Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியப் பிரதமருக்கான கடிதம்; முஸ்லிம் கட்சிகள் இழுபறிநிலையால் கையொப்பமிடல் பின்செல்லும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

13ம் சட்டம் 1987 இல் நிறைவேறாமல் போக புலிகள் ஒரு பெரும் காரணம் ஆனால் அவர்கள் மட்டுமே காரணம் அல்ல.

13 ம் திருத்தத்தை வலுவாக எதிர்த்தோர் இருவர். புலிகள், சிங்கள இனவாத அரசு. இருவரும் எதிர்க்க உண்டான காரணங்கள் எதிரும் புதிருமானவை ஆனால் இருவரும் 13ஐ சரி சமனாக எதிர்த்தார்கள்.

புலிகளோடு அவர்கள் எதிர்த்த (எதிர்பார்த்த) காரணமும் அழிந்து விட்டது. ஆனால் இனவாதிகள் இன்னும் அப்படியே இருப்பதால், முன்பை விட வலுவாக இருப்பதாலும், இதை அமல்படுத்துவது பற்றி இந்தியா அதிக கரிசனை அற்று இருப்பதாலும் - இன்றும் இதை அமல்படுத்த கோரி கடிதம் எழுதும் பால நிலையில் தமிழர்கள் இருக்கிறோம்.

1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினை சிங்கள இனவாதிகள் மட்டுமல்லாமல், சிங்கள இடதுசாரிகள் கூடக் கடுமையாக எதிர்த்தார்கள். தெற்கின் இரண்டாவது ஜனதா விமுக்தி பெரமுனவின் ரோஹண விஜேவீர இந்த ஒப்பந்தத்தினை எதிர்த்துத்தான் கலகத்தினை ஆரம்பித்தார். உடன்படிக்கையினைக் கைச்சாத்திட்ட ஜே ஆரின் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே அவரின் அந்நாள் பிரதமர் பிரேமதாஸா கூட இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆக, நன்கு அரசியல் மயப்படுத்தப்பட்ட எதிர்ப்பு தெற்கில் அன்று இருந்தது, இன்றும் அது இருக்கிறது.

ஆகவே புலிகளை மட்டுமே ஒப்பந்தத்தின் தோல்விக்கான காரணமாக தமிழர்களில் ஒரு பகுதியினர் இன்றும் சாடிவருவது தவறு. 

இவை எல்லாவற்றிற்கும் அப்பால், புலிகள் இந்த ஒப்பந்தத்தினை எதிர்த்ததன் நோக்கம் இவ்வொப்பந்தம் தமிழர்களுக்கான நியாயமான தீர்வினைத் தரப்போவதில்லை என்பதானாலேயன்றி வேறு எதற்காகவும் அல்ல என்பதையும் இவர்கள் புரிந்துகொள்ளப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

நிச்சயமாக இதுவரை தமிழர் தரப்பை இந்தியா taken for granted ஆக நடத்தி வருகிறது என்பது தெளிவு.

அப்படி செய்யாமல் எம்மை கொஞ்சமாவது கனம் பண்ணி நடக்க, 3 உபாயங்களை கையாளலாம்.

1. தமிழ் நாட்டின் மூலம் டெல்லியை நெருக்குதல்

2. நேரடியாக மேற்கினை அணுகுவதன் மூலம் டெல்லியை நெருக்குதல்

3. இந்தியாவின் எதிரிகளை அணுகுவதன் மூலம் டெல்லியை நெருக்குதல்.

இதில் 1,2 ஐ செய்யும் தமிழ் கட்சி 3 ஐ செய்ய முடியாது.

ஆனால் மூன்றில் ஒன்றைதானும் செய்யாத கஜன்ஸ், 3 ஐ செய்வது போல் பாசாங்காவது செய்யலாம். ஆனால் எதுவும் செய்வதில்லை.

சுமந்திரன் அட்லீஸ்ட் வெளிநாடு வந்து சின்ன சின்ன தலைவர்களை சந்திகிறார், புலம் கூட்டங்களை நடத்துகிறார்.

கஜன்ஸ்? 

மூன்று தலைமுறையாக அந்த குடும்பம் ஒரே ஒரு காரணதுக்காகவே அரசியல் செய்கிறது. 

ஒரு எம்பி சீட். 

அதுக்கு ஒரு கட்சி, அதற்கு ஒரு புலம்பெயர் ஆதரவுதளம் கூட.

கீரை கடை, எதிர் கடை எண்டு காரணம் சொல்லி கொண்டு தேர்தல் நேரம் கஜன்சை ஆதரித்து  எழுதியோர் எல்லாம் இப்போ யாழில் கப்சிப்.

தமிழ்நாட்டின் முலம் தில்லியை நெருக்குவது சாத்தியமா? இது தவறான பார்வை என்றே எனக்குப் படுகிறது. தமிழர்களுக்கு மிகவும் சார்பான கொள்கையினைக் கொண்டிருந்த முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் காலத்தில் அவரால்க் கூட ஒரு சில செயற்பாடுகளைத் தவிர அதிகமாக தில்லியை நெருக்க முடியவில்லை. 1987 இன் சமாதான ஒப்பந்தத்தின்போது புலிகளின் தலைமை மீது தில்லியினால் செலுத்தப்பட்ட அழுத்தத்தைத்தன்னும் அவரால் நீக்க முடியவில்லை. தனிப்பட்ட ரீதியில் தமிழகத் தலைவர்கள் எம்மீது கொண்டிருக்கும் பரிவு மட்டுமே அன்று எமக்கிருந்தச் ஒரே பலம். இதனைத்தாண்டி மத்தியை அவர்களால் வழிக்குக் கொண்டுவரமுடியவில்லை.

தமிழகத் தலைவர்களில் தமிழர் மீது அதீத அக்கறை கொண்டிருந்த எம் ஜி ஆர் காலத்திலேயே தில்லிக்கு தமிழகத்தினால் கொடுக்கப்பட்ட அழுத்தம் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது என்றால், ஏனையவர்களால் நிச்சயமாக அவரளவு கூட செய்திருக்க வாய்ப்பில்லை. மேலும் 1991 இன் சிறிபெரும்புதூர் இந்த நிலைமைகளையெல்லாம் தலைகீழாக மாற்றிப்போட்டு விட்டது. 

