Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடாளாவிய ரீதியில் இடைக்கிடையே மின்விநியோகம் துண்டிக்கப்படும் - இலங்கை மின்சார சபை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு எரிபொருளை வழங்காவிடின் நாடளாவிய ரீதியில் மாலை 6 மணிமுதல் 9 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

டொலர் நெருக்கடி காரணமாக இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகிப்பதை கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் இடை நிறுத்தியுள்ளதால் இலங்கை மின்சார சபை இத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.

களனிதிஸ்ஸ மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று இரவு கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகளிலும்,நாட்டில் வெவ்வேறு பகுதிகளிலும் சுமார் 2 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்பட்டது.

களனிதிஸ்ஸ மின்நிலையம் இன்றைய தற்காலிகமான சபுகஸ்கந்த மின்நிலையத்திடமிருந்து மின் விநியோகத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் மின்பாவனைக்கான கேள்வி அதிகரித்துள்ளதுடன், பிரதான மின்னுற்பத்தி நிலையங்களில் அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேசிய மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

களனிதிஸ்ஸ மின்நிலையத்தின் மின்பிறப்பாக்கி நேற்று காலை செயலிழந்துள்ளது. மின்பிறப்பாக்கியை சீர் செய்வதற்கு குறைந்தப்பட்சம் 2 நாட்களேனும் தேவைப்பகும்.

மின்விநியோக கட்டமைப்பிலும்,பிறப்பாக்கியிலும் காணப்படும் பிரச்சினை குறித்து மின்சார சபை முன்னாயத்த நடவடிக்கையினை மேற்கொள்ளாமல் இருப்பது தவறான செயற்பாடாகும்.

அவசர மின்கொள்வனவினாலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் எதிர்வரும் நாட்களில் மின்துண்டிப்பு ஏற்படலாம் என இலங்கை மின்சார சபையின் தொழினுட்ப மற்றும் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் ஜே.எச்.நிஷாந்த தெரிவித்தார்.

எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக முன்னறிவித்தலின்றிய வகையில் எதிர்வரும் நாட்களில்  மின்விநியோகம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை சேவை சங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.

நாடாளாவிய ரீதியில் இடைக்கிடையே மின்விநியோகம் துண்டிக்கப்படும் - இலங்கை மின்சார சபை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு எரிபொருளை வழங்காவிடின் நாடளாவிய ரீதியில் மாலை 6 மணிமுதல் 9 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

 

இது ஆரம்பம் தான்.

போகபோக தடைநேரம் கூடீக் கொண்டே போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இவர்கள் ஏதோ திமிங்கில வேட்டைக்கு  பெரிய பிளான் போட்டு அதை நோக்கி படிப்படியாய் நகர்வதுபோல்தான் இருக்கு......தேரர்களின் அரசியல் சாணக்கியத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது......!  🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இது ஆரம்பம் தான்.

போகபோக தடைநேரம் கூடீக் கொண்டே போகும்.

உங்களுக்கு கொன்டாட்டாம்.எங்களுக்கு தின்டாட்டாம்.

17 minutes ago, சுவைப்பிரியன் said:

உங்களுக்கு கொன்டாட்டாம்.எங்களுக்கு தின்டாட்டாம்.

ஊரில் கரண்ட் போனால் சுவிஸில் இருக்கும் உங்களுக்கு எப்படி திண்டாட்டமாக இருக்கும்? (Location: சுவிஸ் என்று தான் போட்டு இருக்கின்றீர்கள்) 😃

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிழலி said:
30 minutes ago, சுவைப்பிரியன் said:

உங்களுக்கு கொன்டாட்டாம்.எங்களுக்கு தின்டாட்டாம்.

ஊரில் கரண்ட் போனால் சுவிஸில் இருக்கும் உங்களுக்கு எப்படி திண்டாட்டமாக இருக்கும்? (Location: சுவிஸ் என்று தான் போட்டு இருக்கின்றீர்கள்

தம்பி மரவள்ளி நட்டுட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களுக்கு அறிவிப்பு! பட்டினி இருக்கவும், இருளில் வாழவும் பழகிக்கொள்ளவும். (தயாராக இருக்கவும்). அன்று எங்களை அழகு பார்த்தவர்கள் இன்று அனுபவிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, satan said:

சிங்கள மக்களுக்கு அறிவிப்பு! பட்டினி இருக்கவும், இருளில் வாழவும் பழகிக்கொள்ளவும். (தயாராக இருக்கவும்). அன்று எங்களை அழகு பார்த்தவர்கள் இன்று அனுபவிக்கிறார்கள்.

