Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் – சாணக்கியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் – சாணக்கியன்

 

 

தமிழர்களுக்கு சிறந்த தீர்வொன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நந்தவனம் முதியோர் இல்லத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த காலத்தில் அனைவரும் நம்பிக்கையுடன் பயணிக்கவேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் கிராம முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

 

https://athavannews.com/2022/1261998

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன்…. சம்மந்தனிட்டை, “ரியூசன்”  எடுத்திருப்பாரோ…. 😎

போங்க(டா)…. நீங்களும், உங்கடை தீர்வும். 🧐

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கிருபன் said:

தமிழர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் – சாணக்கியன்

70 வருசமாய் நடக்கிற/நடத்துற கூத்துத்தானே......நடத்துங்கோ....நடத்துங்கோ

வசனங்களை நல்லாய் மனப்பாடம் செய்து வைச்சிருங்கோ. சித்திரை வருசம் தீவாளிக்கு திருப்பிச்சொல்ல வேணும்

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லியாச்சு?

பேச்சு = செயல்

எனவே தீர்வை  தந்த  திருப்தி

இனி  அடுத்தவருடத்துக்கு  வசனத்தை  தேர்வு  செய்ய  இப்பவே  திட்டமிடணும்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

சொல்லியாச்சு?

பேச்சு = செயல்

எனவே தீர்வை  தந்த  திருப்தி

இனி  அடுத்தவருடத்துக்கு  வசனத்தை  தேர்வு  செய்ய  இப்பவே  திட்டமிடணும்

சாச்சா ... இதுவே போதும். இவர்கள் இந்த வருடம் என்ன சொன்னார்கள் என்பதை  மக்கள் அடுத்த வருடம் மறந்து விடுவார்கள். அதே பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு, அதே வசனம், அதே மக்கள் எல்லாம் புலுடா டோய் .......!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

தமிழர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் – சாணக்கியன்

செய்துவிட்டு சொல்லுபவர்களை  நேரில் கண்டவர்கள் அவர்களிடம் இந்திய அரசியல்வாதிகள் போல் வாயால் வடை சுடுகினம் . கொஞ்சமாவது தலையில் இதுக்கு இருக்கும் என்று நினைத்தேன் இந்த அறிக்கை மூலம் தன்னை வெளிக்காட்டி விட்டது .

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

செய்துவிட்டு சொல்லுபவர்களை  நேரில் கண்டவர்கள் அவர்களிடம் இந்திய அரசியல்வாதிகள் போல் வாயால் வடை சுடுகினம் . கொஞ்சமாவது தலையில் இதுக்கு இருக்கும் என்று நினைத்தேன் இந்த அறிக்கை மூலம் தன்னை வெளிக்காட்டி விட்டது .

குட்டை  என்று தெரிந்தும் நீந்துவேன் என்று குதித்தவரிடம் முடை (நாற்றம்) வீசத்தானே செய்யும்.

தலைவரின் வாழ்த்து செய்தி  இடத்தை வெற்றிடமாக்காமல் நிரப்பியிருக்கிறார் என்று கொள்வோம். இவரின் செய்தியில் தலைவரின் வாழ்த்து செய்தி வாசம் (சாராம்ஷம்) வருகுதோ இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடித்தான் வாய்கூசாமல் இவர்களால் ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லக்கூடியதாக இருக்கிறதோ? இதைக் கேட்கும் தமிழர்கள் இவர்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற சிறிய சிந்தனைகூட இல்லாமலா இதைச் செய்கிறார்கள்? 

இழிவானவர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரஞ்சித் said:

இதைக் கேட்கும் தமிழர்கள் இவர்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்

 

11 minutes ago, ரஞ்சித் said:

வாய்கூசாமல் இவர்களால் ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லக்கூடியதாக இருக்கிறதோ?