இன்று ஈழத்தமிழர் தொடர்பாக மத்தி சொல்வதை தமிழ்நாடு கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய நிலைமைதான் உள்ளது. இதில் அழுத்தம் எல்லாம் எங்கிருந்து கொடுப்பது? 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

2. நேரடியாக மேற்கினை அணுகுவதன் மூலம் டெல்லியை நெருக்குதல்

 

நேரடியாக மேற்கினை அணுகல். அப்படியொன்று இருக்கிறதா இன்று?

இலங்கையில் நடக்கும் எந்தவிதமான வெளிச் சக்திகளின் செயற்பாடுகளும் ஒன்றில் மேற்கு - இந்திய கூட்டணியினரின் ஏற்பட்டில் அல்லது இக்கூட்டணிக்கெதிரான சீனாவின் ஏற்பாட்டிலேயே நடந்துவருகிறது.

இன்னொரு வகையில் சொல்லப்போனால் இந்து சமுத்திரத்தில் மேற்கின் இன்னொரு முகம்தான் இந்தியா. ஆகவே இந்தியாவைத் தவிர்த்து மேற்கிடம் நேரடியாகப் போவதென்பது சாத்தியமற்றது. இன்னும் சொல்லப்போனால் மேற்குடன் நாம் நடத்தலாம் என்று எதிர்பார்க்கும் எந்தச் சந்திப்புமே இந்தியாவை நோக்கி அதே மேற்கினால் திருப்பிவிடப்படும் என்பதும் நாம் அறியாதது அல்ல. ஏனென்றால், இலங்கையின் சீனச் சார்புச் செயற்பாடுகளால் தனியே மேற்கோ அல்லது தனியே இந்தியாவோ பாதிக்கப்படப்போவதில்லை. இக்கூட்டே சேர்ந்து பாதிக்கப்படப்போகிறது. ஆகவே, இந்தியாவை மீறி மேற்கு எமது விடயத்தில் தனியாகச் செயற்படப்போவதில்லை. சில மாதங்களுக்கு முன்னர் மேற்கின் சமாதானத் தூதுவர் சொல்கெயிம்கூட ஒரு செவ்வியில் தமிழர்கள் இந்தியா நோக்கித் தமது கோரிக்கைகளை முன்வைக்கவேண்டும் என்றுதான் கூறினாரே ஒழிய, மேற்கிடம் நேரடியாக வாருங்கள் என்று கூறவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

3. இந்தியாவின் எதிரிகளை அணுகுவதன் மூலம் டெல்லியை நெருக்குதல்.

இது  ஒரு நல்ல தெரிவுதான்.

ஆனால், அந்த சக்தி யார்? நிச்சயம் சீனாவாக இருக்க முடியாது. இலங்கையில் பலத்துடன் இருக்கும் தரப்பான சிங்களவருடன் சேர்ந்து இருப்பதன் மூலம் தனக்கான நலன்களை அது தேடிக்கொள்கிறது. அதுமட்டுமல்லாமல், சிங்களவர் சரித்திரகாலம் தொட்டு இந்தியா மீது கொண்டிருக்கும் தீராத வெறுப்பும் சந்தேகமும், சீனர்களுக்கு தமது நண்பர்கள் சிங்களவர்களே என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டிருக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான, ஆனால் பலமான சக்தியென்று பார்த்தால், சீனா இல்லையென்று ஆகிவிடுகிறது. அடுத்து வருவது பாக்கிஸ்த்தான். இவர்கள் தமிழர்களுக்கு இயற்கையாகவே எதிரானவர்கள். தமிழர்கள் என்றால் இந்துக்கள், இந்தியாவின் ஆதரவாளர்கள், வந்தேறிகள் எனும் காரணத்தினாலேயே இலங்கைக்கு தமிழருக்கெதிரான உதவிகளை நெடுங்காலமாக பாக்கிஸ்த்தான் செய்துவருகிறது. மேலும், இவர்கள் கூட இலங்கையில் பலத்துடன் அதிகாரத்தில் இருக்கும் தரப்பைத்தான் தமது நலன்களுக்காகவும் ஆதரிப்பார்கள் என்பது திண்ணம்.

இவர்களைத் தவிர, தமது நலன்களை முன்னிறுத்தாமல், தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுக்கக் கூடிய , ஆனால் இந்தியாவுக்கு எதிரான பலமான நாடு ஒன்று இருக்கிறதா? பனிப்போர் காலத்திலேயே சாத்தியப்படாத இவ்விடயம் இன்றும் மேற்கும் இந்தியாவும் ஒரு கூட்டிற்குள் வந்தபின்னர் சாத்தியமா? 

முதலில் அப்படியான ஒரு சக்தி எதுவென்பதைக் கண்டறிய வேண்டும். அடுத்ததாக தமிழ் அரசியல்வாதிகளில் இந்தியாவைத் தவிர்த்து வேறு சக்திநோக்கிச் செல்லும் அரசியல் அமைப்பொன்றும் உருவாக்கப்படல் வேண்டும். ஆனால், இன்றிருப்பதோ 99 வீதம் இந்தியச் சார்பு அரசியல் அமைப்புக்கள்தான். இதை அறிந்துதான் இந்தியாவும் எம்மை தான் விரும்பியவாறு உதைந்து விளையாடி வருகிறது. 

