Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேச்சு சுதந்திரம் தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் என நினைக்க வேண்டாம்! - வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு சுதந்திரம் தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் என நினைக்க வேண்டாம்!

January 7, 2022

spacer.png

 

பேச்சு சுதந்திரம் , இருக்க இருக்கும் சுதந்திரம் என்பன  கிடைக்கின்றது  என்பதற்காக , தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கிறது என தவறாக நினைக்க வேண்டாம் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை  வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது ,   ” வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு 14 மெய்ப்பாதுகாவலர்களும் 6 சாரதிகளும் காணப்படுகின்றனர். இவர்களுக்காக பல இலட்சம் ரூபாக்கள் செலவிடப்படுகிறது. அத்துடன் ஆளுநர் தனது எரிபொருள் மற்றும் ரீசேட் கொள்வனவிற்காக பல இலட்சம் ருபாவை மக்களின் வரிப்பணத்தில் செலவிடுகின்றார்” என தெரிவித்து இருந்தார்.

அந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் முகமாக வடமாகாண ஆளுநர் செய்தி குறிப்பொன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். குறித்த செய்தி குறிப்பிலையே  அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,  ஆளுநரின் ஊழியர்கள் , மாகாண நியமன ஊழியர்கள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். ஆளுநர் நீதியான சமுதாயத்தை நம்புகிறார். அதற்காக நேர்மையாக பணியாற்றுகிறார்.  இங்குள்ள சிலர் மாற்றுக்கருத்துக்களை கொண்டுள்ளனர். அவர்களுக்கு பேச்சு சுதந்திரம் போன்ற அடிப்படை சுதந்திரங்கள் உண்டு, அவற்றினை அவர்கள் தவறாக பயன்படுத்த கூடாது. அந்த சுதந்திரங்களை பயன்படுத்தி தேச துரோக செயல்களில் ஈடுபட முடியாது என தெரிவித்துள்ளார்.

https://globaltamilnews.net/2022/171500

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முதல் ஆளுநர்களுக்கும் இருந்திருப்பினம் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

பேச்சு சுதந்திரம் தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் என நினைக்க வேண்டாம்!

January 7, 2022

spacer.png

 

பேச்சு சுதந்திரம் , இருக்க இருக்கும் சுதந்திரம் என்பன  கிடைக்கின்றது  என்பதற்காக , தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கிறது என தவறாக நினைக்க வேண்டாம் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை  வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது ,   ” வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு 14 மெய்ப்பாதுகாவலர்களும் 6 சாரதிகளும் காணப்படுகின்றனர். இவர்களுக்காக பல இலட்சம் ரூபாக்கள் செலவிடப்படுகிறது. அத்துடன் ஆளுநர் தனது எரிபொருள் மற்றும் ரீசேட் கொள்வனவிற்காக பல இலட்சம் ருபாவை மக்களின் வரிப்பணத்தில் செலவிடுகின்றார்” என தெரிவித்து இருந்தார்.

அந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் முகமாக வடமாகாண ஆளுநர் செய்தி குறிப்பொன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். குறித்த செய்தி குறிப்பிலையே  அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,  ஆளுநரின் ஊழியர்கள் , மாகாண நியமன ஊழியர்கள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். ஆளுநர் நீதியான சமுதாயத்தை நம்புகிறார். அதற்காக நேர்மையாக பணியாற்றுகிறார்.  இங்குள்ள சிலர் மாற்றுக்கருத்துக்களை கொண்டுள்ளனர். அவர்களுக்கு பேச்சு சுதந்திரம் போன்ற அடிப்படை சுதந்திரங்கள் உண்டு, அவற்றினை அவர்கள் தவறாக பயன்படுத்த கூடாது. அந்த சுதந்திரங்களை பயன்படுத்தி தேச துரோக செயல்களில் ஈடுபட முடியாது என தெரிவித்துள்ளார்.

https://globaltamilnews.net/2022/171500

உங்களை விமர்சித்தால் அது தேசத்துரோகமா ஆளுனரே? ஆளாளுக்கு தேசத்துரோகம் அது இதென்டு!

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு  உண்மையை பேச முடியவில்லை, அதை தவிர்ப்பதற்காக, பதவியை தக்க வைப்பதற்காக உண்மை பேசுபவரை குறை சொல்ல வேண்டியது. சொல்லுபவர் ஆளுநர் ஆச்சே. மூச்சு விடப்படாது. சர்வாதிகாரியின் நியமனம் வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள் இவரிடம்?

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கிற காசுக்கு நல்லாவே கூவுறாங்க. இவங்க எல்லாம் இவ்வளவு காலமும் எங்க பதுங்கிக்கிடந்தாய்களோ. சிங்களத்தின் கண்களுக்கு மட்டும் தெரிந்திடுறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சுயநலவாதிகளை சல்லடை போட்டு தேடிக்கொண்டிருக்கிறது சிங்களம். இவர்களும் ஒட்டிக்கொள்வார்கள். இவர்களை வைத்து தன் காரியத்தை முடித்துக்கொள்வதோடு எங்களை  அடிபட வைத்து   நல்ல பெயரை பெற்றுக்கொள்ளும் சிங்களம். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

சுயநலவாதிகளை சல்லடை போட்டு தேடிக்கொண்டிருக்கிறது சிங்களம். இவர்களும் ஒட்டிக்கொள்வார்கள். இவர்களை வைத்து தன் காரியத்தை முடித்துக்கொள்வதோடு எங்களை  அடிபட வைத்து   நல்ல பெயரை பெற்றுக்கொள்ளும் சிங்களம். 

