Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மொழியால் ஒன்றுபட்ட தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் அரசியல் தளத்தில் ஒன்றுபடவேண்டும் : கனேடியவாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் சுமந்திரன் உரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மொழியால் ஒன்றுபட்ட தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் அரசியல் தளத்தில் ஒன்றுபடவேண்டும் : கனேடியவாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் சுமந்திரன் உரை

(நா.தனுஜா)

இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கின்ற, மொழியால் ஒன்றுபட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து செயலாற்றுவதன் ஊடாக மாத்திரமே பேரினவாதத்தின் அடக்குமுறைகளை வெற்றிகொள்ளமுடியும்.

தமிழ்பேசுபவர்கள் வாழ்கின்ற, 'தமிழ்' என்ற மொழி அடையாளத்தைக்கொண்ட பிரதேசத்தில்தான் நாங்கள் அதிகாரப்பகிர்வைக் கேட்கின்றோம். எனவே இவ்விடயத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைவதன் ஊடாக அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான வாய்ப்பு பன்மடங்காக உயரும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் இலங்கை முஸ்லிம் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசியக்ககூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கும் கனடாவில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் புதன்கிழமை கனடாவிலுள்ள அமானா நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்டு புலம்பெயர் இலங்கை முஸ்லிம்கள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

எம்மால் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி, காத்தான்குடியை வந்தடைந்தபோது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் திரண்டுவந்து எம்மைச் சந்தித்தது. 

ஆனால் ஒரு அரசியல் தலைவர்கூட வரவில்லை. அதனைத்தொடர்ந்து ஓட்டமாவடி உள்ளடங்கலாக முஸ்லிம்கள் செறிந்துவாழும் அனைத்துப் பகுதிகளிலும் அதேபோன்ற வரவேற்பைப் பெற்றோம். கிண்ணியாவில் மாத்திரமே ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் துணிந்துவந்து எம்முடன் கலந்துரையாடினார்.

நாங்கள் இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பதாகப் பாராட்டுகின்றார்கள். அந்தப் பாராட்டு எமக்கு மனநிறைவைத் தருகின்றது. அதேவேளை தமிழ்மக்களின் உரிமைகளுக்காக முஸ்லிம் குரல்கள் எப்போது எழும் என்று நாங்கள் ஏக்கத்தோடு காத்திருக்கின்றோம். 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் ஒவ்வொரு கிராமங்களிலிருந்தும் எம்மை வந்து சந்தித்த முஸ்லிம் மக்கள் அவர்களது கிராமத்தின் எல்லையுடன் நின்றுவிட்டார்கள். 

அப்போது பேரணியில் மாத்திரமல்ல, அரசியல் பயணத்திலும் எம்மோடு இணைந்து கைகோர்த்து முழுத்தூரத்திற்கும் வரவேண்டும் என்று அவர்களிடம் கூறினேன். அப்போதுதான் எமது இரு சமூகங்களும் இலங்கையில் தலைநிமிர்ந்து வாழமுடியும்.

தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கென வௌ;வேறு அடையாளங்கள் இருக்கின்றன. முஸ்லிம் சமூகத்திற்கென தனித்த அடையாளங்கள் காணப்படுகின்றன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். 

ஆனால் இலங்கையில் எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மையினராக இருக்கின்ற, மொழியினால் ஒன்றுபட்ட எமது இரு சமூகங்களும் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் எமக்கு விடிவு கிடையாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

அதேவேளை குறித்த பேரணியில் உரையாற்றியபோது தமிழர்களை 'சிறுபான்மையினர்' என்று கூறவேண்டாம் என்றும் 'மக்கள்' என்று கூறுமாறும் நான் வலியுறுத்தியிருந்தேன். அது தற்போது பூதாகரமான பிரச்சினையாக மாறியிருக்கின்றது. 

கடந்த வாரம் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்திருந்தோம். அதுபற்றி அவர்கள் தமது டுவிட்டர் பக்கத்தில் செய்த பதிவில் 'இலங்கையின் சிறுபான்மையின தமிழர்களின் உரிமைகளை உறுதிசெய்வதற்காக அமெரிக்கா துணைநிற்கும்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். 