இந்தியா எனும் அகம்பாவம் கொண்ட பிராந்திய சக்தியொன்றிற்கு அருகில் நாம் வாழ்வதால் நாம் கொடுக்கும் விலைதான் இவையெல்லாம். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

கோஷான், எதையும் விட்டுக்கொடுத்து வெற்றி பெறுவதை விட விடாக்கொண்டானாக இறுதிவரை மார்தட்டி இருந்துவிட்டு,  நிலமை கைமீறிச்சென்றவுடன் குய்யோ முறையோ உலகம் முழுவதும் எம்மை வஞ்சித்துவிட்டது என்று ஒப்பாரி  வைப்பதில் எமக்கு ஒரு தனி சுகம். So,  we are enjoying our desires. 😂

நீங்கள் சொல்வதும் உண்மைதான்.  தமிழன் எதையும் விட்டுக்கொடுக்காததால்த்தான் இன்று ஒன்றுமில்லாமல் அனாதையாய் நிக்கிறான். "கைப்பற்றினவன் சரக்கு மிடுக்கு கூட" அடி வாங்கி வாங்கி முடியாதவிடத்து அடங்கி ஏங்கி நிக்கிறோம். கிழக்கில் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தும் பழிவாங்கப்படுகிறோம். பறிக்கிறவன் விட்டுக்கொடுக்கிறவனிடம் இருந்து பறித்ததுபோக இருக்கிறதையும் உருவ நிக்கிறான். இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்று தெரிந்தும் நெருக்குகிறான்.  பகிடியும் வேதனையும்  என்னவென்றால் நம்மை நாமே ஏளனம் செய்வதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

ஆனால் முஸ்லீமோடு நாம் அதிகாரத்தை பகிர விரும்பவில்லை என்பதற்காக கிழக்கு தமிழனை அதே முஸ்லிம்+சிங்கள மேலாண்மைக்குள் பெட்டி கட்டி அனுப்பவும் முடியாது. அப்படி நடந்தால் இராசதுரை-கருணா சொன்னது அனைத்தும் உண்மை என்றாகி விடும்.

Eastern Tamils are not expendables. They are not a bargaining chip. வடக்கு தமிழருக்கு வரும் அதே தீர்வு அவர்களுக்கும் வர வேண்டும்.  இழப்புகளில் அவர்களுக்கு சம பங்கை கொடுத்து விட்டு, பலனை வடக்கு மட்டும் அனுபவிக்க முடியாது.

 

நான் எழுதியதை நீங்கள் எப்படிப் புரிந்துகொண்டீர்கள் என்று தெரியவில்லை கோஷான்.

நான் எழுதியதன் சுருக்கமும் இன்னம் சில விளக்கங்களும் கீழே 

1. வடக்கும் கிழக்கும் இணையக்கூடாதென்று விரும்புபவர்கள் முஸ்லீம்களும், கிழக்குத் தமிழர்களின் ஒரு பகுதியினரும் மட்டும்தான். நிச்சயமாக வடக்குத் தமிழர்கள் கிடையாது. வடக்கும் கிழக்கும் இணைந்த தேசமே தமிழர்களின் பூர்வீக தாயகம் எனும் நிலைப்பாட்டிலேயே வடக்குத் தமிழர்கள் இன்றும் இருக்கிறார்கள். 

2. வடக்கினைப் பெற்றுக்கொள்ள கிழக்கினை விட்டுக்கொடுத்தோ அல்லது பகடையாகப் பாவிப்பதோ நிச்சயம் வடக்குத் தமிழர்களின் நோக்கமும் அல்ல. வடக்கும் கிழக்கும் இணைந்தே இருக்கவேண்டும் என்று விரும்பும்போது அவர்கள் எதற்காகக் கிழக்கை விலையாகக் கொடுக்கப்போகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

3. தமிழரின் பெரும்பான்மைப் பிரதேசங்களில் இருக்கும் முஸ்லீம் பகுதிகளுக்கான அதிகாரத்தினை நாம் கொடுப்பதன் மூலம்  நாம் , முஸ்லீம் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்களிலிருக்கும் தமிழர் பகுதிகளுக்கான் அதிகாரத்தினை பெற்றுக்கொள்ளலாம், அல்லது தமிழரின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்துடன் இந்தத் தமிழர் சிறுபான்மைப் பகுதிகளையும் நிலத்தொடர்பற்ற முறையில் இணைத்துக்கொள்லலாம். 

4. கிழக்குத் தமிழர்கள் முஸ்லீம்களுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லையெனும் காரணம், வடக்குடன் இணைவதை தடுக்கிறதெனும் நியாயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வடக்குடன் இணையாது இருப்பதால் மட்டும் முஸ்லீம்களுடன் சேர்ந்து வாழுதல் தடுக்கப்பட்டு விடுமா? இல்லையே? பின்னர் ஏன் இந்த வியாக்கியானம்? வடக்குடன் இணையாது, தனித்து இருந்தால், கிழக்கில் வெறும் 30 வீதத்தினை மட்டுமே கொண்டிருக்கும் தமிழர்கள் அங்கேயே சிறுபான்மையினராக்கப்பட்டுவிடுவார்கள் என்பதனை கிழக்கு தனித்து இருக்கவேண்டும் என்று கோருவோர் புரிந்துகொள்ளவில்லையா? தமிழ்த் தேசியத்திலிருந்து விலகி, அதிகாரத்தில் இருப்போர் நோக்கிச் செல்லும் புதிய மனோநிலை, கிழக்குத் தனியாகப் போகும் பட்சத்தில் மிக இலகுவாக சிங்களவர்களாலோ அல்லது முஸ்லீம்களாலோ கிழக்கு முற்றாகச் சூறையாடப்பட்டுவிடும் நிலையினை உருவாக்கிவிடும் என்பதனை தனியான கிழக்கினைக் கோருவோர் புரிந்துகொள்ளவில்லையா? 
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, tulpen said:

கோஷான், எதையும் விட்டுக்கொடுத்து வெற்றி பெறுவதை விட விடாக்கொண்டானாக இறுதிவரை மார்தட்டி இருந்துவிட்டு,  நிலமை கைமீறிச்சென்றவுடன் குய்யோ முறையோ உலகம் முழுவதும் எம்மை வஞ்சித்துவிட்டது என்று ஒப்பாரி  வைப்பதில் எமக்கு ஒரு தனி சுகம். So,  we are enjoying our desires. 😂

தமிழர் தரப்பு இது வரைக்கும் எதை விட்டுக்கொடுக்கவில்லை?