  ஆ...ம்க்கும்...... ஆசை தோசை அப்பளம் வடை.....ஆசையைப்பாரு ஆசையை.......😁

அவிங்களாவது பட்னி இருக்கிறதாவது......சீனாவும் இந்தியாவும் போட்டி போட்டுக்கொண்டு உதவி செய்யும்....

சீனா வெள்ளைப்பச்சை அரிசி குடுக்க....
இந்தியா மைசூர் பருப்பு குடுக்க....
பாக்கிஸ்தான்  கோவாவும் தக்காளிக்காயும் குடுக்க..
பாக்கிஸ்தான் குடுக்கிறதை பாத்திட்டு...
இந்தியா பம்பாய் வெங்காயம் குடுக்க....
இதுகளை பாத்திட்டு...
மாலைதீவு மாசிக்கருவாடு குடுக்க...
ஐயோ சிறிலங்காவுக்கு கறி கூடிப்போச்சுதெண்டு...
பங்களாதேஷ் கண் கலங்கி ...
அரிசியை மூட்டை மூட்டையாய் குடுக்க..
இந்த கூத்துக்களை பாத்த அமெரிக்காவும் ஐரோப்பாவும்....
தங்கடை மரியாதையை காப்பாத்த...
மானியங்களையும் பண உதவிகளையும்
அள்ளி வழங்க வழங்க...

இதை பாத்த ரஷ்யா தன்ரை பங்குக்கு காஸ் சும்மா குடுக்க...

சிங்களம் கொழுத்துக்கொண்டு திரியும் 😂

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரம் செய்யும்வரை சிங்களம் மற்ற நாடுகளையே நம்பியிருக்க நேரிடும். கடைசியில் பரிகாரம் செய்தே ஆகவேண்டும் என்கிற கட்டாய நிலைக்கு தள்ளப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, satan said:

தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரம் செய்யும்வரை சிங்களம் மற்ற நாடுகளையே நம்பியிருக்க நேரிடும். கடைசியில் பரிகாரம் செய்தே ஆகவேண்டும் என்கிற கட்டாய நிலைக்கு தள்ளப்படும்.

சிறிலங்காவில் நடக்கும் பல விடயங்களுக்கு சாரம்சமே நீங்கள் சொன்னதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வு நாட்டுக்குள் இருக்க,  வீண் பிடிவாதத்தால்  நாடு நாடாக பிச்சைப்பாத்திரம் ஏந்திக்கொண்டு திரியும் முட்டாள்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் புராஜெக்ட்ஐ 2022 இல் தூசு தட்டுவினமா..? 

https://www.thehindubusinessline.com/news/india-planning-subsea-power-cable-to-lanka/article9204438.ece

கண்ட கண்ட நேரத்தில் கரண்டை கட் பண்ணி கடைசியில் இலங்கை அரசு சனத்தொகை பெருக்கத்தால் திணறப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

ஊரில் கரண்ட் போனால் சுவிஸில் இருக்கும் உங்களுக்கு எப்படி திண்டாட்டமாக இருக்கும்? (Location: சுவிஸ் என்று தான் போட்டு இருக்கின்றீர்கள்) 😃

உண்மையில் அறிந்து கொள்ள கேட்கிறேன் உங்களுக்கு  (மட்டுறுத்தினர்) எங்கிருந்து எழுதுகிறார்கள் என்று காட்டாதா.

12 hours ago, ஈழப்பிரியன் said:

தம்பி மரவள்ளி நட்டுட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

மரவள்ளி இல்லை தக்காளி.மின்சாரம் சம்பந்தப்பட்டது.பரீச்சாத்தமாக மண்னில்லா தாவர வளர்ப்பு.(hydropnic)

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

எனக்கென்னவோ இவர்கள் ஏதோ திமிங்கில வேட்டைக்கு  பெரிய பிளான் போட்டு அதை நோக்கி படிப்படியாய் நகர்வதுபோல்தான் இருக்கு......தேரர்களின் அரசியல் சாணக்கியத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது......!  🤔

தோல்விபோல் காட்டி வெற்றியைப் பெறும்(இராய)தந்திரமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.