எனவே தமிழர்களை அமெரிக்கா 'சிறுபான்மையினர்' என்றே கூறுகின்றது என்றும் அதனை நாம் எதிர்க்கவில்லை என்றும் சிலர் விமர்சித்தார்கள்.

இந்நிலையில் மீண்டும் திங்கட்கிழமை அமெரிக்க இராஜாங்கத்திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்தோம். அதுகுறித்து அவர்கள் செய்திருக்கும் டுவி;ட்டர் பதிவில் 'சிறுபான்மையினர்' என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. அந்த சுருக்கமான டுவிட்டர் பதிவில் எமக்கு நம்பிக்கையளிக்கக்கூடிய பல்வேறு விடயங்கள் உள்ளடங்கியிருந்தாலும், அவையனைத்தையும் விட்டுவிட்டு வெளியக அழுத்தங்களின் விளைவாகவே தற்போது 'மக்கள்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.

அவற்றைக் கருத்திலெடுக்காவிடினும், இவ்வாறானவர்கள் மத்தியிலேயே நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். மக்களுக்கு நன்மையளிக்கின்ற நியாயமானதும் நீதியானதுமான விடயங்களைச் செய்வதில் நாம் ஒருபோதும் பின்நிற்கமாட்டோம். 

அதேவேளை இலங்கைவாழ் சிங்களவர்கள் உள்ளடங்கலாக எந்தவொரு இனக்குழுமத்திற்கும் தீமையை ஏற்படுத்துகின்ற விடயங்களை நாங்கள் செய்யமாட்டோம். நாம் பெரிதாக எதனையும் கேட்கவில்லை. இலங்கையில் சமபிரஜைகளாக வாழ்வதற்கான உரிமையையே கோருகின்றோம்.

சமத்துவமான பிரஜைகளாக வாழ்வதென்பது 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கைக்கு அமைவானதல்ல. மாறாக 'இலங்கையர்கள்' என்ற பொதுவான அடையாளம் அனைவருக்கும் இருக்கலாம். ஆனால் அதற்குள்ளே இருக்கக்கூடிய தனித்துவமான, பிரத்யேகமான அடையாளங்கள் உறுதிசெய்யப்படவேண்டும். அதனூடாகவே இலங்கையர் என்ற அடையாளம் வலுவடையும்.

இவ்வாறானதொரு பின்னணியில் அடுத்த தேர்தலிலே இஸ்லாமிய சகோதரர்கள் எமக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகின்றேன். மக்கள் மத்தியிலே அவ்வாறானதொரு நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது. 

ஆயுதப்போராட்டத்திற்கு முன்னரான காலப்பகுதியில் தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான உறவு மிகநெருக்கமானதாகக் காணப்பட்டது. இருப்பினும் ஆயுதப்போராட்டத்தினால் இரு சமூகங்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டன. 

அப்போராட்டம் முடிவடைந்து தற்போது 12 வருடங்கள் கடந்துள்ளன. தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவை முன்னரைப்போன்று மாற்றியமைப்பதற்கு எமக்கு பன்னிரு வருடங்கள் தேவையா? மொழியால் ஒன்றுபடுவதென்பது மிகமுக்கியமானதாகும். மதம் சார்ந்த அடையாளங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டவையாகும். 

ஆனால் மொழிதான் எம்மை ஒன்றுபடுத்தியிருக்கின்றது. தமிழ்பேசுபவர்கள் வாழ்கின்ற, 'தமிழ்' என்ற அடையாளத்தைக்கொண்ட பிரதேசத்தில்தான் நாங்கள் அதிகாரப்பகிர்வைக் கேட்கின்றோம். எனவே தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இதனை முன்னெடுக்கும் பட்சத்தில், அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான வாய்ப்பு பன்மடங்காக உயரும்.

இலங்கையிலே நாங்கள் ஒன்றாக வாழ்வதற்கான சவாலாக இருக்கின்ற ஒரேயொரு விடயம் பேரினவாதமாகும். ஆகவே அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் நாளாந்தம் வசிக்கின்ற பகுதியிலே எமக்கென தீர்மானங்களை மேற்கொள்கின்ற, நிர்வகிக்கின்ற அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். 

அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் உச்சபட்சமானவையாக இருக்கவேணடும் என்ற இலக்கை முன்னிறுத்தி தமிழ், முஸ்லிம் சமூகங்கள் செயற்படுமானால், அது வெகுவிரைவில் எம்மை வந்தடையும். 

இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் மிகமோசமான அடக்குமுறையின் விளைவாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலேயே உருவாகியிருக்கக்கூடிய ஒற்றுமை அரசியல் தளத்தை நோக்கி விரிவடையவேண்டும் என்று வலியுறுத்தினார். 

 

https://www.virakesari.lk/article/117916

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இந்நிலையில் மீண்டும் திங்கட்கிழமை அமெரிக்க இராஜாங்கத்திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்தோம். அதுகுறித்து அவர்கள் செய்திருக்கும் டுவி;ட்டர் பதிவில் 'சிறுபான்மையினர்' என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

மனித உரிமைக்கும் சமாதானத்துக்குமான அமைப்புகள், சிறீலங்காவில் உள்ள தமிழர்களை சிறுபான்மைக் குழு (Minority Groups) என்றே குப்பிட்டுள்ளதை, இந்த வீடியோவில் 4:44 வது நிமிடத்திலும், 4:56 வது நிமிடத்திலும் காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் கனடாவில போய் நின்று கத்திப்பிரயோசனம் இல்லை காரணம் கடந்த காலத்தை இவர் மறந்திட்டார் இல்லையேல் சம்பந்தரோட சேர்ந்து அவருக்கு இருந்த அறளை நோய் தொற்றுவியாதியாகி இவருக்கும் வந்திட்டுது.

கிழக்கில் மாகாணசபைத் தேர்தலில் ராவூப் கக்கீம் தலைமையிலான முஸ்லீம்காங்கிரஸ் கூடிய ஆசனங்களையும் தமிழர்தரப்பு அடுத்ததாகவு, சிங்களத்தரப்பு அதற்கு அடுத்ததாகவும் வந்தபோது சம்பந்தர் கக்கீமிடம் கேட்டுக்கொண்டார் நாம் கூட்டாகச்சேர்ந்து ஆட்சி அமைப்போம் முதல் அமைச்சர் பதவியையும் முக்கிய அமைச்சுக்களையும் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கோ என ஆனால் கக்கீம் என்ன செய்தார் எண்டால் மகிந்தவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துவிட்டார் 

இப்படியான தொப்பி பிரட்டியளிடம் சுமந்திரன் அரசியல் செய்கிறார்.

சிங்களம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மேற்குலகத்துக்கும் தண்ணிகாட்டுவதுபோல் 

இலங்கை முஸ்லீம்களும் சுங்களத்துக்கும் தமிழருக்க்கும் தண்ணிகாட்டி தங்கட காரியத்தைச் சரிவரக்கொண்டுபோவினம் இப்போது முஸ்லீம்களுக்கு சிங்களவனை மடக்க தமிழர் தரப்புத்தேவைப்படுகுது சுமந்திரன் வழக்கமான தனது தரகு வேலையை ஆரம்பித்துவிட்டார் அப்பதானே எதிர்வரும் சுதந்திர தினத் தேனீர் விருந்தில் கலந்துகொள்ள மகிந்ததரப்பு அழைப்புவிடுக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Elugnajiru said:

இப்படியான தொப்பி பிரட்டியளிடம் சுமந்திரன் அரசியல் செய்கிறார்

குணம் குணத்தோடுதான் சேரும். இவர் கெஞ்சினால் அவர்கள் மிஞ்சுவார்கள். போனால் போங்கள் என்று விட்டுப் பாருங்கள் தானாக வருவார்கள். நாங்களே சிங்களத்துக்கு தோள் கொடுத்து போரை வெற்றியடையச் செய்தோம் என்று பங்களிப்பார்கள். நாங்கள் தனிநாடு கேட்டால் தங்களுக்கும் வேண்டும் பங்கு என்று வரிஞ்சு கட்டிக்கொண்டு வருவார்கள். புலம் பெயர் நாட்டில் தாங்கள் தமிழரின் உரிமைக்காக போராடுகிறோம், உழைக்கிறோம் என்று கூவுவார்கள். உள்நாட்டிலோ ஏக்கய என்பார்கள். இரண்டு  கணக்கும் கூட்டிப்பார்த்தால் சரியாத்தான் வருது.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 எதிர்ப்பு வெளியிட்ட பின்தான் சிறு  குழுக்கள் தமிழ் மக்களாக மாறியிருக்கிறது என்பது ஐயாவுக்கு தெரியேல்லை. அதில் மாற்றம் தேவை என ஏற்றுக்கொண்டபடியாற்தான் மாற்றியிருக்கிறார்கள். இப்படித்தான் ஏக்கய என்கிற சொல்லையும் மாற்றி விளக்கம் கொடுத்துக்கொண்டு திரிந்தவர். அது சரி தங்களுக்கு காத்தான் குடியில் இரண்டு மாலை விழுந்ததாம் அதேன் அப்படி நடந்ததென்றால்! தாங்கள்தானாம் முஸ்லீம்களுக்காக குரல் கொடுக்கிறார்களாம். இருக்காதா? அவர்களுக்கு கதைப்பதற்கு அவர்களால் தெரிவு செய்யபட்ட தலைவர்கள் இருக்கிறார்கள்,  முஸ்லீம் நாடுகள் இருக்கின்றன. ஆனால் எங்கள் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு, வசதி வாய்ப்புகளை அனுபவித்துக்கொண்டு, எங்களை நடுவீதியில் அலையவிட்டு, கண்ட ஓநாய்களுக்கு பின்னால் ஓடவிட்டு சென்றால் இரண்டு மாலை என்ன ஆயிரம் மாலைகள் விழும். அதுசரி உங்களுக்கு முஸ்லீம்களோ அல்லது சிங்களவரோ வாக்கு அளிப்பதில்லையே! அல்லது உங்கள் கட்சியின் பெயரில் ஒரு சிங்களவரோ, முஸ்லீமோ தேர்தலில் நின்று வென்று தமிழ் மக்களுக்காக உழைப்பார்களா? அல்லது தங்கள் கட்சியிலே இருந்து கொண்டு ஒடுக்கப்பட்ட எமக்காக குரல் கொடுப்பார்களா?  உங்கள் பேச்சு கைத்தட்டலுக்கு நன்றாக இருக்கும், நடைமுறைக்கு  சாத்தியமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2021 at 17:20, கிருபன் said:

மொழியால் ஒன்றுபட்ட தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் அரசியல் தளத்தில் ஒன்றுபடவேண்டும் : கனேடியவாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் சுமந்திரன் உரை

கிழக்கு மாதிரியே வடக்கிற்கு முதல்வர் வேட்பாளராக முசுலீம் சமூகத்தை சார்ந்த ஒருவரை தெரிவு செய்யும் பட்சத்தில் ஒன்றுபட சான்ஸ் உள்ளது அதுவும் குறுகிய காலத்திற்கு..👌

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி தெரிஞ்சுதான் இப்படி கூனி குறுகிப்போய் உள்ளோம். இதற்கு மேல் முதுகும் வளையாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2021 at 12:50, கிருபன் said:

ஆனால் மொழிதான் எம்மை ஒன்றுபடுத்தியிருக்கின்றது. தமிழ்பேசுபவர்கள் வாழ்கின்ற, 'தமிழ்' என்ற அடையாளத்தைக்கொண்ட பிரதேசத்தில்தான் நாங்கள் அதிகாரப்பகிர்வைக் கேட்கின்றோம். எனவே தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இதனை முன்னெடுக்கும் பட்சத்தில், அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான வாய்ப்பு பன்மடங்காக உயரும்.