இனியும் விட்டுக்கொடுத்தால் ஈழத்தமிழினம் காங்கேசன் துறை கடல் வரைக்கும் சென்று விழுந்து சாக வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினை சிங்கள இனவாதிகள் மட்டுமல்லாமல், சிங்கள இடதுசாரிகள் கூடக் கடுமையாக எதிர்த்தார்கள். தெற்கின் இரண்டாவது ஜனதா விமுக்தி பெரமுனவின் ரோஹண விஜேவீர இந்த ஒப்பந்தத்தினை எதிர்த்துத்தான் கலகத்தினை ஆரம்பித்தார். உடன்படிக்கையினைக் கைச்சாத்திட்ட ஜே ஆரின் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே அவரின் அந்நாள் பிரதமர் பிரேமதாஸா கூட இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆக, நன்கு அரசியல் மயப்படுத்தப்பட்ட எதிர்ப்பு தெற்கில் அன்று இருந்தது, இன்றும் அது இருக்கிறது.

ஆகவே புலிகளை மட்டுமே ஒப்பந்தத்தின் தோல்விக்கான காரணமாக தமிழர்களில் ஒரு பகுதியினர் இன்றும் சாடிவருவது தவறு. 

இவை எல்லாவற்றிற்கும் அப்பால், புலிகள் இந்த ஒப்பந்தத்தினை எதிர்த்ததன் நோக்கம் இவ்வொப்பந்தம் தமிழர்களுக்கான நியாயமான தீர்வினைத் தரப்போவதில்லை என்பதானாலேயன்றி வேறு எதற்காகவும் அல்ல என்பதையும் இவர்கள் புரிந்துகொள்ளப்போவதில்லை. 

ரஞ்சித்,

இந்த புலிகள் தவறு செய்தார்கள்/இல்லை என்ற சகதிக்குள் இறங்க நான் விரும்பவில்லை.

ஆனால் ஒன்றை சொல்கிறேன்.

இந்திய இலங்கை ஒப்பத்தம் தமிழர்களுக்கு வாய்ப்பானது இல்லை என்பதை ஏற்கும் அதே வேளை - அந்த ஒப்பந்தத்தால் தமிழர்களை விட அதிகம் தீமை அடைய இருந்தவர்கள் நிச்சயம் இனவாதிகளே.

நீங்கள் மேலே சொன்னது போல, ஜேவிபி, பிரேமதாச, ஜேஆர் அவரவர் தமக்குரிய வழியில், வெளிப்படையாக தெரியாமல் ஆனால் மிக இரகசியமாக ஒன்றிணைந்து, 86-90 சவாலை மிக நேர்தியாக கையாண்டனர்.

1. ஜேவிபி கலகம் செய்தது

2. பிரேமதாச அரசியல் ரீதியில் எதிர்த்தார் 

3. ஜே ஆர் தந்திரமாக புலிகளையும் இந்தியாவையும் சிண்டு முடிந்து விட்டார்.

ஆனால் அனைவரின் நோக்கமும் இலங்கையில் இருந்து இந்தியாவை வெளியேற்றி பெளத்த சிங்கள மேலாண்மையை பேணுவதே.

அதில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள்.

ஒரு தமிழனாக, தலைவரின் தனிமனித விழுமியத்தால், தலைமைத்துவ பண்பால், கண்ணியத்தால், ஊழல் அற்ற தன்மையால் ஈர்க்க பட்டவனாக,

இந்தியாவின் நண்பனாக பத்மநாபா இருந்த இடத்தில் தலைவர் தன்னை அமர்த்தி, ஜெரி அடம்ஸ் போன்ற ஒரு வகிபாகத்தை பாலா அண்ணைக்கும், மார்ட்டின் மெகினஸ் போன்ற ஒரு நிலையை தளபதி கிட்டுவுக்கும் கொடுத்திருந்தால்.

இன்றைக்கும் ஒரு நிழல் “தமிழரசு” வட-கிழக்கில் ஓடிக்கொண்டிருக்கும் என்பதை நான் நம்புகிறேன்.

தியாகி திலீபன், பன்னிரு வேங்கைகள், அக்டோபர் 10,  87 க்கு பின்னான இந்திய படைகளின் வெறியாட்டம் இவற்றை எல்லாம் நான் சொல்லவில்லை.

இவற்றுக்கு முந்திய காலம் - சுதுமலை பிரகடன காலம், அதற்கு முந்திய 6 மாதம் - என்னை பொறுத்தவரை எமது இனத்தின் நீண்டகால இராஜதந்திர நன் நகர்வை செய்ய கூடிய ஒரு வாய்ப்பை நாம் தவற விட்ட காலம் என்றே கருதுகிறேன்.

இது எனது கருத்து மட்டுமே.

இதை எதிர்வளமாகவும் இல்லை இந்தியா ஏனைய இயக்கங்களை இறக்கி நரி வேலை செய்தது என்று வாதாடலம்.

இனி இவை வெறும் விவாத புள்ளிகளே.

நீங்களும் நானும் we can debate about this till the cows come home, ஆனால் ஒரு பயனும் இல்லை.

3 hours ago, ரஞ்சித் said:

தமிழ்நாட்டின் முலம் தில்லியை நெருக்குவது சாத்தியமா? இது தவறான பார்வை என்றே எனக்குப் படுகிறது. தமிழர்களுக்கு மிகவும் சார்பான கொள்கையினைக் கொண்டிருந்த முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் காலத்தில் அவரால்க் கூட ஒரு சில செயற்பாடுகளைத் தவிர அதிகமாக தில்லியை நெருக்க முடியவில்லை. 1987 இன் சமாதான ஒப்பந்தத்தின்போது புலிகளின் தலைமை மீது தில்லியினால் செலுத்தப்பட்ட அழுத்தத்தைத்தன்னும் அவரால் நீக்க முடியவில்லை. தனிப்பட்ட ரீதியில் தமிழகத் தலைவர்கள் எம்மீது கொண்டிருக்கும் பரிவு மட்டுமே அன்று எமக்கிருந்தச் ஒரே பலம். இதனைத்தாண்டி மத்தியை அவர்களால் வழிக்குக் கொண்டுவரமுடியவில்லை.