சிங்கள அரசினது ஆளுணர் அப்படித்தான் பேசுவார். சிறிலங்காவில் சனநாயாக முகம்பூண்ட சர்வாதிகார அரசுகளே ஆட்சியை அலங்கரித்துவருகின்றன. அதனது அடிவருடிகள் அல்லது கைக்கூலிகளிடமிருந்து இதுபோன்ற அச்சுறுத்தல்களைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் சனாநாயகக் கட்டமைப்பின் ஒரு உயரதிகாரி அச்சுறுத்தும் வகையில் சனநாயகத்தையே கேள்விக்குட்படுத்தலாம். ஆனால் தமிழரது நியாயங்கள் அவருக்கு தேசத்துரோகமாகத் தெரிகிறது. திரு சிவாஜிலிங்கமவர்கள் ஒன்றும் கொழும்பிலே உள்ள குளத்தின் உரிமைபற்றிக் கதைக்கவில்லை என்பதை  அரசசேவகரான ஆளுணருக்கு விளங்காதிருப்பது ஏனோ?  

  • கருத்துக்கள உறவுகள்
On 7/1/2022 at 09:41, கிருபன் said:

பேச்சு சுதந்திரம் தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் என நினைக்க வேண்டாம்!

January 7, 2022

spacer.png

th?id=OIP.t7C1SGQB6poP3bz_9Iiq5AAAAA&pid=Api&P=0&w=257&h=171

இவருடைய முகச்சாயல் அவருக்கும் உள்ளதுபோல் தெரிகிறதே...! முகச்சாயல் மட்டும்தானா...???

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநர் இப்ப கொஞ்ச நாளாய் ஓவராய் சவுண்ட் குடுக்கிறார்.எல்லாம் மேலிடத்தின் அழுத்தமே!

  • கருத்துக்கள உறவுகள்

ஆரியகுளம் பௌத்த மத அடையாளமாக மாறுமா? வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் மத நல்லிணக்கத்துக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல. உங்கள் உங்கள் தனிப்பட்ட நல்லிணக்கத்தை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் வைத்துக்கொள்ளுங்கள், நாங்கள் ஏதும் சொல்லவில்லை. ஆனால் எங்கள் மீது திணிக்க வேண்டாம். அவர்கள் பூப்போட்டு கும்பிடட்டும் அது அவர்களின் விருப்பம், நாங்கள் வேண்டுகோள் வைக்கவில்லை. ஆனால் எங்கள் கோவில்களை கிளற வேண்டாம். எங்கள் பிரதேசத்தில் என்ன பாடல் ஒலிக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் நாங்கள், நீங்களல்ல. வந்த வேலை எதுவோ அதை மட்டும் பாருங்கள். நாங்கள் கும்பிடுற இடமெல்லாம் ஏன் உதுகளை கொண்டு வருகிறீர்கள்? நாங்கள் எங்காவது உரிமை கேட்டு வருகிறோமா? அடுத்த சுரேன் ராகவன் வந்திட்டார். தென் பகுதி எல்லாம் புத்த விகாரையும் கீதங்களும் ஒலிக்குது நாங்கள் கேட்டோமா எங்கள் மத கீதங்களும் ஒலிக்க வேண்டும் என்று? இந்தியாவில் அவர்கள் தங்கள் மத பாடலை ஒலிக்கிறார்கள், அது அவர்களின் பிரதேசம். ஏன் எங்கள் மீது வாறவன் எல்லாம் தங்கள் சேவகத்தை, இங்கு இல்லாததை  திணிக்கிறான்? 

நாட்டில் தீர்க்கப்படாம எத்தனையோ பிரச்சனை இருக்கு. இன்றைக்கு இப்படித்தான் ஆரம்பிப்பார்கள், நாளைக்கு உரிமை கொண்டாடி கிண்டுவார்கள். இதைத்தான் அபிவிருத்திக்கு முன் எங்கள் அரசியல் பிரச்சனையை தீருங்கள் என்று கேட்ப்பது. இல்லையெனில்  வாறஅடிமையெல்லாம் இப்படித்தான் வக்காலத்து வாங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எஜமானிடம் இருந்து எலும்பு துண்டுகளை எதிர்பார்க்கும் ஜீவன் தியாகராஜன் போன்றவர்களை கடிந்து எவ்வித பிரயோசனமும் இல்லை. இவர் போன்றவர்களின் பேச்சுக்கள் செயல்கள் வீடு, சைக்கிள் , மீன் என பிரிந்து இருக்கும் தமிழ் தேசியம் பால் அக்கறை உள்ளோர்களை ஒன்றிணைக்கும் என நம்புவோமாக.

  • கருத்துக்கள உறவுகள்

இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் முரண்பாட்டைவலிந்து  தோற்றுவித்துக்கொண்டு இருப்பது சிங்களம். இதுகூட தெரியாமல் பிழையான இடத்தில வந்து நின்றுகொண்டு சிண்டு முடியிறார். தன் கடமையை செய்ய திறமையில்லை அதுக்குள்ள இதை செருக முயற்சித்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறார்.  வந்து இரண்டு மாதம் ஆகவில்லை தொடங்கிற்றார் எஜமான் விசுவாசத்தில். நான் சொல்லேல, நான் தமிழன், நான் இந்து என்று சொல்லிக்கொண்டு வேரறுக்கிறதுகளை தேடிக்கொண்டுவந்து காரியத்தை சிங்களம் முடிக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.