Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பில் பதற்றம்! பிள்ளையானுக்கு ஏதிராக மாணவர்கள் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் பதற்றம்! பிள்ளையானுக்கு ஏதிராக மாணவர்கள் போராட்டம்

 

மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையில் பதற்றமான நிலைஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த மாதம் ஊர் மக்களாலும் பாடசாலை பழைய மாணவர்களாலும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக சில ஆசிரியர்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

அதன்போது சில ஆசிரியர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காத்தான்குடி காவல்துறையினரால் விசாரணை நடத்தப்பட்டு வந்த போதும் ஆசிரியர்களை அச்சுறுத்தியதன் காரணமாக இலங்கை ஆசிரியர் சங்கம் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதன் பிரதிபலிப்பாக இன்றைய தினம் குறித்த போராட்டத்தை நடத்திய சில ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதையடுத்து மாணவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மிகவும் சிறந்த ஆசிரியர்கள் சிவானந்தா பாடசாலையிலிருந்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது தங்களது கல்வி நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கையை புறக்கணித்த போது யாருடைய அனுமதியும் இன்றி காத்தான்குடி வீதி போக்குவரத்து காவல்துறையினர் மாணவர்களை அடக்க முற்பட்ட போது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எது எவ்வாறாக இருந்தாலும் தங்களது உரிமை சார்ந்த விடயங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் போராடும் போது இவ்வாறான அரசியல் பழிவாங்கல் காரணமாக நல்ல ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மாணவர்கள் இன்றைய தினம் கல்வி நடவடிக்கையை புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.
48C1EA74-A32F-49DE-B084-57B8A0DEA8FB.jpe

AF79519D-58BF-4D36-B656-A507180C7358.jpe

D610830F-FA27-4007-BBDF-40340D15C388.jpe

https://www.meenagam.com/மட்டக்களப்பில்-பதற்றம்-2/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் பள்ளிக்கூடப் பக்கமே ஒதுங்கினதில்ல. அதுக்கெல்லாம் வாக்குப் போட்டவையிட்ட தான் மாணவர்கள் நீதி கேட்கனும்.

எங்க எங்கட பள்ளிக்கூட ஆளைக் காணேல்ல. தனி மேடைக்கு வரவும். 

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கோ இப்ப ஓடி வருவார். மாணவர்களுக்கெதிரான ஆதாரத்துடன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதே மக்கள்தான் பிள்ளையானை 54,000 வாக்குகளோடு பாராளுமன்றம் அனுப்பியவர்களும். 

 

  • கருத்துக்கள உறவுகள்
Quote
On ‎08‎-‎01‎-‎2022 at 11:21, nedukkalapoovan said:

பிள்ளையான் பள்ளிக்கூடப் பக்கமே ஒதுங்கினதில்ல. அதுக்கெல்லாம் வாக்குப் போட்டவையிட்ட தான் மாணவர்கள் நீதி கேட்கனும்.

எங்க எங்கட பள்ளிக்கூட ஆளைக் காணேல்ல. தனி மேடைக்கு வரவும். 

 

நீங்கள் படிக்க வேண்டும் .உங்களுக்கு நாடு வேண்டும் என்பதற்காக பிள்ளையான் படிக்க வேண்டிய வயசில் போராட போயிட்டார் ...படித்த உங்கள் அரசியல்வாதிகள் செய்த நன்மைகளை ஒவ்வொன்றாய் அடுக்குங்கள் பார்ப்போம் 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

 

நீங்கள் படிக்க வேண்டும் .உங்களுக்கு நாடு வேண்டும் என்பதற்காக பிள்ளையான் படிக்க வேண்டிய வயசில் போராட போயிட்டார் ...படித்த உங்கள் அரசியல்வாதிகள் செய்த நன்மைகளை ஒவ்வொன்றாய் அடுக்குங்கள் பார்ப்போம் 

 

 

பிள்ளையான் நாடு வேண்டித்தரப் போராடப் போய்.. கடைசியில எங்க நாண்டுக்கிட்டு நிற்கிறார்..???! நீங்கள் நம்புகிறீர்களாக்கும்..???! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, ரதி said:

நீங்கள் படிக்க வேண்டும் .உங்களுக்கு நாடு வேண்டும் என்பதற்காக பிள்ளையான் படிக்க வேண்டிய வயசில் போராட போயிட்டார் ...

