுங்கு செய்தவர்களுக்கும்.
கடும் மழையிலும்,  குளிரிலும்  கலந்து கொண்டவர்களுக்கும்  பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தையா வெளிநாட்டுப்பயணங்களை தொடர்ந்து பரப்புரை செய்யவும், புலம்பெயர்ந்தவர்களின் எதிர்ப்புகளை சமாளிக்கவும் திட்டமிட்டு, புலம்பெயர்ந்த தமிழருடன் பேசத் தயார் என்று அறிவித்தால், தமிழர் ஒடுங்கி, எதிர்ப்புகளை விட்டு தம்முடன் பேச ஓடோடி வருவர் என்று கணக்குப்போட்டு வெளிக்கிட்டிருப்பார். தமிழர் பட்ட துன்பம் கொஞ்சமா?இழப்புகள் ஈடு செய்யக்கூடியவையா? எளிதில் மறந்து ஒரு இன அழிப்பானுக்கு பின்னால் அலைய. இப்ப விளங்கும், தன்மானத் தமிழன் எதற்கும்சோரம் போகமாட்டான் என்பது. எதிர்காலத்தில் வெளிநாட்டுப்பயணம் ஏற்பாடு செய்வதற்கு முன் நாலுதரம் யோசித்து, யோசியம் பார்த்து வெளிக்கிடுவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.