திரும்ப திரும்ப ஒரே பொய்யை  சொல்லி சொல்லி,  வாக்கு கேட்க்கிறார்கள். மக்களும் கேள்வி கேட்காமல், சலிக்காமல் குத்திக்கொண்டிருக்கிறார்கள். விரும்பாதவர்கள் இன்னொரு பேய்க்காட்டும் கூட்டத்திற்கு பின்னால் போய்க்கொண்டிருக்குது. இவர்களுக்கு வாக்கு போடுபவர்களை சூடு சொரணை கெட்டவர்கள், விளக்கம் குறைந்தவர்கள்  என இவர்கள் முடிவு கட்டி திரும்ப திரும்ப ஒரே பொய்யை சொல்கிறார்கள், வெல்கிறார்கள். இங்கே இவர்களின் பொய்தானே வெல்கிறது. அங்காலை வெல்வதும் பொய் வாக்குறுதிதானே (டக்ளஸ்).

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

சாணக்கியன்…. சம்மந்தனிட்டை, “ரியூசன்”  எடுத்திருப்பாரோ…. 😎

போங்க(டா)…. நீங்களும், உங்கடை தீர்வும். 🧐

உங்கள் வாய்க்கு சர்க்கரை போடவேண்டும். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல், தீபாவளி, வருடபிறப்பு  மூன்டயும் எடுத்து விட்டு காலண்டர் அடிக்க சொல்லுமன் ..👌  ஒரே எரிச்சலா கிடக்கு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறையாவது பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடவேண்டுமானால் முதலில் நாங்கள் விழிப்படைய வேண்டும் – சாணக்கியன்

spacer.png

பொங்கலை அடுத்த முறையாவது நாங்கள் மகிழ்வுடன் கொண்டாடவேண்டுமானால் முதலில் நாங்கள் விழிப்படைய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறையில் அம்பிலாளந்துறை திசைகாட்டி மையம் நடாத்திய பொங்கல் விழாவும் சாதனையாளர் கௌரவிப்பும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “பெரும்பாலான மக்களுக்கு பொங்கலானது இந்தவருடம் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். நாளைய தினம் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பால் கறுப்புப் பொங்கல் என்ற தலைப்பிலே பொங்கல் நிகழ்வொன்றை பதுளை வீதியிலே செய்யவிருக்கின்றோம்.

பட்டிப்பளை பிரதேசத்தின் நிலைமை மோசமானதாக இருக்கின்றது. ஒருசிலரினால் இரண்டு ஆட்டுக்குட்டிகளை கொடுத்து மக்களை திசைதிருப்புகின்ற செயற்பாடுகளை காணக்கூடியதாக இருக்கின்றது.

ஒரு சிலரினால் 2016, 2017, 2018ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை தாங்கள்தான் கொண்டு வந்ததாகக்கூறி மக்களை ஏமாற்றுகின்ற செயல்களை காணமுடிகின்றது. மறுபக்கம் கெவிலியாமடு கச்சக்கொடி சுவாமிமலை பகுதியில் காடுகளை பாதுகாக்க வேண்டிய இராஜாங்க அமைச்சர் அவர்களே தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத தன்னுடைய ஆதரவாளர்கள் 500 பேரை சிவில் பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரிலே இங்கு கொண்டு வந்து தலா மூன்று ஏக்கர் காணிகளைக் கொடுத்து 500 பேரை இங்கு குடியமர்த்தியிருக்கின்றார்.

பொலன்னறுவை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, மொனராகலை பிரதேசத்திலே விளைச்சலானது வழமையானது போலவே இருக்கின்றது. அவர்களும் கூடியவிலை கொடுத்தே வாங்கினார்கள். ஆனால் எங்களுடைய பிரதேசத்தில் விஞ்ஞானம் இல்லாமல் போய்விட்டது. அதை நாங்கள் மாற்றியமைக்க வேண்டும்.

நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பசளை வேண்டும் என்று ஒரு ஆர்ப்பாட்டத்தை செய்திருந்தோம். மாவட்ட செயலகத்தை முடக்குமளவிற்கு ட்ரக்டர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தன. ஆனால் எத்தனையோ விவசாயிகள் இங்கிருந்தும் பட்டிப்பளையிலிருந்து ஒரு ட்ரக்டர்கூட வரவில்லை.

சிங்களவர்கள் போராடி எப்படியாவது பசளையை எடுப்பார்கள், அப்போது எங்களுக்கும் கிடைக்கும் என்ற மனநிலை எங்கள் மக்கள் மத்தியில் இருக்கின்றது. அடுத்த முறையாவது நாங்கள் பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடவேண்டுமானால் முதலில் நாங்கள் விழிப்படைய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1262150

 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறையாவது பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடவேண்டுமானால் முதலில் நாங்கள் விழிப்படைய வேண்டும் – சாணக்கியன்

 

பொங்கலை அடுத்த முறையாவது நாங்கள் மகிழ்வுடன் கொண்டாடவேண்டுமானால் முதலில் நாங்கள் விழிப்படைய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறையில் அம்பிலாளந்துறை திசைகாட்டி மையம் நடாத்திய பொங்கல் விழாவும் சாதனையாளர் கௌரவிப்பும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “பெரும்பாலான மக்களுக்கு பொங்கலானது இந்தவருடம் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். நாளைய தினம் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பால் கறுப்புப் பொங்கல் என்ற தலைப்பிலே பொங்கல் நிகழ்வொன்றை பதுளை வீதியிலே செய்யவிருக்கின்றோம்.

பட்டிப்பளை பிரதேசத்தின் நிலைமை மோசமானதாக இருக்கின்றது. ஒருசிலரினால் இரண்டு ஆட்டுக்குட்டிகளை கொடுத்து மக்களை திசைதிருப்புகின்ற செயற்பாடுகளை காணக்கூடியதாக இருக்கின்றது.

ஒரு சிலரினால் 2016, 2017, 2018ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை தாங்கள்தான் கொண்டு வந்ததாகக்கூறி மக்களை ஏமாற்றுகின்ற செயல்களை காணமுடிகின்றது. மறுபக்கம் கெவிலியாமடு கச்சக்கொடி சுவாமிமலை பகுதியில் காடுகளை பாதுகாக்க வேண்டிய இராஜாங்க அமைச்சர் அவர்களே தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத தன்னுடைய ஆதரவாளர்கள் 500 பேரை சிவில் பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரிலே இங்கு கொண்டு வந்து தலா மூன்று ஏக்கர் காணிகளைக் கொடுத்து 500 பேரை இங்கு குடியமர்த்தியிருக்கின்றார்.

பொலன்னறுவை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, மொனராகலை பிரதேசத்திலே விளைச்சலானது வழமையானது போலவே இருக்கின்றது. அவர்களும் கூடியவிலை கொடுத்தே வாங்கினார்கள். ஆனால் எங்களுடைய பிரதேசத்தில் விஞ்ஞானம் இல்லாமல் போய்விட்டது. அதை நாங்கள் மாற்றியமைக்க வேண்டும்.

நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பசளை வேண்டும் என்று ஒரு ஆர்ப்பாட்டத்தை செய்திருந்தோம். மாவட்ட செயலகத்தை முடக்குமளவிற்கு ட்ரக்டர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தன. ஆனால் எத்தனையோ விவசாயிகள் இங்கிருந்தும் பட்டிப்பளையிலிருந்து ஒரு ட்ரக்டர்கூட வரவில்லை.

சிங்களவர்கள் போராடி எப்படியாவது பசளையை எடுப்பார்கள், அப்போது எங்களுக்கும் கிடைக்கும் என்ற மனநிலை எங்கள் மக்கள் மத்தியில் இருக்கின்றது. அடுத்த முறையாவது நாங்கள் பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடவேண்டுமானால் முதலில் நாங்கள் விழிப்படைய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1262150

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.