தமிழகத் தலைவர்களில் தமிழர் மீது அதீத அக்கறை கொண்டிருந்த எம் ஜி ஆர் காலத்திலேயே தில்லிக்கு தமிழகத்தினால் கொடுக்கப்பட்ட அழுத்தம் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது என்றால், ஏனையவர்களால் நிச்சயமாக அவரளவு கூட செய்திருக்க வாய்ப்பில்லை. மேலும் 1991 இன் சிறிபெரும்புதூர் இந்த நிலைமைகளையெல்லாம் தலைகீழாக மாற்றிப்போட்டு விட்டது. 

இன்று ஈழத்தமிழர் தொடர்பாக மத்தி சொல்வதை தமிழ்நாடு கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய நிலைமைதான் உள்ளது. இதில் அழுத்தம் எல்லாம் எங்கிருந்து கொடுப்பது? 

நிச்சயமாக நேர்முக அழுத்தம் அதிகம் பயந்தராது.

உங்கள் எம்ஜிஆர் உதாரணம் மட்டுமல்ல புலி அனுதாபியாக அறியபட்ட ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் பாதுகாப்பு அமைச்சராக இருந்தும் ஒன்றும் ஆகவில்லை .

ஆனால் இப்போ சீனா வட கிழக்கில் உள்ளே வருவதை வைத்து - இந்திய இறையாண்மை, பாதுகாப்புக்கு கேடு, மோடி அரசு கோட்டை விட்டு விட்டது என்ற வகையில் எதிர்மறையாக அரசியல் செய்து - we can try and force Delhi’s hands (ஒரு அளவுக்கு).

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

நேரடியாக மேற்கினை அணுகல். அப்படியொன்று இருக்கிறதா இன்று?

இலங்கையில் நடக்கும் எந்தவிதமான வெளிச் சக்திகளின் செயற்பாடுகளும் ஒன்றில் மேற்கு - இந்திய கூட்டணியினரின் ஏற்பட்டில் அல்லது இக்கூட்டணிக்கெதிரான சீனாவின் ஏற்பாட்டிலேயே நடந்துவருகிறது.

இன்னொரு வகையில் சொல்லப்போனால் இந்து சமுத்திரத்தில் மேற்கின் இன்னொரு முகம்தான் இந்தியா. ஆகவே இந்தியாவைத் தவிர்த்து மேற்கிடம் நேரடியாகப் போவதென்பது சாத்தியமற்றது. இன்னும் சொல்லப்போனால் மேற்குடன் நாம் நடத்தலாம் என்று எதிர்பார்க்கும் எந்தச் சந்திப்புமே இந்தியாவை நோக்கி அதே மேற்கினால் திருப்பிவிடப்படும் என்பதும் நாம் அறியாதது அல்ல. ஏனென்றால், இலங்கையின் சீனச் சார்புச் செயற்பாடுகளால் தனியே மேற்கோ அல்லது தனியே இந்தியாவோ பாதிக்கப்படப்போவதில்லை. இக்கூட்டே சேர்ந்து பாதிக்கப்படப்போகிறது. ஆகவே, இந்தியாவை மீறி மேற்கு எமது விடயத்தில் தனியாகச் செயற்படப்போவதில்லை. சில மாதங்களுக்கு முன்னர் மேற்கின் சமாதானத் தூதுவர் சொல்கெயிம்கூட ஒரு செவ்வியில் தமிழர்கள் இந்தியா நோக்கித் தமது கோரிக்கைகளை முன்வைக்கவேண்டும் என்றுதான் கூறினாரே ஒழிய, மேற்கிடம் நேரடியாக வாருங்கள் என்று கூறவில்லை. 

உண்மைதான் இதை நான் முன்பே எழுதியுள்ளேன். அமெரிக்கா உள்ளே வருவதெண்டால் சின்ன பகவதி எதுக்கோ முந்திய எதுவோ போல் முன்னால் வருவார்.

அமெரிக்காவும் தனது regional ally ஆன சின்ன பகவதியை விட்டு கொடாது.

ஆனாலும் - தமிழர்களும் சீனா பக்கம் சாய்கிறார்கள், இலங்கையில் இந்தியாவின் பிடி (அதன் வழியே) மேற்கின் பிடி நழுவுகிறது என்ற பீதியை நாம் மேற்கில் கிளப்பினால் - நிச்சயம் பெரிய பகவதி, சின்ன பகவதியை “என்னப்பா அங்க சத்தம்? நீ ஒழுங்கா பாக்கிறியா? அல்லது நான் பாக்கவா?” எண்டு கேட்பார். அது சின்ன பகவதியை உள்ளே இறங்க வைக்கும்.

சின்ன பகவதியை முடிந்தளவு மேலும் உள்ளே இழுத்து விட்டு - இனவாதிகள் 86-90 விளையாடிய அதே ராஜதந்திர விளையாட்டை இம்முறை நாம் விளையாட வேண்டும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

நான் எழுதியதை நீங்கள் எப்படிப் புரிந்துகொண்டீர்கள் என்று தெரியவில்லை கோஷான்.

நிச்சயமாக நீங்களோ, @வாலி எழுதியதை பிரதேசவாத கண்ணோட்டம் என நான் கருதவில்லை. உங்கள் இருவர் பற்றியும் நான் அறிவேன்.

அது போல் முஸ்லீம்களுடன் ஒரு அலகில் அடங்கினால் பூரண ஆயுசு, நித்திய கண்டம் என்பதும் சரிதான் - ஆனால் ஒட்டு மொத்த வடக்கு- கிழக்கை அப்படியே பிரித்து விடுவது கிழக்கு தமிழர்கள் மீது தாரை வார்த்து மண்ணை போடுவதை போல என்பதை மட்டுமே நான் சுட்டினேன்.

