Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆயுதப் போராட்டம் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளினால் தமிழ் மக்களை ஈடுவைத்து விட்டு அழிந்து விட்டது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா​​​​​​​

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்டம் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளினால் தமிழ் மக்களை ஈடுவைத்து விட்டு அழிந்து விட்டது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக சமர்த்தி உத்தியோகத்தர்களுடன் இன்று சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளினால் தமிழ் மக்களை ஈடுவைத்து விட்டு அழிந்து விட்டதாகவும், அதிலிருந்து மக்களை மீட்க வேண்டி இருப்பதால் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தவறான தீர்மானங்களினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தினை பெற்றுக் கொள்ளும் வகையில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் செயலாற்ற வேண்டும் எனவும், அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சமுர்த்தி வேலைத் திட்டங்கள் பற்றிய முழுமையான விபரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், கேட்டுக் கொண்டார்.

இதன்போது, சமுர்த்தி உத்தியோகத்தர்களினால், இடமாற்றம் போன்ற நிர்வாகம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.இந்நிலையில், பொதுவாக நிர்வாக விடயங்களில் தலையிடுவதற்கு தான் விரும்புவதில்லை என்றபோதிலும், நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வு கிடைப்பதற்கு முயற்சிப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்திருந்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் அணுகுமுறை காரணமாக சமுர்த்தி திட்டம் வடக்கு மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டியதுடன், தமது அணுகுமுறையே சரியானது என்பதை நிரூபித்த விடயங்களில் ஒன்றாக சமுர்த்தி திட்டம் அமைந்துள்ளதாவும் தெரிவித்தார்.

மேலும், மக்கள் தொடர்ந்தும் கையேந்தி வாழாமல் நிரந்தரமான வாழ்வாதாரத்தினை பெற்றுக்கொள்ளும் வகையில் சமுர்த்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.அதேபோன்று, சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்ட போது இருந்ததைவிட தற்போது சமுர்த்தி உத்தியோகத்தர்களின் வாழ்வு முன்னேற்றமடைந்துள்ளதை தன்னால் அவதானிக்க கூடியதாக இருப்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் 1438 குடும்பங்கள் சமுர்த்தி பயனாளர்களாக இருக்கின்ற நிலையில், மேற்கொள்ளப்படுகின் வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக அதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டதுடன் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு எடுத்துரைக்கப்பட்டது.(15)

 

http://www.samakalam.com/ஆயுதப்-போராட்டம்-பிரபாகர/

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இவர் எதுக்கு ஆயுதம் எடுத்தவர் வடக்கிற்கு சமுர்த்தியும் திரிபோசாவும் கொண்டு வரவோ. அதுக்கு ஆயுதம் காட்டிக்கொடுப்பு சொந்த இனப்படுகொலை இவை எதுவுமோ தேவையில்லையே. 

சிங்களவனுக்கு நக்கினால் பொறுக்கினால் கிடைக்குமே. 

  • கருத்துக்கள உறவுகள்

பிரேமதாச காலத்தில இருந்து அரசோட சேர்ந்து இருந்த, இவர் என்ன செய்தவராம்.....

ஒரு அரசியல் கைதிய கூட வெளியே கொண்டு வர ஏலாதவர்..... கதை.... விடுறார்...

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

ஒரு அரசியல் கைதிய கூட வெளியே கொண்டு வர ஏலாதவர்..... கதை.... விடுறார்..

போர் 2009 இல் முடிவுக்கு வந்த பின்னர் தடுப்பு /புனர்வாழ்வு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளில் சிலரை/பலரை சில/பல இலட்சங்கள் வாங்கிக் கொண்டு வெளியில வெளியில கொண்டுவந்து இலங்கையில் இருந்து வெளியேற வைச்சவர் டக்ளஸ் அங்கிள். இது கணக்கில வருமோ வராதோ தெரியாது😂

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, வாலி said:

போர் 2009 இல் முடிவுக்கு வந்த பின்னர் தடுப்பு /புனர்வாழ்வு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளில் சிலரை/பலரை சில/பல இலட்சங்கள் வாங்கிக் கொண்டு வெளியில வெளியில கொண்டுவந்து இலங்கையில் இருந்து வெளியேற வைச்சவர் டக்ளஸ் அங்கிள். இது கணக்கில வருமோ வராதோ தெரியாது😂

அவருக்கு முன்னம், சிறை அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து வெளிவந்து, வெளிநாடு வந்த பலர் உள்ளனர்... கோத்தா..... பாதுகாப்பு செயலராக இருந்த போது.... வெற்று தடுப்புக்காவல் பத்திரத்தில் கையெழுத்து போட்டு, போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்..... பிடித்து வந்து பேரைப் போட்டு.... உள்ள வைக்க வேண்டியது.....