போயி.......அப்புறம் என்ன செய்தாரு? ஏன் கருணாவுடன் சேர்திருக்க முடியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

நம்ப முடியவில்லை

கிழக்கின்  விடிவெள்ளி

இனிமேல்  இவரை  நம்பித்தான்  அடுத்தலைமுறை  என்றநிலையை கொண்டு வந்த பின் 

மாணவர்கள்  போராடுவதா??

அதுவும்  இவருக்கு எதிராக??

அப்போ  அத்தனையும்  படமா???

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நம்ப முடியவில்லை

கிழக்கின்  விடிவெள்ளி

இனிமேல்  இவரை  நம்பித்தான்  அடுத்தலைமுறை  என்றநிலையை கொண்டு வந்த பின் 

மாணவர்கள்  போராடுவதா??

அதுவும்  இவருக்கு எதிராக??

அப்போ  அத்தனையும்  படமா???

 

இனி எதிர்த்து போராடியவர்கள் விபத்து தற்கொலைகள் போன்றவற்றில் மாட்டுப்படாமல் இருந்தால் நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2022 at 12:21, nedukkalapoovan said:

பிள்ளையான் பள்ளிக்கூடப் பக்கமே ஒதுங்கினதில்ல. அதுக்கெல்லாம் வாக்குப் போட்டவையிட்ட தான் மாணவர்கள் நீதி கேட்கனும்.

எங்க எங்கட பள்ளிக்கூட ஆளைக் காணேல்ல. தனி மேடைக்கு வரவும். 

தேடினேன் வந்தது🤞

நாடினேன் தந்தது.👇

On 10/1/2022 at 12:25, ரதி said:

நீங்கள் படிக்க வேண்டும் .உங்களுக்கு நாடு வேண்டும் என்பதற்காக பிள்ளையான் படிக்க வேண்டிய வயசில் போராட போயிட்டார் ...படித்த உங்கள் அரசியல்வாதிகள் செய்த நன்மைகளை ஒவ்வொன்றாய் அடுக்குங்கள் பார்ப்போம் 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2022 at 16:51, nedukkalapoovan said:

பிள்ளையான் பள்ளிக்கூடப் பக்கமே ஒதுங்கினதில்ல. அதுக்கெல்லாம் வாக்குப் போட்டவையிட்ட தான் மாணவர்கள் நீதி கேட்கனும்.

எங்க எங்கட பள்ளிக்கூட ஆளைக் காணேல்ல. தனி மேடைக்கு வரவும். 

அழைப்பிற்கு நன்றி நெடுக்கு நீதி என்பது அதிபரையும்,ஓர் ஆசிரியரையும் பல முரண்பாடுகள் உள்ளவர் இடமாற்றம் செய்ய சொல்லியே ஆர்ப்பாட்டம். அதிபர் அவருக்கு உடந்தையாக.

வலயக்கல்வி பணிப்பாளரால் , கல்வி அமைச்சினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாறாக ஆர்ப்பாட்ட த்திற்கு துணை போனார்கள் என்பதற்காக 6 ஆசிரியர்களுக்கு எதிராக இடமாற்றல் கடிதம் அதிபரினால்  வலயத்திற்கு கொடுக்கப்பட்டு வலயக்கல்வி பணிப்பாளர் அமைச்சுக்கு அதை அனுப்ப மாணவர்கள் அந்த 6 ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்ய கூடாது என ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள்.இதில் மட்டக்களப்பு மாவட்ட  அபிவிருத்திக்கான தலைவர் பிள்ளையான் மீது வசை பாடப்பட்டது ஆனால் பிள்ளையானுக்கானது அல்ல.

தற்போது அமைச்சு வந்ததுள்ளது நேற்று என்ன நடவடிக்கைக்கை எடுத்தார்கள் என இன்னும் தெரியவில்லை.

அரசியல் செய்யக்கூடாது பள்ளிகளில் என்பார்கள் ஆனால் அரசியல் இல்லாத துறை  என்று ஒன்றும் இல்லை சிபாரிசு என்ற சொல்லின் சில்லறைத்தனங்கள் இவை

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.