3 hours ago, ரஞ்சித் said:

வடக்கும் கிழக்கும் இணையக்கூடாதென்று விரும்புபவர்கள் முஸ்லீம்களும், கிழக்குத் தமிழர்களின் ஒரு பகுதியினரும் மட்டும்தான். நிச்சயமாக வடக்குத் தமிழர்கள் கிடையாது. வடக்கும் கிழக்கும் இணைந்த தேசமே தமிழர்களின் பூர்வீக தாயகம் எனும் நிலைப்பாட்டிலேயே வடக்குத் தமிழர்கள் இன்றும் இருக்கிறார்கள். 

 வடக்கில் இருக்கும் அதே சதவீதத்தில் கிழக்கிலும் தமிழர்கள் இதே நிலைப்பாட்டிலே உள்ளார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லும்.

3 hours ago, ரஞ்சித் said:

வடக்கினைப் பெற்றுக்கொள்ள கிழக்கினை விட்டுக்கொடுத்தோ அல்லது பகடையாகப் பாவிப்பதோ நிச்சயம் வடக்குத் தமிழர்களின் நோக்கமும் அல்ல. வடக்கும் கிழக்கும் இணைந்தே இருக்கவேண்டும் என்று விரும்பும்போது அவர்கள் எதற்காகக் கிழக்கை விலையாகக் கொடுக்கப்போகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

  வடக்கு தமிழரின் நோக்கம் இது என நான் சொல்லவில்லை. ஆனால் கிழக்கை அப்படியே (இப்போதுள்ளமாதிரியே) தனி அலகாக ஏன் விட முடியாது என்பதை விளக்கவே அப்படி எழுதினேன்.

3 hours ago, ரஞ்சித் said:

தமிழரின் பெரும்பான்மைப் பிரதேசங்களில் இருக்கும் முஸ்லீம் பகுதிகளுக்கான அதிகாரத்தினை நாம் கொடுப்பதன் மூலம்  நாம் , முஸ்லீம் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்களிலிருக்கும் தமிழர் பகுதிகளுக்கான் அதிகாரத்தினை பெற்றுக்கொள்ளலாம், அல்லது தமிழரின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்துடன் இந்தத் தமிழர் சிறுபான்மைப் பகுதிகளையும் நிலத்தொடர்பற்ற முறையில் இணைத்துக்கொள்லலாம். 

பேசி தீர்க்க வேண்டிய கஸ்டமான விடயம் ( கல்முனை பிரதேச சபை கண் முன் வருமே?.

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

கிழக்குத் தமிழர்கள் முஸ்லீம்களுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லையெனும் காரணம், வடக்குடன் இணைவதை தடுக்கிறதெனும் நியாயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வடக்குடன் இணையாது இருப்பதால் மட்டும் முஸ்லீம்களுடன் சேர்ந்து வாழுதல் தடுக்கப்பட்டு விடுமா? இல்லையே? பின்னர் ஏன் இந்த வியாக்கியானம்? வடக்குடன் இணையாது, தனித்து இருந்தால், கிழக்கில் வெறும் 30 வீதத்தினை மட்டுமே கொண்டிருக்கும் தமிழர்கள் அங்கேயே சிறுபான்மையினராக்கப்பட்டுவிடுவார்கள் என்பதனை கிழக்கு தனித்து இருக்கவேண்டும் என்று கோருவோர் புரிந்துகொள்ளவில்லையா? தமிழ்த் தேசியத்திலிருந்து விலகி, அதிகாரத்தில் இருப்போர் நோக்கிச் செல்லும் புதிய மனோநிலை, கிழக்குத் தனியாகப் போகும் பட்சத்தில் மிக இலகுவாக சிங்களவர்களாலோ அல்லது முஸ்லீம்களாலோ கிழக்கு முற்றாகச் சூறையாடப்பட்டுவிடும் நிலையினை உருவாக்கிவிடும் என்பதனை தனியான கிழக்கினைக் கோருவோர் புரிந்துகொள்ளவில்லையா? 

இது எனக்கான கேள்வி இல்லை என நினைக்கிறேன்🤣.

 

5 hours ago, குமாரசாமி said:

தமிழர் தரப்பு இது வரைக்கும் எதை விட்டுக்கொடுக்கவில்லை?

இனியும் விட்டுக்கொடுத்தால் ஈழத்தமிழினம் காங்கேசன் துறை கடல் வரைக்கும் சென்று விழுந்து சாக வேண்டியதுதான்.

எனது  முன்னய கருத்து சுயமாக தாயக  தமிழ்மக்களின் உரிமை தொடர்பாக மட்டும் சிந்திப்பவர்களுக்கானது  காங்கேசந்துறை என்று மக்களை உசுபேற்றிக்கொண்டு  பிராங்பேட்  தாயகத்தில் இருந்து  கட்சி/ இயக்க விசுவாசத்தை மட்டும் வைத்து   அந்தமனப்பாங்கில்  சிந்திப்பவர்களுக்கானதல்ல.

நீங்கள் அப்படி சிந்திப்பது உங்கள் உரிமை என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன்.  ஆனால் நீங்களும் நானும் சிந்திக்க வேண்டிய விடயம் தாயக மக்களின் உரிமை தொடர்பானது மட்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎-‎12‎-‎2021 at 23:16, ரஞ்சித் said:

நான் எழுதியதை நீங்கள் எப்படிப் புரிந்துகொண்டீர்கள் என்று தெரியவில்லை கோஷான்.

நான் எழுதியதன் சுருக்கமும் இன்னம் சில விளக்கங்களும் கீழே 

1. வடக்கும் கிழக்கும் இணையக்கூடாதென்று விரும்புபவர்கள் முஸ்லீம்களும், கிழக்குத் தமிழர்களின் ஒரு பகுதியினரும் மட்டும்தான். நிச்சயமாக வடக்குத் தமிழர்கள் கிடையாது. வடக்கும் கிழக்கும் இணைந்த தேசமே தமிழர்களின் பூர்வீக தாயகம் எனும் நிலைப்பாட்டிலேயே வடக்குத் தமிழர்கள் இன்றும் இருக்கிறார்கள். 