நீதிமன்றத்துக்கு தெரியாததால், போலீஸ் அதிகாரிகள் + சிறை அதிகாரிகள் சேர்ந்து பணம் சம்பாதித்தார்கள். அதன் அதியுச்சமே.... கடல்படை தளபதி கருணைகொடவின்..... கடத்தல் + கொலை.

இன்று ஒரு YT வீடியோ தலைப்பு; (Denmark Thurai) ஜெய் பீம் பட இருளர்கள் = சிங்கள பொலீஸ் கையில் சிக்கும் ஈழத்தமிழர்

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

பிரேமதாச காலத்தில இருந்து அரசோட சேர்ந்து இருந்த, இவர் என்ன செய்தவராம்.....

ஒரு அரசியல் கைதிய கூட வெளியே கொண்டு வர ஏலாதவர்..... கதை.... விடுறார்...

அவர் மற்றவர்களுக்கு செய்தது ஒருபுறம் இருக்கட்டும், இவர் தன்னோடு கூட இருந்தவர்களுக்கு என்ன செய்தவர்...? 

அவர்கள் எல்லோருக்கும் தாடி நரைத்ததுதான் மிச்சம்...😂

(உண்மையில் நான் இதனை நகைச்சுவையாகக் குறிப்பிடவில்லை. அதுதான் உண்மையும்கூட)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

ஈடுவைக்கப்பட்ட மக்களா புலிகள் இல்லாமல் போன பின்னரும் அவர்களை நினைவு கூருகிறார்கள் ஈடுவைத்த புலிகளை தலைமுறைகள் கடந்த பின்னரும் நினைவுகூர மக்கள் உண்டு, நீங்கள் மறைந்தால் ஒரு வாரம் நினைவு கூர உண்மையான மக்கள் உண்டா?

புலிகள் இருந்தாலும் மறைந்தாலும்  எம்மை ஈடு வைத்தார்கள் என்று எந்த மக்களும் சொன்னதில்லை, ஈ பி டி பி காரன் தான் தமிழ் மக்கள் என்றால் அந்த மக்கள் எமக்கு தேவையே இல்லை.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

ஆயுதப் போராட்டம் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளினால் தமிழ் மக்களை ஈடுவைத்து விட்டு அழிந்து விட்டது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

நீங்கள் ஆளும் கட்சியில் தானே கூட்டு வைத்துள்ளீர்கள்? ஏதாவது செய்யலாம் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நீங்கள் ஆளும் கட்சியில் தானே கூட்டு வைத்துள்ளீர்கள்? ஏதாவது செய்யலாம் தானே?


இனஅழிவிலிருந்தும் நில ஆக்கிரமிப்பிலிருந்தும் தடுத்தாடிய களங்கள் இன்றில்லை. அதனை சிங்களம் சரியாகப் பயனபடுத்திச் சிங்களக் குடியேற்றங்களை வேகமாக மேற்கொண்டுவருகிறது. அதனை உங்கள் இணக்கச் சக்தியான சிங்கள அரசிடமும் அரசியல்வாதிகளிடமும் கூறித் தடுக்க முடியுமா? முடிந்தால் இதுபோன்ற ஆக்கபூர்வமான விடயங்களைச் செய்யுங்கள். அதைவிடுத்து, 12ஆண்டுகளின் முன் தமிழுக்காகத் தனது பணியைநிறைவுசெய்துவிட்ட மாவீரன் குறித்து கதைத்துக் கதைத்தே நிறையச் சிங்களத்திற்கு நற்சான்று கொடுப்பதிலும் பார்க்க வடக்கிருக்கலாம்.  அப்பிடிச் செய்தாலாவது கொஞ்சக் காலம் சனம் கதைக்கும். ஆனா ஏன் வடக்கிருக்கிறீங்க என்று சொல்லிட்டு இருங்கோ அமைச்சரே. ஏனென்றால் வரலாறு முக்கியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.