முதலில் இலங்கை முழுவதும் உள்ள தமிழர்கள் ஒரு அணியில் சேர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு பலமுள்ள. அணியாக மாற முயற்சி செய்யுங்கள் தனியா வடக்கு கிழக்கு  மட்டும் தேர்தலில் போட்டி இடமால். நாடுமுழுவதும் போட்டியிடவும். மலையகத்தமிழர்...அமைப்புகளையுமிணைந்து...தமிழர்களிடம் ஆயிரம். பிரிவுகளை வைத்துக்கொண்டு முஸ்லிம்களை இணை என்றால்  எப்படி இணைவார்கள். ?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

முதலில் இலங்கை முழுவதும் உள்ள தமிழர்கள் ஒரு அணியில் சேர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு பலமுள்ள. அணியாக மாற முயற்சி செய்யுங்கள் தனியா வடக்கு கிழக்கு  மட்டும் தேர்தலில் போட்டி இடமால். நாடுமுழுவதும் போட்டியிடவும். மலையகத்தமிழர்...அமைப்புகளையுமிணைந்து...தமிழர்களிடம் ஆயிரம். பிரிவுகளை வைத்துக்கொண்டு முஸ்லிம்களை இணை என்றால்  எப்படி இணைவார்கள். ?

இல்லாத நாய் வாலை நிமிர்த்துவது எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2021 at 01:07, Elugnajiru said:

சுமந்திரன் கனடாவில போய் நின்று கத்திப்பிரயோசனம் இல்லை காரணம் கடந்த காலத்தை இவர் மறந்திட்டார் இல்லையேல் சம்பந்தரோட சேர்ந்து அவருக்கு இருந்த அறளை நோய் தொற்றுவியாதியாகி இவருக்கும் வந்திட்டுது.

கிழக்கில் மாகாணசபைத் தேர்தலில் ராவூப் கக்கீம் தலைமையிலான முஸ்லீம்காங்கிரஸ் கூடிய ஆசனங்களையும் தமிழர்தரப்பு அடுத்ததாகவு, சிங்களத்தரப்பு அதற்கு அடுத்ததாகவும் வந்தபோது சம்பந்தர் கக்கீமிடம் கேட்டுக்கொண்டார் நாம் கூட்டாகச்சேர்ந்து ஆட்சி அமைப்போம் முதல் அமைச்சர் பதவியையும் முக்கிய அமைச்சுக்களையும் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கோ என ஆனால் கக்கீம் என்ன செய்தார் எண்டால் மகிந்தவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துவிட்டார் 

இப்படியான தொப்பி பிரட்டியளிடம் சுமந்திரன் அரசியல் செய்கிறார்.

சிங்களம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மேற்குலகத்துக்கும் தண்ணிகாட்டுவதுபோல் 

இலங்கை முஸ்லீம்களும் சுங்களத்துக்கும் தமிழருக்க்கும் தண்ணிகாட்டி தங்கட காரியத்தைச் சரிவரக்கொண்டுபோவினம் இப்போது முஸ்லீம்களுக்கு சிங்களவனை மடக்க தமிழர் தரப்புத்தேவைப்படுகுது சுமந்திரன் வழக்கமான தனது தரகு வேலையை ஆரம்பித்துவிட்டார் அப்பதானே எதிர்வரும் சுதந்திர தினத் தேனீர் விருந்தில் கலந்துகொள்ள மகிந்ததரப்பு அழைப்புவிடுக்கும்.

 

தமிழ்தேசியக் கூட்டமைப்பே கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தது. அப்படியிருந்தும் ஆட்சியமைக்க அறுதிப் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் முஸ்லிம் காங்கிரசுக்கு முதலi;ச்சர் பதவியை விட்டுத்தருவதாக கேட்டும் முஸ்லிம் ;காங்கிரஸ் மகிந்தவின் கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைத்துக் கொண்டது.அதே நேரம் பிள்ளையான் ஆதரவு தருவதாக கேட்டும் சம்பந்தர் இணங்கவில்லை. முஸ்லிம் காங்கிரசை முதலமைச்சர் பதவியை விட்டுத்தருவதாகக் கூறி ஆதரவு கேட்டவர்கள் புpள்ளையாhனின் ஆதரவை ஏன் மநறுத்தார்கள். அதுவும் கிழக்கு மாகாணம் வடக்கைப் போல அல்ல சில விட்டுக் கொடுப்புகளை செய்து ஆட்சி அமைத்திருந்தால் திட்டமிட்ட சிங்க முஸ்லிம் குடியேற்றங்களையும் தடுத்திருக்கலாம். அதே சேரம் வடக்கில் பல உள்ளூராட்சி சபைகளை டக்ளசுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைத்த கூத்தும் நடந்திருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.