2. வடக்கினைப் பெற்றுக்கொள்ள கிழக்கினை விட்டுக்கொடுத்தோ அல்லது பகடையாகப் பாவிப்பதோ நிச்சயம் வடக்குத் தமிழர்களின் நோக்கமும் அல்ல. வடக்கும் கிழக்கும் இணைந்தே இருக்கவேண்டும் என்று விரும்பும்போது அவர்கள் எதற்காகக் கிழக்கை விலையாகக் கொடுக்கப்போகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

3. தமிழரின் பெரும்பான்மைப் பிரதேசங்களில் இருக்கும் முஸ்லீம் பகுதிகளுக்கான அதிகாரத்தினை நாம் கொடுப்பதன் மூலம்  நாம் , முஸ்லீம் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்களிலிருக்கும் தமிழர் பகுதிகளுக்கான் அதிகாரத்தினை பெற்றுக்கொள்ளலாம், அல்லது தமிழரின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்துடன் இந்தத் தமிழர் சிறுபான்மைப் பகுதிகளையும் நிலத்தொடர்பற்ற முறையில் இணைத்துக்கொள்லலாம். 

4. கிழக்குத் தமிழர்கள் முஸ்லீம்களுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லையெனும் காரணம், வடக்குடன் இணைவதை தடுக்கிறதெனும் நியாயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வடக்குடன் இணையாது இருப்பதால் மட்டும் முஸ்லீம்களுடன் சேர்ந்து வாழுதல் தடுக்கப்பட்டு விடுமா? இல்லையே? பின்னர் ஏன் இந்த வியாக்கியானம்? வடக்குடன் இணையாது, தனித்து இருந்தால், கிழக்கில் வெறும் 30 வீதத்தினை மட்டுமே கொண்டிருக்கும் தமிழர்கள் அங்கேயே சிறுபான்மையினராக்கப்பட்டுவிடுவார்கள் என்பதனை கிழக்கு தனித்து இருக்கவேண்டும் என்று கோருவோர் புரிந்துகொள்ளவில்லையா? தமிழ்த் தேசியத்திலிருந்து விலகி, அதிகாரத்தில் இருப்போர் நோக்கிச் செல்லும் புதிய மனோநிலை, கிழக்குத் தனியாகப் போகும் பட்சத்தில் மிக இலகுவாக சிங்களவர்களாலோ அல்லது முஸ்லீம்களாலோ கிழக்கு முற்றாகச் சூறையாடப்பட்டுவிடும் நிலையினை உருவாக்கிவிடும் என்பதனை தனியான கிழக்கினைக் கோருவோர் புரிந்துகொள்ளவில்லையா? 
 

ஏன் வடக்கோடு ,கிழக்கை இணைத்து விட்டு உங்களுக்கு அடிமையாய் வைத்திருக்க பார்க்கிறீர்களா?
கேவலம் ஒரு பாராளுமன்ற எம்பி பதவியை கூட கிழக்குக்கு விட்டு கொடுக்க முடியாத ஆட்கள் தானே நீங்கள் .
தலைவரால் கூட இந்த பிரதேசவாதத்தை கட்டு படுத்த முடியவில்லை .
வந்திட்டார்கள் இவர்கள் வட,கிழக்கை இணைக்க😠 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

ஏன் வடக்கோடு ,கிழக்கை இணைத்து விட்டு உங்களுக்கு அடிமையாய் வைத்திருக்க பார்க்கிறீர்களா?
கேவலம் ஒரு பாராளுமன்ற எம்பி பதவியை கூட கிழக்குக்கு விட்டு கொடுக்க முடியாத ஆட்கள் தானே நீங்கள் .
தலைவரால் கூட இந்த பிரதேசவாதத்தை கட்டு படுத்த முடியவில்லை .
வந்திட்டார்கள் இவர்கள் வட,கிழக்கை இணைக்க😠 

அதுவும் சரிதான்..  பனங்கொட்டையள் எங்களோட சேந்து கேடுகெட்ட சாதிப் பழக்கம் பழகாமல் கிழக்கு மக்களாவது தமிழன் எண்டுர ஒரே இனமா ஒற்றுமையா ஒண்டா நிம்மதியா ஒற்றுமையா இருக்கட்டும்…

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் ஒரு இனமல்ல ஓரு மதப்பிரிவு. தமிழ் பேசும் மக்கள் என்ற வகைக்குள் அவர்களுக்கு சில மதரீதியான சலுகைகளை வழங்குவது உள்நாட்டு அரசியல். இணைந்த வடக்கு கிழக்கு என்பது தமிழர்தாயகம் என்ற அம்சம் உடன்படடிக்கையில் வலுப்படுத்தப்பட வேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்தத்திலும் இது சொல்லப்பட்டு இருக்கிறது.புலிகள் இரத்தம் சிந்திப் போராடி ஒருதீர்வு உடன்படிக்கைக்கு இணங்கிய பொழுது அதுவரை புலிகளைக்க் காட்டிக் கொடுத்த முஸ்லிம்கள் தீர்வுத்திட்டத்தில் தங்களுக்கம் பங்கு வேணும் என்று வரவில்லையா.ஆக தீர்வில் பங்கு வேணும் ஆனால்சிங்கள அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். நாளைக்கு அரசாங்கம் மாறி கக்கீமுக்கு அமைச்சர்பதவி என்றால் எல்லாறவற்றையும் விட்டு விட்டுப் போய்விடுவார்.கிழக்கு மாகாண சபையில் அதுதான் நடந்தது. அரசு கூட மாறத் தேவையில்லை. அமைச்சர் பதவி போதும். கக்கீம் மகிந்த >ரணில் இரண்டு அரசாங்ககளிலும் பதவி வகித்தவர். அவர்கள் கையெழுத்துப் போடாவிட்டால் அவர்களைக் கைகழுவிவிட்டு  கடிதத்தை அனுப்ப முயற்சித்தால் அவர்கள் வழிக்கு வருவார்கள். அல்லது அவர்களுக்குத்தான் நட்டம். தற்போதைய இந்திய அரசு முஸ்லிம்களைக் கொண்டாடும் அரசல்ல.தமிழர்கள்ஒரு பலமான சக்தி அதனால்தான் 30 ஆண்டுகாலம் பலநாடுகள்  அதரவுடன் இருந்த சிறிலங்கா அரசை எதிர்த்து ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்த முடிந்தது. இப்போதும் தமிழர்கள் ஒரு பலமான சக்திதான். ஆனால் சிறிலங்கா முஸ்லிம்களுக்கு எந்த வெளியாதரவும் இல்லை. இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் நாடுகள் கூட அவர்களுக்கு உதவாது.தமிழர்கள் சீனாவுடன் பட்டும்படாத ஒரு பேச்சு வார்த்தையில் முனைப்புக் காட்ட வேண்டும். இதுவே இந்தி மேற்கத்தைய ஆரசுகளை வழிக்குக் கொண்டு வர உதவும். அதை விட்டு நாங்கள் இந்தியாவுக்குப் பாதகமாக நடக்க மாட்டோம் என்று அடம் பிடித்து தீவிர இந்திய விசுவாசம் காட்டினால் இந்தியா எங்களைக் கண்டு கொள்ளாது. இவர்கள் நாதியற்றவர்கள் எங்களை விட்டால் இவர்களுக்கு டவேறு வழியில்லை என்று நினைத்து செயல்படுவார்கள். இதுவே காலம் காலமாக நடந்து வருவது.எனவே இந்தியாவுக்கு சார்பு நிலையை எடுப்பதை குறைத்து இந்தியாவின் எதிரியுடன் நட்பு செய்து பார்த்தால் என்ன. இந்தியாவுக்கு சார்புநிலை எடுத்து ஒரு பலனுமில்லை என்பது வரலாறு எதிர்நிலை என்ற விடயத்தை ஏன் பரிசீலித்துப்பார்க்கக் கூடாது/

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கும் இணைந்த தமிழ்பேசும் மக்களின் தாயகம் அல்லது இதன் அடிப்படையிலான தீர்வு ஒன்றிற்கு தமிழ்பேசும் மக்களின் அரசியல்த் தலைமைகள் முயன்றுவரும் நேரத்தில் இதனைக் குழப்புவதற்கு சிங்களப் பேரினவாதம் தனது காய்களை நகர்த்த ஆரம்பித்திருப்பது தெரிகிரது.

அதன் ஒரு படியாக சிங்கள இனவாதியும், கோத்தாவின் அரசாங்கத்தில் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தனவை இதுகுறித்து பேச வைத்திருக்கிறது. வடக்குக் கிழக்கு இணைப்பென்கிற பேச்சிற்கே இடமில்லை. தமிழ் மக்கள் முன்னர் தமக்கு நடந்த அழிவுகளை ஒருமுறை சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்று மிரட்டல் விடப்பட்டிருக்கிறது.

அடுத்ததாக , முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் களம் இறக்கி வடக்குக் கிழக்கு இணைப்பினை அனுமதிக்கப்போவதில்லையென்றும், தமிழர்களுடன் சேர்ந்து வாழுதல் சாத்தியமில்லையென்றும் கூக்குரலிட வைத்திருக்கிறது.

மூன்றாவதாக, கிழக்கின் விடிவெள்ளிகளில் ஒன்றும், வெறும் 50 கோடி ரூபாய்களுக்கு மகிந்தவனால் வாங்கப்பட்டவனும், அவனது வீட்டு வாசலில் கட்டிவைக்கப்பட்டிருப்பவனுமான  நன்றியுள்ள ஜீவன் வியாழேந்திரனைக் களமிறக்கி கிழக்கில் முஸ்லீம்களுடன் எந்த இணக்கப்பட்டிற்கும் இடமில்லையென்றும், வடக்குக் கிழக்கு இணைப்பிற்கு ஒருபோது அனுமதிக்கப்போவதில்லையென்றும் குரைக்க வைத்திருக்கிறது. இது இப்படியிருக்க, இந்த விடிவெள்ளிகளின் பின்னால் திரியும் அறிவற்ற கூட்டமொன்று இதனை வழிமொழிந்து வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களை எதிர்பார்த்து காலத்தை வீணாக்குவதை விட தம்மாலியன்ற முயற்சிகளை எடுப்பது நல்லது. கிழக்கு தமிழர் வடக்கு தமிழருடன் சேர்ந்து வாழ விரும்பாவிட்டால் நிர்பந்திக்க வேண்டாமே. எமக்குரியத்தை எதற்காக விரும்பாதவர்களுக்காக இழக்க வேண்டும். விட்டு விலகினால் மட்டுமே இப்படிபட்டவர்கள் திருந்த இடமுண்டு. இல்லை இவர்களையும் சேர்த்து இழுத்துக்கொண்டு போவோம் என்று காத்திருந்தால் யாருமே போக வழியிருக்காது, எல்லா வழிகளும் அடைக்கப்பட்டுவிடும். இந்தியா இவர்கள் செய்கிற ஆரவாரத்துக்கு எடுபடப்போவதில்லை. இறுதியாக ஒரு சந்தர்ப்பம் அளித்து பார்ப்பது இல்லையேல் அவர்களை நெருக்கக்கூடிய தெரிவை நாங்கள் நாடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வு விவாதத்தில் .நசீரு சொன்ன விடையம்....தலைவர் கக்கீமுதான்...இப்ப நாங்கள் செய்யிறது இராச தந்திர நகர்வாம் ...கடைசி வரைக்கும்13  ஐ விடமாட்டினமாம்...அப்ப கக்கீமு எப்படி சைன் பண்ணும்..

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தங்களுக்கு வேண்டிய நேரம் வைக்கட்டும். இவர்கள் அவர்களுக்காக காத்திருப்பதை நிறுத்த வேண்டும். இல்லையேல் கொப்பு கொப்பாய் தாவி திரிவினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.